background img

புதிய வரவு

Showing posts with label Jaganmohan reddy. Show all posts
Showing posts with label Jaganmohan reddy. Show all posts
ஆந்திராவில் கடப்பா எம்.பி. தொகுதி, புலிவெந்துலா சட்டசபை தொகுதிகளுக்கு மே மாதம் 8-ந் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. கடப்பாவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும், புலிவெந்துலா தொகுதியில் அவரது தாயார் விஜயலட்சுமியும் போட்டியிடுகிறார்கள்.

இருவரையும் தோற்கடிப்பதில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிடும் கடப்பா தொகுதியில் நேற்று மனு தாக்கல் முடிந்தது. இதில் ஜெகன் மோகனை எதிர்த்து 56 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

புலிவெந்துலாவில் 36 பேர் போட்டியிடுகிறார்கள். கடப்பாவில் ஜெகன் மோகன் ரெட்டி பெயருடைய 11 பேர் களத்தில் உள்ளனர். இவர்களை காங்கிரஸ்தான் களம் இறக்கி உள்ளது. இதன் மூலம் வாக்காளர்களை நன்றாக குழப்பி விட முடியும் என்று காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர்.

ஜெகன்மோகன் ரெட்டி கூறும்போது, இந்தியாவில் அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்துள்ள சோனியாகாந்தி, என்னை தோற்கடிக்க பல்வேறு வியூகம் அமைத்துள்ளார். அவற்றை நான் மக்களின் பேராதரவுடன் முறியடிப்பேன். ஆந்திர மக்கள் என்னைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றார்.

கடப்பா தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக 56 பேர் மனு

ஆந்திராவில் கடப்பா எம்.பி. தொகுதி, புலிவெந்துலா சட்டசபை தொகுதிகளுக்கு மே மாதம் 8-ந் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. கடப்பாவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும், புலிவெந்துலா தொகுதியில் அவரது தாயார் விஜயலட்சுமியும் போட்டியிடுகிறார்கள்.

இருவரையும் தோற்கடிப்பதில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிடும் கடப்பா தொகுதியில் நேற்று மனு தாக்கல் முடிந்தது. இதில் ஜெகன் மோகனை எதிர்த்து 56 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

புலிவெந்துலாவில் 36 பேர் போட்டியிடுகிறார்கள். கடப்பாவில் ஜெகன் மோகன் ரெட்டி பெயருடைய 11 பேர் களத்தில் உள்ளனர். இவர்களை காங்கிரஸ்தான் களம் இறக்கி உள்ளது. இதன் மூலம் வாக்காளர்களை நன்றாக குழப்பி விட முடியும் என்று காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர்.

ஜெகன்மோகன் ரெட்டி கூறும்போது, இந்தியாவில் அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்துள்ள சோனியாகாந்தி, என்னை தோற்கடிக்க பல்வேறு வியூகம் அமைத்துள்ளார். அவற்றை நான் மக்களின் பேராதரவுடன் முறியடிப்பேன். ஆந்திர மக்கள் என்னைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றார்.

ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடப்பா லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, இவர் தாக்கல் செய்த சொத்து பட்டியலில், தனக்கு 365 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், நாட்டிலேயே, மிக அதிக சொத்து மதிப்பு உள்ள கோடீஸ்வர எம்.பி., என்ற பெருமை, அவருக்கு கிடைக்கும். ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின், அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராக விரும்பினார்.

இதற்கு காங்., மேலிடம் மறுப்பு தெரிவித்ததால், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜெகன் மோகனும், அவரது தாயார் விஜயலட்சுமியும் வெளியேறினர். ஜெகன் மோகன், தனது கடப்பா தொகுதி எம்.பி., பதவியையும், விஜயலட்சுமி, தனது புலிவெந்துலா தொகுதி எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்தனர். தற்போது ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் என்ற புதிய கட்சியை துவக்கியுள்ளார். கடப்பா மற்றும் புலிவெந்துலா தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் 8ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தங்கள் கட்சி சார்பில் ஜெகன்மோகனும், விஜயலட்சுமியும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
இதற்காக, ஜெகன்மோகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அப்போது, தனது சொத்து பட்டியலையும் அவர் தாக்கல் செய்தார். அந்த பட்டியலில், தனக்கு சொந்தமாக 365 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும், தனது மனைவி பாரதிக்கு சொந்தமாக, 41 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதைய லோக்சபா எம்.பி.,க்களில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த கம்மம் தொகுதி எம்.பி., நம நாகேஸ்வர ராவுக்கு தான், அதிக சொத்துகள் உள்ளன. இவருக்கு சொந்தமாக, 177 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இடைத்தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றால், நாட்டிலேயே, மிகப் பெரிய கோடீஸ்வர எம்.பி., என்ற பெருமையை, நாகேஸ்வர ராவிடம் இருந்து தட்டிப் பறித்து விடுவார். கடந்த 2004ல் நடந்த தேர்தலில் ராஜசேகர ரெட்டி தாக்கல் செய்த சொத்து பட்டியலில், தனது மகன் ஜெகனுக்கு சொந்தமாக, 9.18 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அப்போது, ஜெகன் அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்குள் நுழைந்த அடுத்த சில ஆண்டுகளில், தற்போது அவரது சொத்து மதிப்பு, 365 கோடி ரூபாய் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டிக்கு 365 கோடி ரூபாய் சொத்து : சொத்து பட்டியலில் மலைக்க வைக்கும் பகீர் தகவல்

ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடப்பா லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, இவர் தாக்கல் செய்த சொத்து பட்டியலில், தனக்கு 365 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், நாட்டிலேயே, மிக அதிக சொத்து மதிப்பு உள்ள கோடீஸ்வர எம்.பி., என்ற பெருமை, அவருக்கு கிடைக்கும். ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின், அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராக விரும்பினார்.

இதற்கு காங்., மேலிடம் மறுப்பு தெரிவித்ததால், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜெகன் மோகனும், அவரது தாயார் விஜயலட்சுமியும் வெளியேறினர். ஜெகன் மோகன், தனது கடப்பா தொகுதி எம்.பி., பதவியையும், விஜயலட்சுமி, தனது புலிவெந்துலா தொகுதி எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்தனர். தற்போது ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் என்ற புதிய கட்சியை துவக்கியுள்ளார். கடப்பா மற்றும் புலிவெந்துலா தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் 8ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தங்கள் கட்சி சார்பில் ஜெகன்மோகனும், விஜயலட்சுமியும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
இதற்காக, ஜெகன்மோகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அப்போது, தனது சொத்து பட்டியலையும் அவர் தாக்கல் செய்தார். அந்த பட்டியலில், தனக்கு சொந்தமாக 365 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும், தனது மனைவி பாரதிக்கு சொந்தமாக, 41 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதைய லோக்சபா எம்.பி.,க்களில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த கம்மம் தொகுதி எம்.பி., நம நாகேஸ்வர ராவுக்கு தான், அதிக சொத்துகள் உள்ளன. இவருக்கு சொந்தமாக, 177 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இடைத்தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றால், நாட்டிலேயே, மிகப் பெரிய கோடீஸ்வர எம்.பி., என்ற பெருமையை, நாகேஸ்வர ராவிடம் இருந்து தட்டிப் பறித்து விடுவார். கடந்த 2004ல் நடந்த தேர்தலில் ராஜசேகர ரெட்டி தாக்கல் செய்த சொத்து பட்டியலில், தனது மகன் ஜெகனுக்கு சொந்தமாக, 9.18 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அப்போது, ஜெகன் அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்குள் நுழைந்த அடுத்த சில ஆண்டுகளில், தற்போது அவரது சொத்து மதிப்பு, 365 கோடி ரூபாய் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், நடிகையுமான ரோஜா ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘’கடப்பா எம்.பி. தொகுதியில் போட்டியிடும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றி உறுதியாகி விட்டது. அவர் அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். அவரை எதிர்த்து யாரை நிறுத்தலாம் என்று காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

ஜெகன்மோகனை யார் எதிர்த்து நின்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. அவரது வெற்றியை யாரும் தடுக்க முடியாது. இந்த இடைத் தேர்தல் மூலம் காங்கிரஸ் மேலிடத்திற்கு ஆந்திர மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’’ என்று கூறினார்.

ஜெகன்மோகன் வெற்றி உறுதி: நடிகை ரோஜா

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், நடிகையுமான ரோஜா ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘’கடப்பா எம்.பி. தொகுதியில் போட்டியிடும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றி உறுதியாகி விட்டது. அவர் அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். அவரை எதிர்த்து யாரை நிறுத்தலாம் என்று காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

ஜெகன்மோகனை யார் எதிர்த்து நின்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. அவரது வெற்றியை யாரும் தடுக்க முடியாது. இந்த இடைத் தேர்தல் மூலம் காங்கிரஸ் மேலிடத்திற்கு ஆந்திர மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’’ என்று கூறினார்.

மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மனைவி விஜயலட்சுமி மகன் ஜெகன் மோகன் ரெட்டி. காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நவம்பர் மாதம் ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா தொகுதி எம்.பி. பதவியையும், விஜயலட்சுமி புலிவெந்துலா தொகுதி எம்.எல். ஏ. பதவியையும் ராஜினா செய்தனர்.

இந்த நிலையில் இந்த 2 தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 8-ந்தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடப்பா எம்.பி. தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியும் புலிவெந்துலா சட்டசபை தொகுதிக்கு விஜயலட்சுமியும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

விரைவில் இருவரும் வேட்புமனுதாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர் ஒய்.எஸ்.விவே கானந்தா ரெட்டி தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். அவரது எம்.எல்.எல்.சி. பதவி காலம் முடிந்ததால் ராஜினாமா செய்தார்.

அவரை புலிவெந்துலா தொகுதியில் நிறுத்தி ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுபற்றி விவேகானந்தா கூறும்போது, காங்கிரஸ் மேலிடம் கட்டளையிட்டால் நான் எந்த தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்றார்.

ஆந்திராவில் கடப்பா எம்.பி. தொகுதிக்கு மே 8-ந்தேதி தேர்தல்; ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் போட்டி

மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மனைவி விஜயலட்சுமி மகன் ஜெகன் மோகன் ரெட்டி. காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நவம்பர் மாதம் ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா தொகுதி எம்.பி. பதவியையும், விஜயலட்சுமி புலிவெந்துலா தொகுதி எம்.எல். ஏ. பதவியையும் ராஜினா செய்தனர்.

இந்த நிலையில் இந்த 2 தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 8-ந்தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடப்பா எம்.பி. தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியும் புலிவெந்துலா சட்டசபை தொகுதிக்கு விஜயலட்சுமியும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

விரைவில் இருவரும் வேட்புமனுதாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர் ஒய்.எஸ்.விவே கானந்தா ரெட்டி தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். அவரது எம்.எல்.எல்.சி. பதவி காலம் முடிந்ததால் ராஜினாமா செய்தார்.

அவரை புலிவெந்துலா தொகுதியில் நிறுத்தி ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுபற்றி விவேகானந்தா கூறும்போது, காங்கிரஸ் மேலிடம் கட்டளையிட்டால் நான் எந்த தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்றார்.

ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையறிந்ததும் ஆந்திராவில் 600-க்கும் மேற்பட்டோர் தற்கொலை-அதிர்ச்சியில் இறந்து போனார்கள். அவர்களது குடும்பங்களை நேரில் சந்தித்து ஜெகன் மோகன் ரெட்டி ஆறுதல் கூறி வருகிறார்.

அப்போது நிதி உதவியும் வழங்குகிறார். இதன் மூலம் அவருக்கு செல்வாக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் அங்கு நடந்த மேல்-சபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி மொத்தமுள்ள 9 இடங்களில் 3 இடங்களில் வென்றது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி 28-ந் தேதி மீண்டும் விஜயநகரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அடுத்த மாதம் 5-ந் தேதி இந்த யாத்திரையை முடிக்கிறார். மொத்தம் 17 குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இதற்கான ஏற்பாடுகளை விஜயநகரம் பகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

ஜெகன்மோகன் 28-ந் தேதி மீண்டும் யாத்திரை

ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையறிந்ததும் ஆந்திராவில் 600-க்கும் மேற்பட்டோர் தற்கொலை-அதிர்ச்சியில் இறந்து போனார்கள். அவர்களது குடும்பங்களை நேரில் சந்தித்து ஜெகன் மோகன் ரெட்டி ஆறுதல் கூறி வருகிறார்.

அப்போது நிதி உதவியும் வழங்குகிறார். இதன் மூலம் அவருக்கு செல்வாக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் அங்கு நடந்த மேல்-சபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி மொத்தமுள்ள 9 இடங்களில் 3 இடங்களில் வென்றது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி 28-ந் தேதி மீண்டும் விஜயநகரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அடுத்த மாதம் 5-ந் தேதி இந்த யாத்திரையை முடிக்கிறார். மொத்தம் 17 குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இதற்கான ஏற்பாடுகளை விஜயநகரம் பகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

ஐதராபாத்:ஆந்திராவில் நடந்த மேல்சபை தேர்தலில், ஜெகன் மோகன் ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர்கள், கட்சி மாறி ஓட்டளித்ததால், காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார்.ஆந்திராவில் எம்.எல்.ஏ., கோட்டாவின் கீழ், பத்து மேல்சபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில், தங்களிடம் உள்ள மொத்த எம்.எல்.ஏ.,க்களை கணக்கில் கொண்டு, ஐந்து வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால், ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்களான காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 26 பேர், கட்சி மாறி ஓட்டளித்தனர். இதனால், காங்கிரஸ் சார்பில் நான்கு பேர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட ஐந்தாவது வேட்பாளரான முகமது ஜனி என்பவர் தோல்வி அடைந்தார்.
ஜெகன் ஆதரவு காங்., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், எம்.ஐ.எம்., கட்சி சார்பில் போட்டியிட்ட முகமது ரிஜ்வி என்பவருக்கு ஓட்டளித்ததால், அவர் எளிதாக வெற்றி பெற்றார். ஜெகன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் இந்த நடவடிக்கையால், காங்கிரஸ் கட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெகன் மோகனின் உத்தரவுப்படியே, அவர்கள், காங்கிரசுக்கு எதிராக ஓட்டளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர்தோல்வி: ஜெகன் காரணம்

ஐதராபாத்:ஆந்திராவில் நடந்த மேல்சபை தேர்தலில், ஜெகன் மோகன் ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர்கள், கட்சி மாறி ஓட்டளித்ததால், காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார்.ஆந்திராவில் எம்.எல்.ஏ., கோட்டாவின் கீழ், பத்து மேல்சபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில், தங்களிடம் உள்ள மொத்த எம்.எல்.ஏ.,க்களை கணக்கில் கொண்டு, ஐந்து வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால், ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்களான காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 26 பேர், கட்சி மாறி ஓட்டளித்தனர். இதனால், காங்கிரஸ் சார்பில் நான்கு பேர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட ஐந்தாவது வேட்பாளரான முகமது ஜனி என்பவர் தோல்வி அடைந்தார்.
ஜெகன் ஆதரவு காங்., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், எம்.ஐ.எம்., கட்சி சார்பில் போட்டியிட்ட முகமது ரிஜ்வி என்பவருக்கு ஓட்டளித்ததால், அவர் எளிதாக வெற்றி பெற்றார். ஜெகன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் இந்த நடவடிக்கையால், காங்கிரஸ் கட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெகன் மோகனின் உத்தரவுப்படியே, அவர்கள், காங்கிரசுக்கு எதிராக ஓட்டளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூ.122 கோடி வரி செலுத்த கோரியும், கணக்கில் காட்டப்படாத முதலீடுகளுக்கு விளக்கம் கேட்டும், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திராவில் கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி வெளியேறினார். கடந்த வாரம் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் என்ற பெயரில் தனி கட்சி துவக்கினார். இக்கட்சி துவங்கி ஆர்ப்பாட்டங்கள் ஓய்வதற்கு முன்பு ரூ.122 கோடி வரி செலுத்தும்படியும், கணக்கில் காட்டப்படாத முதலீடுகளுக்கு விளக்கம் அளிக்கும்படியும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆந்திராவில் "ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஜகதி பப்ளிகேஷன்' சாக்ஷி என்ற பெயரில் தெலுங்கு பத்திரிகையும், இதே பெயரில் தெலுங்கு "டிவி' சேனலும் நடத்தி வருகிறது. 2008 - 2009ம் ஆண்டில் வருமான வரித்துறைக்கு சமர்ப்பித்த கணக்கில் ரூ.19 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக, இந்த பப்ளிகேஷன் அறிவித்திருந்தது. 2010, மார்ச் 9ல் இந்த தகவல்களின் அடிப்படையில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது வருமான வரித்துறையிடம் இந்த பப்ளிகேஷன் முறையான கணக்குகளை ஒப்படைக்காதது தெரிய வந்தது. இதன் அடிப்டையில் ரூ.122 கோடி வரி செலுத்தும்படி கடந்த 2010, டிசம்பர் 31ம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், மீண்டும் வரி செலுத்தும்படியும், கணக்கில் வராத முதலீடுகளுக்கு விளக்கம் கேட்டும் ஜெகன்மோகனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை கூறுகையில், "இது தொடர்பாக பதில் அளிக்க சம்பந்தப்பட்டவர்கள் அவகாசம் கேட்டுள்ளனர்' என்று தெரிவித்தது. ஜெகன்மோகன் தரப்பில், "வருமானம் ரூ.500 கோடியாக இருக்கும் என எதிர்பார்த்து கடந்தாண்டு செப்டம்பர் மாதமே வருமான வரித்துறைக்கு அட்வான்சாக ரூ.80 கோடி வரி செலுத்தப்பட்டு விட்டது' என்று கூறப்பட்டுள்ளது.

ரூ.122 கோடி வரிபாக்கி: ஜெகன்மோகனுக்கு நோட்டீஸ்

ஐதராபாத்: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூ.122 கோடி வரி செலுத்த கோரியும், கணக்கில் காட்டப்படாத முதலீடுகளுக்கு விளக்கம் கேட்டும், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திராவில் கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி வெளியேறினார். கடந்த வாரம் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் என்ற பெயரில் தனி கட்சி துவக்கினார். இக்கட்சி துவங்கி ஆர்ப்பாட்டங்கள் ஓய்வதற்கு முன்பு ரூ.122 கோடி வரி செலுத்தும்படியும், கணக்கில் காட்டப்படாத முதலீடுகளுக்கு விளக்கம் அளிக்கும்படியும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆந்திராவில் "ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஜகதி பப்ளிகேஷன்' சாக்ஷி என்ற பெயரில் தெலுங்கு பத்திரிகையும், இதே பெயரில் தெலுங்கு "டிவி' சேனலும் நடத்தி வருகிறது. 2008 - 2009ம் ஆண்டில் வருமான வரித்துறைக்கு சமர்ப்பித்த கணக்கில் ரூ.19 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக, இந்த பப்ளிகேஷன் அறிவித்திருந்தது. 2010, மார்ச் 9ல் இந்த தகவல்களின் அடிப்படையில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது வருமான வரித்துறையிடம் இந்த பப்ளிகேஷன் முறையான கணக்குகளை ஒப்படைக்காதது தெரிய வந்தது. இதன் அடிப்டையில் ரூ.122 கோடி வரி செலுத்தும்படி கடந்த 2010, டிசம்பர் 31ம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், மீண்டும் வரி செலுத்தும்படியும், கணக்கில் வராத முதலீடுகளுக்கு விளக்கம் கேட்டும் ஜெகன்மோகனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை கூறுகையில், "இது தொடர்பாக பதில் அளிக்க சம்பந்தப்பட்டவர்கள் அவகாசம் கேட்டுள்ளனர்' என்று தெரிவித்தது. ஜெகன்மோகன் தரப்பில், "வருமானம் ரூ.500 கோடியாக இருக்கும் என எதிர்பார்த்து கடந்தாண்டு செப்டம்பர் மாதமே வருமான வரித்துறைக்கு அட்வான்சாக ரூ.80 கோடி வரி செலுத்தப்பட்டு விட்டது' என்று கூறப்பட்டுள்ளது.

ஜெகன்மோகன்ரெட்டி தொடங்கியுள்ள “ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்” கட்சிக்கு ஆந்திர மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அனைத்து ஊர்களிலும் பொதுமக்கள பட்டாசு வெடித்து ஒருவருக்கொருவர் இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:- ஜெகன்மோகன்ரெட்டி தொடங்கியுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆந்திர மக்கள் காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை இழந்து விட்டனர். மாநிலம் முழுவதும் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எந்தவித வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ஏழை மருத்துவ- என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அரசு கட்டணம் செலுத்த தயக்கம் காட்டுகிறது.

இதனால் பொதுமக்கள் ஆந்திர அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே ஆந்திராவில் தேர்தல் எப்போது வந்தாலும் ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சியை பிடிப்பார். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டிக்கு பிறகு மக்கள் செல்வாக்கு மிகுந்த ஒரே தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிதான்.

அவரை யாராலும் வீழ்த்த முடியாது. சந்திரபாபுநாயுடு தற்போது காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அரசு கவிழ்ந்து விடும். ஆனால் அவர் காங்கிரசை மறைமுகமாக ஆதரித்து வருகிறார். அவர் காங்கிரசுடன் கூட்டணி சேர முயன்று வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திரா தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிப்பார் நடிகை ரோஜா சொல்கிறார்

ஜெகன்மோகன்ரெட்டி தொடங்கியுள்ள “ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்” கட்சிக்கு ஆந்திர மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அனைத்து ஊர்களிலும் பொதுமக்கள பட்டாசு வெடித்து ஒருவருக்கொருவர் இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:- ஜெகன்மோகன்ரெட்டி தொடங்கியுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆந்திர மக்கள் காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை இழந்து விட்டனர். மாநிலம் முழுவதும் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எந்தவித வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ஏழை மருத்துவ- என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அரசு கட்டணம் செலுத்த தயக்கம் காட்டுகிறது.

இதனால் பொதுமக்கள் ஆந்திர அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே ஆந்திராவில் தேர்தல் எப்போது வந்தாலும் ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சியை பிடிப்பார். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டிக்கு பிறகு மக்கள் செல்வாக்கு மிகுந்த ஒரே தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிதான்.

அவரை யாராலும் வீழ்த்த முடியாது. சந்திரபாபுநாயுடு தற்போது காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அரசு கவிழ்ந்து விடும். ஆனால் அவர் காங்கிரசை மறைமுகமாக ஆதரித்து வருகிறார். அவர் காங்கிரசுடன் கூட்டணி சேர முயன்று வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

முக நூல்

Popular Posts