background img

புதிய வரவு

Showing posts with label MLA. Show all posts
Showing posts with label MLA. Show all posts
தமிழக சட்டசபைக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 229 பேர் கடந்த 23-ந்தேதி பதவி ஏற்றனர். அமைச்சர் மரியம்பிச்சை இறந்ததால் அமைச்சர் சிவபதி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் பதவி ஏற்கவில்லை.

தி.மு.க. தலைவர் கருணாநிதியும், துரைமுருகனும் அன்றைய தினம் டெல்லி சென்றதால் பதவி ஏற்கவில்லை. கடந்த 27-ந்தேதி அமைச்சர் சிவபதி, திருச்சி மனோகரன் ஆகியோர் எம்எ.ல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியும், சட்டசபை தி.மு.க. துணைத் தலைவர் துரைமுருகனும் இன்று காலை எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். இதற்காக, 2 பேரும் இன்று புனித ஜார்ஜ்கோட்டையில் உள்ள சபாநாயகர் அறைக்கு காலை 11 மணிக்கு வந்தனர்.

அப்போது சபாநாயகருக்கு கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை கொடுத்து பதவி ஏற்றார். உளமாற என்று கூறி உறுதிமொழி எடுத்து கொண்டார். உறுதி மொழி பத்திரத்திலும், சட்டமன்ற பதிவேட்டிலும் கையெழுத்திட்டார். அவரை தொடர்ந்து துரைமுருகனும் பதவி ஏற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், சற்குண பாண்டியன், தி.மு.க. கொறடா சக்கரபாணி, முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி, எம்எ.ல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். சபாநாயகர் அறையில் இருந்து வெளியே வந்த கருணாநிதியிடம், சட்ட சபையில் தி.மு.க எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கை எப்படி இருக்கும்? என்று கேட்டபோது, கூர்ந்து கவனியுங்கள் என்று பதில் அளித்தார்.

சபாநாயகர் அறையில் கருணாநிதி, எம்.எல்.ஏ.வாக இன்று பதவி ஏற்றார்

தமிழக சட்டசபைக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 229 பேர் கடந்த 23-ந்தேதி பதவி ஏற்றனர். அமைச்சர் மரியம்பிச்சை இறந்ததால் அமைச்சர் சிவபதி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் பதவி ஏற்கவில்லை.

தி.மு.க. தலைவர் கருணாநிதியும், துரைமுருகனும் அன்றைய தினம் டெல்லி சென்றதால் பதவி ஏற்கவில்லை. கடந்த 27-ந்தேதி அமைச்சர் சிவபதி, திருச்சி மனோகரன் ஆகியோர் எம்எ.ல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியும், சட்டசபை தி.மு.க. துணைத் தலைவர் துரைமுருகனும் இன்று காலை எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். இதற்காக, 2 பேரும் இன்று புனித ஜார்ஜ்கோட்டையில் உள்ள சபாநாயகர் அறைக்கு காலை 11 மணிக்கு வந்தனர்.

அப்போது சபாநாயகருக்கு கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை கொடுத்து பதவி ஏற்றார். உளமாற என்று கூறி உறுதிமொழி எடுத்து கொண்டார். உறுதி மொழி பத்திரத்திலும், சட்டமன்ற பதிவேட்டிலும் கையெழுத்திட்டார். அவரை தொடர்ந்து துரைமுருகனும் பதவி ஏற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், சற்குண பாண்டியன், தி.மு.க. கொறடா சக்கரபாணி, முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி, எம்எ.ல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். சபாநாயகர் அறையில் இருந்து வெளியே வந்த கருணாநிதியிடம், சட்ட சபையில் தி.மு.க எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கை எப்படி இருக்கும்? என்று கேட்டபோது, கூர்ந்து கவனியுங்கள் என்று பதில் அளித்தார்.

தென்காசி: ஒரு மாதத்திற்குள் தென்காசிக்கான வளர்ச்சித் திட்டங்களை வகுத்து, தென்காசியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தீவில நடவடிக்கைகளில் இறங்கவுள்ளேன் என்று நடிகரும், தென்காசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.

தென்காசியில் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் சரத்குமார். தனக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி கூற தென்காசி வந்த அவர் அங்கு மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது தொகுதி மக்களிடையே அவர் பேசுகையில், தென்காசி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகளை முடுக்கி விடவுள்ளேன்.

தொழில்துறையில் மிகவும் பின் தங்கியுள்ளது தென்காசி. இங்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சரத்குமார்.

ஒரு மாதத்திற்குள் தென்காசி வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்-சரத்குமார்

தென்காசி: ஒரு மாதத்திற்குள் தென்காசிக்கான வளர்ச்சித் திட்டங்களை வகுத்து, தென்காசியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தீவில நடவடிக்கைகளில் இறங்கவுள்ளேன் என்று நடிகரும், தென்காசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.

தென்காசியில் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் சரத்குமார். தனக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி கூற தென்காசி வந்த அவர் அங்கு மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது தொகுதி மக்களிடையே அவர் பேசுகையில், தென்காசி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகளை முடுக்கி விடவுள்ளேன்.

தொழில்துறையில் மிகவும் பின் தங்கியுள்ளது தென்காசி. இங்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சரத்குமார்.

ஆந்திராவில் ராஜசேகர ரெட்டியின் தம்பி விவேகானந்தரெட்டி விவசாயத் துறை மந்திரியாக இருக்கிறார். ஆந்திர சட்டசபை கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தபோது ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெலுங்குதேசம் ஆட்சியில் நிலமோசடி நடந்ததாக எழுதப்பட்ட அட்டையை ஏந்தி கோஷ மிட்டனர். இதற்கு பதிலடியாக இன்று சட்டசபை கூட்டம் நடந்தபோது தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் ராஜசேகர ரெட்டி ஊழல்வாதி என்ற வாசகம் அடங்கிய அட்டையை ஏந்தி இருந்தனர்.

இது ராஜசேகரரெட்டியின் தம்பியான மந்திரி விவேகானந்த ரெட்டிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. முத்து கிருஷ்ணநாயுடு, ராஜசேகர ரெட்டி குடும்பத்தினர் ஏராளமான சொத்து சேர்த்து விட்டார்கள் என்று விமர்சித்து பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த விவேகானந்த ரெட்டி முத்துகிருஷ்ண நாயுடுவை நோக்கி பாய்ந்து சென்றார். அப்போது முன் வரிசையில் இருந்த தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரமேஷ் கையில் இருந்த அட்டையை பறித்து கீழே வீசி விட்டு அவரை தாக்கினார்.

இதனால் விவேகானந்த ரெட்டியை ரமேஷ் கீழே தள்ளி விட்டார். இதில் தடுமாறி விழுந்த அவர் மீண்டும் முத்துகிருஷ்ண நாயுடுவை தாக்க ஓடினார். இதனால் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஓடிவந்து விவேகானந்த ரெட்டியை தடுத்துனர். இதை பார்த்ததும் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விரைந்து வந்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்களை தாக்க முயன்றனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த சபாநாயகர் சபையை உடனடியாக ஒத்திவைத்தார்.

அப்போது முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி விரைந்து வந்து விவேகானந்த ரெட்டியை தனது அறைக்கு அழைத்து சென்று அமைதிபடுத்தினார். விவேகானந்த ரெட்டி ஆந்திர மேல்-சபை உறுப்பினராக இருந்து மந்திரி சபையில் இருக்கிறார். மந்திரி என்ற காரணத்தால் தனது துறை சம்பந்தமான கேள்விக்கு பதில் சொல்ல சட்டசபைக்கு வந்து இருந்தார். சட்டசபை உறுப்பினரை அவர் தாக்கியதால் அவரை மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

சட்டசபையில் ஆவேசத்துடன் காணப்பட்ட விவேகானந்த ரெட்டி கோபமாக கூறும்போது என் குடும்பத்தை பற்றி மோசமாக விமர்சிப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனக்கு மந்திரி பதவியே தேவையில்லை என்று கூறினார். எனவே அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கி உள்ளார். அதில் சேராமல் விவேகானந்த ரெட்டி காங்கிரசிலேயே நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர சட்டசபையில் ரகளை: எம்.எல்.ஏ.வை தாக்கிய ராஜசேகர ரெட்டி தம்பி; அமளியால் சபை ஒத்திவைப்பு

ஆந்திராவில் ராஜசேகர ரெட்டியின் தம்பி விவேகானந்தரெட்டி விவசாயத் துறை மந்திரியாக இருக்கிறார். ஆந்திர சட்டசபை கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தபோது ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெலுங்குதேசம் ஆட்சியில் நிலமோசடி நடந்ததாக எழுதப்பட்ட அட்டையை ஏந்தி கோஷ மிட்டனர். இதற்கு பதிலடியாக இன்று சட்டசபை கூட்டம் நடந்தபோது தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் ராஜசேகர ரெட்டி ஊழல்வாதி என்ற வாசகம் அடங்கிய அட்டையை ஏந்தி இருந்தனர்.

இது ராஜசேகரரெட்டியின் தம்பியான மந்திரி விவேகானந்த ரெட்டிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. முத்து கிருஷ்ணநாயுடு, ராஜசேகர ரெட்டி குடும்பத்தினர் ஏராளமான சொத்து சேர்த்து விட்டார்கள் என்று விமர்சித்து பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த விவேகானந்த ரெட்டி முத்துகிருஷ்ண நாயுடுவை நோக்கி பாய்ந்து சென்றார். அப்போது முன் வரிசையில் இருந்த தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரமேஷ் கையில் இருந்த அட்டையை பறித்து கீழே வீசி விட்டு அவரை தாக்கினார்.

இதனால் விவேகானந்த ரெட்டியை ரமேஷ் கீழே தள்ளி விட்டார். இதில் தடுமாறி விழுந்த அவர் மீண்டும் முத்துகிருஷ்ண நாயுடுவை தாக்க ஓடினார். இதனால் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஓடிவந்து விவேகானந்த ரெட்டியை தடுத்துனர். இதை பார்த்ததும் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விரைந்து வந்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்களை தாக்க முயன்றனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த சபாநாயகர் சபையை உடனடியாக ஒத்திவைத்தார்.

அப்போது முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி விரைந்து வந்து விவேகானந்த ரெட்டியை தனது அறைக்கு அழைத்து சென்று அமைதிபடுத்தினார். விவேகானந்த ரெட்டி ஆந்திர மேல்-சபை உறுப்பினராக இருந்து மந்திரி சபையில் இருக்கிறார். மந்திரி என்ற காரணத்தால் தனது துறை சம்பந்தமான கேள்விக்கு பதில் சொல்ல சட்டசபைக்கு வந்து இருந்தார். சட்டசபை உறுப்பினரை அவர் தாக்கியதால் அவரை மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

சட்டசபையில் ஆவேசத்துடன் காணப்பட்ட விவேகானந்த ரெட்டி கோபமாக கூறும்போது என் குடும்பத்தை பற்றி மோசமாக விமர்சிப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனக்கு மந்திரி பதவியே தேவையில்லை என்று கூறினார். எனவே அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கி உள்ளார். அதில் சேராமல் விவேகானந்த ரெட்டி காங்கிரசிலேயே நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

உடுமலை : ""ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளையடித்த பணம் முழுவதும் தி.மு.க.,வினர் தேர்தலில் செலவழித்தாலும், புரட்சிக்கு தயாராக இருக்கும் மக்கள், அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணியை வெற்றி பெறச்செய்வர்,'' என பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசினார்.
உடுமலை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் சண்முகம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து கட்சியின் மாநில தேர்தல் பிரிவு செயலாளர் ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது: உடுமலை நகராட்சியில் கடந்த நான்காண்டில் 180 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. கட்டப்பஞ்சாயத்து, தாதாக்கள் அட்டகாசத்தை வளர்த்த தி.மு.க. நகராட்சி தலைவர், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றவில்லை. பாதாள சாக்கடை, மேம்பாலம், பஸ் ஸ்டாண்ட் விஸ்தரிப்பு என மக்களிடம் வரிப்பணத்தை கொள்ளையடித்து தி.மு.க.,வினர் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.
தி.மு.க., அமைச்சர்கள் தங்கள் ஊழல் பணத்தில் சொத்துகளை குவிக்க, இடைத்தரகராக செயல்பட்ட உடுமலை நகராட்சி தலைவர், தற்போது தொழிலதிபராக மாறியுள்ளார். 2 ஜி., ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் தமிழகம் முழுவதும் பல்வேறு பினாமிகள் மூலம், பல தொழில்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தலில் பட்டுவாடா செய்ய பல கோடி ரூபாயை தி.மு.க.,வினர் பதுக்கியுள்ளனர். ஓட்டுக்கு எத்தனை ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் மக்கள் இம்முறை தி.மு.க., வை புறக்கணிக்க முடிவெடுத்து விட்டனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் முழுவதும் தேர்தலில் செலவழித்தாலும், புரட்சிக்கு தயாராக இருக்கும் மக்கள், அனைத்து தொகுதியிலும், அ.தி.மு.க., கூட்டணியை வெற்றி பெறச்செய்வர். இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பூர் மாவட்ட செயலாளர் சண்முகவேலு பேசுகையில், ""உடுமலை நகராட்சியில் பாதாள சாக்கடை, தளி ரோடு மேம்பாலம், பஸ் ஸ்டாண்ட் விஸ்தரிப்பு ஆகிய முக்கிய திட்டங்கள் அ.தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இந்த திட்டங்களை நிதி மட்டும் ஒதுக்கிய தி.மு.க., எவ்வித பணிகளையும் முறையாக மேற்கொள்ளவில்லை.
""நகராட்சிக்கு சொந்தமான நிலங்களை மீட்பதாக கூறி அவற்றை கட்டப்பஞ்சாயத்து மூலம் தங்கள் சொத்துகளாக மாற்றிக்கொண்டனர். பாரம்பரியமிக்க உடுமலை நகராட்சி சீர்கேடு அடைந்துள்ளது. தங்கள் கோஷ்டி மோதலுக்காக டி.எஸ்.பி.,யை தாக்கியது மட்டுமே தற்போதுள்ள தி.மு.க., நிர்வாகிகளின் சாதனையாகும்,'' என்றார்.
கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் செ.ம.வேலுச்சாமி எம்.எல்.ஏ., பேசுகையில், ""தமிழக மக்களை நிரந்தர கடனாளியாக மாற்றியதே தி.மு.க., அரசின் சாதனை. மின்வெட்டு பிரச்னையால் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. மறைமுகமாக பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
""ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை மாநிலத்திற்கு சேர்த்து விட்டு, கருணாநிதி குடும்பத்தினர் அதை விட பல மடங்கு அளவு பணத்தை கொள்ளையடித்துள்ளனர். ஊழல் பணத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு தி.மு.க.,வினர் மறைமுகமாக உதவுகின்றனர். தமிழக மக்கள் புரட்சிக்கு தயாராகியுள்ளனர். வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வை வெற்றி பெற செய்ய மக்கள் முடிவெடுத்து விட்டனர்,'' என்றார். ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணிக்கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க., கூட்டணியை மக்கள் வெற்றி பெறச்செய்வர் : பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன்

உடுமலை : ""ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளையடித்த பணம் முழுவதும் தி.மு.க.,வினர் தேர்தலில் செலவழித்தாலும், புரட்சிக்கு தயாராக இருக்கும் மக்கள், அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணியை வெற்றி பெறச்செய்வர்,'' என பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசினார்.
உடுமலை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் சண்முகம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து கட்சியின் மாநில தேர்தல் பிரிவு செயலாளர் ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது: உடுமலை நகராட்சியில் கடந்த நான்காண்டில் 180 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. கட்டப்பஞ்சாயத்து, தாதாக்கள் அட்டகாசத்தை வளர்த்த தி.மு.க. நகராட்சி தலைவர், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றவில்லை. பாதாள சாக்கடை, மேம்பாலம், பஸ் ஸ்டாண்ட் விஸ்தரிப்பு என மக்களிடம் வரிப்பணத்தை கொள்ளையடித்து தி.மு.க.,வினர் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.
தி.மு.க., அமைச்சர்கள் தங்கள் ஊழல் பணத்தில் சொத்துகளை குவிக்க, இடைத்தரகராக செயல்பட்ட உடுமலை நகராட்சி தலைவர், தற்போது தொழிலதிபராக மாறியுள்ளார். 2 ஜி., ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் தமிழகம் முழுவதும் பல்வேறு பினாமிகள் மூலம், பல தொழில்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தலில் பட்டுவாடா செய்ய பல கோடி ரூபாயை தி.மு.க.,வினர் பதுக்கியுள்ளனர். ஓட்டுக்கு எத்தனை ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் மக்கள் இம்முறை தி.மு.க., வை புறக்கணிக்க முடிவெடுத்து விட்டனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் முழுவதும் தேர்தலில் செலவழித்தாலும், புரட்சிக்கு தயாராக இருக்கும் மக்கள், அனைத்து தொகுதியிலும், அ.தி.மு.க., கூட்டணியை வெற்றி பெறச்செய்வர். இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பூர் மாவட்ட செயலாளர் சண்முகவேலு பேசுகையில், ""உடுமலை நகராட்சியில் பாதாள சாக்கடை, தளி ரோடு மேம்பாலம், பஸ் ஸ்டாண்ட் விஸ்தரிப்பு ஆகிய முக்கிய திட்டங்கள் அ.தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இந்த திட்டங்களை நிதி மட்டும் ஒதுக்கிய தி.மு.க., எவ்வித பணிகளையும் முறையாக மேற்கொள்ளவில்லை.
""நகராட்சிக்கு சொந்தமான நிலங்களை மீட்பதாக கூறி அவற்றை கட்டப்பஞ்சாயத்து மூலம் தங்கள் சொத்துகளாக மாற்றிக்கொண்டனர். பாரம்பரியமிக்க உடுமலை நகராட்சி சீர்கேடு அடைந்துள்ளது. தங்கள் கோஷ்டி மோதலுக்காக டி.எஸ்.பி.,யை தாக்கியது மட்டுமே தற்போதுள்ள தி.மு.க., நிர்வாகிகளின் சாதனையாகும்,'' என்றார்.
கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் செ.ம.வேலுச்சாமி எம்.எல்.ஏ., பேசுகையில், ""தமிழக மக்களை நிரந்தர கடனாளியாக மாற்றியதே தி.மு.க., அரசின் சாதனை. மின்வெட்டு பிரச்னையால் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. மறைமுகமாக பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
""ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை மாநிலத்திற்கு சேர்த்து விட்டு, கருணாநிதி குடும்பத்தினர் அதை விட பல மடங்கு அளவு பணத்தை கொள்ளையடித்துள்ளனர். ஊழல் பணத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு தி.மு.க.,வினர் மறைமுகமாக உதவுகின்றனர். தமிழக மக்கள் புரட்சிக்கு தயாராகியுள்ளனர். வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வை வெற்றி பெற செய்ய மக்கள் முடிவெடுத்து விட்டனர்,'' என்றார். ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணிக்கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

ஐதராபாத் : ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த ஆறு நாட்களாக மேற்கொண்டு வரும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் நேற்று பாதயாத்திரை மேற்கொண்டனர்.
பயிற்சி கட்டண பிரச்னை தொடர்பாக, ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா லோக்சபா தொகுதி முன்னாள் எம்.பி.,யுமான ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 18ம் தேதி உண்ணாவிரதத்தை துவக்கினார். தொடர்ந்து ஆறு நாட்களாக உண்ணாவிரதம் இருந்தும், முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளவில்லை.
இதனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள ஜெகன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் எரிச்சல் அடைந்தனர். ஜெகனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மாநில காங்கிரஸ் அரசின் மெத்தனத்தை கண்டிக்கும் வகையிலும், நேற்று பாதயாத்திரை மேற்கொண்டனர். ஐதராபாத், இந்திரா பார்க்கிலிருந்து இந்த பாதயாத்திரை துவங்கினர்.
ஜெகனின் தீவிர ஆதரவாளரான சுரேகா, ஆந்திர மாநில சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசுகையில், "ஆறு நாட்களுக்கு மேலாக ஜெகன் உண்ணாவிரதம் இருந்தும், அதை மாநில அரசு கண்டு கொள்ளவில்லை. மாநில அரசின் அக்கறையற்ற செயலைக் கண்டித்தே பாதயாத்திரை மேற்கொண்டோம். எதிர்க்கட்சித் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, மாநில பா.ஜ., தலைவர் கிஷன் ரெட்டி ஆகியோர் உண்ணாவிரதம் இருந்த போது, அமைச்சர்களையும் மற்ற பிரதிநிதிகளையும் அனுப்பி பேச்சுவார்த்தை நடத்திய மாநில அரசு, ஜெகனின் உண்ணாவிரதத்தை மட்டும் கண்டு கொள்ளவில்லை. இது பழிவாங்கும் செயல்' என்றார்.
உண்ணாவிரதத்தை துவக்கியது முதல், ஜெகனை 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், டாக்டர்களின் ஆலோசனைப்படி ஜெகன் தன் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என, போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். அதை ஜெகன் நிராகரித்து விட்டார்.
சஸ்பெண்ட்: இதற்கிடையில், ஆந்திர சட்டசபையில், நேற்று தெலுங்கானா பிரச்னையை எழுப்பி, நிதி அமைச்சர் ராமநாராயண ரெட்டியை பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் தடுத்த 11 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களில் ஆறு பேர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பா.ஜ., வைச் சேர்ந்தவர். மற்ற நான்கு பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,க்கள். காலை 11.43 மணி அளவில் நிதி அமைச்சர் பட்ஜெட் உரையை வாசிக்க முற்பட்ட போது, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.,க்கள் அவரின் கையிலிருந்த பட்ஜெட் நகலை பறிக்க முற்பட்டனர்.
உடன், அங்கு பெருமளவில் குழுமியிருந்த சபைக் காவலர்கள் அவர்களை தடுத்து வெளியேற்றினர். இதையடுத்து, டி.ஆர்.எஸ்., எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் சபையில் கொண்டு வரப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது. இதன்பின், நிதி அமைச்சர் மீண்டும் பட்ஜெட் உரையை படிக்கத் துவங்கிய போது, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று, தெலுங்கானாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் நிதி அமைச்சரை நோக்கிச் சென்ற போது, சபைக் காவலர்கள் தடுத்தனர். இதன்பின் பா.ஜ., மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானமும் சபையில் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில், 48 மணி நேர "பந்த்' நடந்ததால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

ஜெகன் உண்ணாவிரதத்திற்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு : காங்கிரசில் சலசலப்பு

ஐதராபாத் : ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த ஆறு நாட்களாக மேற்கொண்டு வரும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் நேற்று பாதயாத்திரை மேற்கொண்டனர்.
பயிற்சி கட்டண பிரச்னை தொடர்பாக, ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா லோக்சபா தொகுதி முன்னாள் எம்.பி.,யுமான ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 18ம் தேதி உண்ணாவிரதத்தை துவக்கினார். தொடர்ந்து ஆறு நாட்களாக உண்ணாவிரதம் இருந்தும், முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளவில்லை.
இதனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள ஜெகன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் எரிச்சல் அடைந்தனர். ஜெகனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மாநில காங்கிரஸ் அரசின் மெத்தனத்தை கண்டிக்கும் வகையிலும், நேற்று பாதயாத்திரை மேற்கொண்டனர். ஐதராபாத், இந்திரா பார்க்கிலிருந்து இந்த பாதயாத்திரை துவங்கினர்.
ஜெகனின் தீவிர ஆதரவாளரான சுரேகா, ஆந்திர மாநில சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசுகையில், "ஆறு நாட்களுக்கு மேலாக ஜெகன் உண்ணாவிரதம் இருந்தும், அதை மாநில அரசு கண்டு கொள்ளவில்லை. மாநில அரசின் அக்கறையற்ற செயலைக் கண்டித்தே பாதயாத்திரை மேற்கொண்டோம். எதிர்க்கட்சித் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, மாநில பா.ஜ., தலைவர் கிஷன் ரெட்டி ஆகியோர் உண்ணாவிரதம் இருந்த போது, அமைச்சர்களையும் மற்ற பிரதிநிதிகளையும் அனுப்பி பேச்சுவார்த்தை நடத்திய மாநில அரசு, ஜெகனின் உண்ணாவிரதத்தை மட்டும் கண்டு கொள்ளவில்லை. இது பழிவாங்கும் செயல்' என்றார்.
உண்ணாவிரதத்தை துவக்கியது முதல், ஜெகனை 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், டாக்டர்களின் ஆலோசனைப்படி ஜெகன் தன் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என, போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். அதை ஜெகன் நிராகரித்து விட்டார்.
சஸ்பெண்ட்: இதற்கிடையில், ஆந்திர சட்டசபையில், நேற்று தெலுங்கானா பிரச்னையை எழுப்பி, நிதி அமைச்சர் ராமநாராயண ரெட்டியை பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் தடுத்த 11 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களில் ஆறு பேர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பா.ஜ., வைச் சேர்ந்தவர். மற்ற நான்கு பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,க்கள். காலை 11.43 மணி அளவில் நிதி அமைச்சர் பட்ஜெட் உரையை வாசிக்க முற்பட்ட போது, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.,க்கள் அவரின் கையிலிருந்த பட்ஜெட் நகலை பறிக்க முற்பட்டனர்.
உடன், அங்கு பெருமளவில் குழுமியிருந்த சபைக் காவலர்கள் அவர்களை தடுத்து வெளியேற்றினர். இதையடுத்து, டி.ஆர்.எஸ்., எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் சபையில் கொண்டு வரப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது. இதன்பின், நிதி அமைச்சர் மீண்டும் பட்ஜெட் உரையை படிக்கத் துவங்கிய போது, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று, தெலுங்கானாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் நிதி அமைச்சரை நோக்கிச் சென்ற போது, சபைக் காவலர்கள் தடுத்தனர். இதன்பின் பா.ஜ., மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானமும் சபையில் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில், 48 மணி நேர "பந்த்' நடந்ததால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

ஐதராபாத் : ஆந்திர சட்டசபையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும், கடும் அமளி நிலவியது. தனி தெலுங்கானா, எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் போன்ற விவகாரங்களை எழுப்பி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மூன்று முறை சபை ஒத்தி வைக்கப்பட்டது.
ஆந்திர சட்டசபையில், கடந்த இரண்டு நாட்களாக கடும் அமளி நிலவி வருகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரில், கவர்னர் துவக்க உரையாற்றிய போது, தெலுங்கு தேசம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.,) கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, டி.ஆர்.எஸ்., கட்சியைச் சேர்ந்த மூன்று பேரும், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேரும், ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இப்பிரச்னையால், இரண்டு நாட்களாக சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று சபை கூடியதும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இப்பிரச்னையை எழுப்பினார். அவர் பேசுகையில், "எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும். அவர்கள் மீண்டும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்' என்றார்.
இதற்கு பதிலளித்த தொழிலாளர் துறை அமைச்சர் தனம் நாகேந்தர், "சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்டால், சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும்' என்றார். இதற்கு தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ., நாகம் ஜனார்த்த ரெட்டி, சபையின் மையப் பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினார்.
இதற்கிடையே, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு வசதியாக உடனடியாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, டி.ஆர்.எஸ்., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி நிலவியபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.,க்கள் (ஜெகன் மோகன் ஆதரவு) மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் விவகாரத்தை எழுப்பி, கோஷமிட்டனர். இதனால், சபையில் ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதையடுத்து, சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கு பின் இரண்டு முறை சபை கூடியும், நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், தொடர்ந்து மூன்று முறை சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பின், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து, உதவி சபாநாயகர் நாதெந்லா மனோகர் ஆலோசனை நடத்தினார்.
உஸ்மானியாவில் பதட்டம் : தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி, ஐதராபாத், உஸ்மானியா பல்கலை மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, சட்டசபை நோக்கி ஊர்வலமாக செல்ல, அவர்கள் முயற்சித்தனர். பல்கலை நுழைவாயிலிலேயே அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கோபமடைந்த மாணவர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதனால், அங்கு பதட்டம் உருவானது. கடும் முயற்சிக்கு பின், மாணவர்கள் ஊர்வலம் செல்லும் முயற்சியை போலீசார் முறியடித்தனர். மேலும், தெலுங்கானா ஆதரவாளர்கள் சிலர், ஐதராபாத் ரயில்வே ஸ்டேஷன் மீது, திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார், அவர்களை விரட்டி அடித்தனர்.

மூன்றாம் நாளாக ஆந்திராவில் எம்.எல்.ஏ.,க்கள் சபையில் அமளி

ஐதராபாத் : ஆந்திர சட்டசபையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும், கடும் அமளி நிலவியது. தனி தெலுங்கானா, எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் போன்ற விவகாரங்களை எழுப்பி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மூன்று முறை சபை ஒத்தி வைக்கப்பட்டது.
ஆந்திர சட்டசபையில், கடந்த இரண்டு நாட்களாக கடும் அமளி நிலவி வருகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரில், கவர்னர் துவக்க உரையாற்றிய போது, தெலுங்கு தேசம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.,) கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, டி.ஆர்.எஸ்., கட்சியைச் சேர்ந்த மூன்று பேரும், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேரும், ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இப்பிரச்னையால், இரண்டு நாட்களாக சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று சபை கூடியதும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இப்பிரச்னையை எழுப்பினார். அவர் பேசுகையில், "எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும். அவர்கள் மீண்டும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்' என்றார்.
இதற்கு பதிலளித்த தொழிலாளர் துறை அமைச்சர் தனம் நாகேந்தர், "சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்டால், சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும்' என்றார். இதற்கு தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ., நாகம் ஜனார்த்த ரெட்டி, சபையின் மையப் பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினார்.
இதற்கிடையே, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு வசதியாக உடனடியாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, டி.ஆர்.எஸ்., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி நிலவியபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.,க்கள் (ஜெகன் மோகன் ஆதரவு) மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் விவகாரத்தை எழுப்பி, கோஷமிட்டனர். இதனால், சபையில் ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதையடுத்து, சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கு பின் இரண்டு முறை சபை கூடியும், நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், தொடர்ந்து மூன்று முறை சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பின், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து, உதவி சபாநாயகர் நாதெந்லா மனோகர் ஆலோசனை நடத்தினார்.
உஸ்மானியாவில் பதட்டம் : தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி, ஐதராபாத், உஸ்மானியா பல்கலை மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, சட்டசபை நோக்கி ஊர்வலமாக செல்ல, அவர்கள் முயற்சித்தனர். பல்கலை நுழைவாயிலிலேயே அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கோபமடைந்த மாணவர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதனால், அங்கு பதட்டம் உருவானது. கடும் முயற்சிக்கு பின், மாணவர்கள் ஊர்வலம் செல்லும் முயற்சியை போலீசார் முறியடித்தனர். மேலும், தெலுங்கானா ஆதரவாளர்கள் சிலர், ஐதராபாத் ரயில்வே ஸ்டேஷன் மீது, திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார், அவர்களை விரட்டி அடித்தனர்.

சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த ஆட்சியில் கடைசிக் கூட்டம் என்பதால் மறு தேதி குறிப்பிடாமல் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இறுதி நாளில் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி பேசுகையில், நுழைவுத்தேர்வு ரத்து, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டி.வி. என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ள இந்த அரசு, பா.ம.கவின் கோரிக்கையையும் நிறைவேற்றியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகளாக நியமிக்க 7 பேர் கொண்ட பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒருவர்கூட வன்னியர் இல்லை. இந்த பரிந்துரையை அரசு செய்ததா?, இல்லையா?. இந்தப் பட்டியலை சரிபார்த்து வன்னியருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க செய்ய வேண்டும்.

விலை உயர்வுக்குக் காரணமான பதுக்கல்காரர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகளுடன் போட்டி போட்டு 2வது இடத்தை பா.ம.க பிடித்தது. மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ள பா.ம.கவுடன் சேரும் அணிதான் வெற்றி பெறும். ஆட்சியை பிடிக்கும் என்றார்.

வழக்கமாக ஒவ்வொரு ஆட்சியிலும் இறுதி கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் எப்போதுமே உணர்ச்சி மிகுந்ததாக இருக்கும். இந்தக் கூட்டத்தில் ஏறக்குறைய அனைத்து உறுப்பினருமே ஆஜராகி விடுவார்கள். சபாநாயகரின் பேச்சும் மனதை உருக்குவதாக இருக்கும்.

ஆனால் சட்டசபையில் நேற்று அப்படி ஒரு நிலமை காணப்படவில்லை. நேரமின்மையை கருத்தில் கொண்டு சபாநாயகர் தனது உரையை நிகழ்த்தாமலேயே, தனது பேச்சை ஆவணங்களில் பதிவு செய்து கொண்டார்.

அதில் ஆவுடைப்பன் கூறியிருப்பதாவது:

13வது சட்டப்பேரவையின் 15 கூட்டத்தொடர்கள் 17.5.06 அன்று தொடங்கி இன்று 10.2.11 வரை நடைபெற்றுள்ளன. இந்த 5 ஆண்டுகளில் சட்டசபை 226 நாட்கள் கூடின. ஒரு நாள் மாலையிலும் கூட்டம் நடந்தது. அவைக்கூட்டம் நடைபெற்ற மொத்தநேரம் 902 மணி 08 நிமிடம்.

அதிமுகவுக்கே அதிக வாய்ப்பு:

மானிய கோரிக்கைகள் மீது விவாதமும் வாக்கெடுப்பும் 123 நாட்கள் நடைபெற்றன. உறுப்பினர்கள் 1,044 பேர் 239 மணி 34 நிமிடம் உரையாற்றினர். இவர்களுக்கு அமைச்சர்கள் பதிலுரையாற்றிய மொத்த நேரம் 109 மணி 48 நிமிடம். முதல்வர் தனது துறைகள் சம்பந்தமாக பதிலளித்த நேரம் 7 மணி 2 நிமிடம். துணை முதல்வர் தனது துறைகள் சம்பந்தமாக 13 மணி 18 நிமிடம் உரையாற்றினார்.

இந்த 5 ஆண்டுகளில் வாதங்களில் பேசுவதற்கு உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தி.மு.கவுக்கு 272 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பேசிய நேரம் 65 மணி 15 நிமிடங்கள். அ.தி.மு.கவுக்கு 276 வாய்ப்புகள் வழங்கப்பட்டு, 98 மணி 53 நிமிடங்கள் பேசியுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 312 வாய்ப்புகள் தரப்பட்டு 91 மணி 54 நிமிடங்கள் உடையாற்றினர். பா.ம.க.வுக்கு 191 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு 54 மணி 43 நிமிடங்கள் உரை நிகழ்த்தியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 156 வாய்ப்புகள், இந்திய கம்ïனிஸ்டு 142 வாய்ப்புகள், ம.தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கு 90 வாய்ப்புகள், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 47 வாய்ப்புகள், தே.மு.தி.கவுக்கு 8 வாய்ப்புகள் தரப்பட்டன. தே.மு.தி.க. உறுப்பினர் இந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 1.37 மணிநேரம் சட்டசபையில் பேசி இருக்கிறார்.

அதிக கேள்வி கேட்டவர்கள்:

அனுமதிக்கப்பட்ட கேள்விகள் கேட்டதில் முதல் ஐந்து நிலைகளில், முதலாவதாக கோவை தங்கம் (காங்கிரஸ்) 29 ஆயிரத்து 139 கேள்விகள் கேட்டுள்ளார். அடுத்ததாக ம.குணசேகரன் (அ.தி.மு.க.) 16 ஆயிரத்து57, அ.தமிழரசு (பா.ம.க.) 9,687, கி.ஆறுமுகம் (பா.ம.க.) 5,655, பெ.கண்ணன் (பா.ம.க.) 5,432 கேள்விகள் கேட்டுள்ளனர்.

தவறாமல் அவைக்கு வந்தவர்கள்:

17.5.2006 முதல் 5 ஆண்டுகளில் கூட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களிலும் ஆ.அங்கையற்கண்ணி (தி.மு.க.), எம்.அன்பழகன் (தி.மு.க.), சபா.ராஜேந்திரன் (தி.மு.க.), உதயசூரியன் (தி.மு.க.), கோ.ஐயப்பன் (தி.மு.க.), வே.கண்ணன் (தி.மு.க.), பெ.காமராஜ் (தி.மு.க.), க.சுந்தர் (தி.மு.க.), கே.திருநாவுக்கரசு (தி.மு.க.), வி.எஸ்.பாபு (தி.மு.க.), ப.ரங்கநாதன் (தி.மு.க.), விடியல் எஸ்.சேகர் (காங்கிரஸ்), எஸ். ஜான் ஜேக்கப் (காங்கிரஸ்) ஆகியோர் சட்டசபைக்கு வந்திருந்தனர் என்று கூறப்பட்டிருந்தது.

சட்டசபையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கும் தீர்மானத்தை அவை முன்னவரும் நிதி அமைச்சருமான க.அன்பழகன் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் சட்டசபை தள்ளி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார். இந்த நிகழ்வுகள் பிற்பகல் 2.27 மணிக்கு முடிந்தன.

சட்டசபை முடிவுக்கு வரும் முன்னரே எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்திருந்தன. எனவே ஆளும் கட்சிக் கூட்டணிக் கட்சியினர் மட்டும் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி நன்றியையும் எதிர்கால வெற்றிக்கு வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டனர்.

சட்டசபையில் இறுதி நிமிடம் வரை முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். நிகழ்ச்சிகள் முடிந்ததும், கருணாநிதியை தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, விடுதலைச் சிறுத்தை கட்சி எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர்.

மதுரை, கோவை மாநகராட்சிகள் விரிவாக்கம் மசோதா நிறைவேற்றம்:

முன்னதாக மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளை அடுத்துள்ள ஒரு சில உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து இந்த இரண்டு மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்குவது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

பாமகவுடன் கூட்டு சேரும் அணியே வெல்லும், ஆட்சியை பிடிக்கும்-மணி

சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த ஆட்சியில் கடைசிக் கூட்டம் என்பதால் மறு தேதி குறிப்பிடாமல் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இறுதி நாளில் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி பேசுகையில், நுழைவுத்தேர்வு ரத்து, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டி.வி. என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ள இந்த அரசு, பா.ம.கவின் கோரிக்கையையும் நிறைவேற்றியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகளாக நியமிக்க 7 பேர் கொண்ட பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒருவர்கூட வன்னியர் இல்லை. இந்த பரிந்துரையை அரசு செய்ததா?, இல்லையா?. இந்தப் பட்டியலை சரிபார்த்து வன்னியருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க செய்ய வேண்டும்.

விலை உயர்வுக்குக் காரணமான பதுக்கல்காரர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகளுடன் போட்டி போட்டு 2வது இடத்தை பா.ம.க பிடித்தது. மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ள பா.ம.கவுடன் சேரும் அணிதான் வெற்றி பெறும். ஆட்சியை பிடிக்கும் என்றார்.

வழக்கமாக ஒவ்வொரு ஆட்சியிலும் இறுதி கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் எப்போதுமே உணர்ச்சி மிகுந்ததாக இருக்கும். இந்தக் கூட்டத்தில் ஏறக்குறைய அனைத்து உறுப்பினருமே ஆஜராகி விடுவார்கள். சபாநாயகரின் பேச்சும் மனதை உருக்குவதாக இருக்கும்.

ஆனால் சட்டசபையில் நேற்று அப்படி ஒரு நிலமை காணப்படவில்லை. நேரமின்மையை கருத்தில் கொண்டு சபாநாயகர் தனது உரையை நிகழ்த்தாமலேயே, தனது பேச்சை ஆவணங்களில் பதிவு செய்து கொண்டார்.

அதில் ஆவுடைப்பன் கூறியிருப்பதாவது:

13வது சட்டப்பேரவையின் 15 கூட்டத்தொடர்கள் 17.5.06 அன்று தொடங்கி இன்று 10.2.11 வரை நடைபெற்றுள்ளன. இந்த 5 ஆண்டுகளில் சட்டசபை 226 நாட்கள் கூடின. ஒரு நாள் மாலையிலும் கூட்டம் நடந்தது. அவைக்கூட்டம் நடைபெற்ற மொத்தநேரம் 902 மணி 08 நிமிடம்.

அதிமுகவுக்கே அதிக வாய்ப்பு:

மானிய கோரிக்கைகள் மீது விவாதமும் வாக்கெடுப்பும் 123 நாட்கள் நடைபெற்றன. உறுப்பினர்கள் 1,044 பேர் 239 மணி 34 நிமிடம் உரையாற்றினர். இவர்களுக்கு அமைச்சர்கள் பதிலுரையாற்றிய மொத்த நேரம் 109 மணி 48 நிமிடம். முதல்வர் தனது துறைகள் சம்பந்தமாக பதிலளித்த நேரம் 7 மணி 2 நிமிடம். துணை முதல்வர் தனது துறைகள் சம்பந்தமாக 13 மணி 18 நிமிடம் உரையாற்றினார்.

இந்த 5 ஆண்டுகளில் வாதங்களில் பேசுவதற்கு உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தி.மு.கவுக்கு 272 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பேசிய நேரம் 65 மணி 15 நிமிடங்கள். அ.தி.மு.கவுக்கு 276 வாய்ப்புகள் வழங்கப்பட்டு, 98 மணி 53 நிமிடங்கள் பேசியுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 312 வாய்ப்புகள் தரப்பட்டு 91 மணி 54 நிமிடங்கள் உடையாற்றினர். பா.ம.க.வுக்கு 191 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு 54 மணி 43 நிமிடங்கள் உரை நிகழ்த்தியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 156 வாய்ப்புகள், இந்திய கம்ïனிஸ்டு 142 வாய்ப்புகள், ம.தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கு 90 வாய்ப்புகள், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 47 வாய்ப்புகள், தே.மு.தி.கவுக்கு 8 வாய்ப்புகள் தரப்பட்டன. தே.மு.தி.க. உறுப்பினர் இந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 1.37 மணிநேரம் சட்டசபையில் பேசி இருக்கிறார்.

அதிக கேள்வி கேட்டவர்கள்:

அனுமதிக்கப்பட்ட கேள்விகள் கேட்டதில் முதல் ஐந்து நிலைகளில், முதலாவதாக கோவை தங்கம் (காங்கிரஸ்) 29 ஆயிரத்து 139 கேள்விகள் கேட்டுள்ளார். அடுத்ததாக ம.குணசேகரன் (அ.தி.மு.க.) 16 ஆயிரத்து57, அ.தமிழரசு (பா.ம.க.) 9,687, கி.ஆறுமுகம் (பா.ம.க.) 5,655, பெ.கண்ணன் (பா.ம.க.) 5,432 கேள்விகள் கேட்டுள்ளனர்.

தவறாமல் அவைக்கு வந்தவர்கள்:

17.5.2006 முதல் 5 ஆண்டுகளில் கூட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களிலும் ஆ.அங்கையற்கண்ணி (தி.மு.க.), எம்.அன்பழகன் (தி.மு.க.), சபா.ராஜேந்திரன் (தி.மு.க.), உதயசூரியன் (தி.மு.க.), கோ.ஐயப்பன் (தி.மு.க.), வே.கண்ணன் (தி.மு.க.), பெ.காமராஜ் (தி.மு.க.), க.சுந்தர் (தி.மு.க.), கே.திருநாவுக்கரசு (தி.மு.க.), வி.எஸ்.பாபு (தி.மு.க.), ப.ரங்கநாதன் (தி.மு.க.), விடியல் எஸ்.சேகர் (காங்கிரஸ்), எஸ். ஜான் ஜேக்கப் (காங்கிரஸ்) ஆகியோர் சட்டசபைக்கு வந்திருந்தனர் என்று கூறப்பட்டிருந்தது.

சட்டசபையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கும் தீர்மானத்தை அவை முன்னவரும் நிதி அமைச்சருமான க.அன்பழகன் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் சட்டசபை தள்ளி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார். இந்த நிகழ்வுகள் பிற்பகல் 2.27 மணிக்கு முடிந்தன.

சட்டசபை முடிவுக்கு வரும் முன்னரே எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்திருந்தன. எனவே ஆளும் கட்சிக் கூட்டணிக் கட்சியினர் மட்டும் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி நன்றியையும் எதிர்கால வெற்றிக்கு வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டனர்.

சட்டசபையில் இறுதி நிமிடம் வரை முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். நிகழ்ச்சிகள் முடிந்ததும், கருணாநிதியை தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, விடுதலைச் சிறுத்தை கட்சி எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர்.

மதுரை, கோவை மாநகராட்சிகள் விரிவாக்கம் மசோதா நிறைவேற்றம்:

முன்னதாக மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளை அடுத்துள்ள ஒரு சில உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து இந்த இரண்டு மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்குவது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

முக நூல்

Popular Posts