background img

புதிய வரவு

Showing posts with label Baskar. Show all posts
Showing posts with label Baskar. Show all posts
தர்மபுரி மாவட்டத்தில் தே.மு.தி.க மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு..தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

அவர் தர்மபுரி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரை ஆதரித்து தர்மபுரி பஸ் நிலையம் அருகே உள்ள ராஜகோபால் கவுண்டர் பூங்கா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாலை 3.15 மணியளவில் அங்கு பிரசாரம் செய்தார்.

அவருடன் வேட்பாளர் பாஸ்கர் கை கூப்பி நின்றவாறு நின்றார். அவரை விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். இதை யடுத்து வேட்பாளர் பாஸ்கர் அதே வாகனத்திற்குள் உட்கார்ந்து கொண்டார். அந்த சமயத்தில் விஜயகாந்த் பேசும் போது மைக் சரியாக வேலை செய்யவில்லை.

அதோடு விஜயகாந்த் பேசும் போது வேட்பாளர் பாஸ்கர் என்பதற்கு பதிலாக பாண்டியன் என்று கூறினார். அப்போது வேட்பாளர் என் பெயர் பாஸ்கர் என கூறமுயற்சித்ததாகவும், இதைக்கேட்ட விஜயகாந்த் வேட்பாளரை பிரசார வாகனத்திலேயே பொதுமக்கள் மத்தியில் தாக்கியதாக பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் வேட்பாளரை தாக்க வில்லை. உதவியாளரைத்தான் தாக்கினார் என்றும் பேசப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தர்மபுரியில் நேற்று தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த போது கேப்டன் பேசிய மைக்கில் பேட்டரி கழன்றி கீழே விழுந்தது. அதை எடுத்து கொடுக்குமாறு தனது உதவியாளரிடம் கூறினார். அவர் எடுத்து கொடுத்த பின்பு தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தார்.

மீண்டும் அந்த பேட்டரி கீழே விழுந்தது. அப்போதும் அதை எடுத்து கொடுக்க சொன்னார். உதவியாளர் எடுத்து கொடுத்தார். பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார். ஆனால் வேட்பாளரை தாக்கிவிட்டார் என்று தவறாக தகவல் பரப்பி விடப்பட்டு இருக்கிறது.

இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் சீட்டில் அமர்ந்திருந்தோம். மேலும் நான் கட்சி கலர் அணிந்த துண்டு கழுத்தில் அணிந்திருந்தேன். என் தலையிலும் முடி அதிகளவில் உள்ளது. ஆனால் விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி. எனது வெற்றியை தடுக்க இது போன்ற ஒரு பிரசாரத்தை செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தர்மபுரியில் நடந்த பிரசாரத்தில் விஜயகாந்த் என்னை தாக்கினாரா? தே.மு.தி.க. வேட்பாளர் பரபரப்பு பேட்டி

தர்மபுரி மாவட்டத்தில் தே.மு.தி.க மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு..தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

அவர் தர்மபுரி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரை ஆதரித்து தர்மபுரி பஸ் நிலையம் அருகே உள்ள ராஜகோபால் கவுண்டர் பூங்கா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாலை 3.15 மணியளவில் அங்கு பிரசாரம் செய்தார்.

அவருடன் வேட்பாளர் பாஸ்கர் கை கூப்பி நின்றவாறு நின்றார். அவரை விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். இதை யடுத்து வேட்பாளர் பாஸ்கர் அதே வாகனத்திற்குள் உட்கார்ந்து கொண்டார். அந்த சமயத்தில் விஜயகாந்த் பேசும் போது மைக் சரியாக வேலை செய்யவில்லை.

அதோடு விஜயகாந்த் பேசும் போது வேட்பாளர் பாஸ்கர் என்பதற்கு பதிலாக பாண்டியன் என்று கூறினார். அப்போது வேட்பாளர் என் பெயர் பாஸ்கர் என கூறமுயற்சித்ததாகவும், இதைக்கேட்ட விஜயகாந்த் வேட்பாளரை பிரசார வாகனத்திலேயே பொதுமக்கள் மத்தியில் தாக்கியதாக பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் வேட்பாளரை தாக்க வில்லை. உதவியாளரைத்தான் தாக்கினார் என்றும் பேசப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தர்மபுரியில் நேற்று தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த போது கேப்டன் பேசிய மைக்கில் பேட்டரி கழன்றி கீழே விழுந்தது. அதை எடுத்து கொடுக்குமாறு தனது உதவியாளரிடம் கூறினார். அவர் எடுத்து கொடுத்த பின்பு தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தார்.

மீண்டும் அந்த பேட்டரி கீழே விழுந்தது. அப்போதும் அதை எடுத்து கொடுக்க சொன்னார். உதவியாளர் எடுத்து கொடுத்தார். பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார். ஆனால் வேட்பாளரை தாக்கிவிட்டார் என்று தவறாக தகவல் பரப்பி விடப்பட்டு இருக்கிறது.

இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் சீட்டில் அமர்ந்திருந்தோம். மேலும் நான் கட்சி கலர் அணிந்த துண்டு கழுத்தில் அணிந்திருந்தேன். என் தலையிலும் முடி அதிகளவில் உள்ளது. ஆனால் விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி. எனது வெற்றியை தடுக்க இது போன்ற ஒரு பிரசாரத்தை செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முக நூல்

Popular Posts