background img

புதிய வரவு

Showing posts with label Case. Show all posts
Showing posts with label Case. Show all posts
சென்னை: சாதிக் பாட்சா உறவினர்களிடம் தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தினர்.

2ஜி விவகாரத்தில் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாக சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து சாதிக் பாட்சா இறந்த சூழல், அவரை யாராவது தற்கொலை செய்யத் தூண்டினார்களா போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் மத்திய தடயவியல் நிபுணர் குழுவினர் சாதிக் பாட்சாவின் சென்னை வீட்டில் சோதனை நடத்தினர்.

அதே சமயத்தில் திருச்சி, பெரம்பலூரில் உள்ள சாதிக் பாட்சாவின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.

சாதிக் பாட்சா தூக்கு போட்டுக் கொண்ட அறைக் கதவை உடைத்து திறந்ததாக அவரது மனைவி தெரிவித்திருந்தார். ஆனால் உண்மையில அந்த கதவு உடைக்கப்படவேயில்லை என்பதை தடயவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. மேலும், சாதிக் பாட்சா இறப்பதற்கு முன்தினம் இரவு ஒரு குறிப்பிட்ட நபரிடம் 30 தடவைக்கும் அதிகமாக பேசியுள்ளார். அந்த நபரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

சாதிக் பாட்சா தற்கொலை குறித்து அவரது மனைவி, உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் கிடைத்த தகவல்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை, தடயவியல் மற்றும் அறிவியல் பூர்வமாக நடந்துள்ள ஆய்வுகள், சிபிஐ சோதனை ஆகியவற்றை ஒருங்கிணைத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

சாதிக் பாட்சா தற்கொலை வழக்கில் உறவினர்களிடம் விசாரணை

சென்னை: சாதிக் பாட்சா உறவினர்களிடம் தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தினர்.

2ஜி விவகாரத்தில் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாக சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து சாதிக் பாட்சா இறந்த சூழல், அவரை யாராவது தற்கொலை செய்யத் தூண்டினார்களா போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் மத்திய தடயவியல் நிபுணர் குழுவினர் சாதிக் பாட்சாவின் சென்னை வீட்டில் சோதனை நடத்தினர்.

அதே சமயத்தில் திருச்சி, பெரம்பலூரில் உள்ள சாதிக் பாட்சாவின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.

சாதிக் பாட்சா தூக்கு போட்டுக் கொண்ட அறைக் கதவை உடைத்து திறந்ததாக அவரது மனைவி தெரிவித்திருந்தார். ஆனால் உண்மையில அந்த கதவு உடைக்கப்படவேயில்லை என்பதை தடயவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. மேலும், சாதிக் பாட்சா இறப்பதற்கு முன்தினம் இரவு ஒரு குறிப்பிட்ட நபரிடம் 30 தடவைக்கும் அதிகமாக பேசியுள்ளார். அந்த நபரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

சாதிக் பாட்சா தற்கொலை குறித்து அவரது மனைவி, உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் கிடைத்த தகவல்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை, தடயவியல் மற்றும் அறிவியல் பூர்வமாக நடந்துள்ள ஆய்வுகள், சிபிஐ சோதனை ஆகியவற்றை ஒருங்கிணைத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னை: இந்திய ராணுவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த விஜயகாந்தின் தேமுதிகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் கேட்டு விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேமுதிகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி டி.எஸ். ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த மாதம் 24-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தேர்தல் குறித்து உங்கள் வியூகம் என்ன என்று கேட்டதற்கு, கார்கில் போர் நடந்தபோதும் சரி, பாகிஸ்தானுடன் மோதும்போதும் சரி ராணுவத்தினர் என்ன திட்டம்போட்டா எதிர்கொண்டனர். எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அது நடக்கும் என்று கூறினார்.

இந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது. எனவே தேமுதிகவின் தேர்தல் ஆணைய பதிவு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அந்த முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து இன்னும் 4 வார காலத்திற்குள் பதில் அளி்க்குமாறு விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு: விஜயகாந்த், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

சென்னை: இந்திய ராணுவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த விஜயகாந்தின் தேமுதிகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் கேட்டு விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேமுதிகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி டி.எஸ். ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த மாதம் 24-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தேர்தல் குறித்து உங்கள் வியூகம் என்ன என்று கேட்டதற்கு, கார்கில் போர் நடந்தபோதும் சரி, பாகிஸ்தானுடன் மோதும்போதும் சரி ராணுவத்தினர் என்ன திட்டம்போட்டா எதிர்கொண்டனர். எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அது நடக்கும் என்று கூறினார்.

இந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது. எனவே தேமுதிகவின் தேர்தல் ஆணைய பதிவு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அந்த முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து இன்னும் 4 வார காலத்திற்குள் பதில் அளி்க்குமாறு விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

முக நூல்

Popular Posts