background img

புதிய வரவு

Showing posts with label Chaild. Show all posts
Showing posts with label Chaild. Show all posts
டெல்லி: பல சமயங்களில் சிறார்களின் விளையாட்டு விபரீதமாகி விடுவதுண்டு. அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த 3 வயது சிறுவனின் தலை பிரஷர் குக்கரில் சிக்கிக் கொண்டு பேராபத்தை ஏற்படுத்தி விட்டது.

வட மேற்கு டெல்லியில் உள்ள ரானி பாக் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவரது 3 வயது மகன் ஷிவம். இவன் தனது வீட்டில் பிரஷர் குக்கரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.. குக்கருக்குள் தலையை விட்டு விளையாடியபோது, குக்கருக்குள் தலை சிக்கிக் கொண்டது.

இதையடுத்து அவன் தலையை எடுக்க முயன்றான். ஆனால் வரவில்லை. இதனால் வலியில் அலறினான் சிறுவன் ஷிவம். இதையடுத்து சஞ்சய் தனது மகனை எடுத்துக் கொண்டு ஒரு மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு 2 மணி நேரம் கடுமையாகப் போராடிய டாக்டர்கள், பெரும் சிரமத்திற்கு மத்தியில் குக்கரில் சிக்கிய தலையை வெளியில் எடுத்தனர்.

கிட்டத்தட்ட 12 டாக்டர்கள் அடங்கிய குழு கடும் போராட்டத்தில் ஈடுபட்டது, சிறுவனை பத்திரமாக மீட்பதற்காக. பல்வேறு வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தி குக்கரை விட்டு தலையை எடுக்க முயன்றனர். கடைசியில் அதில் வெற்றியும் பெற்றனர்.

மேலும் சிறுவனின் தலையில் பெரும் காயம் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக பஞ்சையும் அதிக அளவில் பயன்படுத்தி சிறுவனின் தலையில் காயம் ஏற்பட்டு விடாமல் தடுக்கப்பட்டது.

குக்கருக்குள் சிக்கிக் கொண்ட 3 வயது சிறுவனின் தலை

டெல்லி: பல சமயங்களில் சிறார்களின் விளையாட்டு விபரீதமாகி விடுவதுண்டு. அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த 3 வயது சிறுவனின் தலை பிரஷர் குக்கரில் சிக்கிக் கொண்டு பேராபத்தை ஏற்படுத்தி விட்டது.

வட மேற்கு டெல்லியில் உள்ள ரானி பாக் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவரது 3 வயது மகன் ஷிவம். இவன் தனது வீட்டில் பிரஷர் குக்கரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.. குக்கருக்குள் தலையை விட்டு விளையாடியபோது, குக்கருக்குள் தலை சிக்கிக் கொண்டது.

இதையடுத்து அவன் தலையை எடுக்க முயன்றான். ஆனால் வரவில்லை. இதனால் வலியில் அலறினான் சிறுவன் ஷிவம். இதையடுத்து சஞ்சய் தனது மகனை எடுத்துக் கொண்டு ஒரு மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு 2 மணி நேரம் கடுமையாகப் போராடிய டாக்டர்கள், பெரும் சிரமத்திற்கு மத்தியில் குக்கரில் சிக்கிய தலையை வெளியில் எடுத்தனர்.

கிட்டத்தட்ட 12 டாக்டர்கள் அடங்கிய குழு கடும் போராட்டத்தில் ஈடுபட்டது, சிறுவனை பத்திரமாக மீட்பதற்காக. பல்வேறு வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தி குக்கரை விட்டு தலையை எடுக்க முயன்றனர். கடைசியில் அதில் வெற்றியும் பெற்றனர்.

மேலும் சிறுவனின் தலையில் பெரும் காயம் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக பஞ்சையும் அதிக அளவில் பயன்படுத்தி சிறுவனின் தலையில் காயம் ஏற்பட்டு விடாமல் தடுக்கப்பட்டது.

விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மருத்துவ துறையில் தற்போது அதிசயிக்கதக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. சிறிய உடல் நல குறைபாடுகள் காரணமாக குழந்தை பாக்கியம் இன்றி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் இழந்து சிலர் தவித்து வருகின்றனர். அவர்களின் குறைபாடுகளை நீக்கி குழந்தை பாக்கியம் பெற டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிறவியிலேயே கரு முட்டை உற்பத்தி செய்ய இயலாத பெண், குழந்தை பெற்று சாதனை படைத்து இருக்கிறார். அவரது பெயர் காரின் திரியாட் (39). பிரான்ஸ் தலைநகர் பாரீசை சேர்ந்தவர். இவரும் ஸ்டீபெய்னி என்பவரும் இரட்டையர்கள், இருவருக்கும் திருமணம் நடந்தது.

அவர்களில் ஸ்டிபெய்னி 2 குழந்தைகளை பெற்றெடுத்தார். திரியாட்டுக்கு குழந்தை இல்லை. டாக்டரிடம் பரிசோதித்த போது இவருக்கு கரு முட்டை உற்பத்தியாக வில்லை என தெரிய வந்தது. குரோசோம்களின் வளர்ச்சியின்மை காரணமாக இது போன்ற குறைபாடுகள் 2500 பெண்களில் யாராவது ஒருவருக்கு ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, அவருக்கு கரு முட்டை தானம் மூலம் குழந்தை பெற செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவருடன் இரட்டையராக பிறந்த ஸ்டிபெய்னிடம் இருந்து கருமுட்டை தானம் பெற்று அவரது கருப்பையில் வைத்தார். அதை தொடர்ந்து அவருக்கு முறைப்படி மாதவிலக்கு ஏற்பட்டு அவர் கர்ப்பம் அடைந்தார்.

இதை தொடர்ந்து சரியாக 10-வது மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் அவர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு விக்டோரியா என பெயரிட்டுள்ளனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். இந்த சிகிச்சையை பெல்ஜியம் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜேக்குவல் டோன்னெஷ் அளித்தார்.

ஐரோப்பா கண்டத்தில் கரு முட்டை தானம் மூலம் குழந்தை பெற்ற முதல் பெண் திரியாட்தான் என அவர் பெருமையுடன் தெரிவித்தார். மேலும் அவரது குழந்தை விக்டோரியாவுக்கு கரு முட்டை உற்பத்தியாவதில் எந்த கோளாறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தங்கையிடம் கருமுட்டை தானம் பெற்று குழந்தை பெற்ற பெண்

விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மருத்துவ துறையில் தற்போது அதிசயிக்கதக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. சிறிய உடல் நல குறைபாடுகள் காரணமாக குழந்தை பாக்கியம் இன்றி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் இழந்து சிலர் தவித்து வருகின்றனர். அவர்களின் குறைபாடுகளை நீக்கி குழந்தை பாக்கியம் பெற டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிறவியிலேயே கரு முட்டை உற்பத்தி செய்ய இயலாத பெண், குழந்தை பெற்று சாதனை படைத்து இருக்கிறார். அவரது பெயர் காரின் திரியாட் (39). பிரான்ஸ் தலைநகர் பாரீசை சேர்ந்தவர். இவரும் ஸ்டீபெய்னி என்பவரும் இரட்டையர்கள், இருவருக்கும் திருமணம் நடந்தது.

அவர்களில் ஸ்டிபெய்னி 2 குழந்தைகளை பெற்றெடுத்தார். திரியாட்டுக்கு குழந்தை இல்லை. டாக்டரிடம் பரிசோதித்த போது இவருக்கு கரு முட்டை உற்பத்தியாக வில்லை என தெரிய வந்தது. குரோசோம்களின் வளர்ச்சியின்மை காரணமாக இது போன்ற குறைபாடுகள் 2500 பெண்களில் யாராவது ஒருவருக்கு ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, அவருக்கு கரு முட்டை தானம் மூலம் குழந்தை பெற செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவருடன் இரட்டையராக பிறந்த ஸ்டிபெய்னிடம் இருந்து கருமுட்டை தானம் பெற்று அவரது கருப்பையில் வைத்தார். அதை தொடர்ந்து அவருக்கு முறைப்படி மாதவிலக்கு ஏற்பட்டு அவர் கர்ப்பம் அடைந்தார்.

இதை தொடர்ந்து சரியாக 10-வது மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் அவர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு விக்டோரியா என பெயரிட்டுள்ளனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். இந்த சிகிச்சையை பெல்ஜியம் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜேக்குவல் டோன்னெஷ் அளித்தார்.

ஐரோப்பா கண்டத்தில் கரு முட்டை தானம் மூலம் குழந்தை பெற்ற முதல் பெண் திரியாட்தான் என அவர் பெருமையுடன் தெரிவித்தார். மேலும் அவரது குழந்தை விக்டோரியாவுக்கு கரு முட்டை உற்பத்தியாவதில் எந்த கோளாறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முக நூல்

Popular Posts