background img

புதிய வரவு

Showing posts with label Coming. Show all posts
Showing posts with label Coming. Show all posts
ஆட்டோகிராப் படத்தில் கம்மாபட்டி கமலாவாக அறிமுகமானவர் நடிகை மல்லிகா. அதன்பிறகு மகாநடிகன், திருப்பாச்சி, குண்டக்க மண்டக்க, உனக்கும் எனக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைய சின்னத்திரையில் தலைகாட்டி வந்தார். பின்னர் சினிமாவை விட்டு காணாமல் போனார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். முன்பை விட அழகாகவும், புதுபொலிவுடனும் காணப்படும் மல்லிகா, தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். கூடவே தமிழ்படங்களிலும் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். நல்ல கேரக்டர் அமைந்தால் நடிக்கத் தயார் என்று கூறி வருகிறார்.

மீண்டும் வருகிறார் ஆட்டோகிராப் மல்லிகா

ஆட்டோகிராப் படத்தில் கம்மாபட்டி கமலாவாக அறிமுகமானவர் நடிகை மல்லிகா. அதன்பிறகு மகாநடிகன், திருப்பாச்சி, குண்டக்க மண்டக்க, உனக்கும் எனக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைய சின்னத்திரையில் தலைகாட்டி வந்தார். பின்னர் சினிமாவை விட்டு காணாமல் போனார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். முன்பை விட அழகாகவும், புதுபொலிவுடனும் காணப்படும் மல்லிகா, தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். கூடவே தமிழ்படங்களிலும் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். நல்ல கேரக்டர் அமைந்தால் நடிக்கத் தயார் என்று கூறி வருகிறார்.

கோத்தகிரி : இரண்டு வாரங்கள் ஓய்வெடுப்பதற்காக, அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதா, இன்று கோடநாடு வருகிறார். சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளிவந்த நாள் முதல் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு செய்வது வரை படு "பிஸி'யாக இருந்த ஜெயலலிதா, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, 19 நாட்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார்.
தேர்தல் அறிவிப்பு வெளிவர இன்னும் 24 நாட்கள் உள்ள நிலையில், ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக இன்று, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டுக்கு வருகிறார். சென்னையில் இருந்து இன்று காலை 11.00 மணிக்கு, விமானத்தில் கோவை வரும் ஜெயலலிதா, அங்கிருந்து, பகல் 1.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு வருகிறார். எஸ்டேட்டில் அமைக்கப்பட்டுள்ள, "ஹெலிபேடில்' இறங்கி, 2.15 மணிக்கு பங்களாவுக்குள் செல்கிறார்.
எஸ்டேட் நுழைவாயிலில் அவருக்கு அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில், வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இரண்டு வாரங்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ள ஜெயலலிதா, அங்கிருந்தபடியே, கட்சிப் பணிகளையும் கவனிக்கிறார். ஓட்டு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறும் நிலையில், மே 10ம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா இன்று கோடநாடு வருகை

கோத்தகிரி : இரண்டு வாரங்கள் ஓய்வெடுப்பதற்காக, அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதா, இன்று கோடநாடு வருகிறார். சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளிவந்த நாள் முதல் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு செய்வது வரை படு "பிஸி'யாக இருந்த ஜெயலலிதா, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, 19 நாட்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார்.
தேர்தல் அறிவிப்பு வெளிவர இன்னும் 24 நாட்கள் உள்ள நிலையில், ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக இன்று, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டுக்கு வருகிறார். சென்னையில் இருந்து இன்று காலை 11.00 மணிக்கு, விமானத்தில் கோவை வரும் ஜெயலலிதா, அங்கிருந்து, பகல் 1.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு வருகிறார். எஸ்டேட்டில் அமைக்கப்பட்டுள்ள, "ஹெலிபேடில்' இறங்கி, 2.15 மணிக்கு பங்களாவுக்குள் செல்கிறார்.
எஸ்டேட் நுழைவாயிலில் அவருக்கு அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில், வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இரண்டு வாரங்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ள ஜெயலலிதா, அங்கிருந்தபடியே, கட்சிப் பணிகளையும் கவனிக்கிறார். ஓட்டு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறும் நிலையில், மே 10ம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மருத்துவ துறையில் தற்போது அதிசயிக்கதக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. சிறிய உடல் நல குறைபாடுகள் காரணமாக குழந்தை பாக்கியம் இன்றி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் இழந்து சிலர் தவித்து வருகின்றனர். அவர்களின் குறைபாடுகளை நீக்கி குழந்தை பாக்கியம் பெற டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிறவியிலேயே கரு முட்டை உற்பத்தி செய்ய இயலாத பெண், குழந்தை பெற்று சாதனை படைத்து இருக்கிறார். அவரது பெயர் காரின் திரியாட் (39). பிரான்ஸ் தலைநகர் பாரீசை சேர்ந்தவர். இவரும் ஸ்டீபெய்னி என்பவரும் இரட்டையர்கள், இருவருக்கும் திருமணம் நடந்தது.

அவர்களில் ஸ்டிபெய்னி 2 குழந்தைகளை பெற்றெடுத்தார். திரியாட்டுக்கு குழந்தை இல்லை. டாக்டரிடம் பரிசோதித்த போது இவருக்கு கரு முட்டை உற்பத்தியாக வில்லை என தெரிய வந்தது. குரோசோம்களின் வளர்ச்சியின்மை காரணமாக இது போன்ற குறைபாடுகள் 2500 பெண்களில் யாராவது ஒருவருக்கு ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, அவருக்கு கரு முட்டை தானம் மூலம் குழந்தை பெற செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவருடன் இரட்டையராக பிறந்த ஸ்டிபெய்னிடம் இருந்து கருமுட்டை தானம் பெற்று அவரது கருப்பையில் வைத்தார். அதை தொடர்ந்து அவருக்கு முறைப்படி மாதவிலக்கு ஏற்பட்டு அவர் கர்ப்பம் அடைந்தார்.

இதை தொடர்ந்து சரியாக 10-வது மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் அவர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு விக்டோரியா என பெயரிட்டுள்ளனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். இந்த சிகிச்சையை பெல்ஜியம் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜேக்குவல் டோன்னெஷ் அளித்தார்.

ஐரோப்பா கண்டத்தில் கரு முட்டை தானம் மூலம் குழந்தை பெற்ற முதல் பெண் திரியாட்தான் என அவர் பெருமையுடன் தெரிவித்தார். மேலும் அவரது குழந்தை விக்டோரியாவுக்கு கரு முட்டை உற்பத்தியாவதில் எந்த கோளாறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தங்கையிடம் கருமுட்டை தானம் பெற்று குழந்தை பெற்ற பெண்

விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மருத்துவ துறையில் தற்போது அதிசயிக்கதக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. சிறிய உடல் நல குறைபாடுகள் காரணமாக குழந்தை பாக்கியம் இன்றி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் இழந்து சிலர் தவித்து வருகின்றனர். அவர்களின் குறைபாடுகளை நீக்கி குழந்தை பாக்கியம் பெற டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிறவியிலேயே கரு முட்டை உற்பத்தி செய்ய இயலாத பெண், குழந்தை பெற்று சாதனை படைத்து இருக்கிறார். அவரது பெயர் காரின் திரியாட் (39). பிரான்ஸ் தலைநகர் பாரீசை சேர்ந்தவர். இவரும் ஸ்டீபெய்னி என்பவரும் இரட்டையர்கள், இருவருக்கும் திருமணம் நடந்தது.

அவர்களில் ஸ்டிபெய்னி 2 குழந்தைகளை பெற்றெடுத்தார். திரியாட்டுக்கு குழந்தை இல்லை. டாக்டரிடம் பரிசோதித்த போது இவருக்கு கரு முட்டை உற்பத்தியாக வில்லை என தெரிய வந்தது. குரோசோம்களின் வளர்ச்சியின்மை காரணமாக இது போன்ற குறைபாடுகள் 2500 பெண்களில் யாராவது ஒருவருக்கு ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, அவருக்கு கரு முட்டை தானம் மூலம் குழந்தை பெற செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவருடன் இரட்டையராக பிறந்த ஸ்டிபெய்னிடம் இருந்து கருமுட்டை தானம் பெற்று அவரது கருப்பையில் வைத்தார். அதை தொடர்ந்து அவருக்கு முறைப்படி மாதவிலக்கு ஏற்பட்டு அவர் கர்ப்பம் அடைந்தார்.

இதை தொடர்ந்து சரியாக 10-வது மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் அவர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு விக்டோரியா என பெயரிட்டுள்ளனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். இந்த சிகிச்சையை பெல்ஜியம் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜேக்குவல் டோன்னெஷ் அளித்தார்.

ஐரோப்பா கண்டத்தில் கரு முட்டை தானம் மூலம் குழந்தை பெற்ற முதல் பெண் திரியாட்தான் என அவர் பெருமையுடன் தெரிவித்தார். மேலும் அவரது குழந்தை விக்டோரியாவுக்கு கரு முட்டை உற்பத்தியாவதில் எந்த கோளாறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முக நூல்

Popular Posts