background img

புதிய வரவு

Showing posts with label Fans. Show all posts
Showing posts with label Fans. Show all posts
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்கப் போவதாக அஜீத் ரசிகர்கள் திடீரென அறிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் குடும்பத்தோடு போய் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசி பெற்றவர் அஜீத். அரசியலுக்கு வருவேன் என்று கடந்த சில மாதங்களாக கூறி வந்தார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தனது அரசியல் நிலைப்பாடு என்ன என்று கூறாமல் இருந்தார்.

ஆனால் அவரது ரசிகர்களில் ஒரு பகுதியினர் தங்களுக்கான அரசியல் பாதையைத் தேர்வு செய்து, அறிவித்துவிட்டனர்.

அஜீத் ரசிகர் மன்றத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ரெட் துரை, துணைச் செயலாளர் மதன்ஜி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான தாமோ அன்பரசனை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை திமுகவுக்கு தெரிவித்தனர். அவர்களுடன் மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அஜீத் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். திமுக வெற்றிக்குப் பாடுபடுவதே தங்கள் முழு வேலை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரெட் துரை கூறுகையில், "இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று அஜீத் எங்களுக்குக் கூறவில்லை. எனவே எங்கள் மனசாட்சிப்படி, இந்த மாநிலத்துக்கு யார் வந்தால் நல்லதோ அவர்களுக்குப வாக்களிக்கிறோம். திமுக ஆட்சியில்தான் மாநிலம் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. சலுகைக் கட்டணத்தில் கல்வி கிடைத்துள்ளது. எனவேதான் எங்கள் ஆதரவை திமுகவுக்கு தந்துள்ளோம்," என்றார்.

திமுகவை ஆதரிக்கும் அஜீத் ரசிகர்கள்!

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்கப் போவதாக அஜீத் ரசிகர்கள் திடீரென அறிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் குடும்பத்தோடு போய் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசி பெற்றவர் அஜீத். அரசியலுக்கு வருவேன் என்று கடந்த சில மாதங்களாக கூறி வந்தார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தனது அரசியல் நிலைப்பாடு என்ன என்று கூறாமல் இருந்தார்.

ஆனால் அவரது ரசிகர்களில் ஒரு பகுதியினர் தங்களுக்கான அரசியல் பாதையைத் தேர்வு செய்து, அறிவித்துவிட்டனர்.

அஜீத் ரசிகர் மன்றத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ரெட் துரை, துணைச் செயலாளர் மதன்ஜி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான தாமோ அன்பரசனை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை திமுகவுக்கு தெரிவித்தனர். அவர்களுடன் மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அஜீத் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். திமுக வெற்றிக்குப் பாடுபடுவதே தங்கள் முழு வேலை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரெட் துரை கூறுகையில், "இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று அஜீத் எங்களுக்குக் கூறவில்லை. எனவே எங்கள் மனசாட்சிப்படி, இந்த மாநிலத்துக்கு யார் வந்தால் நல்லதோ அவர்களுக்குப வாக்களிக்கிறோம். திமுக ஆட்சியில்தான் மாநிலம் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. சலுகைக் கட்டணத்தில் கல்வி கிடைத்துள்ளது. எனவேதான் எங்கள் ஆதரவை திமுகவுக்கு தந்துள்ளோம்," என்றார்.

சென்னை: இந்திய கேப்டன் தோனி "பேட்டிங்கில்' தொடர்ந்து சொதப்புகிறார். கடந்த 10 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய வீரர்கள் ரசிகர்களுக்காக அல்லாமல் தேசத்துக்காக விளையாட வேண்டும் என "அட்வைஸ்' செய்துள்ள இவர், முதலில் தனது ஆட்டத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடக்கிறது. இதில், இந்திய அணி கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அணியில் சமீபத்திய செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் எல்லாம் வீணாக வீழ்ச்சியை சந்திக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக "டை' செய்தது. அடுத்து தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதற்கு கேப்டன் தோனியின் தவறான உத்திகள் முக்கிய காரணம். "பேட்டிங் ஆர்டரை' மாற்றியது, ஹர்பஜனுக்கு பதில் நெஹ்ராவிடம் கடைசி ஓவரை வீசச் சொன்னது என நிறைய தவறுகள் செய்தார். தவிர, இவரது பேட்டிங்கும் இப்போது எடுபடுவதில்லை.
மறக்க முடியாத அதிரடி:
இந்திய அணியில் அறிமுகமான காலத்தில் தோனி அதிரடியாக பேட் செய்தார். கொஞ்சம் கூட கருணை காட்டாமல் எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். உதாரணமாக, தனது 5வது ஒரு நாள் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக 123 பந்துகளில் 148 ரன்கள் விளாசினார். பின் 2005ல் இலங்கைக்கு எதிராக 145 பந்துகளில் 183 ரன்கள் எடுத்தார். கீப்பிங்கிலும் அசத்த, இந்தியாவின் "கில்கிறிஸ்டாக' போற்றப்பட்டார். தொடர்ந்து திறமை காட்ட, அணியின் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்தார். 2007ல் இந்திய அணிக்கு "டுவென்டி-20' உலக கோப்பை பெற்றுத் தந்தார். டெஸ்ட் அரங்கில் அணியை "நம்பர்-1' இடத்துக்கு கொண்டு சென்றார்.
மந்தமான ஆட்டம்:
இப்படி அசுர வளர்ச்சி கண்ட இவர், சமீப காலமாக பேட்டிங்கில் ஏமாற்றுகிறார். இவரது பழைய ஆட்டத்தை தற்போது காண முடியவில்லை. தனது பேட்டிங் "ஸ்டைலையே' மாற்றி விட்டார். பந்தை அங்கும் இங்கும் தட்டி விட்டு ஒன்று, இரண்டு ரன்களாக எடுக்கிறார். கடந்த 10 ஒரு நாள் போட்டிகளில் ஒரு முறை கூட அரைசதம் கடக்கவில்லை. கடைசியாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிராக தம்புலாவில் நடந்த போட்டியில் 67 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை பெரிதாக குறை சொல்ல முடியாது. கடந்த ஒரு ஆண்டில் 28 போட்டிகளில் 28 "கேட்ச்', 8 "ஸ்டம்பிங்' செய்து திறமை நிரூபித்துள்ளார்.
கபில் அறிவுறுத்தல்:
இம்முறை உலக கோப்பை தொடரில் தோனி அதிரடியாக ஆட வேண்டும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கேட்டுக் கொண்டிருந்தார். இதனை பின்பற்றி மீண்டும் பேட்டிங்கில் கலக்க வேண்டும். இவர் சுதாரித்திருந்தால், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சரிவை ஓரளவுக்கு தடுத்திருக்கலாம். வரும் போட்டிகளில் தோனி வாணவேடிக்கை காட்ட வேண்டும்...அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கேற்ப, வரும் 20ம் தேதி சென்னையில் நடக்க உள்ள வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் தோனி அசத்துவார் என நம்புவோம்.


10 போட்டிகளில்...
கடந்த பத்து போட்டிகளில் தோனி 171 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் விபரம்:
எதிரணி ரன்கள்
தென் ஆப்ரிக்கா 25
தென் ஆப்ரிக்கா 38
தென் ஆப்ரிக்கா 5
தென் ஆப்ரிக்கா 2
தென் ஆப்ரிக்கா 5
வங்கதேசம் பேட் செய்யவில்லை
இங்கிலாந்து 31
அயர்லாந்து 34
நெதர்லாந்து 19*
தென் ஆப்ரிக்கா 12*

என்ன ஆச்சு தோனிக்கு?: ரசிகர்கள் அதிருப்தி

சென்னை: இந்திய கேப்டன் தோனி "பேட்டிங்கில்' தொடர்ந்து சொதப்புகிறார். கடந்த 10 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய வீரர்கள் ரசிகர்களுக்காக அல்லாமல் தேசத்துக்காக விளையாட வேண்டும் என "அட்வைஸ்' செய்துள்ள இவர், முதலில் தனது ஆட்டத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடக்கிறது. இதில், இந்திய அணி கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அணியில் சமீபத்திய செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் எல்லாம் வீணாக வீழ்ச்சியை சந்திக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக "டை' செய்தது. அடுத்து தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதற்கு கேப்டன் தோனியின் தவறான உத்திகள் முக்கிய காரணம். "பேட்டிங் ஆர்டரை' மாற்றியது, ஹர்பஜனுக்கு பதில் நெஹ்ராவிடம் கடைசி ஓவரை வீசச் சொன்னது என நிறைய தவறுகள் செய்தார். தவிர, இவரது பேட்டிங்கும் இப்போது எடுபடுவதில்லை.
மறக்க முடியாத அதிரடி:
இந்திய அணியில் அறிமுகமான காலத்தில் தோனி அதிரடியாக பேட் செய்தார். கொஞ்சம் கூட கருணை காட்டாமல் எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். உதாரணமாக, தனது 5வது ஒரு நாள் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக 123 பந்துகளில் 148 ரன்கள் விளாசினார். பின் 2005ல் இலங்கைக்கு எதிராக 145 பந்துகளில் 183 ரன்கள் எடுத்தார். கீப்பிங்கிலும் அசத்த, இந்தியாவின் "கில்கிறிஸ்டாக' போற்றப்பட்டார். தொடர்ந்து திறமை காட்ட, அணியின் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்தார். 2007ல் இந்திய அணிக்கு "டுவென்டி-20' உலக கோப்பை பெற்றுத் தந்தார். டெஸ்ட் அரங்கில் அணியை "நம்பர்-1' இடத்துக்கு கொண்டு சென்றார்.
மந்தமான ஆட்டம்:
இப்படி அசுர வளர்ச்சி கண்ட இவர், சமீப காலமாக பேட்டிங்கில் ஏமாற்றுகிறார். இவரது பழைய ஆட்டத்தை தற்போது காண முடியவில்லை. தனது பேட்டிங் "ஸ்டைலையே' மாற்றி விட்டார். பந்தை அங்கும் இங்கும் தட்டி விட்டு ஒன்று, இரண்டு ரன்களாக எடுக்கிறார். கடந்த 10 ஒரு நாள் போட்டிகளில் ஒரு முறை கூட அரைசதம் கடக்கவில்லை. கடைசியாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிராக தம்புலாவில் நடந்த போட்டியில் 67 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை பெரிதாக குறை சொல்ல முடியாது. கடந்த ஒரு ஆண்டில் 28 போட்டிகளில் 28 "கேட்ச்', 8 "ஸ்டம்பிங்' செய்து திறமை நிரூபித்துள்ளார்.
கபில் அறிவுறுத்தல்:
இம்முறை உலக கோப்பை தொடரில் தோனி அதிரடியாக ஆட வேண்டும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கேட்டுக் கொண்டிருந்தார். இதனை பின்பற்றி மீண்டும் பேட்டிங்கில் கலக்க வேண்டும். இவர் சுதாரித்திருந்தால், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சரிவை ஓரளவுக்கு தடுத்திருக்கலாம். வரும் போட்டிகளில் தோனி வாணவேடிக்கை காட்ட வேண்டும்...அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கேற்ப, வரும் 20ம் தேதி சென்னையில் நடக்க உள்ள வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் தோனி அசத்துவார் என நம்புவோம்.


10 போட்டிகளில்...
கடந்த பத்து போட்டிகளில் தோனி 171 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் விபரம்:
எதிரணி ரன்கள்
தென் ஆப்ரிக்கா 25
தென் ஆப்ரிக்கா 38
தென் ஆப்ரிக்கா 5
தென் ஆப்ரிக்கா 2
தென் ஆப்ரிக்கா 5
வங்கதேசம் பேட் செய்யவில்லை
இங்கிலாந்து 31
அயர்லாந்து 34
நெதர்லாந்து 19*
தென் ஆப்ரிக்கா 12*

முக நூல்

Popular Posts