background img

புதிய வரவு

Showing posts with label Musharraf. Show all posts
Showing posts with label Musharraf. Show all posts
இஸ்லாமாபாத்:பெனசிர் புட்டோவுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபை கைது செய்ய அந்நாட்டு புலனாய்வுத் துறைக்கு, பயங்கரவாத வழக்கு விசாரணை விசேஷ கோர்ட் இரண்டு வார கெடு விதித்துள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, 2007ம் ஆண்டு தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கு, இஸ்லாமாபாத்தில் இதற்கான விசேஷ கோர்ட்டில் நடக்கிறது. பெனசிர் புட்டோவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கத் தவறியதாக முஷாரப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி, சிறப்பு கோர்ட் நீதிபதி ராணா நிசார் அகமது உத்தரவிட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் முஷாரபுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அது முதல் கொண்டு ஒவ்வொரு முறையும் அரசு வக்கீல் இந்த விஷயத்தில் கால அவகாசம் கோரி வந்தார்.
குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுடன் செய்யப்படாததால் முஷாரபை கைது செய்யும் விஷயத்தில் இந்த நாடுகள் ஒத்துழைக்க மறுப்பதாக அரசு வக்கீல் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, அரசு வக்கீல் மேலும் அவகாசம் கோரினார்.ஆனால், இதற்கு மேல் முஷாரபை கைது செய்ய கால அவகாசம் அளிக்க முடியாது. இரண்டு வாரத்துக்குள் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என, எப்.ஐ.ஏ.,வுக்கு கோர்ட் எச்சரித்துள்ளது.

முஷாரபை கைது செய்ய கோர்ட் 2 வாரம் கெடு

இஸ்லாமாபாத்:பெனசிர் புட்டோவுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபை கைது செய்ய அந்நாட்டு புலனாய்வுத் துறைக்கு, பயங்கரவாத வழக்கு விசாரணை விசேஷ கோர்ட் இரண்டு வார கெடு விதித்துள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, 2007ம் ஆண்டு தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கு, இஸ்லாமாபாத்தில் இதற்கான விசேஷ கோர்ட்டில் நடக்கிறது. பெனசிர் புட்டோவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கத் தவறியதாக முஷாரப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி, சிறப்பு கோர்ட் நீதிபதி ராணா நிசார் அகமது உத்தரவிட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் முஷாரபுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அது முதல் கொண்டு ஒவ்வொரு முறையும் அரசு வக்கீல் இந்த விஷயத்தில் கால அவகாசம் கோரி வந்தார்.
குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுடன் செய்யப்படாததால் முஷாரபை கைது செய்யும் விஷயத்தில் இந்த நாடுகள் ஒத்துழைக்க மறுப்பதாக அரசு வக்கீல் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, அரசு வக்கீல் மேலும் அவகாசம் கோரினார்.ஆனால், இதற்கு மேல் முஷாரபை கைது செய்ய கால அவகாசம் அளிக்க முடியாது. இரண்டு வாரத்துக்குள் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என, எப்.ஐ.ஏ.,வுக்கு கோர்ட் எச்சரித்துள்ளது.

லண்டன்: "ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட நடவடிக்கையில் பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மீறிவிட்டது. எந்த நடவடிக்கையானாலும், கிலானி தலைமையிலான அரசையும் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்' என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் எல்லையைக் கடந்து அப்போதாபாத் வரை அமெரிக்க வீரர்கள் வந்து நடவடிக்கை எடுத்ததை ஒப்புக் கொள்ள முடியாது. அது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயல். அன்னியப் படைகள் பாக்., எல்லையைக் கடப்பதை பாக்., மக்கள் விரும்பமாட்டார்கள். அமெரிக்கப் படைகள் இந்த நடவடிக்கையை எடுத்ததும் சரியல்ல. பாகிஸ்தான் அரசுடன் இதுபற்றி கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அல் - குவைதா மற்றும் தலிபான்களுடன் பாக்., போரிடுகிறது. பின்லாடன் எப்படி அப்போதாபாத்துக்கு வந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவருடன் உள்ளூர் அதிகாரிகள் தொடர்பு வைத்திருப்பர் என்று நான் கருதவில்லை. ஆனால், உள்ளூர் மக்கள் தொடர்பில் இருந்திருக்கக் கூடும். இவ்வாறு முஷாரப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா செயல்: முஷாரப் கோபம்

லண்டன்: "ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட நடவடிக்கையில் பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மீறிவிட்டது. எந்த நடவடிக்கையானாலும், கிலானி தலைமையிலான அரசையும் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்' என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் எல்லையைக் கடந்து அப்போதாபாத் வரை அமெரிக்க வீரர்கள் வந்து நடவடிக்கை எடுத்ததை ஒப்புக் கொள்ள முடியாது. அது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயல். அன்னியப் படைகள் பாக்., எல்லையைக் கடப்பதை பாக்., மக்கள் விரும்பமாட்டார்கள். அமெரிக்கப் படைகள் இந்த நடவடிக்கையை எடுத்ததும் சரியல்ல. பாகிஸ்தான் அரசுடன் இதுபற்றி கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அல் - குவைதா மற்றும் தலிபான்களுடன் பாக்., போரிடுகிறது. பின்லாடன் எப்படி அப்போதாபாத்துக்கு வந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவருடன் உள்ளூர் அதிகாரிகள் தொடர்பு வைத்திருப்பர் என்று நான் கருதவில்லை. ஆனால், உள்ளூர் மக்கள் தொடர்பில் இருந்திருக்கக் கூடும். இவ்வாறு முஷாரப் தெரிவித்துள்ளார்.


Benazir Bhutto and Musharrafஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது இடைக்கால குற்றப்பத்திரிகையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


2009-ம் ஆண்டு பாகிஸ்தானை விட்டு வெளியேறி பர்வேஸ் முஷாரப் இப்போது லண்டனில் வசித்து வருகிறார்.
Read: In English
2007-ல் ராவல்பிண்டி நகரில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்டதற்கு அப்போதைய அதிபர் முஷாரப்தான் காரணம் என்று இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கான இடைக்கால குற்றப்பத்திரிகை ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு நீதி்மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பெனாசிருக்கு போதிய பாதுகாப்பு வழங்காமல் வேண்டுமென்றே அலட்சியம் காட்டினார் முஷாரப் என ஐநா விசாரணைக் குழு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் முஷாரப் கைதாகக் கூடும் என்று கூறப்படுகிறது.

பெனாசிர் கொலைக்கு முஷாரப்பே காரணம்! - நீதிமன்றம் குற்றச்சாட்டு


Benazir Bhutto and Musharrafஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது இடைக்கால குற்றப்பத்திரிகையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


2009-ம் ஆண்டு பாகிஸ்தானை விட்டு வெளியேறி பர்வேஸ் முஷாரப் இப்போது லண்டனில் வசித்து வருகிறார்.
Read: In English
2007-ல் ராவல்பிண்டி நகரில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்டதற்கு அப்போதைய அதிபர் முஷாரப்தான் காரணம் என்று இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கான இடைக்கால குற்றப்பத்திரிகை ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு நீதி்மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பெனாசிருக்கு போதிய பாதுகாப்பு வழங்காமல் வேண்டுமென்றே அலட்சியம் காட்டினார் முஷாரப் என ஐநா விசாரணைக் குழு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் முஷாரப் கைதாகக் கூடும் என்று கூறப்படுகிறது.

முக நூல்

Popular Posts