background img

புதிய வரவு

Showing posts with label Arrest. Show all posts
Showing posts with label Arrest. Show all posts
இஸ்லாமாபாத்:பெனசிர் புட்டோவுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபை கைது செய்ய அந்நாட்டு புலனாய்வுத் துறைக்கு, பயங்கரவாத வழக்கு விசாரணை விசேஷ கோர்ட் இரண்டு வார கெடு விதித்துள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, 2007ம் ஆண்டு தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கு, இஸ்லாமாபாத்தில் இதற்கான விசேஷ கோர்ட்டில் நடக்கிறது. பெனசிர் புட்டோவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கத் தவறியதாக முஷாரப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி, சிறப்பு கோர்ட் நீதிபதி ராணா நிசார் அகமது உத்தரவிட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் முஷாரபுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அது முதல் கொண்டு ஒவ்வொரு முறையும் அரசு வக்கீல் இந்த விஷயத்தில் கால அவகாசம் கோரி வந்தார்.
குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுடன் செய்யப்படாததால் முஷாரபை கைது செய்யும் விஷயத்தில் இந்த நாடுகள் ஒத்துழைக்க மறுப்பதாக அரசு வக்கீல் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, அரசு வக்கீல் மேலும் அவகாசம் கோரினார்.ஆனால், இதற்கு மேல் முஷாரபை கைது செய்ய கால அவகாசம் அளிக்க முடியாது. இரண்டு வாரத்துக்குள் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என, எப்.ஐ.ஏ.,வுக்கு கோர்ட் எச்சரித்துள்ளது.

முஷாரபை கைது செய்ய கோர்ட் 2 வாரம் கெடு

இஸ்லாமாபாத்:பெனசிர் புட்டோவுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபை கைது செய்ய அந்நாட்டு புலனாய்வுத் துறைக்கு, பயங்கரவாத வழக்கு விசாரணை விசேஷ கோர்ட் இரண்டு வார கெடு விதித்துள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, 2007ம் ஆண்டு தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கு, இஸ்லாமாபாத்தில் இதற்கான விசேஷ கோர்ட்டில் நடக்கிறது. பெனசிர் புட்டோவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கத் தவறியதாக முஷாரப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி, சிறப்பு கோர்ட் நீதிபதி ராணா நிசார் அகமது உத்தரவிட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் முஷாரபுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அது முதல் கொண்டு ஒவ்வொரு முறையும் அரசு வக்கீல் இந்த விஷயத்தில் கால அவகாசம் கோரி வந்தார்.
குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுடன் செய்யப்படாததால் முஷாரபை கைது செய்யும் விஷயத்தில் இந்த நாடுகள் ஒத்துழைக்க மறுப்பதாக அரசு வக்கீல் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, அரசு வக்கீல் மேலும் அவகாசம் கோரினார்.ஆனால், இதற்கு மேல் முஷாரபை கைது செய்ய கால அவகாசம் அளிக்க முடியாது. இரண்டு வாரத்துக்குள் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என, எப்.ஐ.ஏ.,வுக்கு கோர்ட் எச்சரித்துள்ளது.

புது தில்லி, மே 4: 2 ஜி அலைகற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, வெள்ளிக்கிழமை (மே 6) கைது செய்யப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான கனிமொழி, சரத் குமார் ரெட்டி, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானி ஆகியோர் தவிர மற்றவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மே 6 ஆம் தேதி ஆஜராவதற்காக கனிமொழி, சென்னையிலிருந்து புதன்கிழமை காலையில் தில்லி வந்தார். அவருடன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரும் தில்லி வந்தனர்.
ஆலோசனை: தில்லி சாணக்கியபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு கனிமொழி சென்றார். அங்கு சட்ட நிபுணர்களுடனும், தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய வண்ணம் இருந்தார்.
பிரபல சட்ட நிபுணர்களான ராம் ஜேட்மலானி, முகுல் ரோத்தகி ஆகியோருடனும் தொலைபேசி மூலம் கனிமொழி ஆலோசனை நடத்தியதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் சார்பாக பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வரும் பிரபல சட்ட நிபுணர் பராசரனின் ஆலோசனையையும் பெற்றதாகத் தெரியவந்துள்ளது.
ஜாமீன் மனு: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிறையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஐவரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். இவர்களது ஜாமீன் மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது. இந்த மனுமீது கடந்த இரு தினங்களாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை புதன்கிழமையும் நடைபெற்றது. மேலும் இரண்டு நாள்களுக்கு ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 6 ஆம் தேதிக்குள் 5 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை முடிந்து, தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் கனிமொழியும் அதே நடவடிக்கையைப் பின்பற்றலாம் என்ற நிலை மாறிவிட்டது. இந்த நிலை கனிமொழி தரப்புக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தெரிகிறது.
செம்மொழி விருது: குடியரசுத் தலைவர் மாளிகையில் செம்மொழிக்கான விருது வழங்கும் விழாவுக்கு மே 6 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செம்மொழி மாநாட்டை மிக சிறப்பாக நடத்திய தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விழாவில் கலந்து கொள்வார் என தமிழ் ஆர்வலர்கள் மிக ஆவலுடன் உள்ளனர்.
ஆனால் அதே நாளில் முதல்வரின் மகள் கனிமொழி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தில்லி வரும் முதல்வரின் கவனம் முழுவதும் அரசியல் ரீதியாக கனிமொழிக்கு ஆதரவாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தே இருக்கும் என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.
இந்த முறைகேடு விவகாரத்தில், குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளவர்களின் தனிப்பட்ட வருமான வரி, அவர்கள் சார்ந்த நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வருமான வரி தொடர்பான விவரங்களை சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்ய இருக்கிறது.
இதன் அடிப்படையில் 5-ஆம் தேதிக்குப் பதில் மே 12 ஆம் தேதி கனிமொழி உள்ளிட்ட நான்கு பேரும் அமலாக்கப் பிரிவு முன் ஆஜர் ஆகவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படலாம் எனவும் தெரிகிறது.

கனிமொழி நாளை கைது?

புது தில்லி, மே 4: 2 ஜி அலைகற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, வெள்ளிக்கிழமை (மே 6) கைது செய்யப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான கனிமொழி, சரத் குமார் ரெட்டி, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானி ஆகியோர் தவிர மற்றவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மே 6 ஆம் தேதி ஆஜராவதற்காக கனிமொழி, சென்னையிலிருந்து புதன்கிழமை காலையில் தில்லி வந்தார். அவருடன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரும் தில்லி வந்தனர்.
ஆலோசனை: தில்லி சாணக்கியபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு கனிமொழி சென்றார். அங்கு சட்ட நிபுணர்களுடனும், தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய வண்ணம் இருந்தார்.
பிரபல சட்ட நிபுணர்களான ராம் ஜேட்மலானி, முகுல் ரோத்தகி ஆகியோருடனும் தொலைபேசி மூலம் கனிமொழி ஆலோசனை நடத்தியதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் சார்பாக பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வரும் பிரபல சட்ட நிபுணர் பராசரனின் ஆலோசனையையும் பெற்றதாகத் தெரியவந்துள்ளது.
ஜாமீன் மனு: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிறையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஐவரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். இவர்களது ஜாமீன் மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது. இந்த மனுமீது கடந்த இரு தினங்களாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை புதன்கிழமையும் நடைபெற்றது. மேலும் இரண்டு நாள்களுக்கு ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 6 ஆம் தேதிக்குள் 5 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை முடிந்து, தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் கனிமொழியும் அதே நடவடிக்கையைப் பின்பற்றலாம் என்ற நிலை மாறிவிட்டது. இந்த நிலை கனிமொழி தரப்புக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தெரிகிறது.
செம்மொழி விருது: குடியரசுத் தலைவர் மாளிகையில் செம்மொழிக்கான விருது வழங்கும் விழாவுக்கு மே 6 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செம்மொழி மாநாட்டை மிக சிறப்பாக நடத்திய தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விழாவில் கலந்து கொள்வார் என தமிழ் ஆர்வலர்கள் மிக ஆவலுடன் உள்ளனர்.
ஆனால் அதே நாளில் முதல்வரின் மகள் கனிமொழி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தில்லி வரும் முதல்வரின் கவனம் முழுவதும் அரசியல் ரீதியாக கனிமொழிக்கு ஆதரவாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தே இருக்கும் என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.
இந்த முறைகேடு விவகாரத்தில், குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளவர்களின் தனிப்பட்ட வருமான வரி, அவர்கள் சார்ந்த நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வருமான வரி தொடர்பான விவரங்களை சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்ய இருக்கிறது.
இதன் அடிப்படையில் 5-ஆம் தேதிக்குப் பதில் மே 12 ஆம் தேதி கனிமொழி உள்ளிட்ட நான்கு பேரும் அமலாக்கப் பிரிவு முன் ஆஜர் ஆகவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படலாம் எனவும் தெரிகிறது.

சென்னை: "ஸ்பெக்ட்ரம் ஊழலில், பயனடைந்த கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:2"ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முக்கிய பயனாளியான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் மூலம், கலைஞர் டி.வி.,க்கு 214 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கலைஞர் டி.வி., யின் பங்குதாரர்களான முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழியிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. இந்நிலையில், சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும், முதல்வர் கருணாநிதியின் குடும்பத்திற்கும் இடையே உள்ள சட்டவிரோத பணபரிமாற்றம் தெளிவாக நிரூபணமாகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம்பெற்றதுடன் இப்பிரச்னை நின்றுவிடாது. லஞ்ச பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.,யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். இந்த ஊழலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

இந்த லஞ்சப் பணம் சென்றடைந்த இடம் முழுமையாக கண்டறியப்பட வேண்டும். அப்போது தான் ஊழலின் தாயாக விளங்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் விசாரணை நியாயமான முடிவை அடையும். விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிவதில் வல்லவரான ஒருவர் தான் இந்த மாபெரும் ஊழலை நிகழ்த்தி உள்ளார் என்பதை சி.பி.ஐ., கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட வேண்டும் : ஜெ.,

சென்னை: "ஸ்பெக்ட்ரம் ஊழலில், பயனடைந்த கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:2"ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முக்கிய பயனாளியான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் மூலம், கலைஞர் டி.வி.,க்கு 214 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கலைஞர் டி.வி., யின் பங்குதாரர்களான முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழியிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. இந்நிலையில், சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும், முதல்வர் கருணாநிதியின் குடும்பத்திற்கும் இடையே உள்ள சட்டவிரோத பணபரிமாற்றம் தெளிவாக நிரூபணமாகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம்பெற்றதுடன் இப்பிரச்னை நின்றுவிடாது. லஞ்ச பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.,யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். இந்த ஊழலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

இந்த லஞ்சப் பணம் சென்றடைந்த இடம் முழுமையாக கண்டறியப்பட வேண்டும். அப்போது தான் ஊழலின் தாயாக விளங்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் விசாரணை நியாயமான முடிவை அடையும். விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிவதில் வல்லவரான ஒருவர் தான் இந்த மாபெரும் ஊழலை நிகழ்த்தி உள்ளார் என்பதை சி.பி.ஐ., கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. கடந்த 2-ந்தேதி முதலாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியாலிட்டி நிறுவனத் தலைவர் பல்வா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, அரிநாயர் ஆகிய 9 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.



இந்த 9 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. அதுபோல ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம், யுனிடெக் டெலிகாம் ஆகிய 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள 9 பேரில் ஆ. ராசா, பல்வா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா ஆகிய 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற 5 பேரும் இது வரை கைது ஆகவில்லை. இவர்கள் 5 பேரையும் கைது செய்ய சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்தது.

இதற்கிடையே தாங்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு 5 அதிகாரிகளும் டெல்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது 5 அதிகாரிகளுக்கும் முன் ஜாமீன் அளிக்கக்கூடாது என்று சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.

5 அதிகாரிகளும் சாட்சிகளை மிரட்டவும், தலைமறைவாகி விடவும் வாய்ப்புள்ளது. எனவே 5 பேருக்கும் முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று சி.பி.ஐ. மனுவில் கூறப்பட்டிருந்தது. 5 அதிகாரிகளின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

விசாரணையின்போது கைது செய்யப்படவில்லை என்பதால் இனி கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று வக்கீல்கள் கூறினார்கள். முன் ஜாமீன் பெறும் உரிமையை தடுக்கக்கூடாது என்றும் வக்கீல்கள் வாதிட்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சைனி, 5 அதிகாரிகளுக்கும் ஜாமீன் கொடுப்பது தொடர்பாக 20-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார். வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் 5 அதிகாரிகளும் 20-ந்தேதி வரை கைது செய்யப்பட மாட்டார்கள்.

அதன் பிறகு அவர்களை சி.பி.ஐ. கைது செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 5 அதிகாரிகள் மீதும் மோசடி, ஆவணங்களை திருத்தி ஏமாற்றுதல், ஊழல் செய்தால், லஞ்சம் கொடுத்தல் உள்பட பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் -மேலும் 5 அதிகாரிகள் கைதாகிறார்கள்

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. கடந்த 2-ந்தேதி முதலாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியாலிட்டி நிறுவனத் தலைவர் பல்வா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, அரிநாயர் ஆகிய 9 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.



இந்த 9 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. அதுபோல ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம், யுனிடெக் டெலிகாம் ஆகிய 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள 9 பேரில் ஆ. ராசா, பல்வா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா ஆகிய 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற 5 பேரும் இது வரை கைது ஆகவில்லை. இவர்கள் 5 பேரையும் கைது செய்ய சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்தது.

இதற்கிடையே தாங்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு 5 அதிகாரிகளும் டெல்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது 5 அதிகாரிகளுக்கும் முன் ஜாமீன் அளிக்கக்கூடாது என்று சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.

5 அதிகாரிகளும் சாட்சிகளை மிரட்டவும், தலைமறைவாகி விடவும் வாய்ப்புள்ளது. எனவே 5 பேருக்கும் முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று சி.பி.ஐ. மனுவில் கூறப்பட்டிருந்தது. 5 அதிகாரிகளின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

விசாரணையின்போது கைது செய்யப்படவில்லை என்பதால் இனி கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று வக்கீல்கள் கூறினார்கள். முன் ஜாமீன் பெறும் உரிமையை தடுக்கக்கூடாது என்றும் வக்கீல்கள் வாதிட்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சைனி, 5 அதிகாரிகளுக்கும் ஜாமீன் கொடுப்பது தொடர்பாக 20-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார். வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் 5 அதிகாரிகளும் 20-ந்தேதி வரை கைது செய்யப்பட மாட்டார்கள்.

அதன் பிறகு அவர்களை சி.பி.ஐ. கைது செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 5 அதிகாரிகள் மீதும் மோசடி, ஆவணங்களை திருத்தி ஏமாற்றுதல், ஊழல் செய்தால், லஞ்சம் கொடுத்தல் உள்பட பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை : ஸ்பெக்ட்ரம் ஊழலில் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தியும், இந்த ஊழலை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மனிதச் சங்கிலி பேரணியுடன் கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடக்கிறது.

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: சினிமா டிக்கெட் விற்பனை போல, "2ஜி' ஒதுக்கீடு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக டில்லி ஐகோர்ட் கருத்து தெரிவித்தது. ஆனால், கருணாநிதியோ, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை, அனுமானத்தின் அடிப்படையிலானது என்றும், ராஜாவின் நடவடிக்கையால் குறைந்த கட்டணத்தில் மொபைல் போனில் பேசுகிற சூழ்நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டது என்றும் மனம் போன போக்கில், முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தெரிவித்தார்.இது மட்டுமல்லாமல், பார்லி., கூட்டுக்குழு விசாரணை தேவையில்லை என்ற கருத்தையும் வெளிப்படுத்தி, அதற்கும் முட்டுக்கட்டை போட்டார். இருப்பினும் எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தல் காரணமாக கருணாநிதி முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போல, இந்த ஊழலை கிளறக் கிளற புதுப் புது ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. வோல்டாஸ் நில விவகாரம், கோத்தகிரியில் வின்சர் எஸ்டேட், நிரா ராடியா - ராஜாத்தியுடனான உரையாடல், நிரா ராடியா - கனிமொழியுடனான உரையாடல், அமைச்சர் பதவியை பெற்றுத் தருவதற்காக தயாளு, 600 கோடி பெற்றது, நிரா ராடியா கருணாநிதிக்கு முன் கூட்டியே அறிமுகமான விவரம் என, ஒன்றன் பின் ஒன்றாக விஷயங்கள் வெளி வந்தன.

சி.பி.ஐ., விசாரணையில் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வாங்கிய, டெனமிக்ஸ் பால்வா நிறுவனத்திடமிருந்து கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் கனிமொழி ஆகியோரை பங்குதாரர்களாகக் கொண்டுள்ள கருணாநிதி குடும்ப, "டிவி'க்கு, 214 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது. இதிலிருந்து, கருணாநிதியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வெகுவாக பயனடைந்து இருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.எனவே, கருணாநிதி குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி, அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், இந்த மெகா ஊழலை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையிலும், பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் இன்று, பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகில் மனிதச் சங்கிலி பேரணியுடன் கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

முதல்வரின் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி மனிதச் சங்கிலி: ஜெ.,

சென்னை : ஸ்பெக்ட்ரம் ஊழலில் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தியும், இந்த ஊழலை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மனிதச் சங்கிலி பேரணியுடன் கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடக்கிறது.

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: சினிமா டிக்கெட் விற்பனை போல, "2ஜி' ஒதுக்கீடு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக டில்லி ஐகோர்ட் கருத்து தெரிவித்தது. ஆனால், கருணாநிதியோ, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை, அனுமானத்தின் அடிப்படையிலானது என்றும், ராஜாவின் நடவடிக்கையால் குறைந்த கட்டணத்தில் மொபைல் போனில் பேசுகிற சூழ்நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டது என்றும் மனம் போன போக்கில், முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தெரிவித்தார்.இது மட்டுமல்லாமல், பார்லி., கூட்டுக்குழு விசாரணை தேவையில்லை என்ற கருத்தையும் வெளிப்படுத்தி, அதற்கும் முட்டுக்கட்டை போட்டார். இருப்பினும் எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தல் காரணமாக கருணாநிதி முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போல, இந்த ஊழலை கிளறக் கிளற புதுப் புது ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. வோல்டாஸ் நில விவகாரம், கோத்தகிரியில் வின்சர் எஸ்டேட், நிரா ராடியா - ராஜாத்தியுடனான உரையாடல், நிரா ராடியா - கனிமொழியுடனான உரையாடல், அமைச்சர் பதவியை பெற்றுத் தருவதற்காக தயாளு, 600 கோடி பெற்றது, நிரா ராடியா கருணாநிதிக்கு முன் கூட்டியே அறிமுகமான விவரம் என, ஒன்றன் பின் ஒன்றாக விஷயங்கள் வெளி வந்தன.

சி.பி.ஐ., விசாரணையில் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வாங்கிய, டெனமிக்ஸ் பால்வா நிறுவனத்திடமிருந்து கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் கனிமொழி ஆகியோரை பங்குதாரர்களாகக் கொண்டுள்ள கருணாநிதி குடும்ப, "டிவி'க்கு, 214 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது. இதிலிருந்து, கருணாநிதியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வெகுவாக பயனடைந்து இருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.எனவே, கருணாநிதி குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி, அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், இந்த மெகா ஊழலை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையிலும், பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் இன்று, பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகில் மனிதச் சங்கிலி பேரணியுடன் கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

முக நூல்

Popular Posts