background img

புதிய வரவு

Showing posts with label Nitin gadkari. Show all posts
Showing posts with label Nitin gadkari. Show all posts
ரஜினி அரசியலுக்கு வருவாரா... தனிக்கட்சி துவங்குவாரா? இப்படி ரசிகர்கள் மனதில் எழும் கேள்விகள் நிறைய்ய...

இப்போது அந்தக் கேள்விகளுக்கான விடை கிட்டத்தட்ட கிடைத்திருப்பதாகவே அரசியல் வட்டாரத்தில் நம்புகிறார்கள். அடுத்த இரு ஆண்டுகளில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்கப் போவதாகவும், தேசியக் கட்சியில் சேரும் திட்டம் இல்லை, தனிக்கட்சிதான் என்றும் தன்னிடம் ரஜினி கூறியதாக பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

சென்னைக்கு வருகிறேன் என டெல்லியிலிருந்து ரஜினிக்கு தொலைபேசியில் தகவல் சொல்லிவிட்டே கிளம்பிய கட்காரியை (முன்பே செய்தி வெளியிட்டுள்ளோம்), வரவேற்று அழைத்துப் போன ரஜினி, அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம்.

அவரது அரசியல் பிரவேசம் குறித்து கேட்ட கட்காரியிடம், "இந்தத் தேர்தலில் மக்கள் முன் உள்ள வாய்ப்புகள் (அணிகள்) எதுவும் தனக்கு திருப்தி ஏற்படுத்தும் அளவுக்கு இல்லை, மூன்றாவதாக ஒரு சக்தி வரவேண்டும் என மக்கள் விரும்புவது தனக்கும் புரிந்துள்ளதாக," என்று கூறினாராம் ரஜினி. மக்களின் இந்த விருப்பம், எதிர்ப்பார்ப்பை தான் ஒருபோதும் தட்டிக்கழிக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக அரசியல் பற்றிக் கேட்டாலே மேலே கையை உயர்த்திக் காட்டுவது ரஜினி வழக்கம். ஆனால் கட்காரியிடம், "எனது கடைசி படத்துக்குப் பிறகு அரசியலில் ஈடுபடுவது குறித்து யோசிப்பேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது நடக்கும்" என்று கூறியுள்ளார்.

மேலும், நாட்டில் ஊழலுக்கெதிரான மனநிலை உருவாகியுள்ளது திருப்தியளிப்பதாகவும், ஊழலுக்கெதிராக அன்னா ஹஸாரே மேற்கொண்ட உண்ணாவிரதம் தன்னை வெகுவாக பாதித்ததாகவும் கூறியுள்ளார் ரஜினி.

நாட்டில் நிலவும் வறுமை, ஊழல், குடிநீர் பிரச்சினை மற்றும் சுற்றுச் சூழல் சீர்கேடு போன்றவை குறித்து தான் மிகவும் கவலைப்படுவதாகவும், இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடனடியாக ஏதேனும் செய்தாக வேண்டும் என விரும்புவதாகவும் கட்காரியிடம் கூறியுள்ளார் ரஜினி.

சரி... ஏதேனனும் தேசியக் கட்சியில் சேருவாரா?

ம்ஹூம்... தமிழகத்தில் இப்போதும் தேசிய கட்சிகளை மக்கள் விரும்பவில்லை. எனவே தனிக்கட்சி துவங்குவது என்பதில் ரஜினி உறுதியாக உள்ளாராம்.

இன்னும் இரு ஆண்டுகளில் தனிக்கட்சி தொடங்குவார் ரஜினி! - சொல்கிறார் நிதின் கட்காரி

ரஜினி அரசியலுக்கு வருவாரா... தனிக்கட்சி துவங்குவாரா? இப்படி ரசிகர்கள் மனதில் எழும் கேள்விகள் நிறைய்ய...

இப்போது அந்தக் கேள்விகளுக்கான விடை கிட்டத்தட்ட கிடைத்திருப்பதாகவே அரசியல் வட்டாரத்தில் நம்புகிறார்கள். அடுத்த இரு ஆண்டுகளில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்கப் போவதாகவும், தேசியக் கட்சியில் சேரும் திட்டம் இல்லை, தனிக்கட்சிதான் என்றும் தன்னிடம் ரஜினி கூறியதாக பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

சென்னைக்கு வருகிறேன் என டெல்லியிலிருந்து ரஜினிக்கு தொலைபேசியில் தகவல் சொல்லிவிட்டே கிளம்பிய கட்காரியை (முன்பே செய்தி வெளியிட்டுள்ளோம்), வரவேற்று அழைத்துப் போன ரஜினி, அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம்.

அவரது அரசியல் பிரவேசம் குறித்து கேட்ட கட்காரியிடம், "இந்தத் தேர்தலில் மக்கள் முன் உள்ள வாய்ப்புகள் (அணிகள்) எதுவும் தனக்கு திருப்தி ஏற்படுத்தும் அளவுக்கு இல்லை, மூன்றாவதாக ஒரு சக்தி வரவேண்டும் என மக்கள் விரும்புவது தனக்கும் புரிந்துள்ளதாக," என்று கூறினாராம் ரஜினி. மக்களின் இந்த விருப்பம், எதிர்ப்பார்ப்பை தான் ஒருபோதும் தட்டிக்கழிக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக அரசியல் பற்றிக் கேட்டாலே மேலே கையை உயர்த்திக் காட்டுவது ரஜினி வழக்கம். ஆனால் கட்காரியிடம், "எனது கடைசி படத்துக்குப் பிறகு அரசியலில் ஈடுபடுவது குறித்து யோசிப்பேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது நடக்கும்" என்று கூறியுள்ளார்.

மேலும், நாட்டில் ஊழலுக்கெதிரான மனநிலை உருவாகியுள்ளது திருப்தியளிப்பதாகவும், ஊழலுக்கெதிராக அன்னா ஹஸாரே மேற்கொண்ட உண்ணாவிரதம் தன்னை வெகுவாக பாதித்ததாகவும் கூறியுள்ளார் ரஜினி.

நாட்டில் நிலவும் வறுமை, ஊழல், குடிநீர் பிரச்சினை மற்றும் சுற்றுச் சூழல் சீர்கேடு போன்றவை குறித்து தான் மிகவும் கவலைப்படுவதாகவும், இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடனடியாக ஏதேனும் செய்தாக வேண்டும் என விரும்புவதாகவும் கட்காரியிடம் கூறியுள்ளார் ரஜினி.

சரி... ஏதேனனும் தேசியக் கட்சியில் சேருவாரா?

ம்ஹூம்... தமிழகத்தில் இப்போதும் தேசிய கட்சிகளை மக்கள் விரும்பவில்லை. எனவே தனிக்கட்சி துவங்குவது என்பதில் ரஜினி உறுதியாக உள்ளாராம்.

திப்ருகார்: "வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்த விவரம் வெளியானால், காங்கிரசாரின் முகம் இருண்டு விடும்', என, பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் திப்ருகாரில் நடந்த, பாரதிய ஜனதா கட்சி பேரணியில் கலந்து கொண்டு நிதின் கட்காரி பேசியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டு முறை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முறையும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அது மட்டுமல்லாது லஞ்ச லாவண்ய அதிகரிப்பால் விலை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இது மக்களின் மனதில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாட்டில் பணத் தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை வெளியிடும் படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் அதை செயல்படுத்துவதை தட்டிக் கழிக்கிறது மத்திய அரசு. நம் நாட்டு ஏழைகளை ஏமாற்றி கொள்ளையடித்த பணத்துக்கு வரி கட்டுவதை தவிர்க்க கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்தவர்களின் பெயரை அவர்கள் எப்படி வெளியிடுவார்கள்? இந்த பெயர்கள் வெளியிடப்படுமானால், காங்கிரஸ் தலைவர்களின் முகமெல்லாம் கருப்பாகி விடும்.

"நம் நாட்டு மக்களில் 90 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ளவர்களாக உள்ளனர்'என, திட்ட கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே நாட்டில், ஒரு பிரிவினர் ஊழல் மூலம் ஒரு நாளைக்கு இரண்டு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை போன்றவற்றால் ஏழை மக்கள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கும் சூழலில் ஏழை மக்கள் எப்படி வாழ முடியும். பொது மக்கள் வாழ்க்கை நடத்துவது பெரும்பாடாக உள்ளது. ஊழல் என்பது இந்த ஆட்சியில் தொடர் கதையாகிவிட்டது. போபர்ஸ், காமன்வெல்த், ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் என ஊழல் பட்டியல் தொடர்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் விலை உயர்வு காணப்படுகிறது, இதற்கு பிரதமர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருவதாக காங்கிரஸ் கூறுகிறது. யாருடைய வறுமையை இவர்கள் ஒழிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஏழை ஏழையாகவே இருந்து கொண்டிருக்கிறான். வசதி படைத்தவன் வளர்ந்து கொண்டே இருக்கிறான். காங்கிரஸ் கட்சி ஆளும் மத்திய அரசில் மட்டும் ஊழல் இல்லை. அந்த கட்சி ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழலின் அடிசுவடு பின்பற்றப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்ற வகையில் பிரசாரம் செய்யப்படுகிறது. நாங்கள் பயங்கரவாதத்துக்கு மட்டுமே எதிரானவர்கள். ஜாதி மதம் பார்க்காமல் நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினரின் முன்னேற்றத்தை தான் பாரதிய ஜனதா விரும்புகிறது. வங்கதேசத்திலிருந்து நம் நாட்டில் ஊடுருபவர்களை எதிர்க்கிறோம். நீங்கள் யாராவது வங்கதேசத்துக்கு சென்று அங்கு நிலத்தையும் சொத்துக்களையும் வாங்க முடியுமா? முஸ்லிம்களின் ஓட்டுகளை பெறுவதற்காக வங்கதேச எல்லையை காங்கிரஸ் அரசு திறந்து விட்டுள்ளது. இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்.

கறுப்பு பண விவகாரம் வெளியானால் காங்கிரசார் முகங்கள் இருண்டு விடும்: நிதின் கட்காரி ஆவேசம்

திப்ருகார்: "வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்த விவரம் வெளியானால், காங்கிரசாரின் முகம் இருண்டு விடும்', என, பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் திப்ருகாரில் நடந்த, பாரதிய ஜனதா கட்சி பேரணியில் கலந்து கொண்டு நிதின் கட்காரி பேசியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டு முறை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முறையும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அது மட்டுமல்லாது லஞ்ச லாவண்ய அதிகரிப்பால் விலை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இது மக்களின் மனதில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாட்டில் பணத் தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை வெளியிடும் படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் அதை செயல்படுத்துவதை தட்டிக் கழிக்கிறது மத்திய அரசு. நம் நாட்டு ஏழைகளை ஏமாற்றி கொள்ளையடித்த பணத்துக்கு வரி கட்டுவதை தவிர்க்க கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்தவர்களின் பெயரை அவர்கள் எப்படி வெளியிடுவார்கள்? இந்த பெயர்கள் வெளியிடப்படுமானால், காங்கிரஸ் தலைவர்களின் முகமெல்லாம் கருப்பாகி விடும்.

"நம் நாட்டு மக்களில் 90 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ளவர்களாக உள்ளனர்'என, திட்ட கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே நாட்டில், ஒரு பிரிவினர் ஊழல் மூலம் ஒரு நாளைக்கு இரண்டு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை போன்றவற்றால் ஏழை மக்கள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கும் சூழலில் ஏழை மக்கள் எப்படி வாழ முடியும். பொது மக்கள் வாழ்க்கை நடத்துவது பெரும்பாடாக உள்ளது. ஊழல் என்பது இந்த ஆட்சியில் தொடர் கதையாகிவிட்டது. போபர்ஸ், காமன்வெல்த், ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் என ஊழல் பட்டியல் தொடர்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் விலை உயர்வு காணப்படுகிறது, இதற்கு பிரதமர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருவதாக காங்கிரஸ் கூறுகிறது. யாருடைய வறுமையை இவர்கள் ஒழிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஏழை ஏழையாகவே இருந்து கொண்டிருக்கிறான். வசதி படைத்தவன் வளர்ந்து கொண்டே இருக்கிறான். காங்கிரஸ் கட்சி ஆளும் மத்திய அரசில் மட்டும் ஊழல் இல்லை. அந்த கட்சி ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழலின் அடிசுவடு பின்பற்றப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்ற வகையில் பிரசாரம் செய்யப்படுகிறது. நாங்கள் பயங்கரவாதத்துக்கு மட்டுமே எதிரானவர்கள். ஜாதி மதம் பார்க்காமல் நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினரின் முன்னேற்றத்தை தான் பாரதிய ஜனதா விரும்புகிறது. வங்கதேசத்திலிருந்து நம் நாட்டில் ஊடுருபவர்களை எதிர்க்கிறோம். நீங்கள் யாராவது வங்கதேசத்துக்கு சென்று அங்கு நிலத்தையும் சொத்துக்களையும் வாங்க முடியுமா? முஸ்லிம்களின் ஓட்டுகளை பெறுவதற்காக வங்கதேச எல்லையை காங்கிரஸ் அரசு திறந்து விட்டுள்ளது. இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்.

புது தில்லி, பிப். 2: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவை கைது செய்தது மட்டும் போதாது; அவரை மேலிருந்து இயக்கியவர்களையும் கைது செய்ய வேண்டுமென்று பாஜக தலைவர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது. இதில் ராசாவுக்கு மட்டுமல்லாமல் ஆட்சி, அதிகாரத்தில் மேல்மட்டத்தில் உள்ள வேறு பலருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் ராசாவை பின்னால் இருந்து இயக்கியுள்ளனர். அவர்கள் எல்லாம் யார் என்பதைக் கண்டறிந்து அனைவரையும் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும்.
÷தங்களிடம் உள்ள சொத்துக்கணக்கை வெளியிட வேண்டுமென்று எங்கள் கூட்டணித் தலைவர்கள், முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்று காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்கள் சொத்துக் கணக்கை வெளியிடுமாறு உத்தரவிடமுடியமா? முதலில் சோனியா காந்திதான் தனது உண்மையான சொத்துக் கணக்கை வெளியிடத் தயாரா?
÷ஆளும்கூட்டணியில் உள்ள பலரும் வெளிநாட்டில் கறுப்புப் பணத்தை வைத்துள்ளனர் என்பது கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் பட்டியலை வெளியிடும் விஷயத்தில் அவர்கள் காட்டும் தயக்கத்தில் இருந்தே தெரியவருகிறது என்றார் கட்கரி.

ஆ.ராசாவை இயக்கியவர்களையும் கைது செய்ய வேண்டும்:நிதின் கட்கரி

புது தில்லி, பிப். 2: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவை கைது செய்தது மட்டும் போதாது; அவரை மேலிருந்து இயக்கியவர்களையும் கைது செய்ய வேண்டுமென்று பாஜக தலைவர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது. இதில் ராசாவுக்கு மட்டுமல்லாமல் ஆட்சி, அதிகாரத்தில் மேல்மட்டத்தில் உள்ள வேறு பலருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் ராசாவை பின்னால் இருந்து இயக்கியுள்ளனர். அவர்கள் எல்லாம் யார் என்பதைக் கண்டறிந்து அனைவரையும் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும்.
÷தங்களிடம் உள்ள சொத்துக்கணக்கை வெளியிட வேண்டுமென்று எங்கள் கூட்டணித் தலைவர்கள், முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்று காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்கள் சொத்துக் கணக்கை வெளியிடுமாறு உத்தரவிடமுடியமா? முதலில் சோனியா காந்திதான் தனது உண்மையான சொத்துக் கணக்கை வெளியிடத் தயாரா?
÷ஆளும்கூட்டணியில் உள்ள பலரும் வெளிநாட்டில் கறுப்புப் பணத்தை வைத்துள்ளனர் என்பது கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் பட்டியலை வெளியிடும் விஷயத்தில் அவர்கள் காட்டும் தயக்கத்தில் இருந்தே தெரியவருகிறது என்றார் கட்கரி.

முக நூல்

Popular Posts