background img

புதிய வரவு

Showing posts with label One month. Show all posts
Showing posts with label One month. Show all posts
தென்காசி: ஒரு மாதத்திற்குள் தென்காசிக்கான வளர்ச்சித் திட்டங்களை வகுத்து, தென்காசியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தீவில நடவடிக்கைகளில் இறங்கவுள்ளேன் என்று நடிகரும், தென்காசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.

தென்காசியில் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் சரத்குமார். தனக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி கூற தென்காசி வந்த அவர் அங்கு மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது தொகுதி மக்களிடையே அவர் பேசுகையில், தென்காசி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகளை முடுக்கி விடவுள்ளேன்.

தொழில்துறையில் மிகவும் பின் தங்கியுள்ளது தென்காசி. இங்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சரத்குமார்.

ஒரு மாதத்திற்குள் தென்காசி வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்-சரத்குமார்

தென்காசி: ஒரு மாதத்திற்குள் தென்காசிக்கான வளர்ச்சித் திட்டங்களை வகுத்து, தென்காசியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தீவில நடவடிக்கைகளில் இறங்கவுள்ளேன் என்று நடிகரும், தென்காசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.

தென்காசியில் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் சரத்குமார். தனக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி கூற தென்காசி வந்த அவர் அங்கு மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது தொகுதி மக்களிடையே அவர் பேசுகையில், தென்காசி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகளை முடுக்கி விடவுள்ளேன்.

தொழில்துறையில் மிகவும் பின் தங்கியுள்ளது தென்காசி. இங்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சரத்குமார்.

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக, சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அம்மாநில முதல்வர் மாயாவதியின் பாதுகாப்பிற்கு மட்டும் ரூ.200 கோடி செலவழிக்கப்பட்டு இருப்பதாக, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

உத்தரப்பிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி கடந்த ஒரு மாதமாக 72 மாவட்டங்களில் மறு ஆய்வு சுற்று பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் இவரது பயணம் முடிந்தது. இந்நிலையில், நேற்று அம்மாநில கவர்னர் பி.எல். ஜோஷியை சந்தித்து அரை மணி நேரம் மாயாவதி பேசினார். இச்சந்திப்பின் போது அம்மாநில அமைச்சரவை செயலர் ஷஷாங் சேகர் சிங் உடனிருந்தார். இச்சந்திப்பு பற்றி கவர்னர் மாளிகை அளித்த பதிலில், "மாநில கவர்னர் மற்றும் முதல்வரின் சந்திப்பு வழக்கமான மரியாதை நிமித்தமான ஒன்று' என்று தெரிவித்துள்ளது. சுற்று பயணத்தை முடித்து கொண்ட முதல்வர் மாயாவதி, 72 மாவட்டங்களின் நிலை குறித்து கவர்னரிடம் கருத்துக்களை பரிமாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இவரது பயணத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங் கூறுகையில், "உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதியின் சுற்று பயண பாதுகாப்பிற்கு மட்டும் ரூ. 200 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. அரசின் தவறான நடவடிக்கைகளை மக்களின் மனதில் இருந்து திசை திருப்ப பயணம் மேற்கொண்டுள்ளார். அரசின் உண்மை நிலவரத்தை சொல்ல விடாமல் தடுக்க சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவரை சந்திக்க முயற்சித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பயணத்தின் போது இவர் பேசியவை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டவை. பகுஜன் சமாஜ் கட்சி ஏழை மக்களுக்கு உழைக்கும் கட்சி அல்ல. சுயநலத்திற்கு உழைக்கும் கட்சி என்பதை மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்' என்றார்.

மாயாவதியின் ஒருமாத பாதுகாப்பு செலவு ரூ.200 கோடி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக, சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அம்மாநில முதல்வர் மாயாவதியின் பாதுகாப்பிற்கு மட்டும் ரூ.200 கோடி செலவழிக்கப்பட்டு இருப்பதாக, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

உத்தரப்பிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி கடந்த ஒரு மாதமாக 72 மாவட்டங்களில் மறு ஆய்வு சுற்று பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் இவரது பயணம் முடிந்தது. இந்நிலையில், நேற்று அம்மாநில கவர்னர் பி.எல். ஜோஷியை சந்தித்து அரை மணி நேரம் மாயாவதி பேசினார். இச்சந்திப்பின் போது அம்மாநில அமைச்சரவை செயலர் ஷஷாங் சேகர் சிங் உடனிருந்தார். இச்சந்திப்பு பற்றி கவர்னர் மாளிகை அளித்த பதிலில், "மாநில கவர்னர் மற்றும் முதல்வரின் சந்திப்பு வழக்கமான மரியாதை நிமித்தமான ஒன்று' என்று தெரிவித்துள்ளது. சுற்று பயணத்தை முடித்து கொண்ட முதல்வர் மாயாவதி, 72 மாவட்டங்களின் நிலை குறித்து கவர்னரிடம் கருத்துக்களை பரிமாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இவரது பயணத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங் கூறுகையில், "உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதியின் சுற்று பயண பாதுகாப்பிற்கு மட்டும் ரூ. 200 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. அரசின் தவறான நடவடிக்கைகளை மக்களின் மனதில் இருந்து திசை திருப்ப பயணம் மேற்கொண்டுள்ளார். அரசின் உண்மை நிலவரத்தை சொல்ல விடாமல் தடுக்க சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவரை சந்திக்க முயற்சித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பயணத்தின் போது இவர் பேசியவை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டவை. பகுஜன் சமாஜ் கட்சி ஏழை மக்களுக்கு உழைக்கும் கட்சி அல்ல. சுயநலத்திற்கு உழைக்கும் கட்சி என்பதை மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்' என்றார்.

முக நூல்

Popular Posts