background img

புதிய வரவு

Showing posts with label Rahul Gandhi. Show all posts
Showing posts with label Rahul Gandhi. Show all posts
உத்தரபிரதேச மாநிலத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்காக அதிக நஷ்டஈடு கேட்டு போராடி வரும் விவசாயிகளை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இன்று அதிகாலை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
.
காவலர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஒரு சாதாரண மனிதர் போல மோட்டார் சைக்கிளில் பிரச்சனைக்குரிய கிராமத்திற்கு சென்று அங்குள்ள விவசாயிகளை ராகுல் சந்தித்து பேசினார்.


உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா அருகே அமைந்துள்ள பட்டா பர்சால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் யமுனா எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் நஷ்டஈடு கேட்டு போராடி வருகின்றனர். போராடும் விவசாயிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அங்கு பதட்டம் நிலவுகிறது. இதனையடுத்து கிராம பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று அதிகாலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இந்த கிராமத்துக்கு திடீரென சென்றார். கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பாதுகாவலர்களிடமிருந்து விலகி மோட்டார் சைக்கிளில் அவர் பயணம் மேற்கொண்டார்.


அதிகாலை 6 மணி அளவில் சாதாரண கிராமவாசி போல மோட்டார் சைக்கிளில் வந்த அவரை


கிராமத்தில் இருந்த காவலர்கள் அடையாளம் காண முடியவில்லை. கிராமத்திற்கு சென்று அங்கிருந்த விவசாயிகளை ராகுல் காந்தி நேரில் சந்தித்து அவர்களுடைய பிரச்சனை மற்றும் போராட்டத்திற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தருவதாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஏழை விவசாயிகளை நேரில் பலமுறை சந்தித்துள்ளார். இந்நிலையில் அவர் போராடி வரும் விவசாயிகளை இன்று அதிகாலை நேரில் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிராமவாசி போல பைக்கில் சென்ற ராகுல்!

உத்தரபிரதேச மாநிலத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்காக அதிக நஷ்டஈடு கேட்டு போராடி வரும் விவசாயிகளை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இன்று அதிகாலை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
.
காவலர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஒரு சாதாரண மனிதர் போல மோட்டார் சைக்கிளில் பிரச்சனைக்குரிய கிராமத்திற்கு சென்று அங்குள்ள விவசாயிகளை ராகுல் சந்தித்து பேசினார்.


உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா அருகே அமைந்துள்ள பட்டா பர்சால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் யமுனா எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் நஷ்டஈடு கேட்டு போராடி வருகின்றனர். போராடும் விவசாயிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அங்கு பதட்டம் நிலவுகிறது. இதனையடுத்து கிராம பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று அதிகாலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இந்த கிராமத்துக்கு திடீரென சென்றார். கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பாதுகாவலர்களிடமிருந்து விலகி மோட்டார் சைக்கிளில் அவர் பயணம் மேற்கொண்டார்.


அதிகாலை 6 மணி அளவில் சாதாரண கிராமவாசி போல மோட்டார் சைக்கிளில் வந்த அவரை


கிராமத்தில் இருந்த காவலர்கள் அடையாளம் காண முடியவில்லை. கிராமத்திற்கு சென்று அங்கிருந்த விவசாயிகளை ராகுல் காந்தி நேரில் சந்தித்து அவர்களுடைய பிரச்சனை மற்றும் போராட்டத்திற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தருவதாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஏழை விவசாயிகளை நேரில் பலமுறை சந்தித்துள்ளார். இந்நிலையில் அவர் போராடி வரும் விவசாயிகளை இன்று அதிகாலை நேரில் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி, கடந்த பல ஆண்டுகளாக மாநில கட்சிகளின் ஆதரவோடு தான் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கு, அக்கட்சியின் செல்வாக்கு தேர்தலுக்கு தேர்தல் சரிந்து வருவதே முக்கிய காரணம்.

இன்றைய நிலையில், வயதான தலைவர்களின் பிடிக்குள் தான் கட்சி இருக்கிறது. இந்த தலைவர்கள் மத்தியில் நிலவும் பிரச்னைகளால் பல்வேறு கோஷ்டிகள் உருவாகி, கட்சியின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து வருகின்றன.இந்நிலையில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற ராகுல், கட்சி பொறுப்புகளை இளைஞர்கள் வசம் ஒப்படைக்க நினைத்தார். ஆனால், அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொண்ட அவர், இளைஞர் காங்கிரசை வலுப்படுத்த துவங்கினார். நாடு முழுவதும், ஒவ்வொரு மாநிலத்திலும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்கு தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளை நியமித்து, அவர்களை கட்சி பணியில் களம் இறக்கியுள்ளார்.
இவ்வாறு ராகுலால் களம் இறக்கப்பட்டவர்கள் கடந்த தேர்தல்களில் சிறப்பான களப்பணியாற்றினார்கள். கட்சியை வலுப்படுத்த தேவையான செயல்களை மேற்கொண்ட இவர்களை பார்த்து, மூத்த தலைவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டது.
சமீபத்தில் நடந்த தமிழகம் மற்றும் கேரள சட்டசபை தேர்தலில், ராகுலின் சிபாரிசின் பேரில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சீட் வழங்கப்பட்டது.

தமிழகத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளில், இளைஞர் காங்கிரசாருக்கு 10 சீட்டுகளை ஒதுக்கும்படியும், கேரளாவில் ஒதுக்கப்பட்ட 81 தொகுதிகளில், 24 சீட்டுகளை ஒதுக்கியும் ராகுல் உத்தரவிட்டார். ராகுலின் இந்த உத்தரவு, எரிந்து கொண்டிருந்த தீயில் எண்ணெய் வார்த்த மாதிரியாகிவிட்டது. ஏற்கனவே, இளைஞர் காங்கிரசாரின் நடவடிக்கைகளால் எரிச்சலில் இருக்கும் கட்சியின் மூத்த தலைவர்கள், தொகுதி ஒதுக்கீட்டிலும் இளையவர்களுக்கு சீட் கொடுக்க உத்தரவிட்டது மேலும் எரிச்சலூட்டியது.இதனால், கடந்த சட்டசபை தேர்தலில், பல தொகுதிகளில் மூத்த காங்கிரசார் பலர் தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

அதேவேளையில், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக பணி புரிய துவங்கினர். கோஷ்டி பூசலை ஒழித்து, கட்சிக்கு உள்ளாட்சி மட்டத்தில் இருந்து புத்துயிர் ஊட்டினால் மட்டுமே காங்கிரஸ் வளரும் என்ற கருத்தில் ராகுல் காய் நகர்த்த துவங்கிவிட்டார். இதற்கு அச்சாரமாகவே இளைஞர் காங்கிரசாருக்கு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.மூத்த தலைவர்களை ஓரம் கட்டும் திட்டத்தை ராகுல் கடந்த சட்டசபை தேர்தலில் இருந்து துவக்கி விட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்கும் முன், மாநிலங்களில் நிலவும் கோஷ்டிகளை ஒழித்து, கட்சியை வளர்ச்சிப்பாதையில் திருப்ப வேண்டும் என்பதே ராகுலின் திட்டம். ஆனால், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் என்பது இன்று நேற்றல்ல, கட்சி துவங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. இந்நிலையில், ராகுல் வெற்றி பெறுவாரா அல்லது கோஷ்டிகள் வெற்றி பெறுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

வெற்றி பெறுமா ராகுலின் "ஓரம் கட்டும்' திட்டம்?


தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி, கடந்த பல ஆண்டுகளாக மாநில கட்சிகளின் ஆதரவோடு தான் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கு, அக்கட்சியின் செல்வாக்கு தேர்தலுக்கு தேர்தல் சரிந்து வருவதே முக்கிய காரணம்.

இன்றைய நிலையில், வயதான தலைவர்களின் பிடிக்குள் தான் கட்சி இருக்கிறது. இந்த தலைவர்கள் மத்தியில் நிலவும் பிரச்னைகளால் பல்வேறு கோஷ்டிகள் உருவாகி, கட்சியின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து வருகின்றன.இந்நிலையில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற ராகுல், கட்சி பொறுப்புகளை இளைஞர்கள் வசம் ஒப்படைக்க நினைத்தார். ஆனால், அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொண்ட அவர், இளைஞர் காங்கிரசை வலுப்படுத்த துவங்கினார். நாடு முழுவதும், ஒவ்வொரு மாநிலத்திலும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்கு தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளை நியமித்து, அவர்களை கட்சி பணியில் களம் இறக்கியுள்ளார்.
இவ்வாறு ராகுலால் களம் இறக்கப்பட்டவர்கள் கடந்த தேர்தல்களில் சிறப்பான களப்பணியாற்றினார்கள். கட்சியை வலுப்படுத்த தேவையான செயல்களை மேற்கொண்ட இவர்களை பார்த்து, மூத்த தலைவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டது.
சமீபத்தில் நடந்த தமிழகம் மற்றும் கேரள சட்டசபை தேர்தலில், ராகுலின் சிபாரிசின் பேரில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சீட் வழங்கப்பட்டது.

தமிழகத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளில், இளைஞர் காங்கிரசாருக்கு 10 சீட்டுகளை ஒதுக்கும்படியும், கேரளாவில் ஒதுக்கப்பட்ட 81 தொகுதிகளில், 24 சீட்டுகளை ஒதுக்கியும் ராகுல் உத்தரவிட்டார். ராகுலின் இந்த உத்தரவு, எரிந்து கொண்டிருந்த தீயில் எண்ணெய் வார்த்த மாதிரியாகிவிட்டது. ஏற்கனவே, இளைஞர் காங்கிரசாரின் நடவடிக்கைகளால் எரிச்சலில் இருக்கும் கட்சியின் மூத்த தலைவர்கள், தொகுதி ஒதுக்கீட்டிலும் இளையவர்களுக்கு சீட் கொடுக்க உத்தரவிட்டது மேலும் எரிச்சலூட்டியது.இதனால், கடந்த சட்டசபை தேர்தலில், பல தொகுதிகளில் மூத்த காங்கிரசார் பலர் தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

அதேவேளையில், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக பணி புரிய துவங்கினர். கோஷ்டி பூசலை ஒழித்து, கட்சிக்கு உள்ளாட்சி மட்டத்தில் இருந்து புத்துயிர் ஊட்டினால் மட்டுமே காங்கிரஸ் வளரும் என்ற கருத்தில் ராகுல் காய் நகர்த்த துவங்கிவிட்டார். இதற்கு அச்சாரமாகவே இளைஞர் காங்கிரசாருக்கு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.மூத்த தலைவர்களை ஓரம் கட்டும் திட்டத்தை ராகுல் கடந்த சட்டசபை தேர்தலில் இருந்து துவக்கி விட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்கும் முன், மாநிலங்களில் நிலவும் கோஷ்டிகளை ஒழித்து, கட்சியை வளர்ச்சிப்பாதையில் திருப்ப வேண்டும் என்பதே ராகுலின் திட்டம். ஆனால், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் என்பது இன்று நேற்றல்ல, கட்சி துவங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. இந்நிலையில், ராகுல் வெற்றி பெறுவாரா அல்லது கோஷ்டிகள் வெற்றி பெறுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மார்பி :""ஊழலை ஒழிக்க நான் விரும்புகிறேன்; அதே நேரத்தில் ஹீரோ ஆக விரும்பவில்லை,'' என, ராகுல் தெரிவித்துள்ளதற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர், காங்., பொதுச் செயலர் ராகுலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார். அதில், "நாட்டில் அதிகரித்துவிட்ட ஊழலை ஒழிக்க ராகுல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த ராகுல், "நான் ஊழலை ஒழிக்கவே விரும்புகிறேன்; ஹீரோ ஆக விரும்பவில்லை' என, தெரிவித்தார்.

இந்நிலையில், குஜராத்தில் மார்பி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் மோடி, ""மக்கள் பணி செய்வதே நம் கடமை. ஹசாரே போன்ற காந்தியவாதிகள் தங்களை ஹீரோவாக கருதி ஒருபோதும் பணியாற்றியதில்லை,'' என, ராகுல் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது:நாட்டில் அதிகரித்துவிட்ட ஊழலை ஒழிப்பதற்காக, அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். குஜராத் மாநிலத்தை அவர் பாராட்டிவிட்டதற்காக, அவரை சிலர் குறிவைத்து தாக்கி பேசி வருகின்றனர். குஜராத் வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு விதங்களில் இடையூறு ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இன்றி, பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி வருகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மத்திய அரசின் திட்டங்கள் எதுவுமே நமக்கு கிடைப்பதில்லை.இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

ஹசாரேவை விமர்சிப்பதா? ராகுலுக்கு மோடி கண்டனம்

மார்பி :""ஊழலை ஒழிக்க நான் விரும்புகிறேன்; அதே நேரத்தில் ஹீரோ ஆக விரும்பவில்லை,'' என, ராகுல் தெரிவித்துள்ளதற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர், காங்., பொதுச் செயலர் ராகுலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார். அதில், "நாட்டில் அதிகரித்துவிட்ட ஊழலை ஒழிக்க ராகுல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த ராகுல், "நான் ஊழலை ஒழிக்கவே விரும்புகிறேன்; ஹீரோ ஆக விரும்பவில்லை' என, தெரிவித்தார்.

இந்நிலையில், குஜராத்தில் மார்பி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் மோடி, ""மக்கள் பணி செய்வதே நம் கடமை. ஹசாரே போன்ற காந்தியவாதிகள் தங்களை ஹீரோவாக கருதி ஒருபோதும் பணியாற்றியதில்லை,'' என, ராகுல் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது:நாட்டில் அதிகரித்துவிட்ட ஊழலை ஒழிப்பதற்காக, அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். குஜராத் மாநிலத்தை அவர் பாராட்டிவிட்டதற்காக, அவரை சிலர் குறிவைத்து தாக்கி பேசி வருகின்றனர். குஜராத் வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு விதங்களில் இடையூறு ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இன்றி, பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி வருகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மத்திய அரசின் திட்டங்கள் எதுவுமே நமக்கு கிடைப்பதில்லை.இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் நேற்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பேசினார்.

அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி 2 நாள் பயணமாக இன்று மதியம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கிறார்.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் இன்று மதியம் 12 மணிக்கு ராகுல்காந்தி கோவை வருகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட வேளாளர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வந்து இறங்குகிறார்.



அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜை ஆதரித்து பேசுகிறார். அதன் பிறகு ஈரோட்டில் இருந்து ஹெலிகாப்டரில் கரூர் செல்கிறார். அவரது ஹெலிகாப்டர் பிற்பகல் 2 மணி அளவில் கரூர் ஆயுதப்படை மைதானத்தில் தரை இறங்கும்.

அங்கிருந்து ராகுல்காந்தி பொதுக் கூட்டம் நடக்கும் கரூர் திருவள்ளூர் மைதானத்துக்கு செல்கிறார். கரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த ஜோதிமணியை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்கிறார்.

அதே மேடையில் அரவாக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி, கிருஷ்ண ராயபுரம் தி.மு.க. வேட்பாளர் காமராஜ், குளித்தலை தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

கரூரில் பிரச்சாரம் முடிந்ததும் ஹெலிகாப்டரில் காரைக்குடிக்கு செல்கிறார். மாலை 4.30 மணி அளவில் காரைக்குடி பாண்டியன் தியேட்டர் எதிர்புறம் உள்ள திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கே.ஆர்.ராமசாமி, சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் காமராஜ் ஆகியோருக்காக ராகுல் பிரசாரம் செய்வார்.

காரைக்குடி பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுல்காந்தி மதுரைக்கு வந்து இரவு தங்குவார் என்று முதலில் தகவல் வெளியானது.

தற்போது அவரது பயணத் திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காரைக்குடி கூட்டம் முடிந்ததும், காரைக்குடியில் உள்ள மத்திய அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை காலை காரைக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திக்குளம் செல்கிறார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் பெருமாள் சாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

விளாத்திக்குளம் கூட்டம் முடிந்ததும் மதியம் புதுச்சேரி மாநிலத்துக்கு செல்கிறார். புதுச்சேரியில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த முத்து குமாரசாமி நெட்டப்பாக்கம் (தனி) தொகுதி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இவருக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். நாளை மதியம் 1 மணியளவில் புதுவை வரும் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் மடுகரை செல்கிறார்.

மடுகரையில் இருந்து கார் மூலம் நெட்டப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கிராம மக்களை வழி நெடுகிலும் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மடுகரையில் தொடங்கி கரியமாணிக்கம், சூரமங் கலம், மதகடிப்பட்டு, அரியூர், பங்கூர் வழியாக வில்லியனூர் வருகிறார்.

வில்லியனூரில் கண்ணகி பள்ளி அருகே வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். கூட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சங்கர் தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி, ராஜ்ய சபா எம்.பி.கண்ணன், முதல்- அமைச்சர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன், மகளிர் அணி தலைவி விக்டோரியா, இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் செந்தில்குமரன், பொது செயலாளர்கள் சாம்ராஜ், இளையராஜா, ராமமூர்த்தி, அருள் டோம் னிக், சத்தியவேந்தன், மோகனா, செந்தில்வடிவு மற்றும் தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள், பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டம் முடிந்து சுல்தான் பேட், மூலகுளம், இந்திரா காந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, கொக்கு பார்க் வழியாக ராகுல்காந்தி லாஸ் பேட்டை விமான தளம் சென்றடைகிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். ராகுல்காந்தியின் 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணத்தை முன்னிட்டு கோவை, ஈரோடு, கரூர், காரைக்குடி, விளாத்திக்குளம், புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக டெல்லியில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர்.

கமாண்டோ படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் சுமார் 500 போலீசார் ராகுல் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். காரைக் குடியில் ராகுல் தங்கும் இடம் மத்திய தொழில் பாது காப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கரூர், காரைக்குடியில் ராகுல்காந்தி இன்று பிரச்சாரம்

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் நேற்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பேசினார்.

அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி 2 நாள் பயணமாக இன்று மதியம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கிறார்.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் இன்று மதியம் 12 மணிக்கு ராகுல்காந்தி கோவை வருகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட வேளாளர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வந்து இறங்குகிறார்.



அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜை ஆதரித்து பேசுகிறார். அதன் பிறகு ஈரோட்டில் இருந்து ஹெலிகாப்டரில் கரூர் செல்கிறார். அவரது ஹெலிகாப்டர் பிற்பகல் 2 மணி அளவில் கரூர் ஆயுதப்படை மைதானத்தில் தரை இறங்கும்.

அங்கிருந்து ராகுல்காந்தி பொதுக் கூட்டம் நடக்கும் கரூர் திருவள்ளூர் மைதானத்துக்கு செல்கிறார். கரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த ஜோதிமணியை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்கிறார்.

அதே மேடையில் அரவாக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி, கிருஷ்ண ராயபுரம் தி.மு.க. வேட்பாளர் காமராஜ், குளித்தலை தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

கரூரில் பிரச்சாரம் முடிந்ததும் ஹெலிகாப்டரில் காரைக்குடிக்கு செல்கிறார். மாலை 4.30 மணி அளவில் காரைக்குடி பாண்டியன் தியேட்டர் எதிர்புறம் உள்ள திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கே.ஆர்.ராமசாமி, சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் காமராஜ் ஆகியோருக்காக ராகுல் பிரசாரம் செய்வார்.

காரைக்குடி பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுல்காந்தி மதுரைக்கு வந்து இரவு தங்குவார் என்று முதலில் தகவல் வெளியானது.

தற்போது அவரது பயணத் திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காரைக்குடி கூட்டம் முடிந்ததும், காரைக்குடியில் உள்ள மத்திய அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை காலை காரைக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திக்குளம் செல்கிறார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் பெருமாள் சாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

விளாத்திக்குளம் கூட்டம் முடிந்ததும் மதியம் புதுச்சேரி மாநிலத்துக்கு செல்கிறார். புதுச்சேரியில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த முத்து குமாரசாமி நெட்டப்பாக்கம் (தனி) தொகுதி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இவருக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். நாளை மதியம் 1 மணியளவில் புதுவை வரும் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் மடுகரை செல்கிறார்.

மடுகரையில் இருந்து கார் மூலம் நெட்டப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கிராம மக்களை வழி நெடுகிலும் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மடுகரையில் தொடங்கி கரியமாணிக்கம், சூரமங் கலம், மதகடிப்பட்டு, அரியூர், பங்கூர் வழியாக வில்லியனூர் வருகிறார்.

வில்லியனூரில் கண்ணகி பள்ளி அருகே வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். கூட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சங்கர் தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி, ராஜ்ய சபா எம்.பி.கண்ணன், முதல்- அமைச்சர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன், மகளிர் அணி தலைவி விக்டோரியா, இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் செந்தில்குமரன், பொது செயலாளர்கள் சாம்ராஜ், இளையராஜா, ராமமூர்த்தி, அருள் டோம் னிக், சத்தியவேந்தன், மோகனா, செந்தில்வடிவு மற்றும் தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள், பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டம் முடிந்து சுல்தான் பேட், மூலகுளம், இந்திரா காந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, கொக்கு பார்க் வழியாக ராகுல்காந்தி லாஸ் பேட்டை விமான தளம் சென்றடைகிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். ராகுல்காந்தியின் 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணத்தை முன்னிட்டு கோவை, ஈரோடு, கரூர், காரைக்குடி, விளாத்திக்குளம், புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக டெல்லியில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர்.

கமாண்டோ படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் சுமார் 500 போலீசார் ராகுல் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். காரைக் குடியில் ராகுல் தங்கும் இடம் மத்திய தொழில் பாது காப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சோனியா, ராகுல் பிரசாரம் செய்யும் முடிவு குறித்து இன்னும் மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கும் வரை யார் வேண்டுமானாலும் போட்டியிட விருப்பம் தெரிவிக்கலாம். ஆனால், கட்சி மேலிடம் ஒருவரை வேட்பாளராக அறிவித்த பின், அவரை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நடப்பது போராட்டம் அல்ல. கட்சி கட்டுப்பாட்டை மீறும் செயல்.

யார் வெற்றி வேட்பாளர் என்ற தகுதியை பார்த்து தான் வேட்பாளர்கள் பட்டியலை சோனியா அறிவித்துள்ளார். மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஜெயந்தியை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் காங்கிரசார் அல்ல. கட்சி கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சத்தியமூர்த்தி பவனை தாக்கியவர்கள் சமூக விரோதிகள். அவர்களுக்கு துணை போன காங்கிரசார் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சோனியா, ராகுல் பிரசாரம் செய்வது குறித்து இன்னும் மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.

சோனியா, ராகுல் வருவார்களா? தங்கபாலு பதில்

தமிழகத்தில் சோனியா, ராகுல் பிரசாரம் செய்யும் முடிவு குறித்து இன்னும் மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கும் வரை யார் வேண்டுமானாலும் போட்டியிட விருப்பம் தெரிவிக்கலாம். ஆனால், கட்சி மேலிடம் ஒருவரை வேட்பாளராக அறிவித்த பின், அவரை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நடப்பது போராட்டம் அல்ல. கட்சி கட்டுப்பாட்டை மீறும் செயல்.

யார் வெற்றி வேட்பாளர் என்ற தகுதியை பார்த்து தான் வேட்பாளர்கள் பட்டியலை சோனியா அறிவித்துள்ளார். மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஜெயந்தியை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் காங்கிரசார் அல்ல. கட்சி கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சத்தியமூர்த்தி பவனை தாக்கியவர்கள் சமூக விரோதிகள். அவர்களுக்கு துணை போன காங்கிரசார் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சோனியா, ராகுல் பிரசாரம் செய்வது குறித்து இன்னும் மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.

புதுடில்லி: டில்லியில், சாலை விபத்தில் சிக்கிய நகராட்சி கவுன்சில் ஊழியரை, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், தன் பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி அவரை காப்பாற்றினார். டில்லி நகராட்சி கவுன்சிலில் ஊழியராக பணியாற்றி வந்தவர் காலே ராம். இவர், தன் இருசக்கர வாகனத்தில் பலிக்கா கேந்திராவில் உள்ள தன் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் பின்னால் வந்த கார், காலே ராமின் இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்று விட்டது. கார் மோதியதால், காலே ராம் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது, அந்த வழியாக, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காரில் வந்து கொண்டிருந்தார். அடிபட்டு, சாலையில் விழுந்து துடித்துக் கொண்டிருந்த காலே ராமை பார்த்ததும், காரை நிறுத்தி, உடனடியாக தன் பாதுகாப்பு வாகனம் ஒன்றில் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லத்தின் அருகே இரு நாட்களுக்கு முன் நடந்தது. ராகுலின் பரிவு கண்டு பலரும் வியந்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

காரில் அடிபட்டவரை காப்பாற்றிய ராகுல்

புதுடில்லி: டில்லியில், சாலை விபத்தில் சிக்கிய நகராட்சி கவுன்சில் ஊழியரை, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், தன் பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி அவரை காப்பாற்றினார். டில்லி நகராட்சி கவுன்சிலில் ஊழியராக பணியாற்றி வந்தவர் காலே ராம். இவர், தன் இருசக்கர வாகனத்தில் பலிக்கா கேந்திராவில் உள்ள தன் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் பின்னால் வந்த கார், காலே ராமின் இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்று விட்டது. கார் மோதியதால், காலே ராம் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது, அந்த வழியாக, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காரில் வந்து கொண்டிருந்தார். அடிபட்டு, சாலையில் விழுந்து துடித்துக் கொண்டிருந்த காலே ராமை பார்த்ததும், காரை நிறுத்தி, உடனடியாக தன் பாதுகாப்பு வாகனம் ஒன்றில் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லத்தின் அருகே இரு நாட்களுக்கு முன் நடந்தது. ராகுலின் பரிவு கண்டு பலரும் வியந்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி மராட்டிய மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவுரங்காபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-


இந்திய அரசியல் கட்சிகளில் ஜனநாயகம் இல்லை. கட்சிகளில் ஜனநாயகம் இருந்தால்தான் அது நாட்டுக்கு நல்லதை தர முடியும். எங்களை பொறுத்த வரை கட்சியில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை உண்மையாக நடத்தி இருக்கிறோம். இளைஞர்கள் அரசியலுக்கு வர ஆர்வம் காட்ட வேண்டும். இதை அவர்கள் தங்களுடைய கடமையாக கருத வேண்டும். இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரும் வகையில் அரசியல் அடிப்படைகளே மாற வேண்டும்.


உங்கள் வாழ்க்கையில் 10 வருடத்தை அரசியலுக்காக ஒதுங்குகள். இதன் மூலம் நிச்சயம் பெரும் மாற்றத்தை உருவாக்க முடியும். தற்போது கெட்டு கிடக்கும் இந்த அரசியல் அடிப்படைகளை நம்மால் மாற்ற முடியும். என்னுடைய முழு கவனமும் அதில்தான் இருக்கிறது. அரசியல் என்பது எல்லோரும் எளிதாக பங்கு பெறும் வகையில் திறந்த கதவாக இருக்க வேண்டும்.


அரசியல் என்றாலே ஊழல் தான் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். அரசியல் நடைமுறைகள் இப்போது இருப்பது போல தொடர்ந்தால் மக்களிடம் இந்த எண்ணம் தான் மேலோங்கும். எனவே அரசியல் அடிப்படைகளையே மாற்றி அமைத்தால் தான் இதை தடுக்க முடியும். என்னை அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தும் என்று நீங்கள் (நிருபர்கள்) சொல்வது உங்களுடைய அனுமானம். நான் அப்படி கருதவில்லை. ஆனால் அரசியல் அமைப்பை பழுது பார்க்க வேண்டும் என்பதையே நான் ஒரே குறிக்கோளாக கொண்டுள்ளேன்.


வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணத்தை கண்டு பிடித்து திரும்ப கொண்டு வர இன்னும் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது இந்தியாவின் பணம், இந்திய மக்களின் பணம். அதை விடக்கூடாது. இந்த பணம் திரும்ப வரும் என்ற உத்தரவாதம் வேண்டும்.


மராட்டியத்தில் மண் எண்ணை கடத்தல் கும்பலால் துணை கலெக்டர் கொல்லப்பட்டது அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் ஒரு போதும் நடக்க கூடாது. இதில் மத்திய - மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அடிமட்ட அளவில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே கிராமங்களில் நான் அடிக்கடி சுற்றுப்பயணம் செல்கிறேன். ஏழை மக்களை சந்தித்து பேசுகிறேன்.


இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் கறுப்பு பணத்தை திரும்ப கொண்டுவர வேண்டும்; ராகுல்காந்தி வற்புறுத்தல்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி மராட்டிய மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவுரங்காபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-


இந்திய அரசியல் கட்சிகளில் ஜனநாயகம் இல்லை. கட்சிகளில் ஜனநாயகம் இருந்தால்தான் அது நாட்டுக்கு நல்லதை தர முடியும். எங்களை பொறுத்த வரை கட்சியில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை உண்மையாக நடத்தி இருக்கிறோம். இளைஞர்கள் அரசியலுக்கு வர ஆர்வம் காட்ட வேண்டும். இதை அவர்கள் தங்களுடைய கடமையாக கருத வேண்டும். இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரும் வகையில் அரசியல் அடிப்படைகளே மாற வேண்டும்.


உங்கள் வாழ்க்கையில் 10 வருடத்தை அரசியலுக்காக ஒதுங்குகள். இதன் மூலம் நிச்சயம் பெரும் மாற்றத்தை உருவாக்க முடியும். தற்போது கெட்டு கிடக்கும் இந்த அரசியல் அடிப்படைகளை நம்மால் மாற்ற முடியும். என்னுடைய முழு கவனமும் அதில்தான் இருக்கிறது. அரசியல் என்பது எல்லோரும் எளிதாக பங்கு பெறும் வகையில் திறந்த கதவாக இருக்க வேண்டும்.


அரசியல் என்றாலே ஊழல் தான் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். அரசியல் நடைமுறைகள் இப்போது இருப்பது போல தொடர்ந்தால் மக்களிடம் இந்த எண்ணம் தான் மேலோங்கும். எனவே அரசியல் அடிப்படைகளையே மாற்றி அமைத்தால் தான் இதை தடுக்க முடியும். என்னை அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தும் என்று நீங்கள் (நிருபர்கள்) சொல்வது உங்களுடைய அனுமானம். நான் அப்படி கருதவில்லை. ஆனால் அரசியல் அமைப்பை பழுது பார்க்க வேண்டும் என்பதையே நான் ஒரே குறிக்கோளாக கொண்டுள்ளேன்.


வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணத்தை கண்டு பிடித்து திரும்ப கொண்டு வர இன்னும் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது இந்தியாவின் பணம், இந்திய மக்களின் பணம். அதை விடக்கூடாது. இந்த பணம் திரும்ப வரும் என்ற உத்தரவாதம் வேண்டும்.


மராட்டியத்தில் மண் எண்ணை கடத்தல் கும்பலால் துணை கலெக்டர் கொல்லப்பட்டது அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் ஒரு போதும் நடக்க கூடாது. இதில் மத்திய - மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அடிமட்ட அளவில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே கிராமங்களில் நான் அடிக்கடி சுற்றுப்பயணம் செல்கிறேன். ஏழை மக்களை சந்தித்து பேசுகிறேன்.


இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

முக நூல்

Popular Posts