background img

புதிய வரவு

Showing posts with label Today. Show all posts
Showing posts with label Today. Show all posts
மும்பை: ஐ.பி.எல்., "பிளே ஆப்' சுற்று முதல் போட்டியில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லலாம் என்பதால், இரு அணிகளும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளன.
இந்தியாவில் நடக்கும் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்து இன்று, "பிளே ஆப்' சுற்று போட்டிகள் துவங்குகின்றன. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
எழுச்சி தேவை:
லீக் சுற்று போட்டிகளில் 9 வெற்றிகள் பெற்ற சென்னை அணி, கடைசி போட்டியில் பெங்களூருவுடன் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதற்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம் தான் முக்கிய காரணம். துவக்க வீரர்கள் மைக்கேல் ஹசி (429 ரன்கள்), முரளி விஜய் (334), ரெய்னா (357), பத்ரிநாத் (362) மற்றும் சகா ஆகியோர், கடந்த போட்டியைப் போல அல்லாமல், இன்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இக்கட்டான நேரங்களில் அணிக்கு கைகொடுக்கும் கேப்டன் தோனி (341), மறுபடியும் ரன்குவிப்புக்கு உதவுவது நிர்வாகத்துக்கு ஆறுதல் தான். நேற்று முன்தினம் 40 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த இவர், இன்றும் அதை தொடர முயற்சிக்கலாம்.
ஆறுதல் கிடைக்குமா:
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சில், இதுவரை தலா 15 விக்கெட் வீழ்த்திய போலிஞ்சர், ஆல்பி மார்கல் இருவரும் மீண்டும் சரியான பாதைக்கு திரும்பினால் நல்லது. சுழற்பந்து வீச்சில் தமிழகத்தின் அஷ்வின் (16 விக்.,) இன்றைய போட்டியில் மீண்டும் ஜொலித்தால் பெங்களூரு அணியின் ரன்குவிப்புக்கு அணையிடலாம்.
கெய்ல் மிரட்டல்:
துவக்கத்தில் தோல்விகளால் துவண்டு கிடந்தது பெங்களூரு அணி. கிறிஸ் கெய்லின் வருகைக்குப் பின் திடீரென எழுச்சி கண்டது. முக்கியமாக 9 போட்டிகளில் மட்டும் பங்கேற்று 511 ரன்கள் குவித்துள்ள கெய்லின் பேட்டிங்தான் இதற்கு காரணம். சென்னைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் அரைசதம் அடித்து மிரட்டிய இவர், இன்றும் அதிரடியை தொடர காத்திருக்கிறார்.
இவருடன் விராத் கோஹ்லி (444), டிவிலியர்ஸ் (262) ஆகியோரும் சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின் வரிசையில் சவுரப் திவாரி, முகமது கைப் ஆறுதல் தரலாம்.
ஜாகிர் அசத்தல்:
உலக கோப்பை தொடரைப் போல, வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் மீண்டும் துவக்கத்தில் விக்கெட்டுகளை சாய்ப்பது, பெரும் பலமாக உள்ளது. இவரது "சகா' அரவிந்த் தன் பங்குக்கு விக்கெட் வேட்டை நடத்துகிறார். அனுபவ கேப்டன் வெட்டோரி, அபிமன்யு மிதுன் என வலுவான பவுலிங் படை, சென்னை அணிக்கு மீண்டும் சிக்கல் தர காத்திருக்கிறது.
வெற்றி யாருக்கு?
இன்றைய போட்டியில் வெல்லும் அணி, நேரடியாக வரும் 28ம் தேதி நடக்கும், நான்காவது ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு முன்னேறலாம். தோல்வியடையும் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உள்ளது. இருப்பினும், முதல் அணியாக பைனலுக்கு செல்ல இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால், ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டி காத்திருக்கிறது.
----
சென்னை ஆதிக்கம்
இதுவரை நடந்த ஐ.பி.எல்., போட்டிகளில், இரு அணிகளும் 9 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 5ல் சென்னை கிங்ஸ் அணியும், 4ல் பெங்களூரு அணியும் வென்றுள்ளன.
-----

பைனலுக்கு முன்னேறுமா சென்னை கிங்ஸ்? * இன்று பெங்களூரு அணியுடன் மோதல்

மும்பை: ஐ.பி.எல்., "பிளே ஆப்' சுற்று முதல் போட்டியில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லலாம் என்பதால், இரு அணிகளும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளன.
இந்தியாவில் நடக்கும் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்து இன்று, "பிளே ஆப்' சுற்று போட்டிகள் துவங்குகின்றன. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
எழுச்சி தேவை:
லீக் சுற்று போட்டிகளில் 9 வெற்றிகள் பெற்ற சென்னை அணி, கடைசி போட்டியில் பெங்களூருவுடன் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதற்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம் தான் முக்கிய காரணம். துவக்க வீரர்கள் மைக்கேல் ஹசி (429 ரன்கள்), முரளி விஜய் (334), ரெய்னா (357), பத்ரிநாத் (362) மற்றும் சகா ஆகியோர், கடந்த போட்டியைப் போல அல்லாமல், இன்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இக்கட்டான நேரங்களில் அணிக்கு கைகொடுக்கும் கேப்டன் தோனி (341), மறுபடியும் ரன்குவிப்புக்கு உதவுவது நிர்வாகத்துக்கு ஆறுதல் தான். நேற்று முன்தினம் 40 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த இவர், இன்றும் அதை தொடர முயற்சிக்கலாம்.
ஆறுதல் கிடைக்குமா:
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சில், இதுவரை தலா 15 விக்கெட் வீழ்த்திய போலிஞ்சர், ஆல்பி மார்கல் இருவரும் மீண்டும் சரியான பாதைக்கு திரும்பினால் நல்லது. சுழற்பந்து வீச்சில் தமிழகத்தின் அஷ்வின் (16 விக்.,) இன்றைய போட்டியில் மீண்டும் ஜொலித்தால் பெங்களூரு அணியின் ரன்குவிப்புக்கு அணையிடலாம்.
கெய்ல் மிரட்டல்:
துவக்கத்தில் தோல்விகளால் துவண்டு கிடந்தது பெங்களூரு அணி. கிறிஸ் கெய்லின் வருகைக்குப் பின் திடீரென எழுச்சி கண்டது. முக்கியமாக 9 போட்டிகளில் மட்டும் பங்கேற்று 511 ரன்கள் குவித்துள்ள கெய்லின் பேட்டிங்தான் இதற்கு காரணம். சென்னைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் அரைசதம் அடித்து மிரட்டிய இவர், இன்றும் அதிரடியை தொடர காத்திருக்கிறார்.
இவருடன் விராத் கோஹ்லி (444), டிவிலியர்ஸ் (262) ஆகியோரும் சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின் வரிசையில் சவுரப் திவாரி, முகமது கைப் ஆறுதல் தரலாம்.
ஜாகிர் அசத்தல்:
உலக கோப்பை தொடரைப் போல, வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் மீண்டும் துவக்கத்தில் விக்கெட்டுகளை சாய்ப்பது, பெரும் பலமாக உள்ளது. இவரது "சகா' அரவிந்த் தன் பங்குக்கு விக்கெட் வேட்டை நடத்துகிறார். அனுபவ கேப்டன் வெட்டோரி, அபிமன்யு மிதுன் என வலுவான பவுலிங் படை, சென்னை அணிக்கு மீண்டும் சிக்கல் தர காத்திருக்கிறது.
வெற்றி யாருக்கு?
இன்றைய போட்டியில் வெல்லும் அணி, நேரடியாக வரும் 28ம் தேதி நடக்கும், நான்காவது ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு முன்னேறலாம். தோல்வியடையும் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உள்ளது. இருப்பினும், முதல் அணியாக பைனலுக்கு செல்ல இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால், ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டி காத்திருக்கிறது.
----
சென்னை ஆதிக்கம்
இதுவரை நடந்த ஐ.பி.எல்., போட்டிகளில், இரு அணிகளும் 9 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 5ல் சென்னை கிங்ஸ் அணியும், 4ல் பெங்களூரு அணியும் வென்றுள்ளன.
-----

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று தலைமை அலுவலகத்தில் கூடி ஜெயலலிதாவை, சட்ட சபை தலைவராக தேர்வு செய்தனர். இதையடுத்து கவர்னர் பர்னாலாவை நேற்று மாலை ஜெயலலிதா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்றுக் கொண்ட கவர்னர் பர்னாலா, ஆட்சி அமைக்குமாறு ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பினார். புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று மதியம் 12.15 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. மதியம் 12.10 மணிக்கு விழா அரங்குக்கு ஜெயலலிதா வந்தார். அவரை தலைமை செயலாளர் மாலதி பூச்செண்டு கொடுத்து வர வேற்றார்.

அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா பிறகு விழா மேடைக்கு சென்று அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து புதிய அமைச்சராக பதவி ஏற்க இருந்தவர்கள் மேடைக்கு சென்று தங்களுக்கு உரிய இருக்கைகளில் அமர்ந் தனர். 12.40 மணிக்கு கவர்னர் பர்னாலா வந்தார். அவரை ஜெயலலிதா மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

கவர்னர் பர்னாலாவுக்கு புதிய அமைச்சர்களாக பொறுப்பு ஏற்க இருந்த 33 பேரையும் ஜெயலலிதா அறிமுகம் செய்தார். இதையடுத்து பதவி ஏற்பு விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன் பிறகு முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ள வருமாறு ஜெயலலிதாவை தலைமை செயலாளர் மாலதி அழைத்தார்.

இதை தொடர்ந்து ஜெயலலிதா, முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் செய்து வைத்தார். ஜெயலலிதா பதவி ஏற்ற போது கூறிய உறுதிமொழி வருமாறு:-

ஜெ.ஜெயலலிதா எனும் நான், சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலை நிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாகவும், உளச்சான்று படியும் எனது கடமைகளை செய்வேன் என்றும் அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்க, அச்சமும் ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு - வெறுப்பை விலக்கி, பல தரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.

ஜெ.ஜெயலலிதா எனும் நான் தமிழ்நாடு அரசின் அமைச்சர் என்ற முறையில் என் கவனத்துக்கு உள்ளாவதும் தெரியவருவதுமான எந்த பொருளையும், அமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ, பலரிடமோ, நேராகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழியை படித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறகு அதற்குரிய புத்தகத்தில் கையெழுத்திட்டார். பின்னர் பர்னாலாவுக்கும் விழா அரங்கில் இருந்த அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். அதன் பிறகு 12.52 மணிக்கு அமைச்சர்கள் பதவி ஏற்றனர். முதலில் ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். பின்னர் அமைச்சர்கள் ஒவ்வொருவராக வந்து பதவி ஏற்றுச் சென்றனர்.

ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் ஆர்.விசுவநாதன், கே.பி.முனுசாமி, சி.சண்முகவேலு, ஆர். வைத்திலிங்கம், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. சொ.கருப்பசாமி, பி.பழனியப்பன், சி.வி.சண்முகம், செல்லூர் கே.ராஜு, கே.டி.பச்சமால், எடிப்பாடி கே.பழனிச்சாமி, எஸ்.பி.சண்முகநாதன், கே.வி.ராமலிங்கம், எஸ்.பி. வேலுமணி. கே.டி.எம்.சின்னைய்யா, எம்.சி.சம்பத், பி.தங்கமணி, ஜி.செந்தமிழன், எஸ்.கோகுலஇந்தி, செல்வி ராமஜெயம், பி.வி.ரமணா, ஆர்.பி.உதயகுமார், என்.சுப்பிரமணியன், வி.செந்தில் பாலாஜி, என்.மரியம் பிச்சை. கே.ஏ.ஜெயபால், இ.சுப்பையா, புத்திசந்திரன், எஸ்.டி.செல்லபாண்டியன், வி.எஸ்.விஜய், என்.ஆர்.சிவபதி ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

பதவி ஏற்று முடித்ததும் அவர்கள் கவர்னர் பர்னாலாவுக்கும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் வணக்கம் தெரிவித்தனர். இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு கவர்னர் பர்னாலாவுடன், புதிய அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

விழாவில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, லோக்தளம் கட்சித் தலைவர் அஜீத்சிங் ஆகியோர் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறினார்கள்.

சசிகலா, அ.தி. மு.க. தோழமை கட்சிகளின் தலைவர்களான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்டு தேசியச் செயலாளர் ஏ.பி. பரதன், தா.பாண்டியன், நல்லக்கண்ணு, ஜி.ராம கிருஷ்ணன், எழுத்தாளர் சோ, சுலோசனா சம்பத் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

தொழில் அதிபர் ஏ.சி. முத்தையா, முன்னாள் டி.ஜி.பி.க்கள் தேவாரம், நட்ராஜ், தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன். நடிகைகள் அஞ்சலி தேவி, சவுகார்ஜானகி, பின்னணி பாடகி பி.சுசீலா, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார்: 33 மந்திரிகளும் பதவி ஏற்பு

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று தலைமை அலுவலகத்தில் கூடி ஜெயலலிதாவை, சட்ட சபை தலைவராக தேர்வு செய்தனர். இதையடுத்து கவர்னர் பர்னாலாவை நேற்று மாலை ஜெயலலிதா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்றுக் கொண்ட கவர்னர் பர்னாலா, ஆட்சி அமைக்குமாறு ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பினார். புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று மதியம் 12.15 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. மதியம் 12.10 மணிக்கு விழா அரங்குக்கு ஜெயலலிதா வந்தார். அவரை தலைமை செயலாளர் மாலதி பூச்செண்டு கொடுத்து வர வேற்றார்.

அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா பிறகு விழா மேடைக்கு சென்று அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து புதிய அமைச்சராக பதவி ஏற்க இருந்தவர்கள் மேடைக்கு சென்று தங்களுக்கு உரிய இருக்கைகளில் அமர்ந் தனர். 12.40 மணிக்கு கவர்னர் பர்னாலா வந்தார். அவரை ஜெயலலிதா மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

கவர்னர் பர்னாலாவுக்கு புதிய அமைச்சர்களாக பொறுப்பு ஏற்க இருந்த 33 பேரையும் ஜெயலலிதா அறிமுகம் செய்தார். இதையடுத்து பதவி ஏற்பு விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன் பிறகு முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ள வருமாறு ஜெயலலிதாவை தலைமை செயலாளர் மாலதி அழைத்தார்.

இதை தொடர்ந்து ஜெயலலிதா, முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் செய்து வைத்தார். ஜெயலலிதா பதவி ஏற்ற போது கூறிய உறுதிமொழி வருமாறு:-

ஜெ.ஜெயலலிதா எனும் நான், சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலை நிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாகவும், உளச்சான்று படியும் எனது கடமைகளை செய்வேன் என்றும் அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்க, அச்சமும் ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு - வெறுப்பை விலக்கி, பல தரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.

ஜெ.ஜெயலலிதா எனும் நான் தமிழ்நாடு அரசின் அமைச்சர் என்ற முறையில் என் கவனத்துக்கு உள்ளாவதும் தெரியவருவதுமான எந்த பொருளையும், அமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ, பலரிடமோ, நேராகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழியை படித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறகு அதற்குரிய புத்தகத்தில் கையெழுத்திட்டார். பின்னர் பர்னாலாவுக்கும் விழா அரங்கில் இருந்த அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். அதன் பிறகு 12.52 மணிக்கு அமைச்சர்கள் பதவி ஏற்றனர். முதலில் ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். பின்னர் அமைச்சர்கள் ஒவ்வொருவராக வந்து பதவி ஏற்றுச் சென்றனர்.

ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் ஆர்.விசுவநாதன், கே.பி.முனுசாமி, சி.சண்முகவேலு, ஆர். வைத்திலிங்கம், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. சொ.கருப்பசாமி, பி.பழனியப்பன், சி.வி.சண்முகம், செல்லூர் கே.ராஜு, கே.டி.பச்சமால், எடிப்பாடி கே.பழனிச்சாமி, எஸ்.பி.சண்முகநாதன், கே.வி.ராமலிங்கம், எஸ்.பி. வேலுமணி. கே.டி.எம்.சின்னைய்யா, எம்.சி.சம்பத், பி.தங்கமணி, ஜி.செந்தமிழன், எஸ்.கோகுலஇந்தி, செல்வி ராமஜெயம், பி.வி.ரமணா, ஆர்.பி.உதயகுமார், என்.சுப்பிரமணியன், வி.செந்தில் பாலாஜி, என்.மரியம் பிச்சை. கே.ஏ.ஜெயபால், இ.சுப்பையா, புத்திசந்திரன், எஸ்.டி.செல்லபாண்டியன், வி.எஸ்.விஜய், என்.ஆர்.சிவபதி ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

பதவி ஏற்று முடித்ததும் அவர்கள் கவர்னர் பர்னாலாவுக்கும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் வணக்கம் தெரிவித்தனர். இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு கவர்னர் பர்னாலாவுடன், புதிய அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

விழாவில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, லோக்தளம் கட்சித் தலைவர் அஜீத்சிங் ஆகியோர் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறினார்கள்.

சசிகலா, அ.தி. மு.க. தோழமை கட்சிகளின் தலைவர்களான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்டு தேசியச் செயலாளர் ஏ.பி. பரதன், தா.பாண்டியன், நல்லக்கண்ணு, ஜி.ராம கிருஷ்ணன், எழுத்தாளர் சோ, சுலோசனா சம்பத் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

தொழில் அதிபர் ஏ.சி. முத்தையா, முன்னாள் டி.ஜி.பி.க்கள் தேவாரம், நட்ராஜ், தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன். நடிகைகள் அஞ்சலி தேவி, சவுகார்ஜானகி, பின்னணி பாடகி பி.சுசீலா, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பழைய நகைகள் விற்பனை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதன் எதிரொலியாக நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 குறைந்தது.

இன்று அட்சய திருதியை என்பதால் ஏராளமானோர் நகை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.


சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை குறைவதாலும், நல்லவிலை கிடைப்பதினால் பழைய நகைகளை ஏராளமானோர் விற்பனை செய்வதினாலும் வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்க கட்டிகளை வங்கிகள் மூலமாக விற்பனை செய்வதினாலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக உள்ளது.


இன்று (வெள்ளிக்கிழமை) அட்சய திருதியை ஆகும். இந்தநிலையில், தங்கம் விலை குறைந்து வருவது பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. அட்சய திருதியை நாளான இன்று நகை வாங்குவதற்காக ஏராளமான பேர் நகைக்கடைகளில் முன்பதிவு செய்துள்ளனர்.



ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய திருதியை திதியை அட்சய திருதியை என்று அழைக்கிறார்கள். அட்சய திருதியை அன்று தங்க நகை வாங்கினால் அந்த ஆண்டில் எல்லா வளமும் பெருகும் என்பதும், ஆண்டு முழுவதும் நகை வாங்கும் யோகம் கிடைக்கும் என்பதும் பெண்களிடையே அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.


இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று மாலை தொடங்கியது. வளர்பிறை நாளில் அட்சய திருதியை வந்துள்ளது. அதிலும் குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் அட்சய திருதியை திதி தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வரையில் அட்சய திருதியை திதி இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இன்று முகூர்த்த நாள் வேறு சேர்ந்து கொண்டது. எனவே, வழக்கத்தைவிட அதிக அளவில் நகை விற்பனை இருக்கும் என வியாபாரிகள் கருதுகிறார்கள்.



அட்சய திருதியை யொட்டி, பெரும்பாலான நகைக்கடைகள் சலுகைகளை அறிவித்துள்ளன. சில கடைகளில் தங்கத்தின் மார்க்கெட் விலையில் கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி என்றும், சில கடைகளில் ரூ.60 தள்ளுபடி என்றும், சில கடைகளில் செய்கூலி, சேதாரம் இல்லை என்றும் சலுகைகள் கடைக்கு கடை வித்தியாசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான விற்பனையைவிட அதிக அளவில் அட்சய திருதியை நாளில் விற்பனையாகிறது.


சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தில் 20 கிலோ தங்கம் விற்பனையானதாக தெரிவித்தனர். இந்த ஆண்டு அதைவிட அதிகமாக இருக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர்.


அட்சய திருதியை திதியை முன்னிட்டு, சென்னையில் உள்ள நகைக்கடைகளில் நேற்று மாலையே தங்கம் வாங்குவதற்கு பெண்கள் அதிக ஆர்வம் காட்டியதைக் காண முடிந்தது. தங்களுக்கு பிடித்த டிசைனில் நகை கிடைக்காத பட்சத்தில் சிலர் தங்க காசு வாங்கிச்சென்றார்கள்.


அட்சய திருதியை திதிக்காக, சென்னை தியாகராய நகரில் உள்ள நகைக்கடைகளில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. வழக்கமாக காலை 9 மணிக்கு மேல் திறக்கக்கூடிய கடைகள் அட்சய திருதியைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கே திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.


நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.16664-ஆகவும், ஒரு கிராம் ரூ.2083-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் எதிர்பாராதவிதமாக தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.16 ஆயிரத்து 488-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.2061-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று அட்சய திருதியை

பழைய நகைகள் விற்பனை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதன் எதிரொலியாக நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 குறைந்தது.

இன்று அட்சய திருதியை என்பதால் ஏராளமானோர் நகை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.


சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை குறைவதாலும், நல்லவிலை கிடைப்பதினால் பழைய நகைகளை ஏராளமானோர் விற்பனை செய்வதினாலும் வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்க கட்டிகளை வங்கிகள் மூலமாக விற்பனை செய்வதினாலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக உள்ளது.


இன்று (வெள்ளிக்கிழமை) அட்சய திருதியை ஆகும். இந்தநிலையில், தங்கம் விலை குறைந்து வருவது பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. அட்சய திருதியை நாளான இன்று நகை வாங்குவதற்காக ஏராளமான பேர் நகைக்கடைகளில் முன்பதிவு செய்துள்ளனர்.



ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய திருதியை திதியை அட்சய திருதியை என்று அழைக்கிறார்கள். அட்சய திருதியை அன்று தங்க நகை வாங்கினால் அந்த ஆண்டில் எல்லா வளமும் பெருகும் என்பதும், ஆண்டு முழுவதும் நகை வாங்கும் யோகம் கிடைக்கும் என்பதும் பெண்களிடையே அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.


இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று மாலை தொடங்கியது. வளர்பிறை நாளில் அட்சய திருதியை வந்துள்ளது. அதிலும் குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் அட்சய திருதியை திதி தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வரையில் அட்சய திருதியை திதி இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இன்று முகூர்த்த நாள் வேறு சேர்ந்து கொண்டது. எனவே, வழக்கத்தைவிட அதிக அளவில் நகை விற்பனை இருக்கும் என வியாபாரிகள் கருதுகிறார்கள்.



அட்சய திருதியை யொட்டி, பெரும்பாலான நகைக்கடைகள் சலுகைகளை அறிவித்துள்ளன. சில கடைகளில் தங்கத்தின் மார்க்கெட் விலையில் கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி என்றும், சில கடைகளில் ரூ.60 தள்ளுபடி என்றும், சில கடைகளில் செய்கூலி, சேதாரம் இல்லை என்றும் சலுகைகள் கடைக்கு கடை வித்தியாசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான விற்பனையைவிட அதிக அளவில் அட்சய திருதியை நாளில் விற்பனையாகிறது.


சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தில் 20 கிலோ தங்கம் விற்பனையானதாக தெரிவித்தனர். இந்த ஆண்டு அதைவிட அதிகமாக இருக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர்.


அட்சய திருதியை திதியை முன்னிட்டு, சென்னையில் உள்ள நகைக்கடைகளில் நேற்று மாலையே தங்கம் வாங்குவதற்கு பெண்கள் அதிக ஆர்வம் காட்டியதைக் காண முடிந்தது. தங்களுக்கு பிடித்த டிசைனில் நகை கிடைக்காத பட்சத்தில் சிலர் தங்க காசு வாங்கிச்சென்றார்கள்.


அட்சய திருதியை திதிக்காக, சென்னை தியாகராய நகரில் உள்ள நகைக்கடைகளில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. வழக்கமாக காலை 9 மணிக்கு மேல் திறக்கக்கூடிய கடைகள் அட்சய திருதியைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கே திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.


நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.16664-ஆகவும், ஒரு கிராம் ரூ.2083-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் எதிர்பாராதவிதமாக தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.16 ஆயிரத்து 488-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.2061-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. கடந்த முறை போல இன்றும் வெற்றியை தொடர தோனியின் சென்னை அணி காத்திருக்கிறது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மீண்டும் சந்திக்கின்றன.
விஜய் சந்தேகம்:
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 3ல் வென்றுள்ளது. இருப்பினும் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முதல் போட்டியில் 64 ரன் எடுத்த அனிருதா, அடுத்து சொதப்பி வருகிறார். கொச்சிக்கு எதிராக ரெய்னா 50 ரன்கள் எடுத்தார். இப்படி ஒரு போட்டிக்கு ஒருவர் மட்டுமே ரன்குவிப்பில் ஈடுபடுகின்றனர். மற்றவர்கள் சொதப்புவதால், பெரிய அளவிலான ஸ்கோரை எட்ட முடியவில்லை. இதுவரை பங்கேற்ற போட்டிகளில், 180 ரன்கள் எடுத்துள்ள முரளி விஜய், தொடையின் பின் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்று விளையாடுவது சந்தேகம் தான்.
கேப்டன் தோனியும் இந்த வரிசையில் தான் உள்ளார். மைக்கேல் ஹசி மட்டும் ஓரளவுக்கு நிலையான ஆட்டத்தை தருகிறார். பின் வரிசையில் ஆல்பி மார்கலும் "பார்ம்' இல்லாமல் தவிக்கிறார். "மிடில் ஆர்டரில்' பத்ரிநாத் நம்பிக்கை தருகிறார். இன்று அனைத்து பேட்ஸ்மேன்களும் எழுச்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவுலிங் ஆறுதல்:
வேகப்பந்துவீச்சு பிரிவில் போலிஞ்சர் மீண்டும் அசத்த துவங்கியுள்ளது பெரும் பலம். இவருடன் ஆல்பி மார்கல் நம்பிக்கை தருவது சாதகமானது தான். ரந்திவ் நீக்கப்பட்டு சவுத்தி இடம் பெறலாம். மற்றபடி சுழலில் அஷ்வின், ஜகாதி இடம் பெறுவது தொடரலாம்.
அடுத்தடுத்த அதிர்ச்சி:
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிகரமாக துவக்கியது, அறிமுக அணி புனே வாரியர்ஸ். அடுத்து நடந்த பஞ்சாப், கொச்சி, சென்னை அணிகளுக்கு எதிரான "ஹாட்ரிக்' தோல்விகளால் துவண்டு கிடக்கிறது. பேட்டிங்கை பொறுத்தவரையில் ஸ்மித் காயம் காரணமாக விளையாடாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுபவ வீரர்கள் ரைடர், நாதன் மெக்கலம் சிறப்பாக விளையாடினால் நல்லது. இளம் வீரர்கள் மிதுன் மன்ஹாஸ், மோனிஷ் மிஸ்ரா நிலையான ஆட்டத்தை அணிக்கு வழங்க வேண்டும். கேப்டன் யுவராஜ் சிங், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ரன் சேர்ப்பார் என நம்பலாம். கடந்த தொடரில் அதிரடியில் பல போட்டிகளை வென்று தந்த உத்தப்பா, இம்முறை தொடர்ந்து கைவிடுவது அணிக்கு சிக்கல் தான்.
பவுலிங் அசத்தல்:
புனே அணிக்கு பவுலிங் பெரும் பலமாக உள்ளது. ஜெரோம் டெய்லர், பார்னலுடன், அல்போன்சா தாமஸ், ஸ்ரீகாந்த் வாக் மீண்டும் அசத்த முயற்சிக்கலாம். இவர்களுடன், ஜெசி ரைடர், முரளி கார்த்திக் "பார்ட் டைம்' யுவராஜ் சிங் விக்கெட் வேட்டைக்கு தயாராக உள்ளனர்.

பழிதீர்க்குமா?
நேற்று முன்தினம் சென்னையில் நடந்த லீக் போட்டியில் புனே அணி, சென்னை கிங்சிடம் தோல்வியடைந்து இருந்தது. ஒருநாள் இடைவெளியில், இன்று மீண்டும் அவர்களது சொந்த மண்ணில், சென்னையை எதிர்கொள்கின்றனர். இதில் சென்னையை வீழ்த்தி, புனே வீரர்கள் பழிதீர்ப்பார்களா?

எழுச்சி பெறுமா டெக்கான் சார்ஜர்ஸ்
கொச்சி: ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில் தோல்வியில் துவண்டு கிடக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை இன்று சந்திக்கிறது.
கடந்த 2009ல் சாம்பியன் பட்டம் வென்ற டெக்கான் அணி, இம்முறை கேப்டன் மாற்றத்துடன் களமிறங்கியது. புதிய கேப்டனாக வந்துள்ள சங்ககரா தலைமையில் டெக்கான் அணி இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் பெங்களூரு, டில்லி அணிக்கு எதிரான போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற நான்கு போட்டிகளில் (ராஜஸ்தான், கோல்கட்டா, பஞ்சாப், மும்பை) தோல்வியடைந்தது. இனியும் தோல்வி தொடரும் பட்சத்தில் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும்.
இதற்கு, பேட்டிங்கில் இளம் வீரர்கள் சிகர் தவான், சன்னி சோகல் தொடர்ந்து ஏமாற்றி வருவது முக்கிய காரணம். இதனால் பின் வரும் வீரர்களுக்கு நெருக்கடி அதிகரித்து விடுகிறது. பரத் சிப்லி, ரவி தேஜாவின் ஏமாற்றம் தொடர்கிறது. கேப்டன் சங்ககராவும் தன்பங்கிற்கு அணியை கைவிடுகிறார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய உள்ளூர் அணி வீரராக கிறிஸ்டியனும், இதுவரை சொல்லிக்கொள்ளும் படி சாதிக்கவில்லை. இதனால், இவரை பேட்டிங் ஆர்டரில் முன்வரிசையில் களமிறக்கிப் பார்க்கலாம்.
பவுலிங்கில் டெக்கான் அணி சிறப்பாக செயல்படுகிறது. வேகத்தில் ஸ்டைன், இஷாந்த் சர்மா அசத்துகின்றனர். சுழலில் அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா விக்கெட் வேட்டையை தொடரலாம்.
வெல்லுமா கொச்சி:
கொச்சி அணியை பொறுத்தவரையில் 6 போட்டிகளில் பங்கேற்று, தலா 3 வெற்றி, தோல்வியுடன் உள்ளது. இந்த அணி "ஹாட்ரிக்' வெற்றி பெற்ற நிலையில், கடந்த போட்டியில் பிரண்டன் மெக்கலம் விளையாடாதது பின்னடைவாக அமைந்தது. இன்று இவர் களமிறங்கலாம் என்று தெரிகிறது. கேப்டன் ஜெயவர்தனா, லட்சுமண் மீண்டும் ஆறுதல் தர காத்திருக்கின்றனர். இளம் வீரர்கள் பார்த்திவ் படேல், ரவிந்திர ஜடேஜா பேட்டிங்கில் அசத்துவது தொடரும்.
பவுலிங்கில் ஆர்.பி.சிங், வினய் குமார் இருவரும் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த சில போட்டிகளில் வாய்ப்பு பெறாத ஸ்ரீசாந்த், இன்று களமிறங்குவார் என்று தெரிகிறது. சுழலில் முரளி தரன், கோமெஜ், ஜடேஜாவுடன் பெரேராவும் கைகொடுக்கலாம்.

மீண்டும் வெல்லுமா சென்னை கிங்ஸ் *பழி தீர்க்குமா புனே வாரியர்ஸ்

சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. கடந்த முறை போல இன்றும் வெற்றியை தொடர தோனியின் சென்னை அணி காத்திருக்கிறது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மீண்டும் சந்திக்கின்றன.
விஜய் சந்தேகம்:
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 3ல் வென்றுள்ளது. இருப்பினும் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முதல் போட்டியில் 64 ரன் எடுத்த அனிருதா, அடுத்து சொதப்பி வருகிறார். கொச்சிக்கு எதிராக ரெய்னா 50 ரன்கள் எடுத்தார். இப்படி ஒரு போட்டிக்கு ஒருவர் மட்டுமே ரன்குவிப்பில் ஈடுபடுகின்றனர். மற்றவர்கள் சொதப்புவதால், பெரிய அளவிலான ஸ்கோரை எட்ட முடியவில்லை. இதுவரை பங்கேற்ற போட்டிகளில், 180 ரன்கள் எடுத்துள்ள முரளி விஜய், தொடையின் பின் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்று விளையாடுவது சந்தேகம் தான்.
கேப்டன் தோனியும் இந்த வரிசையில் தான் உள்ளார். மைக்கேல் ஹசி மட்டும் ஓரளவுக்கு நிலையான ஆட்டத்தை தருகிறார். பின் வரிசையில் ஆல்பி மார்கலும் "பார்ம்' இல்லாமல் தவிக்கிறார். "மிடில் ஆர்டரில்' பத்ரிநாத் நம்பிக்கை தருகிறார். இன்று அனைத்து பேட்ஸ்மேன்களும் எழுச்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவுலிங் ஆறுதல்:
வேகப்பந்துவீச்சு பிரிவில் போலிஞ்சர் மீண்டும் அசத்த துவங்கியுள்ளது பெரும் பலம். இவருடன் ஆல்பி மார்கல் நம்பிக்கை தருவது சாதகமானது தான். ரந்திவ் நீக்கப்பட்டு சவுத்தி இடம் பெறலாம். மற்றபடி சுழலில் அஷ்வின், ஜகாதி இடம் பெறுவது தொடரலாம்.
அடுத்தடுத்த அதிர்ச்சி:
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிகரமாக துவக்கியது, அறிமுக அணி புனே வாரியர்ஸ். அடுத்து நடந்த பஞ்சாப், கொச்சி, சென்னை அணிகளுக்கு எதிரான "ஹாட்ரிக்' தோல்விகளால் துவண்டு கிடக்கிறது. பேட்டிங்கை பொறுத்தவரையில் ஸ்மித் காயம் காரணமாக விளையாடாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுபவ வீரர்கள் ரைடர், நாதன் மெக்கலம் சிறப்பாக விளையாடினால் நல்லது. இளம் வீரர்கள் மிதுன் மன்ஹாஸ், மோனிஷ் மிஸ்ரா நிலையான ஆட்டத்தை அணிக்கு வழங்க வேண்டும். கேப்டன் யுவராஜ் சிங், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ரன் சேர்ப்பார் என நம்பலாம். கடந்த தொடரில் அதிரடியில் பல போட்டிகளை வென்று தந்த உத்தப்பா, இம்முறை தொடர்ந்து கைவிடுவது அணிக்கு சிக்கல் தான்.
பவுலிங் அசத்தல்:
புனே அணிக்கு பவுலிங் பெரும் பலமாக உள்ளது. ஜெரோம் டெய்லர், பார்னலுடன், அல்போன்சா தாமஸ், ஸ்ரீகாந்த் வாக் மீண்டும் அசத்த முயற்சிக்கலாம். இவர்களுடன், ஜெசி ரைடர், முரளி கார்த்திக் "பார்ட் டைம்' யுவராஜ் சிங் விக்கெட் வேட்டைக்கு தயாராக உள்ளனர்.

பழிதீர்க்குமா?
நேற்று முன்தினம் சென்னையில் நடந்த லீக் போட்டியில் புனே அணி, சென்னை கிங்சிடம் தோல்வியடைந்து இருந்தது. ஒருநாள் இடைவெளியில், இன்று மீண்டும் அவர்களது சொந்த மண்ணில், சென்னையை எதிர்கொள்கின்றனர். இதில் சென்னையை வீழ்த்தி, புனே வீரர்கள் பழிதீர்ப்பார்களா?

எழுச்சி பெறுமா டெக்கான் சார்ஜர்ஸ்
கொச்சி: ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில் தோல்வியில் துவண்டு கிடக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை இன்று சந்திக்கிறது.
கடந்த 2009ல் சாம்பியன் பட்டம் வென்ற டெக்கான் அணி, இம்முறை கேப்டன் மாற்றத்துடன் களமிறங்கியது. புதிய கேப்டனாக வந்துள்ள சங்ககரா தலைமையில் டெக்கான் அணி இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் பெங்களூரு, டில்லி அணிக்கு எதிரான போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற நான்கு போட்டிகளில் (ராஜஸ்தான், கோல்கட்டா, பஞ்சாப், மும்பை) தோல்வியடைந்தது. இனியும் தோல்வி தொடரும் பட்சத்தில் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும்.
இதற்கு, பேட்டிங்கில் இளம் வீரர்கள் சிகர் தவான், சன்னி சோகல் தொடர்ந்து ஏமாற்றி வருவது முக்கிய காரணம். இதனால் பின் வரும் வீரர்களுக்கு நெருக்கடி அதிகரித்து விடுகிறது. பரத் சிப்லி, ரவி தேஜாவின் ஏமாற்றம் தொடர்கிறது. கேப்டன் சங்ககராவும் தன்பங்கிற்கு அணியை கைவிடுகிறார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய உள்ளூர் அணி வீரராக கிறிஸ்டியனும், இதுவரை சொல்லிக்கொள்ளும் படி சாதிக்கவில்லை. இதனால், இவரை பேட்டிங் ஆர்டரில் முன்வரிசையில் களமிறக்கிப் பார்க்கலாம்.
பவுலிங்கில் டெக்கான் அணி சிறப்பாக செயல்படுகிறது. வேகத்தில் ஸ்டைன், இஷாந்த் சர்மா அசத்துகின்றனர். சுழலில் அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா விக்கெட் வேட்டையை தொடரலாம்.
வெல்லுமா கொச்சி:
கொச்சி அணியை பொறுத்தவரையில் 6 போட்டிகளில் பங்கேற்று, தலா 3 வெற்றி, தோல்வியுடன் உள்ளது. இந்த அணி "ஹாட்ரிக்' வெற்றி பெற்ற நிலையில், கடந்த போட்டியில் பிரண்டன் மெக்கலம் விளையாடாதது பின்னடைவாக அமைந்தது. இன்று இவர் களமிறங்கலாம் என்று தெரிகிறது. கேப்டன் ஜெயவர்தனா, லட்சுமண் மீண்டும் ஆறுதல் தர காத்திருக்கின்றனர். இளம் வீரர்கள் பார்த்திவ் படேல், ரவிந்திர ஜடேஜா பேட்டிங்கில் அசத்துவது தொடரும்.
பவுலிங்கில் ஆர்.பி.சிங், வினய் குமார் இருவரும் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த சில போட்டிகளில் வாய்ப்பு பெறாத ஸ்ரீசாந்த், இன்று களமிறங்குவார் என்று தெரிகிறது. சுழலில் முரளி தரன், கோமெஜ், ஜடேஜாவுடன் பெரேராவும் கைகொடுக்கலாம்.

சென்னை: கனிமொழியின் பெயரை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சேர்த்துள்ளதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள திமுக தலைமை இன்று தனது உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.

இதில் இலங்கை விவகாரத்தை கையில் எடுத்து காங்கிரசுக்கு நெருக்கடி தருவது குறித்து திமுக முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக 2வது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் கனிமொழியின் பெயர் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல கலைஞர் டிவியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரையும் சேர்த்துள்ளனர். இதனால் திமுக அதிர்ச்சியும், கடும் அதிருப்தியும் அடைந்துள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்படக் கூடும் என்றும் பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந் நிலையில் முக்கிய முடிவு எடுப்பதற்காக கட்சியின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டியுள்ளது திமுக.

இக் கூட்டத்தில் முதல்வரும் கட்சித் தலைவருமான கருணாநிதி, நிதியமைச்சரும் பொதுச் செயலாளருமான க.அன்பழகன், துணை முதல்வரும் பொருளாளருமான மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சரும் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி, அமைச்சர்கள் உள்ளிட்ட 27 பேர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக இக் கூட்டம் குறித்து தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் நீதிமன்றம் அறிவிப்பின் கீழ் சி.பி.ஐ. கனிமொழி பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது. சி.பி.ஐ. ஒரு தனி அமைப்பு. அவர்களின் நடவடிக்கை குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதால் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் பாதிப்பு இல்லை. எங்கள் கட்சியின் நிலை குறித்தும், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இன்று முடிவு செய்வோம் என்றார்.

இன்று என்ன முடிவு எடுக்கப்படும் என்பது குறித்துத் தெரியவில்லை. இருப்பினும் மத்திய அமைச்சர்கள் ராஜினாமா உள்ளிட்ட சில வழக்கமான முடிவுகளை திமுக அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை பிரச்சனையை திமுக கையில் எடுக்கும்?:

இந் நிலையில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் போர்க் குற்றமே என்று ஐ.நா. தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இது குறித்தும் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தை வைத்து காங்கிரசுக்கு நெருக்கடி தரும் வேலைகளை திமுக தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அத்வானியை காட்டி சமாதானப்படுத்தும் காங்கிரஸ்:

இந் நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், இந்தப் பிரச்சனையை அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் சந்திக்க வேண்டும் என்பதை திமுக புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாலேயே குற்றவாளி என்று அர்த்தமில்லை.

அத்வானி மீது கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் அரசியலில் நீடித்துக் கொண்டுதானே இருக்கிறார் என்றார்.

கனிமொழி விவகாரம்: திமுக உயர் நிலைக் கூட்டம் தொடங்கியது-முக்கிய முடிவு?

சென்னை: கனிமொழியின் பெயரை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சேர்த்துள்ளதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள திமுக தலைமை இன்று தனது உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.

இதில் இலங்கை விவகாரத்தை கையில் எடுத்து காங்கிரசுக்கு நெருக்கடி தருவது குறித்து திமுக முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக 2வது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் கனிமொழியின் பெயர் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல கலைஞர் டிவியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரையும் சேர்த்துள்ளனர். இதனால் திமுக அதிர்ச்சியும், கடும் அதிருப்தியும் அடைந்துள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்படக் கூடும் என்றும் பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந் நிலையில் முக்கிய முடிவு எடுப்பதற்காக கட்சியின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டியுள்ளது திமுக.

இக் கூட்டத்தில் முதல்வரும் கட்சித் தலைவருமான கருணாநிதி, நிதியமைச்சரும் பொதுச் செயலாளருமான க.அன்பழகன், துணை முதல்வரும் பொருளாளருமான மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சரும் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி, அமைச்சர்கள் உள்ளிட்ட 27 பேர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக இக் கூட்டம் குறித்து தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் நீதிமன்றம் அறிவிப்பின் கீழ் சி.பி.ஐ. கனிமொழி பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது. சி.பி.ஐ. ஒரு தனி அமைப்பு. அவர்களின் நடவடிக்கை குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதால் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் பாதிப்பு இல்லை. எங்கள் கட்சியின் நிலை குறித்தும், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இன்று முடிவு செய்வோம் என்றார்.

இன்று என்ன முடிவு எடுக்கப்படும் என்பது குறித்துத் தெரியவில்லை. இருப்பினும் மத்திய அமைச்சர்கள் ராஜினாமா உள்ளிட்ட சில வழக்கமான முடிவுகளை திமுக அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை பிரச்சனையை திமுக கையில் எடுக்கும்?:

இந் நிலையில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் போர்க் குற்றமே என்று ஐ.நா. தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இது குறித்தும் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தை வைத்து காங்கிரசுக்கு நெருக்கடி தரும் வேலைகளை திமுக தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அத்வானியை காட்டி சமாதானப்படுத்தும் காங்கிரஸ்:

இந் நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், இந்தப் பிரச்சனையை அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் சந்திக்க வேண்டும் என்பதை திமுக புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாலேயே குற்றவாளி என்று அர்த்தமில்லை.

அத்வானி மீது கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் அரசியலில் நீடித்துக் கொண்டுதானே இருக்கிறார் என்றார்.

புட்டபர்த்தி: சத்ய சாய்பாபாவின் உடல் இன்று காலை அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று நள்ளிரவு வரை பல லட்சம் பேர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பிரசாந்தி நிலையமே மக்கள் கடலாக காட்சி அளிக்கிறது. பெருகி வரும் கண்ணீர், கூப்பிய கைகள், சோகமயமான முகங்களுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்து சாய்பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று நள்ளிரவு வரை பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 9 மணிக்கு சாய்பாபா உடல் அடக்க நிகழ்ச்சிகள் தொடங்கி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பிரசாந்தி நிலைய வளாகத்திலேயே 7 அடி ஆழம் மற்றும் 12 அடி நீள சமாதியில் சாய்பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சமாதியைத் தோண்டும் பணி நடந்து வந்தது.

உடலை குழிக்குள் இறக்கியதும், அது குருசேத்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணால் மூடப்பட்டது. பிறகு உப்பு, வெள்ளி, தங்கம், நவரத்தினங்களும் அதில் நிரப்பப்பட்டது. படுக்கை வசமாக உடல் அடக்கம் செய்யப்பட்டது.

உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சாய்பாபாவின் தங்கச் சிலையும், நினைவிடமும் பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ளது.

அத்வானி உள்ளிட்டோர் பங்கேற்பு

சாய்பாபா உடல் அடக்க நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் எதியூரப்பா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உடல் அடக்கம் செய்யப்பட்டபோது திரையிட்டு அந்த நிகழ்ச்சியை மூடியிருந்தனர். உடல் அடக்கம் முடிந்த பிறகுதான் திரை விலக்கப்பட்டது. அதன் பிறகு மங்களாரத்தி நடைபெற்று இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.

சாய்பாபா உடல் அடக்கம் செய்யப்பட்டது-லட்சக்கணக்கானோர் இறுதி அஞ்சலி

புட்டபர்த்தி: சத்ய சாய்பாபாவின் உடல் இன்று காலை அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று நள்ளிரவு வரை பல லட்சம் பேர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பிரசாந்தி நிலையமே மக்கள் கடலாக காட்சி அளிக்கிறது. பெருகி வரும் கண்ணீர், கூப்பிய கைகள், சோகமயமான முகங்களுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்து சாய்பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று நள்ளிரவு வரை பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 9 மணிக்கு சாய்பாபா உடல் அடக்க நிகழ்ச்சிகள் தொடங்கி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பிரசாந்தி நிலைய வளாகத்திலேயே 7 அடி ஆழம் மற்றும் 12 அடி நீள சமாதியில் சாய்பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சமாதியைத் தோண்டும் பணி நடந்து வந்தது.

உடலை குழிக்குள் இறக்கியதும், அது குருசேத்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணால் மூடப்பட்டது. பிறகு உப்பு, வெள்ளி, தங்கம், நவரத்தினங்களும் அதில் நிரப்பப்பட்டது. படுக்கை வசமாக உடல் அடக்கம் செய்யப்பட்டது.

உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சாய்பாபாவின் தங்கச் சிலையும், நினைவிடமும் பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ளது.

அத்வானி உள்ளிட்டோர் பங்கேற்பு

சாய்பாபா உடல் அடக்க நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் எதியூரப்பா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உடல் அடக்கம் செய்யப்பட்டபோது திரையிட்டு அந்த நிகழ்ச்சியை மூடியிருந்தனர். உடல் அடக்கம் முடிந்த பிறகுதான் திரை விலக்கப்பட்டது. அதன் பிறகு மங்களாரத்தி நடைபெற்று இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடரில், இன்று நடக்கும் லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய இரு அணியினரும் காத்திருக்கின்றனர்.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. பெங்களூருவில், இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் வெட்டோரி தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, சச்சின் வழிநடத்தும் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இரண்டாவது வெற்றி:
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு எதிராக பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதேபோல டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, தனது 2வது வெற்றியை பதிவு செய்யலாம்.
பேட்டிங் பலம்:
பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. கொச்சி அணிக்கு எதிராக நல்ல துவக்கம் கொடுத்த மயான்க் அகர்வால், இன்றும் சாதிக்கலாம். கடந்த போட்டியில் சோபிக்கத்தவறிய தில்ஷன், இன்று எழுச்சி பெற வேண்டும். விராத் கோஹ்லி, பேட்டிங்கில் அதிரடி காட்டினால் நல்லது. கொச்சி அணிக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் கடந்த டிவிலியர்ஸ், இன்று தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். "மிடில்-ஆர்டரில்' சவுரவ் திவாரி, புஜாரா, முகமது கைப் உள்ளிட்டோர் ரன் மழை பொழியும் பட்சத்தில் இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
ஜாகிர் நம்பிக்கை:
பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சில் பலம் சேர்க்க இந்திய வீரர் ஜாகிர் கான் உள்ளார். கொச்சி அணிக்கு எதிராக பெரிய அளவில் சோபிக்கத் தவறிய இவர், இன்று விக்கெட் மழை பொழிய வேண்டும். இவருக்கு டிர்க் நான்ஸ், சார்லஸ் லாங்கிவெல்ட், அபிமன்யு மிதுன், விராத் கோஹ்லி, ஆசாத் பதான் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளித்தால் நல்லது. சுழலில் கேப்டன் வெட்டோரி நம்பிக்கை அளிக்கிறார். இவருடன் தில்ஷன் இணைவது சுழலின் பலத்தை அதிகரித்துள்ளது.
சச்சின் எதிர்பார்ப்பு:
மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசை அசுர பலத்துடன் உள்ளது. டில்லி அணிக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய சச்சின், இன்றும் ரன் மழை பொழியலாம். டேவி ஜேக்கப்ஸ், நல்ல துவக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். "மிடில்-ஆர்டரில்' அம்பாதி ராயுடு, ரோகித் சர்மா, போலார்டு, ஜேம்ஸ் பிராங்க்ளின், ராஜகோபால் சதீஷ் உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில் வலுவான இலக்கை நிர்ணயிக்கலாம். கடந்த போட்டியில் வாய்ப்பு பெறாத சைமண்ட்ஸ், இன்று களமிறங்கலாம்.
மலிங்கா மிரட்டல்:
மும்பை அணியின் வேகப்பந்துவீச்சு வலுவான நிலையில் உள்ளது. டில்லி அணிக்கு எதிராக வேகத்தில் மிரட்டிய லசித் மலிங்கா, 5 விக்கெட் வீழ்த்தினார். இவரது விக்கெட் வேட்டை இன்றும் தொடரும் பட்சத்தில், பெங்களூரு அணிக்கு சிக்கலாகிவிடும். இவருக்கு முனாப் படேல், ஜேம்ஸ் பிராங்க்ளின், ஹென்றிகுயஸ், பெர்ணான்டோ, தவால் குல்கர்ணி, போலார்டு, சதீஷ் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுழலில் அனுபவ ஹர்பஜன் இருப்பது பலம்.
---
எட்டாவது முறை
ஐ.பி.எல்., அரங்கில், மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் எட்டாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய ஏழு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 4, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் 3 வெற்றி கண்டன.
---

பெங்களூருவை சமாளிக்குமா மும்பை! * 2வது வெற்றியை நோக்கி மோதல்

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடரில், இன்று நடக்கும் லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய இரு அணியினரும் காத்திருக்கின்றனர்.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. பெங்களூருவில், இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் வெட்டோரி தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, சச்சின் வழிநடத்தும் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இரண்டாவது வெற்றி:
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு எதிராக பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதேபோல டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, தனது 2வது வெற்றியை பதிவு செய்யலாம்.
பேட்டிங் பலம்:
பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. கொச்சி அணிக்கு எதிராக நல்ல துவக்கம் கொடுத்த மயான்க் அகர்வால், இன்றும் சாதிக்கலாம். கடந்த போட்டியில் சோபிக்கத்தவறிய தில்ஷன், இன்று எழுச்சி பெற வேண்டும். விராத் கோஹ்லி, பேட்டிங்கில் அதிரடி காட்டினால் நல்லது. கொச்சி அணிக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் கடந்த டிவிலியர்ஸ், இன்று தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். "மிடில்-ஆர்டரில்' சவுரவ் திவாரி, புஜாரா, முகமது கைப் உள்ளிட்டோர் ரன் மழை பொழியும் பட்சத்தில் இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
ஜாகிர் நம்பிக்கை:
பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சில் பலம் சேர்க்க இந்திய வீரர் ஜாகிர் கான் உள்ளார். கொச்சி அணிக்கு எதிராக பெரிய அளவில் சோபிக்கத் தவறிய இவர், இன்று விக்கெட் மழை பொழிய வேண்டும். இவருக்கு டிர்க் நான்ஸ், சார்லஸ் லாங்கிவெல்ட், அபிமன்யு மிதுன், விராத் கோஹ்லி, ஆசாத் பதான் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளித்தால் நல்லது. சுழலில் கேப்டன் வெட்டோரி நம்பிக்கை அளிக்கிறார். இவருடன் தில்ஷன் இணைவது சுழலின் பலத்தை அதிகரித்துள்ளது.
சச்சின் எதிர்பார்ப்பு:
மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசை அசுர பலத்துடன் உள்ளது. டில்லி அணிக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய சச்சின், இன்றும் ரன் மழை பொழியலாம். டேவி ஜேக்கப்ஸ், நல்ல துவக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். "மிடில்-ஆர்டரில்' அம்பாதி ராயுடு, ரோகித் சர்மா, போலார்டு, ஜேம்ஸ் பிராங்க்ளின், ராஜகோபால் சதீஷ் உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில் வலுவான இலக்கை நிர்ணயிக்கலாம். கடந்த போட்டியில் வாய்ப்பு பெறாத சைமண்ட்ஸ், இன்று களமிறங்கலாம்.
மலிங்கா மிரட்டல்:
மும்பை அணியின் வேகப்பந்துவீச்சு வலுவான நிலையில் உள்ளது. டில்லி அணிக்கு எதிராக வேகத்தில் மிரட்டிய லசித் மலிங்கா, 5 விக்கெட் வீழ்த்தினார். இவரது விக்கெட் வேட்டை இன்றும் தொடரும் பட்சத்தில், பெங்களூரு அணிக்கு சிக்கலாகிவிடும். இவருக்கு முனாப் படேல், ஜேம்ஸ் பிராங்க்ளின், ஹென்றிகுயஸ், பெர்ணான்டோ, தவால் குல்கர்ணி, போலார்டு, சதீஷ் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுழலில் அனுபவ ஹர்பஜன் இருப்பது பலம்.
---
எட்டாவது முறை
ஐ.பி.எல்., அரங்கில், மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் எட்டாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய ஏழு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 4, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் 3 வெற்றி கண்டன.
---

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் நேற்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பேசினார்.

அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி 2 நாள் பயணமாக இன்று மதியம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கிறார்.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் இன்று மதியம் 12 மணிக்கு ராகுல்காந்தி கோவை வருகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட வேளாளர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வந்து இறங்குகிறார்.



அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜை ஆதரித்து பேசுகிறார். அதன் பிறகு ஈரோட்டில் இருந்து ஹெலிகாப்டரில் கரூர் செல்கிறார். அவரது ஹெலிகாப்டர் பிற்பகல் 2 மணி அளவில் கரூர் ஆயுதப்படை மைதானத்தில் தரை இறங்கும்.

அங்கிருந்து ராகுல்காந்தி பொதுக் கூட்டம் நடக்கும் கரூர் திருவள்ளூர் மைதானத்துக்கு செல்கிறார். கரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த ஜோதிமணியை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்கிறார்.

அதே மேடையில் அரவாக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி, கிருஷ்ண ராயபுரம் தி.மு.க. வேட்பாளர் காமராஜ், குளித்தலை தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

கரூரில் பிரச்சாரம் முடிந்ததும் ஹெலிகாப்டரில் காரைக்குடிக்கு செல்கிறார். மாலை 4.30 மணி அளவில் காரைக்குடி பாண்டியன் தியேட்டர் எதிர்புறம் உள்ள திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கே.ஆர்.ராமசாமி, சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் காமராஜ் ஆகியோருக்காக ராகுல் பிரசாரம் செய்வார்.

காரைக்குடி பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுல்காந்தி மதுரைக்கு வந்து இரவு தங்குவார் என்று முதலில் தகவல் வெளியானது.

தற்போது அவரது பயணத் திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காரைக்குடி கூட்டம் முடிந்ததும், காரைக்குடியில் உள்ள மத்திய அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை காலை காரைக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திக்குளம் செல்கிறார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் பெருமாள் சாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

விளாத்திக்குளம் கூட்டம் முடிந்ததும் மதியம் புதுச்சேரி மாநிலத்துக்கு செல்கிறார். புதுச்சேரியில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த முத்து குமாரசாமி நெட்டப்பாக்கம் (தனி) தொகுதி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இவருக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். நாளை மதியம் 1 மணியளவில் புதுவை வரும் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் மடுகரை செல்கிறார்.

மடுகரையில் இருந்து கார் மூலம் நெட்டப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கிராம மக்களை வழி நெடுகிலும் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மடுகரையில் தொடங்கி கரியமாணிக்கம், சூரமங் கலம், மதகடிப்பட்டு, அரியூர், பங்கூர் வழியாக வில்லியனூர் வருகிறார்.

வில்லியனூரில் கண்ணகி பள்ளி அருகே வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். கூட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சங்கர் தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி, ராஜ்ய சபா எம்.பி.கண்ணன், முதல்- அமைச்சர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன், மகளிர் அணி தலைவி விக்டோரியா, இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் செந்தில்குமரன், பொது செயலாளர்கள் சாம்ராஜ், இளையராஜா, ராமமூர்த்தி, அருள் டோம் னிக், சத்தியவேந்தன், மோகனா, செந்தில்வடிவு மற்றும் தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள், பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டம் முடிந்து சுல்தான் பேட், மூலகுளம், இந்திரா காந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, கொக்கு பார்க் வழியாக ராகுல்காந்தி லாஸ் பேட்டை விமான தளம் சென்றடைகிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். ராகுல்காந்தியின் 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணத்தை முன்னிட்டு கோவை, ஈரோடு, கரூர், காரைக்குடி, விளாத்திக்குளம், புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக டெல்லியில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர்.

கமாண்டோ படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் சுமார் 500 போலீசார் ராகுல் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். காரைக் குடியில் ராகுல் தங்கும் இடம் மத்திய தொழில் பாது காப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கரூர், காரைக்குடியில் ராகுல்காந்தி இன்று பிரச்சாரம்

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் நேற்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பேசினார்.

அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி 2 நாள் பயணமாக இன்று மதியம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கிறார்.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் இன்று மதியம் 12 மணிக்கு ராகுல்காந்தி கோவை வருகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட வேளாளர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வந்து இறங்குகிறார்.



அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜை ஆதரித்து பேசுகிறார். அதன் பிறகு ஈரோட்டில் இருந்து ஹெலிகாப்டரில் கரூர் செல்கிறார். அவரது ஹெலிகாப்டர் பிற்பகல் 2 மணி அளவில் கரூர் ஆயுதப்படை மைதானத்தில் தரை இறங்கும்.

அங்கிருந்து ராகுல்காந்தி பொதுக் கூட்டம் நடக்கும் கரூர் திருவள்ளூர் மைதானத்துக்கு செல்கிறார். கரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த ஜோதிமணியை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்கிறார்.

அதே மேடையில் அரவாக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி, கிருஷ்ண ராயபுரம் தி.மு.க. வேட்பாளர் காமராஜ், குளித்தலை தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

கரூரில் பிரச்சாரம் முடிந்ததும் ஹெலிகாப்டரில் காரைக்குடிக்கு செல்கிறார். மாலை 4.30 மணி அளவில் காரைக்குடி பாண்டியன் தியேட்டர் எதிர்புறம் உள்ள திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கே.ஆர்.ராமசாமி, சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் காமராஜ் ஆகியோருக்காக ராகுல் பிரசாரம் செய்வார்.

காரைக்குடி பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுல்காந்தி மதுரைக்கு வந்து இரவு தங்குவார் என்று முதலில் தகவல் வெளியானது.

தற்போது அவரது பயணத் திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காரைக்குடி கூட்டம் முடிந்ததும், காரைக்குடியில் உள்ள மத்திய அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை காலை காரைக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திக்குளம் செல்கிறார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் பெருமாள் சாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

விளாத்திக்குளம் கூட்டம் முடிந்ததும் மதியம் புதுச்சேரி மாநிலத்துக்கு செல்கிறார். புதுச்சேரியில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த முத்து குமாரசாமி நெட்டப்பாக்கம் (தனி) தொகுதி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இவருக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். நாளை மதியம் 1 மணியளவில் புதுவை வரும் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் மடுகரை செல்கிறார்.

மடுகரையில் இருந்து கார் மூலம் நெட்டப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கிராம மக்களை வழி நெடுகிலும் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மடுகரையில் தொடங்கி கரியமாணிக்கம், சூரமங் கலம், மதகடிப்பட்டு, அரியூர், பங்கூர் வழியாக வில்லியனூர் வருகிறார்.

வில்லியனூரில் கண்ணகி பள்ளி அருகே வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். கூட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சங்கர் தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி, ராஜ்ய சபா எம்.பி.கண்ணன், முதல்- அமைச்சர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன், மகளிர் அணி தலைவி விக்டோரியா, இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் செந்தில்குமரன், பொது செயலாளர்கள் சாம்ராஜ், இளையராஜா, ராமமூர்த்தி, அருள் டோம் னிக், சத்தியவேந்தன், மோகனா, செந்தில்வடிவு மற்றும் தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள், பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டம் முடிந்து சுல்தான் பேட், மூலகுளம், இந்திரா காந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, கொக்கு பார்க் வழியாக ராகுல்காந்தி லாஸ் பேட்டை விமான தளம் சென்றடைகிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். ராகுல்காந்தியின் 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணத்தை முன்னிட்டு கோவை, ஈரோடு, கரூர், காரைக்குடி, விளாத்திக்குளம், புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக டெல்லியில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர்.

கமாண்டோ படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் சுமார் 500 போலீசார் ராகுல் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். காரைக் குடியில் ராகுல் தங்கும் இடம் மத்திய தொழில் பாது காப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இன்று மொஹாலியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியைப் பார்க்கும் ஆவலில் இன்று பாலிவுட்டில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாம்.

இந்திய அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் மொஹாலிக்குப் படையெடுக்கின்றனர்.

ஆமிர்கான், அவரது மனைவி கிரண் ராவ், ப்ரீத்தி ஜிந்தா, சுனில்ஷெட்டி, ராகுல் போஸ், பாடகர் மிகா சிங் உள்ளிட்டோர் நேரடியாக போட்டியைக் காணவுள்ளனர். அதேபோல ஷாருக் கான், அகஷய் குமார், இம்ரான் கான், தீபிகா படுகோன் ஆகியோர் டிவிகளில் பார்த்து ரசிக்கவுள்ளனர். மேலும் வீடுகளில் விருந்துக்கு ஏற்பாடு செய்து உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் போட்டியை ரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.

ஆமிர்கான் போட்டி குறித்துக் கூறுகையில், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளேன். இந்தியாவை இறுதிப் போட்டியில் காண பெரும் ஆவலுடன் இருக்கிறேன். எனது இயக்கும் ஒரு கிரிக்கெட் வெறியர் என்பதால் படப்பிடிப்பைக் கூட ரத்து செய்து விட்டார். எனவே மொஹாலியில் போய் நேரடியாக பார்த்து ரசிக்கப் போகிறேன் என்றார்.

தீபிகா படுகோன், சித்ராங்கதா சிங், ஜான் ஆப்ரகாம் ஆகியோர் தற்போது லண்டனில் உள்ளனர். தங்களது படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு டிவியில் இருந்தபடி போட்டியை ரசிக்க அவர்கள் தயாராகி விட்டனர்.

சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தனது வீட்டையே குட்டி ஸ்டேடியமாக்கி விட்டார். தனது பாலிவுட் நண்பர்கள் அத்தனை பேரையும் வீட்டுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவி கெளரி சிறப்பு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார். நண்பர்கள் புடை சூழ தனது குடும்பத்தினருடன் போட்டியை ரசித்துப் பார்க்கவுள்ளார் ஷாருக்.

மொத்தத்தில் பாலிவுட்டில் இன்று பெரும்பாலான படப்பிடிப்புகளுக்கு லீவு விட்டு விட்டனர். போட்டி தொடங்கி முடியும் வரை பாலிவுட் பிரபலங்கள் யாரையும் எங்குமே பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அரை இறுதிப் போட்டியை நேரில் பார்க்கும் பாலிவுட்-ஷூட்டிங் ரத்து

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இன்று மொஹாலியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியைப் பார்க்கும் ஆவலில் இன்று பாலிவுட்டில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாம்.

இந்திய அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் மொஹாலிக்குப் படையெடுக்கின்றனர்.

ஆமிர்கான், அவரது மனைவி கிரண் ராவ், ப்ரீத்தி ஜிந்தா, சுனில்ஷெட்டி, ராகுல் போஸ், பாடகர் மிகா சிங் உள்ளிட்டோர் நேரடியாக போட்டியைக் காணவுள்ளனர். அதேபோல ஷாருக் கான், அகஷய் குமார், இம்ரான் கான், தீபிகா படுகோன் ஆகியோர் டிவிகளில் பார்த்து ரசிக்கவுள்ளனர். மேலும் வீடுகளில் விருந்துக்கு ஏற்பாடு செய்து உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் போட்டியை ரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.

ஆமிர்கான் போட்டி குறித்துக் கூறுகையில், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளேன். இந்தியாவை இறுதிப் போட்டியில் காண பெரும் ஆவலுடன் இருக்கிறேன். எனது இயக்கும் ஒரு கிரிக்கெட் வெறியர் என்பதால் படப்பிடிப்பைக் கூட ரத்து செய்து விட்டார். எனவே மொஹாலியில் போய் நேரடியாக பார்த்து ரசிக்கப் போகிறேன் என்றார்.

தீபிகா படுகோன், சித்ராங்கதா சிங், ஜான் ஆப்ரகாம் ஆகியோர் தற்போது லண்டனில் உள்ளனர். தங்களது படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு டிவியில் இருந்தபடி போட்டியை ரசிக்க அவர்கள் தயாராகி விட்டனர்.

சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தனது வீட்டையே குட்டி ஸ்டேடியமாக்கி விட்டார். தனது பாலிவுட் நண்பர்கள் அத்தனை பேரையும் வீட்டுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவி கெளரி சிறப்பு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார். நண்பர்கள் புடை சூழ தனது குடும்பத்தினருடன் போட்டியை ரசித்துப் பார்க்கவுள்ளார் ஷாருக்.

மொத்தத்தில் பாலிவுட்டில் இன்று பெரும்பாலான படப்பிடிப்புகளுக்கு லீவு விட்டு விட்டனர். போட்டி தொடங்கி முடியும் வரை பாலிவுட் பிரபலங்கள் யாரையும் எங்குமே பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மொகாலி: மொகாலியில் இன்று நடக்கும் உலக கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதியில் "பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, பைனலுக்கு முன்னேற இந்திய வீரர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று மொகாலியில் நடக்கும் அரையிறுதி போட்டியில் (பகலிரவு), இந்திய அணி, பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.
பலமான பேட்டிங்:
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக காட்சி அளிக்கிறது. வங்கதேச அணிக்கு எதிராக சதம் கடந்த சேவக் (342 ரன்கள்), அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே இவர், இன்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் மழை பொழியலாம். "சூப்பர் பார்மில் உள்ள "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (379 ரன்கள்), சதத்தில் சதம் கடந்து சாதிக்கலாம். மூன்றாவது வீரராக களமிறங்கும் காம்பிர் (269 ரன்கள்), தனது பொறுப்பான ஆட்டத்தை தொடரலாம்.
யுவராஜ் நம்பிக்கை:
"மிடில்-ஆர்டரில் யுவராஜ் சிங் (341 ரன்கள்) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நான்கு முறை "ஆட்ட நாயகன் விருது வென்றுள்ள இவர், இன்று சொந்த ஊரில் முழுதிறமையை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திடலாம். கிடைத்த வாய்ப்பை சுரேஷ் ரெய்னா சரியாக பயன்படுத்திக் கொண்டதால், இன்று யூசுப் பதான் களமிறங்குவது சந்தேகம். விராத் கோஹ்லி, கேப்டன் தோனி, பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
ஜாகிர் மிரட்டல்:
பவுலிங்கை பொறுத்தவரை வேகத்தில் ஜாகிர் கான் மிரட்டி வருகிறார். இதுவரை 17 விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். வேகத்துக்கு கைகொடுக்கும் மொகாலி மைதானத்தில் முனாப் படேல், ஸ்ரீசாந்த், ஆஷிஸ் நெஹ்ரா உள்ளிட்டோரும் சாதிக்கலாம்.
அஷ்வின் எதிர்பார்ப்பு:
சுழலில் அனுபவ ஹர்பஜன் சிங் (6 விக்கெட்) இருப்பது பலம். இவருடன் இளம் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (4 விக்கெட்), துல்லியமாக பந்துவீசி எதிரணியின் ரன் வேட்டையை தடுக்கிறார். ஆனால் மொகாலி மைதானத்தில் சுழல் எடுபடாது என்பதால், ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் இந்திய அணி களமிறங்கலாம். பகுதிநேர சுழலில் "ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் (11 விக்கெட்) விக்கெட் வேட்டை நடத்தி வருவது கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
"மிடில்-ஆர்டர் பலம்:
லீக் சுற்றில், பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான காலிறுதியில், கம்ரான் அக்மல், முகமது ஹபீஸ் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தது. எனவே இன்றும் இவர்கள் அசத்தலாம். "மிடில்-ஆர்டரில் அனுபவ மிஸ்பா (192 ரன்கள்), யூனிஸ் கான் (172 ரன்கள்) இருப்பது பலம். இதுவரை 211 ரன்கள் எடுத்துள்ள உமர் அக்மல், தனது ரன் வேட்டையை தொடரலாம். அப்ரிதி (65 ரன்கள்), அப்துல் ரசாக் (101 ரன்கள்) உள்ளிட்ட "ஆல்-ரவுண்டர்கள் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிராக இவர்கள் எழுச்சி பெறும் பட்சத்தில் அசத்தல் வெற்றி பெறலாம்.
பலமான பந்துவீச்சு:
இம்முறை பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலம் பந்துவீச்சு. சுழலில் கேப்டன் அப்ரிதி (21 விக்கெட்), விக்கெட் மழை பொழிகிறார். நான்கு முறை, நான்கு அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இந்தியாவுக்கு எதிராக இன்று அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு முகமது ஹபீஸ், அப்துர் ரெஹ்மான், சயீத் அஜ்மல் உள்ளிட்ட இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் கைகொடுக்க வேண்டும். வேகப்பந்துவீச்சில் உமர் குல் (14 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். மொகாலி மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால், சோயப் அக்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். வாகாப் ரியாஸ், அப்துல் ரசாக் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும்.
பலமான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணி, வலுவான பவுலிங் பலத்துடன் உள்ள பாகிஸ்தானுடன் மோத இருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
ஐந்தாவது முறை
உலக கோப்பை அரங்கில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஐந்தாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய நான்கு (1992, 96, 99, 2003) போட்டிகளில், இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* கடந்த 1996ல், 8 விக்கெட்டுக்கு 287 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. கடந்த 2003ல், 7 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி, உலக கோப்பை அரங்கில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* கடந்த 1999ல், 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது. கடந்த 1992ல், 173 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
* உலக கோப்பை அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (4 போட்டி, 228 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சயீத் அன்வர் (3 போட்டி, 185 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.
* இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் வெங்கடேஷ் பிரசாத் (2 போட்டி, 8 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் முஸ்தாக் அகமது (2 போட்டி, 5 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
---
பாக்., ஆதிக்கம்
சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 119 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 69, இந்தியா 46 போட்டிகளில் வெற்றி கண்டன. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை.
---
இம்மைதானத்தில் இதுவரை...
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் அரையிறுதி போட்டி, மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. இங்கு, இவ்விரு அணிகள் இரண்டு (1999, 2007) போட்டிகளில் மோதியுள்ளன. இரண்டிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* கடந்த 1999ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் 196 ரன்களுக்கு சுருண்டது. பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
* கடந்த 2007ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்தது. இதனை 49.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி "சேஸ் செய்தது.
* இந்திய அணி, இங்கு விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றி, நான்கு தோல்வியை பதிவு செய்தது. பாகிஸ்தான் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்வியை பெற்றது.
* இங்கு, அதிக ரன்கள் எடுத்துள்ள இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர் ஆறு போட்டிகளில் பங்கேற்று 281 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தான் சார்பில் இசாஜ் அகமது, 3 போட்டியில் பங்கேற்று 162 ரன்கள் எடுத்துள்ளார்.
* இங்கு, அதிக விக்கெட் வீழ்த்தியுள்ள இந்திய பவுலர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் (5 போட்டி, 9 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில் சக்லைன் முஷ்டாக் (3 போட்டி, 8 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
* இங்கு அதிக ரன்கள் எடுத்துள்ள அணிகள் வரிசையில் தென் ஆப்ரிக்கா முன்னிலை வகிக்கிறது. இம்முறை நெதர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது தென் ஆப்ரிக்கா.
---
எட்டு ஆண்டுகளுக்கு பின்...
உலக கோப்பை அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பின் மோத உள்ளன. முன்னதாக கடந்த 2003ல் செஞ்சுரியனில் நடந்த லீக் போட்டியில் இவ்விரு அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
---
நான்கு ஆண்டுகளுக்கு பின்...
இன்றைய அரையிறுதிப் போட்டியின் மூலம், பாகிஸ்தான் அணி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. கடைசியாக, கடந்த 2007ல் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க சோயப் மாலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
* கடந்த 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் ஒரு சில பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர். பின், அதே ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்திய மண்ணில் போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
---
அரையிறுதிக்கு வந்த பாதை
இந்தியா
லீக் சுற்று:
1. 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்துடன் வெற்றி.
2. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை ஆனது.
3. அயர்லாந்துடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
4. 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது.
5. தென் ஆப்ரிக்காவுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
6. வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காலிறுதி:
7. ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பாகிஸ்தான்
லீக் சுற்று:
1. கென்யாவுக்கு எதிராக 205 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
2. 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வெற்றி.
3. கனடாவை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
4. நியூசிலாந்திடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
5. 7 விக்கெட் வித்தியாத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.
6. ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காலிறுதி:
7. வெஸ்ட் இண்டீசை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
---
சச்சின் "99
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 99 சதம் அடித்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டியில் 51, ஒருநாள் போட்டியில் 48 சதம் அடங்கும். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய அரையிறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சதத்தில் சதம் கடந்து புதிய உலக சாதனை படைக்கலாம்.
* கடந்த 2007ல், பாகிஸ்தானுக்கு எதிராக மொகாலியில் நடந்த போட்டியில் இந்தியாவின் சச்சின், 91 பந்தில் 99 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தற்போது "சூப்பர் பார்மில் உள்ள இவர், அன்று நழுவவிட்ட சதத்தை, இன்று பதிவு செய்யலாம். இதன்மூலம் சதத்தில் சதம் கடந்து புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

பைனலுக்கு முன்னேறுமா இந்தியா! * இன்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை

மொகாலி: மொகாலியில் இன்று நடக்கும் உலக கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதியில் "பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, பைனலுக்கு முன்னேற இந்திய வீரர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று மொகாலியில் நடக்கும் அரையிறுதி போட்டியில் (பகலிரவு), இந்திய அணி, பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.
பலமான பேட்டிங்:
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக காட்சி அளிக்கிறது. வங்கதேச அணிக்கு எதிராக சதம் கடந்த சேவக் (342 ரன்கள்), அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே இவர், இன்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் மழை பொழியலாம். "சூப்பர் பார்மில் உள்ள "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (379 ரன்கள்), சதத்தில் சதம் கடந்து சாதிக்கலாம். மூன்றாவது வீரராக களமிறங்கும் காம்பிர் (269 ரன்கள்), தனது பொறுப்பான ஆட்டத்தை தொடரலாம்.
யுவராஜ் நம்பிக்கை:
"மிடில்-ஆர்டரில் யுவராஜ் சிங் (341 ரன்கள்) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நான்கு முறை "ஆட்ட நாயகன் விருது வென்றுள்ள இவர், இன்று சொந்த ஊரில் முழுதிறமையை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திடலாம். கிடைத்த வாய்ப்பை சுரேஷ் ரெய்னா சரியாக பயன்படுத்திக் கொண்டதால், இன்று யூசுப் பதான் களமிறங்குவது சந்தேகம். விராத் கோஹ்லி, கேப்டன் தோனி, பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
ஜாகிர் மிரட்டல்:
பவுலிங்கை பொறுத்தவரை வேகத்தில் ஜாகிர் கான் மிரட்டி வருகிறார். இதுவரை 17 விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். வேகத்துக்கு கைகொடுக்கும் மொகாலி மைதானத்தில் முனாப் படேல், ஸ்ரீசாந்த், ஆஷிஸ் நெஹ்ரா உள்ளிட்டோரும் சாதிக்கலாம்.
அஷ்வின் எதிர்பார்ப்பு:
சுழலில் அனுபவ ஹர்பஜன் சிங் (6 விக்கெட்) இருப்பது பலம். இவருடன் இளம் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (4 விக்கெட்), துல்லியமாக பந்துவீசி எதிரணியின் ரன் வேட்டையை தடுக்கிறார். ஆனால் மொகாலி மைதானத்தில் சுழல் எடுபடாது என்பதால், ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் இந்திய அணி களமிறங்கலாம். பகுதிநேர சுழலில் "ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் (11 விக்கெட்) விக்கெட் வேட்டை நடத்தி வருவது கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
"மிடில்-ஆர்டர் பலம்:
லீக் சுற்றில், பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான காலிறுதியில், கம்ரான் அக்மல், முகமது ஹபீஸ் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தது. எனவே இன்றும் இவர்கள் அசத்தலாம். "மிடில்-ஆர்டரில் அனுபவ மிஸ்பா (192 ரன்கள்), யூனிஸ் கான் (172 ரன்கள்) இருப்பது பலம். இதுவரை 211 ரன்கள் எடுத்துள்ள உமர் அக்மல், தனது ரன் வேட்டையை தொடரலாம். அப்ரிதி (65 ரன்கள்), அப்துல் ரசாக் (101 ரன்கள்) உள்ளிட்ட "ஆல்-ரவுண்டர்கள் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிராக இவர்கள் எழுச்சி பெறும் பட்சத்தில் அசத்தல் வெற்றி பெறலாம்.
பலமான பந்துவீச்சு:
இம்முறை பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலம் பந்துவீச்சு. சுழலில் கேப்டன் அப்ரிதி (21 விக்கெட்), விக்கெட் மழை பொழிகிறார். நான்கு முறை, நான்கு அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இந்தியாவுக்கு எதிராக இன்று அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு முகமது ஹபீஸ், அப்துர் ரெஹ்மான், சயீத் அஜ்மல் உள்ளிட்ட இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் கைகொடுக்க வேண்டும். வேகப்பந்துவீச்சில் உமர் குல் (14 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். மொகாலி மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால், சோயப் அக்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். வாகாப் ரியாஸ், அப்துல் ரசாக் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும்.
பலமான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணி, வலுவான பவுலிங் பலத்துடன் உள்ள பாகிஸ்தானுடன் மோத இருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
ஐந்தாவது முறை
உலக கோப்பை அரங்கில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஐந்தாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய நான்கு (1992, 96, 99, 2003) போட்டிகளில், இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* கடந்த 1996ல், 8 விக்கெட்டுக்கு 287 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. கடந்த 2003ல், 7 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி, உலக கோப்பை அரங்கில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* கடந்த 1999ல், 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது. கடந்த 1992ல், 173 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
* உலக கோப்பை அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (4 போட்டி, 228 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சயீத் அன்வர் (3 போட்டி, 185 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.
* இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் வெங்கடேஷ் பிரசாத் (2 போட்டி, 8 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் முஸ்தாக் அகமது (2 போட்டி, 5 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
---
பாக்., ஆதிக்கம்
சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 119 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 69, இந்தியா 46 போட்டிகளில் வெற்றி கண்டன. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை.
---
இம்மைதானத்தில் இதுவரை...
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் அரையிறுதி போட்டி, மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. இங்கு, இவ்விரு அணிகள் இரண்டு (1999, 2007) போட்டிகளில் மோதியுள்ளன. இரண்டிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* கடந்த 1999ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் 196 ரன்களுக்கு சுருண்டது. பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
* கடந்த 2007ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்தது. இதனை 49.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி "சேஸ் செய்தது.
* இந்திய அணி, இங்கு விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றி, நான்கு தோல்வியை பதிவு செய்தது. பாகிஸ்தான் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்வியை பெற்றது.
* இங்கு, அதிக ரன்கள் எடுத்துள்ள இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர் ஆறு போட்டிகளில் பங்கேற்று 281 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தான் சார்பில் இசாஜ் அகமது, 3 போட்டியில் பங்கேற்று 162 ரன்கள் எடுத்துள்ளார்.
* இங்கு, அதிக விக்கெட் வீழ்த்தியுள்ள இந்திய பவுலர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் (5 போட்டி, 9 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில் சக்லைன் முஷ்டாக் (3 போட்டி, 8 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
* இங்கு அதிக ரன்கள் எடுத்துள்ள அணிகள் வரிசையில் தென் ஆப்ரிக்கா முன்னிலை வகிக்கிறது. இம்முறை நெதர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது தென் ஆப்ரிக்கா.
---
எட்டு ஆண்டுகளுக்கு பின்...
உலக கோப்பை அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பின் மோத உள்ளன. முன்னதாக கடந்த 2003ல் செஞ்சுரியனில் நடந்த லீக் போட்டியில் இவ்விரு அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
---
நான்கு ஆண்டுகளுக்கு பின்...
இன்றைய அரையிறுதிப் போட்டியின் மூலம், பாகிஸ்தான் அணி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. கடைசியாக, கடந்த 2007ல் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க சோயப் மாலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
* கடந்த 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் ஒரு சில பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர். பின், அதே ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்திய மண்ணில் போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
---
அரையிறுதிக்கு வந்த பாதை
இந்தியா
லீக் சுற்று:
1. 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்துடன் வெற்றி.
2. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை ஆனது.
3. அயர்லாந்துடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
4. 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது.
5. தென் ஆப்ரிக்காவுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
6. வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காலிறுதி:
7. ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பாகிஸ்தான்
லீக் சுற்று:
1. கென்யாவுக்கு எதிராக 205 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
2. 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வெற்றி.
3. கனடாவை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
4. நியூசிலாந்திடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
5. 7 விக்கெட் வித்தியாத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.
6. ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காலிறுதி:
7. வெஸ்ட் இண்டீசை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
---
சச்சின் "99
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 99 சதம் அடித்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டியில் 51, ஒருநாள் போட்டியில் 48 சதம் அடங்கும். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய அரையிறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சதத்தில் சதம் கடந்து புதிய உலக சாதனை படைக்கலாம்.
* கடந்த 2007ல், பாகிஸ்தானுக்கு எதிராக மொகாலியில் நடந்த போட்டியில் இந்தியாவின் சச்சின், 91 பந்தில் 99 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தற்போது "சூப்பர் பார்மில் உள்ள இவர், அன்று நழுவவிட்ட சதத்தை, இன்று பதிவு செய்யலாம். இதன்மூலம் சதத்தில் சதம் கடந்து புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

செங்கல்பட்டில் இன்று விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார். செங்கல்பட்டு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் இன்று செங்கல்பட்டில் பிரசாரம் செய்கிறார். மதியம் செங்கல்பட்டிற்கு வரும் அவர் பழைய பஸ் நிலையம், கூடுவாஞ்சேரி மற்றும் முக்கிய பகுதியில் பிரசார வேனில் நின்றபடி தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

பின்னர் பிரசாரத்தை முடித்து விட்டு விஜயகாந்த் சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர் வழியாக தாம்பரம் செல்கிறார். தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வேட்பாளருக்கும் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து வேட்பாளரை ஆதரித்தும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

செங்கல்பட்டில் இன்று விஜயகாந்த் பிரசாரம்

செங்கல்பட்டில் இன்று விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார். செங்கல்பட்டு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் இன்று செங்கல்பட்டில் பிரசாரம் செய்கிறார். மதியம் செங்கல்பட்டிற்கு வரும் அவர் பழைய பஸ் நிலையம், கூடுவாஞ்சேரி மற்றும் முக்கிய பகுதியில் பிரசார வேனில் நின்றபடி தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

பின்னர் பிரசாரத்தை முடித்து விட்டு விஜயகாந்த் சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர் வழியாக தாம்பரம் செல்கிறார். தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வேட்பாளருக்கும் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து வேட்பாளரை ஆதரித்தும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13-ந் தேதி நடக்கிறது. இதில் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாரதீய ஜனதா கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அனைத்து கட்சியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுவிட்ட நிலையில் தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. அமைச்சர்கள் சுயேச்சைகள் மனுதாக்கல் செய்தனர். திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார். இதற்காக நேற்றே அவர் திருவாரூர் சென்றார்.

மாலையில் அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதியும் கூட்டணி கட்சி தலைவர்களும் பேசினார்கள்.இன்று காலை சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்ட கருணாநிதி காலை 10 மணிக்கு திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் முதல்-அமைச்சரின் துணைவியார் தயாளுஅம்மாள், துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி மு.க. அழகிரி, டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி., அமிர்தம், முரசொலி செல்வம், செல்வி, மாவட்ட செயலாளர் பூண்டி கலை வாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு முதல்-அமைச்சர் கருணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்ய திருவாரூர் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு காலை 11.40 மணிக்கு உதவி கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீராமனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். கருணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற வழி நெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு முதல்-அமைச்சர் கருணாநிதி தஞ்சைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு புறப்பட்டு சென்றார். தஞ்சை திலகர் திடலில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு மாலையில் நடக்கும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்.

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி மனுதாக்கல்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13-ந் தேதி நடக்கிறது. இதில் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாரதீய ஜனதா கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அனைத்து கட்சியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுவிட்ட நிலையில் தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. அமைச்சர்கள் சுயேச்சைகள் மனுதாக்கல் செய்தனர். திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார். இதற்காக நேற்றே அவர் திருவாரூர் சென்றார்.

மாலையில் அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதியும் கூட்டணி கட்சி தலைவர்களும் பேசினார்கள்.இன்று காலை சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்ட கருணாநிதி காலை 10 மணிக்கு திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் முதல்-அமைச்சரின் துணைவியார் தயாளுஅம்மாள், துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி மு.க. அழகிரி, டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி., அமிர்தம், முரசொலி செல்வம், செல்வி, மாவட்ட செயலாளர் பூண்டி கலை வாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு முதல்-அமைச்சர் கருணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்ய திருவாரூர் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு காலை 11.40 மணிக்கு உதவி கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீராமனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். கருணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற வழி நெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு முதல்-அமைச்சர் கருணாநிதி தஞ்சைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு புறப்பட்டு சென்றார். தஞ்சை திலகர் திடலில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு மாலையில் நடக்கும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்.

கோலாலம்பூர்: பூமிக்கு மிக அருகில் இன்று சந்திரன் வருவதால், மிகப் பெரிய அளவில் அது தெரியும். "சூப்பர் மூன்' என்று அழைக்கப்படும் இந்த சந்திரனால் தான் பூமியில் தற்போது பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன என்று பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பூமியை சந்திரன் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த நீள்வட்டப்பாதை இரு இடங்களில் பூமிக்கு நெருக்கமாக வரும். அந்தப் பகுதியில் சந்திரன் வரும் போது வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரியும்.
இன்று பூமியில் இருந்து மிகக் குறைந்த தொலைவான 3,56,577 கி.மீ., தொலைவில் சந்திரன் தோன்றும். அதனால், அது உருவ அளவில் சற்றுப் பெரிதாகவும், அதிக ஒளியுடையதாகவும் இருக்கும். கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின், இது போல சந்திரன் பூமியை நெருங்கி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில், ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டது, சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதால் தான் என்ற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், இது வழக்கமான ஒன்று என்றும், இதனால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"சூப்பர் மூன்' இன்று பார்க்கலாம்

கோலாலம்பூர்: பூமிக்கு மிக அருகில் இன்று சந்திரன் வருவதால், மிகப் பெரிய அளவில் அது தெரியும். "சூப்பர் மூன்' என்று அழைக்கப்படும் இந்த சந்திரனால் தான் பூமியில் தற்போது பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன என்று பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பூமியை சந்திரன் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த நீள்வட்டப்பாதை இரு இடங்களில் பூமிக்கு நெருக்கமாக வரும். அந்தப் பகுதியில் சந்திரன் வரும் போது வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரியும்.
இன்று பூமியில் இருந்து மிகக் குறைந்த தொலைவான 3,56,577 கி.மீ., தொலைவில் சந்திரன் தோன்றும். அதனால், அது உருவ அளவில் சற்றுப் பெரிதாகவும், அதிக ஒளியுடையதாகவும் இருக்கும். கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின், இது போல சந்திரன் பூமியை நெருங்கி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில், ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டது, சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதால் தான் என்ற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், இது வழக்கமான ஒன்று என்றும், இதனால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று பாகிஸ்தான், ஜிம்பாவே அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் பகல் இரவு ஆட்டமாக தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாவே முதலில் பேட் செய்ய களமிறங்கியது 27.2 ஓவரில் 96/5 விக்கெட் இருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

உலக கோப்பை கிரிக்கெட்: மழையால் நிறுத்தம்

இன்று பாகிஸ்தான், ஜிம்பாவே அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் பகல் இரவு ஆட்டமாக தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாவே முதலில் பேட் செய்ய களமிறங்கியது 27.2 ஓவரில் 96/5 விக்கெட் இருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

கோல்கட்டா : "மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்கிரசுடனான தொகுதி பங்கீடு விவகாரம் சுமுகமாக முடிவடையும் என நம்பிக்கையுள்ளது' என, காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஆறு கட்டங்களாக நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரசும், மம்தாவின் திரிணமுல் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
தொகுதி பங்கீடு விவகாரத்தில், இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான முகுல் ராய் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த குழுவினருடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜனார்த்தன் பூஜாரி, மேற்கு வங்க மாநில காங்., தலைவர் மனஸ் புனியா ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.
தொகுதி பங்கீடு விவகாரம் குறித்து, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. இதன்பின், காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநில மேலிட பொறுப்பாளரான ஷகீல் அகமது கூறியதாவது: தொகுதி பங்கீடு விவகாரம் குறித்து, இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. இரு தரப்பிலும் தங்களுக்கு தேவையான தொகுதிகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இன்று நடந்த பேச்சுவார்த்தையின் விவரங்கள், மம்தாவிடமும், பிரணாப் முகர்ஜியிடமும் தெரிவிக்கப்படும். இதன்பின், இவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தி, தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வருவர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சி, திரிணமுல் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். தொகுதி பங்கீடு விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பானது தான். இவ்வாறு ஷகீல் அகமது கூறினார்.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், "துவக்கத்தில் காங்கிரஸ் சார்பில் 100 தொகுதிகள் கேட்கப்பட்டன. ஆனால், அவர்களுக்கு 45 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க, மம்தா முன்வந்தார். இதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளில், தனது கோரிக்கையை 75 தொகுதிகளாக காங்கிரஸ் குறைத்தது. தற்போது 60 தொகுதிகள் வரை காங்கிரசுக்கு ஒதுக்குவதற்கு, மம்தா திட்டமிட்டுள்ளார்' என்றன.
வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு:மேற்கு வங்க ஆளும் கட்சியான இடதுசாரி கூட்டணி, தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், 149 புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய அரசில் அமைச்சர்களாக உள்ள மனாப் முகர்ஜி, பார்த்தா தேய் உள்ளிட்ட எட்டு அமைச்சர்களுக்கு, இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ஜதாவ்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். சில அமைச்சர்கள் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர். சில அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதால், புதுமுகங்களுக்கு அதிகம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக இடதுசாரி கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

60 சீட்களுடன் திருப்திபடுகிறது காங்.,: மம்தா கட்சியுடன் இன்று உடன்பாடு

கோல்கட்டா : "மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்கிரசுடனான தொகுதி பங்கீடு விவகாரம் சுமுகமாக முடிவடையும் என நம்பிக்கையுள்ளது' என, காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஆறு கட்டங்களாக நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரசும், மம்தாவின் திரிணமுல் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
தொகுதி பங்கீடு விவகாரத்தில், இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான முகுல் ராய் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த குழுவினருடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜனார்த்தன் பூஜாரி, மேற்கு வங்க மாநில காங்., தலைவர் மனஸ் புனியா ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.
தொகுதி பங்கீடு விவகாரம் குறித்து, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. இதன்பின், காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநில மேலிட பொறுப்பாளரான ஷகீல் அகமது கூறியதாவது: தொகுதி பங்கீடு விவகாரம் குறித்து, இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. இரு தரப்பிலும் தங்களுக்கு தேவையான தொகுதிகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இன்று நடந்த பேச்சுவார்த்தையின் விவரங்கள், மம்தாவிடமும், பிரணாப் முகர்ஜியிடமும் தெரிவிக்கப்படும். இதன்பின், இவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தி, தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வருவர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சி, திரிணமுல் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். தொகுதி பங்கீடு விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பானது தான். இவ்வாறு ஷகீல் அகமது கூறினார்.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், "துவக்கத்தில் காங்கிரஸ் சார்பில் 100 தொகுதிகள் கேட்கப்பட்டன. ஆனால், அவர்களுக்கு 45 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க, மம்தா முன்வந்தார். இதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளில், தனது கோரிக்கையை 75 தொகுதிகளாக காங்கிரஸ் குறைத்தது. தற்போது 60 தொகுதிகள் வரை காங்கிரசுக்கு ஒதுக்குவதற்கு, மம்தா திட்டமிட்டுள்ளார்' என்றன.
வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு:மேற்கு வங்க ஆளும் கட்சியான இடதுசாரி கூட்டணி, தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், 149 புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய அரசில் அமைச்சர்களாக உள்ள மனாப் முகர்ஜி, பார்த்தா தேய் உள்ளிட்ட எட்டு அமைச்சர்களுக்கு, இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ஜதாவ்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். சில அமைச்சர்கள் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர். சில அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதால், புதுமுகங்களுக்கு அதிகம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக இடதுசாரி கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுடில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து விலகுவதாக தி.மு.க., அறிவித்த பின்னும், காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. மனம் திறக்க இரு தரப்பினரும் தயக்கம் காட்டி வருகின்றனர். அதனால், தி.மு.க., அமைச்சர்கள் ஆறு பேரும் இன்று டில்லி சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதங்களை அளிக்கின்றனர். இதற்கிடையில்,முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மத்தியில் ஆட்சிக்கு முழு ஆதரவு தர முன்வந்திருக்கிறது.
வரும் சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க., - காங்கிரஸ் இடையே நடைபெற்று வந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க., அமைச்சர்கள் விலகுவது என, அந்தக் கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.தி.மு.க.,வின் இந்த முடிவால், காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடையவில்லை. அந்தக் கட்சியின் தலைவர்கள் யாரும் பீதியடைந்தது போன்ற அறிக்கை விடாததோடு, கூட்டணியை புதுப்பிப்பதற்காக தி.மு.க.,வை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவில்லை. இரு தரப்பினரும் மனம் திறந்து பேசாமல் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
"தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில், பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவர்' என, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறினர். காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அரசியல் விவகார ஆலோசகர் அகமது படேலும் நேற்று ஆலோசனை நடத்தினாலும் தகவல் ஏதும் வெளிவரவில்லை. மேலும் மே.வங்கம் மற்றும் கேரளாவில் அதிக இடங்களைப் பெறும் திட்டத்திற்கு தி.மு.க.,வுடன் அணிசேராமல் இருப்பது நல்லது என்ற கருத்து பொதுச் செயலர் ராகுலிடம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்த இருமாநிலங்களிலும் அதிகம் எதிரொலிக்காமல் இருக்க இது உதவும் என்ற கருத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசிய தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு, ""காங்கிரசைச் சேர்ந்த யாரும் எங்கள் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசவில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்த ஆறு மத்திய அமைச்சர்களும் நாளை (இன்று) டில்லி சென்று தங்களின் ராஜினாமா கடிதங்களை, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பிப்பர்,'' என்றார்.
அதே நேரத்தில், மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., அமைச்சர்கள் விலகுவதால் ஏற்படும் ஆதரவு இழப்பை சரிக்கட்ட, முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் ஆதரவைப் பெறும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூன்று நாட்களுக்கு முன், பிரதமர் மன்மோகனுடன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் நீண்ட நேரம் சந்தித்து பேசியுள்ளார்.
தவிரவும், உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியை வீழ்த்த பலமான கூட்டணி வேண்டும் என, காங்கிரஸ் விரும்புகிறது. அதற்காக சமாஜ்வாடி கட்சியுடன் இணக்கமாக இருப்பதை விரும்புகிறது. ஏற்கனவே, மத்திய அரசுக்கு சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தாலும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இரு கட்சிகளும் நெருக்கம் கொள்வது உ.பி.,யில் சமாஜ்வாடி கட்சிக்கு வசதியாகும். அதனால், வெளிப்படையாக சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் ஆதரவு கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக லக்னோவில் நிருபர்களிடம் பேசிய முலாயம் சிங், "மத்திய அரசில் சமாஜ்வாடி கட்சி சேருமா என்பது அனுமானத்தின் அடிப்படையிலான கேள்வி. எங்கள் கட்சி ஏற்கனவே மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதால், அரசுக்கு ஆபத்து என்ற கேள்விக்கே இடமில்லை' என்றார்.

தி.மு.க., மத்திய மந்திரிகள் இன்று ராஜினாமா : இருதரப்பும் மனம் திறக்க பெரும் தயக்கம்

புதுடில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து விலகுவதாக தி.மு.க., அறிவித்த பின்னும், காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. மனம் திறக்க இரு தரப்பினரும் தயக்கம் காட்டி வருகின்றனர். அதனால், தி.மு.க., அமைச்சர்கள் ஆறு பேரும் இன்று டில்லி சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதங்களை அளிக்கின்றனர். இதற்கிடையில்,முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மத்தியில் ஆட்சிக்கு முழு ஆதரவு தர முன்வந்திருக்கிறது.
வரும் சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க., - காங்கிரஸ் இடையே நடைபெற்று வந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க., அமைச்சர்கள் விலகுவது என, அந்தக் கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.தி.மு.க.,வின் இந்த முடிவால், காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடையவில்லை. அந்தக் கட்சியின் தலைவர்கள் யாரும் பீதியடைந்தது போன்ற அறிக்கை விடாததோடு, கூட்டணியை புதுப்பிப்பதற்காக தி.மு.க.,வை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவில்லை. இரு தரப்பினரும் மனம் திறந்து பேசாமல் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
"தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில், பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவர்' என, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறினர். காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அரசியல் விவகார ஆலோசகர் அகமது படேலும் நேற்று ஆலோசனை நடத்தினாலும் தகவல் ஏதும் வெளிவரவில்லை. மேலும் மே.வங்கம் மற்றும் கேரளாவில் அதிக இடங்களைப் பெறும் திட்டத்திற்கு தி.மு.க.,வுடன் அணிசேராமல் இருப்பது நல்லது என்ற கருத்து பொதுச் செயலர் ராகுலிடம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்த இருமாநிலங்களிலும் அதிகம் எதிரொலிக்காமல் இருக்க இது உதவும் என்ற கருத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசிய தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு, ""காங்கிரசைச் சேர்ந்த யாரும் எங்கள் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசவில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்த ஆறு மத்திய அமைச்சர்களும் நாளை (இன்று) டில்லி சென்று தங்களின் ராஜினாமா கடிதங்களை, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பிப்பர்,'' என்றார்.
அதே நேரத்தில், மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., அமைச்சர்கள் விலகுவதால் ஏற்படும் ஆதரவு இழப்பை சரிக்கட்ட, முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் ஆதரவைப் பெறும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூன்று நாட்களுக்கு முன், பிரதமர் மன்மோகனுடன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் நீண்ட நேரம் சந்தித்து பேசியுள்ளார்.
தவிரவும், உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியை வீழ்த்த பலமான கூட்டணி வேண்டும் என, காங்கிரஸ் விரும்புகிறது. அதற்காக சமாஜ்வாடி கட்சியுடன் இணக்கமாக இருப்பதை விரும்புகிறது. ஏற்கனவே, மத்திய அரசுக்கு சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தாலும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இரு கட்சிகளும் நெருக்கம் கொள்வது உ.பி.,யில் சமாஜ்வாடி கட்சிக்கு வசதியாகும். அதனால், வெளிப்படையாக சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் ஆதரவு கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக லக்னோவில் நிருபர்களிடம் பேசிய முலாயம் சிங், "மத்திய அரசில் சமாஜ்வாடி கட்சி சேருமா என்பது அனுமானத்தின் அடிப்படையிலான கேள்வி. எங்கள் கட்சி ஏற்கனவே மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதால், அரசுக்கு ஆபத்து என்ற கேள்விக்கே இடமில்லை' என்றார்.

வாரணாசி:முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரனும், மேனகா மகனுமான வருண் திருமணம், காசி காமகோடீஸ்வர் கோவிலில் இன்று காலை நடக்கிறது.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி. இவரது ஒரே மகன் வருண்.இவருக்கும், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கிராபிக் டிசைனர் யாமினிக்கும் இன்று காலை, வாரணாசியில் உள்ள காசி காமகோடீஸ்வர் கோவிலில் திருமணம் நடக்கிறது.
இந்திரா குடும்பத்தில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் இத்திருமணம் நடைபெறுவதால், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்கா, திருமணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேனகாவின் தாய் கடந்த திங்கள் கிழமை டில்லியில் இறந்து விட்டதால், டில்லியில் நடக்கவிருந்த திருமண வரவேற்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.திருமணத்திற்காக நேற்று மாலையே வருண் குடும்பத்தினர் கோல்கட்டா வந்து சேர்ந்தனர்.
முதல் சடங்காக நேற்று மாலை, மணமக்களுக்கு மஞ்சள் பூசும் விழா நடந்தது. நிகழ்ச்சியை சேகரிக்க, பத்திரிகையாளர்களுக்கு என தனி இடம் கோவிலில் ஒதுக்கப்பட்டுள்ளது.மும்பை மற்றும் கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பூக்களைக் கொண்டு, குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த அலங்கார வல்லுனர்கள் திருமண மண்டபத்தை அலங்கரித்தனர். மண்டபம் மற்றும் அதை சுற்றிய வெளிப்புறப் பகுதி முழுவதும் குண்டுகள் துளைக்காதபடி அமைக்கப்பட்டுள்ளது.காலை விருந்தில் கோல்கட்டாவின் இனிப்பு தயிர், வாரணாசியின் உப்பு கலந்த ஸ்நேக்ஸ், ரசகோலா, ரசமலாய் உட்பட பலகாரங்கள் இடம் பெறுகின்றன.
தோல் பொருட்களுக்கு தடை:* திருமணத்தின் போது மணமகன் வருண், கையால் டிசைன் செய்யப்பட்ட குர்தா, பைஜாமா, காஷ்மீர் டர்பன், ராஜஸ்தான் ஷூ அணிகிறார்.*நாற்பது ஆண்டுகளுக்கு முன், மேனகா திருமணத்திற்கு பரிசாக இந்திரா வழங்கிய பனாரஸ் பட்டுச் சேலையை மணப்பெண் யாமினி அணிகிறார்.*மேனகா விலங்குகள் விரும்பி என்பதால், மண்டபத்தில் எந்த இடத்திலும் தோல் சம்பந்தப்பட்ட பொருள் இடம் பெறாது.

குண்டு துளைக்காத மண்டபத்தில் இன்று வருண் திருமணம்

வாரணாசி:முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரனும், மேனகா மகனுமான வருண் திருமணம், காசி காமகோடீஸ்வர் கோவிலில் இன்று காலை நடக்கிறது.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி. இவரது ஒரே மகன் வருண்.இவருக்கும், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கிராபிக் டிசைனர் யாமினிக்கும் இன்று காலை, வாரணாசியில் உள்ள காசி காமகோடீஸ்வர் கோவிலில் திருமணம் நடக்கிறது.
இந்திரா குடும்பத்தில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் இத்திருமணம் நடைபெறுவதால், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்கா, திருமணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேனகாவின் தாய் கடந்த திங்கள் கிழமை டில்லியில் இறந்து விட்டதால், டில்லியில் நடக்கவிருந்த திருமண வரவேற்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.திருமணத்திற்காக நேற்று மாலையே வருண் குடும்பத்தினர் கோல்கட்டா வந்து சேர்ந்தனர்.
முதல் சடங்காக நேற்று மாலை, மணமக்களுக்கு மஞ்சள் பூசும் விழா நடந்தது. நிகழ்ச்சியை சேகரிக்க, பத்திரிகையாளர்களுக்கு என தனி இடம் கோவிலில் ஒதுக்கப்பட்டுள்ளது.மும்பை மற்றும் கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பூக்களைக் கொண்டு, குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த அலங்கார வல்லுனர்கள் திருமண மண்டபத்தை அலங்கரித்தனர். மண்டபம் மற்றும் அதை சுற்றிய வெளிப்புறப் பகுதி முழுவதும் குண்டுகள் துளைக்காதபடி அமைக்கப்பட்டுள்ளது.காலை விருந்தில் கோல்கட்டாவின் இனிப்பு தயிர், வாரணாசியின் உப்பு கலந்த ஸ்நேக்ஸ், ரசகோலா, ரசமலாய் உட்பட பலகாரங்கள் இடம் பெறுகின்றன.
தோல் பொருட்களுக்கு தடை:* திருமணத்தின் போது மணமகன் வருண், கையால் டிசைன் செய்யப்பட்ட குர்தா, பைஜாமா, காஷ்மீர் டர்பன், ராஜஸ்தான் ஷூ அணிகிறார்.*நாற்பது ஆண்டுகளுக்கு முன், மேனகா திருமணத்திற்கு பரிசாக இந்திரா வழங்கிய பனாரஸ் பட்டுச் சேலையை மணப்பெண் யாமினி அணிகிறார்.*மேனகா விலங்குகள் விரும்பி என்பதால், மண்டபத்தில் எந்த இடத்திலும் தோல் சம்பந்தப்பட்ட பொருள் இடம் பெறாது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள அரியாகோ டெல்சூர் மகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கராஸ்கல் நகரம் உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.

சிறிது நேரம் கழித்து வீடுகளுக்கு திரும்பினர். நில நடுக்கம் காரணமாக சில வீடுகள் இடிந்தன. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே 5.7 ரீக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நில நடுக்கம் காரணமாக அரியாகோ நகரில் உள்ள ஒரு தேவாலயத்தின் சுவர் மற்றும் கடல் நீர் நுழையாமல் இருக்க கட்டப்பட்ட தடுப்பு சுவரின் ஒருபகுதியும் இடிந்தன. நெடுஞ்சாலையில் பாதிப்பு ஏற்பட்டது. மற்றபடி பெரிய அளவிலான சேத விவரம் எதுவும் தெரிவிக்கப்பட வில்லை.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று நிலநடுக்கம்: வீடுகள் இடிந்தன

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள அரியாகோ டெல்சூர் மகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கராஸ்கல் நகரம் உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.

சிறிது நேரம் கழித்து வீடுகளுக்கு திரும்பினர். நில நடுக்கம் காரணமாக சில வீடுகள் இடிந்தன. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே 5.7 ரீக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நில நடுக்கம் காரணமாக அரியாகோ நகரில் உள்ள ஒரு தேவாலயத்தின் சுவர் மற்றும் கடல் நீர் நுழையாமல் இருக்க கட்டப்பட்ட தடுப்பு சுவரின் ஒருபகுதியும் இடிந்தன. நெடுஞ்சாலையில் பாதிப்பு ஏற்பட்டது. மற்றபடி பெரிய அளவிலான சேத விவரம் எதுவும் தெரிவிக்கப்பட வில்லை.

சென்னை:
“பஸ்டே’’ கொண்டாடிய கல்லூரி மாணவர்களால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் “பஸ்டே’’ கொண்டாட போலீஸ் தடை விதித்துள்ளது. இதை மீறி நியூ காலேஜ் மாணவர்கள் நேற்று “பஸ் டே“ கொண்டாடினர்.
அயனாவரத்தில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் 23சி பஸ் அண்ணாசாலை வந்தபோது அதை நிறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறினர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி விட்டனர்.
அதன்பின் மாணவர்கள் பாட்டுப் பாடி ஆட்டம் போட்டபடி ஊர்வலமாக சென்றனர். தகவல் அறிந்து அண்ணாசாலை போலீசார் அங்கு வந்தனர். பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் செல்லுங்கள் என்று கூறினர். டிவிஎஸ் பஸ் நிறுத்தம் வந்ததும் திடீரென மாணவர்கள் பஸ்சின் கூரை மீது ஏற முயன்றனர். இதை போலீசார் தடுத்து அவர்களை எச்சரித்தனர்.
அதன்பின் மாநகர போக்குவரத்து கழகத்தில் இருந்து வேறொரு பஸ் வரவழைக்கப்பட்டது. அதில் பாதிபேர் ஏறினர். ஆனந்த் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே 2 பஸ்சையும் நிறுத்தி ரோட்டில் பட்டாசு வெடித்தனர். குத்தாட்டம் போட்டனர்.
இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மாணவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர்.
ஆத்திரமடைந்த மாணவர்கள் 2வதாக வரவழைக்கப்பட்ட பஸ்சின் இருக்கைகளை கிழித்தனர். டியூப்லைட்களை அடித்து நொறுக்கினர். பிறகு கூச்சல் போட்டபடி ஓட்டம் பிடித்தனர்.

‘பஸ் டே’ என்ற பெயரில் மாணவர்கள் குத்தாட்டத்தால் ஸ்தம்பித்தது அண்ணா சாலை

சென்னை:
“பஸ்டே’’ கொண்டாடிய கல்லூரி மாணவர்களால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் “பஸ்டே’’ கொண்டாட போலீஸ் தடை விதித்துள்ளது. இதை மீறி நியூ காலேஜ் மாணவர்கள் நேற்று “பஸ் டே“ கொண்டாடினர்.
அயனாவரத்தில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் 23சி பஸ் அண்ணாசாலை வந்தபோது அதை நிறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறினர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி விட்டனர்.
அதன்பின் மாணவர்கள் பாட்டுப் பாடி ஆட்டம் போட்டபடி ஊர்வலமாக சென்றனர். தகவல் அறிந்து அண்ணாசாலை போலீசார் அங்கு வந்தனர். பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் செல்லுங்கள் என்று கூறினர். டிவிஎஸ் பஸ் நிறுத்தம் வந்ததும் திடீரென மாணவர்கள் பஸ்சின் கூரை மீது ஏற முயன்றனர். இதை போலீசார் தடுத்து அவர்களை எச்சரித்தனர்.
அதன்பின் மாநகர போக்குவரத்து கழகத்தில் இருந்து வேறொரு பஸ் வரவழைக்கப்பட்டது. அதில் பாதிபேர் ஏறினர். ஆனந்த் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே 2 பஸ்சையும் நிறுத்தி ரோட்டில் பட்டாசு வெடித்தனர். குத்தாட்டம் போட்டனர்.
இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மாணவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர்.
ஆத்திரமடைந்த மாணவர்கள் 2வதாக வரவழைக்கப்பட்ட பஸ்சின் இருக்கைகளை கிழித்தனர். டியூப்லைட்களை அடித்து நொறுக்கினர். பிறகு கூச்சல் போட்டபடி ஓட்டம் பிடித்தனர்.

முக நூல்

Popular Posts