background img

புதிய வரவு

Showing posts with label Tamil Movie. Show all posts
Showing posts with label Tamil Movie. Show all posts
கலகலப்பு படத்துக்காக லைட்டாக குண்டடித்த அஞ்சலி தற்போது அதைக் கஷ்டப்பட்டு இறக்கி வருகிறாராம். இதற்காக ஜிம்முக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கிறார். சீக்கிரம் பழையபடி ஸ்லிம்மாகி விடுவாராம்.கலகலப்பு படத்தில் ஓவியாவுக்கு ஈக்வலாக கவர்ச்சியில் புகுந்து விளையாடி ரசிகர்களை புல்லரிக்க வைத்திருக்கிறார் அஞ்சலி. அவரும், ஓவியாவும் ஒரு பாட்டில் போட்டுள்ள கிளாமர் ஆட்டம்தான் இந்த நிமிடம் வரை அத்தனை பேரின் பேச்சாகவும் இருக்கிறது.
இப்படத்துக்காக கொஞ்சம் போல குண்டடித்திருந்தார் அஞ்சலி. காட்சியில் கிளாமர் வருவதால் அதற்கேற்ற உடல் வாகுக்காக இந்த குண்டடிப்பாம். இப்போது அதைக் குறைக்க கடுமையாக உடற்பயிற்சியில் குதித்துள்ளார் அஞ்சலி.
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார் அஞ்சலி. இதற்காகத்தான் இந்த உடல் குறைப்பு முயற்சியாம். இந்தப் புதிய படத்தில் காலேஜ் கேர்ள் வேடத்தில் வருகிறாராம் அஞ்சலி. எனவேதான் உடலைக் குறைத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளாராம்.
ஜிம்முக்குப் போய் கடுமையாக உடற் பயிற்சி செய்து வரும் அஞ்சலிக்கு எடையில் நல்ல குறைவு ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஹேப்பியாகியிருக்கிறார்.
இந்தப் படம் தவிர டெல்லி பெல்லியின் தமிழ் ரீமேக்கான வருத்தப்படாத வாலிபர் சங்கத்திலும் நடிக்கப் போகிறார் அஞ்சலி.
தொடர்ந்து படங்கள் கை வசம் குவிந்து வருவதால் அஞ்சலிக்கு செம டைட்டாகியிருக்கிறதாம் கால்ஷீட் புக். இதனால் பார்த்துப் பார்த்துத்தான் வாய்ப்ப்புகளை ஏற்கிறாராம்.

சுந்தர்.சி க்காக ஏற்றிய உடம்பை முருதாஸுக்காக குறைக்கும் அஞ்சலி!

கலகலப்பு படத்துக்காக லைட்டாக குண்டடித்த அஞ்சலி தற்போது அதைக் கஷ்டப்பட்டு இறக்கி வருகிறாராம். இதற்காக ஜிம்முக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கிறார். சீக்கிரம் பழையபடி ஸ்லிம்மாகி விடுவாராம்.கலகலப்பு படத்தில் ஓவியாவுக்கு ஈக்வலாக கவர்ச்சியில் புகுந்து விளையாடி ரசிகர்களை புல்லரிக்க வைத்திருக்கிறார் அஞ்சலி. அவரும், ஓவியாவும் ஒரு பாட்டில் போட்டுள்ள கிளாமர் ஆட்டம்தான் இந்த நிமிடம் வரை அத்தனை பேரின் பேச்சாகவும் இருக்கிறது.
இப்படத்துக்காக கொஞ்சம் போல குண்டடித்திருந்தார் அஞ்சலி. காட்சியில் கிளாமர் வருவதால் அதற்கேற்ற உடல் வாகுக்காக இந்த குண்டடிப்பாம். இப்போது அதைக் குறைக்க கடுமையாக உடற்பயிற்சியில் குதித்துள்ளார் அஞ்சலி.
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார் அஞ்சலி. இதற்காகத்தான் இந்த உடல் குறைப்பு முயற்சியாம். இந்தப் புதிய படத்தில் காலேஜ் கேர்ள் வேடத்தில் வருகிறாராம் அஞ்சலி. எனவேதான் உடலைக் குறைத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளாராம்.
ஜிம்முக்குப் போய் கடுமையாக உடற் பயிற்சி செய்து வரும் அஞ்சலிக்கு எடையில் நல்ல குறைவு ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஹேப்பியாகியிருக்கிறார்.
இந்தப் படம் தவிர டெல்லி பெல்லியின் தமிழ் ரீமேக்கான வருத்தப்படாத வாலிபர் சங்கத்திலும் நடிக்கப் போகிறார் அஞ்சலி.
தொடர்ந்து படங்கள் கை வசம் குவிந்து வருவதால் அஞ்சலிக்கு செம டைட்டாகியிருக்கிறதாம் கால்ஷீட் புக். இதனால் பார்த்துப் பார்த்துத்தான் வாய்ப்ப்புகளை ஏற்கிறாராம்.


சிலர் நெகடிவ் பப்ளிசிட்டியை மட்டுமே நம்பி படமெடுப்பார்கள். சில நேரங்களில் அது ஒர்க் அவுட் ஆவதும் உண்டு. சில நேரங்களில் முதலுக்கும் சேர்த்து மோசம் வைப்பதும் உண்டு. ஆரண்ய காண்டம் அப்படியொரு படம்தான் போலிருக்கிறது.

சென்ன 28 தவிர, உருப்படியாக ஒரு படமும் தராத எஸ்பிபி சரண் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஜாகிஷெராஃப் நடித்துள்ளார். குமாரசாமி தியாகராஜா இயக்கியுள்ளார்.

இந்தப் படம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் படம் பார்க்கத் தகுந்ததாக இல்லை என்று தணிக்கைக் குழு கருதியதால் அனுமதி தர மறுத்துவிட்டது.

யதார்த்தம் என்ற பெயரில் வக்கிரமான ஆபாச காட்சிகள், அறுவறுப்பான வசனங்கள் கொண்ட இந்தப் படத்துக்கு அனுமதி தரமுடியாது என தணிக்கைக் குழு பகிரங்கமாகவே கூறிவிட்டது.

மூன்றாண்டுகளாக முடங்கிக் கிடந்த இந்தப் படத்தை தூசு தட்டி மேல்முறையீட்டுக்குக் கொண்டு சென்றனர். அவர்களும் இந்தப் படத்தை மிகவும் மோசம் என்று கூறியதோடு, 52 இடங்களில் கத்தரி போட்டு, அரைப் படத்தை ஏ சான்றிதழுடன் கொடுத்துள்ளனர்.

இவ்வளவு மோசம் என கருதப்படும் ஒரு படத்தை வெளியிட்டே தீர வேண்டிய கட்டாயம் என்ன? என்ற கேள்வியோடுதான் இந்த சான்றிதழையே அவர்கள் அளித்துள்ளனர்.

'இந்தியில் இதைவிட மோசமாக படங்கள் வந்தாலும் அனுமதிக்கிறார்கள். இங்குமட்டும் அனுமதிக்க மறுக்கிறார்களே", என்கிறார் படத்தின் தயாரிப்பாளரான சரண்.

ஆக மோசமான படம் என்று தெரிந்தேதான் இந்த தவறைச் செய்திருக்கிறார்கள்!!

'ஆபாச காட்சி, அறுவறுப்பான வசனங்கள்...': 52 வெட்டுக்களுடன் ஆரண்ய காண்டத்துக்கு அனுமதி!


சிலர் நெகடிவ் பப்ளிசிட்டியை மட்டுமே நம்பி படமெடுப்பார்கள். சில நேரங்களில் அது ஒர்க் அவுட் ஆவதும் உண்டு. சில நேரங்களில் முதலுக்கும் சேர்த்து மோசம் வைப்பதும் உண்டு. ஆரண்ய காண்டம் அப்படியொரு படம்தான் போலிருக்கிறது.

சென்ன 28 தவிர, உருப்படியாக ஒரு படமும் தராத எஸ்பிபி சரண் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஜாகிஷெராஃப் நடித்துள்ளார். குமாரசாமி தியாகராஜா இயக்கியுள்ளார்.

இந்தப் படம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் படம் பார்க்கத் தகுந்ததாக இல்லை என்று தணிக்கைக் குழு கருதியதால் அனுமதி தர மறுத்துவிட்டது.

யதார்த்தம் என்ற பெயரில் வக்கிரமான ஆபாச காட்சிகள், அறுவறுப்பான வசனங்கள் கொண்ட இந்தப் படத்துக்கு அனுமதி தரமுடியாது என தணிக்கைக் குழு பகிரங்கமாகவே கூறிவிட்டது.

மூன்றாண்டுகளாக முடங்கிக் கிடந்த இந்தப் படத்தை தூசு தட்டி மேல்முறையீட்டுக்குக் கொண்டு சென்றனர். அவர்களும் இந்தப் படத்தை மிகவும் மோசம் என்று கூறியதோடு, 52 இடங்களில் கத்தரி போட்டு, அரைப் படத்தை ஏ சான்றிதழுடன் கொடுத்துள்ளனர்.

இவ்வளவு மோசம் என கருதப்படும் ஒரு படத்தை வெளியிட்டே தீர வேண்டிய கட்டாயம் என்ன? என்ற கேள்வியோடுதான் இந்த சான்றிதழையே அவர்கள் அளித்துள்ளனர்.

'இந்தியில் இதைவிட மோசமாக படங்கள் வந்தாலும் அனுமதிக்கிறார்கள். இங்குமட்டும் அனுமதிக்க மறுக்கிறார்களே", என்கிறார் படத்தின் தயாரிப்பாளரான சரண்.

ஆக மோசமான படம் என்று தெரிந்தேதான் இந்த தவறைச் செய்திருக்கிறார்கள்!!

பயணம் சினிமா டிரைலர்


திருவனந்தபுரம் அருகே உள்ள ஏருகுட்டாவில் கலை பண்பாட்டு மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியாமணி கலந்து கொண்டார்.
அங்கு பள்ளி குழந்தை களுடன் இணைந்து நடனமாடினார்.


அதன்பின்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அவர் கூறியதாவது:-


பருத்தி வீரன் படத்தில் முத்தழகு கதாபாத்திரம்தான் எனக்கு தேசியவிருது பெற்று தந்தது. அதற்காக அதுபோன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.


முத்தழகு போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை விட விதவிதமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் அவ்வாறு மாறுபட்ட வேடங்கள் எனக்கு கிடைப்பதில்லை.


கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் வெவ்வேறு விதங்களில் நடித்து வருகிறேன். அந்த படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டால் வெற்றி பெறுகிறது.


தமிழ் சினிமாவில் அதிகமாக நடிக்க விரும்புகிறேன். எனக்கு அளிக்கப்படும் கதாபாத்திரங்களின் தன்மை மாறுபட வேண்டும். எப்போதும் ஒரே மாதிரியாக நடிப்பதை நான் விரும்பவில்லை.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பருத்திவீரனுக்கு பிறகு தமிழில் நல்ல வேடங்கள் கிடைக்கவில்லை: பிரியாமணி வருத்தம்

திருவனந்தபுரம் அருகே உள்ள ஏருகுட்டாவில் கலை பண்பாட்டு மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியாமணி கலந்து கொண்டார்.
அங்கு பள்ளி குழந்தை களுடன் இணைந்து நடனமாடினார்.


அதன்பின்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அவர் கூறியதாவது:-


பருத்தி வீரன் படத்தில் முத்தழகு கதாபாத்திரம்தான் எனக்கு தேசியவிருது பெற்று தந்தது. அதற்காக அதுபோன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.


முத்தழகு போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை விட விதவிதமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் அவ்வாறு மாறுபட்ட வேடங்கள் எனக்கு கிடைப்பதில்லை.


கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் வெவ்வேறு விதங்களில் நடித்து வருகிறேன். அந்த படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டால் வெற்றி பெறுகிறது.


தமிழ் சினிமாவில் அதிகமாக நடிக்க விரும்புகிறேன். எனக்கு அளிக்கப்படும் கதாபாத்திரங்களின் தன்மை மாறுபட வேண்டும். எப்போதும் ஒரே மாதிரியாக நடிப்பதை நான் விரும்பவில்லை.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் - த்ரிஷா ஜோடி இணைந்திருக்கும் மன்மதன் அம்பு படம் அமெரிக்காவில் 65 தியேட்டர்களில் ரீலிஸ் ஆகவிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் வருகிற 23ம்தேதி ரீலிஸ் ஆகவிருக்கிறது. படத்தில் கமல், த்ரிஷா தவிர, மாதவன், சங்கீதா, ஓவியா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தை அமெரிக்காவில் மட்டும் 65 தியேட்டர்களில் ரீலிஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். கமல்ஹாசன் படம் அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் திரையிடப்படுவது இதுவே முதன் முறையாகும்.


தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஜெமினி நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. அமெரிக்காவில் பாரத் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் வெளியிட உள்ளது. பொதுவாக மற்றவர்கள் தயாரிக்கும் படங்களை வாங்கி தனது ‌பேனரில் வெளியிடும், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மன்மதன் அம்பு படத்தை மட்டும் வேறு நிறுவனத்திற்கு விற்றிருப்பது கூடுதல் தகவல்.

அமெரிக்காவை கலக்கப்போகும் மன்மதன் அம்பு

நடிகர் கமல்ஹாசன் - த்ரிஷா ஜோடி இணைந்திருக்கும் மன்மதன் அம்பு படம் அமெரிக்காவில் 65 தியேட்டர்களில் ரீலிஸ் ஆகவிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் வருகிற 23ம்தேதி ரீலிஸ் ஆகவிருக்கிறது. படத்தில் கமல், த்ரிஷா தவிர, மாதவன், சங்கீதா, ஓவியா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தை அமெரிக்காவில் மட்டும் 65 தியேட்டர்களில் ரீலிஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். கமல்ஹாசன் படம் அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் திரையிடப்படுவது இதுவே முதன் முறையாகும்.


தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஜெமினி நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. அமெரிக்காவில் பாரத் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் வெளியிட உள்ளது. பொதுவாக மற்றவர்கள் தயாரிக்கும் படங்களை வாங்கி தனது ‌பேனரில் வெளியிடும், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மன்மதன் அம்பு படத்தை மட்டும் வேறு நிறுவனத்திற்கு விற்றிருப்பது கூடுதல் தகவல்.

முக நூல்

Popular Posts