background img

புதிய வரவு

Showing posts with label USA. Show all posts
Showing posts with label USA. Show all posts

World Trade Center
 அல் கொய்தா பயங்கரவாதிகளால் விமானம் மூலம் மோதி தகர்க்கப்பட்ட அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு உள்ளது.
2001-ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. இதில் 2500 பேர் பலியாகினர்.
சரித்திரத்தின் சோகமாகிப் போன உலக வர்த்தக மையத்தை உள்ளடக்கிய அந்த இரட்டைக் கோபுரத்தை மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 1270 அடி உயரத்தில் ஒரு கட்டிடமும் 1776 அடி உயரத்தில் மற்றொரு கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 1250 அடி உயர கட்டிடம் முடிவடையும் நிலையில் உள்ளது.
1776 அடி உயர கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும் என்று கூறப்படுகிறது. இது 104 மாடிகளைக் கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது.
இந்தப் புதிய கட்டிடம் மூலம் அமெரிக்காவின் உயரமான கட்டிடம் என்ற பெருமையை இரட்டைக் கோபுரம் பெற உள்ளது.
1931-ம் ஆண்டு கட்டப்பட்ட எம்பையர் கட்டிடம்தான் 1545 அடி உயரத்துடன் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது.

விஸ்வரூபமாய் எழும் “இரட்டைக் கோபுரம்”


World Trade Center
 அல் கொய்தா பயங்கரவாதிகளால் விமானம் மூலம் மோதி தகர்க்கப்பட்ட அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு உள்ளது.
2001-ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. இதில் 2500 பேர் பலியாகினர்.
சரித்திரத்தின் சோகமாகிப் போன உலக வர்த்தக மையத்தை உள்ளடக்கிய அந்த இரட்டைக் கோபுரத்தை மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 1270 அடி உயரத்தில் ஒரு கட்டிடமும் 1776 அடி உயரத்தில் மற்றொரு கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 1250 அடி உயர கட்டிடம் முடிவடையும் நிலையில் உள்ளது.
1776 அடி உயர கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும் என்று கூறப்படுகிறது. இது 104 மாடிகளைக் கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது.
இந்தப் புதிய கட்டிடம் மூலம் அமெரிக்காவின் உயரமான கட்டிடம் என்ற பெருமையை இரட்டைக் கோபுரம் பெற உள்ளது.
1931-ம் ஆண்டு கட்டப்பட்ட எம்பையர் கட்டிடம்தான் 1545 அடி உயரத்துடன் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது.

பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் அமெரிக்க அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதை தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள வசிரிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை அதிகரித்து வருகிறது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து தாக்கி வருகிறது.

இந்நிலையில், வடக்கு வசிரிஸ்தானில் மிரான்ஷா அருகேயுள்ள மிர்அலி நகரில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அங்கு அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகளை வீசின.

இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்த அந்த கட்டிடம் இடிந்து முற்றிலும் தரைமட்டமானது. இதில், 10 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இத்தகவலை பாகிஸ்தான் டெலிவிஷன் வெளியிட்டது. அமெரிக்காவின் இத்தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை தாக்குதல்; 10 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் அமெரிக்க அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதை தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள வசிரிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை அதிகரித்து வருகிறது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து தாக்கி வருகிறது.

இந்நிலையில், வடக்கு வசிரிஸ்தானில் மிரான்ஷா அருகேயுள்ள மிர்அலி நகரில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அங்கு அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகளை வீசின.

இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்த அந்த கட்டிடம் இடிந்து முற்றிலும் தரைமட்டமானது. இதில், 10 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இத்தகவலை பாகிஸ்தான் டெலிவிஷன் வெளியிட்டது. அமெரிக்காவின் இத்தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடனின் போட்டோவை அமெரிக்கா வெளியிட்டது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது. சுட்டுக் கொல்லப்பட்டது பின்லேடன் அல்ல. இப்படம் கிராபிக்ஸ் மூலம் செய்யப் பட்டது என அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் பேச்சு கிளம்பியது.

ஆனால் இதை அதிபர் ஒபாமா மறுத்தார். கொல்லப்பட்டது பின்லேடன்தான். டி.என். ஏ. சோதனை மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சந்தேகப்பட வேண்டாம் என்று கூறினார்.

இந்நிலையில் பின்லேடனின் உடல் போட்டோவை அமெரிக்க எம்.பி.க்களை பார்க்க ஏற்பாடு செய்தார். உளவு பிரிவு மற்றும் ஆயுதப்படை சேவை கமிட்டிகளை சேர்ந்த எம்.பி.க்கள் உளவுத்துறை அலுவலகத்துக்கு சென்று அந்த போட்டோக்களை பார்த்தனர்.

பின்லேடன் உடல் போட்டோவை பார்த்த அமெரிக்க எம்.பி.க்கள்

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடனின் போட்டோவை அமெரிக்கா வெளியிட்டது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது. சுட்டுக் கொல்லப்பட்டது பின்லேடன் அல்ல. இப்படம் கிராபிக்ஸ் மூலம் செய்யப் பட்டது என அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் பேச்சு கிளம்பியது.

ஆனால் இதை அதிபர் ஒபாமா மறுத்தார். கொல்லப்பட்டது பின்லேடன்தான். டி.என். ஏ. சோதனை மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சந்தேகப்பட வேண்டாம் என்று கூறினார்.

இந்நிலையில் பின்லேடனின் உடல் போட்டோவை அமெரிக்க எம்.பி.க்களை பார்க்க ஏற்பாடு செய்தார். உளவு பிரிவு மற்றும் ஆயுதப்படை சேவை கமிட்டிகளை சேர்ந்த எம்.பி.க்கள் உளவுத்துறை அலுவலகத்துக்கு சென்று அந்த போட்டோக்களை பார்த்தனர்.

முக நூல்

Popular Posts