background img

புதிய வரவு

Showing posts with label Varun gandhi. Show all posts
Showing posts with label Varun gandhi. Show all posts
வாரணாசி:முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரனும், மேனகா மகனுமான வருண் திருமணம், காசி காமகோடீஸ்வர் கோவிலில் இன்று காலை நடக்கிறது.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி. இவரது ஒரே மகன் வருண்.இவருக்கும், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கிராபிக் டிசைனர் யாமினிக்கும் இன்று காலை, வாரணாசியில் உள்ள காசி காமகோடீஸ்வர் கோவிலில் திருமணம் நடக்கிறது.
இந்திரா குடும்பத்தில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் இத்திருமணம் நடைபெறுவதால், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்கா, திருமணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேனகாவின் தாய் கடந்த திங்கள் கிழமை டில்லியில் இறந்து விட்டதால், டில்லியில் நடக்கவிருந்த திருமண வரவேற்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.திருமணத்திற்காக நேற்று மாலையே வருண் குடும்பத்தினர் கோல்கட்டா வந்து சேர்ந்தனர்.
முதல் சடங்காக நேற்று மாலை, மணமக்களுக்கு மஞ்சள் பூசும் விழா நடந்தது. நிகழ்ச்சியை சேகரிக்க, பத்திரிகையாளர்களுக்கு என தனி இடம் கோவிலில் ஒதுக்கப்பட்டுள்ளது.மும்பை மற்றும் கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பூக்களைக் கொண்டு, குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த அலங்கார வல்லுனர்கள் திருமண மண்டபத்தை அலங்கரித்தனர். மண்டபம் மற்றும் அதை சுற்றிய வெளிப்புறப் பகுதி முழுவதும் குண்டுகள் துளைக்காதபடி அமைக்கப்பட்டுள்ளது.காலை விருந்தில் கோல்கட்டாவின் இனிப்பு தயிர், வாரணாசியின் உப்பு கலந்த ஸ்நேக்ஸ், ரசகோலா, ரசமலாய் உட்பட பலகாரங்கள் இடம் பெறுகின்றன.
தோல் பொருட்களுக்கு தடை:* திருமணத்தின் போது மணமகன் வருண், கையால் டிசைன் செய்யப்பட்ட குர்தா, பைஜாமா, காஷ்மீர் டர்பன், ராஜஸ்தான் ஷூ அணிகிறார்.*நாற்பது ஆண்டுகளுக்கு முன், மேனகா திருமணத்திற்கு பரிசாக இந்திரா வழங்கிய பனாரஸ் பட்டுச் சேலையை மணப்பெண் யாமினி அணிகிறார்.*மேனகா விலங்குகள் விரும்பி என்பதால், மண்டபத்தில் எந்த இடத்திலும் தோல் சம்பந்தப்பட்ட பொருள் இடம் பெறாது.

குண்டு துளைக்காத மண்டபத்தில் இன்று வருண் திருமணம்

வாரணாசி:முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரனும், மேனகா மகனுமான வருண் திருமணம், காசி காமகோடீஸ்வர் கோவிலில் இன்று காலை நடக்கிறது.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி. இவரது ஒரே மகன் வருண்.இவருக்கும், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கிராபிக் டிசைனர் யாமினிக்கும் இன்று காலை, வாரணாசியில் உள்ள காசி காமகோடீஸ்வர் கோவிலில் திருமணம் நடக்கிறது.
இந்திரா குடும்பத்தில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் இத்திருமணம் நடைபெறுவதால், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்கா, திருமணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேனகாவின் தாய் கடந்த திங்கள் கிழமை டில்லியில் இறந்து விட்டதால், டில்லியில் நடக்கவிருந்த திருமண வரவேற்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.திருமணத்திற்காக நேற்று மாலையே வருண் குடும்பத்தினர் கோல்கட்டா வந்து சேர்ந்தனர்.
முதல் சடங்காக நேற்று மாலை, மணமக்களுக்கு மஞ்சள் பூசும் விழா நடந்தது. நிகழ்ச்சியை சேகரிக்க, பத்திரிகையாளர்களுக்கு என தனி இடம் கோவிலில் ஒதுக்கப்பட்டுள்ளது.மும்பை மற்றும் கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பூக்களைக் கொண்டு, குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த அலங்கார வல்லுனர்கள் திருமண மண்டபத்தை அலங்கரித்தனர். மண்டபம் மற்றும் அதை சுற்றிய வெளிப்புறப் பகுதி முழுவதும் குண்டுகள் துளைக்காதபடி அமைக்கப்பட்டுள்ளது.காலை விருந்தில் கோல்கட்டாவின் இனிப்பு தயிர், வாரணாசியின் உப்பு கலந்த ஸ்நேக்ஸ், ரசகோலா, ரசமலாய் உட்பட பலகாரங்கள் இடம் பெறுகின்றன.
தோல் பொருட்களுக்கு தடை:* திருமணத்தின் போது மணமகன் வருண், கையால் டிசைன் செய்யப்பட்ட குர்தா, பைஜாமா, காஷ்மீர் டர்பன், ராஜஸ்தான் ஷூ அணிகிறார்.*நாற்பது ஆண்டுகளுக்கு முன், மேனகா திருமணத்திற்கு பரிசாக இந்திரா வழங்கிய பனாரஸ் பட்டுச் சேலையை மணப்பெண் யாமினி அணிகிறார்.*மேனகா விலங்குகள் விரும்பி என்பதால், மண்டபத்தில் எந்த இடத்திலும் தோல் சம்பந்தப்பட்ட பொருள் இடம் பெறாது.

வாரணாசி:பா.ஜ., எம்.பி., வருண் திருமண ஏற்பாடுகள் வாரணாசியில் தீவிரமாக நடந்து வருவதையொட்டி, திட்டமிட்டபடி வரும் 6ம் தேதி திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.முன்னாள் மத்திய அமைச்சர் மேனகாவின் மகனும், தற்போதைய பா.ஜ., எம்.பி.,யுமான வருணுக்கும், கிராபிக் டிசைனராக பணியாற்றும் யாமினி ராய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும்6ம் தேதி வாரணாசியில் நடக்கிறது. இதில், காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் மற்றும் பா.ஜ., முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த திருமணத்தில் கலந்துக் கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தனது திருமண அழைப்பிதழை, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் நேரில் வருண் அளித்தார். எனவே, சோனியா இந்த திருமணத்தில் கலந்துக் கொள்ளலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த மேனகாவின் தாயார் அஷ்வதேஷ் ஆனந்த் நேற்று முன்தினம் காலமானார். இதனால், வருணின் திருமணம் தள்ளிப் போகலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், இது குறித்து, வருண் தரப்பிலிருந்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. திருமண ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே, வருண் திருமணம் திட்டமிட்ட தேதியில் நடக்கும் என்று தெரிகிறது.நேரு - இந்திரா குடும்பத்தில், பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, திருமண நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவின் திருமணம் கடந்த 1997ம் ஆண்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

வருண் திருமண ஏற்பாடுகள் மும்முரம்

வாரணாசி:பா.ஜ., எம்.பி., வருண் திருமண ஏற்பாடுகள் வாரணாசியில் தீவிரமாக நடந்து வருவதையொட்டி, திட்டமிட்டபடி வரும் 6ம் தேதி திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.முன்னாள் மத்திய அமைச்சர் மேனகாவின் மகனும், தற்போதைய பா.ஜ., எம்.பி.,யுமான வருணுக்கும், கிராபிக் டிசைனராக பணியாற்றும் யாமினி ராய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும்6ம் தேதி வாரணாசியில் நடக்கிறது. இதில், காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் மற்றும் பா.ஜ., முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த திருமணத்தில் கலந்துக் கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தனது திருமண அழைப்பிதழை, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் நேரில் வருண் அளித்தார். எனவே, சோனியா இந்த திருமணத்தில் கலந்துக் கொள்ளலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த மேனகாவின் தாயார் அஷ்வதேஷ் ஆனந்த் நேற்று முன்தினம் காலமானார். இதனால், வருணின் திருமணம் தள்ளிப் போகலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், இது குறித்து, வருண் தரப்பிலிருந்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. திருமண ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே, வருண் திருமணம் திட்டமிட்ட தேதியில் நடக்கும் என்று தெரிகிறது.நேரு - இந்திரா குடும்பத்தில், பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, திருமண நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவின் திருமணம் கடந்த 1997ம் ஆண்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

பரேலி:பா.ஜ.,வின் இளம் எம்.பி.,யும், முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரனுமான வருணுக்கு, உ.பி., வாரணா சியில் மார்ச் 6 ல் திருமணம் நடக்கவுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட விமர்சகர் அருணா வாசுதேவின் மகள் யாமினியை, வருண் மணக்கவுள்ளார். யாமினி, டில்லியில் கிராபிக் டிசைனிங் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். வருணின் தாயாரும், பா.ஜ., லோக்சபா எம்.பி.,யுமான மேனகா நேற்று கூறியதாவது:மார்ச் 6 ல், வாரணாசியில் திருமணம் நடக்கிறது. காங்., தலைவர் சோனியா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கண்டிப்பாக அழைப்பு விடுக்கப்படும். திருமணம் முடிந்ததும் டில்லியிலும், வருணினின் தொகுதியான பிலிப்பிட்டிலும் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்கும், என்றார்.

காசியில் வருண் திருமணம் சோனியாவிற்கு அழைப்பு

பரேலி:பா.ஜ.,வின் இளம் எம்.பி.,யும், முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரனுமான வருணுக்கு, உ.பி., வாரணா சியில் மார்ச் 6 ல் திருமணம் நடக்கவுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட விமர்சகர் அருணா வாசுதேவின் மகள் யாமினியை, வருண் மணக்கவுள்ளார். யாமினி, டில்லியில் கிராபிக் டிசைனிங் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். வருணின் தாயாரும், பா.ஜ., லோக்சபா எம்.பி.,யுமான மேனகா நேற்று கூறியதாவது:மார்ச் 6 ல், வாரணாசியில் திருமணம் நடக்கிறது. காங்., தலைவர் சோனியா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கண்டிப்பாக அழைப்பு விடுக்கப்படும். திருமணம் முடிந்ததும் டில்லியிலும், வருணினின் தொகுதியான பிலிப்பிட்டிலும் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்கும், என்றார்.

முக நூல்

Popular Posts