background img

புதிய வரவு

Showing posts with label Win to 202 Coconut. Show all posts
Showing posts with label Win to 202 Coconut. Show all posts
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக மைசூர் சாமுண்டீசுவரி அம்மனுக்கு 202 தேங்காய்கள் உடைத்து நடிகர் அம்பரீஷ் வேண்டுதலை நிறைவேற்றினார்.

உலக கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை வென்றதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்காக நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.


இதேபோல் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அம்பரீஷ், இந்திய அணியின் வெற்றிக்காக மைசூர் சாமுண்டீசுவரி அம்மனுக்கு 202 தேங்காய்கள் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினார்.


இதற்காக தனது மனைவியும், நடிகையுமான சுமலதாவுடன் அம்பரீஷ் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலுக்கு வந்தார். கோவிலில் சிறப்பு பூஜை செய்து சாமி கும்பிட்டு விட்டு தேங்காய்களை உடைத்தார். அவருடைய மனைவி சுமலதாவும் தேங்காய் உடைத்தார். அவர்களுடன் நடிகரும், பட அதிபருமான ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.


பின்னர் அம்பரீஷ் கூறியதாவது: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 101 தேங்காய்களும், இறுதி போட்டியில் வெற்றி பெற்றால் 101 தேங்காய்களும் உடைப்பதாக சாமுண்டீசுரி அம்மனை வேண்டிக் கொண்டேன்.

எனது வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு இன்று தேங்காய் உடைத்தேன். 10 தேங்காய்கள் மட்டும் உடைக்கும்படியும், மீதி தேங்காய்களை அன்னதானத்துக்கு வழங்கும்படியும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி, 10 தேங்காய்களை உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினேன். மீதி தேங்காய்களை அன்னதானத்துக்காக வழங்குவது மேலும் மகிழ்ச்சியையும், மனநிம்மதியையும் கொடுத்து உள்ளது என்றார்.

உலக கோப்பையை இந்தியா வென்றதற்காக சாமுண்டீசுவரி அம்மனுக்கு 202 தேங்காய் உடைத்த நடிகர்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக மைசூர் சாமுண்டீசுவரி அம்மனுக்கு 202 தேங்காய்கள் உடைத்து நடிகர் அம்பரீஷ் வேண்டுதலை நிறைவேற்றினார்.

உலக கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை வென்றதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்காக நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.


இதேபோல் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அம்பரீஷ், இந்திய அணியின் வெற்றிக்காக மைசூர் சாமுண்டீசுவரி அம்மனுக்கு 202 தேங்காய்கள் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினார்.


இதற்காக தனது மனைவியும், நடிகையுமான சுமலதாவுடன் அம்பரீஷ் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலுக்கு வந்தார். கோவிலில் சிறப்பு பூஜை செய்து சாமி கும்பிட்டு விட்டு தேங்காய்களை உடைத்தார். அவருடைய மனைவி சுமலதாவும் தேங்காய் உடைத்தார். அவர்களுடன் நடிகரும், பட அதிபருமான ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.


பின்னர் அம்பரீஷ் கூறியதாவது: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 101 தேங்காய்களும், இறுதி போட்டியில் வெற்றி பெற்றால் 101 தேங்காய்களும் உடைப்பதாக சாமுண்டீசுரி அம்மனை வேண்டிக் கொண்டேன்.

எனது வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு இன்று தேங்காய் உடைத்தேன். 10 தேங்காய்கள் மட்டும் உடைக்கும்படியும், மீதி தேங்காய்களை அன்னதானத்துக்கு வழங்கும்படியும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி, 10 தேங்காய்களை உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினேன். மீதி தேங்காய்களை அன்னதானத்துக்காக வழங்குவது மேலும் மகிழ்ச்சியையும், மனநிம்மதியையும் கொடுத்து உள்ளது என்றார்.

முக நூல்

Popular Posts