background img

புதிய வரவு

Showing posts with label Cricket. Show all posts
Showing posts with label Cricket. Show all posts
நாட்டை காக்கும் ராணுவ சேவை என்பது மகத்தான சேவை. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எதிர்காலத்தில் ராணுவத்தில் சேவை என்று கிரிக்கெட் கேப்டன் மகேந்திரசிங் டோணி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் சேவையை பாராட்டி அவருக்கு ராணுவத்தில் கவுரவ "லெப்டினன்ட் கர்னல்' பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் சனிக்கிழமையன்று ஜம்மு-காஷ்மிரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு சென்று அங்கு வீரர்களை சந்தித்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய நடனங்கள் ஆடப்பட்டதை டோணி உற்சாகத்துடன் கண்டு ரசித்தார். பின்னர் ராணுவ வீரர்களிடையே அவர் உரையாற்றியதாவது,
 cricket now army the future ms dhoni
இப்போது உங்கள் முன் நிற்பதற்கு காரணம் கிரிக்கெட் தான். கிரிக்கெட் போட்டிகளால் தான் நான் இந்தளவுக்கு பிரபலமாக உள்ளேன்.இதற்கு பாதிப்பு வரும் வகையில் எப்போதும் செயல்பட மாட்டேன். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த பின், ராணுவத்துக்காக நிச்சயம், தீவிர சேவை செய்வேன். இதில் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது.

போர்க்களத்தில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களை பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. தற்போது தான் இவர்களை மிக அருகில் சந்திக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இதுபோன்று எல்லைப் பகுதிக்கு வருவது இதுதான் முதன் முறை. இங்குள்ள அதிகாரிகளின் குடும்பத்தினர் இங்கு வந்துள்ளனர். இப்போது தான் இவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பொதுவாக விளையாட்டுக்கு எவ்வித தடைகளையும் தகர்க்கும் சக்தி உண்டு. இதனால், இந்தியா, பாகிஸ்தான் இடையில் போட்டிகளை மீண்டும் துவங்குவது முக்கியம். இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து, எப்போது விளையாடுவது என்பதை முடிவு செய்ய வேண்டும். இதேபோல நாமும் அங்கு சென்று விளையாட வேண்டும். என்ன நடக்கின்றது என பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.

டோணிக்கு ராணுவ உடை மிடுக்கான தோற்றத்தை அளித்தாலும் அவருடைய நீண்ட தலைமுடி மற்ற ராணுவ வீரர்களிடம் இருந்து அவரை வித்தியாசப்படுத்தி காட்டியது.

இப்போ கிரிக்கெட் எதிர்காலத்தில் ராணுவ சேவை: எம்.எஸ். டோணி

நாட்டை காக்கும் ராணுவ சேவை என்பது மகத்தான சேவை. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எதிர்காலத்தில் ராணுவத்தில் சேவை என்று கிரிக்கெட் கேப்டன் மகேந்திரசிங் டோணி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் சேவையை பாராட்டி அவருக்கு ராணுவத்தில் கவுரவ "லெப்டினன்ட் கர்னல்' பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் சனிக்கிழமையன்று ஜம்மு-காஷ்மிரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு சென்று அங்கு வீரர்களை சந்தித்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய நடனங்கள் ஆடப்பட்டதை டோணி உற்சாகத்துடன் கண்டு ரசித்தார். பின்னர் ராணுவ வீரர்களிடையே அவர் உரையாற்றியதாவது,
 cricket now army the future ms dhoni
இப்போது உங்கள் முன் நிற்பதற்கு காரணம் கிரிக்கெட் தான். கிரிக்கெட் போட்டிகளால் தான் நான் இந்தளவுக்கு பிரபலமாக உள்ளேன்.இதற்கு பாதிப்பு வரும் வகையில் எப்போதும் செயல்பட மாட்டேன். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த பின், ராணுவத்துக்காக நிச்சயம், தீவிர சேவை செய்வேன். இதில் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது.

போர்க்களத்தில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களை பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. தற்போது தான் இவர்களை மிக அருகில் சந்திக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இதுபோன்று எல்லைப் பகுதிக்கு வருவது இதுதான் முதன் முறை. இங்குள்ள அதிகாரிகளின் குடும்பத்தினர் இங்கு வந்துள்ளனர். இப்போது தான் இவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பொதுவாக விளையாட்டுக்கு எவ்வித தடைகளையும் தகர்க்கும் சக்தி உண்டு. இதனால், இந்தியா, பாகிஸ்தான் இடையில் போட்டிகளை மீண்டும் துவங்குவது முக்கியம். இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து, எப்போது விளையாடுவது என்பதை முடிவு செய்ய வேண்டும். இதேபோல நாமும் அங்கு சென்று விளையாட வேண்டும். என்ன நடக்கின்றது என பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.

டோணிக்கு ராணுவ உடை மிடுக்கான தோற்றத்தை அளித்தாலும் அவருடைய நீண்ட தலைமுடி மற்ற ராணுவ வீரர்களிடம் இருந்து அவரை வித்தியாசப்படுத்தி காட்டியது.

4 வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டநாயகன் முரளிவிஜய் (சென்னை),


ஒரு அணியாக நாங்கள் உண்மையிலேயே சிறப்பாக விளையாடினோம். தொடக்க வீரர் மைக் ஹஸ்ஸி எனக்கு வழிகாட்டியாக இருந்தார். ஆட்டநாயகன் விருதை எனது தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.

ஆட்டநாயகன் விருதை எனது தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன்: முரளிவிஜய்

4 வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டநாயகன் முரளிவிஜய் (சென்னை),


ஒரு அணியாக நாங்கள் உண்மையிலேயே சிறப்பாக விளையாடினோம். தொடக்க வீரர் மைக் ஹஸ்ஸி எனக்கு வழிகாட்டியாக இருந்தார். ஆட்டநாயகன் விருதை எனது தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.

ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. “லீக்” முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (அரை இறுதி பிளே ஆப்) தகுதி பெறும். நேற்றுடன் 64 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் 6 “லீக்” போட்டிகள் எஞ்சியுள்ளன.

சென்னை சூப்பர்கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை அணி 13 ஆட்டத்தில் 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளி பெற்றுள்ளது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 13 ஆட்டத்தில் 8 வெற்றி, 4 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளும் மோதும் கடைசி “லீக்” ஆட்டம் வருகிற 22-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது.

இதுவரை 5 அணிகள் வெளியேற்றப்பட்டு உள்ளன. கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்துள்ளன. இதில் கொச்சி அணி அனைத்து “லீக்” ஆட்டங்களிலும் விளையாடி முடிந்து விட்டது. கொச்சி அணி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. ராஜஸ்தான் 11 புள்ளிகளும் (13 ஆட்டம்), டெக்கான் 10 புள்ளிகளும் (13 ஆட்டம்), புனே வாரியர்ஸ் 8 புள்ளிகளும் (12 ஆட்டம்), டெல்லி டேர் டெவில்ஸ் 8 புள்ளிகளும் (13 ஆட்டம்) பெற்றுள்ளன.

தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளில் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு நுழைய வேண்டி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 16 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி இன்னும் 2 ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் (நாளை) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (22-ந்தேதி) ஆகிய அணிகளுடன் விளையாடுகிறது. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். இரண்டு ஆட்டத்திலும் வென்றால் முதல் இடத்தையோ அல்லது இரண்டாவது இடத்தையோ பிடிக்கலாம்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 14 புள்ளியுடன் உள்ளது. இன்னும் 2 ஆட்டம் அந்த அணிக்கு உள்ளது. புனே வாரியர்ஸ் அணியுடனும் (இன்று) மும்பை இந்தியன்ஸ் அணியுடனும் விளையாட வேண்டும். இந்த 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும். பஞ்சாப் அணி 14 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி கடைசி “லீக்” ஆட்டத்தில் டெக்கானுடன் 21-ந்தேதி மோதுகிறது. இதில் கண்டிப்பாக வென்றால் தான் தொடர்ந்து வாய்ப்பில் இருக்க முடியும்.

மும்பை அணி எஞ்சிய 2 ஆட்டத்தில் தோற்று, கொல்கத்தா அணி ஒரு ஆட்டத்தில் வென்று, மற்றொரு போட்டியில் தோற்று, பஞ்சாப் அணி தனது ஆட்டத்தில் வென்றால் இந்த 3 அணிகளும் 16 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் இரண்டு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

அடுத்த சுற்றில் நுழைய மும்பை, கொல்கத்தா, பஞ்சாப் கடும் போட்டி; 5 அணிகள் வெளியேற்றம்

ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. “லீக்” முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (அரை இறுதி பிளே ஆப்) தகுதி பெறும். நேற்றுடன் 64 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் 6 “லீக்” போட்டிகள் எஞ்சியுள்ளன.

சென்னை சூப்பர்கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை அணி 13 ஆட்டத்தில் 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளி பெற்றுள்ளது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 13 ஆட்டத்தில் 8 வெற்றி, 4 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளும் மோதும் கடைசி “லீக்” ஆட்டம் வருகிற 22-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது.

இதுவரை 5 அணிகள் வெளியேற்றப்பட்டு உள்ளன. கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்துள்ளன. இதில் கொச்சி அணி அனைத்து “லீக்” ஆட்டங்களிலும் விளையாடி முடிந்து விட்டது. கொச்சி அணி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. ராஜஸ்தான் 11 புள்ளிகளும் (13 ஆட்டம்), டெக்கான் 10 புள்ளிகளும் (13 ஆட்டம்), புனே வாரியர்ஸ் 8 புள்ளிகளும் (12 ஆட்டம்), டெல்லி டேர் டெவில்ஸ் 8 புள்ளிகளும் (13 ஆட்டம்) பெற்றுள்ளன.

தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளில் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு நுழைய வேண்டி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 16 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி இன்னும் 2 ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் (நாளை) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (22-ந்தேதி) ஆகிய அணிகளுடன் விளையாடுகிறது. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். இரண்டு ஆட்டத்திலும் வென்றால் முதல் இடத்தையோ அல்லது இரண்டாவது இடத்தையோ பிடிக்கலாம்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 14 புள்ளியுடன் உள்ளது. இன்னும் 2 ஆட்டம் அந்த அணிக்கு உள்ளது. புனே வாரியர்ஸ் அணியுடனும் (இன்று) மும்பை இந்தியன்ஸ் அணியுடனும் விளையாட வேண்டும். இந்த 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும். பஞ்சாப் அணி 14 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி கடைசி “லீக்” ஆட்டத்தில் டெக்கானுடன் 21-ந்தேதி மோதுகிறது. இதில் கண்டிப்பாக வென்றால் தான் தொடர்ந்து வாய்ப்பில் இருக்க முடியும்.

மும்பை அணி எஞ்சிய 2 ஆட்டத்தில் தோற்று, கொல்கத்தா அணி ஒரு ஆட்டத்தில் வென்று, மற்றொரு போட்டியில் தோற்று, பஞ்சாப் அணி தனது ஆட்டத்தில் வென்றால் இந்த 3 அணிகளும் 16 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் இரண்டு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில், கிறிஸ் கெய்ல் மீண்டும் சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்த, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளாவை வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் சோபிக்கத்தவறிய ஜெயவர்தனா அணி, பரிதாபமாக தோல்வி அடைந்தது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கொச்சி அணி கேப்டன் மகிளா ஜெயவர்தனா, பேட்டிங் தேர்வு செய்தார்.
ஸ்ரீசாந்த் நீக்கம்:
இப்போட்டிக்கான இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. கொச்சி அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டு, சுழற்பந்துவீச்சாளர் ரமேஷ் பவார் வாய்ப்பு பெற்றார். பெங்களூரு அணியில் ஆசாத் பதான் நீக்கப்பட்டு, புஜாரா தேர்வு செய்யப்பட்டார்.
கிளிங்கர் அபாரம்:
முதலில் பேட்டிங் செய்த கொச்சி அணிக்கு மைக்கேல் கிளிங்கர், பிரண்டன் மெக்கலம் ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. கிறிஸ் கெய்ல் ஓவரில் இரண்டு "பவுண்டரி' <உட்பட 12 ரன்கள் எடுத்த மெக்கலம் (22), வெட்டோரி சுழலில் சிக்கினார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளிங்கர் (24), கிறிஸ் கெய்ல் பந்தில் போல்டானார்.
"மிடில்-ஆர்டர்' ஏமாற்றம்:
அடுத்து வந்த கேப்டன் மகிளா ஜெயவர்தனா (3) சோபிக்கவில்லை. மறுமுனையில் அதிரடியாக ரன் சேர்த்த பார்த்திவ் படேல் (19), "ரன்-அவுட்' ஆனார். "மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய பிராட் ஹாட்ஜ் (5), கோமஸ் (7), வினய் குமார் (3) உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ரவிந்திர ஜடேஜா (23) ஆறுதல் அளித்தார். கொச்சி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் அரவிந்த், வெட்டோரி தலா 2, ஜாகிர், கெய்ல், மிதுன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
கெய்ல் புயல்:
சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு, கிறிஸ் கெய்ல் புயல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஓவரிலேயே தனது "சிக்சர்' கணக்கை துவக்கிய கெய்ல், பரமேஸ்வரன் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில், நான்கு "சிக்சர்', மூன்று "பவுண்டரி' உட்பட 37 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ரன் குவித்த கெய்ல், 16 பந்தில் 44 ரன்கள் (5 சிக்சர், 3 பவுண்டரி) எடுத்து, வினய் குமார் வேகத்தில் போல்டானார்.
தில்ஷன் அபாரம்:
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்ஷன், ரமேஷ் பவார் வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரில், ஒரு "சிக்சர்', மூன்று "பவுண்டரி' உட்பட 20 ரன்கள் எடுத்தார். விராத் கோஹ்லியுடன் இணைந்து தொடர்ந்து அசத்திய இவர், தனது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு அளித்த விராத் கோஹ்லி, பரமேஸ்வரன் பந்தில் "சூப்பர் பவுண்டரி' அடித்து வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 13.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தில்ஷன் (52 ரன்கள், 31 பந்து), கோஹ்லி (27) அவுட்டாகாமல் இருந்தனர். கொச்சி அணி சார்பில் வினய் குமார் ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார்.
ஸ்கோர்போர்டு
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா
கிளிங்கர் (ப)கெய்ல் 24(25)
பிரண்டன் (கே)சப்-அருண் (ப)வெட்டோரி 22(16)
பார்த்திவ் -ரன் அவுட்-(கைப்/டிவிலியர்ஸ்) 19(14)
ஜெயவர்தனா (கே)டிவிலியர்ஸ் (ப)வெட்டோரி 3(7)
ஹாட்ஜ் (கே)ஜாகிர் (ப)அரவிந்த் 5(12)
ஜடேஜா (கே)கைப் (ப)மிதுன் 23(22)
கோமஸ் (கே)கோஹ்லி (ப)அரவிந்த் 7(15)
வினய் (கே)வெட்டோரி (ப)ஜாகிர் 3(3)
பவார் -அவுட் இல்லை- 8(6)
ஆர்.பி. சிங் -ரன் அவுட்-(டிவிலியர்ஸ்) 0(0)
பரமேஸ்வரன் -அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 10
மொத்தம் (20 ஓவரில், 9 விக்.,) 125
விக்கெட் வீழ்ச்சி: 1-43(பிரண்டன்), 2-64(கிளிங்கர்), 3-72(ஜெயவர்தனா), 4-73(பார்த்திவ்), 5-89(ஹாட்ஜ்), 6-106(கோமஸ்), 7-115(வினய்), 8-122(ஜடேஜா), 9-122(ஆர்.பி. சிங்).
பந்துவீச்சு: ஜாகிர் 4-0-26-1, அரவிந்த் 4-0-20-2, கெய்ல் 4-0-26-1, வெட்டோரி 4-0-24-2, மிதுன் 3-0-21-1, தில்ஷன் 1-0-8-0.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
கெய்ல் (ப)வினய் 44(16)
தில்ஷன்- -அவுட் இல்லை- 52(31)
கோஹ்லி -அவுட் இல்லை- 27(33)
உதிரிகள் 5
மொத்தம் (13.1 ஓவரில், 1 விக்.,) 128
விக்கெட் வீழ்ச்சி: 1-67(கெய்ல்)
பந்துவீச்சு: ஆர்.பி. சிங் 2-0-13-0, பவார் 2-0-27-0, பரமேஸ்வரன் 2.1-0-44-0, வினய் 3-0-18-1, ஜடேஜா 4-0-24-0.

பெங்களூரு அணி அசத்தல் வெற்றி! * மீண்டும் கெய்ல் சூறாவளி * கொச்சி அணி பரிதாபம்

பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில், கிறிஸ் கெய்ல் மீண்டும் சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்த, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளாவை வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் சோபிக்கத்தவறிய ஜெயவர்தனா அணி, பரிதாபமாக தோல்வி அடைந்தது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கொச்சி அணி கேப்டன் மகிளா ஜெயவர்தனா, பேட்டிங் தேர்வு செய்தார்.
ஸ்ரீசாந்த் நீக்கம்:
இப்போட்டிக்கான இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. கொச்சி அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டு, சுழற்பந்துவீச்சாளர் ரமேஷ் பவார் வாய்ப்பு பெற்றார். பெங்களூரு அணியில் ஆசாத் பதான் நீக்கப்பட்டு, புஜாரா தேர்வு செய்யப்பட்டார்.
கிளிங்கர் அபாரம்:
முதலில் பேட்டிங் செய்த கொச்சி அணிக்கு மைக்கேல் கிளிங்கர், பிரண்டன் மெக்கலம் ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. கிறிஸ் கெய்ல் ஓவரில் இரண்டு "பவுண்டரி' <உட்பட 12 ரன்கள் எடுத்த மெக்கலம் (22), வெட்டோரி சுழலில் சிக்கினார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளிங்கர் (24), கிறிஸ் கெய்ல் பந்தில் போல்டானார்.
"மிடில்-ஆர்டர்' ஏமாற்றம்:
அடுத்து வந்த கேப்டன் மகிளா ஜெயவர்தனா (3) சோபிக்கவில்லை. மறுமுனையில் அதிரடியாக ரன் சேர்த்த பார்த்திவ் படேல் (19), "ரன்-அவுட்' ஆனார். "மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய பிராட் ஹாட்ஜ் (5), கோமஸ் (7), வினய் குமார் (3) உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ரவிந்திர ஜடேஜா (23) ஆறுதல் அளித்தார். கொச்சி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் அரவிந்த், வெட்டோரி தலா 2, ஜாகிர், கெய்ல், மிதுன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
கெய்ல் புயல்:
சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு, கிறிஸ் கெய்ல் புயல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஓவரிலேயே தனது "சிக்சர்' கணக்கை துவக்கிய கெய்ல், பரமேஸ்வரன் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில், நான்கு "சிக்சர்', மூன்று "பவுண்டரி' உட்பட 37 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ரன் குவித்த கெய்ல், 16 பந்தில் 44 ரன்கள் (5 சிக்சர், 3 பவுண்டரி) எடுத்து, வினய் குமார் வேகத்தில் போல்டானார்.
தில்ஷன் அபாரம்:
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்ஷன், ரமேஷ் பவார் வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரில், ஒரு "சிக்சர்', மூன்று "பவுண்டரி' உட்பட 20 ரன்கள் எடுத்தார். விராத் கோஹ்லியுடன் இணைந்து தொடர்ந்து அசத்திய இவர், தனது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு அளித்த விராத் கோஹ்லி, பரமேஸ்வரன் பந்தில் "சூப்பர் பவுண்டரி' அடித்து வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 13.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தில்ஷன் (52 ரன்கள், 31 பந்து), கோஹ்லி (27) அவுட்டாகாமல் இருந்தனர். கொச்சி அணி சார்பில் வினய் குமார் ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார்.
ஸ்கோர்போர்டு
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா
கிளிங்கர் (ப)கெய்ல் 24(25)
பிரண்டன் (கே)சப்-அருண் (ப)வெட்டோரி 22(16)
பார்த்திவ் -ரன் அவுட்-(கைப்/டிவிலியர்ஸ்) 19(14)
ஜெயவர்தனா (கே)டிவிலியர்ஸ் (ப)வெட்டோரி 3(7)
ஹாட்ஜ் (கே)ஜாகிர் (ப)அரவிந்த் 5(12)
ஜடேஜா (கே)கைப் (ப)மிதுன் 23(22)
கோமஸ் (கே)கோஹ்லி (ப)அரவிந்த் 7(15)
வினய் (கே)வெட்டோரி (ப)ஜாகிர் 3(3)
பவார் -அவுட் இல்லை- 8(6)
ஆர்.பி. சிங் -ரன் அவுட்-(டிவிலியர்ஸ்) 0(0)
பரமேஸ்வரன் -அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 10
மொத்தம் (20 ஓவரில், 9 விக்.,) 125
விக்கெட் வீழ்ச்சி: 1-43(பிரண்டன்), 2-64(கிளிங்கர்), 3-72(ஜெயவர்தனா), 4-73(பார்த்திவ்), 5-89(ஹாட்ஜ்), 6-106(கோமஸ்), 7-115(வினய்), 8-122(ஜடேஜா), 9-122(ஆர்.பி. சிங்).
பந்துவீச்சு: ஜாகிர் 4-0-26-1, அரவிந்த் 4-0-20-2, கெய்ல் 4-0-26-1, வெட்டோரி 4-0-24-2, மிதுன் 3-0-21-1, தில்ஷன் 1-0-8-0.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
கெய்ல் (ப)வினய் 44(16)
தில்ஷன்- -அவுட் இல்லை- 52(31)
கோஹ்லி -அவுட் இல்லை- 27(33)
உதிரிகள் 5
மொத்தம் (13.1 ஓவரில், 1 விக்.,) 128
விக்கெட் வீழ்ச்சி: 1-67(கெய்ல்)
பந்துவீச்சு: ஆர்.பி. சிங் 2-0-13-0, பவார் 2-0-27-0, பரமேஸ்வரன் 2.1-0-44-0, வினய் 3-0-18-1, ஜடேஜா 4-0-24-0.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி விளையாட்டு மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். இது தவிர விளம்பர படங்களில் நடிப்பதால் மேலும் கோடிக்கணக்கில் பணம் குவிகிறது. மதுபான விளம்பரங்களிலும் டோனி நடித்துள்ளார். அவர் மதுபான விளம்பரங்களில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

மதுபான விளம்பரத்தில் இருந்து டோனி விலக வலியுறுத்தி பசுமை தாயகத்தினர் இன்று அடையார் பார்க்ஷெரட்டன் ஓட்டல் முன்பு திரண்டனர். அங்கு தங்கி இருந்த டோனிக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பசுமை தாயக மாநில செயலாளர் இரா.அருள் உள்பட 40 பேரை கைது செய்தனர். அவர்களை தியாகராயநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சென்னையில் டோனிக்கு எதிராக பசுமை தாயகத்தினர் ஆர்ப்பாட்டம்; 40 பேர் கைது

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி விளையாட்டு மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். இது தவிர விளம்பர படங்களில் நடிப்பதால் மேலும் கோடிக்கணக்கில் பணம் குவிகிறது. மதுபான விளம்பரங்களிலும் டோனி நடித்துள்ளார். அவர் மதுபான விளம்பரங்களில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

மதுபான விளம்பரத்தில் இருந்து டோனி விலக வலியுறுத்தி பசுமை தாயகத்தினர் இன்று அடையார் பார்க்ஷெரட்டன் ஓட்டல் முன்பு திரண்டனர். அங்கு தங்கி இருந்த டோனிக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பசுமை தாயக மாநில செயலாளர் இரா.அருள் உள்பட 40 பேரை கைது செய்தனர். அவர்களை தியாகராயநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

புதுடில்லி: "உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் ஜாகிர் கானுக்கு, அர்ஜுனா விருது வழங்கவேண்டும்,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பரிந்துரை செய்துள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான். கடந்த சில ஆண்டுகளாக பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், சமீபத்திய உலக கோப்பை தொடரில், 21 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
இவருக்கு விளையாட்டு பிரிவில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது வழங்க, பி.சி.சி.சி., மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு முன் இவ்விருதை முன்னாள் வீரர்கள் சலீம் துரானி, மன்சூர் அலி கான் பட்டோடி, விஜய் மஞ்ச்ரேக்கர், தற்போதைய சேவக், காம்பிர், ஹர்பஜன் சிங், சச்சின் போன்ற வீரர்கள் பெற்றுள்ளனர்.

ஜாகிர் கானுக்கு விருது

புதுடில்லி: "உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் ஜாகிர் கானுக்கு, அர்ஜுனா விருது வழங்கவேண்டும்,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பரிந்துரை செய்துள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான். கடந்த சில ஆண்டுகளாக பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், சமீபத்திய உலக கோப்பை தொடரில், 21 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
இவருக்கு விளையாட்டு பிரிவில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது வழங்க, பி.சி.சி.சி., மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு முன் இவ்விருதை முன்னாள் வீரர்கள் சலீம் துரானி, மன்சூர் அலி கான் பட்டோடி, விஜய் மஞ்ச்ரேக்கர், தற்போதைய சேவக், காம்பிர், ஹர்பஜன் சிங், சச்சின் போன்ற வீரர்கள் பெற்றுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்த அடுத்த வாரத்திலேயே, அதாவது ஜூன் 4ம் தேதியே இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் ஆட இருக்கிறது. எனவே தொடர்ந்து விளையாடி வரும் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணி ஒரு 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் ஆட்டம், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் போட்டியில் மட்டும் சச்சின், தோனி, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், கம்பீர் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று தெரிகிறது. வீரேந்திர சேவாக் இந்த தொடர் முழுவதும் விளையாட மாட்டார்.


தங்களுக்கு ஓய்வு தேவை என்பது குறித்து இந்த மூத்த வீரர்கள் ஏற்கெனவே கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் போதிய ஓய்வு எடுத்தால்தான் இந்த ஆண்டில் அடுத்து நடைபெறவுள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து வீரர்களுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

மூத்த வீரர்களுக்கு ஓய்வு? பிசிசிஐ முடிவு!

ஐபிஎல் போட்டிகள் முடிந்த அடுத்த வாரத்திலேயே, அதாவது ஜூன் 4ம் தேதியே இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் ஆட இருக்கிறது. எனவே தொடர்ந்து விளையாடி வரும் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணி ஒரு 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் ஆட்டம், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் போட்டியில் மட்டும் சச்சின், தோனி, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், கம்பீர் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று தெரிகிறது. வீரேந்திர சேவாக் இந்த தொடர் முழுவதும் விளையாட மாட்டார்.


தங்களுக்கு ஓய்வு தேவை என்பது குறித்து இந்த மூத்த வீரர்கள் ஏற்கெனவே கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் போதிய ஓய்வு எடுத்தால்தான் இந்த ஆண்டில் அடுத்து நடைபெறவுள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து வீரர்களுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக மைசூர் சாமுண்டீசுவரி அம்மனுக்கு 202 தேங்காய்கள் உடைத்து நடிகர் அம்பரீஷ் வேண்டுதலை நிறைவேற்றினார்.

உலக கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை வென்றதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்காக நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.


இதேபோல் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அம்பரீஷ், இந்திய அணியின் வெற்றிக்காக மைசூர் சாமுண்டீசுவரி அம்மனுக்கு 202 தேங்காய்கள் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினார்.


இதற்காக தனது மனைவியும், நடிகையுமான சுமலதாவுடன் அம்பரீஷ் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலுக்கு வந்தார். கோவிலில் சிறப்பு பூஜை செய்து சாமி கும்பிட்டு விட்டு தேங்காய்களை உடைத்தார். அவருடைய மனைவி சுமலதாவும் தேங்காய் உடைத்தார். அவர்களுடன் நடிகரும், பட அதிபருமான ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.


பின்னர் அம்பரீஷ் கூறியதாவது: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 101 தேங்காய்களும், இறுதி போட்டியில் வெற்றி பெற்றால் 101 தேங்காய்களும் உடைப்பதாக சாமுண்டீசுரி அம்மனை வேண்டிக் கொண்டேன்.

எனது வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு இன்று தேங்காய் உடைத்தேன். 10 தேங்காய்கள் மட்டும் உடைக்கும்படியும், மீதி தேங்காய்களை அன்னதானத்துக்கு வழங்கும்படியும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி, 10 தேங்காய்களை உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினேன். மீதி தேங்காய்களை அன்னதானத்துக்காக வழங்குவது மேலும் மகிழ்ச்சியையும், மனநிம்மதியையும் கொடுத்து உள்ளது என்றார்.

உலக கோப்பையை இந்தியா வென்றதற்காக சாமுண்டீசுவரி அம்மனுக்கு 202 தேங்காய் உடைத்த நடிகர்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக மைசூர் சாமுண்டீசுவரி அம்மனுக்கு 202 தேங்காய்கள் உடைத்து நடிகர் அம்பரீஷ் வேண்டுதலை நிறைவேற்றினார்.

உலக கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை வென்றதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்காக நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.


இதேபோல் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அம்பரீஷ், இந்திய அணியின் வெற்றிக்காக மைசூர் சாமுண்டீசுவரி அம்மனுக்கு 202 தேங்காய்கள் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினார்.


இதற்காக தனது மனைவியும், நடிகையுமான சுமலதாவுடன் அம்பரீஷ் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலுக்கு வந்தார். கோவிலில் சிறப்பு பூஜை செய்து சாமி கும்பிட்டு விட்டு தேங்காய்களை உடைத்தார். அவருடைய மனைவி சுமலதாவும் தேங்காய் உடைத்தார். அவர்களுடன் நடிகரும், பட அதிபருமான ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.


பின்னர் அம்பரீஷ் கூறியதாவது: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 101 தேங்காய்களும், இறுதி போட்டியில் வெற்றி பெற்றால் 101 தேங்காய்களும் உடைப்பதாக சாமுண்டீசுரி அம்மனை வேண்டிக் கொண்டேன்.

எனது வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு இன்று தேங்காய் உடைத்தேன். 10 தேங்காய்கள் மட்டும் உடைக்கும்படியும், மீதி தேங்காய்களை அன்னதானத்துக்கு வழங்கும்படியும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி, 10 தேங்காய்களை உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினேன். மீதி தேங்காய்களை அன்னதானத்துக்காக வழங்குவது மேலும் மகிழ்ச்சியையும், மனநிம்மதியையும் கொடுத்து உள்ளது என்றார்.

சென்னை: ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டியிலேயே "டென்ஷன்' எகிறியது. கடைசி பந்து வரை துணிச்சலாக போராடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. காம்பிரின் கோல்கட்டா அணி சுலப வாய்ப்பை கோட்டை விட்டது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நேற்று துவங்கியது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் "நடப்பு சாம்பியனான' சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. சமீபத்தில் உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள், இம்முறை நேருக்கு நேர் மோதிக் கொண்டதை காண முடிந்தது. "டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, எதிர்பார்த்தது போல் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
விஜய் ஏமாற்றம்:
முதல் ஓவரிலேயே "ஸ்பின்னரை' பயன்படுத்தி சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார் கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. இக்பால் அப்துல்லா "சுழலில்' உள்ளூர் வீரரான முரளி விஜய்(4) அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதற்கு பின் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் மகனான அனிருதா ஸ்ரீகாந்த் மற்றும் சுரேஷ் ரெய்னா இணைந்து பொறுப்பாக ஆடினர்.
பீல்டிங் சொதப்பல்:
கோல்கட்டா அணியின் "பீல்டிங்' படுமோசமாக இருந்தது. யூசுப் பதான் உள்ளிட்டோர் சுலப "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இதனை பயன்படுத்திய அனிருதா, காலிஸ் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசி, உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். தொடர்ந்து லட்டா பந்தையும் சிக்சருக்கு அனுப்பி அசத்தினார். அடக்கி வாசித்த ரெய்னா (33), யூசுப் பதான் வலையில் சிக்கினார்.
அனிருதா அரைசதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனி கைகொடுக்க, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார் அனிருதா. லட்டா ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இந்த நேரத்தில் காலிஸ் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் முதலில் தோனி(29) வெளியேறினார். அரைசதம் கடந்த அனிருதாவும் 64 ரன்களுக்கு(6 பவுண்டரி, 2 சிக்சர்) காலிஸ் பந்தில் போல்டானார்.
காலிஸ் வீசிய கடைசி ஓவரில் ஸ்டைரிஸ் ஒரு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஆல்பி மார்கல் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து, ஸ்கோரை உயர்த்தினார். சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. ஆல்பி மார்கல்(15), ஸ்டைரிஸ்(5) அவுட்டாகாமல் இருந்தனர்.
நல்ல துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு பிஸ்லா, காலிஸ் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். டிம் சவுத்தி ஓவரில் காலிஸ் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில், பிஸ்லா(27) வெளியேறினார். கோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட யூசுப் பதான்(11) அதிக நேரம் நீடிக்கவில்லை. அஷ்வின் சுழலில் காலிஸ்(54) அவுட்டாக, சென்னை வீரர்கள் நிம்மதி அடைந்தனர். ரெய்னா பந்தில் மார்கன்(6) நடையை கட்டினார். பின் வரிசையில் வீணாக களமிறங்கிய கேப்டன் காம்பிரும்(1) ரன் அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது.
ரந்திவ் வீசிய போட்டியின் 19வது ஓவரில் சுக்லா ஒரு பவுண்டரி அடித்தார். பின் மனோஜ் திவாரி அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாச, 17 ரன்கள் எடுக்கப்பட்டன. இதையடுத்து சென்னை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
6 பந்தில் 9 ரன்கள்:
கடைசி ஓவரில் கோல்கட்டா அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. டிம் சவுத்தி அருமையாக பந்துவீசினார். முதல் பந்தில் இரண்டு ரன் எடுத்தார் சுக்லா. இரண்டாவது பந்தில் சுக்லா(14) அவுட்டானார். 3வது பந்தில் 2 ரன். நான்காவது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் ஒரு ரன். 6வது பந்திலும் ஒரு ரன் மட்டும் எடுக்கப்பட, கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
சபாஷ் தோனி:
மீண்டும் ஒரு முறை கேப்டன் "கூலாக' அசத்திய தோனி, சென்னை அணிக்கு "திரில்' வெற்றியை தேடி தந்தார். "ஆட்ட நாயகன்' விருதை அனிருதா தட்டிச் சென்றார்.



ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
அனிருதா(ப)காலிஸ் 64(55)
முரளிவிஜய்(கே)பாட்டியா(ப)இக்பால் 4(4)
ரெய்னா(கே)லட்டா(ப)யூசுப் 33(29)
தோனி(கே)பிஸ்லா(ப)காலிஸ் 29(21)
மார்கல்-அவுட்இல்லை- 15(9)
ஸ்டைரிஸ்-அவுட்இல்லை- 5(2)
உதிரிகள் 3
மொத்தம் (20 ஓவரில், 4 விக்.,) 153
விக்கெட் வீழ்ச்சி: 1-5(முரளிவிஜய்), 2-80(ரெய்னா), 3-129(தோனி), 4-138(அனிருதா).
பந்துவீச்சு: இக்பால் 4-0-26-1, யூசுப் 3-0-19-1, பாலாஜி 4-0-25-0, காலிஸ் 3-0-34-2, லட்டா 3-0-29-0, பாட்டியா 3-0-19-0.
கோல்கட்டா நைட் ரைடர்ஸ்
பிஸ்லா(ஸ்டம்)தோனி(ப)ஜகாதி 27(29)
காலிஸ்(கே)பத்ரிநாத்(ப)அஷ்வின் 54(42)
யூசுப்-ரன் அவுட்-(தோனி) 11(12)
திவாரி(ஸ்டம்)தோனி(ப)ரந்திவ் 27(15)
மார்கன்(ஸ்டம்)தோனி(ப)ரெய்னா 6(6)
காம்பிர்-ரன் அவுட்-(ஸ்டைரிஸ்) 1(2)
சுக்லா(கே)ஸ்டைரிஸ்(ப)சவுத்தி 14(10)
பாட்டியா-அவுட் இல்லை- 0(1)
அப்துல்லா-அவுட் இல்லை- 3(3)
உதிரிகள் 8
மொத்தம்(20 ஓவரில் 7 விக்.,) 151
விக்கெட் வீழ்ச்சி: 1-64(பிஸ்லா), 2-93(யூசுப்), 3-112(காலிஸ்), 4-119(மார்கன்), 5-120(காம்பிர்), 6-145(திவாரி), 7-147(சுக்லா).
பந்துவீச்சு: மார்கல் 3-0-32-0, சவுத்தி 4-0-30-1, அஷ்வின் 4-0-26-1, ரந்திவ் 4-0-33-1, ஜகாதி 4-0-26-1, ரெய்னா 1-0-3-1.

சென்னை அணி "திரில்' வெற்றி! * கோல்கட்டா போராட்டம் வீண்

சென்னை: ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டியிலேயே "டென்ஷன்' எகிறியது. கடைசி பந்து வரை துணிச்சலாக போராடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. காம்பிரின் கோல்கட்டா அணி சுலப வாய்ப்பை கோட்டை விட்டது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நேற்று துவங்கியது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் "நடப்பு சாம்பியனான' சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. சமீபத்தில் உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள், இம்முறை நேருக்கு நேர் மோதிக் கொண்டதை காண முடிந்தது. "டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, எதிர்பார்த்தது போல் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
விஜய் ஏமாற்றம்:
முதல் ஓவரிலேயே "ஸ்பின்னரை' பயன்படுத்தி சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார் கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. இக்பால் அப்துல்லா "சுழலில்' உள்ளூர் வீரரான முரளி விஜய்(4) அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதற்கு பின் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் மகனான அனிருதா ஸ்ரீகாந்த் மற்றும் சுரேஷ் ரெய்னா இணைந்து பொறுப்பாக ஆடினர்.
பீல்டிங் சொதப்பல்:
கோல்கட்டா அணியின் "பீல்டிங்' படுமோசமாக இருந்தது. யூசுப் பதான் உள்ளிட்டோர் சுலப "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இதனை பயன்படுத்திய அனிருதா, காலிஸ் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசி, உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். தொடர்ந்து லட்டா பந்தையும் சிக்சருக்கு அனுப்பி அசத்தினார். அடக்கி வாசித்த ரெய்னா (33), யூசுப் பதான் வலையில் சிக்கினார்.
அனிருதா அரைசதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனி கைகொடுக்க, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார் அனிருதா. லட்டா ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இந்த நேரத்தில் காலிஸ் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் முதலில் தோனி(29) வெளியேறினார். அரைசதம் கடந்த அனிருதாவும் 64 ரன்களுக்கு(6 பவுண்டரி, 2 சிக்சர்) காலிஸ் பந்தில் போல்டானார்.
காலிஸ் வீசிய கடைசி ஓவரில் ஸ்டைரிஸ் ஒரு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஆல்பி மார்கல் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து, ஸ்கோரை உயர்த்தினார். சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. ஆல்பி மார்கல்(15), ஸ்டைரிஸ்(5) அவுட்டாகாமல் இருந்தனர்.
நல்ல துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு பிஸ்லா, காலிஸ் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். டிம் சவுத்தி ஓவரில் காலிஸ் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில், பிஸ்லா(27) வெளியேறினார். கோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட யூசுப் பதான்(11) அதிக நேரம் நீடிக்கவில்லை. அஷ்வின் சுழலில் காலிஸ்(54) அவுட்டாக, சென்னை வீரர்கள் நிம்மதி அடைந்தனர். ரெய்னா பந்தில் மார்கன்(6) நடையை கட்டினார். பின் வரிசையில் வீணாக களமிறங்கிய கேப்டன் காம்பிரும்(1) ரன் அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது.
ரந்திவ் வீசிய போட்டியின் 19வது ஓவரில் சுக்லா ஒரு பவுண்டரி அடித்தார். பின் மனோஜ் திவாரி அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாச, 17 ரன்கள் எடுக்கப்பட்டன. இதையடுத்து சென்னை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
6 பந்தில் 9 ரன்கள்:
கடைசி ஓவரில் கோல்கட்டா அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. டிம் சவுத்தி அருமையாக பந்துவீசினார். முதல் பந்தில் இரண்டு ரன் எடுத்தார் சுக்லா. இரண்டாவது பந்தில் சுக்லா(14) அவுட்டானார். 3வது பந்தில் 2 ரன். நான்காவது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் ஒரு ரன். 6வது பந்திலும் ஒரு ரன் மட்டும் எடுக்கப்பட, கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
சபாஷ் தோனி:
மீண்டும் ஒரு முறை கேப்டன் "கூலாக' அசத்திய தோனி, சென்னை அணிக்கு "திரில்' வெற்றியை தேடி தந்தார். "ஆட்ட நாயகன்' விருதை அனிருதா தட்டிச் சென்றார்.



ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
அனிருதா(ப)காலிஸ் 64(55)
முரளிவிஜய்(கே)பாட்டியா(ப)இக்பால் 4(4)
ரெய்னா(கே)லட்டா(ப)யூசுப் 33(29)
தோனி(கே)பிஸ்லா(ப)காலிஸ் 29(21)
மார்கல்-அவுட்இல்லை- 15(9)
ஸ்டைரிஸ்-அவுட்இல்லை- 5(2)
உதிரிகள் 3
மொத்தம் (20 ஓவரில், 4 விக்.,) 153
விக்கெட் வீழ்ச்சி: 1-5(முரளிவிஜய்), 2-80(ரெய்னா), 3-129(தோனி), 4-138(அனிருதா).
பந்துவீச்சு: இக்பால் 4-0-26-1, யூசுப் 3-0-19-1, பாலாஜி 4-0-25-0, காலிஸ் 3-0-34-2, லட்டா 3-0-29-0, பாட்டியா 3-0-19-0.
கோல்கட்டா நைட் ரைடர்ஸ்
பிஸ்லா(ஸ்டம்)தோனி(ப)ஜகாதி 27(29)
காலிஸ்(கே)பத்ரிநாத்(ப)அஷ்வின் 54(42)
யூசுப்-ரன் அவுட்-(தோனி) 11(12)
திவாரி(ஸ்டம்)தோனி(ப)ரந்திவ் 27(15)
மார்கன்(ஸ்டம்)தோனி(ப)ரெய்னா 6(6)
காம்பிர்-ரன் அவுட்-(ஸ்டைரிஸ்) 1(2)
சுக்லா(கே)ஸ்டைரிஸ்(ப)சவுத்தி 14(10)
பாட்டியா-அவுட் இல்லை- 0(1)
அப்துல்லா-அவுட் இல்லை- 3(3)
உதிரிகள் 8
மொத்தம்(20 ஓவரில் 7 விக்.,) 151
விக்கெட் வீழ்ச்சி: 1-64(பிஸ்லா), 2-93(யூசுப்), 3-112(காலிஸ்), 4-119(மார்கன்), 5-120(காம்பிர்), 6-145(திவாரி), 7-147(சுக்லா).
பந்துவீச்சு: மார்கல் 3-0-32-0, சவுத்தி 4-0-30-1, அஷ்வின் 4-0-26-1, ரந்திவ் 4-0-33-1, ஜகாதி 4-0-26-1, ரெய்னா 1-0-3-1.

எந்த துறையிலும் இல்லாத புகழ் கிரிக்கெட்டுக்கு உள்ளது. இதனால் தான் கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டு மூலம் மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். தற்போது கிரிக்கெட் வீரர்களில் உலகில் அதிக பணம் சம்பாதிப்பவர் டோனி. இதனால் அவரது மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டிக்காக டோனி ரூ.34 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளார். ஒரியன்டல் இன்சூரன்ஸ் கம்பெனி நிர்வாகி இதை உறுதி செய்துள்ளார். கடந்த ஐ.பி.எல். போட்டியில் அவர் ரூ.24 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருந்தார்.வீரர்களின் பயணம், மெடிக்கல் உள்பட பலவற்றுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.16 லட்சத்துக்கு பிரிமீயம் செலுத்தி உள்ளது.

டோனிக்கு அடுத்தப்படியாக ரெய்னா ரூ.20.5 கோடிக்கும், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் தெண்டுல்கர் ரூ.12 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளனர். கொச்சி அணி கேப்டன் ஜெயவர்த்தனே (இலங்கை) ரூ.20.5 கோடிக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் வீரர் ஸ்டெயின் ரூ.16 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல். போட்டியில் டோனி ரூ.34 கோடிக்கு இன்சூரன்ஸ்

எந்த துறையிலும் இல்லாத புகழ் கிரிக்கெட்டுக்கு உள்ளது. இதனால் தான் கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டு மூலம் மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். தற்போது கிரிக்கெட் வீரர்களில் உலகில் அதிக பணம் சம்பாதிப்பவர் டோனி. இதனால் அவரது மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டிக்காக டோனி ரூ.34 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளார். ஒரியன்டல் இன்சூரன்ஸ் கம்பெனி நிர்வாகி இதை உறுதி செய்துள்ளார். கடந்த ஐ.பி.எல். போட்டியில் அவர் ரூ.24 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருந்தார்.வீரர்களின் பயணம், மெடிக்கல் உள்பட பலவற்றுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.16 லட்சத்துக்கு பிரிமீயம் செலுத்தி உள்ளது.

டோனிக்கு அடுத்தப்படியாக ரெய்னா ரூ.20.5 கோடிக்கும், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் தெண்டுல்கர் ரூ.12 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளனர். கொச்சி அணி கேப்டன் ஜெயவர்த்தனே (இலங்கை) ரூ.20.5 கோடிக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் வீரர் ஸ்டெயின் ரூ.16 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஓய்வுபெற்றார்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் அதிக விக்கெட் எடு்த்தவர் முத்தையா முரளிதரன் (38). 19 ஆண்டு காலமாக இலங்கை சார்பில் விளையாடிய அவர் நேற்றைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவர் ஏற்கனவே 800 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் தான் அவரது முதல் டெஸ்ட் போட்டி. 1993-ம் ஆண்டு கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக ஆடியது தான் அவரது முதல் ஒரு நாள் சர்வதேசப் போட்டியாகும்.

இந்தியாவின் பிரக்யான் ஓஜாவின் விக்கெட் தான் அவரது டெஸ்ட் போட்டியின் 800-வது விக்கெட். டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட் எடுத்த முதல் மற்றும் ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

நேற்று இந்தியாவுக்கு எதிராக அவர் தனது 350-வது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் விளையாடினார். அவர் 8 ஓவர்கள் பந்துவீசி 39 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அவர் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மொத்தம் 534 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

கடந்த 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அர்ஜுனா ரனதுங்கா தலைமையிலான இலங்கை அணியில் முத்தையா முரளிதரனும் ஒருவர்.

முரளிதரன் மொத்தம் 5 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளார். உலகக் கோப்பைகளில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் முதலிடத்திலும், 68 விக்கெட்டுகளுடன் முரளிதரன் இரன்டாவது இடத்திலும் உள்ளனர்.

ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 10 முறை அவர் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கடந்த 2006 முதல் 2010-ம் ஆண்டுகள் வரை விளையாடிய 12 டுவென்டி 20 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3 முறை விளையாடியுள்ளார். வரும் 8-ம் தேதி துவங்கும் சீசனில் கொச்சி டஸ்க்ர்ஸ கேரளா அணிக்கு விளையாடவிருக்கிறார்.

பந்து வீசும் முறை பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கிய ஒரே விளையாட்டு வீரர் முரளிதரன் தான். சிலர் அவர் சிறந்த பந்துவீச்சாளர் என்று புகழ்கின்றனர். சிலர் அவர் சட்டவிரோதமாக பந்துவீசி புகழ் பெற்றவர் என்கின்றனர்.

அவர் விளையாடத் துவங்கியதில் இருந்தே அவர் பந்துவீச்சு கண்காணிக்கப்பட்டு வந்தது. 1995-96 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது பந்தை வீசியதற்காக அம்பயர் டாரல் ஹேர் விசாரணைக்கு அழைத்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவரை மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் சோதனை செய்து கொள்ளுமாறு கூறியது. சோதனை முடிவில் அவர் பந்து வீசுவது எறிவது போன்று தெரிகிறதே தவிர நிஜத்தில் ஒழுங்காகத் தான் பந்து வீசுகிறார் என்று தெரியவந்தது.

பிரச்சனை தீர்ந்தது என்று நினைக்கையில் 1998-99 -ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது மீண்டும் அவர் பந்துவீச்சு தொடர்பாக பிரச்சனை எழுந்தது.

மறுபடியும் பெர்த் மற்றும் இங்கிலாந்திலும் சோதனை செய்யப்பட்டதில் முரளி குற்றமற்றவர் என்று நிரூபனம் ஆனது. மீண்டும் 2004-ம் ஆண்டு இதே பிரச்சனை எழுந்தது. அந்த ஆண்டு அவர் மேற்கு இந்தியத் தீவுகளின் கோர்ட்னி வால்ஷின் 519 விக்கெட்டுகளைத் தாண்டி டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனை படைத்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உருவாக்கியுள்ள ராட்சசன் முரளி என்று முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் பேடி கடுமையாக விமர்சித்தார். முரளியின் தூஸ்ரா முறை சட்டவிரோதமானது என்று அவர் எப்போதும் கூறுவார். அன்மையில் கூட கையை மடக்காமல் தூஸ்ரா முறைப்படி பந்துவீச முடியாது அதனால் தூஸ்ராவுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தடை விதிக்க வேண்டும் என்று ஐசிசியிடம் பரிந்துரைத்தார்.

முரளியும், ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஷேன் வார்னேவும் போட்டிப்போட்டுக் கொண்டு புதிய சாதனைகள் படைத்தனர். 708 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் ஷேன் ஓய்வு பெற்றார். கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கன்டியில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் ஷேன் வார்னேவின் சாதனையை முரளி முறியடித்தார்.

ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்தவர் வாசிம் அக்ரம்(502).கடந்த 2009-ம் ஆண்டு வாசிம் அக்ரமின் 502 விக்கெட் சாதனயை முரளி முறியடித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் ஓய்வு

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஓய்வுபெற்றார்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் அதிக விக்கெட் எடு்த்தவர் முத்தையா முரளிதரன் (38). 19 ஆண்டு காலமாக இலங்கை சார்பில் விளையாடிய அவர் நேற்றைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவர் ஏற்கனவே 800 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் தான் அவரது முதல் டெஸ்ட் போட்டி. 1993-ம் ஆண்டு கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக ஆடியது தான் அவரது முதல் ஒரு நாள் சர்வதேசப் போட்டியாகும்.

இந்தியாவின் பிரக்யான் ஓஜாவின் விக்கெட் தான் அவரது டெஸ்ட் போட்டியின் 800-வது விக்கெட். டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட் எடுத்த முதல் மற்றும் ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

நேற்று இந்தியாவுக்கு எதிராக அவர் தனது 350-வது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் விளையாடினார். அவர் 8 ஓவர்கள் பந்துவீசி 39 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அவர் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மொத்தம் 534 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

கடந்த 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அர்ஜுனா ரனதுங்கா தலைமையிலான இலங்கை அணியில் முத்தையா முரளிதரனும் ஒருவர்.

முரளிதரன் மொத்தம் 5 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளார். உலகக் கோப்பைகளில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் முதலிடத்திலும், 68 விக்கெட்டுகளுடன் முரளிதரன் இரன்டாவது இடத்திலும் உள்ளனர்.

ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 10 முறை அவர் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கடந்த 2006 முதல் 2010-ம் ஆண்டுகள் வரை விளையாடிய 12 டுவென்டி 20 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3 முறை விளையாடியுள்ளார். வரும் 8-ம் தேதி துவங்கும் சீசனில் கொச்சி டஸ்க்ர்ஸ கேரளா அணிக்கு விளையாடவிருக்கிறார்.

பந்து வீசும் முறை பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கிய ஒரே விளையாட்டு வீரர் முரளிதரன் தான். சிலர் அவர் சிறந்த பந்துவீச்சாளர் என்று புகழ்கின்றனர். சிலர் அவர் சட்டவிரோதமாக பந்துவீசி புகழ் பெற்றவர் என்கின்றனர்.

அவர் விளையாடத் துவங்கியதில் இருந்தே அவர் பந்துவீச்சு கண்காணிக்கப்பட்டு வந்தது. 1995-96 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது பந்தை வீசியதற்காக அம்பயர் டாரல் ஹேர் விசாரணைக்கு அழைத்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவரை மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் சோதனை செய்து கொள்ளுமாறு கூறியது. சோதனை முடிவில் அவர் பந்து வீசுவது எறிவது போன்று தெரிகிறதே தவிர நிஜத்தில் ஒழுங்காகத் தான் பந்து வீசுகிறார் என்று தெரியவந்தது.

பிரச்சனை தீர்ந்தது என்று நினைக்கையில் 1998-99 -ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது மீண்டும் அவர் பந்துவீச்சு தொடர்பாக பிரச்சனை எழுந்தது.

மறுபடியும் பெர்த் மற்றும் இங்கிலாந்திலும் சோதனை செய்யப்பட்டதில் முரளி குற்றமற்றவர் என்று நிரூபனம் ஆனது. மீண்டும் 2004-ம் ஆண்டு இதே பிரச்சனை எழுந்தது. அந்த ஆண்டு அவர் மேற்கு இந்தியத் தீவுகளின் கோர்ட்னி வால்ஷின் 519 விக்கெட்டுகளைத் தாண்டி டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனை படைத்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உருவாக்கியுள்ள ராட்சசன் முரளி என்று முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் பேடி கடுமையாக விமர்சித்தார். முரளியின் தூஸ்ரா முறை சட்டவிரோதமானது என்று அவர் எப்போதும் கூறுவார். அன்மையில் கூட கையை மடக்காமல் தூஸ்ரா முறைப்படி பந்துவீச முடியாது அதனால் தூஸ்ராவுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தடை விதிக்க வேண்டும் என்று ஐசிசியிடம் பரிந்துரைத்தார்.

முரளியும், ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஷேன் வார்னேவும் போட்டிப்போட்டுக் கொண்டு புதிய சாதனைகள் படைத்தனர். 708 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் ஷேன் ஓய்வு பெற்றார். கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கன்டியில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் ஷேன் வார்னேவின் சாதனையை முரளி முறியடித்தார்.

ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்தவர் வாசிம் அக்ரம்(502).கடந்த 2009-ம் ஆண்டு வாசிம் அக்ரமின் 502 விக்கெட் சாதனயை முரளி முறியடித்தார்.

வதோதரா:"உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், கடைசி வரை களத்தில் இருந்து வீழ்த்த வேண்டும் என்ற, எனது நீண்ட கால கனவு நிறைவேறியது, என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய துணைக்கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது காலிறுதி போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் "ஆல் ரவுண்டராக அசத்திய யுவராஜ் சிங், ஆட்ட நாயகனாக ஜொலித்தார். இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியது:
உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும். இந்த போட்டியில் நான் கடைசி வரைக்கும் களத்தில் இருக்க வேண்டும் என, கடந்த ஒரு ஆண்டாகவே கனவு கண்டேன். இப்போதைய வெற்றியின் மூலம், என்னுடைய நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளது.
இந்த போட்டியின் போது, உணர்ச்சியை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் ஒரு சிறிய தவறு செய்திருந்தாலும், உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற வேண்டியது இருந்திருக்கும். இதனால் பந்துகளை கவனமாக கணித்து, அந்தரத்தில் தூக்கி அடிக்காதவாறு எச்சரிக்கையுடன் விளையாடினேன்.
காம்பிரிடம் மன்னிப்பு:
காம்பிருடன் இணைந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அவுட் துரதிருஷ்டவசமாக "ரன் அவுட் ஆனார். இது எனது தவறுதான். அவர் கூறியதை சரியாக கவனிக்கவில்லை. இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். காம்பிருக்குப் பின், தோனியுடன் சேர்ந்து நல்ல "பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அணியின் வெற்றி:
இந்நிலையில் அவர் ஆட்டமிழந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின் ரெய்னா வந்ததும், எப்படியும் 20 முதல் 30 ரன்கள் இணைந்து சேர்க்க வேண்டும். இதைக்கடந்ததும், அடுத்து அதிக நம்பிக்கை ஏற்பட்டது. போட்டியில் நான் ஆட்டநாயகன் விருது வென்றாலும், இந்த வெற்றி தனிப்பட்ட ஒருவரால் கிடைத்தது அல்ல. இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி.
தற்போது "ரிலாக்ஸ்:
அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் எனது மற்றொரு கனவு நிறைவேறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதைப் போல, பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாட முயற்சிப்போம்.
எங்களைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும், அதேபோல அவர்களைப் பற்றி எங்களுக்கும் தெரியும். இரு அணிகளும் சமபலத்தில் உள்ளது. மற்றபடி, அரையிறுதி குறித்து இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. மிகுந்த நெருக்கடியான நிலையில் இப்போது வெற்றி பெற்றோம். இதனால் சற்று "ரிலாக்சாகி விட்டு, பின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து திட்டமிட உள்ளோம்.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.
யுவராஜ் சிங் அபாரம்
உலக கோப்பை தொடரில் 300 ரன்களும் 10 விக்கெட்டும் எடுத்து அசத்திய இரண்டாவது இந்திய "ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் ஆவார். இதற்கு முன் கபில் தேவ் 1983 உலக கோப்பை போட்டிகளில் 303 ரன்களும் 12 விக்கெட்டும் எடுத்து இருந்தார். இவர்கள் தவிர, இலங்கையில் ஜெயசூர்யா, ஜிம்பாப்வேயின் நெயில் ஜான்சன் இச்சாதனை படைத்துள்ளனர்.
* ஒருநாள் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய வீரர் யுவராஜ் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் சச்சின், கங்குலி, டிராவிட், முகமது அசார் இந்த இலக்கை எட்டியுள்ளனர்.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவராஜ் சிங் சிறந்த பந்து வீச்சை (2/44) பதிவு செய்தார்.
* உலக கோப்பை தொடரில் இவர் இதுவரை 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார். எந்த ஒரு தொடரில் இவர் இப்படி அதிக விக்கெட் கைப்பற்றுவது இதுவே முதன் முறை.
----
இந்தியா அதிகம்
நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 261 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி எடுத்து வெற்றி பெற்றது. இது உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச "சேசிங் ஆகும். இதற்கு முன் கடந்த 2003 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா, 276 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றிருந்தது.
---
---
இந்தியா கோப்பை வெல்லும்: பாண்டிங்
இந்திய அணியின் வெற்றி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங் கூறுகையில்,"" இந்திய அணி ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினர். இந்த வெற்றிக்கு அவர்களுக்கு தகுதியுள்ளது. இவர்களை தோல்வியடையச் செய்வது என்பது மிகவும் கடினம். அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி, எப்படியும் <உலக கோப்பை வெல்வார்கள். ஏனெனில் சிறப்பாக பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக இந்தியா உள்ளது, என்றார்.
---
யார் அந்த "ஸ்பெஷல் நபர்?
உலககோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் யுவராஜ் சிங். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" இம்முறை மிகவும் "ஸ்பெஷலான ஒரு நபருக்காக விளையாடி வருகிறேன். போட்டியில் மோசமான சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அவரை நினைத்துக் கொள்வேன். உடனே நிலைமை சாதகமாக மாறி விடும், என்றார். இந்த "ஸ்பெஷல் நபர் யார் என்பதை தெரிவிக்க, யுவராஜ் மறுத்துவிட்டார். இந்தியா பைனலுக்கு முன்னேறும் பட்சத்தில், அவரைப்பற்றிய ரகசியத்தை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
--

நீண்ட கால கனவு நிறைவேறியது * யுவராஜ் சிங் உற்சாகம்

வதோதரா:"உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், கடைசி வரை களத்தில் இருந்து வீழ்த்த வேண்டும் என்ற, எனது நீண்ட கால கனவு நிறைவேறியது, என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய துணைக்கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது காலிறுதி போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் "ஆல் ரவுண்டராக அசத்திய யுவராஜ் சிங், ஆட்ட நாயகனாக ஜொலித்தார். இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியது:
உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும். இந்த போட்டியில் நான் கடைசி வரைக்கும் களத்தில் இருக்க வேண்டும் என, கடந்த ஒரு ஆண்டாகவே கனவு கண்டேன். இப்போதைய வெற்றியின் மூலம், என்னுடைய நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளது.
இந்த போட்டியின் போது, உணர்ச்சியை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் ஒரு சிறிய தவறு செய்திருந்தாலும், உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற வேண்டியது இருந்திருக்கும். இதனால் பந்துகளை கவனமாக கணித்து, அந்தரத்தில் தூக்கி அடிக்காதவாறு எச்சரிக்கையுடன் விளையாடினேன்.
காம்பிரிடம் மன்னிப்பு:
காம்பிருடன் இணைந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அவுட் துரதிருஷ்டவசமாக "ரன் அவுட் ஆனார். இது எனது தவறுதான். அவர் கூறியதை சரியாக கவனிக்கவில்லை. இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். காம்பிருக்குப் பின், தோனியுடன் சேர்ந்து நல்ல "பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அணியின் வெற்றி:
இந்நிலையில் அவர் ஆட்டமிழந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின் ரெய்னா வந்ததும், எப்படியும் 20 முதல் 30 ரன்கள் இணைந்து சேர்க்க வேண்டும். இதைக்கடந்ததும், அடுத்து அதிக நம்பிக்கை ஏற்பட்டது. போட்டியில் நான் ஆட்டநாயகன் விருது வென்றாலும், இந்த வெற்றி தனிப்பட்ட ஒருவரால் கிடைத்தது அல்ல. இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி.
தற்போது "ரிலாக்ஸ்:
அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் எனது மற்றொரு கனவு நிறைவேறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதைப் போல, பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாட முயற்சிப்போம்.
எங்களைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும், அதேபோல அவர்களைப் பற்றி எங்களுக்கும் தெரியும். இரு அணிகளும் சமபலத்தில் உள்ளது. மற்றபடி, அரையிறுதி குறித்து இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. மிகுந்த நெருக்கடியான நிலையில் இப்போது வெற்றி பெற்றோம். இதனால் சற்று "ரிலாக்சாகி விட்டு, பின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து திட்டமிட உள்ளோம்.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.
யுவராஜ் சிங் அபாரம்
உலக கோப்பை தொடரில் 300 ரன்களும் 10 விக்கெட்டும் எடுத்து அசத்திய இரண்டாவது இந்திய "ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் ஆவார். இதற்கு முன் கபில் தேவ் 1983 உலக கோப்பை போட்டிகளில் 303 ரன்களும் 12 விக்கெட்டும் எடுத்து இருந்தார். இவர்கள் தவிர, இலங்கையில் ஜெயசூர்யா, ஜிம்பாப்வேயின் நெயில் ஜான்சன் இச்சாதனை படைத்துள்ளனர்.
* ஒருநாள் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய வீரர் யுவராஜ் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் சச்சின், கங்குலி, டிராவிட், முகமது அசார் இந்த இலக்கை எட்டியுள்ளனர்.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவராஜ் சிங் சிறந்த பந்து வீச்சை (2/44) பதிவு செய்தார்.
* உலக கோப்பை தொடரில் இவர் இதுவரை 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார். எந்த ஒரு தொடரில் இவர் இப்படி அதிக விக்கெட் கைப்பற்றுவது இதுவே முதன் முறை.
----
இந்தியா அதிகம்
நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 261 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி எடுத்து வெற்றி பெற்றது. இது உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச "சேசிங் ஆகும். இதற்கு முன் கடந்த 2003 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா, 276 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றிருந்தது.
---
---
இந்தியா கோப்பை வெல்லும்: பாண்டிங்
இந்திய அணியின் வெற்றி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங் கூறுகையில்,"" இந்திய அணி ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினர். இந்த வெற்றிக்கு அவர்களுக்கு தகுதியுள்ளது. இவர்களை தோல்வியடையச் செய்வது என்பது மிகவும் கடினம். அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி, எப்படியும் <உலக கோப்பை வெல்வார்கள். ஏனெனில் சிறப்பாக பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக இந்தியா உள்ளது, என்றார்.
---
யார் அந்த "ஸ்பெஷல் நபர்?
உலககோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் யுவராஜ் சிங். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" இம்முறை மிகவும் "ஸ்பெஷலான ஒரு நபருக்காக விளையாடி வருகிறேன். போட்டியில் மோசமான சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அவரை நினைத்துக் கொள்வேன். உடனே நிலைமை சாதகமாக மாறி விடும், என்றார். இந்த "ஸ்பெஷல் நபர் யார் என்பதை தெரிவிக்க, யுவராஜ் மறுத்துவிட்டார். இந்தியா பைனலுக்கு முன்னேறும் பட்சத்தில், அவரைப்பற்றிய ரகசியத்தை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
--

மிர்புர்: உலக கோப்பை பரபரப்பான காலிறுதி போட்டியில் அசத்தலாக ஆடிய நியூசிலாந்து அணி, தென் ஆப்ரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் அரையிறுதிக்கு "சூப்பராக' முன்னேறியது. அபாரமாக பந்துவீசிய ஜேக்கப் ஓரம், நியூசிலாந்தின் வெற்றிக்கு கைகொடுத்தார். வழக்கம் போல் சொதப்பிய தென் ஆப்ரிக்க அணி, தொடரில் இருந்து வெளியேறியது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று வங்கதேசத்தில் உள்ள மிர்புரில் நடந்த மூன்றாவது காலிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணியில் ஜேம்ஸ் பிராங்க்ளின் நீக்கப்பட்டு, லூக் உட்காக் இடம் பெற்றார். தென் ஆப்ரிக்க அணியில் மார்ன் வான் விக்கிற்கு பதிலாக டிவிலியர்ஸ் வாய்ப்பு பெற்றார். "டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
துவக்கம் மோசம்:
நியூசிலாந்து அணி திணறல் துவக்கம் கண்டது. ராபின் பீட்டர்சன் சுழலில் அவரிடமே "கேட்ச்' கொடுத்து பிரண்டன் மெக்கலம்(4) வெளியேறினார். ஸ்டைன் வேகத்தில் கப்டில்(1) வீழ்ந்தார். இதையடுத்து 2 விக்கெட்டுக்கு 16 ரன்கள் எடுத்து தத்தளித்தது. பின் ராஸ் டெய்லர், ஜெசி ரைடர் இணைந்து போராடினர். இவர்கள் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக ஆட, ஸ்கோர் நகர்ந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்த நிலையில், ராஸ் டெய்லர்(43), இம்ரான் தாகிர் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த ஸ்டைரிஸ்(16) ஏமாற்றினார். அரைசதம் கடந்த ரைடரும்(83), தாகிர் பந்தில் நடையை கட்ட, மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. நாதன் மெக்கலம் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். மார்கல் வீசிய போட்டியின் 49வது ஓவரில் ஜேக்கப் ஓரம்(7), வெட்டோரி(6) அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் பொறுப்பாக ஆடிய வில்லியம்சன் (38 *), ஓரளவுக்கு கைகொடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 221 ரன்கள் மட்டும் எடுத்தது.
தென் ஆப்ரிக்க தரப்பில் மார்கல் 3, ஸ்டைன் 2, இம்ரான் தாகிர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
திணறல் துவக்கம்:
சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணி துவக்கத்தில் தடுமாறியது. நாதன் மெக்கலம் வீசிய முதல் ஓவரில் ஆம்லா(7) வெளியேறினார். கேப்டன் ஸ்மித்(28) அதிக நேரம் நிலைக்கவில்லை. பின் அனுபவ காலிஸ், டிவிலியர்ஸ் இணைந்து பொறுப்பாக ஆடினர். சவுத்தி பந்தில் சிக்சர் அடிக்க முயன்ற காலிஸ்(47), எல்லைக் கோட்டு அருகே ஜேக்கப் ஓரத்தின் கலக்கல் "கேட்ச்சில்' அவுட்டானார். நாதன் மெக்கலம் வீசிய போட்டியின் 28வது ஓவரில் தென் ஆப்ரிக்க அணிக்கு இரட்டை "அடி' விழுந்தது. 4வது பந்தில் டுமினி(3) போல்டானார். 6வது பந்தில் டிவிலியர்ஸ்(35) ரன் அவுட்டானார்.
சொதப்பல் ஆட்டம்:
நியூசிலாந்தின் அபார பந்துவீச்சில், தென் ஆப்ரிக்க அணிக்கு தொடர்ந்து சேதாரம் ஏற்பட்டது. ஓரம் பந்தில் போத்தா(2) போல்டானார். அடுத்து வந்தவர்களும் பொறுப்பற்ற முறையில் விளையாடினர். ஓரம் வேகத்தில் ராபின் பீட்டர்சனும்(0) வெளியேறினார். ஸ்டைன்(8) கைகொடுக்க தவறினார். போராடிய டு பிளசிஸ் 36 ரன்களுக்கு வெளியேற, தென் ஆப்ரிக்க அணி 43.2 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் உலக கோப்பை "நாக்-அவுட்' போட்டிகளில் சொதப்பும் தென் ஆப்ரிக்க அணியின் பலவீனம் மீண்டும் ஒருமுறை அம்பலமானது.
இம்முறை அரையிறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்து புதுஅவதாரம் எடுத்துள்ளது. இன்று நடக்கும் இலங்கை-இங்கிலாந்து மோதலில் வெற்றி பெறும் அணியுடன், அரையிறுதியில்(வரும் 29ம் தேதி) நியூசிலாந்து விளையாடும்.
நான்கு விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் ஜேக்கம் ஓரம் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ஆறாவது முறை
நேற்று தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து அணி, உலக கோப்பை அரங்கில் ஆறாவது முறையாக (1975, 79, 92, 99, 2007, 2011) அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் கடந்த ஐந்து முறையில் ஒரு முறை கூட பைனலுக்கு முன்னேறவில்லை. கடந்த 1983, 87ல் முதல் சுற்றோடு வெளியேறிய நியூசிலாந்து அணி 1996ல் காலிறுதி வரையிலும், 2003ல் "சூப்பர்-6' சுற்று வரையிலும் முன்னேறியது.
ஸ்கோர் போர்டு
நியூசிலாந்து
கப்டில்(கே)போத்தா(ப)ஸ்டைன் 1(14)
பிரண்டன்(கே)+(ப)பீட்டர்சன் 4(4)
ரைடர்(கே)இங்ராம்(ப)இம்ரான் தாகிர் 83(121)
டெய்லர்(கே)காலிஸ்(ப)இம்ரான் தாகிர் 43(72)
ஸ்டைரிஸ்(ப)மார்கல் 16(17)
வில்லியம்சன்-அவுட்இல்லை- 38(41)
நாதன்(கே)டுமினி(ப)ஸ்டைன் 6(18)
ஓரம்(ப)மார்கல் 7(6)
வெட்டோரி(ப)மார்கல் 6(4)
உட்காக்-அவுட்இல்லை- 3(3)
உதிரிகள் 14
மொத்தம் (50 ஓவரில், 8 விக்.,) 221
விக்கெட் வீழ்ச்சி: 1-5(பிரண்டன்), 2-16(கப்டில்), 3-130(டெய்லர்), 4-153(ஸ்டைரிஸ்), 5-156(ரைடர்), 6-188(நாதன்), 7-204(ஓரம்), 8-210(வெட்டோரி)
பந்துவீச்சு: பீட்டர்சன் 9--0-49-1, ஸ்டைன் 10-0-42-2, போத்தா 9-0-29-0, மார்கல் 8-0-46-3, இம்ரான் தாகிர் 9-0-32-2, காலிஸ் 3-1-6-0, டுமினி 2-0-9-0.
தென் ஆப்ரிக்கா
ஆம்லா(கே)வெட்டோரி(ப)நாதன் 7(5)
ஸ்மித்(கே)கவ்(ப)ஓரம் 28(34)
காலிஸ்(கே)ஓரம்(ப)சவுத்தி 47(75)
டிவிலியர்ஸ்-ரன்அவுட்-(கப்டில்/பிரண்டன்) 35(40)
டுமினி(ப)நாதன் 3(12)
டு பிளசிஸ்(கே)சவுத்தி(ப)ஓரம் 36(43)
போத்தா(ப)ஓரம் 2(10)
பீட்டர்சன்(கே)பிரண்டன்(ப)ஓரம் 0(5)
ஸ்டைன்(கே)ஓரம்(ப)நாதன் 8(18)
மார்கல்(கே)கவ்(ப)உட்காக் 3(17)
இம்ரான் தாகிர்-அவுட்இல்லை- 0(1)
உதிரிகள் 3
மொத்தம் (43.2 ஓவரில், "ஆல்-அவுட்') 172
விக்கெட் வீழ்ச்சி: 1-8(ஆம்லா), 2-69(ஸ்மித்), 3-108(காலிஸ்), 4-121(டுமினி), 5-121(டிவிலியர்ஸ்), 6-128(போத்தா), 7-132(பீட்டர்சன்), 8-146(ஸ்டைன்), 9-172(டு பிளசிஸ்), 10-172(மார்கல்).
பந்து வீச்சு: நாதன் 10-1-24-3, வெட்டோரி 10-0-39-0, சவுத்தி 9-0-44-1, ஓரம் 9-1-39-4, உட்காக் 5.2-0-24-1.

நியூசி., புது அவதாரம்: தெ.ஆப்ரிக்கா சேதாரம்! * ஜேக்கப் ஓரம் அபாரம்

மிர்புர்: உலக கோப்பை பரபரப்பான காலிறுதி போட்டியில் அசத்தலாக ஆடிய நியூசிலாந்து அணி, தென் ஆப்ரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் அரையிறுதிக்கு "சூப்பராக' முன்னேறியது. அபாரமாக பந்துவீசிய ஜேக்கப் ஓரம், நியூசிலாந்தின் வெற்றிக்கு கைகொடுத்தார். வழக்கம் போல் சொதப்பிய தென் ஆப்ரிக்க அணி, தொடரில் இருந்து வெளியேறியது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று வங்கதேசத்தில் உள்ள மிர்புரில் நடந்த மூன்றாவது காலிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணியில் ஜேம்ஸ் பிராங்க்ளின் நீக்கப்பட்டு, லூக் உட்காக் இடம் பெற்றார். தென் ஆப்ரிக்க அணியில் மார்ன் வான் விக்கிற்கு பதிலாக டிவிலியர்ஸ் வாய்ப்பு பெற்றார். "டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
துவக்கம் மோசம்:
நியூசிலாந்து அணி திணறல் துவக்கம் கண்டது. ராபின் பீட்டர்சன் சுழலில் அவரிடமே "கேட்ச்' கொடுத்து பிரண்டன் மெக்கலம்(4) வெளியேறினார். ஸ்டைன் வேகத்தில் கப்டில்(1) வீழ்ந்தார். இதையடுத்து 2 விக்கெட்டுக்கு 16 ரன்கள் எடுத்து தத்தளித்தது. பின் ராஸ் டெய்லர், ஜெசி ரைடர் இணைந்து போராடினர். இவர்கள் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக ஆட, ஸ்கோர் நகர்ந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்த நிலையில், ராஸ் டெய்லர்(43), இம்ரான் தாகிர் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த ஸ்டைரிஸ்(16) ஏமாற்றினார். அரைசதம் கடந்த ரைடரும்(83), தாகிர் பந்தில் நடையை கட்ட, மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. நாதன் மெக்கலம் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். மார்கல் வீசிய போட்டியின் 49வது ஓவரில் ஜேக்கப் ஓரம்(7), வெட்டோரி(6) அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் பொறுப்பாக ஆடிய வில்லியம்சன் (38 *), ஓரளவுக்கு கைகொடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 221 ரன்கள் மட்டும் எடுத்தது.
தென் ஆப்ரிக்க தரப்பில் மார்கல் 3, ஸ்டைன் 2, இம்ரான் தாகிர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
திணறல் துவக்கம்:
சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணி துவக்கத்தில் தடுமாறியது. நாதன் மெக்கலம் வீசிய முதல் ஓவரில் ஆம்லா(7) வெளியேறினார். கேப்டன் ஸ்மித்(28) அதிக நேரம் நிலைக்கவில்லை. பின் அனுபவ காலிஸ், டிவிலியர்ஸ் இணைந்து பொறுப்பாக ஆடினர். சவுத்தி பந்தில் சிக்சர் அடிக்க முயன்ற காலிஸ்(47), எல்லைக் கோட்டு அருகே ஜேக்கப் ஓரத்தின் கலக்கல் "கேட்ச்சில்' அவுட்டானார். நாதன் மெக்கலம் வீசிய போட்டியின் 28வது ஓவரில் தென் ஆப்ரிக்க அணிக்கு இரட்டை "அடி' விழுந்தது. 4வது பந்தில் டுமினி(3) போல்டானார். 6வது பந்தில் டிவிலியர்ஸ்(35) ரன் அவுட்டானார்.
சொதப்பல் ஆட்டம்:
நியூசிலாந்தின் அபார பந்துவீச்சில், தென் ஆப்ரிக்க அணிக்கு தொடர்ந்து சேதாரம் ஏற்பட்டது. ஓரம் பந்தில் போத்தா(2) போல்டானார். அடுத்து வந்தவர்களும் பொறுப்பற்ற முறையில் விளையாடினர். ஓரம் வேகத்தில் ராபின் பீட்டர்சனும்(0) வெளியேறினார். ஸ்டைன்(8) கைகொடுக்க தவறினார். போராடிய டு பிளசிஸ் 36 ரன்களுக்கு வெளியேற, தென் ஆப்ரிக்க அணி 43.2 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் உலக கோப்பை "நாக்-அவுட்' போட்டிகளில் சொதப்பும் தென் ஆப்ரிக்க அணியின் பலவீனம் மீண்டும் ஒருமுறை அம்பலமானது.
இம்முறை அரையிறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்து புதுஅவதாரம் எடுத்துள்ளது. இன்று நடக்கும் இலங்கை-இங்கிலாந்து மோதலில் வெற்றி பெறும் அணியுடன், அரையிறுதியில்(வரும் 29ம் தேதி) நியூசிலாந்து விளையாடும்.
நான்கு விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் ஜேக்கம் ஓரம் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ஆறாவது முறை
நேற்று தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து அணி, உலக கோப்பை அரங்கில் ஆறாவது முறையாக (1975, 79, 92, 99, 2007, 2011) அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் கடந்த ஐந்து முறையில் ஒரு முறை கூட பைனலுக்கு முன்னேறவில்லை. கடந்த 1983, 87ல் முதல் சுற்றோடு வெளியேறிய நியூசிலாந்து அணி 1996ல் காலிறுதி வரையிலும், 2003ல் "சூப்பர்-6' சுற்று வரையிலும் முன்னேறியது.
ஸ்கோர் போர்டு
நியூசிலாந்து
கப்டில்(கே)போத்தா(ப)ஸ்டைன் 1(14)
பிரண்டன்(கே)+(ப)பீட்டர்சன் 4(4)
ரைடர்(கே)இங்ராம்(ப)இம்ரான் தாகிர் 83(121)
டெய்லர்(கே)காலிஸ்(ப)இம்ரான் தாகிர் 43(72)
ஸ்டைரிஸ்(ப)மார்கல் 16(17)
வில்லியம்சன்-அவுட்இல்லை- 38(41)
நாதன்(கே)டுமினி(ப)ஸ்டைன் 6(18)
ஓரம்(ப)மார்கல் 7(6)
வெட்டோரி(ப)மார்கல் 6(4)
உட்காக்-அவுட்இல்லை- 3(3)
உதிரிகள் 14
மொத்தம் (50 ஓவரில், 8 விக்.,) 221
விக்கெட் வீழ்ச்சி: 1-5(பிரண்டன்), 2-16(கப்டில்), 3-130(டெய்லர்), 4-153(ஸ்டைரிஸ்), 5-156(ரைடர்), 6-188(நாதன்), 7-204(ஓரம்), 8-210(வெட்டோரி)
பந்துவீச்சு: பீட்டர்சன் 9--0-49-1, ஸ்டைன் 10-0-42-2, போத்தா 9-0-29-0, மார்கல் 8-0-46-3, இம்ரான் தாகிர் 9-0-32-2, காலிஸ் 3-1-6-0, டுமினி 2-0-9-0.
தென் ஆப்ரிக்கா
ஆம்லா(கே)வெட்டோரி(ப)நாதன் 7(5)
ஸ்மித்(கே)கவ்(ப)ஓரம் 28(34)
காலிஸ்(கே)ஓரம்(ப)சவுத்தி 47(75)
டிவிலியர்ஸ்-ரன்அவுட்-(கப்டில்/பிரண்டன்) 35(40)
டுமினி(ப)நாதன் 3(12)
டு பிளசிஸ்(கே)சவுத்தி(ப)ஓரம் 36(43)
போத்தா(ப)ஓரம் 2(10)
பீட்டர்சன்(கே)பிரண்டன்(ப)ஓரம் 0(5)
ஸ்டைன்(கே)ஓரம்(ப)நாதன் 8(18)
மார்கல்(கே)கவ்(ப)உட்காக் 3(17)
இம்ரான் தாகிர்-அவுட்இல்லை- 0(1)
உதிரிகள் 3
மொத்தம் (43.2 ஓவரில், "ஆல்-அவுட்') 172
விக்கெட் வீழ்ச்சி: 1-8(ஆம்லா), 2-69(ஸ்மித்), 3-108(காலிஸ்), 4-121(டுமினி), 5-121(டிவிலியர்ஸ்), 6-128(போத்தா), 7-132(பீட்டர்சன்), 8-146(ஸ்டைன்), 9-172(டு பிளசிஸ்), 10-172(மார்கல்).
பந்து வீச்சு: நாதன் 10-1-24-3, வெட்டோரி 10-0-39-0, சவுத்தி 9-0-44-1, ஓரம் 9-1-39-4, உட்காக் 5.2-0-24-1.

ஆமதாபாத்: உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, காலிறுதி போட்டியில் பங்கேற்க சேவக் தயாராகியுள்ளார்.
உலக கோப்பை காலிறுதி போட்டிகள் இன்று முதல் துவங்குகின்றன. நாளை நடக்கும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இதில் சாதிக்க வேண்டும் என்று இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ஸ்ரீசாந்த் இருவரும் நேற்றைய பயிற்சியில் பங்கேற்க வில்லை. மற்ற அனைத்து இந்திய வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்கள், பந்தை எறிதல், உடற்பயிற்சி, மனவலிமை பயிற்சிகளை மேற்கொண்டனர். பின் வலைப்பயிற்சியும் மேற்கொண்டனர்.
கேப்டன் தோனி, சச்சின் இருவரும் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்தனர். இத்தொடரின் துவக்கத்தில் இருந்தே, முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார் சேவக். இந்த தொல்லையிலிருந்து விடுபட, லீக் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது, அவ்வப்போது டில்லி சென்று, தனது "பிசியோதெரபிஸ்ட்டை' சந்தித்து, தேவையான ஆலோசனைகள் பெற்று வந்தார்.
இதனால் தான் கடந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான லீக் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நாளைய போட்டியில் சேவக் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நேற்று கிறிஸ்டன் முன்னிலையில், சேவக் எவ்வித சிக்கலும் இன்றி பயிற்சி செய்தார்.
இதுகுறித்து இந்திய அணி மானேஜர் ரஞ்சிப் பிஸ்வால் கூறுகையில்,"" அனைத்து வீரர்களும் சரியான உடற்தகுதியுடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு தயாராக உள்ளனர்,'' என்றார்.
சேவக் களமிறங்குவதை அடுத்து ரெய்னா அல்லது யூசுப் பதான் இருவரில் ஒருவர் அவருக்கு வழிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

காலிறுதிக்கு சேவக் தயார்

ஆமதாபாத்: உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, காலிறுதி போட்டியில் பங்கேற்க சேவக் தயாராகியுள்ளார்.
உலக கோப்பை காலிறுதி போட்டிகள் இன்று முதல் துவங்குகின்றன. நாளை நடக்கும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இதில் சாதிக்க வேண்டும் என்று இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ஸ்ரீசாந்த் இருவரும் நேற்றைய பயிற்சியில் பங்கேற்க வில்லை. மற்ற அனைத்து இந்திய வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்கள், பந்தை எறிதல், உடற்பயிற்சி, மனவலிமை பயிற்சிகளை மேற்கொண்டனர். பின் வலைப்பயிற்சியும் மேற்கொண்டனர்.
கேப்டன் தோனி, சச்சின் இருவரும் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்தனர். இத்தொடரின் துவக்கத்தில் இருந்தே, முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார் சேவக். இந்த தொல்லையிலிருந்து விடுபட, லீக் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது, அவ்வப்போது டில்லி சென்று, தனது "பிசியோதெரபிஸ்ட்டை' சந்தித்து, தேவையான ஆலோசனைகள் பெற்று வந்தார்.
இதனால் தான் கடந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான லீக் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நாளைய போட்டியில் சேவக் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நேற்று கிறிஸ்டன் முன்னிலையில், சேவக் எவ்வித சிக்கலும் இன்றி பயிற்சி செய்தார்.
இதுகுறித்து இந்திய அணி மானேஜர் ரஞ்சிப் பிஸ்வால் கூறுகையில்,"" அனைத்து வீரர்களும் சரியான உடற்தகுதியுடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு தயாராக உள்ளனர்,'' என்றார்.
சேவக் களமிறங்குவதை அடுத்து ரெய்னா அல்லது யூசுப் பதான் இருவரில் ஒருவர் அவருக்கு வழிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உலக கோப்பை போட்டியில் விளையாடும் சீனியர் வீரர்கள் தெண்டுல்கர், பாண்டிங். ஆனால் இரண்டு பேருக்குள் ஆடு களத்தில் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. சென்னையில் நேற்று நடந்த போட்டியில் அவர் தனது நேர்மையை வெளிப்படுத்தினார்.

2 ரன்னில் இருந்தபோது ராம்பால் வீசியபந்து தெண்டுல்கரின் கிளவுசில் (கையுறை) பட்டு சென்றது. அதை வெஸ்ட்இண்டீஸ் விக்கெட் கீப்பர் பிடித்தார். வெஸ்ட்இண்டீஸ் வீரர் மகிழ்ச்சி அடைய நடுவர் டேவிஸ் அவுட் இல்லை என்று தலையால் மறுத்தார். ஆனால் தெண்டுல்கர் பந்து கையுறையில் பட்டு சென்றதை உணர்ந்தார். இதை தொடர்ந்து நடுவர் அவுட் கொடுக்காமலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவரது நேர்மை கிரிக்கெட் உலகத்தால் பாராட்டப்படுகிறது.

ஆனால் இதற்கு நேர்மாறாக ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் உள்ளார். நேற்று முன்தினம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் அவுட் இல்லை என்று கூறி மைதானத்தை விட்டு செல்ல மறுத்தார். மறுபரிசீலனை முறையில் அவரது அவுட் உறுதி செய்யப்பட்டது.

வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் டாரன்சமி கூறும்போது, தெண்டுல்கர் தான் உண்மையிலேயே ஜென்டில் மேன். அவராக மைதானத்தை விட்டு வெளியே சென்றது மிகுந்த பாராட்டுக்குரியது என்றார்.

தெண்டுல்கரின் நேர்மையும் பாண்டிங்கின் சுயநலமும்

உலக கோப்பை போட்டியில் விளையாடும் சீனியர் வீரர்கள் தெண்டுல்கர், பாண்டிங். ஆனால் இரண்டு பேருக்குள் ஆடு களத்தில் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. சென்னையில் நேற்று நடந்த போட்டியில் அவர் தனது நேர்மையை வெளிப்படுத்தினார்.

2 ரன்னில் இருந்தபோது ராம்பால் வீசியபந்து தெண்டுல்கரின் கிளவுசில் (கையுறை) பட்டு சென்றது. அதை வெஸ்ட்இண்டீஸ் விக்கெட் கீப்பர் பிடித்தார். வெஸ்ட்இண்டீஸ் வீரர் மகிழ்ச்சி அடைய நடுவர் டேவிஸ் அவுட் இல்லை என்று தலையால் மறுத்தார். ஆனால் தெண்டுல்கர் பந்து கையுறையில் பட்டு சென்றதை உணர்ந்தார். இதை தொடர்ந்து நடுவர் அவுட் கொடுக்காமலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவரது நேர்மை கிரிக்கெட் உலகத்தால் பாராட்டப்படுகிறது.

ஆனால் இதற்கு நேர்மாறாக ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் உள்ளார். நேற்று முன்தினம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் அவுட் இல்லை என்று கூறி மைதானத்தை விட்டு செல்ல மறுத்தார். மறுபரிசீலனை முறையில் அவரது அவுட் உறுதி செய்யப்பட்டது.

வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் டாரன்சமி கூறும்போது, தெண்டுல்கர் தான் உண்மையிலேயே ஜென்டில் மேன். அவராக மைதானத்தை விட்டு வெளியே சென்றது மிகுந்த பாராட்டுக்குரியது என்றார்.

நாக்பூர்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை அநியாயமாக கோட்டை விட்டது, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி 9 விக்கெட்டுகளை வெறும் 29 ரன்களுக்கு இழந்தது. பீல்டிங், பவுலிங்கில் சொதப்பியது போன்றவை வீழ்ச்சிக்கு வித்திட்டது. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை "டை' செய்த நம்மவர்கள், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. கேப்டன் தோனியின் தவறான உத்திகள் தொடர்வது மிகுந்த கவலை அளிக்கிறது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில், அயர்லாந்து, நெதர்லாந்துக்கு எதிராக "வீராப்பு' காட்டிய இந்திய அணி, சமபலம் வாய்ந்த மற்ற அணிகளிடம் திணறியது. நேற்று முன் தினம் நாக்பூரில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் வீணாக வெற்றியை பறிகொடுத்தது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சச்சின்(111), சேவக்(73), காம்பிர்(69) நல்ல அடித்தளம் அமைத்தனர். அடுத்து வந்தவர்கள் சொதப்ப, கடைசி 9 விக்கெட்டுகளை 29 ரன்களுக்கு இழந்தது. 48.4 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தவறான முடிவு:
இப்போட்டியில் யூசுப் பதானை முன்னதாகவும், விராத் கோஹ்லியை தாமதமாகவும் களமிறக்கி "பேட்டிங் ஆர்டரில்' வீண் குழப்பத்தை ஏற்படுத்தினார் தோனி. பின் பந்துவீச்சிலும் தவறான உத்தியை கையாண்டார். ஹர்பஜன் வசம் ஒரு ஓவர் இருந்த நிலையில், நெஹ்ராவிடம் கடைசி ஓவரை வீணாக கொடுத்தார். இதனை பயன்படுத்திய ராபின் பீட்டர்சன் சிக்சர், பவுண்டரிகளாக விளாச, தென் ஆப்ரிக்கா 49.4 ஓவரில் 300 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
அணியில் மாற்றம்:
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை' ஆன போது, இந்திய அணி சுதாரித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தென் ஆப்ரிக்க அணியில் கூட போத்தா, ராபின் பீட்டர்சன் என இரண்டு பிரதான "ஸ்பின்னர்கள்' இடம் பெற்றனர். ஆனால், இந்திய அணியில் ஹர்பஜன் மட்டும் வாய்ப்பு பெற்றார். தோனிக்கு மிகவும் பிடித்த பியுஸ் சாவ்லா நீக்கப்பட்ட நிலையில், அஷ்வினுக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம். இதே போல யூசுப் பதான் கடந்த போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. இவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம். தவிர, பேட்டிங் "பவர்பிளேயில்' எப்படி விளையாடுவது என்று தெரியவில்லை. மற்ற அணிகள் எல்லாம் இந்த நேரத்தில் ரன் மழை பொழியும் போது, இந்திய அணி மட்டும் விக்கெட்டுகளை மடமடவென இழக்கிறது. இதன் காரணமாக "ஓபனிங்' நன்றால் இருந்தாலும், "பினிஷிங்' மோசமாக அமைகிறது. இத்தவறை போக்குவதற்கு பயிற்சியாளர் கிறிஸ்டன் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய தவறினால், தோனியின் தலைமை பதவி குறித்து கேள்வி எழும். இவர், சூழ்நிலைக்கு ஏற்றவாறு உத்திகளை மாற்றி, அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இந்திய அணி வீழ்ந்தது ஏன்? * சொதப்பல் ஆட்டத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

நாக்பூர்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை அநியாயமாக கோட்டை விட்டது, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி 9 விக்கெட்டுகளை வெறும் 29 ரன்களுக்கு இழந்தது. பீல்டிங், பவுலிங்கில் சொதப்பியது போன்றவை வீழ்ச்சிக்கு வித்திட்டது. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை "டை' செய்த நம்மவர்கள், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. கேப்டன் தோனியின் தவறான உத்திகள் தொடர்வது மிகுந்த கவலை அளிக்கிறது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில், அயர்லாந்து, நெதர்லாந்துக்கு எதிராக "வீராப்பு' காட்டிய இந்திய அணி, சமபலம் வாய்ந்த மற்ற அணிகளிடம் திணறியது. நேற்று முன் தினம் நாக்பூரில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் வீணாக வெற்றியை பறிகொடுத்தது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சச்சின்(111), சேவக்(73), காம்பிர்(69) நல்ல அடித்தளம் அமைத்தனர். அடுத்து வந்தவர்கள் சொதப்ப, கடைசி 9 விக்கெட்டுகளை 29 ரன்களுக்கு இழந்தது. 48.4 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தவறான முடிவு:
இப்போட்டியில் யூசுப் பதானை முன்னதாகவும், விராத் கோஹ்லியை தாமதமாகவும் களமிறக்கி "பேட்டிங் ஆர்டரில்' வீண் குழப்பத்தை ஏற்படுத்தினார் தோனி. பின் பந்துவீச்சிலும் தவறான உத்தியை கையாண்டார். ஹர்பஜன் வசம் ஒரு ஓவர் இருந்த நிலையில், நெஹ்ராவிடம் கடைசி ஓவரை வீணாக கொடுத்தார். இதனை பயன்படுத்திய ராபின் பீட்டர்சன் சிக்சர், பவுண்டரிகளாக விளாச, தென் ஆப்ரிக்கா 49.4 ஓவரில் 300 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
அணியில் மாற்றம்:
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை' ஆன போது, இந்திய அணி சுதாரித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தென் ஆப்ரிக்க அணியில் கூட போத்தா, ராபின் பீட்டர்சன் என இரண்டு பிரதான "ஸ்பின்னர்கள்' இடம் பெற்றனர். ஆனால், இந்திய அணியில் ஹர்பஜன் மட்டும் வாய்ப்பு பெற்றார். தோனிக்கு மிகவும் பிடித்த பியுஸ் சாவ்லா நீக்கப்பட்ட நிலையில், அஷ்வினுக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம். இதே போல யூசுப் பதான் கடந்த போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. இவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம். தவிர, பேட்டிங் "பவர்பிளேயில்' எப்படி விளையாடுவது என்று தெரியவில்லை. மற்ற அணிகள் எல்லாம் இந்த நேரத்தில் ரன் மழை பொழியும் போது, இந்திய அணி மட்டும் விக்கெட்டுகளை மடமடவென இழக்கிறது. இதன் காரணமாக "ஓபனிங்' நன்றால் இருந்தாலும், "பினிஷிங்' மோசமாக அமைகிறது. இத்தவறை போக்குவதற்கு பயிற்சியாளர் கிறிஸ்டன் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய தவறினால், தோனியின் தலைமை பதவி குறித்து கேள்வி எழும். இவர், சூழ்நிலைக்கு ஏற்றவாறு உத்திகளை மாற்றி, அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா இலங்கை வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் நடைபெற்று வருகிறது. கடந்த 19-ந்தேதி தொடங்கிய இந்தப்போட்டியின் 8-வது லீக் ஆட்டம் மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின.

ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியையும் நியூசிலாந்து அணி கென்யாவையும் தோற்கடித்து இருந்தன. ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் எதுவும் இல்லை. நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஜேக்கப் ஒரமுக்கு பதிலாக ஜேமி ஹவ் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் டாஸ் வென்று நியூசிலாந்தை முதலில் ஆட அழைத்தார்.

குப்திலும் மெக்குல்லமும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜான்சன் டய்ட் ஆகியோரின் அனல் பறக்கும் பந்து வீச்சில் நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. 73 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டை இழந்தது. மெக்குல்லம் (16 ரன்) குப்தில் (10) ரைடர் (25) பிராங்ளின் (0) ஸ்டைரிஸ் (0) டெய்லர் (7) ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.

நாதன் மெக்குல்லம் 8-வது விக்கெட்டான ஹேமிஹாவ்- நாதன் மெக்குல்லம் ஜோடி சிறிது தாக்குபிடித்து ஆடியது. ஸ்கோர் 121 ஆக இருந்தபோது ஹவ் 22 ரன்னில் ஆவுட் ஆனார். அடுத்து வந்த வெட்டோரி பொறுப்புடன் ஆடினார். நன்றாக ஆடிக் கொண்டிருந்த நாதன் மெக்குல்லம் 52 ரன்னில் அவுட் ஆனார். அப்போது நியூசிலாந்து ஸ்கோர் 8 விக்கெட்டுக்கு 175 ஆக இருந்தது.

நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 206 ரன்னில் சுருண்டது. வெட்டோரி 44 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஜான்சன் 4 விக்கெட்டும் டய்ட் 3 விக்கெட்டும் சுமித் கிரெஸ்ஜா பெர்ட்லீ தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களாக வாட்சனும், காடின்சும் அதிரடியாக ஆடினார்கள் இருவரும் இணைந்து 138 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடியை பென்னட் பிரித்தார். காடின் (55 ரன்கள்) ப்ரான்ங்ளிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வாட்சனும் 62 ரன்னில் வெளியேறினார். அதை தொடர்ந்து பாண்டிங்கும் 12 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் 34 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா இலங்கை வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் நடைபெற்று வருகிறது. கடந்த 19-ந்தேதி தொடங்கிய இந்தப்போட்டியின் 8-வது லீக் ஆட்டம் மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின.

ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியையும் நியூசிலாந்து அணி கென்யாவையும் தோற்கடித்து இருந்தன. ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் எதுவும் இல்லை. நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஜேக்கப் ஒரமுக்கு பதிலாக ஜேமி ஹவ் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் டாஸ் வென்று நியூசிலாந்தை முதலில் ஆட அழைத்தார்.

குப்திலும் மெக்குல்லமும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜான்சன் டய்ட் ஆகியோரின் அனல் பறக்கும் பந்து வீச்சில் நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. 73 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டை இழந்தது. மெக்குல்லம் (16 ரன்) குப்தில் (10) ரைடர் (25) பிராங்ளின் (0) ஸ்டைரிஸ் (0) டெய்லர் (7) ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.

நாதன் மெக்குல்லம் 8-வது விக்கெட்டான ஹேமிஹாவ்- நாதன் மெக்குல்லம் ஜோடி சிறிது தாக்குபிடித்து ஆடியது. ஸ்கோர் 121 ஆக இருந்தபோது ஹவ் 22 ரன்னில் ஆவுட் ஆனார். அடுத்து வந்த வெட்டோரி பொறுப்புடன் ஆடினார். நன்றாக ஆடிக் கொண்டிருந்த நாதன் மெக்குல்லம் 52 ரன்னில் அவுட் ஆனார். அப்போது நியூசிலாந்து ஸ்கோர் 8 விக்கெட்டுக்கு 175 ஆக இருந்தது.

நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 206 ரன்னில் சுருண்டது. வெட்டோரி 44 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஜான்சன் 4 விக்கெட்டும் டய்ட் 3 விக்கெட்டும் சுமித் கிரெஸ்ஜா பெர்ட்லீ தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களாக வாட்சனும், காடின்சும் அதிரடியாக ஆடினார்கள் இருவரும் இணைந்து 138 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடியை பென்னட் பிரித்தார். காடின் (55 ரன்கள்) ப்ரான்ங்ளிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வாட்சனும் 62 ரன்னில் வெளியேறினார். அதை தொடர்ந்து பாண்டிங்கும் 12 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் 34 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.


Cricket Live score Worldcup 2011update



பெங்களூரு: கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்கும் 2 வது ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் நடக்கிறது. முதல் ‌போட்டியில் வங்கேதேசத்தை அபார வெற்றிக்கொண்ட இந்தியா 2 வது போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கிறது. இந்த போட்டி க்கான டிக்கட் விற்பனை சின்னசாமி ஸ்டேடியத்தில் துவங்கியது.
டிக்கட் வாங்க ‌நேற்று நள்ளிரவு முதலே ரசிகர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விற்பனை துவங்கிய சில மணிநேரத்தில் டிக்‌கட்டுகள் விற்றுத்தீர்ந்தன. இதனால ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் கவுன்டர் நோக்கி முன்னேறினர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடி‌யடி நடத்தினர். இதில் பலர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனையடுத்து போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் பரபரப்பு நிலவியது. பலர் அடிபட்டு ஓடுவது பரிதாபமாக இருந்தது.

இந்த மைதானத்தை பொறுத்தவரை 40 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கமுடியும். ஆனால் 4 ஆயிரம் டிக்கெட் மட்டும் விற்பனைக்கு வந்தன. இதனால் பலருக்கு கிடைக்காமல் போனது. ஏனைய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமும், பிளாக்கிலும் விற்கப்பட்டன. இதனால் ரசிகர்கள் போட்டி நடத்தும் கமிட்டி மீது உலக கோப்பை கிரிக்கெட் மத்திய கமிட்டிக்கு புகார் அனுப்பினர்.

டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி : நள்ளிரவு முதல் காத்துக்கிடந்து ஏமாற்றம்

பெங்களூரு: கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்கும் 2 வது ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் நடக்கிறது. முதல் ‌போட்டியில் வங்கேதேசத்தை அபார வெற்றிக்கொண்ட இந்தியா 2 வது போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கிறது. இந்த போட்டி க்கான டிக்கட் விற்பனை சின்னசாமி ஸ்டேடியத்தில் துவங்கியது.
டிக்கட் வாங்க ‌நேற்று நள்ளிரவு முதலே ரசிகர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விற்பனை துவங்கிய சில மணிநேரத்தில் டிக்‌கட்டுகள் விற்றுத்தீர்ந்தன. இதனால ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் கவுன்டர் நோக்கி முன்னேறினர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடி‌யடி நடத்தினர். இதில் பலர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனையடுத்து போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் பரபரப்பு நிலவியது. பலர் அடிபட்டு ஓடுவது பரிதாபமாக இருந்தது.

இந்த மைதானத்தை பொறுத்தவரை 40 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கமுடியும். ஆனால் 4 ஆயிரம் டிக்கெட் மட்டும் விற்பனைக்கு வந்தன. இதனால் பலருக்கு கிடைக்காமல் போனது. ஏனைய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமும், பிளாக்கிலும் விற்கப்பட்டன. இதனால் ரசிகர்கள் போட்டி நடத்தும் கமிட்டி மீது உலக கோப்பை கிரிக்கெட் மத்திய கமிட்டிக்கு புகார் அனுப்பினர்.

நாக்பூர்: உலக கோப்பை லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திணறல் வெற்றி பெற்றது. நெதர்லாந்து வீரர் டசாட்டேயின் அதிரடி சதம் வீணானது.
பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணைக்கண்டத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் "பி' பிரிவு லீக் போட்டியில் நேற்று, இங்கிலாந்து அணி பலவீனமான நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. "டாஸ்' வென்ற நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன், பேட்டிங் தேர்வு செய்தார்.
துணிச்சல் துவக்கம்:
நெதர்லாந்து அணிக்கு கெர்வெஜீ, பாரெசி இருவரும் துணிச்சலான துவக்கம் கொடுத்தனர். பிராட் ஓவரில் மூன்று பவுண்டரி விளாசி மிரட்டினார் பாரெசி. கெர்வெஜீ 16 ரன்களில் திரும்பினார். அடுத்து வந்த கூப்பர், பிரஸ்னன் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். இந்நிலையில் பாரெசி (29) சுவான் சுழலில் சிக்கினார்.
கூப்பர் ஏமாற்றம்:
பின் கூப்பருடன், டசாட்டே இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து பவுலிங்கை எளிதாக எதிர்கொண்டது. கோலிங்வுட் பந்தில் 2 பவுண்டரி விளாசிய டசாட்டே, பீட்டர்சன் பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார். நீண்ட நேரம் தாக்குப்பிடித்த கூப்பர் (47) அரைசத வாய்ப்பை இழந்தார்.
டசாட்டே சதம்:
மறுமுனையில் அதிரடியாக ரன்குவித்துக் கொண்டிருந்தார் டசாட்டே. குரூத் தன்பங்கிற்கு 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். பிரஸ்னன் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த டசாட்டே, சர்வதேச அரங்கில் 4வது சதம் கடந்தார். கேப்டன் போரன், ஆண்டர்சன் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். 110 பந்துகளில் 119 ரன்கள் (3 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்த டசாட்டே, பிராட் வேகத்தில் வீழ்ந்தார்.
நெதர்லாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்தது. போரன் (35), புகாரி (6) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் பிராட், சுவான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சூப்பர் துவக்கம்:
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், பீட்டர்சன் அபார துவக்கம் கொடுத்தனர். பீட்டர்சன் நிதானமாக விளையாட, ஸ்டிராஸ் முதல் ஓவரில் 3 பவுண்டரி அடித்து வெளுத்து வாங்கினார். முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் பீட்டர்சன் (39) பெவிலியன் திரும்பினார்.
ஸ்டிராஸ் அபாரம்:
ஸ்டிராசுடன் டிராட் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டிராஸ், தனது 27வது அரைசதம் கடந்தார். இவர் 88 ரன்களுக்கு அவுட்டானார்.
இங்கிலாந்து வெற்றி:
அடுத்து டிராட், இயான் பெல் இணைந்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஒரு நாள் அரங்கில் 7வது அரைசதம் அடித்த டிராட், 62 ரன்களுக்கு அவுட்டானார். பெல் 33 ரன்களுக்கு வெளியேற சிக்கல் ஏற்பட்டது.
கடைசி கட்டத்தில் கோலிங்வுட் (30*), போபரா (30*) பொறுப்பாக ஆடி, வெற்றியை <உறுதி செய்தனர். இங்கிலாந்து அணி 48.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி தனது இரண்டாவது போட்டியில் (பிப். 27 ) இந்தியாவை சந்திக்கிறது.

இங்கிலாந்து திணறல் வெற்றி! * நெதர்லாந்து வீரர் டசாட்டே சதம் வீண்

நாக்பூர்: உலக கோப்பை லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திணறல் வெற்றி பெற்றது. நெதர்லாந்து வீரர் டசாட்டேயின் அதிரடி சதம் வீணானது.
பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணைக்கண்டத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் "பி' பிரிவு லீக் போட்டியில் நேற்று, இங்கிலாந்து அணி பலவீனமான நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. "டாஸ்' வென்ற நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன், பேட்டிங் தேர்வு செய்தார்.
துணிச்சல் துவக்கம்:
நெதர்லாந்து அணிக்கு கெர்வெஜீ, பாரெசி இருவரும் துணிச்சலான துவக்கம் கொடுத்தனர். பிராட் ஓவரில் மூன்று பவுண்டரி விளாசி மிரட்டினார் பாரெசி. கெர்வெஜீ 16 ரன்களில் திரும்பினார். அடுத்து வந்த கூப்பர், பிரஸ்னன் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். இந்நிலையில் பாரெசி (29) சுவான் சுழலில் சிக்கினார்.
கூப்பர் ஏமாற்றம்:
பின் கூப்பருடன், டசாட்டே இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து பவுலிங்கை எளிதாக எதிர்கொண்டது. கோலிங்வுட் பந்தில் 2 பவுண்டரி விளாசிய டசாட்டே, பீட்டர்சன் பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார். நீண்ட நேரம் தாக்குப்பிடித்த கூப்பர் (47) அரைசத வாய்ப்பை இழந்தார்.
டசாட்டே சதம்:
மறுமுனையில் அதிரடியாக ரன்குவித்துக் கொண்டிருந்தார் டசாட்டே. குரூத் தன்பங்கிற்கு 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். பிரஸ்னன் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த டசாட்டே, சர்வதேச அரங்கில் 4வது சதம் கடந்தார். கேப்டன் போரன், ஆண்டர்சன் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். 110 பந்துகளில் 119 ரன்கள் (3 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்த டசாட்டே, பிராட் வேகத்தில் வீழ்ந்தார்.
நெதர்லாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்தது. போரன் (35), புகாரி (6) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் பிராட், சுவான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சூப்பர் துவக்கம்:
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், பீட்டர்சன் அபார துவக்கம் கொடுத்தனர். பீட்டர்சன் நிதானமாக விளையாட, ஸ்டிராஸ் முதல் ஓவரில் 3 பவுண்டரி அடித்து வெளுத்து வாங்கினார். முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் பீட்டர்சன் (39) பெவிலியன் திரும்பினார்.
ஸ்டிராஸ் அபாரம்:
ஸ்டிராசுடன் டிராட் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டிராஸ், தனது 27வது அரைசதம் கடந்தார். இவர் 88 ரன்களுக்கு அவுட்டானார்.
இங்கிலாந்து வெற்றி:
அடுத்து டிராட், இயான் பெல் இணைந்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஒரு நாள் அரங்கில் 7வது அரைசதம் அடித்த டிராட், 62 ரன்களுக்கு அவுட்டானார். பெல் 33 ரன்களுக்கு வெளியேற சிக்கல் ஏற்பட்டது.
கடைசி கட்டத்தில் கோலிங்வுட் (30*), போபரா (30*) பொறுப்பாக ஆடி, வெற்றியை <உறுதி செய்தனர். இங்கிலாந்து அணி 48.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி தனது இரண்டாவது போட்டியில் (பிப். 27 ) இந்தியாவை சந்திக்கிறது.

முக நூல்

Popular Posts