background img

புதிய வரவு

Showing posts with label mubarack. Show all posts
Showing posts with label mubarack. Show all posts
மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் அறிவித்துள்ளார்.

எகிப்தில் கடந்த 30 ஆண்டு காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகக்கோரி, கடந்த ஒரு வாரமாக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் ந்டத்தி வருகிறார்கள்.

போராட்டத்தின்போது வெடித்த பயங்கர கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது.

அதிபருக்கு எதிராக நேற்று தலைநகர் கெய்ரோவின் மையப்பகுதியில் உள்ள தரிர் சதுக்கத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இராணுவமும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அறிவித்துவிட்டது.

நிலைமை இந்த அளவிற்கு தீவிரமடைந்துள்ள போதிலும்,முபாரக் இன்னமும் பதவி விலக மறுத்துவருகிறார்.

தமது பதவிக்காலம் முடிவடையும் இந்த ஆண்டு செப்டம்பர் வரை பதவியில் தொடர்ந்து நீடிக்கபோவதாக அறிவித்துள்ளார்.அதே சமயம் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் வகையில் தாம் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

ஆனால் முபாரக்கின் இந்த அறிவிப்பு ஏமாற்று வேலை என்று தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், அவர் உடனே பதவி விலக வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: எகிப்து அதிபர் முபாரக் அறிவிப்பு

மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் அறிவித்துள்ளார்.

எகிப்தில் கடந்த 30 ஆண்டு காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகக்கோரி, கடந்த ஒரு வாரமாக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் ந்டத்தி வருகிறார்கள்.

போராட்டத்தின்போது வெடித்த பயங்கர கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது.

அதிபருக்கு எதிராக நேற்று தலைநகர் கெய்ரோவின் மையப்பகுதியில் உள்ள தரிர் சதுக்கத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இராணுவமும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அறிவித்துவிட்டது.

நிலைமை இந்த அளவிற்கு தீவிரமடைந்துள்ள போதிலும்,முபாரக் இன்னமும் பதவி விலக மறுத்துவருகிறார்.

தமது பதவிக்காலம் முடிவடையும் இந்த ஆண்டு செப்டம்பர் வரை பதவியில் தொடர்ந்து நீடிக்கபோவதாக அறிவித்துள்ளார்.அதே சமயம் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் வகையில் தாம் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

ஆனால் முபாரக்கின் இந்த அறிவிப்பு ஏமாற்று வேலை என்று தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், அவர் உடனே பதவி விலக வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலக கோரி போராட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எகிப்தில் சுமார் 30 ஆண்டுகளாக அதிபராக உள்ள ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கெய்ரோவில் ஏறக்குறைய ஒரு வாரமாக பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,கிளர்ச்சியாளர்களை இராணுவப் படையினர் மூலம் அடக்கிவிடலாம் என்ற முடிவுக்கு வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்,நேற்று இராணுவ தலைமையகத்திற்கு சென்றார்.

அங்கு இராணுவ உயரதிகாரிகள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணை அதிபர் ஒமர் சுலைமான் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து வீதிகளில் கூடுதல் இராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர்.

இருப்பினும் கிளர்ச்சியாளர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட மாட்டாது என்று இராணுவம் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக முபாரக் அரசு தெரிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை: எகிப்து அரசு அறிவிப்பு

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலக கோரி போராட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எகிப்தில் சுமார் 30 ஆண்டுகளாக அதிபராக உள்ள ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கெய்ரோவில் ஏறக்குறைய ஒரு வாரமாக பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,கிளர்ச்சியாளர்களை இராணுவப் படையினர் மூலம் அடக்கிவிடலாம் என்ற முடிவுக்கு வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்,நேற்று இராணுவ தலைமையகத்திற்கு சென்றார்.

அங்கு இராணுவ உயரதிகாரிகள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணை அதிபர் ஒமர் சுலைமான் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து வீதிகளில் கூடுதல் இராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர்.

இருப்பினும் கிளர்ச்சியாளர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட மாட்டாது என்று இராணுவம் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக முபாரக் அரசு தெரிவித்துள்ளது.

கெய்ரோ: எகிப்தில் மக்களின் போராட்டத்தால் திணறி வரும் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி ‘10 லட்சம் பேர் பேரணி’ என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் இன்று பிரமாண்ட பேரணி நடத்துகின்றன. இதனால், தலைநகர் கெய்ரோவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
எகிப்தில் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் அதிபர் ஹோஸ்னி முபாரக், ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முன்வரவில்லை என்று குற்றம்சாட்டி லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் கெய்ரோவின் பிரமாண்ட சதுக்கத்தில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். அதிபர் உடனடியாக பதவி விலகக் கோரி கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதவி விலக மறுத்து வரும் முபாரக், தனது அமைச்சரவையை 2 நாட்கள் முன் டிஸ்மிஸ் செய்தார். புதிய பிரதமராக அகமது ஷபீக்கை நேற்று நியமித்த அவர், புதிய அமைச்சரவையையும் அறிவித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவும், அரசியல் சீர்திருத்தங்களை தொடங்கவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு புதிய பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளதாக ஹோஸ்னி முபாரக் தெரிவித்தார். அவரது அறிவிப்பை அரசு தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.

ஆனால், முபாரக்கின் இந்நடவடிக்கையை நிராகரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கெய்ரோவில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. எனினும், கெய்ரோ சதுக்கத்தில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் மறுத்து விட்டனர். இரவிலும் கடுங்குளிரில் அவர்கள் அங்கேயே தங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிபருக்கு எதிரான மக்களின் கிளர்ச்சியில் எதிர்க் கட்சிகளும் முழுவீச்சில் குதித்துள்ளன. ‘மார்ச் ஆப் மில்லியன்ஸ்’ என்ற பெயரில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணியை இன்று நடத்துகின்றன. இதனால், எகிப்தில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. ராணுவத்தைக் கொண்டு கலவரம் ஒடுக்கப்படுமா அல்லது மக்கள் எதிர்ப்புக்கு பணிந்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகுவாரா என்பது மர்மமாக உள்ளது.

இதற்கிடையே, அதிபருக்கு எதிரான போராட்டத்தில் ராணுவத்தின் ஒரு பகுதியினரும் மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், எகிப்தில் ராணுவப் புரட்சி ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. முபாரக்குக்கு எதிராக போராட்டத்தை ஆதரித்து வெளிநாடு வாழ் எகிப்து மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால், எகிப்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில், எகிப்தில் இருந்து நேற்று மேலும் 380 இந்தியர்கள் நாடு திரும்பினர். எகிப்தில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை இந்திய தூதரகம் கண்காணித்து வருகிறது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எகிப்து அதிபர் பதவி விலக கோரி 10 லட்சம் பேர் இன்று பேரணி

கெய்ரோ: எகிப்தில் மக்களின் போராட்டத்தால் திணறி வரும் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி ‘10 லட்சம் பேர் பேரணி’ என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் இன்று பிரமாண்ட பேரணி நடத்துகின்றன. இதனால், தலைநகர் கெய்ரோவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
எகிப்தில் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் அதிபர் ஹோஸ்னி முபாரக், ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முன்வரவில்லை என்று குற்றம்சாட்டி லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் கெய்ரோவின் பிரமாண்ட சதுக்கத்தில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். அதிபர் உடனடியாக பதவி விலகக் கோரி கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதவி விலக மறுத்து வரும் முபாரக், தனது அமைச்சரவையை 2 நாட்கள் முன் டிஸ்மிஸ் செய்தார். புதிய பிரதமராக அகமது ஷபீக்கை நேற்று நியமித்த அவர், புதிய அமைச்சரவையையும் அறிவித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவும், அரசியல் சீர்திருத்தங்களை தொடங்கவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு புதிய பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளதாக ஹோஸ்னி முபாரக் தெரிவித்தார். அவரது அறிவிப்பை அரசு தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.

ஆனால், முபாரக்கின் இந்நடவடிக்கையை நிராகரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கெய்ரோவில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. எனினும், கெய்ரோ சதுக்கத்தில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் மறுத்து விட்டனர். இரவிலும் கடுங்குளிரில் அவர்கள் அங்கேயே தங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிபருக்கு எதிரான மக்களின் கிளர்ச்சியில் எதிர்க் கட்சிகளும் முழுவீச்சில் குதித்துள்ளன. ‘மார்ச் ஆப் மில்லியன்ஸ்’ என்ற பெயரில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணியை இன்று நடத்துகின்றன. இதனால், எகிப்தில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. ராணுவத்தைக் கொண்டு கலவரம் ஒடுக்கப்படுமா அல்லது மக்கள் எதிர்ப்புக்கு பணிந்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகுவாரா என்பது மர்மமாக உள்ளது.

இதற்கிடையே, அதிபருக்கு எதிரான போராட்டத்தில் ராணுவத்தின் ஒரு பகுதியினரும் மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், எகிப்தில் ராணுவப் புரட்சி ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. முபாரக்குக்கு எதிராக போராட்டத்தை ஆதரித்து வெளிநாடு வாழ் எகிப்து மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால், எகிப்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில், எகிப்தில் இருந்து நேற்று மேலும் 380 இந்தியர்கள் நாடு திரும்பினர். எகிப்தில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை இந்திய தூதரகம் கண்காணித்து வருகிறது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எகிப்து அதிபர் முபாரக்கை பதவி விலகக் கோரி தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும், கலவரமும் நடந்து வருவதால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி மக்கள் லட்சக்கணக்கில் 5வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதலும் வலுத்து வருகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு இடங்களில் அரசு அலுவலகங்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பிரச்சனையை சமாளிக்க தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கெய்ரோவில் அவரச நிலை பிரகடனம்

எகிப்து அதிபர் முபாரக்கை பதவி விலகக் கோரி தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும், கலவரமும் நடந்து வருவதால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி மக்கள் லட்சக்கணக்கில் 5வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதலும் வலுத்து வருகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு இடங்களில் அரசு அலுவலகங்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பிரச்சனையை சமாளிக்க தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

முக நூல்

Popular Posts