background img

புதிய வரவு

Showing posts with label sm krishna. Show all posts
Showing posts with label sm krishna. Show all posts
கலி்ஃபோர்னியாவிலுள்ள டிரை-வாலி பல்கலைக்கு மோசடி விசா பெற்று படிக்கச் சென்று, தற்போது சட்டச் சிக்கலில் உள்ள இந்திய மாணவர்களின் நலனைக் காப்போம் என்று அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் அமெரிக்கா செல்லும் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், அமெரிக்கா அரசு அதிகாரிகளிடம் இப்பிரச்சனையை எழுப்புவார் என்று கூறியுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையே இராஜதந்திர கூட்டாண்மை மேம்படுத்த வரும் ஏப்ரல் மாதம் வருகை தரவுள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பயணம் தொடர்பாக இறுதி செய்ய அமெரிக்கா செல்லும் நிருபமா, இந்திய மாணவர்கள் பிரச்சனையையும் கையாள்வார் என்று கிருஷ்ணா கூறியுள்ளார்.

இதற்கிடையே, சட்டச் சிக்கலில் உள்ள இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு டிராக்கரை பொறுத்தியுள்ளதை நீக்க வேண்டும் என்று இந்தியத் தூதரம் அமெரிக்க சுங்க மற்றும் குடியுரிமைத் துறையிடன் கோரியுள்ளது. தங்களால் சட்டத்திற்குட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதனை செய்வோம் என்று அந்தத் துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்திய மாணவர்கள் நலனைக் காப்போம்: கிருஷ்ணா உறுதி

கலி்ஃபோர்னியாவிலுள்ள டிரை-வாலி பல்கலைக்கு மோசடி விசா பெற்று படிக்கச் சென்று, தற்போது சட்டச் சிக்கலில் உள்ள இந்திய மாணவர்களின் நலனைக் காப்போம் என்று அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் அமெரிக்கா செல்லும் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், அமெரிக்கா அரசு அதிகாரிகளிடம் இப்பிரச்சனையை எழுப்புவார் என்று கூறியுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையே இராஜதந்திர கூட்டாண்மை மேம்படுத்த வரும் ஏப்ரல் மாதம் வருகை தரவுள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பயணம் தொடர்பாக இறுதி செய்ய அமெரிக்கா செல்லும் நிருபமா, இந்திய மாணவர்கள் பிரச்சனையையும் கையாள்வார் என்று கிருஷ்ணா கூறியுள்ளார்.

இதற்கிடையே, சட்டச் சிக்கலில் உள்ள இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு டிராக்கரை பொறுத்தியுள்ளதை நீக்க வேண்டும் என்று இந்தியத் தூதரம் அமெரிக்க சுங்க மற்றும் குடியுரிமைத் துறையிடன் கோரியுள்ளது. தங்களால் சட்டத்திற்குட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதனை செய்வோம் என்று அந்தத் துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்திய மாணவர்களுக்கு போலி விசா பெற உதவியதற்காக அமெரிக்க அரசால் மூடப்பட்டுள்ள கலி்ஃபோர்னியாவிலுள்ள டிரை-வாலி பல்கலைக் கழகம் குறித்து அறிக்கை அளிக்குமாறு இந்திய தூதரங்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாக அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
டிரை-வேலி பல்கலையில் 1,500க்கும் அதிகமான இந்திய (ஆந்திர) மாணவர்கள் பயின்று வந்தனர். இந்த மாணவர்களில் பெரும்பாலானோருக்கு எஃப்-1 விசா மோசடியாக பெற இந்தப் பல்கலை நிர்வாகம் உதவியுள்ளது. அது மட்டுமின்றி, அவர்கள் வெளியில் பணி செய்துக்கொண்டே படிக்க தகுதி பெறாதவர்களாக இருந்தும் அவர்களுக்கு பணித் தகுதி பெற முகவரியை அளித்துள்ளது என்று அமெரிக்க சுங்க மற்றும் குடியேற்றத் துறை கண்டுபிடித்துள்ளது. இதனால் அந்த பல்கலை மூடப்பட்டுவிட்டது. இதனால் அங்கு பயின்று வரும் மாணவர்கள் 1,550 பேரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இவர்களில் 95 விழுக்காட்டினர் இந்திய மாணவர்களாவர்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கலிஃபோர்னியாவிலுள்ள நமது இந்திய துணைத் தூதரகத்திடமிருந்து அறிக்கை பெற்று அனுப்புமாறு இந்திய தூதரகத்தைக் கேட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அந்த அறிக்கை வந்ததும், அது பற்றி அமெரிக்க அரசிடம் பேசப்படும் என்றும் கூறிய அமைச்சர் கிருஷ்ணா, பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவரும் இந்திய துணைத் தூதரகத்தை நாடாதது வினோதமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

டிரை-வாலி பல்கலை மூடல் குறித்து அறிக்கை கேட்டுள்ளோம்: அமைச்சர் கிருஷ்ணா

இந்திய மாணவர்களுக்கு போலி விசா பெற உதவியதற்காக அமெரிக்க அரசால் மூடப்பட்டுள்ள கலி்ஃபோர்னியாவிலுள்ள டிரை-வாலி பல்கலைக் கழகம் குறித்து அறிக்கை அளிக்குமாறு இந்திய தூதரங்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாக அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
டிரை-வேலி பல்கலையில் 1,500க்கும் அதிகமான இந்திய (ஆந்திர) மாணவர்கள் பயின்று வந்தனர். இந்த மாணவர்களில் பெரும்பாலானோருக்கு எஃப்-1 விசா மோசடியாக பெற இந்தப் பல்கலை நிர்வாகம் உதவியுள்ளது. அது மட்டுமின்றி, அவர்கள் வெளியில் பணி செய்துக்கொண்டே படிக்க தகுதி பெறாதவர்களாக இருந்தும் அவர்களுக்கு பணித் தகுதி பெற முகவரியை அளித்துள்ளது என்று அமெரிக்க சுங்க மற்றும் குடியேற்றத் துறை கண்டுபிடித்துள்ளது. இதனால் அந்த பல்கலை மூடப்பட்டுவிட்டது. இதனால் அங்கு பயின்று வரும் மாணவர்கள் 1,550 பேரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இவர்களில் 95 விழுக்காட்டினர் இந்திய மாணவர்களாவர்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கலிஃபோர்னியாவிலுள்ள நமது இந்திய துணைத் தூதரகத்திடமிருந்து அறிக்கை பெற்று அனுப்புமாறு இந்திய தூதரகத்தைக் கேட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அந்த அறிக்கை வந்ததும், அது பற்றி அமெரிக்க அரசிடம் பேசப்படும் என்றும் கூறிய அமைச்சர் கிருஷ்ணா, பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவரும் இந்திய துணைத் தூதரகத்தை நாடாதது வினோதமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

முக நூல்

Popular Posts