background img

புதிய வரவு

Showing posts with label students. Show all posts
Showing posts with label students. Show all posts
கோலிவுட்டின் கவர்ச்சிப் புயல் நமீதாவுக்கு ஒரு புது பட்டப்பெயரைச் சூட்டியுள்ளனர், இளம் ரசிகர்கள். அதுவும் மாணவர்கள்.

அது... 'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி'!

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த அனைத்துக் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நமீதா. அப்போதுதான் இந்தப் பட்டப் பெயரைச் சூட்டி தங்கள் 'பக்தி'யை வெளிப்படுத்தினர் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள்.

சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான இசைவிழா நடந்தது.

இதில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள 23 கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர். விதவிதமான கருத்துக்களைச் சொல்லும் நடனங்களை ஆடி அசத்தினர்.

இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை நமீதா கலந்து கொண்டார். அவரை கல்லூரியின் நிறுவனர் டாக்டர் ஜேப்பியார், நிர்வாகி ரெஜினா ஜேப்பியார் ஆகியோர் வரவேற்று, திறந்த வெளியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

நமீதாவைப் பார்த்ததும் மாணவர்களின் உற்சாகம் கரைபுரள ஆரம்பித்தது. அப்போது ஒரு மாணவர், 'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி நமீதா' என குரல் எழுப்ப, அதை அப்படியே எதிரொலித்தனர் அனைத்து மாணவர்களும்.

திரும்பத் திரும்ப நமீதாவை இந்தப் பட்டப்பெயரிலேயே அழைக்க, மேடையேறிய நமீதா மாணவர்களின் தனக்கு சூட்டிய இந்தப் பட்டப் பெயரை மகிழ்ச்சியுடன் ஏற்பதாகக் கூறி, தனது முத்தங்களை காற்றில் பறக்கவிட, ஆர்ப்பரித்தனர் மாணவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களும்.

அதன் பிறகு நிகழ்ச்சியை வெகுநேரம் அமர்ந்து ரசித்தார் நமீதா. அங்கிருந்து கிளம்பும்போது மீண்டும் ஒரு முறை மேடையேறி, சிறப்பாக நடனமாடிய மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். அப்போதும், மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி என பெரும் ஆரவாரத்தோடு குரல் எழுப்பி அவரை வழியனுப்பினர்!

'கல்வியிற் சிறந்த தமிழ்நாடு'!

'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி!' - நமீதாவுக்கு மாணவர்கள் சூட்டிய பட்டம்!

கோலிவுட்டின் கவர்ச்சிப் புயல் நமீதாவுக்கு ஒரு புது பட்டப்பெயரைச் சூட்டியுள்ளனர், இளம் ரசிகர்கள். அதுவும் மாணவர்கள்.

அது... 'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி'!

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த அனைத்துக் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நமீதா. அப்போதுதான் இந்தப் பட்டப் பெயரைச் சூட்டி தங்கள் 'பக்தி'யை வெளிப்படுத்தினர் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள்.

சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான இசைவிழா நடந்தது.

இதில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள 23 கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர். விதவிதமான கருத்துக்களைச் சொல்லும் நடனங்களை ஆடி அசத்தினர்.

இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை நமீதா கலந்து கொண்டார். அவரை கல்லூரியின் நிறுவனர் டாக்டர் ஜேப்பியார், நிர்வாகி ரெஜினா ஜேப்பியார் ஆகியோர் வரவேற்று, திறந்த வெளியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

நமீதாவைப் பார்த்ததும் மாணவர்களின் உற்சாகம் கரைபுரள ஆரம்பித்தது. அப்போது ஒரு மாணவர், 'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி நமீதா' என குரல் எழுப்ப, அதை அப்படியே எதிரொலித்தனர் அனைத்து மாணவர்களும்.

திரும்பத் திரும்ப நமீதாவை இந்தப் பட்டப்பெயரிலேயே அழைக்க, மேடையேறிய நமீதா மாணவர்களின் தனக்கு சூட்டிய இந்தப் பட்டப் பெயரை மகிழ்ச்சியுடன் ஏற்பதாகக் கூறி, தனது முத்தங்களை காற்றில் பறக்கவிட, ஆர்ப்பரித்தனர் மாணவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களும்.

அதன் பிறகு நிகழ்ச்சியை வெகுநேரம் அமர்ந்து ரசித்தார் நமீதா. அங்கிருந்து கிளம்பும்போது மீண்டும் ஒரு முறை மேடையேறி, சிறப்பாக நடனமாடிய மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். அப்போதும், மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி என பெரும் ஆரவாரத்தோடு குரல் எழுப்பி அவரை வழியனுப்பினர்!

'கல்வியிற் சிறந்த தமிழ்நாடு'!

இங்கிலாந்தில் உள்ள தனியார் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் படிக்க வரும் ஐரோப்பியர் அல்லாத நாடுகளின் மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்க அந்நாட்டு குடியேற்றத் துறை முடிவு செய்துள்ளதென தகவல்கள் கூறுகின்றன.

இங்கிலாந்திற்கு படிக்க வரும் அயல் நாட்டு மாணவர்களில், குறிப்பாக இந்தியா போன்ற ஆசிய நாட்டு மாணவர்களில் பெரும்பாலானோர் பட்டப்படிப்புகளை விட வணிக கல்வியையும், பள்ளி உயர் கல்வியையுமே படிக்க வருகின்றனர் என்பதும், இவர்களுக்கு கல்வி கற்க வாய்ப்பளிக்கும் பல தனியார் கல்லூரிகள் ‘போகஸ’ கல்லூரிகள் என்பது தெரியவந்துள்ளதாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படி ஐயத்திற்குரிய கல்லூரிகள் எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் மட்டும் 40 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இப்படிப்பட்ட போகஸ் கல்லூரிகளின் உரிமங்கள் 56 இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தங்கள் நாட்டிற்கு படிக்க வரும் மாணவர்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும், அறிவுமிக்கவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்டவர்களை பயன்படுத்திக்கொள்ள இங்கிலாந்து தயாராக உள்ளதாகவும், அப்படிப்பட்டவர்களைத் தவிர்த்து மற்ற குடியேறிகளை தவிர்க்கவும் அந்நாட்டு உள்துறை செயலர் டெரீஸ்ஸா மே முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்திற்கு சராசரியாக இரண்டு இலடச்ம் பேர் குடியேறுகிறார்கள். இவர்களின் எண்ணிக்கையை சில பத்தாயிரங்களாக குறைப்பேன் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்தே வெற்றி பெற்று பிரதமராகியுள்ள டேவிட் கேமரூன், அந்த வாக்குறுதியின் தொடர்ச்சியாகவே மாணவர்கள் வருகையை குறைக்கும் நடவடிக்கையும் திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது.

மாணவர் வருகையைக் குறைக்க யுகே முடிவு?

இங்கிலாந்தில் உள்ள தனியார் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் படிக்க வரும் ஐரோப்பியர் அல்லாத நாடுகளின் மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்க அந்நாட்டு குடியேற்றத் துறை முடிவு செய்துள்ளதென தகவல்கள் கூறுகின்றன.

இங்கிலாந்திற்கு படிக்க வரும் அயல் நாட்டு மாணவர்களில், குறிப்பாக இந்தியா போன்ற ஆசிய நாட்டு மாணவர்களில் பெரும்பாலானோர் பட்டப்படிப்புகளை விட வணிக கல்வியையும், பள்ளி உயர் கல்வியையுமே படிக்க வருகின்றனர் என்பதும், இவர்களுக்கு கல்வி கற்க வாய்ப்பளிக்கும் பல தனியார் கல்லூரிகள் ‘போகஸ’ கல்லூரிகள் என்பது தெரியவந்துள்ளதாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படி ஐயத்திற்குரிய கல்லூரிகள் எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் மட்டும் 40 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இப்படிப்பட்ட போகஸ் கல்லூரிகளின் உரிமங்கள் 56 இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தங்கள் நாட்டிற்கு படிக்க வரும் மாணவர்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும், அறிவுமிக்கவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்டவர்களை பயன்படுத்திக்கொள்ள இங்கிலாந்து தயாராக உள்ளதாகவும், அப்படிப்பட்டவர்களைத் தவிர்த்து மற்ற குடியேறிகளை தவிர்க்கவும் அந்நாட்டு உள்துறை செயலர் டெரீஸ்ஸா மே முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்திற்கு சராசரியாக இரண்டு இலடச்ம் பேர் குடியேறுகிறார்கள். இவர்களின் எண்ணிக்கையை சில பத்தாயிரங்களாக குறைப்பேன் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்தே வெற்றி பெற்று பிரதமராகியுள்ள டேவிட் கேமரூன், அந்த வாக்குறுதியின் தொடர்ச்சியாகவே மாணவர்கள் வருகையை குறைக்கும் நடவடிக்கையும் திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது.

சென்னை: சென்னை துறைமுகத்தில் போர்க் கப்பல்களை வரும் 15ம் தேதி பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1971ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு காரணமாக இருந்த இந்திய கப்பற்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 4ம்தேதி இந்திய கடற்படை நாள் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கிழக்கிந்திய கப்பற்படையை சேர்ந்த போர்க்கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வரும் 15, 16ம் தேதிகளில் வர உள்ளது.

அப்போது, கடலோர காவல் பணியில் கடற்படையின் பங்கு என்ன என்பதை அறிந்து கொள்ளும் வகையில் வரும் 15ம்தேதி இங்கு வரும் கப்பல்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பள்ளி, கல்லூரி நிறுவனத்தினர் ஐஎன்எஸ் அடையாறு, கப்பல் தளம், ராஜாஜி சாலை (நேப்பியர் பாலம் அருகில்) சென்னை-09 என்ற முகவரியை வரும் 11ம்தேதிக்குள் அணுக வேண்டும். மேலும் விபரங்களுக்கு 25394240 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

சென்னை துறைமுகத்தில் போர்க் கப்பல்களை பார்வையிட மாணவர்களுக்கு அனுமதி

சென்னை: சென்னை துறைமுகத்தில் போர்க் கப்பல்களை வரும் 15ம் தேதி பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1971ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு காரணமாக இருந்த இந்திய கப்பற்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 4ம்தேதி இந்திய கடற்படை நாள் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கிழக்கிந்திய கப்பற்படையை சேர்ந்த போர்க்கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வரும் 15, 16ம் தேதிகளில் வர உள்ளது.

அப்போது, கடலோர காவல் பணியில் கடற்படையின் பங்கு என்ன என்பதை அறிந்து கொள்ளும் வகையில் வரும் 15ம்தேதி இங்கு வரும் கப்பல்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பள்ளி, கல்லூரி நிறுவனத்தினர் ஐஎன்எஸ் அடையாறு, கப்பல் தளம், ராஜாஜி சாலை (நேப்பியர் பாலம் அருகில்) சென்னை-09 என்ற முகவரியை வரும் 11ம்தேதிக்குள் அணுக வேண்டும். மேலும் விபரங்களுக்கு 25394240 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

சித்தூர்: ஆந்திராவில் மாணவர்கள் சங்கம் சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட் டன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. போலீசாரும், ராணுவத்தினரும் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவை பிரித்து தனித்தெலங்கானா அமைப்பது குறித்து விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கையை மத்திய அரசு நேற்று  வெளியிட்டது.

ஆனால், ‘ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கையை ஏற்க முடியாது, ஐதராபாத்தை தலைநகராக கொண்ட தனித்தெலங்கானா மாநிலம்  அமைவதே எங்களது ஒரே கோரிக்கை’ எனக்கூறி தெலங்கானா பகுதி மாணவர் கூட்டமைப்பினர் இன்று பந்த்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதற்கு தெலங்கானா அரசியல் கூட்டமைப்பு உள்பட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஐதராபாத் மற்றும்  ரங்காரெட்டி, நலகொண்டா, வாரங்கல், கம்மம், மகபூப் நகர், நிசாமாபாத் உள்ளிட்ட தெலங்கானா மாவட்டங்களில் உள்ள அனை த்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்பட்டன. மேலும், இன்று நடைபெற இருந்த சில தேர்வுகளும் ரத்து  செய்யப்பட்டன.

இதனிடையே தெலங்கானாவுக்கு ஆதரவாக ஸ்ரீகிருஷ்ணா சிபாரிசு செய்யவில்லை எனக்கூறி உஸ்மானியா பல்கலைக்கழக  மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது நேற்று கற்களை வீசினர். இதனால் போலீசாருக்கும்,  மாணவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், ரப்பர் தோட்டாக்களால் 15 ரவுண்ட்கள் சுட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்த  மாணவர்களை கலைத்தனர். இந்த மோதலில் 24 போலீசார் மற்றும் 5 மாணவர்கள் காயமடைந்தனர். மாணவர் ரவிக்குமார் என் பவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது. அவரை காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், அரசு பஸ்களுக்கு  ஒரு கும்பல் நேற்று தீ வைத்தது. இதில் 2 பஸ்கள் எலும்புக் கூடாகின. தெலங்கானா மாவட்டத் தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், ராணுவம் மற்றும் போலீசார் விடியவிடிய ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பந்த் காரணமாக  ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகை, தலைமை செயலகம், உஸ்மானியா பல்கலைக்கழகம், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தெலு ங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரது வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் நடிகர் சிரஞ்சீவி, டிஆர்எஸ் கட்சித்தலைவர் சந்திரசேகரராவின் வீடு மற்றும் சினிமா  நடிகர், நடிகைகள், அனைத்து அரசியல் பிரமுகர்கள், அனைத்து எம்பி, எம்எல்ஏக்களின் வீடுகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது.

தெலங்கானா கோரிக்கையை வலியுறுத்தி டிஆர்எஸ், பாஜ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெலங்கானா மாவட்டங்களில் உள்ள  கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்டவற்றின் எதிரே தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் மாநிலம் முழு வதும் பதற்றம் நிலவுகிறது.

‘தனிதெலங்கானா’ வலியுறுத்தி ஆந்திராவில் மாணவர்கள் பந்த்

சித்தூர்: ஆந்திராவில் மாணவர்கள் சங்கம் சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட் டன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. போலீசாரும், ராணுவத்தினரும் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவை பிரித்து தனித்தெலங்கானா அமைப்பது குறித்து விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கையை மத்திய அரசு நேற்று  வெளியிட்டது.

ஆனால், ‘ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கையை ஏற்க முடியாது, ஐதராபாத்தை தலைநகராக கொண்ட தனித்தெலங்கானா மாநிலம்  அமைவதே எங்களது ஒரே கோரிக்கை’ எனக்கூறி தெலங்கானா பகுதி மாணவர் கூட்டமைப்பினர் இன்று பந்த்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதற்கு தெலங்கானா அரசியல் கூட்டமைப்பு உள்பட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஐதராபாத் மற்றும்  ரங்காரெட்டி, நலகொண்டா, வாரங்கல், கம்மம், மகபூப் நகர், நிசாமாபாத் உள்ளிட்ட தெலங்கானா மாவட்டங்களில் உள்ள அனை த்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்பட்டன. மேலும், இன்று நடைபெற இருந்த சில தேர்வுகளும் ரத்து  செய்யப்பட்டன.

இதனிடையே தெலங்கானாவுக்கு ஆதரவாக ஸ்ரீகிருஷ்ணா சிபாரிசு செய்யவில்லை எனக்கூறி உஸ்மானியா பல்கலைக்கழக  மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது நேற்று கற்களை வீசினர். இதனால் போலீசாருக்கும்,  மாணவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், ரப்பர் தோட்டாக்களால் 15 ரவுண்ட்கள் சுட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்த  மாணவர்களை கலைத்தனர். இந்த மோதலில் 24 போலீசார் மற்றும் 5 மாணவர்கள் காயமடைந்தனர். மாணவர் ரவிக்குமார் என் பவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது. அவரை காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், அரசு பஸ்களுக்கு  ஒரு கும்பல் நேற்று தீ வைத்தது. இதில் 2 பஸ்கள் எலும்புக் கூடாகின. தெலங்கானா மாவட்டத் தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், ராணுவம் மற்றும் போலீசார் விடியவிடிய ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பந்த் காரணமாக  ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகை, தலைமை செயலகம், உஸ்மானியா பல்கலைக்கழகம், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தெலு ங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரது வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் நடிகர் சிரஞ்சீவி, டிஆர்எஸ் கட்சித்தலைவர் சந்திரசேகரராவின் வீடு மற்றும் சினிமா  நடிகர், நடிகைகள், அனைத்து அரசியல் பிரமுகர்கள், அனைத்து எம்பி, எம்எல்ஏக்களின் வீடுகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது.

தெலங்கானா கோரிக்கையை வலியுறுத்தி டிஆர்எஸ், பாஜ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெலங்கானா மாவட்டங்களில் உள்ள  கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்டவற்றின் எதிரே தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் மாநிலம் முழு வதும் பதற்றம் நிலவுகிறது.

முக நூல்

Popular Posts