background img

புதிய வரவு

Showing posts with label tn government. Show all posts
Showing posts with label tn government. Show all posts
கலைஞர் அரசின் ஒரு சில தவறுகளின் காரணமாக கோபமுற்ற மக்கள் தேர்த லின் மூலமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். கடந்த கால அரசுகளின் தவறுகளை களைந்து புதிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க வேண்டி யது புதிய அரசின் கடமை.

தவறான திட்டங்களையும், நடைமுறைகளையும் மட்டுமே களைய வேண்டிய ஜெயலலிதா அரசு மக்கள் ஆதரவையும், வரவேற்பையும் பெற்ற நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களின் மீது கை வைத்திருப்பது மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ., ஸ்டேட் போர்டு, ஓரியன்டல் ஸ்கூல் ஆப் எஜுகேஷன், ஆங்கிலோ இந்தியன், மெட்ரி குலேஷன் என்று பலவகையான பாடத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

சி.பி.எஸ்.இ பாடத் திட்டப் பள்ளிக ளில் அகில இந்தியா முழுவதும் ஒரே பாடத் திட்டமே (சமச்சீர்) அமுலில் உள் ளது. பல்வேறு கல்வி முறையில் ஏற் றத் தாழ்வுகள் நிலவி வந்தது. தங்கள் பள்ளிகளில் தகுதி, திறமை ஆகிய வற்றை அதிகப்படுத்தும் கல்வி முறை உள்ளதாக கூறி மெட்ரிகுலேஷன் பள் ளிகள் கட்டணக் கொள்ளை அடித்தன.

பணம் படைத்தவர்களுக்கு மட் டுமே தரமான கல்வி கிடைக்கும் என்ற நிலை உருவானது. சாதீய, பொருளா தார ஏற்றத்தாழ்வுகள் படிக்கும் மாண வர்களிடையே உருவாகக் கூடாது என்கி றஅடிப்படையில் சீருடைத் திட் டம் கொண்டு வரப்பட்டது.

பள்ளி மாணவர்கள் அணியும் ஆடையில் ஏற்றத்தாழ்வுகள் தெரியக் கூடாது என்றால் படிக்கும் பாடத் திட் டங்களில் மட்டும் ஏன் ஏற்றத்தாழ்வு? என்ற கேள்வியை பல ஆண்டுகளாக கல்வியாளர்கள் எழுப்பி வந்தனர்.

கல்வியாளர்கள் மற்றும் பெரும் பான்மை மக்களின நீண்ட கால கோரிக் கையின் அடிப்படையில் கல்வியாளர் கள் அமைந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட திட் டம்தான் சமச்சீர் கல்வி திட்டம்.

சமச்சீர் கல்வி உருவான வரலா ற்றை கவனத்தில் கொள்ளாமல் கரு ணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டம் என்ற எண்ணத்தோடு அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கி மூக்குடைபட்டுள்ளார் முதல்வர்.

சமச்சீர் கல்வி திட்டம் அமுல்படுத் தப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் ஒரே பாடத் திட்டம் அமையும். இதனால் ஏழைகள் பணக்காரர்கள் என்கிற பேதம் இல்லா மல் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும்.

இது வரவேற்கத்தக்க திட்டம் என் பதை யாராலும் மறுக்க முடியாது என் றாலும் தனியார் பள்ளிகளின் அநியாய வசூலுக்கு வேட்டு வைக்கும் என்பதால் நொண்டிச் சாக்குகளை கூறி திட் டத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கை யில் இறங்கினர் ஆதிக்கவர்க்கத்தினர்.

சமச்சீர் கல்வி திட்டத்தை சமத் தாழ்வு திட்டம் என்று கேலி பேசி எள்ளி நகையாடினர். தகுதி, திறன் என்று கூறி தங்கள் ஆதிக்க மனோபாவத்திற்கு ஆதரவு சேர்த்தனர். எல்லா கேள்வி கணைகளும் முனை மழுங்கிய வேளையில் ஆதிக்க வர்க்கத்தினர் ஆட்சி மாற்றத்தை தமக்கு ஆதரவாக (ஆதாரமாக) மாற்றிக் கொண்டனர்.

நேரடியாக சமச்சீர் கல்வித் திட் டத்தை நிறைவேற்றக் கூறினால் முடி யாது என்பதை உணர்ந்த ஆதிக்க வர்க்கம் பாடத் திட்டங்கள் சரியில்லை பாடத் திட்டங்களில் தரமில்லை என்று மகுடி ஊதினார்.

ஆதிக்க வர்க்கத்தினரின் சாகசப் பேச்சில் மயங்கிய முதல்வர் சமச்சீர் கல்வி திட்டத்தை தள்ளிப் போடும் நடவடிக்கையில் இறங்கினார். இந்த ஆண்டில் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்கான சட்டத்திருத்த தீர்மா னத்தை சட்டசபையில் நிறைவேற்றி னார்.

சட்டத் திருத்தத்திற்கு கல்வியாளர் கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தற்காலி கம்தான் நிரந்தரமில்லை என்று கூறி சமாளிக்கப் பார்த்தார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத கல்வி யாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடி னார். உயர் நீதிமன்றம் வழக்கு விசா ரித்து சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும் என்று தீர்ப்பளித்தது. தீர்ப்பைக் கண்ட வுடன் எச்சரிக்கை அடைந்து தமிழக முதல்வர் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாமல் ஈகோவுடன் மோதல் போக்கை தொடர்ந்தார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 1, 6ம் வகுப்புக ளுக்கு திட்டம் தொடரலாம். மற்ற வகுப் புகளுக்கு ஆய்வுக் குழு அமைத்து பரிசீலிக்குமாறும், அதன் அடிப்படை யில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றஉத்தரவின்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தனியார் பள்ளி நிர்வாகிகளையும் உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்ட அந்தக் குழு அளித்த ஆய்வறிக்கை கல்வியாளர் கள் மத்தியில் கண்டனத்தை எழுப்பி யது.

இது பற்றிக் கருத்து தெரிவித்த மூத்த கல்வியாளரும், முன்னாள் துணை வேந்தருமான வசந்தி தேவி, ""ஏழை மற்றும் கிராமப்புற மாணவர் களைக் கேவலப்படுத்தி விட்டது தமி ழக அரசின் சமச்சீர் கல்விக்கான ஆய் வுக்குழு - ஆதங்கமும் வேதனையும் ஒரு சேரப் பொங்குகிறது...'' என்று தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலை யில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதலாவது பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு தமிழக அர சின் நடு மண்டையில் நச்சென்று இறங்கியது.

சமச்சீர் கல்வியை நடப்பு கல்வி யாண்டில் நிறுத்தி வைக்கும் சட்டத் திருத்தத்தின் 3வது பிரிவு செல்லாது. புதிய பாடத் திட்டத்தின்படி அச்சிடப் பட்டு தயாராக உள்ள பொதுப்பாட நூல் களை 22ம் தேதிக்குள் மாணவர்க ளுக்கு விநியோகிக்க வேண்டும். அந்தப் பாடப் புத்தகங்களில் குறைகள் இருக்குமானால் அவற்றைக் கண்ட றிந்து, களைவதற்கு ஒரு குழு அமைத்து 3 மாதங்களுக்குள் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்து எந்தப் பாடப் புத்தகங்களும் இல்லாமல் வெறுமனே மாணவர்கள் சென்று வருகின்றனர். ஆசிரியர்களும் எந்தப் பாடத்தை நடத் துவது என்று குழம்பிய மனநிலையில் உள்ளனர். தமிழக அரசு இனிமேலும் ஈகோ, மேல்முறையீடு என்று கால த்தை கடத்தாமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும்.

நான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்ற மனப்பான்மையில் முதல்வர் செயல்படுவாரேயானால் முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறி விடும். ஐந்தாண்டு காலம் காத்திருந்து பெற்றவெற்றி எல்லாம் உள்ளாட்சித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் காணாமல் போய் விடும்.

Thanks கீற்று

முதல்வருக்கு முதல் அடி

கலைஞர் அரசின் ஒரு சில தவறுகளின் காரணமாக கோபமுற்ற மக்கள் தேர்த லின் மூலமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். கடந்த கால அரசுகளின் தவறுகளை களைந்து புதிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க வேண்டி யது புதிய அரசின் கடமை.

தவறான திட்டங்களையும், நடைமுறைகளையும் மட்டுமே களைய வேண்டிய ஜெயலலிதா அரசு மக்கள் ஆதரவையும், வரவேற்பையும் பெற்ற நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களின் மீது கை வைத்திருப்பது மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ., ஸ்டேட் போர்டு, ஓரியன்டல் ஸ்கூல் ஆப் எஜுகேஷன், ஆங்கிலோ இந்தியன், மெட்ரி குலேஷன் என்று பலவகையான பாடத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

சி.பி.எஸ்.இ பாடத் திட்டப் பள்ளிக ளில் அகில இந்தியா முழுவதும் ஒரே பாடத் திட்டமே (சமச்சீர்) அமுலில் உள் ளது. பல்வேறு கல்வி முறையில் ஏற் றத் தாழ்வுகள் நிலவி வந்தது. தங்கள் பள்ளிகளில் தகுதி, திறமை ஆகிய வற்றை அதிகப்படுத்தும் கல்வி முறை உள்ளதாக கூறி மெட்ரிகுலேஷன் பள் ளிகள் கட்டணக் கொள்ளை அடித்தன.

பணம் படைத்தவர்களுக்கு மட் டுமே தரமான கல்வி கிடைக்கும் என்ற நிலை உருவானது. சாதீய, பொருளா தார ஏற்றத்தாழ்வுகள் படிக்கும் மாண வர்களிடையே உருவாகக் கூடாது என்கி றஅடிப்படையில் சீருடைத் திட் டம் கொண்டு வரப்பட்டது.

பள்ளி மாணவர்கள் அணியும் ஆடையில் ஏற்றத்தாழ்வுகள் தெரியக் கூடாது என்றால் படிக்கும் பாடத் திட் டங்களில் மட்டும் ஏன் ஏற்றத்தாழ்வு? என்ற கேள்வியை பல ஆண்டுகளாக கல்வியாளர்கள் எழுப்பி வந்தனர்.

கல்வியாளர்கள் மற்றும் பெரும் பான்மை மக்களின நீண்ட கால கோரிக் கையின் அடிப்படையில் கல்வியாளர் கள் அமைந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட திட் டம்தான் சமச்சீர் கல்வி திட்டம்.

சமச்சீர் கல்வி உருவான வரலா ற்றை கவனத்தில் கொள்ளாமல் கரு ணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டம் என்ற எண்ணத்தோடு அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கி மூக்குடைபட்டுள்ளார் முதல்வர்.

சமச்சீர் கல்வி திட்டம் அமுல்படுத் தப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் ஒரே பாடத் திட்டம் அமையும். இதனால் ஏழைகள் பணக்காரர்கள் என்கிற பேதம் இல்லா மல் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும்.

இது வரவேற்கத்தக்க திட்டம் என் பதை யாராலும் மறுக்க முடியாது என் றாலும் தனியார் பள்ளிகளின் அநியாய வசூலுக்கு வேட்டு வைக்கும் என்பதால் நொண்டிச் சாக்குகளை கூறி திட் டத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கை யில் இறங்கினர் ஆதிக்கவர்க்கத்தினர்.

சமச்சீர் கல்வி திட்டத்தை சமத் தாழ்வு திட்டம் என்று கேலி பேசி எள்ளி நகையாடினர். தகுதி, திறன் என்று கூறி தங்கள் ஆதிக்க மனோபாவத்திற்கு ஆதரவு சேர்த்தனர். எல்லா கேள்வி கணைகளும் முனை மழுங்கிய வேளையில் ஆதிக்க வர்க்கத்தினர் ஆட்சி மாற்றத்தை தமக்கு ஆதரவாக (ஆதாரமாக) மாற்றிக் கொண்டனர்.

நேரடியாக சமச்சீர் கல்வித் திட் டத்தை நிறைவேற்றக் கூறினால் முடி யாது என்பதை உணர்ந்த ஆதிக்க வர்க்கம் பாடத் திட்டங்கள் சரியில்லை பாடத் திட்டங்களில் தரமில்லை என்று மகுடி ஊதினார்.

ஆதிக்க வர்க்கத்தினரின் சாகசப் பேச்சில் மயங்கிய முதல்வர் சமச்சீர் கல்வி திட்டத்தை தள்ளிப் போடும் நடவடிக்கையில் இறங்கினார். இந்த ஆண்டில் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்கான சட்டத்திருத்த தீர்மா னத்தை சட்டசபையில் நிறைவேற்றி னார்.

சட்டத் திருத்தத்திற்கு கல்வியாளர் கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தற்காலி கம்தான் நிரந்தரமில்லை என்று கூறி சமாளிக்கப் பார்த்தார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத கல்வி யாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடி னார். உயர் நீதிமன்றம் வழக்கு விசா ரித்து சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும் என்று தீர்ப்பளித்தது. தீர்ப்பைக் கண்ட வுடன் எச்சரிக்கை அடைந்து தமிழக முதல்வர் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாமல் ஈகோவுடன் மோதல் போக்கை தொடர்ந்தார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 1, 6ம் வகுப்புக ளுக்கு திட்டம் தொடரலாம். மற்ற வகுப் புகளுக்கு ஆய்வுக் குழு அமைத்து பரிசீலிக்குமாறும், அதன் அடிப்படை யில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றஉத்தரவின்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தனியார் பள்ளி நிர்வாகிகளையும் உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்ட அந்தக் குழு அளித்த ஆய்வறிக்கை கல்வியாளர் கள் மத்தியில் கண்டனத்தை எழுப்பி யது.

இது பற்றிக் கருத்து தெரிவித்த மூத்த கல்வியாளரும், முன்னாள் துணை வேந்தருமான வசந்தி தேவி, ""ஏழை மற்றும் கிராமப்புற மாணவர் களைக் கேவலப்படுத்தி விட்டது தமி ழக அரசின் சமச்சீர் கல்விக்கான ஆய் வுக்குழு - ஆதங்கமும் வேதனையும் ஒரு சேரப் பொங்குகிறது...'' என்று தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலை யில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதலாவது பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு தமிழக அர சின் நடு மண்டையில் நச்சென்று இறங்கியது.

சமச்சீர் கல்வியை நடப்பு கல்வி யாண்டில் நிறுத்தி வைக்கும் சட்டத் திருத்தத்தின் 3வது பிரிவு செல்லாது. புதிய பாடத் திட்டத்தின்படி அச்சிடப் பட்டு தயாராக உள்ள பொதுப்பாட நூல் களை 22ம் தேதிக்குள் மாணவர்க ளுக்கு விநியோகிக்க வேண்டும். அந்தப் பாடப் புத்தகங்களில் குறைகள் இருக்குமானால் அவற்றைக் கண்ட றிந்து, களைவதற்கு ஒரு குழு அமைத்து 3 மாதங்களுக்குள் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்து எந்தப் பாடப் புத்தகங்களும் இல்லாமல் வெறுமனே மாணவர்கள் சென்று வருகின்றனர். ஆசிரியர்களும் எந்தப் பாடத்தை நடத் துவது என்று குழம்பிய மனநிலையில் உள்ளனர். தமிழக அரசு இனிமேலும் ஈகோ, மேல்முறையீடு என்று கால த்தை கடத்தாமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும்.

நான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்ற மனப்பான்மையில் முதல்வர் செயல்படுவாரேயானால் முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறி விடும். ஐந்தாண்டு காலம் காத்திருந்து பெற்றவெற்றி எல்லாம் உள்ளாட்சித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் காணாமல் போய் விடும்.

Thanks கீற்று

தமிழ்நாட்டில் அரிசி வாங்கும் குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதன்படி வெற்றி பெற்று முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்றதும் இலவச அரிசி வழங்கும் கோப்பில் ஜெயலலிதா கையெ ழுத்திட்டார்.

வருகிற 1-ந்தேதி முதல் இந்த திட்டம் தமிழ் நாட்டில் அமலுக்கு வருகிறது. அன்றைய தினம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து உணவுத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் கூட்டுறவுத்துறையின் உயர் அலுவலர்கள் கூட்டம் நடந்தது.

இதில் அமைச்சர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவியேற்ற உடனே அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என ஆணையிட்டார். இலவச அரிசி அனைத்து ரேஷன் கடைகளிலும் ஜூன் 1-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு வழங்கப்படும் இலவச அரிசியை குடும்ப அட்டைதாரர்களுக்கு தக்க ஏற்பாடுகளுடன் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அரிசி தரமானதாகவும், எடை குறைவின்றி வழங்கிட அலுவலர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தவறுகள் ஏற்படாத வகையில் அந்தந்த மண்டல இணைப்பதிவாளர்கள் தகுந்த முன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலவச அரிசியை குடும்ப அட்டைதாரர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப மாதத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நியாய விலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அனைத்து நியாய விலைக்கடைகளும் நாள் தோறும் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படுகின்றனவா? என அலுவலர்கள் காலையிலேயே நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், நியாய விலைக்கடை பணியாளர்கள் கடையின் பெயர் பலகையில் இருப்பு விவரப்பட்டியலை நாள்தோறும் பொதுமக்கள் அறியும் வண்ணம் எழுதி வைக்கின்றனரா? என கண் காணிக்க வேண்டும்.

நியாய விலைக்கடை பணியாளர்களும் தவறுகளுக்கு இடமளிக்காமல் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிட வேண்டும் என்றார். கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன், கூடுதல் பதிவாளர்கள் அமுதவல்லி, அசோகன், பன்னீர்செல்வன், தமிழரசன், ராஜேந்திரன், சங்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் உணவுத்துறை அதிகாரிகள் கூட்டம் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது:-

நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை மற்றும் சிறப்பு பொது விநியோகத்திட்ட பொருட்கள் முன் நகர்வுக்கு ஏற்ற வகையில், போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு, அத்தியா வசியப் பொருட்களின் இருப்பு தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். இருப்பு இல்லா நிலை தவிர்க்கப்பட வேண்டும். இந்திய உணவுக் கழகத் திடமிருந்து அரிசி மற்றும் கோதுமை நகர்பு செய்யும் போது அதன் தரத்தை உறுதி செய்த பின்பே நகர்வு செய்ய வேண்டும். தரம் அனைத்து நிலைகளிலும் உறுதி செய் யப்பட வேண்டும்.

இந்திய உணவுக் கழகத் திலிருந்து நகர்வு செய்யப்படும்போது அது முழுமை யாக நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளுக்கு வந்து சேர்வது கண்காணிக்கப்பட வேண்டும். கிடங்குகளில் சமச்சீர் செய்யும்போது எடைக் குறைவு ஏற்படக்கூடாது. மறுநாள் தேவையை எதிர் நோக்கி போதுமான மூட்டைகள் சமச்சீர் செய்து இருப்பு வைத்த பின்பே கிடங்கை மூட வேண்டும். நியாய விலைக்கடைகளில் தரமற்ற பொருட்கள் வரப்பெற்றால் உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவித்து அதனை மாற்ற வேண்டும். அங்காடிகளில் இருப்பு வைத்திருந்தபோது தரக்குறைவு ஏற்பட்டிருப்பினும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடக் கூடாது.

நியாய விலைக்கடை களின் எடைக்குறைவு ஏது மின்றி விநியோகம் செய்யப்பட வேண்டும். நியாய விலைக்கடைகளில் அனைத்து நாட்களி லும் அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யும் வகையில் இருப்பு பராமரிக்கப்பட வேண்டும். இது பகுதி அலுவலர்களால் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும். சரியான நேரத்தில் அங்காடி களைத் திறந்து பொது விநியோகத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும்.

காலாவதியான பொருட்களை குடும்ப அட்டைதா ரர்களுக்கு எக்காரணம் கொண்டும் வழங்குதல் கூடாது. இலவச அரிசி வழங்குவதை முறையாக விளம்பரம் செய்து 1-ந் தேதி முதல் செயல்படுத்துதல் வேண்டும். அதற்குத் தேவையான அரிசியை கிடங்குகளிலிருந்து அங்காடிக்கு முன் நுகர்வு செய்து வைத்தல் வேண்டும். வெளி ஆட்கள் அங்காடிகளில் இருப்பதை தடுத்திட ஏதுவாக பெயர் வில்லைகளை அணிந்து பணியாளர்கள் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் ஜெயக்கொடி, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் பாலச்சந்திரன், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் வீரசண்முகமணி, உணவுத் துறை உயர் அதிகாரிகள், மண்டல அலுவலர்கள், இணைப்பதிவாளர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர்கள், உதவி ஆணையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

ரேசன் கடைகளில் 1-ந்தேதி முதல் எல்லா நாட்களிலும் இலவச அரிசி பெறலாம்; அமைச்சர்கள் ஆய்வு கூட்டத்தில் முடிவு

தமிழ்நாட்டில் அரிசி வாங்கும் குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதன்படி வெற்றி பெற்று முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்றதும் இலவச அரிசி வழங்கும் கோப்பில் ஜெயலலிதா கையெ ழுத்திட்டார்.

வருகிற 1-ந்தேதி முதல் இந்த திட்டம் தமிழ் நாட்டில் அமலுக்கு வருகிறது. அன்றைய தினம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து உணவுத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் கூட்டுறவுத்துறையின் உயர் அலுவலர்கள் கூட்டம் நடந்தது.

இதில் அமைச்சர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவியேற்ற உடனே அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என ஆணையிட்டார். இலவச அரிசி அனைத்து ரேஷன் கடைகளிலும் ஜூன் 1-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு வழங்கப்படும் இலவச அரிசியை குடும்ப அட்டைதாரர்களுக்கு தக்க ஏற்பாடுகளுடன் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அரிசி தரமானதாகவும், எடை குறைவின்றி வழங்கிட அலுவலர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தவறுகள் ஏற்படாத வகையில் அந்தந்த மண்டல இணைப்பதிவாளர்கள் தகுந்த முன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலவச அரிசியை குடும்ப அட்டைதாரர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப மாதத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நியாய விலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அனைத்து நியாய விலைக்கடைகளும் நாள் தோறும் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படுகின்றனவா? என அலுவலர்கள் காலையிலேயே நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், நியாய விலைக்கடை பணியாளர்கள் கடையின் பெயர் பலகையில் இருப்பு விவரப்பட்டியலை நாள்தோறும் பொதுமக்கள் அறியும் வண்ணம் எழுதி வைக்கின்றனரா? என கண் காணிக்க வேண்டும்.

நியாய விலைக்கடை பணியாளர்களும் தவறுகளுக்கு இடமளிக்காமல் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிட வேண்டும் என்றார். கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன், கூடுதல் பதிவாளர்கள் அமுதவல்லி, அசோகன், பன்னீர்செல்வன், தமிழரசன், ராஜேந்திரன், சங்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் உணவுத்துறை அதிகாரிகள் கூட்டம் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது:-

நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை மற்றும் சிறப்பு பொது விநியோகத்திட்ட பொருட்கள் முன் நகர்வுக்கு ஏற்ற வகையில், போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு, அத்தியா வசியப் பொருட்களின் இருப்பு தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். இருப்பு இல்லா நிலை தவிர்க்கப்பட வேண்டும். இந்திய உணவுக் கழகத் திடமிருந்து அரிசி மற்றும் கோதுமை நகர்பு செய்யும் போது அதன் தரத்தை உறுதி செய்த பின்பே நகர்வு செய்ய வேண்டும். தரம் அனைத்து நிலைகளிலும் உறுதி செய் யப்பட வேண்டும்.

இந்திய உணவுக் கழகத் திலிருந்து நகர்வு செய்யப்படும்போது அது முழுமை யாக நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளுக்கு வந்து சேர்வது கண்காணிக்கப்பட வேண்டும். கிடங்குகளில் சமச்சீர் செய்யும்போது எடைக் குறைவு ஏற்படக்கூடாது. மறுநாள் தேவையை எதிர் நோக்கி போதுமான மூட்டைகள் சமச்சீர் செய்து இருப்பு வைத்த பின்பே கிடங்கை மூட வேண்டும். நியாய விலைக்கடைகளில் தரமற்ற பொருட்கள் வரப்பெற்றால் உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவித்து அதனை மாற்ற வேண்டும். அங்காடிகளில் இருப்பு வைத்திருந்தபோது தரக்குறைவு ஏற்பட்டிருப்பினும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடக் கூடாது.

நியாய விலைக்கடை களின் எடைக்குறைவு ஏது மின்றி விநியோகம் செய்யப்பட வேண்டும். நியாய விலைக்கடைகளில் அனைத்து நாட்களி லும் அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யும் வகையில் இருப்பு பராமரிக்கப்பட வேண்டும். இது பகுதி அலுவலர்களால் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும். சரியான நேரத்தில் அங்காடி களைத் திறந்து பொது விநியோகத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும்.

காலாவதியான பொருட்களை குடும்ப அட்டைதா ரர்களுக்கு எக்காரணம் கொண்டும் வழங்குதல் கூடாது. இலவச அரிசி வழங்குவதை முறையாக விளம்பரம் செய்து 1-ந் தேதி முதல் செயல்படுத்துதல் வேண்டும். அதற்குத் தேவையான அரிசியை கிடங்குகளிலிருந்து அங்காடிக்கு முன் நுகர்வு செய்து வைத்தல் வேண்டும். வெளி ஆட்கள் அங்காடிகளில் இருப்பதை தடுத்திட ஏதுவாக பெயர் வில்லைகளை அணிந்து பணியாளர்கள் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் ஜெயக்கொடி, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் பாலச்சந்திரன், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் வீரசண்முகமணி, உணவுத் துறை உயர் அதிகாரிகள், மண்டல அலுவலர்கள், இணைப்பதிவாளர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர்கள், உதவி ஆணையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

முக நூல்

Popular Posts