அல் காய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்குமாறு தமது நாட்டு மக்களை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில், அல் காய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அவசியம் இல்லாமல் அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பெருநகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு அதிகப்படுத்தியுள்ளது.
எனினும் அமெரிக்கர்களும், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி கூடும் மற்றும் பார்வையிடும் வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், கிளப்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களைத் தாக்கும் நோக்கத்துடன் அவற்றை பயங்கரவாதக் குழுக்கள் தொடர்ந்து கவனித்து வருவதால் அந்த இடங்களுக்குச் செல்லும்போது அமெரிக்கர்கள் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment