இன நல்லிணக்கத்துக்காக பேச்சுவார்த்தையை தொடர்வது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பும், இலங்கை அரசு தீர்மானித்துள்ளன.
அரசியல் மாற்றத்திற்கான இன நல்லிணக்கம் மற்றும் நிரந்தர சமாதானத்திற்காக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என இலங்கை அரசுக்கும்,தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாவது:
இவ்வாறான பேச்சுக்களில் தொடர்ந்து ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டதோடு, வடக்கு மற்றும் சம்பூர் பிரதேச அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதுடன், புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும்,பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டார்.
இதனிடையே, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக, இலங்கை அரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பேச்சு நடத்த வேண்டும் என இந்திய அரசு கோரிக்கை விடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசியல் மாற்றத்திற்கான இன நல்லிணக்கம் மற்றும் நிரந்தர சமாதானத்திற்காக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என இலங்கை அரசுக்கும்,தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாவது:
இவ்வாறான பேச்சுக்களில் தொடர்ந்து ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டதோடு, வடக்கு மற்றும் சம்பூர் பிரதேச அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதுடன், புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும்,பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டார்.
இதனிடையே, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக, இலங்கை அரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பேச்சு நடத்த வேண்டும் என இந்திய அரசு கோரிக்கை விடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment