கம்மம் டவுனில் உள்ள நாகேஸ்வர ராவின் கட்டுமான நிறுவனமான மதுகானிலும், ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடந்தது என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
இன்று காலை முதல் நடந்த சோதனை வழக்கமானது தான் என்றும், வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்று நிறுவனக் கணக்கு சரிபார்க்கப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.
நாகேஸ்வர ராவ் கம்மம் தொகுதி எம்.பி. ஆக இருக்கிறார். அவரது மதுகான் நிறுவனம் ஆந்திரா தவிர பிற மாநிலங்களிலும் சாலை போடுவது உள்ளிட்ட பல முக்கிய பணிகளை செய்து வருகிறது. மேலும், இது வெளிநாடுகளிலும் புராஜெக்ட்கள் செய்து கொடுக்கிறது. இந்த சோதனை நடந்தபோது அவர் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment