background img

புதிய வரவு

Showing posts with label Actor vijai. Show all posts
Showing posts with label Actor vijai. Show all posts
விஜய்யின் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. நடிகர் விஜய் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு உள்ளது. அதன் மூலம் மக்கள் நலப்பணிகள் நடந்து வருகின்றன. நாகையில் மீனவர்களுக்கு எதிராக நடந்த விஜய் கண்டன கூட்டத்தையும் இந்த மக்கள் இயக்கம்தான் ஏற்பாடு செய்தது. அடுத்தக்கட்டமாக வருகிற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் இயக்கம் நேரடியாக ஈடுபடுகிறது.

இந்த இயக்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் அவர்களை இறக்க பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. ஜெயலலிதாவை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இரண்டு முறை சந்தித்தார். அப்போது இதுபற்றி அவர்கள் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எஸ்.ஏ.சந்திரசேகரன் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறும்போது ரசிகர்களுக்கு உரிய அங்கீகாரத்தை யாராவது கொடுத்தால் அவர்களுக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும். அங்கீகாரம் கிடைக்கும்போது அந்த ரசிகர்களுக்காக அவர்களுடைய வெற்றிகளுக்காக ஆதரவு கொடுக்கும் கட்சிகளுக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும் என்று தெளிவுபடுத்தினார்.

இதன்மூலம் ரசிகர்கள் போட்டியிட தொகுதி ஒதுக்கும் கட்சிக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிய வந்துள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தொகுதிகளில் விஜய்க்கு உள்ள செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு போன்றவை குறித்து கருத்து கேட்கப்பட்டன.

தேர்தலில் போட்டியிடுவதற்காகவே இந்த பற்றிய விவரங்களை அவர் சேகரித்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவை விஜய் விரைவில் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. அப்போது கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு போன்றவை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். விஜய்யின் மக்கள் இயக்கம் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளம் கண்டுள்ளன. அவற்றை அ.தி.மு.க.விடம் கேட்டுப்பெற முடிவு செய்துள்ளது

விஜய் ரசிகர்கள் தேர்தலில் போட்டி? அ.தி.மு.க. கூட்டணியில் “சீட்” கேட்க முடிவு

விஜய்யின் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. நடிகர் விஜய் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு உள்ளது. அதன் மூலம் மக்கள் நலப்பணிகள் நடந்து வருகின்றன. நாகையில் மீனவர்களுக்கு எதிராக நடந்த விஜய் கண்டன கூட்டத்தையும் இந்த மக்கள் இயக்கம்தான் ஏற்பாடு செய்தது. அடுத்தக்கட்டமாக வருகிற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் இயக்கம் நேரடியாக ஈடுபடுகிறது.

இந்த இயக்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் அவர்களை இறக்க பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. ஜெயலலிதாவை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இரண்டு முறை சந்தித்தார். அப்போது இதுபற்றி அவர்கள் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எஸ்.ஏ.சந்திரசேகரன் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறும்போது ரசிகர்களுக்கு உரிய அங்கீகாரத்தை யாராவது கொடுத்தால் அவர்களுக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும். அங்கீகாரம் கிடைக்கும்போது அந்த ரசிகர்களுக்காக அவர்களுடைய வெற்றிகளுக்காக ஆதரவு கொடுக்கும் கட்சிகளுக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும் என்று தெளிவுபடுத்தினார்.

இதன்மூலம் ரசிகர்கள் போட்டியிட தொகுதி ஒதுக்கும் கட்சிக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிய வந்துள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தொகுதிகளில் விஜய்க்கு உள்ள செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு போன்றவை குறித்து கருத்து கேட்கப்பட்டன.

தேர்தலில் போட்டியிடுவதற்காகவே இந்த பற்றிய விவரங்களை அவர் சேகரித்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவை விஜய் விரைவில் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. அப்போது கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு போன்றவை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். விஜய்யின் மக்கள் இயக்கம் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளம் கண்டுள்ளன. அவற்றை அ.தி.மு.க.விடம் கேட்டுப்பெற முடிவு செய்துள்ளது

காவலன் படத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு யார் காரணம் என்று இதுவரை மீடியாக்களும், ஜனங்களும் மட்டும்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். பிரபல வார இதழுக்கு பேட்டியளித்ததன் மூலம் விஜய்யும் தனது மௌனத்தை கலைத்திருக்கிறார். பேட்டியின் சாராம்சம் இதுதான்.


காவலன் வெளிவராமல் ஆளும் கட்சியினர் தடுத்தனர். திரையரங்கு உ‌ரிமையாளர்களும் மிரட்டப்பட்டனர். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களின் தங்களின் படங்கள் மட்டுமே வெளியாக வேண்டும் என சிலர் விரும்புகின்றனர். நான் மக்களை சந்திப்பதை, உரையாடுவதை சிலர் விரும்பவில்லை. காந்தி, எம்.‌ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் வ‌ரிசையில் நானும் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறேன் என்றெல்லாம் அந்தப் பேட்டியில் தெ‌ரிவித்துள்ளார்.


மேலும், அரசியலில் ஈடுபடுவேன், அதற்கான அஸ்திவாரத்தை பலமாக போட்டு வருகிறேன் என்றும் தெ‌ரிவித்துள்ளார்.


இந்த‌ப் பேட்டி வரும் தேர்தலில் விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பகிரங்கமாக தெ‌ரிவிக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஓபன் டாக்

காவலன் படத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு யார் காரணம் என்று இதுவரை மீடியாக்களும், ஜனங்களும் மட்டும்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். பிரபல வார இதழுக்கு பேட்டியளித்ததன் மூலம் விஜய்யும் தனது மௌனத்தை கலைத்திருக்கிறார். பேட்டியின் சாராம்சம் இதுதான்.


காவலன் வெளிவராமல் ஆளும் கட்சியினர் தடுத்தனர். திரையரங்கு உ‌ரிமையாளர்களும் மிரட்டப்பட்டனர். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களின் தங்களின் படங்கள் மட்டுமே வெளியாக வேண்டும் என சிலர் விரும்புகின்றனர். நான் மக்களை சந்திப்பதை, உரையாடுவதை சிலர் விரும்பவில்லை. காந்தி, எம்.‌ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் வ‌ரிசையில் நானும் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறேன் என்றெல்லாம் அந்தப் பேட்டியில் தெ‌ரிவித்துள்ளார்.


மேலும், அரசியலில் ஈடுபடுவேன், அதற்கான அஸ்திவாரத்தை பலமாக போட்டு வருகிறேன் என்றும் தெ‌ரிவித்துள்ளார்.


இந்த‌ப் பேட்டி வரும் தேர்தலில் விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பகிரங்கமாக தெ‌ரிவிக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

காவலன் படத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி, அரசியல் பிரஷர் என்று பல வாரங்களாக அல்லாடிக் கொண்டிருந்த விஜய் மீண்டும் சுறுசுறுப்புக்கு வந்திருக்கிறார்.


காவலன் எதிர்மறையான விமர்சனத்தை சில இடங்களில் கிளப்பினாலும் இப்போது படம் பிக்கப்பாகியுள்ளது. எவருக்கும் காவலனால் நஷ்டம் ஏற்படாது என்பது தெ‌ரிந்த பிறகே இளைய தளபதியின் முகத்தில் உற்சாகமே பிறந்துள்ளது. இதே ஸ்பீடில் வேலாயுதம் படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டுள்ளார். படப்பிடிப்பை பொறுத்தவரை ஏறக்குறைய முடிந்துவிட்டது.


ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கிலும் விஜய் நடிக்கிறார் என்பதை ஏற்கனவே தெ‌ரிவித்திருந்தோம். வரும் 7ஆம் தேதியிலிருந்து ஷங்கர் படப்பிடிப்பில் விஜய்யும் கலந்து கொள்கிறார்.


வேலாயுதம், 3 இடியட்ஸ் ‌ரீமேக் இரண்டுமே நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை விஜய்க்கு இருப்பதால் அளவுகடந்த உற்சாகத்தில் இருக்கிறார் விஜய்.

சுறுசுறு விஜய்

காவலன் படத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி, அரசியல் பிரஷர் என்று பல வாரங்களாக அல்லாடிக் கொண்டிருந்த விஜய் மீண்டும் சுறுசுறுப்புக்கு வந்திருக்கிறார்.


காவலன் எதிர்மறையான விமர்சனத்தை சில இடங்களில் கிளப்பினாலும் இப்போது படம் பிக்கப்பாகியுள்ளது. எவருக்கும் காவலனால் நஷ்டம் ஏற்படாது என்பது தெ‌ரிந்த பிறகே இளைய தளபதியின் முகத்தில் உற்சாகமே பிறந்துள்ளது. இதே ஸ்பீடில் வேலாயுதம் படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டுள்ளார். படப்பிடிப்பை பொறுத்தவரை ஏறக்குறைய முடிந்துவிட்டது.


ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கிலும் விஜய் நடிக்கிறார் என்பதை ஏற்கனவே தெ‌ரிவித்திருந்தோம். வரும் 7ஆம் தேதியிலிருந்து ஷங்கர் படப்பிடிப்பில் விஜய்யும் கலந்து கொள்கிறார்.


வேலாயுதம், 3 இடியட்ஸ் ‌ரீமேக் இரண்டுமே நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை விஜய்க்கு இருப்பதால் அளவுகடந்த உற்சாகத்தில் இருக்கிறார் விஜய்.

சினிமாவில் பிரபலமாக இருக்கும் கதாநாயகர்கள் அரசியலுக்கு வருவதை சில சக்திகள் தடுக்கின்றன. அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்பமோ என்ற அச்சம்தான் இதற்கு காரணம் என்று விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி :


விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்பதுதான் அவரது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. விஜய்யைப் போல சினிமாவில் பிரபலமாக உள்ள கதாநாயகன் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபடுவதை சில சக்திகள் விரும்புவது இல்லை. அதனால் தடுக்க வழி தேடுகிறார்கள். அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ என்ற அவர்கள் அச்சம்தான் இதற்குக் காரணம். அப்படிப்பட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். அரசியல் சார்புள்ள படங்களுக்கு எதிர்ப்புகள் வருவது சகஜம். ஆனால் காவலன் அரசியல் படம் அல்ல. பஞ்ச் வசனங்கள் இல்லை. அது முழுக்க காதல் கதை. அந்த படத்துக்கு நெருக்கடியும், எதிர்ப்புகளும் ஏன் வந்தன என்றே புரியவில்லை. பொங்கலுக்கு காவலன் வராது என்றும் செய்தி பரப்பினார்கள். ரசிகர்கள் கட்- அவுட் வைக்கவும் போஸ்டர்கள் ஒட்டவும் அனுமதிக்கப்படவில்லை.


எம்.ஜி.ஆர். வளர்ச்சியை பார்த்து பயம் ஏற்பட்டதை புரிந்து கொள்ளலாம். ஆனால் விஜய்க்கு ஏன் அப்படி நேர்ந்தது. எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிட முடியாது. ஆனால் அவர் உயரத்துக்கு விஜய்யை கொண்டு செல்வது ஏன்? விஜய் உடனடியாக அரசியலில் ஈடுபட திட்டம் இல்லை. ஆனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி. ரசிகர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். அவர்களிடம் அடுத்த 4 வருடங்கள் ரசிகர் மன்ற அமைப்புகளில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் விஜய்யை அரசியலுக்கு இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். விஜய் தனது 40வது வயதில் அரசியலுக்கு வருவது உறுதி.


இவ்வாறு சந்திரசேகர் கூறினார். விஜய்க்கு இப்போது 37 வயது ஆகிறது. சந்திரசேகர் சொல்வதைப் பார்த்தால் இன்னும் 3 வருடங்களுக்கு பிறகுதான் விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் போலிருக்கிறது.

விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்கும் சக்திகள்!

சினிமாவில் பிரபலமாக இருக்கும் கதாநாயகர்கள் அரசியலுக்கு வருவதை சில சக்திகள் தடுக்கின்றன. அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்பமோ என்ற அச்சம்தான் இதற்கு காரணம் என்று விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி :


விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்பதுதான் அவரது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. விஜய்யைப் போல சினிமாவில் பிரபலமாக உள்ள கதாநாயகன் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபடுவதை சில சக்திகள் விரும்புவது இல்லை. அதனால் தடுக்க வழி தேடுகிறார்கள். அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ என்ற அவர்கள் அச்சம்தான் இதற்குக் காரணம். அப்படிப்பட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். அரசியல் சார்புள்ள படங்களுக்கு எதிர்ப்புகள் வருவது சகஜம். ஆனால் காவலன் அரசியல் படம் அல்ல. பஞ்ச் வசனங்கள் இல்லை. அது முழுக்க காதல் கதை. அந்த படத்துக்கு நெருக்கடியும், எதிர்ப்புகளும் ஏன் வந்தன என்றே புரியவில்லை. பொங்கலுக்கு காவலன் வராது என்றும் செய்தி பரப்பினார்கள். ரசிகர்கள் கட்- அவுட் வைக்கவும் போஸ்டர்கள் ஒட்டவும் அனுமதிக்கப்படவில்லை.


எம்.ஜி.ஆர். வளர்ச்சியை பார்த்து பயம் ஏற்பட்டதை புரிந்து கொள்ளலாம். ஆனால் விஜய்க்கு ஏன் அப்படி நேர்ந்தது. எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிட முடியாது. ஆனால் அவர் உயரத்துக்கு விஜய்யை கொண்டு செல்வது ஏன்? விஜய் உடனடியாக அரசியலில் ஈடுபட திட்டம் இல்லை. ஆனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி. ரசிகர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். அவர்களிடம் அடுத்த 4 வருடங்கள் ரசிகர் மன்ற அமைப்புகளில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் விஜய்யை அரசியலுக்கு இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். விஜய் தனது 40வது வயதில் அரசியலுக்கு வருவது உறுதி.


இவ்வாறு சந்திரசேகர் கூறினார். விஜய்க்கு இப்போது 37 வயது ஆகிறது. சந்திரசேகர் சொல்வதைப் பார்த்தால் இன்னும் 3 வருடங்களுக்கு பிறகுதான் விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் போலிருக்கிறது.


நடிகர் விஜய், நடிகை அசின் நடித்த படம் காவலன். இந்த படத்தை சித்திக் டைரக்டு செய்துள்ளார். ரொமேஷ் பாபு படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இதற்கிடையில் இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம், சர்வதேச விநியோக உரிமை பெற்ற சிங்கப்பூர் படநிறுவனமான சந்திரா எண்டர்பிரைசஸ், விநியோக உரிமை பெற்ற சினிடைம்ஸ் எண்டர் பிரைசஸ் ஆகியவை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த படத்தை வெளியிடும் விநியோக உரிமை பெற்ற சக்தி சிதம்பரம், விநியோக உரிமையை ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு விற்றதாக மனுவில் கூறப்பட்டு இருந்தது.   மலையாளத்தில் வெளியான “பாடிகாட்” படத்தை விலைக்கு வாங்கிய கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம் படத்தின் இயக்குனர் சித்திக்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
 
இந்த வழக்குகளை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். படத்தின் தயாரிப்பாளர் ரொமேஷ்பாபு, வழக்கு தொடர்ந்தவர்கள் கோரியுள்ள (சுமார் ரூ.15 கோடி) ஐகோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும்.
 
அதன்பின்னர் திட்டமிட்டபடி காவலன் படத்தை தயாரிப்பாளரே வெளியிடலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

நடிகர் விஜய் நடித்த காவலன் படத்தை வெளியிடலாம்: சென்னை ஐகோர்ட்டு அனுமதி


நடிகர் விஜய், நடிகை அசின் நடித்த படம் காவலன். இந்த படத்தை சித்திக் டைரக்டு செய்துள்ளார். ரொமேஷ் பாபு படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இதற்கிடையில் இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம், சர்வதேச விநியோக உரிமை பெற்ற சிங்கப்பூர் படநிறுவனமான சந்திரா எண்டர்பிரைசஸ், விநியோக உரிமை பெற்ற சினிடைம்ஸ் எண்டர் பிரைசஸ் ஆகியவை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த படத்தை வெளியிடும் விநியோக உரிமை பெற்ற சக்தி சிதம்பரம், விநியோக உரிமையை ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு விற்றதாக மனுவில் கூறப்பட்டு இருந்தது.   மலையாளத்தில் வெளியான “பாடிகாட்” படத்தை விலைக்கு வாங்கிய கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம் படத்தின் இயக்குனர் சித்திக்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
 
இந்த வழக்குகளை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். படத்தின் தயாரிப்பாளர் ரொமேஷ்பாபு, வழக்கு தொடர்ந்தவர்கள் கோரியுள்ள (சுமார் ரூ.15 கோடி) ஐகோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும்.
 
அதன்பின்னர் திட்டமிட்டபடி காவலன் படத்தை தயாரிப்பாளரே வெளியிடலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

முக நூல்

Popular Posts