background img

புதிய வரவு

Showing posts with label Assembly election. Show all posts
Showing posts with label Assembly election. Show all posts
தேர்தல் முடிவுக்கு பிறகு தங்கபாலு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார். நடிகரும், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் தனது மகன் நடிகர் அஸ்வின் சேகர் திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழை கொடுக்க காரைக்குடி வந்தார். மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்தார்.

பின்னர் மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடந்த முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 140 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. இந்த தேர்தல் எதிர்ப்பலைகள் இல்லாத தேர்தல். அரசு நலத்திட்டங்கள் மக்களிடம் பரவலாக சென்றுள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு உள்ள ஒரு மாத இடைவெளி வேட்பாளர்கள் தங்களது மனதை பக்குவப்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் 63 தொகுதிகளை போராடி பெற்றனர். ஆனால் தங்கபாலு வேட்பாளர்கள் தேர்வு மூலம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை அழித்து விட்டார்.

தங்கபாலு காங்கிரஸ் கட்சியின் உண்மை விசுவாசிகள் 19 பேரை நீக்கம் செய்து அறிவித்தார். தற்போது இடைநீக்கம் என்று கூறுகிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு தங்கபாலு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி. அரசியல் வியாபாரம் அல்ல. அரசியல் மூலம் நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளை அதிகப்படுத்த விரும்பினேன். எதிராளிகளை சம்பாதிக்க அல்ல. சமூக சேவையில் ஈடுபட அரசியல் பதவி பயன்பட்டது.

மயிலாப்பூர் தொகுதியில் ரூ.330 கோடி செலவில் அரசின் நலத்திட்டங்களை செய்துள்ளேன். இதில் ஒரு பைசா கூட கமிஷனாக பெறவில்லை. தேர்தல் முடிவுக்கு பிறகு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை கொடுக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் முடிவுக்கு பிறகு தங்கபாலு நீக்கப்படுவது உறுதி: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி

தேர்தல் முடிவுக்கு பிறகு தங்கபாலு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார். நடிகரும், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் தனது மகன் நடிகர் அஸ்வின் சேகர் திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழை கொடுக்க காரைக்குடி வந்தார். மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்தார்.

பின்னர் மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடந்த முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 140 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. இந்த தேர்தல் எதிர்ப்பலைகள் இல்லாத தேர்தல். அரசு நலத்திட்டங்கள் மக்களிடம் பரவலாக சென்றுள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு உள்ள ஒரு மாத இடைவெளி வேட்பாளர்கள் தங்களது மனதை பக்குவப்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் 63 தொகுதிகளை போராடி பெற்றனர். ஆனால் தங்கபாலு வேட்பாளர்கள் தேர்வு மூலம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை அழித்து விட்டார்.

தங்கபாலு காங்கிரஸ் கட்சியின் உண்மை விசுவாசிகள் 19 பேரை நீக்கம் செய்து அறிவித்தார். தற்போது இடைநீக்கம் என்று கூறுகிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு தங்கபாலு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி. அரசியல் வியாபாரம் அல்ல. அரசியல் மூலம் நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளை அதிகப்படுத்த விரும்பினேன். எதிராளிகளை சம்பாதிக்க அல்ல. சமூக சேவையில் ஈடுபட அரசியல் பதவி பயன்பட்டது.

மயிலாப்பூர் தொகுதியில் ரூ.330 கோடி செலவில் அரசின் நலத்திட்டங்களை செய்துள்ளேன். இதில் ஒரு பைசா கூட கமிஷனாக பெறவில்லை. தேர்தல் முடிவுக்கு பிறகு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை கொடுக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

வெற்றியோ, தோல்வியோ, தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் அறிவுரை கூறினார். சிவகங்கையில் தேர்தல் பணிகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட சிதம்பரம் மேலும் பேசியதாவது: தமிழ்நாடு, கேரளம், அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி காட்டியுள்ளது.

இதற்கான காரணம் குறித்து, தேர்தல் முடிவுகள் வெளியானபின், தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்படும்.

தமிழகத்தில் தேர்தல்முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க முடியாத நிலையே உள்ளது.

முடிவு எப்படியிருந்தாலும் காங்கிரசார் பக்குவமாக ஏற்றுக் கொண்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும் என்றார் சிதம்பரம். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் பல புகார்களைத் தெரிவித்தனர்.

மானாமதுரை தொகுதியில் திமுகவினர் தங்களை அரவணைத்துச் செயல்படவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.

தமிழக தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை: ப. சிதம்பரம்

மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

வெற்றியோ, தோல்வியோ, தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் அறிவுரை கூறினார். சிவகங்கையில் தேர்தல் பணிகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட சிதம்பரம் மேலும் பேசியதாவது: தமிழ்நாடு, கேரளம், அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி காட்டியுள்ளது.

இதற்கான காரணம் குறித்து, தேர்தல் முடிவுகள் வெளியானபின், தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்படும்.

தமிழகத்தில் தேர்தல்முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க முடியாத நிலையே உள்ளது.

முடிவு எப்படியிருந்தாலும் காங்கிரசார் பக்குவமாக ஏற்றுக் கொண்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும் என்றார் சிதம்பரம். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் பல புகார்களைத் தெரிவித்தனர்.

மானாமதுரை தொகுதியில் திமுகவினர் தங்களை அரவணைத்துச் செயல்படவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.


தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க.வினரை கட்சியில் இருந்து நீக்கி தலைமைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக மாவட்ட துணை செயலாளர் ஆர்.சாந்தாமணி மற்றும் அவரது கணவர் எம்.ராமலிங்கம் ஆகியோர் கழகத் தோழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், தி.மு.க. உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.


அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிராக ஆவுடையார்கோயில் ஒன்றிய செயலாளர் உதயம் சண்முகம் எம்.எல்.ஏ., சிறுமருதூர் கிளை செயலாளர் மு.நரேந்திரஜோதி, ஆவுடையார்கோயில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி, சித்தக்கூர் கிளைச் செயலாளர் சிவமணி ஆகியோர் கழகத் தோழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், தி.மு.க. உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் எதிராக செயல்பட்ட திமுகவினர் கட்சியில் இருந்து நீக்கம்: தி.மு.க. தலைமைக் கழகம்

தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க.வினரை கட்சியில் இருந்து நீக்கி தலைமைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக மாவட்ட துணை செயலாளர் ஆர்.சாந்தாமணி மற்றும் அவரது கணவர் எம்.ராமலிங்கம் ஆகியோர் கழகத் தோழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், தி.மு.க. உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.


அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிராக ஆவுடையார்கோயில் ஒன்றிய செயலாளர் உதயம் சண்முகம் எம்.எல்.ஏ., சிறுமருதூர் கிளை செயலாளர் மு.நரேந்திரஜோதி, ஆவுடையார்கோயில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி, சித்தக்கூர் கிளைச் செயலாளர் சிவமணி ஆகியோர் கழகத் தோழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், தி.மு.க. உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் வன்முறை காரணமாக, தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அப்போது சில வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

இதையடுத்து 7 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி இங்கு நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கிள்ளியூர் தொகுதி அனந்தமங்கலம், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி தொகுதியில், ஆரணி நகர செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டத்தில், போடிநாயக்கனூர் தொகுதி சங்கராபுரம் ஆகிய வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மறு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கடலூர் மாவட்டத்தில், நெய்வேலி தொகுதியில் சம்மட்டிக்குப்பம் வாக்குச்சாவடி மற்றும் சம்மட்டிக்குப்பத்தில் மற்றொரு வாக்குச்சாவடியில் வன்முறை காரணமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் சேதமடைந்ததால் மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடை மருதூர் தொகுதியில் வளியவட்டம் வாக்குச்சாவடி மற்றும் அதே தொகுதியில் பருத்திக்குடி வாக்குச்சாவடி ஆகியவற்றில் ஆயிரக்கணக்கானோர் தேர்தலைப் புறக்கணித்ததால் அங்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் வன்முறை காரணமாக, தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அப்போது சில வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

இதையடுத்து 7 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி இங்கு நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கிள்ளியூர் தொகுதி அனந்தமங்கலம், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி தொகுதியில், ஆரணி நகர செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டத்தில், போடிநாயக்கனூர் தொகுதி சங்கராபுரம் ஆகிய வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மறு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கடலூர் மாவட்டத்தில், நெய்வேலி தொகுதியில் சம்மட்டிக்குப்பம் வாக்குச்சாவடி மற்றும் சம்மட்டிக்குப்பத்தில் மற்றொரு வாக்குச்சாவடியில் வன்முறை காரணமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் சேதமடைந்ததால் மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடை மருதூர் தொகுதியில் வளியவட்டம் வாக்குச்சாவடி மற்றும் அதே தொகுதியில் பருத்திக்குடி வாக்குச்சாவடி ஆகியவற்றில் ஆயிரக்கணக்கானோர் தேர்தலைப் புறக்கணித்ததால் அங்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சென்னை: சென்னை மயிலாப்பூர் தொகுதியில் முதலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஜெயந்தி. ஆனால் பெரும் குழப்பம் ஏற்பட்டு கடைசியில் ஜெயந்தியின் கணவரான தங்கபாலுவே அங்கு வேட்பாளராகி விட்டார். இந்த நிலையில், இன்று காலை வாக்களிப்பதற்காக வேளச்சேரி கஸ்தூரிபாய் நகரில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்தார் ஜெயந்தி. ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் புகைப்பட அடையாள அட்டை வைத்திருந்தும் கூட ஜெயந்தியால் வாக்களிக்க முடியவில்லை. இதனால் அவர் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

ஜெயந்தி தங்கபாலுவுக்கு ஓட்டு இல்லை

சென்னை: சென்னை மயிலாப்பூர் தொகுதியில் முதலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஜெயந்தி. ஆனால் பெரும் குழப்பம் ஏற்பட்டு கடைசியில் ஜெயந்தியின் கணவரான தங்கபாலுவே அங்கு வேட்பாளராகி விட்டார். இந்த நிலையில், இன்று காலை வாக்களிப்பதற்காக வேளச்சேரி கஸ்தூரிபாய் நகரில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்தார் ஜெயந்தி. ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் புகைப்பட அடையாள அட்டை வைத்திருந்தும் கூட ஜெயந்தியால் வாக்களிக்க முடியவில்லை. இதனால் அவர் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருசெங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம், ராசிபுரம்(தனி), சேந்தமங்கலம் ஆகிய 6தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் திருச்செங்கோடு பகுதியில் சீனிவாசபாளையம் பூத் எண் 85ல் மட்டும் முரசு சின்னத்திற்கு ஓட்டளித்தால், ஓட்டு பதிவாகவில்லை என்று தே.மு.தி.க.,வினர் புகார் அளித்துள்ளனர்.


இதனால் அந்த பூத் எண்ணில் மட்டும் பதற்றம் நிலவுகிறது.

முரசு சின்னம் பதிவாகவில்லை: பதற்றம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருசெங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம், ராசிபுரம்(தனி), சேந்தமங்கலம் ஆகிய 6தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் திருச்செங்கோடு பகுதியில் சீனிவாசபாளையம் பூத் எண் 85ல் மட்டும் முரசு சின்னத்திற்கு ஓட்டளித்தால், ஓட்டு பதிவாகவில்லை என்று தே.மு.தி.க.,வினர் புகார் அளித்துள்ளனர்.


இதனால் அந்த பூத் எண்ணில் மட்டும் பதற்றம் நிலவுகிறது.

ப.வேலூர்:பா.ம.க.,வுக்கு ஓட்டு அளிக்க வலியுறுத்தி, தி.மு.க., பிரமுகர் வழங்கிய, 20 ஆயிரம் ரூபாயை, நடந்தை கிராமத்தை சேர்ந்த மக்கள் திருப்பி வழங்கினர். இச்சம்பவம், அரசியல்வாதிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஒரு மாதமாக நடந்து வந்த பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் முடிந்தது. தேர்தலில், வாக்காளர்களை கவரும் வகையில் பணமோ, பரிசு பொருளோ வழங்கக் கூடாது என்றும், அவ்வாறு வழங்குபவர் மற்றும் பெறுபவர் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என, தேர்தல் கமிஷன் எச்சரித்தது.அதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில், தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கெடுபிடி ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் கமிஷனின் உத்தரவை சட்டை செய்யாத அரசியல் கட்சியினர், எச்சரிக்கையையும் மீறி ஒரு சில இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக, பலர் கைது செய்யப்பட்டு, பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு, பரமத்தி யூனியன் வசந்தபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நடந்தையில், அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் அன்பு, பா.ம.க., சின்னத்தில் ஓட்டு அளிக்க வலியுறுத்தி, ஓட்டுக்கு, 200 ரூபாய் வீதம் வாக்காளர்களுக்கு வழங்கி உள்ளார். விடிந்ததும் இச்செய்தி அப்பகுதி முழுவதும் பரவியது.அப்பகுதியை சேர்ந்த பெரியவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். ஓட்டுக்கு பணம் கொடுத்து, தங்களது ஒற்றுமையை சீர்குலைக்க பார்ப்பதாகவும், அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் முடிவு செய்தனர். அதன்படி, ஓட்டுக்கு பணம் கொடுத்த தி.மு.க., பிரமுகரான அன்புவை, அப்பகுதி மக்கள் வரவழைத்தனர்.

அங்குள்ள ஒரு கோவில் முன், தி.மு.க., பிரமுகர் வழங்கிய, 20 ஆயிரம் ரூபாயை மக்கள் முன்னிலையில் அவரிடமே திருப்பி அளித்தனர். ஓட்டுக்கு பணம் வழங்குவதும் குற்றம், அதை பெறுவதும் குற்றம் என்ற நிலையில், பெற்ற பணத்தை திருப்பி வழங்கிய சம்பவம், அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஓட்டு போட வழங்கிய ரூ.20 ஆயிரத்தை திருப்பி கொடுத்த மக்கள்

ப.வேலூர்:பா.ம.க.,வுக்கு ஓட்டு அளிக்க வலியுறுத்தி, தி.மு.க., பிரமுகர் வழங்கிய, 20 ஆயிரம் ரூபாயை, நடந்தை கிராமத்தை சேர்ந்த மக்கள் திருப்பி வழங்கினர். இச்சம்பவம், அரசியல்வாதிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஒரு மாதமாக நடந்து வந்த பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் முடிந்தது. தேர்தலில், வாக்காளர்களை கவரும் வகையில் பணமோ, பரிசு பொருளோ வழங்கக் கூடாது என்றும், அவ்வாறு வழங்குபவர் மற்றும் பெறுபவர் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என, தேர்தல் கமிஷன் எச்சரித்தது.அதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில், தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கெடுபிடி ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் கமிஷனின் உத்தரவை சட்டை செய்யாத அரசியல் கட்சியினர், எச்சரிக்கையையும் மீறி ஒரு சில இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக, பலர் கைது செய்யப்பட்டு, பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு, பரமத்தி யூனியன் வசந்தபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நடந்தையில், அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் அன்பு, பா.ம.க., சின்னத்தில் ஓட்டு அளிக்க வலியுறுத்தி, ஓட்டுக்கு, 200 ரூபாய் வீதம் வாக்காளர்களுக்கு வழங்கி உள்ளார். விடிந்ததும் இச்செய்தி அப்பகுதி முழுவதும் பரவியது.அப்பகுதியை சேர்ந்த பெரியவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். ஓட்டுக்கு பணம் கொடுத்து, தங்களது ஒற்றுமையை சீர்குலைக்க பார்ப்பதாகவும், அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் முடிவு செய்தனர். அதன்படி, ஓட்டுக்கு பணம் கொடுத்த தி.மு.க., பிரமுகரான அன்புவை, அப்பகுதி மக்கள் வரவழைத்தனர்.

அங்குள்ள ஒரு கோவில் முன், தி.மு.க., பிரமுகர் வழங்கிய, 20 ஆயிரம் ரூபாயை மக்கள் முன்னிலையில் அவரிடமே திருப்பி அளித்தனர். ஓட்டுக்கு பணம் வழங்குவதும் குற்றம், அதை பெறுவதும் குற்றம் என்ற நிலையில், பெற்ற பணத்தை திருப்பி வழங்கிய சம்பவம், அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அ.தி.மு.க., பொதுசெயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் 11 மணி நிலவரப்படி 32 சதம் ஓட்டுப்பதிவானது.

இந்த தொகுதியில் இதுவரை எவ்வித வன்முறையும் இல்லை. திருச்சியில் மொத்தம் இதுவரை 29 சத ஓட்டுக்கள் பதிவாகியிருக்கிறது.

ஸ்ரீரங்கத்தில் 32 சதவிதம் வாக்குப்பதிவு

அ.தி.மு.க., பொதுசெயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் 11 மணி நிலவரப்படி 32 சதம் ஓட்டுப்பதிவானது.

இந்த தொகுதியில் இதுவரை எவ்வித வன்முறையும் இல்லை. திருச்சியில் மொத்தம் இதுவரை 29 சத ஓட்டுக்கள் பதிவாகியிருக்கிறது.

புதுடில்லி:"சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு யாரும் சவால்விட கூடாது' என, அதிருப்தி வேட்பாளர்களை, கட்சியின் "சந்தேஷ்' பத்திரிகையில் தலைவர் சோனியா கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரின் நேரத்தை வீணடித்த எதிர்க்கட்சியினரையும் சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின், "சந்தேஷ்' பத்திரிக்கையின், முதல் பக்கத்தில், அக்கட்சி தலைவர் சோனியா தலையங்கம் எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது:தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு யாரும் சவால்விட கூடாது. ஒவ்வொருவருக்கும் சீட் வழங்க முடியாது. கட்சியின் முடிவை, இறுதி முடிவாக எடுத்து கொள்ள வேண்டும். கட்சியினர் யாரும் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்க்க கூடாது. கட்சியால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு, கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்.போதிய பார்லிமென்ட் ஜனநாயக அக்கறையின்மையால், பட்ஜெட் நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்தனர்.

பட்ஜெட் கூட்டம் முக்கியமானது. பல்வேறு அமைச்சகங்களுக்கு, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதுகுறித்து பார்லிமென்டில் வாதம் செய்யப்படும். ஆனால், உண்மையில் அது நடக்காதது வருத்தம் அளிக்கிறது. தொடர்ந்து பார்லிமென்ட் கூட்டத்தை ஒத்திவைத்து, ஏன் மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டது என்பதற்கு, மக்களுக்கு பா.ஜ., கட்சி விளக்கம் அளிக்க வேண்டும்.பொருட்கள் மற்றும் சேவை வரி உட்பட அனைத்து அம்சங்களும் பட்ஜெட்டில் நல்ல முறையில் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக கொண்டு வரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டம், மாநிலங்களுக்கு இடையில், பொருட்கள் மற்றும் சேவைகளை எளிதில் மாற்றி கொள்ள உதவும். முன்பு இருந்த சிக்கல்கள் களையப்படும்.இவ்வாறு சோனியா எழுதியுள்ளார்.

அதிருப்தி வேட்பாளர்கள் சோனியா கடும் சூடு

புதுடில்லி:"சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு யாரும் சவால்விட கூடாது' என, அதிருப்தி வேட்பாளர்களை, கட்சியின் "சந்தேஷ்' பத்திரிகையில் தலைவர் சோனியா கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரின் நேரத்தை வீணடித்த எதிர்க்கட்சியினரையும் சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின், "சந்தேஷ்' பத்திரிக்கையின், முதல் பக்கத்தில், அக்கட்சி தலைவர் சோனியா தலையங்கம் எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது:தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு யாரும் சவால்விட கூடாது. ஒவ்வொருவருக்கும் சீட் வழங்க முடியாது. கட்சியின் முடிவை, இறுதி முடிவாக எடுத்து கொள்ள வேண்டும். கட்சியினர் யாரும் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்க்க கூடாது. கட்சியால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு, கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்.போதிய பார்லிமென்ட் ஜனநாயக அக்கறையின்மையால், பட்ஜெட் நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்தனர்.

பட்ஜெட் கூட்டம் முக்கியமானது. பல்வேறு அமைச்சகங்களுக்கு, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதுகுறித்து பார்லிமென்டில் வாதம் செய்யப்படும். ஆனால், உண்மையில் அது நடக்காதது வருத்தம் அளிக்கிறது. தொடர்ந்து பார்லிமென்ட் கூட்டத்தை ஒத்திவைத்து, ஏன் மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டது என்பதற்கு, மக்களுக்கு பா.ஜ., கட்சி விளக்கம் அளிக்க வேண்டும்.பொருட்கள் மற்றும் சேவை வரி உட்பட அனைத்து அம்சங்களும் பட்ஜெட்டில் நல்ல முறையில் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக கொண்டு வரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டம், மாநிலங்களுக்கு இடையில், பொருட்கள் மற்றும் சேவைகளை எளிதில் மாற்றி கொள்ள உதவும். முன்பு இருந்த சிக்கல்கள் களையப்படும்.இவ்வாறு சோனியா எழுதியுள்ளார்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் நிர்மலா, வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட பூலாவரி கிராம வாக்குச் சாவடியில் ஓட்டளித்தார். அப்போது அவர், தன் கையில் மை வைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அதிகாரிகள் வற்புறுத்தவே, கையில் அலர்ஜி ஏற்படும் என்பதால் தான் மை வைத்துக்கொள்ள முடியாது என்று வாதிட்டார்.

இதனால் வேறு வழியின்றி அதிகாரிகள் அவர் விரலில் மை வைக்காமலேயே ஓட்டளிக்க அனுமதித்தனர். இதற்கு அதிமுகவினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மை வைக்காமல் ஓட்டு போட்ட வீரபாண்டி ஆறுமுகம் மகள்

வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் நிர்மலா, வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட பூலாவரி கிராம வாக்குச் சாவடியில் ஓட்டளித்தார். அப்போது அவர், தன் கையில் மை வைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அதிகாரிகள் வற்புறுத்தவே, கையில் அலர்ஜி ஏற்படும் என்பதால் தான் மை வைத்துக்கொள்ள முடியாது என்று வாதிட்டார்.

இதனால் வேறு வழியின்றி அதிகாரிகள் அவர் விரலில் மை வைக்காமலேயே ஓட்டளிக்க அனுமதித்தனர். இதற்கு அதிமுகவினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார்.

இவர் தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சாவடியில் வாக்களித்தார். முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இந்த சாவடியில் வாக்களித்தார்.

பின்னர் அவரை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அப்போது அவர், ’’விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கின்றனர்’’ என்று கூறினார்.

ரஜினிகாந்த் எப்போதும் வாக்களித்துவிட்டு கைகைளை மட்டும் உயர்த்தி காட்டிவிட்டு போய்விடுவார். இந்த முறை அவர் விலைவாசி உயர்வை பற்றி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கிறார்கள் : ரஜினி பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார்.

இவர் தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சாவடியில் வாக்களித்தார். முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இந்த சாவடியில் வாக்களித்தார்.

பின்னர் அவரை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அப்போது அவர், ’’விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கின்றனர்’’ என்று கூறினார்.

ரஜினிகாந்த் எப்போதும் வாக்களித்துவிட்டு கைகைளை மட்டும் உயர்த்தி காட்டிவிட்டு போய்விடுவார். இந்த முறை அவர் விலைவாசி உயர்வை பற்றி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : "அ.தி.மு.க.,வினர் மீது நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு காரணமான அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட தி.மு.க.,வினரை கைது செய்ய, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:தேர்தலில் தோல்வி உறுதி என்பதை அறிந்த கருணாநிதி பணம், படை, அதிகார பலம் ஆகியவற்றின் மூலம், ஜனநாயகத்தை சீர்குலைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கோவை மாவட்டம், மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட உடுக்கம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, அமைச்சர் சாமிநாதன் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் கிடைத்து, அ.தி.மு.க.,வினர் அந்த வீட்டை முற்றுகையிட்டதுடன், தேர்தல் அதிகாரிக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகவேலு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். இந்த தருணத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வீட்டிலிருந்து தி.மு.க.,வினர் கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் சண்முகவேலு மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற தொண்டர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.சண்முகவேலு மற்றும் அ.தி.மு.க.,வினர் மீது தி.மு.க.,வினர் நடத்தியுள்ள கொலைவெறி தாக்குதலுக்கு என் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலுக்கு காரணமான அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட தி.மு.க.,வினரை கைது செய்ய, தேர்தல் கமிஷன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பென்னாகரம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக தி.மு.க.,வினர் ஈடுபட்டதை சுட்டிக்காட்டிய தே.மு.தி.க., செயலர் அசோகனை, தி.மு.க.,வினர் உருட்டுக் கட்டையால் அடித்து கொலையே செய்துள்ளனர். தி.மு.க.,வினரின் இந்த கொலை வெறியாட்டத்திற்கும் என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் சம்பந்தப்பட்ட தி.மு.க.,வினரை உடனடியாக கைது செய்ய, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வன்முறை வெறியாட்டத்தில் மரணமடைந்த அசோகன் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது, தி.மு.க.,வினரால் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகளை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் போதுமான மத்திய ரிசர்வ் படைகளை அனுப்பி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி, சுதந்திரமாக ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய தேர்தல் கமிஷனையும், தமிழக தேர்தல் அதிகாரியையும், போலீசாரையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

தி.மு.க.,வினர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெ.,

சென்னை : "அ.தி.மு.க.,வினர் மீது நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு காரணமான அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட தி.மு.க.,வினரை கைது செய்ய, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:தேர்தலில் தோல்வி உறுதி என்பதை அறிந்த கருணாநிதி பணம், படை, அதிகார பலம் ஆகியவற்றின் மூலம், ஜனநாயகத்தை சீர்குலைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கோவை மாவட்டம், மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட உடுக்கம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, அமைச்சர் சாமிநாதன் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் கிடைத்து, அ.தி.மு.க.,வினர் அந்த வீட்டை முற்றுகையிட்டதுடன், தேர்தல் அதிகாரிக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகவேலு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். இந்த தருணத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வீட்டிலிருந்து தி.மு.க.,வினர் கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் சண்முகவேலு மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற தொண்டர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.சண்முகவேலு மற்றும் அ.தி.மு.க.,வினர் மீது தி.மு.க.,வினர் நடத்தியுள்ள கொலைவெறி தாக்குதலுக்கு என் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலுக்கு காரணமான அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட தி.மு.க.,வினரை கைது செய்ய, தேர்தல் கமிஷன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பென்னாகரம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக தி.மு.க.,வினர் ஈடுபட்டதை சுட்டிக்காட்டிய தே.மு.தி.க., செயலர் அசோகனை, தி.மு.க.,வினர் உருட்டுக் கட்டையால் அடித்து கொலையே செய்துள்ளனர். தி.மு.க.,வினரின் இந்த கொலை வெறியாட்டத்திற்கும் என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் சம்பந்தப்பட்ட தி.மு.க.,வினரை உடனடியாக கைது செய்ய, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வன்முறை வெறியாட்டத்தில் மரணமடைந்த அசோகன் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது, தி.மு.க.,வினரால் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகளை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் போதுமான மத்திய ரிசர்வ் படைகளை அனுப்பி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி, சுதந்திரமாக ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய தேர்தல் கமிஷனையும், தமிழக தேர்தல் அதிகாரியையும், போலீசாரையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வசிப்பதால் அத்தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஷ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.


இந்த தொகுதியில் அதிமுக சார்பில் வளர்மதி போட்டியிடுகிறார்.

ஜெயலலிதா வாக்களித்தார்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வசிப்பதால் அத்தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஷ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.


இந்த தொகுதியில் அதிமுக சார்பில் வளர்மதி போட்டியிடுகிறார்.

திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர் சென்னை கோபாலபுரத்தில் வசிப்பதால், கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி சாவடியில் வாக்களித்தார். கோபாலபுரம் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ளது.


ஆயிரம் விளக்குதொகுதியில் திமுக சார்பில் ஹசன் போட்டியிடுகிறார்.

கலைஞர் வாக்களித்தார்

திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர் சென்னை கோபாலபுரத்தில் வசிப்பதால், கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி சாவடியில் வாக்களித்தார். கோபாலபுரம் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ளது.


ஆயிரம் விளக்குதொகுதியில் திமுக சார்பில் ஹசன் போட்டியிடுகிறார்.

இன்று காலை 8 மணி முதல் ஓட்டுப் பதிவு துவங்குகிறது. மாலை 5 மணிக்கு முடிந்துவிடும். மறக்காமல் உங்கள் ஓட்டை, மனசாட்சிப் பொதுவாக யார் நல்லவர் எனக் கருதுகிறீர்களோ, எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தால் நல்லது என நினைக்கிறீர்களோ... அவர்களுக்குப் போடுங்கள்...

மாலை 5 மணி வரை காத்திருக்கத் தேவையில்லை. கள்ள ஓட்டு போடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் பெருமளவு மேற்கொண்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலும், அடையாள அட்டையும், பூத் சிலிப்பும் வழங்கப்பட்டுள்ளன.

இருந்தாலும், தவறு நடப்பதற்கான எந்த சந்தர்ப்பத்தையும் அளிக்காமல், நாமே முந்திக்கொண்டு நமது ஓட்டைப் பதிவு செய்வது நல்லது.

கண்டிப்பா ஓட்டுப்போடுங்க... காதுல பூ சுத்தற விஷயமா அரசியல் தெரிஞ்சாலும் இது உங்க ஜனநாயக கடமை

இன்று காலை 8 மணி முதல் ஓட்டுப் பதிவு துவங்குகிறது. மாலை 5 மணிக்கு முடிந்துவிடும். மறக்காமல் உங்கள் ஓட்டை, மனசாட்சிப் பொதுவாக யார் நல்லவர் எனக் கருதுகிறீர்களோ, எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தால் நல்லது என நினைக்கிறீர்களோ... அவர்களுக்குப் போடுங்கள்...

மாலை 5 மணி வரை காத்திருக்கத் தேவையில்லை. கள்ள ஓட்டு போடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் பெருமளவு மேற்கொண்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலும், அடையாள அட்டையும், பூத் சிலிப்பும் வழங்கப்பட்டுள்ளன.

இருந்தாலும், தவறு நடப்பதற்கான எந்த சந்தர்ப்பத்தையும் அளிக்காமல், நாமே முந்திக்கொண்டு நமது ஓட்டைப் பதிவு செய்வது நல்லது.

மதுரை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சோனியாவுடன் விஜயகாந்த், ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் சேர்ந்து புதிய கூட்டணியை அமைக்க வாய்ப்பு உள்ளது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டத்தக்கதாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனையே திமுகவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமையும். கிராமப்புறங்களில் மக்களை பிரச்சாரத்தின்போது சந்தித்தபோது, திமுகவின் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்துப் பேசியதைக் காண முடிந்தது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை வரும் 18ம் தேதி நடக்கிறது. அப்போது வழக்கை விரைவுபடுத்தக் கோர உள்ளேன். மேலும், ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர்கள் 2 பேர் இறந்தது தொடர்பான வழக்கையும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குடன் சேர்த்து நடத்தவும் மனு செய்வேன்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இன்னும் சில நாள்களில் மற்றொரு குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்யும். அதில் கனிமொழியின் பெயரும் இடம் பெறலாம்.

ஊழல் பிரச்சனை உள்ளிட்ட பல பிரசச்னைகள் எழுந்துள்ளதால், வரும் நவம்பரில் மக்களவைத் தேர்தல் வரலாம். தமிழக தேர்தல் முடிவுக்குப் பிறகு சோனியாவுடன் விஜயகாந்த், ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் சேர்ந்து புதிய கூட்டணியை அமைக்க வாய்ப்பு உள்ளது.

மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னையில், கல்லூரியைச் செயல்பட வைக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். பேராயர் தானாகவே சென்று கருணாநிதியைச் சந்தித்துள்ளார். ஆனால், அவரது மகன் தலைமையில் பாதிரியார்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இரட்டை வேடம் போட்டு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்திருப்பது சரியல்ல என்றார்.

தேர்தலுக்கு பின் சோனியா-விஜய்காந்த்-ராமதாஸ் கூட்டணி அமையும்: சு.சாமி

மதுரை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சோனியாவுடன் விஜயகாந்த், ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் சேர்ந்து புதிய கூட்டணியை அமைக்க வாய்ப்பு உள்ளது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டத்தக்கதாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனையே திமுகவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமையும். கிராமப்புறங்களில் மக்களை பிரச்சாரத்தின்போது சந்தித்தபோது, திமுகவின் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்துப் பேசியதைக் காண முடிந்தது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை வரும் 18ம் தேதி நடக்கிறது. அப்போது வழக்கை விரைவுபடுத்தக் கோர உள்ளேன். மேலும், ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர்கள் 2 பேர் இறந்தது தொடர்பான வழக்கையும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குடன் சேர்த்து நடத்தவும் மனு செய்வேன்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இன்னும் சில நாள்களில் மற்றொரு குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்யும். அதில் கனிமொழியின் பெயரும் இடம் பெறலாம்.

ஊழல் பிரச்சனை உள்ளிட்ட பல பிரசச்னைகள் எழுந்துள்ளதால், வரும் நவம்பரில் மக்களவைத் தேர்தல் வரலாம். தமிழக தேர்தல் முடிவுக்குப் பிறகு சோனியாவுடன் விஜயகாந்த், ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் சேர்ந்து புதிய கூட்டணியை அமைக்க வாய்ப்பு உள்ளது.

மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னையில், கல்லூரியைச் செயல்பட வைக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். பேராயர் தானாகவே சென்று கருணாநிதியைச் சந்தித்துள்ளார். ஆனால், அவரது மகன் தலைமையில் பாதிரியார்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இரட்டை வேடம் போட்டு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்திருப்பது சரியல்ல என்றார்.

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வேட்புமனுவில் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

க.அன்பழகன் (வில்லிவாக்கம்)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 1 கோடியே 58 லட்சத்து 6 ஆயிரத்து 770, ரொக்கம்-ரூ. 6 ஆயிரம், மனைவியிடம் உள்ள ரொக்கம்- ரூ. 1,500, வைப்பு தொகை-ரூ. 28 லட்சத்து 55 ஆயிரத்து 232, மனைவி பெயரில் வைப்பு தொகை-ரூ. 6 லட்சத்து 44 ஆயிரத்து 940, மகன் பெயரில் கடன்-ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம், மனைவியிடம் உள்ள நகைகள் மதிப்பு-ரூ. 7 லட்சத்து 60 ஆயிரம், வாகனங்கள்-இல்லை, மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள்-ரூ. 98.40 லட்சம்.

மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 2.63 கோடி, ரொக்கம்-ரூ. 50 ஆயிரம், மனைவியிடம் ரொக்கம் - ரூ. 25 ஆயிரம். வைப்பு தொகை ரூ. 5 லட்சத்து 37 ஆயிரத்து 6, மனைவி பெயரில் வைப்பு தொகை ரூ. 11 லட்சத்து 80 ஆயிரத்து 868, பாண்டு-பங்குகள்-ரூ. 1 லட்சம், மனைவியிடம் உள்ள நகைகளின் மதிப்பு ரூ. 11 லட்சம், வாகனங்கள்-இல்லை, விவசாய நிலத்தின் மதிப்பு- ரூ. 17 லட்சத்து 67 ஆயிரம், மனைவி பெயரில் உள்ள விவசாயமற்ற நிலத்தின் மதிப்பு ரூ. 7 லட்சத்து 43 ஆயிரத்து 360, வீடு மதிப்பு-ரூ. 75 லட்சத்து 20 ஆயிரம், மனைவி பெயரில் உள்ள வீட்டின் மதிப்பு- ரூ. 69 லட்சம், இதர சொத்துக்கள் ரூ. 12 லட்சத்து 36 ஆயிரத்து 827.

எ.வ.வேலு (திருவண்ணாமலை)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 8 கோடியே 11 லட்சத்து 40 ஆயிரத்து 423, ரொக்கம்-ரூ. 26 லட்சத்து 50 ஆயிரம், மனைவியிடம் ரொக்கம்- ரூ. 4 லட்சத்து 30 ஆயிரம், வைப்பு தொகை ரூ. 14 லட்சத்து 97ஆயிரத்து 523, மனைவியிடம் உள்ள நகைகள் மதிப்பு ரூ. 5 லட் சத்து 76 ஆயிரம், வாகனங்கள்-இல்லை, விவசாய நிலத்தின் மதிப்பு-ரூ. 1 கோடியே 75 லட்சத்து 75 ஆயிரத்து 500, மனைவி பெயரில் உள்ள விவசாய நிலத்தின் மதிப்பு- ரூ. 5 லட்சம், இதர சொத்துக்கள் - ரூ. 5 கோடியே 76 லட்சத்து 10 ஆயிரத்து 500.

க. பொன்முடி (விழுப்புரம்)

மொத்த சொத்து மதிப்பு ரூ. 3 கோடியே 95 லட்சத்து 41 ஆயிரத்து 190, ரொக்கம்-ரூ. 8 லட்சத்து 61 ஆயிரம், மனைவியிடம் ரொக்கம்- ரூ. 18 லட்சம், வைப்புத் தொகை-ரூ. 24 லட்சத்து 60 ஆயிரத்து 104, மனைவி பெயரில் உள்ள வைப்பு தொகை- ரூ. 1 கோடியே 48 ஆயிரத்து 697, நகைகளின் மதிப்பு- ரூ. 2 லட்சத்து 19 ஆயிரத்த 600, மனைவியிடம் உள்ள நகைகளின் மதிப்பு- ரூ. 75 லட்சம், டிராக்டர், டிரெய்லர், சுமோ வாகனங்களின் மதிப்பு- ரூ.2 லட்சத்து 89 ஆயிரம், மனைவியிடம் உள்ள வாகனங்களின் மதிப்பு ரூ. 12 லட்சத்து 65 ஆயிரத்து 256, மனைவி பெயரில் உள்ள பங்கு தொகை - ரூ. 65 லட்சத்து 36 ஆயிரம், கடன்- ரூ. 6 லட்சத்து 69 ஆயிரத்து 532, மனைவி பெயரில் கடன்-ரூ. 11 லட்சம்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 2 கோடியே 1 லட்சத்து 95 ஆயிரத்து 524, ரொக்கம்-ரூ. 10 ஆயிரம், மனைவியிடம் உள்ள ரொக்கம்-ரூ. 17 ஆயிரம், வைப்பு தொகை- ரூ. 6 லட்சத்து 25 ஆயிரத்து 81, வாகனங்களின் மதிப்பு-ரூ. 12 லட்சத்து 92 ஆயிரத்து 550, கடன்- ரூ. 18 லட்சத்து 56 ஆயிரத்து 29.

தா.மோ.அன்பரசன் (பல்லாவரம்)

மொத்த சொத்து மதிப்பு- 5 கோடி, ரொக்கம்-ரூ. 2 லட்சம், மனைவியிடம் ரொக்கம்- ரூ. 40 ஆயிரம், வைப்பு தொகை- ரூ. 21 லட்சத்து 68 ஆயிரத்து 439, வாகனங்களின் மதிப்பு-ரூ. 22 லட்சத்து 90 ஆயிரம், மனைவி பெயரில் உள்ள வாகனங்களின் மதிப்பு- ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம், நகைகளின் மதிப்பு- ரூ. 10 லட்சம், மனைவி பெயரில் உள்ள நகைகளின் மதிப்பு- ரூ. 22 லட்சத்து 20 ஆயிரம், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் உள்பட இதர சொத்துக்களின் மதிப்பு- ரூ. 4.4 கோடி.

மதிவாணன் (கீழ்வேளூர்)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 88.26 லட்சம், ரொக்கம்- ரூ. 10 ஆயிரம், வைப்புத் தொகை - ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 942, மனைவி பெயரில் வைப்பு தொகை- ரூ. 4 லட்சம், வாகனங்களின் மதிப்பு ரூ. 53 ஆயிரம், நகைகளின் மதிப்பு- ரூ. 30 ஆயிரம், மனைவி பெயரில் உள்ள நகைகளின் மதிப்பு- ரூ.1 லட்சத்து 40 ஆயிரம், விவசாய நிலங்களின் மதிப்பு- ரூ. 47 ஆயிரத்து 725, கட்டிடங்களின் மதிப்பு- ரூ. 8 லட்சம், கடன் தொகை ரூ. 81 ஆயிரத்து 939.

சட்டசபை தேர்தலில் போட்டி: அமைச்சர்கள் சொத்து விவரம்

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வேட்புமனுவில் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

க.அன்பழகன் (வில்லிவாக்கம்)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 1 கோடியே 58 லட்சத்து 6 ஆயிரத்து 770, ரொக்கம்-ரூ. 6 ஆயிரம், மனைவியிடம் உள்ள ரொக்கம்- ரூ. 1,500, வைப்பு தொகை-ரூ. 28 லட்சத்து 55 ஆயிரத்து 232, மனைவி பெயரில் வைப்பு தொகை-ரூ. 6 லட்சத்து 44 ஆயிரத்து 940, மகன் பெயரில் கடன்-ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம், மனைவியிடம் உள்ள நகைகள் மதிப்பு-ரூ. 7 லட்சத்து 60 ஆயிரம், வாகனங்கள்-இல்லை, மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள்-ரூ. 98.40 லட்சம்.

மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 2.63 கோடி, ரொக்கம்-ரூ. 50 ஆயிரம், மனைவியிடம் ரொக்கம் - ரூ. 25 ஆயிரம். வைப்பு தொகை ரூ. 5 லட்சத்து 37 ஆயிரத்து 6, மனைவி பெயரில் வைப்பு தொகை ரூ. 11 லட்சத்து 80 ஆயிரத்து 868, பாண்டு-பங்குகள்-ரூ. 1 லட்சம், மனைவியிடம் உள்ள நகைகளின் மதிப்பு ரூ. 11 லட்சம், வாகனங்கள்-இல்லை, விவசாய நிலத்தின் மதிப்பு- ரூ. 17 லட்சத்து 67 ஆயிரம், மனைவி பெயரில் உள்ள விவசாயமற்ற நிலத்தின் மதிப்பு ரூ. 7 லட்சத்து 43 ஆயிரத்து 360, வீடு மதிப்பு-ரூ. 75 லட்சத்து 20 ஆயிரம், மனைவி பெயரில் உள்ள வீட்டின் மதிப்பு- ரூ. 69 லட்சம், இதர சொத்துக்கள் ரூ. 12 லட்சத்து 36 ஆயிரத்து 827.

எ.வ.வேலு (திருவண்ணாமலை)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 8 கோடியே 11 லட்சத்து 40 ஆயிரத்து 423, ரொக்கம்-ரூ. 26 லட்சத்து 50 ஆயிரம், மனைவியிடம் ரொக்கம்- ரூ. 4 லட்சத்து 30 ஆயிரம், வைப்பு தொகை ரூ. 14 லட்சத்து 97ஆயிரத்து 523, மனைவியிடம் உள்ள நகைகள் மதிப்பு ரூ. 5 லட் சத்து 76 ஆயிரம், வாகனங்கள்-இல்லை, விவசாய நிலத்தின் மதிப்பு-ரூ. 1 கோடியே 75 லட்சத்து 75 ஆயிரத்து 500, மனைவி பெயரில் உள்ள விவசாய நிலத்தின் மதிப்பு- ரூ. 5 லட்சம், இதர சொத்துக்கள் - ரூ. 5 கோடியே 76 லட்சத்து 10 ஆயிரத்து 500.

க. பொன்முடி (விழுப்புரம்)

மொத்த சொத்து மதிப்பு ரூ. 3 கோடியே 95 லட்சத்து 41 ஆயிரத்து 190, ரொக்கம்-ரூ. 8 லட்சத்து 61 ஆயிரம், மனைவியிடம் ரொக்கம்- ரூ. 18 லட்சம், வைப்புத் தொகை-ரூ. 24 லட்சத்து 60 ஆயிரத்து 104, மனைவி பெயரில் உள்ள வைப்பு தொகை- ரூ. 1 கோடியே 48 ஆயிரத்து 697, நகைகளின் மதிப்பு- ரூ. 2 லட்சத்து 19 ஆயிரத்த 600, மனைவியிடம் உள்ள நகைகளின் மதிப்பு- ரூ. 75 லட்சம், டிராக்டர், டிரெய்லர், சுமோ வாகனங்களின் மதிப்பு- ரூ.2 லட்சத்து 89 ஆயிரம், மனைவியிடம் உள்ள வாகனங்களின் மதிப்பு ரூ. 12 லட்சத்து 65 ஆயிரத்து 256, மனைவி பெயரில் உள்ள பங்கு தொகை - ரூ. 65 லட்சத்து 36 ஆயிரம், கடன்- ரூ. 6 லட்சத்து 69 ஆயிரத்து 532, மனைவி பெயரில் கடன்-ரூ. 11 லட்சம்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 2 கோடியே 1 லட்சத்து 95 ஆயிரத்து 524, ரொக்கம்-ரூ. 10 ஆயிரம், மனைவியிடம் உள்ள ரொக்கம்-ரூ. 17 ஆயிரம், வைப்பு தொகை- ரூ. 6 லட்சத்து 25 ஆயிரத்து 81, வாகனங்களின் மதிப்பு-ரூ. 12 லட்சத்து 92 ஆயிரத்து 550, கடன்- ரூ. 18 லட்சத்து 56 ஆயிரத்து 29.

தா.மோ.அன்பரசன் (பல்லாவரம்)

மொத்த சொத்து மதிப்பு- 5 கோடி, ரொக்கம்-ரூ. 2 லட்சம், மனைவியிடம் ரொக்கம்- ரூ. 40 ஆயிரம், வைப்பு தொகை- ரூ. 21 லட்சத்து 68 ஆயிரத்து 439, வாகனங்களின் மதிப்பு-ரூ. 22 லட்சத்து 90 ஆயிரம், மனைவி பெயரில் உள்ள வாகனங்களின் மதிப்பு- ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம், நகைகளின் மதிப்பு- ரூ. 10 லட்சம், மனைவி பெயரில் உள்ள நகைகளின் மதிப்பு- ரூ. 22 லட்சத்து 20 ஆயிரம், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் உள்பட இதர சொத்துக்களின் மதிப்பு- ரூ. 4.4 கோடி.

மதிவாணன் (கீழ்வேளூர்)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 88.26 லட்சம், ரொக்கம்- ரூ. 10 ஆயிரம், வைப்புத் தொகை - ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 942, மனைவி பெயரில் வைப்பு தொகை- ரூ. 4 லட்சம், வாகனங்களின் மதிப்பு ரூ. 53 ஆயிரம், நகைகளின் மதிப்பு- ரூ. 30 ஆயிரம், மனைவி பெயரில் உள்ள நகைகளின் மதிப்பு- ரூ.1 லட்சத்து 40 ஆயிரம், விவசாய நிலங்களின் மதிப்பு- ரூ. 47 ஆயிரத்து 725, கட்டிடங்களின் மதிப்பு- ரூ. 8 லட்சம், கடன் தொகை ரூ. 81 ஆயிரத்து 939.

சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க., - அ.தி.மு.க., அணிகள் தயாராகி விட்டன. நீண்ட இழுபறிக்கு பின் நேற்று தொகுதிகளை பிரிக்கும் சிக்கல் தீர்ந்ததால், அ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க., போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தும் வெளியிட்டனர். இதையடுத்து, தேர்தல் களம் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.

அடுத்த மாதம் 13ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தி.மு.க., அணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. திருவாரூரில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதி, நாளை (23ம் தேதி) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரசைத் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டன.

அதே நேரத்தில், அ.தி.மு.க., அணியில் முதலில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இதர சிறிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து விட்டாலும், தே.மு.தி.க.,விற்கு தொகுதிகளை பங்கீடு செய்து கொடுப்பதில் இழுபறி நீடித்தது.
தே.மு.தி.க.,விற்கு முதலில் ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில், சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஒரு தொகுதிகள் கூட இடம் பெறவில்லை. இதனால், அந்த மூன்று மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென, அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் தே.மு.தி.க., நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று காலையில் தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள் கூட்டம், விஜயகாந்த் தலைமையில் நடந்தது. கூட்டம் நடந்த அலுவலகத்திற்குள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை; வெளியே பூட்டப்பட்டிருந்தது.அ.தி.மு.க., ஒதுக்கிய தொகுதிகளில் போட்டியிட விரும்பிய விருப்ப மனுக்களை, விஜயகாந்த் பரிசீலனை செய்தார். அதன் பின், வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொகுதி பங்கீடு குறித்த சிக்கல் நேற்று மதியம் தீர்க்கப்பட்டதும், தங்கள் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதாவும், விஜயகாந்தும் வெளியிட்டனர். இதையடுத்து, தமிழக தேர்தல் களம் சுறுசுறுப்பாகியுள்ளது.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை?தி.மு.க., தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தேர்தல் பிரசாரம் கிளம்பும் முன், தேர்தல் அறிக்கையை வெளியிடுவதாக ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார். ஆனால், கூட்டணி பிரச்னை காரணமாக, பிரசார தேதி தள்ளி வைக்கப்பட்டதால் தேர்தல் அறிக்கை வெளியீடும் தள்ளிப்போனது. வரும் 24ம் தேதி, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளிவர வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலை சந்திக்க தி.மு.க., - அ.தி.மு.க., அணிகள் தயார்

சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க., - அ.தி.மு.க., அணிகள் தயாராகி விட்டன. நீண்ட இழுபறிக்கு பின் நேற்று தொகுதிகளை பிரிக்கும் சிக்கல் தீர்ந்ததால், அ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க., போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தும் வெளியிட்டனர். இதையடுத்து, தேர்தல் களம் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.

அடுத்த மாதம் 13ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தி.மு.க., அணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. திருவாரூரில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதி, நாளை (23ம் தேதி) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரசைத் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டன.

அதே நேரத்தில், அ.தி.மு.க., அணியில் முதலில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இதர சிறிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து விட்டாலும், தே.மு.தி.க.,விற்கு தொகுதிகளை பங்கீடு செய்து கொடுப்பதில் இழுபறி நீடித்தது.
தே.மு.தி.க.,விற்கு முதலில் ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில், சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஒரு தொகுதிகள் கூட இடம் பெறவில்லை. இதனால், அந்த மூன்று மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென, அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் தே.மு.தி.க., நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று காலையில் தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள் கூட்டம், விஜயகாந்த் தலைமையில் நடந்தது. கூட்டம் நடந்த அலுவலகத்திற்குள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை; வெளியே பூட்டப்பட்டிருந்தது.அ.தி.மு.க., ஒதுக்கிய தொகுதிகளில் போட்டியிட விரும்பிய விருப்ப மனுக்களை, விஜயகாந்த் பரிசீலனை செய்தார். அதன் பின், வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொகுதி பங்கீடு குறித்த சிக்கல் நேற்று மதியம் தீர்க்கப்பட்டதும், தங்கள் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதாவும், விஜயகாந்தும் வெளியிட்டனர். இதையடுத்து, தமிழக தேர்தல் களம் சுறுசுறுப்பாகியுள்ளது.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை?தி.மு.க., தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தேர்தல் பிரசாரம் கிளம்பும் முன், தேர்தல் அறிக்கையை வெளியிடுவதாக ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார். ஆனால், கூட்டணி பிரச்னை காரணமாக, பிரசார தேதி தள்ளி வைக்கப்பட்டதால் தேர்தல் அறிக்கை வெளியீடும் தள்ளிப்போனது. வரும் 24ம் தேதி, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளிவர வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றும் ம.தி.மு.க., 2011ல் நடக்கும் தமிழகம், புதுவை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இல்லை' என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ம.தி.மு.க.,வுக்கு 12 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்பதில் அ.தி.மு.க., திட்டவட்டமாக இருந்ததால் அக்கூட்டணியில் நீடிப்பது குறித்த இறுதி முடிவெடுப்பதற்கு ம.தி.மு.க., உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச்செயலர்கள் கூட்டம், தாயகத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய நடந்தது. ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், 56 மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர். கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி மலர்ந்த சம்பவங்களையும், 35 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது, திருமங்கலம் இடைத்தேர்தலில் அத்தொகுதியை அ.தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுத்தது, 2009ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த அவமான நிகழ்வுகளையும் வைகோ விவரித்தார்.

மேலும், வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன் முதல் கட்டமாக 35 தொகுதிகளும், இரண்டாவது கட்டமாக 30 தொகுதிகளும், மூன்றாவது கட்டமாக 21 தொகுதிகளும் ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையை பற்றியும் வைகோ தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தரப்பில் ஆறு தொகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு பின், எட்டு தொகுதிகள், ஒன்பது தொகுதிகள் என அதிகரித்து இறுதியாக 12 தொகுதிகள் வரை தருவதற்கு நடத்திய பேரத்தையும், வைகோ ஆவேசமாக விளக்கி பேசினார்.தொகுதி பங்கீட்டில் ம.தி.மு.க.,வை அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டு புறக்கணிப்பதாக அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.

ம.தி.மு.க., கொள்கைப் பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் பேசும்போது, அ.தி.மு.க., தலைமையை கடுமையாக விமர்சித்தார். தலைவர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ப மாவட்டச்செயலர்கள் 48 பேர், "அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற வேண்டாம்' என, தெரிவித்தனர்.

ஒரு சிலர் மட்டும் ம.தி.மு.க.,வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அ.தி.மு.க., தரும் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து பேசினர். அவர்களுக்கு வைகோ பதிலளித்து பேசும்போது, "நீங்கள் விரும்பினால் போட்டியிடுங்கள். நான் தொகுதிகளை கேட்க மாட்டேன். பிரசாரத்திற்கு வரமாட்டேன். என்னை அவமானப்படுத்தி விட்டனர். தேர்தலில் செலவு செய்வதற்கும் நமது கட்சியில் பணம் இல்லை' என்றார்.அதிகாலையில், ஐந்து பக்கம் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், "புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்து போட்டியிடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு ம.தி.மு.க., கருவியாயிற்று என்ற துளியும் உண்மை அற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும். கண்களை விற்று சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை ம.தி.மு.க., வுக்கு இல்லை. தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றும் ம.தி.மு.க., 2011ல் நடக்கும் தமிழகம், புதுவை சட்டசபை பொதுத்தேர்தலில் மட்டுமே போட்டியிடுவது இல்லை' என, அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் சில மாவட்டச்செயலர்கள், "தேர்தலில் புறக்கணிப்பு என்ற முடிவு ஏற்புடையதல்ல. மாவட்டத்தில் கட்சிக்காரர்கள், உறவினர்கள், பொதுமக்கள் கேட்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் ஏதாவது ஒரு காரணத்தின் அடிப்படையில் நமக்கு தோல்வி தான் ஏற்படுகிறது' என, கண்ணீர் விட்டு அழுதுகொண்டே தங்களது ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

உட்கட்சி பூசல், நிதி நெருக்கடியா-ம.தி.மு.க., தேர்தல் புறக்கணிப்பு மர்மம் : அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க., வெளியேறியதற்கு உட்கட்சி பூசல், நிதி நெருக்கடி மற்றும் சில முக்கியக் காரணிகள் உண்டு என, கூறப்படுகிறது.

தி.மு.க.,வில் போர்ப்படை தளபதி என்றழைக்கப்பட்ட வைகோ, கருத்து வேறுபாடுகளால் வெளியேறி ம.தி.மு.க.,வை துவக்கினார். 1996ல் தனித்து போட்டியிட்ட ம.தி.மு.க., 5.78 சதவீத ஓட்டுகளை பெற்றது. 2001 தேர்தலில் 211 இடங்களில் தனித்து போட்டியிட்டு 4.65 சதவீத ஓட்டுகள் பெற்றது.பின், 2006 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் தொகுதி பிரச்னையால், கடைசி நேரத்தில் விலகி, அ.தி.மு.க., கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், ஆறு இடங்களில் வெற்றி பெற்று 5.98 சதவீத ஓட்டுகளை பெற்றது.இதையடுத்து, லோக்சபா தேர்தலில் நான்கு இடங்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. பின், திருமங்கலம் தொகுதி ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்ற போதும், அதில் அ.தி.மு.க.,வே போட்டியிட்டது.

ம.தி.மு.க.,வுக்குரிய கம்பம், தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தது. இதனால், ம.தி.மு.க., ஓரங்கட்டப்படுகிறதோ என, அந்தக் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். தற்போது சட்டசபை தேர்தலில் 21 தொகுதிகளை கேட்ட ம.தி.மு.க.,வுக்கு 6, 7, 8, 12 என, சீட் பேரம் இழுபறி நிலையாகி, கடைசியில் அக்கூட்டணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட கட்சியானது.இம்மாதிரி வைகோ எடுத்த முடிவு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி ம.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தன்மானத்திற்காக வைகோ முடிவெடுத்தாலும், அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக்குறி உள்ளது. ம.தி.மு.க., சரிவுக்கு உட்கட்சி பூசல் தான் முக்கிய காரணம். ஏனெனில், பதவி மற்றும் முக்கியத்துவம் தந்த பலர், அடுத்த கட்சிக்குத் தாவி அங்கு பதவி பெறுவது வழக்கமாகி விட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் மாசு கட்டுப்பாட்டு விதிகள் கடைபிடிக்காததால், வைகோ ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆலையை மூட வைத்தார். இதில், பெங்களூரைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர் ஒருவர் தலையிட்டு சமாதானம் பேசியும், வைகோ பணியாததால், அ.தி.மு.க., தலைமை மூலம் நெருக்கடி கொடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் பிரச்னையை எழுப்பிவிட்டு, அது ஓய்வுற்ற பின்னும் அதை மீண்டும் மீண்டும் தோண்டுவது அவர் பாணி அரசியல் . இதுவும் விரிசலுக்கும், மனக் கசப்புக்கும் ஒரு காரணம்.

பொதுவாக அவர் விடுதலைப் புலிகள் ஆதரவு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டதில் இருந்து, அவருக்கு ஜனநாயக அடிப்படையில் ஆதரவு தந்த பலரும் சற்று விலகிக் கொண்டனர். இன்று தேர்தல் நேரத்தில் அவருக்கு அனைத்தும் பாதகமாகி விட்டது.இனி அடுத்த தேர்தலில் போட்டியிட்டு, குறைந்த பட்ச சதவீத ஓட்டுகள் அல்லது சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் பெறுவது என்பது எப்படி? அதுவரை தொண்டர்களை எப்படி ஊக்குவிப்பது என்பது, இன்று எழுந்திருக்கும் கேள்வி.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினார் வைகோ : இன்னும் 2 மாதங்களுக்கு எந்த அறிக்கையும் கிடையாது

"தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றும் ம.தி.மு.க., 2011ல் நடக்கும் தமிழகம், புதுவை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இல்லை' என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ம.தி.மு.க.,வுக்கு 12 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்பதில் அ.தி.மு.க., திட்டவட்டமாக இருந்ததால் அக்கூட்டணியில் நீடிப்பது குறித்த இறுதி முடிவெடுப்பதற்கு ம.தி.மு.க., உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச்செயலர்கள் கூட்டம், தாயகத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய நடந்தது. ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், 56 மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர். கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி மலர்ந்த சம்பவங்களையும், 35 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது, திருமங்கலம் இடைத்தேர்தலில் அத்தொகுதியை அ.தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுத்தது, 2009ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த அவமான நிகழ்வுகளையும் வைகோ விவரித்தார்.

மேலும், வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன் முதல் கட்டமாக 35 தொகுதிகளும், இரண்டாவது கட்டமாக 30 தொகுதிகளும், மூன்றாவது கட்டமாக 21 தொகுதிகளும் ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையை பற்றியும் வைகோ தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தரப்பில் ஆறு தொகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு பின், எட்டு தொகுதிகள், ஒன்பது தொகுதிகள் என அதிகரித்து இறுதியாக 12 தொகுதிகள் வரை தருவதற்கு நடத்திய பேரத்தையும், வைகோ ஆவேசமாக விளக்கி பேசினார்.தொகுதி பங்கீட்டில் ம.தி.மு.க.,வை அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டு புறக்கணிப்பதாக அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.

ம.தி.மு.க., கொள்கைப் பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் பேசும்போது, அ.தி.மு.க., தலைமையை கடுமையாக விமர்சித்தார். தலைவர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ப மாவட்டச்செயலர்கள் 48 பேர், "அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற வேண்டாம்' என, தெரிவித்தனர்.

ஒரு சிலர் மட்டும் ம.தி.மு.க.,வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அ.தி.மு.க., தரும் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து பேசினர். அவர்களுக்கு வைகோ பதிலளித்து பேசும்போது, "நீங்கள் விரும்பினால் போட்டியிடுங்கள். நான் தொகுதிகளை கேட்க மாட்டேன். பிரசாரத்திற்கு வரமாட்டேன். என்னை அவமானப்படுத்தி விட்டனர். தேர்தலில் செலவு செய்வதற்கும் நமது கட்சியில் பணம் இல்லை' என்றார்.அதிகாலையில், ஐந்து பக்கம் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், "புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்து போட்டியிடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு ம.தி.மு.க., கருவியாயிற்று என்ற துளியும் உண்மை அற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும். கண்களை விற்று சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை ம.தி.மு.க., வுக்கு இல்லை. தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றும் ம.தி.மு.க., 2011ல் நடக்கும் தமிழகம், புதுவை சட்டசபை பொதுத்தேர்தலில் மட்டுமே போட்டியிடுவது இல்லை' என, அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் சில மாவட்டச்செயலர்கள், "தேர்தலில் புறக்கணிப்பு என்ற முடிவு ஏற்புடையதல்ல. மாவட்டத்தில் கட்சிக்காரர்கள், உறவினர்கள், பொதுமக்கள் கேட்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் ஏதாவது ஒரு காரணத்தின் அடிப்படையில் நமக்கு தோல்வி தான் ஏற்படுகிறது' என, கண்ணீர் விட்டு அழுதுகொண்டே தங்களது ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

உட்கட்சி பூசல், நிதி நெருக்கடியா-ம.தி.மு.க., தேர்தல் புறக்கணிப்பு மர்மம் : அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க., வெளியேறியதற்கு உட்கட்சி பூசல், நிதி நெருக்கடி மற்றும் சில முக்கியக் காரணிகள் உண்டு என, கூறப்படுகிறது.

தி.மு.க.,வில் போர்ப்படை தளபதி என்றழைக்கப்பட்ட வைகோ, கருத்து வேறுபாடுகளால் வெளியேறி ம.தி.மு.க.,வை துவக்கினார். 1996ல் தனித்து போட்டியிட்ட ம.தி.மு.க., 5.78 சதவீத ஓட்டுகளை பெற்றது. 2001 தேர்தலில் 211 இடங்களில் தனித்து போட்டியிட்டு 4.65 சதவீத ஓட்டுகள் பெற்றது.பின், 2006 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் தொகுதி பிரச்னையால், கடைசி நேரத்தில் விலகி, அ.தி.மு.க., கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், ஆறு இடங்களில் வெற்றி பெற்று 5.98 சதவீத ஓட்டுகளை பெற்றது.இதையடுத்து, லோக்சபா தேர்தலில் நான்கு இடங்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. பின், திருமங்கலம் தொகுதி ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்ற போதும், அதில் அ.தி.மு.க.,வே போட்டியிட்டது.

ம.தி.மு.க.,வுக்குரிய கம்பம், தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தது. இதனால், ம.தி.மு.க., ஓரங்கட்டப்படுகிறதோ என, அந்தக் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். தற்போது சட்டசபை தேர்தலில் 21 தொகுதிகளை கேட்ட ம.தி.மு.க.,வுக்கு 6, 7, 8, 12 என, சீட் பேரம் இழுபறி நிலையாகி, கடைசியில் அக்கூட்டணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட கட்சியானது.இம்மாதிரி வைகோ எடுத்த முடிவு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி ம.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தன்மானத்திற்காக வைகோ முடிவெடுத்தாலும், அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக்குறி உள்ளது. ம.தி.மு.க., சரிவுக்கு உட்கட்சி பூசல் தான் முக்கிய காரணம். ஏனெனில், பதவி மற்றும் முக்கியத்துவம் தந்த பலர், அடுத்த கட்சிக்குத் தாவி அங்கு பதவி பெறுவது வழக்கமாகி விட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் மாசு கட்டுப்பாட்டு விதிகள் கடைபிடிக்காததால், வைகோ ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆலையை மூட வைத்தார். இதில், பெங்களூரைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர் ஒருவர் தலையிட்டு சமாதானம் பேசியும், வைகோ பணியாததால், அ.தி.மு.க., தலைமை மூலம் நெருக்கடி கொடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் பிரச்னையை எழுப்பிவிட்டு, அது ஓய்வுற்ற பின்னும் அதை மீண்டும் மீண்டும் தோண்டுவது அவர் பாணி அரசியல் . இதுவும் விரிசலுக்கும், மனக் கசப்புக்கும் ஒரு காரணம்.

பொதுவாக அவர் விடுதலைப் புலிகள் ஆதரவு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டதில் இருந்து, அவருக்கு ஜனநாயக அடிப்படையில் ஆதரவு தந்த பலரும் சற்று விலகிக் கொண்டனர். இன்று தேர்தல் நேரத்தில் அவருக்கு அனைத்தும் பாதகமாகி விட்டது.இனி அடுத்த தேர்தலில் போட்டியிட்டு, குறைந்த பட்ச சதவீத ஓட்டுகள் அல்லது சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் பெறுவது என்பது எப்படி? அதுவரை தொண்டர்களை எப்படி ஊக்குவிப்பது என்பது, இன்று எழுந்திருக்கும் கேள்வி.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதேபோல புதுச்சேரி, கேரளா சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் நாளையே தொடங்குகிறது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 19ந் தேதி (நாளை) முதல் 26ந் தேதி வரை தொகுதி தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும்.

20ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறை என்பதால் அன்றைய தினம் வேட்பு மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வேட்பு மனு பற்றிய அறிவிப்பினை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகள் 19ந் தேதி (நாளை) வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 19
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் - மார்ச் 26
வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 28
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - மார்ச் 30
வாக்குப் பதிவு - ஏப்ரல் 13
வாக்கு எண்ணிக்கை - மே 13

கட்டுப்பாடுகள்:

வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரசாரம் தொடர்பாக ஏராளமான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

அவை பின்வருமாறு:

- வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வரக்கூடாது.

- மனு தாக்கல் செய்யும் அறையில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுயேட்சை வேட்பாளர் என்றால் பெயரை முன்மொழிய 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளரின் கல்வித்தகுதி, சொத்து விவரம், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

கூட்டணி அமளிகளுக்கு மத்தியில் நாளை வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதேபோல புதுச்சேரி, கேரளா சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் நாளையே தொடங்குகிறது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 19ந் தேதி (நாளை) முதல் 26ந் தேதி வரை தொகுதி தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும்.

20ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறை என்பதால் அன்றைய தினம் வேட்பு மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வேட்பு மனு பற்றிய அறிவிப்பினை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகள் 19ந் தேதி (நாளை) வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 19
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் - மார்ச் 26
வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 28
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - மார்ச் 30
வாக்குப் பதிவு - ஏப்ரல் 13
வாக்கு எண்ணிக்கை - மே 13

கட்டுப்பாடுகள்:

வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரசாரம் தொடர்பாக ஏராளமான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

அவை பின்வருமாறு:

- வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வரக்கூடாது.

- மனு தாக்கல் செய்யும் அறையில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுயேட்சை வேட்பாளர் என்றால் பெயரை முன்மொழிய 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளரின் கல்வித்தகுதி, சொத்து விவரம், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

முக நூல்

Popular Posts