background img

புதிய வரவு

Showing posts with label Admk Jayalalitha. Show all posts
Showing posts with label Admk Jayalalitha. Show all posts
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு மற்றும் பேச்சு வார்த்தைகளில் ம.தி.மு.க. மிகுந்த கண்ணியத்தையும் அமைதியான போக்கையும் கடை பிடித்து வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்டுப்பாடுடன் நடந்து, கழகத்திற்கு மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் தாம்பரத்திலும், தேனி மாவட்டத்திலும் நான்கு, ஐந்து பேர் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் உருவ பொம்மையை கொளுத்தியதற்கு வன்மையாக கண்டனத்தை தெரிவிக்கிறேன். இத்தகைய செயல்களில் கழக தோழர்கள் ஈடுபடக் கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தி வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் வைகோ கூறியுள்ளார்.

ஜெயலலிதா உருவ பொம்மை எரிப்பு வைகோ கண்டனம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு மற்றும் பேச்சு வார்த்தைகளில் ம.தி.மு.க. மிகுந்த கண்ணியத்தையும் அமைதியான போக்கையும் கடை பிடித்து வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்டுப்பாடுடன் நடந்து, கழகத்திற்கு மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் தாம்பரத்திலும், தேனி மாவட்டத்திலும் நான்கு, ஐந்து பேர் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் உருவ பொம்மையை கொளுத்தியதற்கு வன்மையாக கண்டனத்தை தெரிவிக்கிறேன். இத்தகைய செயல்களில் கழக தோழர்கள் ஈடுபடக் கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தி வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் வைகோ கூறியுள்ளார்.

சென்னை : "கோத்தகிரியில் உள்ள விண்ட்சர் எஸ்டேட்டை உள்ளூர் மக்கள், "கனிமொழி எஸ்டேட்' என்று தான் அழைக்கின்றனர்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ராடியா டேப் விவகாரம் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.அதில், சமீபத்தில் கோத்தகிரியின், "விண்ட்சர் எஸ்டேட்'டை "கனிமொழி எஸ்டேட்' என உள்ளூர்காரர்களால் பேசப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.மேலும், 525.98 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த எஸ்டேட் அன்று வெறும் 2 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறது. விண்ட்சர் எஸ்டேட்டின் ஆவணத்தில் சென்னை தி.நகர், 12, சவுத் வெஸ்ட் போக் ரோடு என்ற முகவரியில் வசிக்கும் சேஷாத்ரியின் மகன் சீனிவாச ரத்னம் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

கனிமொழி எஸ்டேட் : ஜெ., அறிக்கை

சென்னை : "கோத்தகிரியில் உள்ள விண்ட்சர் எஸ்டேட்டை உள்ளூர் மக்கள், "கனிமொழி எஸ்டேட்' என்று தான் அழைக்கின்றனர்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ராடியா டேப் விவகாரம் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.அதில், சமீபத்தில் கோத்தகிரியின், "விண்ட்சர் எஸ்டேட்'டை "கனிமொழி எஸ்டேட்' என உள்ளூர்காரர்களால் பேசப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.மேலும், 525.98 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த எஸ்டேட் அன்று வெறும் 2 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறது. விண்ட்சர் எஸ்டேட்டின் ஆவணத்தில் சென்னை தி.நகர், 12, சவுத் வெஸ்ட் போக் ரோடு என்ற முகவரியில் வசிக்கும் சேஷாத்ரியின் மகன் சீனிவாச ரத்னம் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

சட்டசபையில் நிதி அமைச்சர் அன்பழகன் பேசும் போது கூறியதாவது:-

எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசி முடிக்கும் போது எதிர்க்கட்சி தலைவர் (ஜெயலலிதா) முதல்-அமைச்சராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் பேசினார். அவர் ஆசைபடுவது தவறல்ல. ஆனால் ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் எப்படி முதல்-அமைச்சராக வரமுடியும். ஓய்வெடுப்பதாக சொல்லி கொண்டிருக்கும் அவரை எப்படி முதல் - அமைச்சராக்குவார்கள். (அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து குரல் கொடுத்தனர்.)

அன்பழகன்:- எதிர்க்கட்சி தலைவருக்கு உடல் நிலை சரியில்லை. அவர் பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று தான் இந்த அவையில் தீர்மானம் கொண்டு வந்தீர்கள். அதுவும் நிறைவேற்றப்பட்டது. பூரண ஓய்வு எடுப்பவரை எப்படி முதல்-அமைச்சர் ஆக்குவீர்கள் என்று தான் சொன்னேன். இதில் உங்களுக்கு என்ன கடுப்பு (அ.தி.மு.க. வினரை பார்த்து) தீர்மானத்தில் அப்படி வார்த்தை இல்லையென்றால் வாபஸ் பெற்று கொள்கிறேன்.இது ஒன்றும் தவறான வார்த்தை இல்லையே.

சபாநாயகர்:- உழைத்தவர்கள் ஓய்வில் இருப்பார்கள். இதில் என்ன தவறு.

அன்பழகன்:- என் பேச்சுரிமையை யாரும் தடுக்க முடியாது. பெங்களூர் நீதிமன்றத்தில் கூட தான் ஆஜராக முடியாததற்கு (ஜெயலலிதா) தமிழ்நாடு சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட பூரண ஓய்வு தேவை என்ற தீர்மானத்தை அங்கே சுட்டிக் காட்டி உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம்:- புரட்சித் தலைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்த சட்டமன்ற தொடருக்கு மட்டும் வர முடியாது என்பதால் தான் தீர்மானத்தை கொண்டு வந்தோம். அதை அரசியல் ஆக்கும் வகையில் நிதி அமைச்சர் பேசுவது சரியல்ல.

அன்பழகன்:- ஓய்வு எடுக்கும் ஒருவரே முதல்- அமைச்சராக மீண்டும் வருவார் என்று சொல்லும் போது இன்று செயல்பட்டு கொண்டிருக்கும் முதல்- அமைச்சரால் (கருணாநிதி) அதை காப்பாற்றி கொள்ள முடியாதா? இவ்வாறு விவாதம் நடந்தது.

இந்த விவாதத்தின் போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்று அமைச்சர்களுடனும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சல்- அமளி நிலவியது. இறுதியில் செங்கோட்டையன் பேசும் போது, நிதி அமைச்சர் அன்பழகன் பேசிய வார்த்தை வாபஸ் பெறப்படாததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது டி.ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பட்ஜெட் புத்தக தாள்களை கிழித்து வீசினார். திருத்தணி அரி எம்.எல்.ஏ. பட்ஜெட் புத்தகத்தை தூக்கி வீசினார். இதற்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.

ஜெயலலிதா ஓய்வு எடுக்கும் விவகாரம்: சட்டசபையில் தி.மு.க. அ.தி.மு.க. கடும் அமளி; பட்ஜெட் புத்தகத்தை தூக்கி எறிந்தனர்

சட்டசபையில் நிதி அமைச்சர் அன்பழகன் பேசும் போது கூறியதாவது:-

எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசி முடிக்கும் போது எதிர்க்கட்சி தலைவர் (ஜெயலலிதா) முதல்-அமைச்சராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் பேசினார். அவர் ஆசைபடுவது தவறல்ல. ஆனால் ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் எப்படி முதல்-அமைச்சராக வரமுடியும். ஓய்வெடுப்பதாக சொல்லி கொண்டிருக்கும் அவரை எப்படி முதல் - அமைச்சராக்குவார்கள். (அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து குரல் கொடுத்தனர்.)

அன்பழகன்:- எதிர்க்கட்சி தலைவருக்கு உடல் நிலை சரியில்லை. அவர் பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று தான் இந்த அவையில் தீர்மானம் கொண்டு வந்தீர்கள். அதுவும் நிறைவேற்றப்பட்டது. பூரண ஓய்வு எடுப்பவரை எப்படி முதல்-அமைச்சர் ஆக்குவீர்கள் என்று தான் சொன்னேன். இதில் உங்களுக்கு என்ன கடுப்பு (அ.தி.மு.க. வினரை பார்த்து) தீர்மானத்தில் அப்படி வார்த்தை இல்லையென்றால் வாபஸ் பெற்று கொள்கிறேன்.இது ஒன்றும் தவறான வார்த்தை இல்லையே.

சபாநாயகர்:- உழைத்தவர்கள் ஓய்வில் இருப்பார்கள். இதில் என்ன தவறு.

அன்பழகன்:- என் பேச்சுரிமையை யாரும் தடுக்க முடியாது. பெங்களூர் நீதிமன்றத்தில் கூட தான் ஆஜராக முடியாததற்கு (ஜெயலலிதா) தமிழ்நாடு சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட பூரண ஓய்வு தேவை என்ற தீர்மானத்தை அங்கே சுட்டிக் காட்டி உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம்:- புரட்சித் தலைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்த சட்டமன்ற தொடருக்கு மட்டும் வர முடியாது என்பதால் தான் தீர்மானத்தை கொண்டு வந்தோம். அதை அரசியல் ஆக்கும் வகையில் நிதி அமைச்சர் பேசுவது சரியல்ல.

அன்பழகன்:- ஓய்வு எடுக்கும் ஒருவரே முதல்- அமைச்சராக மீண்டும் வருவார் என்று சொல்லும் போது இன்று செயல்பட்டு கொண்டிருக்கும் முதல்- அமைச்சரால் (கருணாநிதி) அதை காப்பாற்றி கொள்ள முடியாதா? இவ்வாறு விவாதம் நடந்தது.

இந்த விவாதத்தின் போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்று அமைச்சர்களுடனும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சல்- அமளி நிலவியது. இறுதியில் செங்கோட்டையன் பேசும் போது, நிதி அமைச்சர் அன்பழகன் பேசிய வார்த்தை வாபஸ் பெறப்படாததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது டி.ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பட்ஜெட் புத்தக தாள்களை கிழித்து வீசினார். திருத்தணி அரி எம்.எல்.ஏ. பட்ஜெட் புத்தகத்தை தூக்கி வீசினார். இதற்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.

சென்னை: பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்ற முக்கியமான துறையான விண்வெளித் துறையைச் சேர்ந்த இந்த இஸ்ரோ இமாலய ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால், இது குறித்து பொருளாதார வல்லுநரான பிரதமர் வாய் திறக்காமல் ஊழலுக்கு உடந்தையாக எப்படி இருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதிப்புமிக்க, அரிதான 70 மெகாஹெர்ட்ஸ் எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம் இந்திய நாட்டிற்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்களில் வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

மொபைல் பிராட்பேண்ட் சேவையை 20 ஆண்டுகளுக்கு எந்த விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 70 மெகாஹெர்ட்ஸ் எஸ்-பேண்ட் அலைக்கற்றை பெங்களூரைச் சேர்ந்த தேவாஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்திற்கு அடிமாட்டு விலையான வெறும் 1000 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்கிற நிறுவனம் இந்த அலைக்கற்றையை தனியார் நிறுவனத்திற்கு விற்றுள்ளது.

இருப்பினும், ஜிசாட் 6, ஜிசாட் 6ஏ ஆகிய இரண்டு செயற்கைகோள்கள் இன்னும் விண்ணில் செலுத்தப்படாததன் காரணமாக, தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் இன்னமும் தனது செயல்பாட்டை துவக்கி, சுரண்ட ஆரம்பிக்கவில்லை. போட்டியை உருவாக்கும் வகையில் ஏல முறையையும் பின்பற்றாமல், இந்த ஒதுக்கீடுக்கென்று வகுக்கப்பட்ட வழிகாட்டு முறைகளையும் மீறி, எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மேற்படி தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

சென்ற ஆண்டு, இதே போன்ற 15 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஏலத்தின் அடிப்படையில் 67,719 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இது தான் இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சித் துறையின் செயல்பாடுகள் குறித்து இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தனது முதனிலை தணிக்கையை துவக்கிய போது தான், பாரதப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்ற முக்கியமான துறையான விண்வெளித் துறையைச் சேர்ந்த இந்த இஸ்ரோ இமாலய ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேற்படி தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்வெளி குழு பரிந்துரை செய்தும், அந்த பரிந்துரை ஏற்கப்படவில்லை.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கும், தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்திற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படுவதோடு, தனியார் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட வேண்டும்.

மேலும், இந்திய நாட்டின் அரிதான வளங்கள் பொறுப்பற்ற முறையில் சொற்ப விலைக்கு எப்படி கொடுக்கப்பட்டது என்பதையும், இதன் மூலம் பயனடைந்தவர்கள் யார் என்பதையும் கண்டறிய முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினுடைய கூடாரத்திலிருந்து, பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருப்பது நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பெருத்த அவமானம்.

இது போன்ற மிகப் பெரிய ஊழல் குறித்து பொருளாதார வல்லுநரான பாரதப் பிரதமர் வாய் திறக்காமல் ஊழலுக்கு உடந்தையாக எப்படி இருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை!. தன்னுடைய மவுனத்தை கலைத்து உண்மையை தெரிவிக்க டாக்டர் மன்மோகன் சிங் முன்வர வேண்டும். இல்லையெனில், மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள். உலக நாடுகள் முன்பு பரிகாசத்திற்கும், தலைக்குனிவிற்கும் இந்திய நாடு ஆளாகிவிடும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

இஸ்ரோவின் இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழல்-பிரதமர் வாய் திறக்க மறுப்பது ஏன்?-ஜெயலலிதா கேள்வி

சென்னை: பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்ற முக்கியமான துறையான விண்வெளித் துறையைச் சேர்ந்த இந்த இஸ்ரோ இமாலய ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால், இது குறித்து பொருளாதார வல்லுநரான பிரதமர் வாய் திறக்காமல் ஊழலுக்கு உடந்தையாக எப்படி இருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதிப்புமிக்க, அரிதான 70 மெகாஹெர்ட்ஸ் எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம் இந்திய நாட்டிற்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்களில் வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

மொபைல் பிராட்பேண்ட் சேவையை 20 ஆண்டுகளுக்கு எந்த விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 70 மெகாஹெர்ட்ஸ் எஸ்-பேண்ட் அலைக்கற்றை பெங்களூரைச் சேர்ந்த தேவாஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்திற்கு அடிமாட்டு விலையான வெறும் 1000 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்கிற நிறுவனம் இந்த அலைக்கற்றையை தனியார் நிறுவனத்திற்கு விற்றுள்ளது.

இருப்பினும், ஜிசாட் 6, ஜிசாட் 6ஏ ஆகிய இரண்டு செயற்கைகோள்கள் இன்னும் விண்ணில் செலுத்தப்படாததன் காரணமாக, தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் இன்னமும் தனது செயல்பாட்டை துவக்கி, சுரண்ட ஆரம்பிக்கவில்லை. போட்டியை உருவாக்கும் வகையில் ஏல முறையையும் பின்பற்றாமல், இந்த ஒதுக்கீடுக்கென்று வகுக்கப்பட்ட வழிகாட்டு முறைகளையும் மீறி, எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மேற்படி தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

சென்ற ஆண்டு, இதே போன்ற 15 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஏலத்தின் அடிப்படையில் 67,719 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இது தான் இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சித் துறையின் செயல்பாடுகள் குறித்து இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தனது முதனிலை தணிக்கையை துவக்கிய போது தான், பாரதப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்ற முக்கியமான துறையான விண்வெளித் துறையைச் சேர்ந்த இந்த இஸ்ரோ இமாலய ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேற்படி தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்வெளி குழு பரிந்துரை செய்தும், அந்த பரிந்துரை ஏற்கப்படவில்லை.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கும், தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்திற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படுவதோடு, தனியார் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட வேண்டும்.

மேலும், இந்திய நாட்டின் அரிதான வளங்கள் பொறுப்பற்ற முறையில் சொற்ப விலைக்கு எப்படி கொடுக்கப்பட்டது என்பதையும், இதன் மூலம் பயனடைந்தவர்கள் யார் என்பதையும் கண்டறிய முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினுடைய கூடாரத்திலிருந்து, பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருப்பது நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பெருத்த அவமானம்.

இது போன்ற மிகப் பெரிய ஊழல் குறித்து பொருளாதார வல்லுநரான பாரதப் பிரதமர் வாய் திறக்காமல் ஊழலுக்கு உடந்தையாக எப்படி இருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை!. தன்னுடைய மவுனத்தை கலைத்து உண்மையை தெரிவிக்க டாக்டர் மன்மோகன் சிங் முன்வர வேண்டும். இல்லையெனில், மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள். உலக நாடுகள் முன்பு பரிகாசத்திற்கும், தலைக்குனிவிற்கும் இந்திய நாடு ஆளாகிவிடும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

பெங்களூர்: வருமானத்தை மீறி சொத்துக் குவித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவை விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

ஆனால், அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவரால் நேரில் ஆஜராக முடியாது என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி மல்லிகார்ஜூனா கூறுகையில், தேவைப்படும்போது ஜெயலலிதா விசாரணைக்கு நேரில் அழைக்கப்படுவார் என்றார்.

இதையடுத்து ஒரு சாட்சியின் வாக்குமூலத்தை மொழி பெயர்த்ததில் ஒரு பாராவில் தவறு இருப்பதாகவும், அதை சரி செய்ய 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், இந்தத் தவறை ஓரிரு நாளில் சரி செய்துவிட முடியும் என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஜெயலலிதா தவிர அவரது தோழி சசிகலா, உறவினர் இளவரசி ஆகியோர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை ஜெயலலிதா இழுத்தடித்து வருவதாக திமுக புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெ.வுக்கு உடல்நிலை சரியில்லை என சட்டசபையில் தீர்மானம்:

முன்னதாக நேற்று சட்டசபையில் அதிமுக சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால் சட்டமன்ற விதி 20(1)ன் படி இந்த கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருப்பதற்கு அனுமதி கோரப்பட்டது.

இதை ஏற்ற சபாநாயகர் தீர்மானத்தை கொண்டு வர சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி அளித்தார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். எனவே இந்த கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்ள இயலாததற்கு காரணமாக இந்த தீர்மானத்தை ஏற்க வேண்டும் என்று நான் முன் மொழிகிறேன் என்றார்.

அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் இதை வழி மொழிந்தார். இதையடுத்து இந்த கூட்டத் தொடருக்கு ஜெயலலிதா வராமல் இருப்பதற்கான அனுமதி வழங்கும் தீர்மானம் ஏகமதான குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந் நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின்போது, உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஜெயலலிதாவை நேரில் ஆஜராகுமாறு கோரக் கூடாது என்று நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து குவிப்பு வழக்கு-ஒரு பாராவை திருத்த 6 மாதம் அவசாகம் கோரிய ஜெ!

பெங்களூர்: வருமானத்தை மீறி சொத்துக் குவித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவை விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

ஆனால், அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவரால் நேரில் ஆஜராக முடியாது என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி மல்லிகார்ஜூனா கூறுகையில், தேவைப்படும்போது ஜெயலலிதா விசாரணைக்கு நேரில் அழைக்கப்படுவார் என்றார்.

இதையடுத்து ஒரு சாட்சியின் வாக்குமூலத்தை மொழி பெயர்த்ததில் ஒரு பாராவில் தவறு இருப்பதாகவும், அதை சரி செய்ய 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், இந்தத் தவறை ஓரிரு நாளில் சரி செய்துவிட முடியும் என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஜெயலலிதா தவிர அவரது தோழி சசிகலா, உறவினர் இளவரசி ஆகியோர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை ஜெயலலிதா இழுத்தடித்து வருவதாக திமுக புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெ.வுக்கு உடல்நிலை சரியில்லை என சட்டசபையில் தீர்மானம்:

முன்னதாக நேற்று சட்டசபையில் அதிமுக சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால் சட்டமன்ற விதி 20(1)ன் படி இந்த கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருப்பதற்கு அனுமதி கோரப்பட்டது.

இதை ஏற்ற சபாநாயகர் தீர்மானத்தை கொண்டு வர சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி அளித்தார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். எனவே இந்த கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்ள இயலாததற்கு காரணமாக இந்த தீர்மானத்தை ஏற்க வேண்டும் என்று நான் முன் மொழிகிறேன் என்றார்.

அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் இதை வழி மொழிந்தார். இதையடுத்து இந்த கூட்டத் தொடருக்கு ஜெயலலிதா வராமல் இருப்பதற்கான அனுமதி வழங்கும் தீர்மானம் ஏகமதான குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந் நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின்போது, உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஜெயலலிதாவை நேரில் ஆஜராகுமாறு கோரக் கூடாது என்று நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா நுனிப்புல் மேயக் கூடாது, பட்ஜெட் அறிக்கையை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில், ராகு காலத்தை மனதில் கொண்டு, கேள்வி நேரத்தை புகுத்தி, பிறகு பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றும், இது அலுவல் ஆய்வுக் குழுக் கூட்ட முடிவுக்கு மாறானது என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் கேள்வி நேரம் பற்றிய பேச்சே எழவில்லை. அ.தி.மு.க. சார்பில் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட அவரது கூட்டணிக் கட்சியினரும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்துக்கு வந்திருந்தனர். இவ்வாறு பொய்யாக அறிக்கை கொடுப்பதும், ஆதாரத்தோடு நாம் பதில் அளித்தால் வாயை மூடிக் கொள்வதும் ஜெயலலிதாவின் வழக்கமாக உள்ளது.
அதேபோல், 2010-2011-ம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை ரூ.16 ஆயிரத்து 222 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டதாகவும், இப்போது சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் நிதிப் பற்றாக்குறை ரூ.17 ஆயிரத்து 607 கோடி அளவுக்கு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நுனிப்புல் மேயக் கூடாது. பட்ஜெட் அறிக்கையின் 54-ம் பக்கத்தில், ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதாலும், அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்களுக்கான செலவு அதிகரித்திருப்பதாலும், 2010-2011-ம் ஆண்டில் ரூ.17 ஆயிரத்து 607 கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்படும். பொருளாதார நிலை படிப்படியாக சீரடைந்து வருவதால், வரும் நிதியாண்டில் ரூ.438.78 கோடி வருவாய் உபரி ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வரும் நிதியாண்டுக்கான மூலதனச் செலவு குறைவாக உள்ளது. இதனால், நிதிப் பற்றாக்குறை ரூ.13 ஆயிரத்து 506 கோடி என்ற அளவில், அதாவது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.32 சதவீதமாக இருக்கும். இது, 13-வது நிதிக் குழு வரையறுத்துள்ள அளவுகளுக்குள் அமைந்துள்ளது என்றும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
அரசின் கடன்: 31.3.2011-ல் தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் ரூ.1 லட்சத்து ஆயிரத்து 541 கோடி அளவுக்கு அதிகரிக்கும் என்று இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதுதான் தி.மு.க. அரசின் ஐந்தாண்டு கால சாதனையா என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார்.
இந்தக் கடன் தொகை முழுவதும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்டதல்ல. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் வாங்கிய கடன்களையும் சேர்த்ததுதான் இந்தத் தொகை. எனவே, இது ஜெயலலிதாவின் சாதனையையும் சேர்த்து குறிப்பிடப்பட்ட தொகை.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் மாநிலங்களைவிட, தமிழக அரசு பெற்ற கடன் தொகை மிகக் குறைவுதான்.
2005-2006-ம் ஆண்டின் இறுதியில் (ஜெயலலிதா ஆட்சியில்) மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு, 2010-2011-ம் ஆண்டின் இறுதியில் 19.58 சதவீதமாகக் குறையும் என்றும் இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் விலைவாசி உயர்வுக்கான காரணங்கள், அதைக் கட்டுப்படுத்துவதற்கு தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு பிரச்னை: முல்லைப் பெரியாறில் இந்த ஆண்டே புதிய அணை கட்டும் பணி தொடங்கப்படும் என்ற கேரள அரசின் அறிவிப்பு குறித்து எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைப் பற்றி பட்ஜெட் அறிக்கையில் கூறப்படவில்லை என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இம்மாதம் 4-ம் தேதி கேரள ஆளுநர் பேசியதை, 5-ம் தேதி காலையில் நான் பத்திரிகைகளில் படித்தேன். உடனே, அதைக் கண்டித்தும், உரிய நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் முன்பாக எடுத்துரைக்கப்படும் என்றும் ஒரு பத்தி எழுதி, அதை நிதியமைச்சர் பட்ஜெட் அறிக்கையை படிக்கும்போதே அவரிடம் கொடுத்து, அவரும் அதை அவையில் படித்தார்.
இது பற்றிய செய்தி, பத்திரிகைகளிலும் வந்தது. ஆனால், இதையெல்லாம் படிக்காமல் ஜெயலலிதா அறிக்கை விடுகிறார்.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு பதில்: பல்வேறு துறைகளிலும் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்துள்ளதை இடைக்கால பட்ஜெட் அறிக்கை காட்டுவதாக மார்க்சிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
தோழமைக் கட்சி உடன்பாட்டை மீறாதவர்கள் மார்க்சிஸ்டுகள். அ.தி.மு.க.வின் நெருங்கிய கூட்டணிக் கட்சியான அவர்களிடம் இருந்து, தி.மு.க. அரசுக்கு மாபெரும் வெற்றி என்ற விமர்சனத்தையா எதிர்பார்க்க முடியும்?
தொழிலாளர்களின் போராட்டங்களின்போது, நிர்வாகத்தின் பக்கமே தி.மு.க. அரசு நிற்பதாகவும், தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவது தொடர்வதாகவும் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.
தி.மு.க.வின் தொழிற்சங்க கொள்கைகள் பற்றி ராமகிருஷ்ணனுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த ரமணி, வி.பி.சிந்தன் போன்றவர்கள் நன்கு அறிவார்கள். போக்குவரத்து தொழிற்சங்கத் தேர்தலில் சி.ஐ.டி.யு.வை விட தி.மு.க. தொழிற்சங்கம் அதிக வாக்குகளைப் பெற்றதே, தி.மு.க.வுக்கும் தொழிலாளர்களுக்கும் உள்ள உறவை நிரூபிக்கிறது.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த உருப்படியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். சமச்சீர் கல்வி 2010-2011-ல் 1, 6-ம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வரும் ஆண்டு முதல் மற்ற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட் அறிக்கை படிப்பதற்கு முன்பு கேள்வி நேரம் எடுத்துக் கொண்டது இதற்கு முன்பு நடைபெற்றதில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் பாலபாரதி கூறியுள்ளார். 2001-2002-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அறிக்கை 29.1.2001 அன்று படிக்கப்பட்டது. அதற்கு முன்பு கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டதை அவையின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நுனிப்புல் மேயக் கூடாது: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா நுனிப்புல் மேயக் கூடாது, பட்ஜெட் அறிக்கையை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில், ராகு காலத்தை மனதில் கொண்டு, கேள்வி நேரத்தை புகுத்தி, பிறகு பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றும், இது அலுவல் ஆய்வுக் குழுக் கூட்ட முடிவுக்கு மாறானது என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் கேள்வி நேரம் பற்றிய பேச்சே எழவில்லை. அ.தி.மு.க. சார்பில் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட அவரது கூட்டணிக் கட்சியினரும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்துக்கு வந்திருந்தனர். இவ்வாறு பொய்யாக அறிக்கை கொடுப்பதும், ஆதாரத்தோடு நாம் பதில் அளித்தால் வாயை மூடிக் கொள்வதும் ஜெயலலிதாவின் வழக்கமாக உள்ளது.
அதேபோல், 2010-2011-ம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை ரூ.16 ஆயிரத்து 222 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டதாகவும், இப்போது சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் நிதிப் பற்றாக்குறை ரூ.17 ஆயிரத்து 607 கோடி அளவுக்கு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நுனிப்புல் மேயக் கூடாது. பட்ஜெட் அறிக்கையின் 54-ம் பக்கத்தில், ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதாலும், அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்களுக்கான செலவு அதிகரித்திருப்பதாலும், 2010-2011-ம் ஆண்டில் ரூ.17 ஆயிரத்து 607 கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்படும். பொருளாதார நிலை படிப்படியாக சீரடைந்து வருவதால், வரும் நிதியாண்டில் ரூ.438.78 கோடி வருவாய் உபரி ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வரும் நிதியாண்டுக்கான மூலதனச் செலவு குறைவாக உள்ளது. இதனால், நிதிப் பற்றாக்குறை ரூ.13 ஆயிரத்து 506 கோடி என்ற அளவில், அதாவது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.32 சதவீதமாக இருக்கும். இது, 13-வது நிதிக் குழு வரையறுத்துள்ள அளவுகளுக்குள் அமைந்துள்ளது என்றும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
அரசின் கடன்: 31.3.2011-ல் தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் ரூ.1 லட்சத்து ஆயிரத்து 541 கோடி அளவுக்கு அதிகரிக்கும் என்று இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதுதான் தி.மு.க. அரசின் ஐந்தாண்டு கால சாதனையா என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார்.
இந்தக் கடன் தொகை முழுவதும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்டதல்ல. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் வாங்கிய கடன்களையும் சேர்த்ததுதான் இந்தத் தொகை. எனவே, இது ஜெயலலிதாவின் சாதனையையும் சேர்த்து குறிப்பிடப்பட்ட தொகை.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் மாநிலங்களைவிட, தமிழக அரசு பெற்ற கடன் தொகை மிகக் குறைவுதான்.
2005-2006-ம் ஆண்டின் இறுதியில் (ஜெயலலிதா ஆட்சியில்) மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு, 2010-2011-ம் ஆண்டின் இறுதியில் 19.58 சதவீதமாகக் குறையும் என்றும் இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் விலைவாசி உயர்வுக்கான காரணங்கள், அதைக் கட்டுப்படுத்துவதற்கு தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு பிரச்னை: முல்லைப் பெரியாறில் இந்த ஆண்டே புதிய அணை கட்டும் பணி தொடங்கப்படும் என்ற கேரள அரசின் அறிவிப்பு குறித்து எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைப் பற்றி பட்ஜெட் அறிக்கையில் கூறப்படவில்லை என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இம்மாதம் 4-ம் தேதி கேரள ஆளுநர் பேசியதை, 5-ம் தேதி காலையில் நான் பத்திரிகைகளில் படித்தேன். உடனே, அதைக் கண்டித்தும், உரிய நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் முன்பாக எடுத்துரைக்கப்படும் என்றும் ஒரு பத்தி எழுதி, அதை நிதியமைச்சர் பட்ஜெட் அறிக்கையை படிக்கும்போதே அவரிடம் கொடுத்து, அவரும் அதை அவையில் படித்தார்.
இது பற்றிய செய்தி, பத்திரிகைகளிலும் வந்தது. ஆனால், இதையெல்லாம் படிக்காமல் ஜெயலலிதா அறிக்கை விடுகிறார்.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு பதில்: பல்வேறு துறைகளிலும் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்துள்ளதை இடைக்கால பட்ஜெட் அறிக்கை காட்டுவதாக மார்க்சிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
தோழமைக் கட்சி உடன்பாட்டை மீறாதவர்கள் மார்க்சிஸ்டுகள். அ.தி.மு.க.வின் நெருங்கிய கூட்டணிக் கட்சியான அவர்களிடம் இருந்து, தி.மு.க. அரசுக்கு மாபெரும் வெற்றி என்ற விமர்சனத்தையா எதிர்பார்க்க முடியும்?
தொழிலாளர்களின் போராட்டங்களின்போது, நிர்வாகத்தின் பக்கமே தி.மு.க. அரசு நிற்பதாகவும், தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவது தொடர்வதாகவும் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.
தி.மு.க.வின் தொழிற்சங்க கொள்கைகள் பற்றி ராமகிருஷ்ணனுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த ரமணி, வி.பி.சிந்தன் போன்றவர்கள் நன்கு அறிவார்கள். போக்குவரத்து தொழிற்சங்கத் தேர்தலில் சி.ஐ.டி.யு.வை விட தி.மு.க. தொழிற்சங்கம் அதிக வாக்குகளைப் பெற்றதே, தி.மு.க.வுக்கும் தொழிலாளர்களுக்கும் உள்ள உறவை நிரூபிக்கிறது.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த உருப்படியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். சமச்சீர் கல்வி 2010-2011-ல் 1, 6-ம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வரும் ஆண்டு முதல் மற்ற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட் அறிக்கை படிப்பதற்கு முன்பு கேள்வி நேரம் எடுத்துக் கொண்டது இதற்கு முன்பு நடைபெற்றதில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் பாலபாரதி கூறியுள்ளார். 2001-2002-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அறிக்கை 29.1.2001 அன்று படிக்கப்பட்டது. அதற்கு முன்பு கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டதை அவையின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.


முக நூல்

Popular Posts