background img

புதிய வரவு

Showing posts with label Vaico. Show all posts
Showing posts with label Vaico. Show all posts
வெம்பக்கோட்டை : ""அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கவே தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்,'' என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

ம.தி.மு.க., 18 ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு வெம்பக்கோட்டை யூனியன் ஆலங்குளத்தில் வைகோ பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். சோனியாவோ தனது கட்சியை சேர்ந்த 58 வேட்பாளர்களையும் கூட்டணி கட்சியினரையும் தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு எதற்காக வாழ்த்து சொல்கிறார். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைப்பதற்காகவே சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை அழிக்க கருணாநிதியின் ஆதரவு சோனியாவுக்கு தேவை பட்டதால் கூட்டணி வைத்தார். இப்போது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க நினைக்கிறார்.

தேர்தலில் தோற்று, மகள் கனிமொழியும் சிறையில் இருக்கும் இக்கட்டான நிலையில் நிராயுத பாணியாக இருக்கும் கருணாநிதி பற்றி பேச நான் விரும்பவில்லை. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார், மீண்டும் வந்து போரிடுவார், வெல்வார், ஈழம் நிச்சயம் மலரும்.இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு சோனியா முயற்சி: வைகோ பேச்சு

வெம்பக்கோட்டை : ""அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கவே தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்,'' என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

ம.தி.மு.க., 18 ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு வெம்பக்கோட்டை யூனியன் ஆலங்குளத்தில் வைகோ பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். சோனியாவோ தனது கட்சியை சேர்ந்த 58 வேட்பாளர்களையும் கூட்டணி கட்சியினரையும் தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு எதற்காக வாழ்த்து சொல்கிறார். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைப்பதற்காகவே சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை அழிக்க கருணாநிதியின் ஆதரவு சோனியாவுக்கு தேவை பட்டதால் கூட்டணி வைத்தார். இப்போது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க நினைக்கிறார்.

தேர்தலில் தோற்று, மகள் கனிமொழியும் சிறையில் இருக்கும் இக்கட்டான நிலையில் நிராயுத பாணியாக இருக்கும் கருணாநிதி பற்றி பேச நான் விரும்பவில்லை. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார், மீண்டும் வந்து போரிடுவார், வெல்வார், ஈழம் நிச்சயம் மலரும்.இவ்வாறு அவர் பேசினார்.

ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது. மாவட்டச் செயலர்கள் சிலர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்ட மாவட்டச் செயலர்களில் மணச்சநல்லூர் நடராஜன் மட்டுமே ஆவேசமாக பேசினார். அவர் பேசும் போது, "பொடாவில் கைது செய்யப்பட்டு தியாகிகளானோம். தேர்தலை புறக்கணித்ததன் மூலம், 15 எம்.எல். ஏ.,க்களை இழந்து, தியாகிகளாகி உள்ளோம். மற்ற கட்சிகளில் ஒன்றிய செயலர், நகர செயலர் போன்றவர்கள் தான் புதிய உறுப்பினர்களை சேர்ப்பார்கள். ஆனால், நமது கட்சியில் மாவட்டச் செயலர்களே பொறுப்பேற்க வேண்டியதுள்ளது. தற்போது தொண்டர்கள் சோர்வாக உள்ளனர். அவர்களிடம் 500 ரூபாய் பெற்று ஆயுள் உறுப்பினர்களாக சேர்ப்பது கூட கடினமான காரியம்' என்றார். மற்றொரு மாநில நிர்வாகி பேசும் போது, "வரும் பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும். பா.ஜ., வெற்றி பெறும். அப்போது நாம் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம்' என்றார்.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: தேர்தல் முடிவு எதிர்பார்க்காத ஒன்று தான். தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் நடந்த ரகளை பற்றி அனைவருக்கும் தெரியும். நமது கட்சியில் அப்படியொரு வன்முறை சம்பவத்திற்கு யாரும் இடம் கொடுக்கவில்லை. ஏதாவது ஒரு சம்பவம் நடந்து விடுமோ என்ற அச்சம் எனக்கு இருந்தது. அனைவரது மனதிலும் ஊமை காயம் உள்ளது. ஆனால், அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. கடந்த ஐந்தாண்டு காலமாக தி.மு.க., அரசை கடுமையாக நாம் எதிர்த்தோம். அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்து வருகின்றனர். இனி நாம் தி.மு.க., தலைவரை விமர்சிக்க வேண்டியது இல்லை. அதேபோல் முதல்வரையும் நாம் விமர்சிக்க வேண்டாம்.

கடந்த ஐந்தாண்டுகளாக நாம், அ.தி.மு.க.,வுக்கு உறுதுணையாக இருந்தோம். முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கு கூட எனக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்துள்ளனர். நான் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தேன். வீட்டின் வேலைக்கார பெண் தான் அழைப்பிதழை பெற்றுள்ளார். பதவி ஏற்பு விழாவில் முதல் வரிசையில் உட்காருவதற்கு தான் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தி.மு.க., - அ.தி.மு.க.,வை சரிசமமாக பாவிக்க வேண்டும். ஆளுங்கட்சி தவறு செய்தால் சுட்டிக் காட்டுவோம். பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் எனக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அவரது மகள் படிக்கும் கல்லூரியில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியை கேட்டுள்ளனர். என் பெயரை 80 சதவீதம் மாணவியர் தெரிவித்துள்ளதாக, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதனால் என்னை அடுத்த முதல்வராக நினைத்து வெளியே பேச வேண்டாம். உள்ளாட்சி தேர்தலில் அந்தந்த மாவட்டங்களின் சூழ்நிலையை பொறுத்து, அப்போது முடிவு எடுக்கலாம். தேர்தல் முடிவை, இணையதளம் மூலம் இளைஞர்கள் பலர் பாராட்டியுள்ளனர். நமக்கு நல்லதொரு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.

தவறுகளை சுட்டிக் காட்டுவோம்: வைகோ ஆவேசம்

ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது. மாவட்டச் செயலர்கள் சிலர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்ட மாவட்டச் செயலர்களில் மணச்சநல்லூர் நடராஜன் மட்டுமே ஆவேசமாக பேசினார். அவர் பேசும் போது, "பொடாவில் கைது செய்யப்பட்டு தியாகிகளானோம். தேர்தலை புறக்கணித்ததன் மூலம், 15 எம்.எல். ஏ.,க்களை இழந்து, தியாகிகளாகி உள்ளோம். மற்ற கட்சிகளில் ஒன்றிய செயலர், நகர செயலர் போன்றவர்கள் தான் புதிய உறுப்பினர்களை சேர்ப்பார்கள். ஆனால், நமது கட்சியில் மாவட்டச் செயலர்களே பொறுப்பேற்க வேண்டியதுள்ளது. தற்போது தொண்டர்கள் சோர்வாக உள்ளனர். அவர்களிடம் 500 ரூபாய் பெற்று ஆயுள் உறுப்பினர்களாக சேர்ப்பது கூட கடினமான காரியம்' என்றார். மற்றொரு மாநில நிர்வாகி பேசும் போது, "வரும் பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும். பா.ஜ., வெற்றி பெறும். அப்போது நாம் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம்' என்றார்.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: தேர்தல் முடிவு எதிர்பார்க்காத ஒன்று தான். தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் நடந்த ரகளை பற்றி அனைவருக்கும் தெரியும். நமது கட்சியில் அப்படியொரு வன்முறை சம்பவத்திற்கு யாரும் இடம் கொடுக்கவில்லை. ஏதாவது ஒரு சம்பவம் நடந்து விடுமோ என்ற அச்சம் எனக்கு இருந்தது. அனைவரது மனதிலும் ஊமை காயம் உள்ளது. ஆனால், அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. கடந்த ஐந்தாண்டு காலமாக தி.மு.க., அரசை கடுமையாக நாம் எதிர்த்தோம். அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்து வருகின்றனர். இனி நாம் தி.மு.க., தலைவரை விமர்சிக்க வேண்டியது இல்லை. அதேபோல் முதல்வரையும் நாம் விமர்சிக்க வேண்டாம்.

கடந்த ஐந்தாண்டுகளாக நாம், அ.தி.மு.க.,வுக்கு உறுதுணையாக இருந்தோம். முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கு கூட எனக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்துள்ளனர். நான் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தேன். வீட்டின் வேலைக்கார பெண் தான் அழைப்பிதழை பெற்றுள்ளார். பதவி ஏற்பு விழாவில் முதல் வரிசையில் உட்காருவதற்கு தான் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தி.மு.க., - அ.தி.மு.க.,வை சரிசமமாக பாவிக்க வேண்டும். ஆளுங்கட்சி தவறு செய்தால் சுட்டிக் காட்டுவோம். பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் எனக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அவரது மகள் படிக்கும் கல்லூரியில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியை கேட்டுள்ளனர். என் பெயரை 80 சதவீதம் மாணவியர் தெரிவித்துள்ளதாக, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதனால் என்னை அடுத்த முதல்வராக நினைத்து வெளியே பேச வேண்டாம். உள்ளாட்சி தேர்தலில் அந்தந்த மாவட்டங்களின் சூழ்நிலையை பொறுத்து, அப்போது முடிவு எடுக்கலாம். தேர்தல் முடிவை, இணையதளம் மூலம் இளைஞர்கள் பலர் பாராட்டியுள்ளனர். நமக்கு நல்லதொரு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.

சென்னை, மே 9: உயர் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வை திருச்சி, மதுரை, கோவையிலும் நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று நிறைந்த நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு மதிமுக சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டும். தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டுகளாக்கி வாழ்வில் முன்னேற உறுதியேற்க வேண்டும். அதன் மூலம் பெற்றோருக்கும், பிறந்த பொன்னாட்டுக்கும் பெருமை தேடித் தர வேண்டும்.
தமிழக அரசின் உயர் கல்வித் துறை நடத்தும் உயர் கல்விக்கான கலந்தாய்வு இப்போது சென்னையில் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வீண் அலைச்சலும், பொருள் செலவும் ஏற்படுகிறது. வசதி இல்லாதவர்கள் காலையில் சென்னைக்கு வந்து அங்கும் இங்கும் அலைந்து மாலையிலேயே ஊர் திரும்புகின்றனர்.
தகவல் தொழில் நுட்பம் வெகுவாக வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் சென்னையில் மட்டுமல்லாது திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் கலந்தாய்வை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சி, மதுரை, கோவையில் கவுன்சலிங் நடத்த வேண்டும்: வைகோ

சென்னை, மே 9: உயர் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வை திருச்சி, மதுரை, கோவையிலும் நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று நிறைந்த நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு மதிமுக சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டும். தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டுகளாக்கி வாழ்வில் முன்னேற உறுதியேற்க வேண்டும். அதன் மூலம் பெற்றோருக்கும், பிறந்த பொன்னாட்டுக்கும் பெருமை தேடித் தர வேண்டும்.
தமிழக அரசின் உயர் கல்வித் துறை நடத்தும் உயர் கல்விக்கான கலந்தாய்வு இப்போது சென்னையில் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வீண் அலைச்சலும், பொருள் செலவும் ஏற்படுகிறது. வசதி இல்லாதவர்கள் காலையில் சென்னைக்கு வந்து அங்கும் இங்கும் அலைந்து மாலையிலேயே ஊர் திரும்புகின்றனர்.
தகவல் தொழில் நுட்பம் வெகுவாக வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் சென்னையில் மட்டுமல்லாது திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் கலந்தாய்வை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை : "மீன்களின் இனப்பெருக்கக் காலத்தில், மீனவர்களுக்கு, 45 நாள் வேலை உறுதித் திட்டத்தை உருவாக்கி, நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் வீதம், 45 நாட்களுக்கு, 4,500 ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும்' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில், 45 நாட்கள், மீன்களின் இனப்பெருக்கக் காலம். இதில், மீனவர்களுக்கு நன்மை இருப்பினும், இக்கால கட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கக் கூடாது. இருப்பினும் கட்டுமரம், பைபர் படகு மீனவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாவிட்டாலும், கோடை காலங்களில் திடீரென ஏற்படும் சூறைக்காற்று மற்றும் புயல் காற்றால் கடலில் பெருமளவில் பாதிப்பு ஏற்படும். கடலில், 45 நாட்கள் மீன்பிடிக்காததால் ஏற்படும் பொருளாதார இழப்பால் அவர்கள் படும் துயரம் அதிகம்.
ஆண்டின், 365 நாட்களில் இனப்பெருக்கக் காலம், புயல், மழைக் காலம், கடல் சீற்றம், கடல் பஞ்சம், பண்டிகை, திருவிழாக் காலங்கள் போக மீதம் 150 நாட்கள் தான் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர். 45 நாட்கள் மீன்பிடி தடை காலத்தில், அரசு தரும் உதவித் தொகை என்பது விலைவாசி உயர்ந்துள்ள இக்காலத்துக்குப் போதுமானதாக இல்லை.
குடும்ப அட்டையைக் கணக்கில் கொண்டு, உதவித் தொகை வழங்கப்படுவதால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தந்தை, மகன்கள் என, கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் இதில் ஏமாற்றமடைகின்றனர். இதற்கு மாறாக மீனவர் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ள மீன்பிடித் தொழில் செய்யும் ஆண்களுக்கும், மீன்களை விற்பனை செய்யும் பெண்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்.
விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு, 100 நாள் வேலை உறுதி திட்டம் மூலம், நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் வழங்குவதைப் போன்று, மீனவர்களை பாரம்பரிய மீனவப் பழங்குடி இனத்தவராக அறிவித்து, குறைந்தபட்சம், 45 நாள் வேலை உறுதித் திட்டத்தை உருவாக்கி, நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் வீதம், 45 நாட்களுக்கு, 4,500 ரூபாய் உதவித் தொகை வழங்குவது நன்மை பயக்கும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

மீனவர்களுக்கு 4,500 ரூபாய் உதவி தொகை : வைகோ கோரிக்கை

சென்னை : "மீன்களின் இனப்பெருக்கக் காலத்தில், மீனவர்களுக்கு, 45 நாள் வேலை உறுதித் திட்டத்தை உருவாக்கி, நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் வீதம், 45 நாட்களுக்கு, 4,500 ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும்' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில், 45 நாட்கள், மீன்களின் இனப்பெருக்கக் காலம். இதில், மீனவர்களுக்கு நன்மை இருப்பினும், இக்கால கட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கக் கூடாது. இருப்பினும் கட்டுமரம், பைபர் படகு மீனவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாவிட்டாலும், கோடை காலங்களில் திடீரென ஏற்படும் சூறைக்காற்று மற்றும் புயல் காற்றால் கடலில் பெருமளவில் பாதிப்பு ஏற்படும். கடலில், 45 நாட்கள் மீன்பிடிக்காததால் ஏற்படும் பொருளாதார இழப்பால் அவர்கள் படும் துயரம் அதிகம்.
ஆண்டின், 365 நாட்களில் இனப்பெருக்கக் காலம், புயல், மழைக் காலம், கடல் சீற்றம், கடல் பஞ்சம், பண்டிகை, திருவிழாக் காலங்கள் போக மீதம் 150 நாட்கள் தான் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர். 45 நாட்கள் மீன்பிடி தடை காலத்தில், அரசு தரும் உதவித் தொகை என்பது விலைவாசி உயர்ந்துள்ள இக்காலத்துக்குப் போதுமானதாக இல்லை.
குடும்ப அட்டையைக் கணக்கில் கொண்டு, உதவித் தொகை வழங்கப்படுவதால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தந்தை, மகன்கள் என, கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் இதில் ஏமாற்றமடைகின்றனர். இதற்கு மாறாக மீனவர் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ள மீன்பிடித் தொழில் செய்யும் ஆண்களுக்கும், மீன்களை விற்பனை செய்யும் பெண்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்.
விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு, 100 நாள் வேலை உறுதி திட்டம் மூலம், நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் வழங்குவதைப் போன்று, மீனவர்களை பாரம்பரிய மீனவப் பழங்குடி இனத்தவராக அறிவித்து, குறைந்தபட்சம், 45 நாள் வேலை உறுதித் திட்டத்தை உருவாக்கி, நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் வீதம், 45 நாட்களுக்கு, 4,500 ரூபாய் உதவித் தொகை வழங்குவது நன்மை பயக்கும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

ஆம்பூர் & உளுந்தூர்பேட்டை: அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை, அதன்படி வைகோவும் இப்போது இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

ஆம்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெ.விஜய் இளஞ்செழியனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இது பலமான கூட்டணி.

அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. வைகோவும் இப்போது இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. அது இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென நினைப்பது தான்.

திமுக தலைவர் கருணாநிதி கடுமையான உழைப்பாளி. பொருளாதார மேதையும் கூட. ஏழை, எளிய மக்களின் தேவையை அறிந்தவர். அதனால் தான் இலவசங்களை வழங்கினார். வரும் தேர்தலிலும் மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அவற்றை நிச்சயம் வழங்குவார்.

கடந்த அதிமுக ஆட்சியில் யானைகள் மீது தான் ஜெயலலிதா அக்கறை காட்டினார். மக்கள் மீது அக்கறை காட்டவில்லை. ஆனால் கருணாநிதிக்கு எப்பொழுதும் மக்கள் மீது அக்கறை உண்டு. யாருக்கு வாக்களிக்க வேண்டுமென சிந்தித்து செயல்பட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும் என்றார்.

ஏமாற்றம் தந்த ஜெயலலிதா ஆட்சி-வாசன்:

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து பேசுகையில்,

திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் வேதனையையும், சோதனையையும், ஏமாற்றத்தையும் மக்களுக்கு அளித்தார்கள். உங்களுடைய வாக்கு வளர்ச்சிக்காக இருக்க வேண்டுமே தவிர, வீழ்ச்சிக்காக இருக்கக் கூடாது.

முதல்வர் கருணாநிதி மூத்த அரசியல் தலைவர். மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மதச்சார்பின்மைக்கு தோள் கொடுத்தவர். திருவாரூரில் மாணவராக வலம் வந்த முதல்வர், இன்று தமிழகத்தின் பெரும் தலைவராக உருவாகியுள்ளார்.

இதுவரை 11 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கருணாநிதி, தற்போது 12 வது முறையாக திருவாரூரில் போட்டியிடுகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சியில், மத்திய அரசு உதவியுடன் ஏராளமானத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதற்கெல்லாம் காரணம் மத்திய, மாநில அரசுகளின் இணக்கமான போக்குதான் என்றார்.

துரோகம் செய்தவர் ஜெயலலிதா-திருமா:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உளுந்தூர்பேட்டை தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மு.முகமது யூசுப்பை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.

அப்போது பேசுகையில், 2006ல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தபோது, நமது கட்சியினருக்கு ஒருசில இடங்களை ஒதுக்கிவிட்டு, அந்த இடங்களில் நம்மை கேட்காமலேயே அதிமுக வேட்பாளர்களை அறிவித்து கூட்டணிக் கட்சியிலிருந்து வெளியேற்றி நம்மை அழிக்க துரோகம் செய்தவர்தான் ஜெயலலிதா.

ஆனால் அப்போது முதல்வர் கருணாநிதி நமது கட்சியினருக்கு ஆதரவு கரம் நீட்டி அவரது வேட்பாளருக்கு அறிவித்த ஒரு சில இடங்களை வாபஸ் பெற்று நமது கட்சியினருக்கு பதவிகளை வாரி வழங்கி பெருமை செய்தவர்.

சிட்டுக் குருவிகளுக்குக்கூட வீடு இருக்கிறது. ஆனால் மனிதர்களாகிய இவர்களுக்குச் சொந்தமாக வீடுகள் இல்லை. இவர்களுக்கு குடிசை வீடுகளை அகற்றி காரை வீடுகள் வழங்கியவர் முதல்வர் கருணாநிதி.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் செய்த சாதனை என்னவென்றால் அவர்களுக்குப் பிடிக்காதவர்களை சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதுதான் சாதனை. ஜெயலலிதாவையே நம்பியிருந்த அண்ணன் வைகோவை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார். அவருக்கு செய்தது பச்சை துரோகம் என்றார்.

'வைகோவை நம்ப வைத்து கழுத்தை அறுத்த ஜெ'-திருமாவளவன் தாக்கு

ஆம்பூர் & உளுந்தூர்பேட்டை: அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை, அதன்படி வைகோவும் இப்போது இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

ஆம்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெ.விஜய் இளஞ்செழியனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இது பலமான கூட்டணி.

அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. வைகோவும் இப்போது இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. அது இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென நினைப்பது தான்.

திமுக தலைவர் கருணாநிதி கடுமையான உழைப்பாளி. பொருளாதார மேதையும் கூட. ஏழை, எளிய மக்களின் தேவையை அறிந்தவர். அதனால் தான் இலவசங்களை வழங்கினார். வரும் தேர்தலிலும் மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அவற்றை நிச்சயம் வழங்குவார்.

கடந்த அதிமுக ஆட்சியில் யானைகள் மீது தான் ஜெயலலிதா அக்கறை காட்டினார். மக்கள் மீது அக்கறை காட்டவில்லை. ஆனால் கருணாநிதிக்கு எப்பொழுதும் மக்கள் மீது அக்கறை உண்டு. யாருக்கு வாக்களிக்க வேண்டுமென சிந்தித்து செயல்பட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும் என்றார்.

ஏமாற்றம் தந்த ஜெயலலிதா ஆட்சி-வாசன்:

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து பேசுகையில்,

திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் வேதனையையும், சோதனையையும், ஏமாற்றத்தையும் மக்களுக்கு அளித்தார்கள். உங்களுடைய வாக்கு வளர்ச்சிக்காக இருக்க வேண்டுமே தவிர, வீழ்ச்சிக்காக இருக்கக் கூடாது.

முதல்வர் கருணாநிதி மூத்த அரசியல் தலைவர். மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மதச்சார்பின்மைக்கு தோள் கொடுத்தவர். திருவாரூரில் மாணவராக வலம் வந்த முதல்வர், இன்று தமிழகத்தின் பெரும் தலைவராக உருவாகியுள்ளார்.

இதுவரை 11 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கருணாநிதி, தற்போது 12 வது முறையாக திருவாரூரில் போட்டியிடுகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சியில், மத்திய அரசு உதவியுடன் ஏராளமானத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதற்கெல்லாம் காரணம் மத்திய, மாநில அரசுகளின் இணக்கமான போக்குதான் என்றார்.

துரோகம் செய்தவர் ஜெயலலிதா-திருமா:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உளுந்தூர்பேட்டை தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மு.முகமது யூசுப்பை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.

அப்போது பேசுகையில், 2006ல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தபோது, நமது கட்சியினருக்கு ஒருசில இடங்களை ஒதுக்கிவிட்டு, அந்த இடங்களில் நம்மை கேட்காமலேயே அதிமுக வேட்பாளர்களை அறிவித்து கூட்டணிக் கட்சியிலிருந்து வெளியேற்றி நம்மை அழிக்க துரோகம் செய்தவர்தான் ஜெயலலிதா.

ஆனால் அப்போது முதல்வர் கருணாநிதி நமது கட்சியினருக்கு ஆதரவு கரம் நீட்டி அவரது வேட்பாளருக்கு அறிவித்த ஒரு சில இடங்களை வாபஸ் பெற்று நமது கட்சியினருக்கு பதவிகளை வாரி வழங்கி பெருமை செய்தவர்.

சிட்டுக் குருவிகளுக்குக்கூட வீடு இருக்கிறது. ஆனால் மனிதர்களாகிய இவர்களுக்குச் சொந்தமாக வீடுகள் இல்லை. இவர்களுக்கு குடிசை வீடுகளை அகற்றி காரை வீடுகள் வழங்கியவர் முதல்வர் கருணாநிதி.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் செய்த சாதனை என்னவென்றால் அவர்களுக்குப் பிடிக்காதவர்களை சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதுதான் சாதனை. ஜெயலலிதாவையே நம்பியிருந்த அண்ணன் வைகோவை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார். அவருக்கு செய்தது பச்சை துரோகம் என்றார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில்,

’’ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான மீன்பிடி படகில் விக்டஸ், அந்தோணி, ஜான்பால், மாரிமுத்து ஆகிய நான்கு மீனவர்கள் 2-ந் தேதி அதிகாலையில் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இரண்டு நாளாகியும் அவர்கள் திரும்பி வர வில்லை.

அந்தப் பகுதி மீனவர்கள் கடலில் சென்று தேடியபோது, அவர்கள் சென்ற படகையும் காணவில்லை. முதல் நாள், அந்தப்பகுதியில் இலங்கை கடற்படையினரின் நடமாட்டத்தை, இதர மீனவர்கள் பார்த்துள்ளனர்.

எனவே, இலங்கை கடற்படையினர் இந்தப் படகை கடத்தி சென்று இருக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கருதுகிறார்கள்.

கடத்தி செல்லப்பட்ட மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் எவ்வித ஆபத்தும் இன்றி, அவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு வைகோ கடிதம்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில்,

’’ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான மீன்பிடி படகில் விக்டஸ், அந்தோணி, ஜான்பால், மாரிமுத்து ஆகிய நான்கு மீனவர்கள் 2-ந் தேதி அதிகாலையில் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இரண்டு நாளாகியும் அவர்கள் திரும்பி வர வில்லை.

அந்தப் பகுதி மீனவர்கள் கடலில் சென்று தேடியபோது, அவர்கள் சென்ற படகையும் காணவில்லை. முதல் நாள், அந்தப்பகுதியில் இலங்கை கடற்படையினரின் நடமாட்டத்தை, இதர மீனவர்கள் பார்த்துள்ளனர்.

எனவே, இலங்கை கடற்படையினர் இந்தப் படகை கடத்தி சென்று இருக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கருதுகிறார்கள்.

கடத்தி செல்லப்பட்ட மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் எவ்வித ஆபத்தும் இன்றி, அவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராவார் என்று நான் கூறவில்லையென ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ பேசினார்.

ஈரோட்டில் ம.தி.மு.க., மாவட்டக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ம.தி.மு.க., பொது செயலர் வைகோ,

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் இந்தச் செயல் அந்தக் கட்சித் தொண்டர்களுக்கே மிகுந்த வேதனையை அளித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என்றுதான்

கூறினேன். ஜெயலலிதா முதல்வராவார் என்று கூறவில்லை. ம.தி.மு.க. உண்மையான ஜனநாயகக் கட்சி. இந்த முடிவின் மூலம் மக்கள் நல்லெண்ணத்தை கட்சி பெற்றுள்ளது.

இந்த காலகட்டத்தில் படித்தவர்களையும், கட்சி மீது நல்லெண்ணம் கொண்டவர்களையும் பெருமளவில் கட்சியில் சேர்க்க வேண்டும். ஜனநாயக முறைப்படி கட்சியை வலுப்படுத்த தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்றார்.

ஜெ. முதல்வராவார் என்று கூறவில்லை: வைகோ

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராவார் என்று நான் கூறவில்லையென ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ பேசினார்.

ஈரோட்டில் ம.தி.மு.க., மாவட்டக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ம.தி.மு.க., பொது செயலர் வைகோ,

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் இந்தச் செயல் அந்தக் கட்சித் தொண்டர்களுக்கே மிகுந்த வேதனையை அளித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என்றுதான்

கூறினேன். ஜெயலலிதா முதல்வராவார் என்று கூறவில்லை. ம.தி.மு.க. உண்மையான ஜனநாயகக் கட்சி. இந்த முடிவின் மூலம் மக்கள் நல்லெண்ணத்தை கட்சி பெற்றுள்ளது.

இந்த காலகட்டத்தில் படித்தவர்களையும், கட்சி மீது நல்லெண்ணம் கொண்டவர்களையும் பெருமளவில் கட்சியில் சேர்க்க வேண்டும். ஜனநாயக முறைப்படி கட்சியை வலுப்படுத்த தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்றார்.

"தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றும் ம.தி.மு.க., 2011ல் நடக்கும் தமிழகம், புதுவை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இல்லை' என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ம.தி.மு.க.,வுக்கு 12 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்பதில் அ.தி.மு.க., திட்டவட்டமாக இருந்ததால் அக்கூட்டணியில் நீடிப்பது குறித்த இறுதி முடிவெடுப்பதற்கு ம.தி.மு.க., உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச்செயலர்கள் கூட்டம், தாயகத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய நடந்தது. ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், 56 மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர். கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி மலர்ந்த சம்பவங்களையும், 35 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது, திருமங்கலம் இடைத்தேர்தலில் அத்தொகுதியை அ.தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுத்தது, 2009ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த அவமான நிகழ்வுகளையும் வைகோ விவரித்தார்.

மேலும், வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன் முதல் கட்டமாக 35 தொகுதிகளும், இரண்டாவது கட்டமாக 30 தொகுதிகளும், மூன்றாவது கட்டமாக 21 தொகுதிகளும் ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையை பற்றியும் வைகோ தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தரப்பில் ஆறு தொகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு பின், எட்டு தொகுதிகள், ஒன்பது தொகுதிகள் என அதிகரித்து இறுதியாக 12 தொகுதிகள் வரை தருவதற்கு நடத்திய பேரத்தையும், வைகோ ஆவேசமாக விளக்கி பேசினார்.தொகுதி பங்கீட்டில் ம.தி.மு.க.,வை அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டு புறக்கணிப்பதாக அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.

ம.தி.மு.க., கொள்கைப் பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் பேசும்போது, அ.தி.மு.க., தலைமையை கடுமையாக விமர்சித்தார். தலைவர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ப மாவட்டச்செயலர்கள் 48 பேர், "அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற வேண்டாம்' என, தெரிவித்தனர்.

ஒரு சிலர் மட்டும் ம.தி.மு.க.,வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அ.தி.மு.க., தரும் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து பேசினர். அவர்களுக்கு வைகோ பதிலளித்து பேசும்போது, "நீங்கள் விரும்பினால் போட்டியிடுங்கள். நான் தொகுதிகளை கேட்க மாட்டேன். பிரசாரத்திற்கு வரமாட்டேன். என்னை அவமானப்படுத்தி விட்டனர். தேர்தலில் செலவு செய்வதற்கும் நமது கட்சியில் பணம் இல்லை' என்றார்.அதிகாலையில், ஐந்து பக்கம் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், "புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்து போட்டியிடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு ம.தி.மு.க., கருவியாயிற்று என்ற துளியும் உண்மை அற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும். கண்களை விற்று சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை ம.தி.மு.க., வுக்கு இல்லை. தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றும் ம.தி.மு.க., 2011ல் நடக்கும் தமிழகம், புதுவை சட்டசபை பொதுத்தேர்தலில் மட்டுமே போட்டியிடுவது இல்லை' என, அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் சில மாவட்டச்செயலர்கள், "தேர்தலில் புறக்கணிப்பு என்ற முடிவு ஏற்புடையதல்ல. மாவட்டத்தில் கட்சிக்காரர்கள், உறவினர்கள், பொதுமக்கள் கேட்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் ஏதாவது ஒரு காரணத்தின் அடிப்படையில் நமக்கு தோல்வி தான் ஏற்படுகிறது' என, கண்ணீர் விட்டு அழுதுகொண்டே தங்களது ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

உட்கட்சி பூசல், நிதி நெருக்கடியா-ம.தி.மு.க., தேர்தல் புறக்கணிப்பு மர்மம் : அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க., வெளியேறியதற்கு உட்கட்சி பூசல், நிதி நெருக்கடி மற்றும் சில முக்கியக் காரணிகள் உண்டு என, கூறப்படுகிறது.

தி.மு.க.,வில் போர்ப்படை தளபதி என்றழைக்கப்பட்ட வைகோ, கருத்து வேறுபாடுகளால் வெளியேறி ம.தி.மு.க.,வை துவக்கினார். 1996ல் தனித்து போட்டியிட்ட ம.தி.மு.க., 5.78 சதவீத ஓட்டுகளை பெற்றது. 2001 தேர்தலில் 211 இடங்களில் தனித்து போட்டியிட்டு 4.65 சதவீத ஓட்டுகள் பெற்றது.பின், 2006 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் தொகுதி பிரச்னையால், கடைசி நேரத்தில் விலகி, அ.தி.மு.க., கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், ஆறு இடங்களில் வெற்றி பெற்று 5.98 சதவீத ஓட்டுகளை பெற்றது.இதையடுத்து, லோக்சபா தேர்தலில் நான்கு இடங்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. பின், திருமங்கலம் தொகுதி ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்ற போதும், அதில் அ.தி.மு.க.,வே போட்டியிட்டது.

ம.தி.மு.க.,வுக்குரிய கம்பம், தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தது. இதனால், ம.தி.மு.க., ஓரங்கட்டப்படுகிறதோ என, அந்தக் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். தற்போது சட்டசபை தேர்தலில் 21 தொகுதிகளை கேட்ட ம.தி.மு.க.,வுக்கு 6, 7, 8, 12 என, சீட் பேரம் இழுபறி நிலையாகி, கடைசியில் அக்கூட்டணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட கட்சியானது.இம்மாதிரி வைகோ எடுத்த முடிவு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி ம.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தன்மானத்திற்காக வைகோ முடிவெடுத்தாலும், அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக்குறி உள்ளது. ம.தி.மு.க., சரிவுக்கு உட்கட்சி பூசல் தான் முக்கிய காரணம். ஏனெனில், பதவி மற்றும் முக்கியத்துவம் தந்த பலர், அடுத்த கட்சிக்குத் தாவி அங்கு பதவி பெறுவது வழக்கமாகி விட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் மாசு கட்டுப்பாட்டு விதிகள் கடைபிடிக்காததால், வைகோ ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆலையை மூட வைத்தார். இதில், பெங்களூரைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர் ஒருவர் தலையிட்டு சமாதானம் பேசியும், வைகோ பணியாததால், அ.தி.மு.க., தலைமை மூலம் நெருக்கடி கொடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் பிரச்னையை எழுப்பிவிட்டு, அது ஓய்வுற்ற பின்னும் அதை மீண்டும் மீண்டும் தோண்டுவது அவர் பாணி அரசியல் . இதுவும் விரிசலுக்கும், மனக் கசப்புக்கும் ஒரு காரணம்.

பொதுவாக அவர் விடுதலைப் புலிகள் ஆதரவு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டதில் இருந்து, அவருக்கு ஜனநாயக அடிப்படையில் ஆதரவு தந்த பலரும் சற்று விலகிக் கொண்டனர். இன்று தேர்தல் நேரத்தில் அவருக்கு அனைத்தும் பாதகமாகி விட்டது.இனி அடுத்த தேர்தலில் போட்டியிட்டு, குறைந்த பட்ச சதவீத ஓட்டுகள் அல்லது சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் பெறுவது என்பது எப்படி? அதுவரை தொண்டர்களை எப்படி ஊக்குவிப்பது என்பது, இன்று எழுந்திருக்கும் கேள்வி.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினார் வைகோ : இன்னும் 2 மாதங்களுக்கு எந்த அறிக்கையும் கிடையாது

"தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றும் ம.தி.மு.க., 2011ல் நடக்கும் தமிழகம், புதுவை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இல்லை' என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ம.தி.மு.க.,வுக்கு 12 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்பதில் அ.தி.மு.க., திட்டவட்டமாக இருந்ததால் அக்கூட்டணியில் நீடிப்பது குறித்த இறுதி முடிவெடுப்பதற்கு ம.தி.மு.க., உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச்செயலர்கள் கூட்டம், தாயகத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய நடந்தது. ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், 56 மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர். கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி மலர்ந்த சம்பவங்களையும், 35 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது, திருமங்கலம் இடைத்தேர்தலில் அத்தொகுதியை அ.தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுத்தது, 2009ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த அவமான நிகழ்வுகளையும் வைகோ விவரித்தார்.

மேலும், வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன் முதல் கட்டமாக 35 தொகுதிகளும், இரண்டாவது கட்டமாக 30 தொகுதிகளும், மூன்றாவது கட்டமாக 21 தொகுதிகளும் ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையை பற்றியும் வைகோ தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தரப்பில் ஆறு தொகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு பின், எட்டு தொகுதிகள், ஒன்பது தொகுதிகள் என அதிகரித்து இறுதியாக 12 தொகுதிகள் வரை தருவதற்கு நடத்திய பேரத்தையும், வைகோ ஆவேசமாக விளக்கி பேசினார்.தொகுதி பங்கீட்டில் ம.தி.மு.க.,வை அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டு புறக்கணிப்பதாக அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.

ம.தி.மு.க., கொள்கைப் பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் பேசும்போது, அ.தி.மு.க., தலைமையை கடுமையாக விமர்சித்தார். தலைவர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ப மாவட்டச்செயலர்கள் 48 பேர், "அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற வேண்டாம்' என, தெரிவித்தனர்.

ஒரு சிலர் மட்டும் ம.தி.மு.க.,வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அ.தி.மு.க., தரும் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து பேசினர். அவர்களுக்கு வைகோ பதிலளித்து பேசும்போது, "நீங்கள் விரும்பினால் போட்டியிடுங்கள். நான் தொகுதிகளை கேட்க மாட்டேன். பிரசாரத்திற்கு வரமாட்டேன். என்னை அவமானப்படுத்தி விட்டனர். தேர்தலில் செலவு செய்வதற்கும் நமது கட்சியில் பணம் இல்லை' என்றார்.அதிகாலையில், ஐந்து பக்கம் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், "புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்து போட்டியிடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு ம.தி.மு.க., கருவியாயிற்று என்ற துளியும் உண்மை அற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும். கண்களை விற்று சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை ம.தி.மு.க., வுக்கு இல்லை. தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றும் ம.தி.மு.க., 2011ல் நடக்கும் தமிழகம், புதுவை சட்டசபை பொதுத்தேர்தலில் மட்டுமே போட்டியிடுவது இல்லை' என, அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் சில மாவட்டச்செயலர்கள், "தேர்தலில் புறக்கணிப்பு என்ற முடிவு ஏற்புடையதல்ல. மாவட்டத்தில் கட்சிக்காரர்கள், உறவினர்கள், பொதுமக்கள் கேட்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் ஏதாவது ஒரு காரணத்தின் அடிப்படையில் நமக்கு தோல்வி தான் ஏற்படுகிறது' என, கண்ணீர் விட்டு அழுதுகொண்டே தங்களது ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

உட்கட்சி பூசல், நிதி நெருக்கடியா-ம.தி.மு.க., தேர்தல் புறக்கணிப்பு மர்மம் : அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க., வெளியேறியதற்கு உட்கட்சி பூசல், நிதி நெருக்கடி மற்றும் சில முக்கியக் காரணிகள் உண்டு என, கூறப்படுகிறது.

தி.மு.க.,வில் போர்ப்படை தளபதி என்றழைக்கப்பட்ட வைகோ, கருத்து வேறுபாடுகளால் வெளியேறி ம.தி.மு.க.,வை துவக்கினார். 1996ல் தனித்து போட்டியிட்ட ம.தி.மு.க., 5.78 சதவீத ஓட்டுகளை பெற்றது. 2001 தேர்தலில் 211 இடங்களில் தனித்து போட்டியிட்டு 4.65 சதவீத ஓட்டுகள் பெற்றது.பின், 2006 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் தொகுதி பிரச்னையால், கடைசி நேரத்தில் விலகி, அ.தி.மு.க., கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், ஆறு இடங்களில் வெற்றி பெற்று 5.98 சதவீத ஓட்டுகளை பெற்றது.இதையடுத்து, லோக்சபா தேர்தலில் நான்கு இடங்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. பின், திருமங்கலம் தொகுதி ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்ற போதும், அதில் அ.தி.மு.க.,வே போட்டியிட்டது.

ம.தி.மு.க.,வுக்குரிய கம்பம், தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தது. இதனால், ம.தி.மு.க., ஓரங்கட்டப்படுகிறதோ என, அந்தக் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். தற்போது சட்டசபை தேர்தலில் 21 தொகுதிகளை கேட்ட ம.தி.மு.க.,வுக்கு 6, 7, 8, 12 என, சீட் பேரம் இழுபறி நிலையாகி, கடைசியில் அக்கூட்டணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட கட்சியானது.இம்மாதிரி வைகோ எடுத்த முடிவு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி ம.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தன்மானத்திற்காக வைகோ முடிவெடுத்தாலும், அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக்குறி உள்ளது. ம.தி.மு.க., சரிவுக்கு உட்கட்சி பூசல் தான் முக்கிய காரணம். ஏனெனில், பதவி மற்றும் முக்கியத்துவம் தந்த பலர், அடுத்த கட்சிக்குத் தாவி அங்கு பதவி பெறுவது வழக்கமாகி விட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் மாசு கட்டுப்பாட்டு விதிகள் கடைபிடிக்காததால், வைகோ ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆலையை மூட வைத்தார். இதில், பெங்களூரைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர் ஒருவர் தலையிட்டு சமாதானம் பேசியும், வைகோ பணியாததால், அ.தி.மு.க., தலைமை மூலம் நெருக்கடி கொடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் பிரச்னையை எழுப்பிவிட்டு, அது ஓய்வுற்ற பின்னும் அதை மீண்டும் மீண்டும் தோண்டுவது அவர் பாணி அரசியல் . இதுவும் விரிசலுக்கும், மனக் கசப்புக்கும் ஒரு காரணம்.

பொதுவாக அவர் விடுதலைப் புலிகள் ஆதரவு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டதில் இருந்து, அவருக்கு ஜனநாயக அடிப்படையில் ஆதரவு தந்த பலரும் சற்று விலகிக் கொண்டனர். இன்று தேர்தல் நேரத்தில் அவருக்கு அனைத்தும் பாதகமாகி விட்டது.இனி அடுத்த தேர்தலில் போட்டியிட்டு, குறைந்த பட்ச சதவீத ஓட்டுகள் அல்லது சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் பெறுவது என்பது எப்படி? அதுவரை தொண்டர்களை எப்படி ஊக்குவிப்பது என்பது, இன்று எழுந்திருக்கும் கேள்வி.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சென்னை:"ம.தி.மு.க.,விற்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களில், தொண்டர்கள் ஈடுபட்டது கண்டனத்திற்குரியது' என்று, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கை:ம.தி.மு.க., சட்டசபைத் தேர்தல் தொகுதி உடன்பாடு மற்றும் பேச்சுவார்த்தையில், மிகுந்த கண்ணியத்தையும், அமைதியான போக்கையும் கடைபிடித்து வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து, மக்கள் மத்தியில் ம.தி.மு.க.,விற்கு நல்லெண்ணத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தி உள்ளனர்.இந்நிலையில், தாம்பரம் மற்றும் தேனி மாவட்டத்தில் நான்கு, ஐந்து பேர், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்துள்ளனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல்களில், தொண்டர்கள் இனி ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க.,விற்கு களங்கம் ஏற்படுத்தவேண்டாம்: வைகோ வேண்டுகோள்

சென்னை:"ம.தி.மு.க.,விற்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களில், தொண்டர்கள் ஈடுபட்டது கண்டனத்திற்குரியது' என்று, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கை:ம.தி.மு.க., சட்டசபைத் தேர்தல் தொகுதி உடன்பாடு மற்றும் பேச்சுவார்த்தையில், மிகுந்த கண்ணியத்தையும், அமைதியான போக்கையும் கடைபிடித்து வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து, மக்கள் மத்தியில் ம.தி.மு.க.,விற்கு நல்லெண்ணத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தி உள்ளனர்.இந்நிலையில், தாம்பரம் மற்றும் தேனி மாவட்டத்தில் நான்கு, ஐந்து பேர், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்துள்ளனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல்களில், தொண்டர்கள் இனி ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு மற்றும் பேச்சு வார்த்தைகளில் ம.தி.மு.க. மிகுந்த கண்ணியத்தையும் அமைதியான போக்கையும் கடை பிடித்து வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்டுப்பாடுடன் நடந்து, கழகத்திற்கு மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் தாம்பரத்திலும், தேனி மாவட்டத்திலும் நான்கு, ஐந்து பேர் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் உருவ பொம்மையை கொளுத்தியதற்கு வன்மையாக கண்டனத்தை தெரிவிக்கிறேன். இத்தகைய செயல்களில் கழக தோழர்கள் ஈடுபடக் கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தி வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் வைகோ கூறியுள்ளார்.

ஜெயலலிதா உருவ பொம்மை எரிப்பு வைகோ கண்டனம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு மற்றும் பேச்சு வார்த்தைகளில் ம.தி.மு.க. மிகுந்த கண்ணியத்தையும் அமைதியான போக்கையும் கடை பிடித்து வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்டுப்பாடுடன் நடந்து, கழகத்திற்கு மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் தாம்பரத்திலும், தேனி மாவட்டத்திலும் நான்கு, ஐந்து பேர் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் உருவ பொம்மையை கொளுத்தியதற்கு வன்மையாக கண்டனத்தை தெரிவிக்கிறேன். இத்தகைய செயல்களில் கழக தோழர்கள் ஈடுபடக் கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தி வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் வைகோ கூறியுள்ளார்.

சென்னை:தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களின் இறுதித் தேர்வு மார்ச் 2ம்தேதி துவங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு வரும் 22ம் தேதி துவங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை 11லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.பல்கலைக் கழக தேர்வுகள் ஏப்ரல் 5ம்தேதி துவங்கி மே 2ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் மார்ச் 20ம் தேதியில் இருந்து ஏப்ரல் 11ம்தேதி வரை தேர்தல் பிரசாரத்திற்கான உச்சக்கட்ட நாளாகும். தேர்தல் பிரசாரத்தில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படும் என்பதால் இது மாணவர்களின் படிப்புக்கு இடையூறாக இருக்கும்.மேலும் சித்திரை திருநாள் என்பதால் ஏப்ரல் 14ம் தேதி வருகிறது. தமிழக அரசும் இந்த நாளை அம்பேத்கர் பிறந்த தினமாகஅறிவித்து விடுமுறை அளித்துள்ளது. சித்திரை திருநாள் தமிழகத்தில் ஒரு முக்கிய பண்டிகை திருநாளாகும்.மதம், ஜாதிக்கு அப்பாற்பட்டு இத்திருநாளை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடுகிறார்கள். ஏப்ரல் 13ம்தேதி தேர்தல் நடத்தப்படுவதால் அந்த நாளும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.16ம் தேதி மகாவீர் ஜெயந்தியை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். இடையில் 15ம்தேதி ஒரு நாள் மட்டுமே இருக்கிறது.
தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அரசு ஊழியர்கள் 12ம் தேதியே விடுப்பு எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் தங்ககள் விடுமுறை நாட்களை சொந்த ஊரில் கொண்டாட போய்விடுவார்கள்.தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியது ஜனநாயக கடமை. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அனைத்து வாக்காளர்களும் ஓட்டுச்சாவடிக்கு வந்து வாக்களிப்பார்களா என்பது சந்தேகம். ஆகவே தேர்தல் தேதியை ஒத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

தேர்தல் தேதியை மாற்றவேண்டும்: வைகோ

சென்னை:தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களின் இறுதித் தேர்வு மார்ச் 2ம்தேதி துவங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு வரும் 22ம் தேதி துவங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை 11லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.பல்கலைக் கழக தேர்வுகள் ஏப்ரல் 5ம்தேதி துவங்கி மே 2ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் மார்ச் 20ம் தேதியில் இருந்து ஏப்ரல் 11ம்தேதி வரை தேர்தல் பிரசாரத்திற்கான உச்சக்கட்ட நாளாகும். தேர்தல் பிரசாரத்தில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படும் என்பதால் இது மாணவர்களின் படிப்புக்கு இடையூறாக இருக்கும்.மேலும் சித்திரை திருநாள் என்பதால் ஏப்ரல் 14ம் தேதி வருகிறது. தமிழக அரசும் இந்த நாளை அம்பேத்கர் பிறந்த தினமாகஅறிவித்து விடுமுறை அளித்துள்ளது. சித்திரை திருநாள் தமிழகத்தில் ஒரு முக்கிய பண்டிகை திருநாளாகும்.மதம், ஜாதிக்கு அப்பாற்பட்டு இத்திருநாளை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடுகிறார்கள். ஏப்ரல் 13ம்தேதி தேர்தல் நடத்தப்படுவதால் அந்த நாளும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.16ம் தேதி மகாவீர் ஜெயந்தியை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். இடையில் 15ம்தேதி ஒரு நாள் மட்டுமே இருக்கிறது.
தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அரசு ஊழியர்கள் 12ம் தேதியே விடுப்பு எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் தங்ககள் விடுமுறை நாட்களை சொந்த ஊரில் கொண்டாட போய்விடுவார்கள்.தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியது ஜனநாயக கடமை. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அனைத்து வாக்காளர்களும் ஓட்டுச்சாவடிக்கு வந்து வாக்களிப்பார்களா என்பது சந்தேகம். ஆகவே தேர்தல் தேதியை ஒத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

சென்னை அஇஅ‌திமுகவுட‌ன் தொகு‌தி ப‌ங்‌கீடு கு‌றி‌த்து வரு‌ம் 4ஆ‌ம் தே‌தி ம‌திமுக பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த உ‌ள்ளதாக அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌‌ச் செய‌ல‌ர் வைகோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னையில் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சியபோது அவ‌ர், தொகுதி பங்கீடு குறித்து அ.இ.அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்த ம.தி.மு.க.வில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அந்த குழுவில் திருப்பூர் மாவட்ட செயலர் ஆர்.டி.மாரியப்பன், காஞ்‌சிபுரம் மாவட்ட செயலர் பாலவாக்கம் சோமு, முன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் குருநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த குழு வ‌ரு‌ம் 4ஆ‌ம் தேதி முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. ம.தி.மு.க. பொதுக்குழு வருகிற 17ஆ‌ம் தேதி அண்ணாநகரில் உள்ள விஜயஸ்ரீ மண்டபத்தில் நடைபெறும் என்று வைகோ கூ‌றினா‌ர்.

தொகுதி பங்கீடு: அ.இ.அ.தி.மு.க- ம.தி.மு.க. 4ஆ‌ம் தேதி பேச்சு

சென்னை அஇஅ‌திமுகவுட‌ன் தொகு‌தி ப‌ங்‌கீடு கு‌றி‌த்து வரு‌ம் 4ஆ‌ம் தே‌தி ம‌திமுக பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த உ‌ள்ளதாக அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌‌ச் செய‌ல‌ர் வைகோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னையில் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சியபோது அவ‌ர், தொகுதி பங்கீடு குறித்து அ.இ.அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்த ம.தி.மு.க.வில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அந்த குழுவில் திருப்பூர் மாவட்ட செயலர் ஆர்.டி.மாரியப்பன், காஞ்‌சிபுரம் மாவட்ட செயலர் பாலவாக்கம் சோமு, முன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் குருநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த குழு வ‌ரு‌ம் 4ஆ‌ம் தேதி முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. ம.தி.மு.க. பொதுக்குழு வருகிற 17ஆ‌ம் தேதி அண்ணாநகரில் உள்ள விஜயஸ்ரீ மண்டபத்தில் நடைபெறும் என்று வைகோ கூ‌றினா‌ர்.




''மீனவர்களநலனைககாக்வேண்டிவழிமுறைகளைககண்டறிஇல‌ங்கை அரசுட‌ன் பே‌சி முடிவசெய்தஉள்ளோமஎ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோவு‌க்கு பிரதமரமன்மோகனசிங் பதிலகடிதமஅனுப்பியுள்ளார்.

இது தொட‌ர்பாக ம.ி.ு.தலைமஅலுவலகம் இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌யி‌ல், ஜனவரி 22ஆமதேதி வைகோ, பிரதமரமன்மோகனசிங்கைசசந்தித்து, இலங்கராணுவத்தாலகைதசெய்யப்பட்வழக்கறிஞரகயல்விழியவிடுவித்துததமிழகமகொண்டவந்ததசேர்த்ததற்கநன்றி தெரிவித்ததோடு, இலங்கைததமிழரபிரச்சனகுறித்தும், தமிழமீனவரபிரச்சனகுறித்துமபிரதமரிடமகடிதத்தைககொடுத்து, தனதகருத்துகளையுமதெரிவித்தார்.

ஆனால், அதநாளிலபுஷ்பவனத்தைசசார்ந்மீனவரஜெயக்குமார், இலங்கைககடற்படையினராலகொடூரமாகககொலசெய்யப்பட்செய்தி குறித்தஅதிர்ச்சியையும், கண்டனத்தையுமதெரிவித்தஜனவரி 23ஆமதேதி வைகஅவர்களபிரதமருக்குததொலைநகலசெய்தி அனுப்பினார்.

ஜனவரி 25ஆமதேதியிட்டபிரதமர், வைகோவுக்கஎழுதியுள்கடிதமஇன்றகிடைத்தது.

‌மீனவ‌ர்க‌ள் நல‌ன் கா‌க்க வ‌‌ழிமுறை: வைகோவுக்கு, பிரதமர் கடிதம்




''மீனவர்களநலனைககாக்வேண்டிவழிமுறைகளைககண்டறிஇல‌ங்கை அரசுட‌ன் பே‌சி முடிவசெய்தஉள்ளோமஎ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோவு‌க்கு பிரதமரமன்மோகனசிங் பதிலகடிதமஅனுப்பியுள்ளார்.

இது தொட‌ர்பாக ம.ி.ு.தலைமஅலுவலகம் இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌யி‌ல், ஜனவரி 22ஆமதேதி வைகோ, பிரதமரமன்மோகனசிங்கைசசந்தித்து, இலங்கராணுவத்தாலகைதசெய்யப்பட்வழக்கறிஞரகயல்விழியவிடுவித்துததமிழகமகொண்டவந்ததசேர்த்ததற்கநன்றி தெரிவித்ததோடு, இலங்கைததமிழரபிரச்சனகுறித்தும், தமிழமீனவரபிரச்சனகுறித்துமபிரதமரிடமகடிதத்தைககொடுத்து, தனதகருத்துகளையுமதெரிவித்தார்.

ஆனால், அதநாளிலபுஷ்பவனத்தைசசார்ந்மீனவரஜெயக்குமார், இலங்கைககடற்படையினராலகொடூரமாகககொலசெய்யப்பட்செய்தி குறித்தஅதிர்ச்சியையும், கண்டனத்தையுமதெரிவித்தஜனவரி 23ஆமதேதி வைகஅவர்களபிரதமருக்குததொலைநகலசெய்தி அனுப்பினார்.

ஜனவரி 25ஆமதேதியிட்டபிரதமர், வைகோவுக்கஎழுதியுள்கடிதமஇன்றகிடைத்தது.

சென்னை : ""முதல்வர் கருணாநிதி, மஞ்சள் துண்டு போட்டிருப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டார்,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கடும் குற்றம் சாட்டினார். திருக்கழுக்குன்றம் அடுத்த காட்டூர் கிராமத்தில், ஒன்றிய கவுன்சிலர் ராஜா- வெண்ணிலா ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்து வைகோ பேசியதாவது: திருக்கழுக்குன்றத்தில் நடந்த தி.மு.க., கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., கணக்கு கேட்டதால், அவரை கட்சியை விட்டு கருணாநிதி நீக்கினார். என்னையும் கொலைப்பழி சுமத்தி வெளியேற்றினார்.
தமிழகத்தில் தற்போது பாதுகாப்பு இல்லை. போலியோ சொட்டு மருந்து போட்டுவிட்டு, பாதுகாப்பாக குழந்தைகள் திரும்ப முடியாது. பெண்களும் பாதுகாப்புடன் செல்ல முடிவதில்லை. உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பில்லை. உங்கள் நிலத்தை அபகரிக்கும் நிலைதான் உள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் நகரத்து மக்களுக்கு மட்டும்தான் தெரியும் என, உளவுப் பிரிவு போலீசார் அரசுக்கு கருத்து சொல்லி வருகின்றனர். நகர மக்கள் செய்தித்தாளை மேலோட்டமாக படித்தும், "டிவி' பார்த்தும் விட்டு விடுகின்றனர். கிராம மக்களோ, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை படித்து விட்டு விவாதிக்கின்றனர்.
மஞ்சள் துண்டு அணிந்த கருணாநிதி, தமிழ்நாட்டிற்கும் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டார். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும். இவ்வாறு வைகோ பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசும்போது: ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக, உச்சநீதிமன்றம் சவுக்கடி கொடுத்த பின்னரே, சி.பி.ஐ., விசாரணை செய்வதாக பாவலா காட்டுகிறது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல், இமயமலையையே மறைக்கப் பார்க்கின்றனர்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுக்கிறார். கார்கில் வீரர்களுக்கு வீடு ஒதுக்கியதில் காங்கிரஸ் கட்சியினர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என பல தரப்பினரும் ஊழல் செய்துள்ளனர். காமன்வெல்த் விளையாட்டிலும் 71 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர். காங்கிரஸ் அவர்களை பாதுகாக்கிறது. காங்கிரஸ் ஆட்சி வீழும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டிற்கு கருணாநிதி மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டார் : வைகோ கடும் தாக்கு

சென்னை : ""முதல்வர் கருணாநிதி, மஞ்சள் துண்டு போட்டிருப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டார்,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கடும் குற்றம் சாட்டினார். திருக்கழுக்குன்றம் அடுத்த காட்டூர் கிராமத்தில், ஒன்றிய கவுன்சிலர் ராஜா- வெண்ணிலா ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்து வைகோ பேசியதாவது: திருக்கழுக்குன்றத்தில் நடந்த தி.மு.க., கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., கணக்கு கேட்டதால், அவரை கட்சியை விட்டு கருணாநிதி நீக்கினார். என்னையும் கொலைப்பழி சுமத்தி வெளியேற்றினார்.
தமிழகத்தில் தற்போது பாதுகாப்பு இல்லை. போலியோ சொட்டு மருந்து போட்டுவிட்டு, பாதுகாப்பாக குழந்தைகள் திரும்ப முடியாது. பெண்களும் பாதுகாப்புடன் செல்ல முடிவதில்லை. உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பில்லை. உங்கள் நிலத்தை அபகரிக்கும் நிலைதான் உள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் நகரத்து மக்களுக்கு மட்டும்தான் தெரியும் என, உளவுப் பிரிவு போலீசார் அரசுக்கு கருத்து சொல்லி வருகின்றனர். நகர மக்கள் செய்தித்தாளை மேலோட்டமாக படித்தும், "டிவி' பார்த்தும் விட்டு விடுகின்றனர். கிராம மக்களோ, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை படித்து விட்டு விவாதிக்கின்றனர்.
மஞ்சள் துண்டு அணிந்த கருணாநிதி, தமிழ்நாட்டிற்கும் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டார். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும். இவ்வாறு வைகோ பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசும்போது: ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக, உச்சநீதிமன்றம் சவுக்கடி கொடுத்த பின்னரே, சி.பி.ஐ., விசாரணை செய்வதாக பாவலா காட்டுகிறது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல், இமயமலையையே மறைக்கப் பார்க்கின்றனர்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுக்கிறார். கார்கில் வீரர்களுக்கு வீடு ஒதுக்கியதில் காங்கிரஸ் கட்சியினர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என பல தரப்பினரும் ஊழல் செய்துள்ளனர். காமன்வெல்த் விளையாட்டிலும் 71 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர். காங்கிரஸ் அவர்களை பாதுகாக்கிறது. காங்கிரஸ் ஆட்சி வீழும். இவ்வாறு அவர் கூறினார்.


முக நூல்

Popular Posts