background img

புதிய வரவு

Showing posts with label Afghanistan. Show all posts
Showing posts with label Afghanistan. Show all posts
ஆப்கான் தலிபான்கள்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ இராணுவ தளம் ஒன்றுக்கு அருகே ஒரு பெரிய குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கோஸ்ட் மாகாணத்தில் உள்ள நேட்டோ தளத்துக்கு அருகே நடந்த இந்த வெடிப்பை அடுத்து, வானில் பெரும் புகை மண்டலம் எழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி தாம் அந்த இராணுவ தளத்தை தாக்கியதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.
இழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னமும் வரவில்லை.

ஆப்கானில் நேட்டோ தளத்தின் மீது தாக்குதல்

ஆப்கான் தலிபான்கள்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ இராணுவ தளம் ஒன்றுக்கு அருகே ஒரு பெரிய குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கோஸ்ட் மாகாணத்தில் உள்ள நேட்டோ தளத்துக்கு அருகே நடந்த இந்த வெடிப்பை அடுத்து, வானில் பெரும் புகை மண்டலம் எழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி தாம் அந்த இராணுவ தளத்தை தாக்கியதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.
இழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னமும் வரவில்லை.

காபூல்: ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவரான முல்லா ஒமர் கொல்லப்பட்டு விட்டதாக ஆப்கானிஸ்தான் டிவி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முல்லா ஒமர், ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவன். தலிபான் இயக்கத்தின் மதப் பிரிவு தலைவராகவும் இவன் செயல்பட்டு வந்தான். தலிபான் அமைப்பினரை அமெரிக்கப் படைகள் ஒடுக்கிய பின்னர் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலுமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் பிடித்து ஆட்சியமைத்த போது அதன் தலைவராக செயல்பட்டு வந்தான் முல்லா ஒமர். இந்த அரசை பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை மட்டும் அங்கீகரித்திருந்தன.

2001ல் நடந்த நியூயார்க் தாக்குதலுக்குப் பின்னர் பின்லேடனுக்கும் பிற அல் கொய்தா தலைவர்களுக்கும் முல்லா ஒமர்தான் அடைக்கலம் கொடுத்து காத்து வந்தான். இதனால் முல்லா ஒமரையும் அமெரிக்கப் படைகள் தீவிரமாக தேடி வந்தன.

சமீபத்தில் பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொன்ற நிலையில் தற்போது முல்லா ஒமரும் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முல்லா ஒமரை பாகிஸ்தான் படையினர்தான் கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் டோலோ டிவி வெளியிட்ட செய்தியில், குவெட்டாவிலிருந்து வடக்கு வசிரிஸ்தானுக்கு முல்லா ஒமர் சென்று கொண்டிருந்தபோது பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ஒமர் கொல்லப்பட்டான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குல் மற்றும் ஒமர் பலியானதை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் உறுதி செய்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இருப்பினும் முல்லா ஒமர் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் அரசோ அல்லது அமெரிக்காவோ இதுவரை உறுதி செய்யவில்லை.

ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவன் முல்லா ஒமர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவரான முல்லா ஒமர் கொல்லப்பட்டு விட்டதாக ஆப்கானிஸ்தான் டிவி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முல்லா ஒமர், ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவன். தலிபான் இயக்கத்தின் மதப் பிரிவு தலைவராகவும் இவன் செயல்பட்டு வந்தான். தலிபான் அமைப்பினரை அமெரிக்கப் படைகள் ஒடுக்கிய பின்னர் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலுமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் பிடித்து ஆட்சியமைத்த போது அதன் தலைவராக செயல்பட்டு வந்தான் முல்லா ஒமர். இந்த அரசை பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை மட்டும் அங்கீகரித்திருந்தன.

2001ல் நடந்த நியூயார்க் தாக்குதலுக்குப் பின்னர் பின்லேடனுக்கும் பிற அல் கொய்தா தலைவர்களுக்கும் முல்லா ஒமர்தான் அடைக்கலம் கொடுத்து காத்து வந்தான். இதனால் முல்லா ஒமரையும் அமெரிக்கப் படைகள் தீவிரமாக தேடி வந்தன.

சமீபத்தில் பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொன்ற நிலையில் தற்போது முல்லா ஒமரும் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முல்லா ஒமரை பாகிஸ்தான் படையினர்தான் கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் டோலோ டிவி வெளியிட்ட செய்தியில், குவெட்டாவிலிருந்து வடக்கு வசிரிஸ்தானுக்கு முல்லா ஒமர் சென்று கொண்டிருந்தபோது பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ஒமர் கொல்லப்பட்டான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குல் மற்றும் ஒமர் பலியானதை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் உறுதி செய்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இருப்பினும் முல்லா ஒமர் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் அரசோ அல்லது அமெரிக்காவோ இதுவரை உறுதி செய்யவில்லை.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் தலிபான் தீவிரவாதிகளை குண்டு வீசி தாக்கி அழித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று கந்தகாரின் தென் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே, அமெரிக்க ராணுவத்தினர் அப்பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். அப்போது, அக்குண்டு தவறுதலாக அதிபர் கர்சாயின் உறவினர் மொகமது கர்சாய் (65) என்பவரது வீட்டின் மீது விழுந்தது.

இதனால் அவர் பரிதாபமாக இறந்தார். குண்டுவீச்சில் அவரதுவீடு இடிந்து தரைமட்டமானது. மேலும், தீவிரவாதி என நினைத்து அவரது மகனும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த தகவலை அதிபர் கர்சாயின் சகோதரர்கள் அக்மத் வாலி கர்சாய் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தலிபான்களின் செய்தி தொடர்பாளர் குவாரி யூசுப் அக்மதி கருத்து தெரிவித்துள்ளார். “அமெரிக்கர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்ல. அவர்கள் தலிபான்களை கொன்று வருகின்றனர். அவர்களுக்கு உதவி புரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் கொலை செய்வோம்“ என தெரிவித்துள்ளார்.

தவறாக நடந்த தாக்குதல்: ஆப்கன். அதிபரின் உறவினர் பலி

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் தலிபான் தீவிரவாதிகளை குண்டு வீசி தாக்கி அழித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று கந்தகாரின் தென் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே, அமெரிக்க ராணுவத்தினர் அப்பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். அப்போது, அக்குண்டு தவறுதலாக அதிபர் கர்சாயின் உறவினர் மொகமது கர்சாய் (65) என்பவரது வீட்டின் மீது விழுந்தது.

இதனால் அவர் பரிதாபமாக இறந்தார். குண்டுவீச்சில் அவரதுவீடு இடிந்து தரைமட்டமானது. மேலும், தீவிரவாதி என நினைத்து அவரது மகனும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த தகவலை அதிபர் கர்சாயின் சகோதரர்கள் அக்மத் வாலி கர்சாய் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தலிபான்களின் செய்தி தொடர்பாளர் குவாரி யூசுப் அக்மதி கருத்து தெரிவித்துள்ளார். “அமெரிக்கர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்ல. அவர்கள் தலிபான்களை கொன்று வருகின்றனர். அவர்களுக்கு உதவி புரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் கொலை செய்வோம்“ என தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்சாயுடன் இன்று விவாதித்தார்.

இந்தியா வந்துள்ள கர்சாய் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அப்போது ஆப்கானில் பணியாற்றி வரும் சுமார் 4,000 இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அவருடன் விவாதித்த மன்மோகன்,அவர்களின் பாதுகாப்புக்கு மீண்டும் உத்தரவாதம் அளிக்குமாறும் கர்சாயை கேட்டுக்கொண்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியர்களின் பாதுகாப்பு: ஆப்கான் அதிபரிடம் மன்மோகன் வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்சாயுடன் இன்று விவாதித்தார்.

இந்தியா வந்துள்ள கர்சாய் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அப்போது ஆப்கானில் பணியாற்றி வரும் சுமார் 4,000 இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அவருடன் விவாதித்த மன்மோகன்,அவர்களின் பாதுகாப்புக்கு மீண்டும் உத்தரவாதம் அளிக்குமாறும் கர்சாயை கேட்டுக்கொண்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

முக நூல்

Popular Posts