background img

புதிய வரவு

Showing posts with label President. Show all posts
Showing posts with label President. Show all posts
வாஷிங்டன், மே 9: அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு உதவிய பாகிஸ்தான் அதிகாரிகள் யார்? விசாரணை நடத்தி அவர்களை கண்டுபிடித்துக் கூறுங்கள் என்று பாகிஸ்தானை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தை பாகிஸ்தான் விசாரிக்கிறது என்று விட்டுவிடமாட்டோம். உண்மை தெரியும்வரை நாங்களும் விசாரிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டைக் கோபுரத்தை தகர்த்த பின்லேடன் கொல்லப்பட்டதால் அமெரிக்காவே பூரிப்பில் உள்ளது. அதிபர் ஒபாமாவுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து ஒபாமா திங்கள்கிழமை ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்தடவையாகப் பேட்டியளித்தார். இந்த பேட்டியின் போதுதான் பாகிஸ்தானில் ஆதரவு கிடைக்காமல் பின்லேடன் அங்கு வசித்திருக்க முடியாது என்று குற்றம்சுமத்தினார்.
மேலும் அவர் கூறியது: நாங்கள் வலைவீசித் தேடிவந்த பயங்கரவாதி பாகிஸ்தான் மண்ணில்தான் இருந்துள்ளார். அதுவும் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து குறைந்த தொலைவில் ராணுவ மையம் அருகிலேயே துணிச்சலாக வசித்து வந்துள்ளார். இது எப்படி சாத்தியம்? பாகிஸ்தானில் யாருடைய ஆதரவும், உதவியும் இல்லாமல் பின்லேடனால் அங்கு வசித்திருக்க முடியுமா? வாய்ப்பே இல்லை. அவருக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரிகளோ, அரசுக்கு வெளியில் உள்ளவர்களோ ஆதரவுக் கரம் நீட்டியிருக்க வேண்டும். அவருக்கு வேண்டிய உதவியை செய்திருக்க வேண்டும். அவருடைய அந்த நலவிரும்பிகள் யார் என்பது அமெரிக்காவுக்கு நிச்சயம் தெரிந்தாக வேண்டும்.
இந்த விஷயத்தை பாகிஸ்தான் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். இதுதான் அமெரிக்காவின் விருப்பம்.
பின்லேடன் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சூழலால் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு அளித்த ஒத்துழைப்பையும், உதவியையும் மறந்திட முடியாது. இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதில் இருந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்கு சிறந்தவகையில் ஒத்துழைப்பை நல்கி வருகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரானப் போரை பொறுத்தவரை பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்னதாகவே அமெரிக்கா மெச்சும் வகையில் நடவடிக்கையை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் உலா வந்த ஏராளமான பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டியுள்ளது. இது, பாகிஸ்தானின் ஒத்துழைப்பு இல்லாமல் நிச்சயம் சாத்தியமாயிருக்காது.
இந்தத் தருணம் இரு நாடுகளுக்குமே முக்கியமானது. பாகிஸ்தானுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே விரிசல் உருவாகக் கூடாது என்றே அமெரிக்கா விரும்புகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிராக கடந்த காலத்தைவிட வருங்காலத்தில்தான் நிறைய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம். பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் பயங்கரவாதமே முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது. அல்லது அல்-காய்தா அழிக்கப்பட்டுவிட்டதாகவும் நினைக்க முடியாது. பின்லேடன் வீழ்த்தப்பட்டதன் மூலம் அல்-காய்தா பயங்கரவாதிகளை ஒடுக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வளவுதான். குறைந்தபட்சம் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் வேரூன்றியுள்ள அல்-காய்தா அமைப்பை அடியோடு அழிக்க முயற்சிக்க வேண்டும்.
பின்லேடனை கொன்றது மிகப் பெரிய வெற்றிதான் என்பதையும் மறுக்க முடியாது. அவரைக் கொல்ல அமெரிக்க கமாண்டோ வீரர்களின் 40 நிமிடப் போராட்டம் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டது. பின்லேடனை தீர்த்துக்கட்ட கமாண்டோ வீரர்கள் போராடிய போது எனக்குப் பதற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அடுத்து என்ன நடக்குமோ, அடுத்து என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சி கேள்வி என்னுள் எழுந்த வண்ணம் இருந்தது. அந்த 40 நிமிடமே என் வாழ்வின் நீண்ட 40 நிமிடம் என்றார் ஒபாமா.
ஒபாமா பாகிஸ்தான் செல்ல மாட்டார்-அமெரிக்கா: இப்போதைய சூழலில் அதிபர் ஒபாமா பாகிஸ்தான் செல்ல வாய்ப்பில்லை என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த ஆண்டு பாகிஸ்தான் செல்லுவார் என்று கூறப்பட்டது. இதை பாகிஸ்தான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில் பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் இருந்தது அம்பலமானதால் இரு நாடுகளின உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு செல்ல ஒபாமா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் பின்லேடன் விவகாரத்தையும், ஒபாமா பயண ரத்தையும் அமெரிக்கா தொடர்புபடுத்தவில்லை. சூழலையே காரணம் காட்டியுள்ளது.

பின்லேடனுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் உதவினரா? விசாரணை தேவை-ஒபாமா

வாஷிங்டன், மே 9: அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு உதவிய பாகிஸ்தான் அதிகாரிகள் யார்? விசாரணை நடத்தி அவர்களை கண்டுபிடித்துக் கூறுங்கள் என்று பாகிஸ்தானை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தை பாகிஸ்தான் விசாரிக்கிறது என்று விட்டுவிடமாட்டோம். உண்மை தெரியும்வரை நாங்களும் விசாரிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டைக் கோபுரத்தை தகர்த்த பின்லேடன் கொல்லப்பட்டதால் அமெரிக்காவே பூரிப்பில் உள்ளது. அதிபர் ஒபாமாவுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து ஒபாமா திங்கள்கிழமை ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்தடவையாகப் பேட்டியளித்தார். இந்த பேட்டியின் போதுதான் பாகிஸ்தானில் ஆதரவு கிடைக்காமல் பின்லேடன் அங்கு வசித்திருக்க முடியாது என்று குற்றம்சுமத்தினார்.
மேலும் அவர் கூறியது: நாங்கள் வலைவீசித் தேடிவந்த பயங்கரவாதி பாகிஸ்தான் மண்ணில்தான் இருந்துள்ளார். அதுவும் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து குறைந்த தொலைவில் ராணுவ மையம் அருகிலேயே துணிச்சலாக வசித்து வந்துள்ளார். இது எப்படி சாத்தியம்? பாகிஸ்தானில் யாருடைய ஆதரவும், உதவியும் இல்லாமல் பின்லேடனால் அங்கு வசித்திருக்க முடியுமா? வாய்ப்பே இல்லை. அவருக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரிகளோ, அரசுக்கு வெளியில் உள்ளவர்களோ ஆதரவுக் கரம் நீட்டியிருக்க வேண்டும். அவருக்கு வேண்டிய உதவியை செய்திருக்க வேண்டும். அவருடைய அந்த நலவிரும்பிகள் யார் என்பது அமெரிக்காவுக்கு நிச்சயம் தெரிந்தாக வேண்டும்.
இந்த விஷயத்தை பாகிஸ்தான் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். இதுதான் அமெரிக்காவின் விருப்பம்.
பின்லேடன் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சூழலால் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு அளித்த ஒத்துழைப்பையும், உதவியையும் மறந்திட முடியாது. இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதில் இருந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்கு சிறந்தவகையில் ஒத்துழைப்பை நல்கி வருகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரானப் போரை பொறுத்தவரை பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்னதாகவே அமெரிக்கா மெச்சும் வகையில் நடவடிக்கையை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் உலா வந்த ஏராளமான பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டியுள்ளது. இது, பாகிஸ்தானின் ஒத்துழைப்பு இல்லாமல் நிச்சயம் சாத்தியமாயிருக்காது.
இந்தத் தருணம் இரு நாடுகளுக்குமே முக்கியமானது. பாகிஸ்தானுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே விரிசல் உருவாகக் கூடாது என்றே அமெரிக்கா விரும்புகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிராக கடந்த காலத்தைவிட வருங்காலத்தில்தான் நிறைய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம். பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் பயங்கரவாதமே முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது. அல்லது அல்-காய்தா அழிக்கப்பட்டுவிட்டதாகவும் நினைக்க முடியாது. பின்லேடன் வீழ்த்தப்பட்டதன் மூலம் அல்-காய்தா பயங்கரவாதிகளை ஒடுக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வளவுதான். குறைந்தபட்சம் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் வேரூன்றியுள்ள அல்-காய்தா அமைப்பை அடியோடு அழிக்க முயற்சிக்க வேண்டும்.
பின்லேடனை கொன்றது மிகப் பெரிய வெற்றிதான் என்பதையும் மறுக்க முடியாது. அவரைக் கொல்ல அமெரிக்க கமாண்டோ வீரர்களின் 40 நிமிடப் போராட்டம் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டது. பின்லேடனை தீர்த்துக்கட்ட கமாண்டோ வீரர்கள் போராடிய போது எனக்குப் பதற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அடுத்து என்ன நடக்குமோ, அடுத்து என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சி கேள்வி என்னுள் எழுந்த வண்ணம் இருந்தது. அந்த 40 நிமிடமே என் வாழ்வின் நீண்ட 40 நிமிடம் என்றார் ஒபாமா.
ஒபாமா பாகிஸ்தான் செல்ல மாட்டார்-அமெரிக்கா: இப்போதைய சூழலில் அதிபர் ஒபாமா பாகிஸ்தான் செல்ல வாய்ப்பில்லை என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த ஆண்டு பாகிஸ்தான் செல்லுவார் என்று கூறப்பட்டது. இதை பாகிஸ்தான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில் பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் இருந்தது அம்பலமானதால் இரு நாடுகளின உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு செல்ல ஒபாமா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் பின்லேடன் விவகாரத்தையும், ஒபாமா பயண ரத்தையும் அமெரிக்கா தொடர்புபடுத்தவில்லை. சூழலையே காரணம் காட்டியுள்ளது.

வாஷிங்டன், மே 5: பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில், ஒசாமா பின் லேடனைக் கொல்வதற்கு எவ்வித அறிவிப்பும் இன்றி அமெரிக்க கமாண்டோக்கள் நுழைந்ததைப் போல தேவைப்படும்போதெல்லாம் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். இத்தகவலை வெள்ளை மாளிகை ஊடக செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி உறுதி செய்தார்.
வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஜே கார்னி கூறியது: பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் பாகிஸ்தானில் எங்கிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இதைப் போன்ற அதிரடி நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். இதை அதிபர் பராக் ஒபாமா தெளிவுபட தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அபோட்டாபாத் நகரில் அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் மீது தாக்குதல் நடத்துவதற்காக கமாண்டோ வீரர்கள் அதிரடியாக நுழைந்தனர். பாகிஸ்தான் அரசிடம் தெரிவிக்காமல் அமெரிக்க கமாண்டோ வீரர்கள் நுழைந்தது, அந்நாட்டு இறையாண்மையை பாதிக்கும் விஷயம் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க அரசு தன்னிச்சையாக, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இத்தகைய நடவடிக்கையை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கேட்டதற்கு, ஒசாமா பின் லேடனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்றார் அவர்.
ஒருவேளை அமெரிக்காவிடம் அல் காய்தா தலைவர் பின் லேடன் சரணடைந்திருந்தால் அதை அமெரிக்கா ஏற்றிருக்குமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அபோட்டாபாத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் அடுத்தடுத்த நிகழ்வுகள் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இதன் தொடர் நடவடிக்கையாக ஒசாமாவை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதுவும் சட்டத்துக்கு உள்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைதான். நியூயார்க் நகரிலிருந்த இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பிரதான மூளையாக செயல்பட்ட அல்-காய்தா இயக்கத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. கமாண்டோக்கள் எதிர்கொண்ட சூழ்நிலையை இங்கிருந்தவாறு விளக்குவது சரியாக இருக்காது. மேலும் அவர்கள் சட்டத்திற்கு உள்பட்டுத்தான் செயல்பட்டுள்ளனர் என்றார். சதித் திட்டம் தீட்டி பல்லாயிரக்கணக்கானவர்கள் சாவுக்குக் காரணமானவருக்கு சரியான முடிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.
பின் லேடனின் வீட்டை சுற்றிவளைத்து இந்த தாக்குதலை வெற்றிகரமராக நிறைவேற்றியது மிகவும் துணிச்சலான அதேசமயம், அதிக ஆபத்து நிறைந்த பணியாகும். அதை தேர்ச்சி பெற்ற கமாண்டோக்கள் சரியாக செய்து முடித்தனர். போர் விதிமுறைகள்படிதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கை சட்ட விதிமீறல் என்று கூற முடியாது. அல்-காய்தா தீவிரவாத இயக்கம் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. இத்தகைய பயங்கரவாத செயலை செய்த அமைப்புக்கு இத்தகைய தண்டனைதான் சிறந்த தீர்ப்பு. மேலும் அமெரிக்காவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்துள்ளார் பின் லேடன். அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பொதுமக்கள் உயிரிழப்பு முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க வீரர்களின் உயிரையும் பணயம் வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் முழுக்க முழுக்க போர் சட்டங்களுக்கு உள்பட்டுத்தான் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பின் லேடன் சரணைடைந்திருந்தால், அதற்குரிய சூழல் இருப்பின் அது ஏற்கப்பட்டிருக்கும் என்றார் ஜே கார்னி.
பின் லேடன் மரணத்துடன்,
அல் - காய்தா இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கை முற்றுப் பெறவில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சுட்டிக் காட்டியுள்ளார்.

"பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை தொடரும்': பராக் ஒபாமா

வாஷிங்டன், மே 5: பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில், ஒசாமா பின் லேடனைக் கொல்வதற்கு எவ்வித அறிவிப்பும் இன்றி அமெரிக்க கமாண்டோக்கள் நுழைந்ததைப் போல தேவைப்படும்போதெல்லாம் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். இத்தகவலை வெள்ளை மாளிகை ஊடக செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி உறுதி செய்தார்.
வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஜே கார்னி கூறியது: பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் பாகிஸ்தானில் எங்கிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இதைப் போன்ற அதிரடி நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். இதை அதிபர் பராக் ஒபாமா தெளிவுபட தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அபோட்டாபாத் நகரில் அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் மீது தாக்குதல் நடத்துவதற்காக கமாண்டோ வீரர்கள் அதிரடியாக நுழைந்தனர். பாகிஸ்தான் அரசிடம் தெரிவிக்காமல் அமெரிக்க கமாண்டோ வீரர்கள் நுழைந்தது, அந்நாட்டு இறையாண்மையை பாதிக்கும் விஷயம் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க அரசு தன்னிச்சையாக, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இத்தகைய நடவடிக்கையை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கேட்டதற்கு, ஒசாமா பின் லேடனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்றார் அவர்.
ஒருவேளை அமெரிக்காவிடம் அல் காய்தா தலைவர் பின் லேடன் சரணடைந்திருந்தால் அதை அமெரிக்கா ஏற்றிருக்குமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அபோட்டாபாத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் அடுத்தடுத்த நிகழ்வுகள் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இதன் தொடர் நடவடிக்கையாக ஒசாமாவை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதுவும் சட்டத்துக்கு உள்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைதான். நியூயார்க் நகரிலிருந்த இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பிரதான மூளையாக செயல்பட்ட அல்-காய்தா இயக்கத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. கமாண்டோக்கள் எதிர்கொண்ட சூழ்நிலையை இங்கிருந்தவாறு விளக்குவது சரியாக இருக்காது. மேலும் அவர்கள் சட்டத்திற்கு உள்பட்டுத்தான் செயல்பட்டுள்ளனர் என்றார். சதித் திட்டம் தீட்டி பல்லாயிரக்கணக்கானவர்கள் சாவுக்குக் காரணமானவருக்கு சரியான முடிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.
பின் லேடனின் வீட்டை சுற்றிவளைத்து இந்த தாக்குதலை வெற்றிகரமராக நிறைவேற்றியது மிகவும் துணிச்சலான அதேசமயம், அதிக ஆபத்து நிறைந்த பணியாகும். அதை தேர்ச்சி பெற்ற கமாண்டோக்கள் சரியாக செய்து முடித்தனர். போர் விதிமுறைகள்படிதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கை சட்ட விதிமீறல் என்று கூற முடியாது. அல்-காய்தா தீவிரவாத இயக்கம் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. இத்தகைய பயங்கரவாத செயலை செய்த அமைப்புக்கு இத்தகைய தண்டனைதான் சிறந்த தீர்ப்பு. மேலும் அமெரிக்காவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்துள்ளார் பின் லேடன். அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பொதுமக்கள் உயிரிழப்பு முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க வீரர்களின் உயிரையும் பணயம் வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் முழுக்க முழுக்க போர் சட்டங்களுக்கு உள்பட்டுத்தான் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பின் லேடன் சரணைடைந்திருந்தால், அதற்குரிய சூழல் இருப்பின் அது ஏற்கப்பட்டிருக்கும் என்றார் ஜே கார்னி.
பின் லேடன் மரணத்துடன்,
அல் - காய்தா இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கை முற்றுப் பெறவில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சுட்டிக் காட்டியுள்ளார்.

வாஷிங்டன், மே 4: வாக்குறுதி அளித்தபடி வரிகளைக் குறைக்கவில்லை, வசதியைப் பெருக்கவில்லை, வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவில்லை, பொருளாதாரச் சரிவிலிருந்து நாட்டைக் காப்பாற்றவில்லை என்றெல்லாம் அதிபர் பராக் ஒபாமா மீது அதிருப்தியாக இருந்த அமெரிக்கர்கள், பின் லேடனைவெற்றிகரமாகக் கொன்றுவிட்டார் என்றதும் ஆதரவை அள்ளித்தர ஆரம்பித்துள்ளனர்.
இது நீடிக்குமா, அடுத்த முறையும் அதிபராக இது போதுமா என்றெல்லாம் இப்போது ஆராய வேண்டாம். இந்த நாளில் அவர் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை.
"யு.எஸ்.ஏ. டுடே' நடத்திய கருத்துக் கணிப்பின்படி பின் லேடனை அமெரிக்க ராணுவம் கொன்றது சரியான செயல் என்று 90% அமெரிக்கர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவைப் பொருத்தவரை இது மிக முக்கியமான நடவடிக்கை என்று 79% அமெரிக்கர்கள் கருதுகின்றனர். பின் லேடன் கொல்லப்பட்டதைத் தாங்கள் அங்கீகரிப்பதாக 93% அமெரிக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை எடுத்தபோது 2001 அக்டோபர் 7-ம் தேதி நடத்திய இதே போன்ற கருத்துக் கணிப்பின்போது 90% அமெரிக்கர்கள் அதை ஆதரித்தனர். 1991-ல் வளைகுடாப் போரில் அமெரிக்கா இறங்கியபோதும் 2003-ல் இராக் மீது படையெடுத்த போதும்கூட சுமார் 70% அமெரிக்கர்கள்தான் ஆதரவு தெரிவித்தனர். இந்த முறை இது 90%-க்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின் லேடனைக் கண்டுபிடித்துக் கொலை செய்ததில் முக்கியப் பங்கு அமெரிக்க ராணுவத்துக்கும் சி.ஏ.ஐ.வுக்கும்தான் அதிகம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது அதிபரைவிட அந்த இரு அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயத்தில் பெரும் பங்கு ஒபாமாவுக்குத்தான் என்கிறவர்கள் 35%தான். ஓரளவுக்கு அவருக்குப் பங்கு என்கிறவர்கள் 36%. அவருடைய
பங்கு அதிகம் இல்லை என்று கருதுகிறவர்கள் 25%.

ஒபாமாவுக்கு செல்வாக்கு அதிகரிப்பு!

வாஷிங்டன், மே 4: வாக்குறுதி அளித்தபடி வரிகளைக் குறைக்கவில்லை, வசதியைப் பெருக்கவில்லை, வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவில்லை, பொருளாதாரச் சரிவிலிருந்து நாட்டைக் காப்பாற்றவில்லை என்றெல்லாம் அதிபர் பராக் ஒபாமா மீது அதிருப்தியாக இருந்த அமெரிக்கர்கள், பின் லேடனைவெற்றிகரமாகக் கொன்றுவிட்டார் என்றதும் ஆதரவை அள்ளித்தர ஆரம்பித்துள்ளனர்.
இது நீடிக்குமா, அடுத்த முறையும் அதிபராக இது போதுமா என்றெல்லாம் இப்போது ஆராய வேண்டாம். இந்த நாளில் அவர் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை.
"யு.எஸ்.ஏ. டுடே' நடத்திய கருத்துக் கணிப்பின்படி பின் லேடனை அமெரிக்க ராணுவம் கொன்றது சரியான செயல் என்று 90% அமெரிக்கர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவைப் பொருத்தவரை இது மிக முக்கியமான நடவடிக்கை என்று 79% அமெரிக்கர்கள் கருதுகின்றனர். பின் லேடன் கொல்லப்பட்டதைத் தாங்கள் அங்கீகரிப்பதாக 93% அமெரிக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை எடுத்தபோது 2001 அக்டோபர் 7-ம் தேதி நடத்திய இதே போன்ற கருத்துக் கணிப்பின்போது 90% அமெரிக்கர்கள் அதை ஆதரித்தனர். 1991-ல் வளைகுடாப் போரில் அமெரிக்கா இறங்கியபோதும் 2003-ல் இராக் மீது படையெடுத்த போதும்கூட சுமார் 70% அமெரிக்கர்கள்தான் ஆதரவு தெரிவித்தனர். இந்த முறை இது 90%-க்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின் லேடனைக் கண்டுபிடித்துக் கொலை செய்ததில் முக்கியப் பங்கு அமெரிக்க ராணுவத்துக்கும் சி.ஏ.ஐ.வுக்கும்தான் அதிகம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது அதிபரைவிட அந்த இரு அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயத்தில் பெரும் பங்கு ஒபாமாவுக்குத்தான் என்கிறவர்கள் 35%தான். ஓரளவுக்கு அவருக்குப் பங்கு என்கிறவர்கள் 36%. அவருடைய
பங்கு அதிகம் இல்லை என்று கருதுகிறவர்கள் 25%.

வாஷிங்டன்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதை வீடியோ மூலம் நேரடியாக பார்த்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அவர் மட்டுமல்லாமல் ஹில்லாரி கிளிண்டன் உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் இந்தக் காட்சியை நேரில் பார்த்துள்ளனர்.

ஒபாமா, ஹில்லாரி தவிர துணை அதிபர் ஜோ பிடனும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

வெள்ளை மாளிகையின் நெருக்கடி கால அறையில் அமர்ந்தபடி இந்த வீடியோக் காட்சிகளை அவர்கள் பார்த்துள்ளனர். பின்லேடனை சுட்டு வீழ்த்திய வீரர்களில் ஒருவரது ஹெல்மட்டில் பதித்து வைக்கப்பட்டிருந்த வீடியோ காமரா மூலம் இந்தக் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகி அதைத்தான் ஒபாமா குழுவினர் பார்த்துள்ளனர்.

பின்லேடனை இடது கண்ணில் அமெரிக்க வீரர் சுட்டுத் தள்ளியதை நேரில் பார்த்துள்ளார் ஒபாமா. அவ்வாறு சுட்டதும் பின்லேடன் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அந்த வீரர் மீண்டும் பின்லேடனின் இடதுபுற நெஞ்சில் சுட்டு மரணத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த வீடியோவில், பின்லேடனை அவரது மனைவி காப்பாற்ற முயற்சித்து பின்லேடனுக்கு முன்னால் வந்து நிற்பது போன்ற காட்சியும் இருப்பதாக தெரிகிறது.

ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பின்லேடன் பாதுகாவலர்கள்:

ஆப்கானிஸ்தானில் இருந்து 4 ஹெலிகாப்டர்களில் சென்ற அமெரிக்கக் கடற்படை சீல்கள் பிரிவைச் (Navy Seal Team-6) சேர்ந்த கமாண்டோக்கள் தான் இந்த ஆபரேசனை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆனால், இந்த 4 ஹெலிகாப்டர்கள் தவிர மேலும் ஏராளமான போர் விமானங்களும், கனரக ஆயுதம் ஏந்திச் செல்லும் சரக்கு விமானங்களும், மேலும் ஏராளமான வீரர்களைக் கொண்ட சி-15 ரக விமானங்களும், ஆளில்லா உளவு விமானங்களும், ராக்கெட்களை வீசக் கூடிய AC-13 ரக ஹெலிகாப்டர்களும், CH-47, UH-60 ரக ஹெலிகாப்டகள் பலவும் இந்தத் தாக்குதலில் பங்கேற்றிருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது.

சீல்கள் வந்த நான்கு CH-47 ஹெலிகாப்டர்களில் ஒன்றை பின்லேடனின் பாதுகாவலர்கள் சுட்டு வீழ்த்தியதும் உறுதியாகியுள்ளது. ஆனால், அது எந்திரக் கோளாரால் செயலிழந்ததால் தாங்களே அதை குண்டுவீசி அழித்துவிட்டதாகவும், அமெரிக்கத் தரப்பில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்றும் அதிபர் ஒபாமா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் சில அமெரிக்க வீரர்கள் காயமோ அல்லது உயிரிழந்திருக்கவோ வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலை 7,000 கி.மீ. தொலைவில் இருந்தபடி ஒபாமாவும் அவரது டீமும் நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை வீடியோ மூலம் நேரடியாகப் பார்த்த ஒபாமா!

வாஷிங்டன்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதை வீடியோ மூலம் நேரடியாக பார்த்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அவர் மட்டுமல்லாமல் ஹில்லாரி கிளிண்டன் உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் இந்தக் காட்சியை நேரில் பார்த்துள்ளனர்.

ஒபாமா, ஹில்லாரி தவிர துணை அதிபர் ஜோ பிடனும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

வெள்ளை மாளிகையின் நெருக்கடி கால அறையில் அமர்ந்தபடி இந்த வீடியோக் காட்சிகளை அவர்கள் பார்த்துள்ளனர். பின்லேடனை சுட்டு வீழ்த்திய வீரர்களில் ஒருவரது ஹெல்மட்டில் பதித்து வைக்கப்பட்டிருந்த வீடியோ காமரா மூலம் இந்தக் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகி அதைத்தான் ஒபாமா குழுவினர் பார்த்துள்ளனர்.

பின்லேடனை இடது கண்ணில் அமெரிக்க வீரர் சுட்டுத் தள்ளியதை நேரில் பார்த்துள்ளார் ஒபாமா. அவ்வாறு சுட்டதும் பின்லேடன் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அந்த வீரர் மீண்டும் பின்லேடனின் இடதுபுற நெஞ்சில் சுட்டு மரணத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த வீடியோவில், பின்லேடனை அவரது மனைவி காப்பாற்ற முயற்சித்து பின்லேடனுக்கு முன்னால் வந்து நிற்பது போன்ற காட்சியும் இருப்பதாக தெரிகிறது.

ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பின்லேடன் பாதுகாவலர்கள்:

ஆப்கானிஸ்தானில் இருந்து 4 ஹெலிகாப்டர்களில் சென்ற அமெரிக்கக் கடற்படை சீல்கள் பிரிவைச் (Navy Seal Team-6) சேர்ந்த கமாண்டோக்கள் தான் இந்த ஆபரேசனை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆனால், இந்த 4 ஹெலிகாப்டர்கள் தவிர மேலும் ஏராளமான போர் விமானங்களும், கனரக ஆயுதம் ஏந்திச் செல்லும் சரக்கு விமானங்களும், மேலும் ஏராளமான வீரர்களைக் கொண்ட சி-15 ரக விமானங்களும், ஆளில்லா உளவு விமானங்களும், ராக்கெட்களை வீசக் கூடிய AC-13 ரக ஹெலிகாப்டர்களும், CH-47, UH-60 ரக ஹெலிகாப்டகள் பலவும் இந்தத் தாக்குதலில் பங்கேற்றிருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது.

சீல்கள் வந்த நான்கு CH-47 ஹெலிகாப்டர்களில் ஒன்றை பின்லேடனின் பாதுகாவலர்கள் சுட்டு வீழ்த்தியதும் உறுதியாகியுள்ளது. ஆனால், அது எந்திரக் கோளாரால் செயலிழந்ததால் தாங்களே அதை குண்டுவீசி அழித்துவிட்டதாகவும், அமெரிக்கத் தரப்பில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்றும் அதிபர் ஒபாமா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் சில அமெரிக்க வீரர்கள் காயமோ அல்லது உயிரிழந்திருக்கவோ வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலை 7,000 கி.மீ. தொலைவில் இருந்தபடி ஒபாமாவும் அவரது டீமும் நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.

சென்னை: மும்பையில் நடக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கள் நாட்டு அணியின் வெற்றிக்கு பிரார்த்தனை செய்கிறார். இதற்காக சென்னை வந்து அங்கிருந்து கார் மூலம் அவர் திருப்பதி செல்கிறார்.

ஈழத்தில் நடந்த கொலை வெறியாட்டத்திற்குப் பின்னர் இந்தியாவுக்கு பலமுறை வந்துள்ள ராஜபக்சே இதுவரை சென்னை வந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக தமிழக மண்ணில் அவர் காலடி எடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய, இலங்கை அணிகள் மோதம் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதைக் காண இலங்கை அதிபர் ராஜகபக்சே இந்தியா வருகிறார்.

போட்டிக்கு முன் திருப்பதி கோயிலுக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். அவர் இன்று தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அங்கிருந்து காரில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்கிறார். அங்கு அவர் 1 மணி நேரம் செலவிடுகிறார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார்.

இன்று இரவு திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பிரமாண்ட விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு நாளை காலை மும்பைக்கு புறப்படுகிறார்.

ராஜபக்சே திருப்பதி கோயிலுக்கு வருவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ரவீந்தர் கூறியதாவது,

இலங்கை அதிபருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்குமாறு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பாதுகபாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் வருகையில் பாதுகாப்பு வளையம் அமைத்து அவரை பத்திரமாக அழைத்துச் செல்வோம் என்றார்.

ராஜபக்சேவின் வருகையையொட்டி நேற்று தேவஸ்தான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் ராஜபக்சேவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, சாமியின் அனைத்து பிரசாதங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

இலங்கை வெல்ல திருப்பதியில் ராஜபக்சே வழிபாடு-சென்னையில் இறங்கி போகிறார்

சென்னை: மும்பையில் நடக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கள் நாட்டு அணியின் வெற்றிக்கு பிரார்த்தனை செய்கிறார். இதற்காக சென்னை வந்து அங்கிருந்து கார் மூலம் அவர் திருப்பதி செல்கிறார்.

ஈழத்தில் நடந்த கொலை வெறியாட்டத்திற்குப் பின்னர் இந்தியாவுக்கு பலமுறை வந்துள்ள ராஜபக்சே இதுவரை சென்னை வந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக தமிழக மண்ணில் அவர் காலடி எடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய, இலங்கை அணிகள் மோதம் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதைக் காண இலங்கை அதிபர் ராஜகபக்சே இந்தியா வருகிறார்.

போட்டிக்கு முன் திருப்பதி கோயிலுக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். அவர் இன்று தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அங்கிருந்து காரில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்கிறார். அங்கு அவர் 1 மணி நேரம் செலவிடுகிறார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார்.

இன்று இரவு திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பிரமாண்ட விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு நாளை காலை மும்பைக்கு புறப்படுகிறார்.

ராஜபக்சே திருப்பதி கோயிலுக்கு வருவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ரவீந்தர் கூறியதாவது,

இலங்கை அதிபருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்குமாறு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பாதுகபாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் வருகையில் பாதுகாப்பு வளையம் அமைத்து அவரை பத்திரமாக அழைத்துச் செல்வோம் என்றார்.

ராஜபக்சேவின் வருகையையொட்டி நேற்று தேவஸ்தான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் ராஜபக்சேவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, சாமியின் அனைத்து பிரசாதங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

மும்பை: மும்பையில் வரும் சனிக்கிழமை நடைபெறும் இந்தியா-இலங்கை இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார்.

மொகாலியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த அரையிறுதிப் போட்டியைக் காண பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். இதையடுத்து கிலானி நேற்று மொகாலி வந்து போட்டியை மன்மோகனுடன் இணைந்து ரசித்தார்.

மேலும் இரு தலைவர்களும் சிறிது நேரம், இரு நாட்டு விவகாரங்கள் குறித்தும் பேசினர். கிலானிக்கு மன்மோகன் சிறப்பு விருந்தும் அளித்தார்.

இந் நிலையில் இந்தியாவுடன் தனது நாட்டு அணி இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதையடுத்து இதைக் காண மும்பை வர முடிவு செய்துள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே. இதற்கான அனுமதியையும் தன்னுடன் வரும் 30 பேருக்கு சிறப்பு இருக்கைகளையும் கோரியுள்ளார் ராஜபக்சே.

அதே போல வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனாவையும் போட்டியைக் காண வருமாறு இந்தியா அழைத்துள்ளது.
Read: In English
இவர்களது வருகையையொட்டி மும்பையில் கூடுதல் பாதுகாப்பு போடப்படவுள்ளது.

இந் நிலையில் இறுதிப் போட்டியைக் காண ஏராளமான இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மும்பைக்கு படை எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அந் நாட்டு விமானத்துறை மும்பைக்கு கூடுதல் விமானங்களை இயக்கவுள்ளது.

இந்தியா-இலங்கை இறுதிப் போட்டியை காண மும்பை வரும் ராஜபக்சே!

மும்பை: மும்பையில் வரும் சனிக்கிழமை நடைபெறும் இந்தியா-இலங்கை இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார்.

மொகாலியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த அரையிறுதிப் போட்டியைக் காண பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். இதையடுத்து கிலானி நேற்று மொகாலி வந்து போட்டியை மன்மோகனுடன் இணைந்து ரசித்தார்.

மேலும் இரு தலைவர்களும் சிறிது நேரம், இரு நாட்டு விவகாரங்கள் குறித்தும் பேசினர். கிலானிக்கு மன்மோகன் சிறப்பு விருந்தும் அளித்தார்.

இந் நிலையில் இந்தியாவுடன் தனது நாட்டு அணி இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதையடுத்து இதைக் காண மும்பை வர முடிவு செய்துள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே. இதற்கான அனுமதியையும் தன்னுடன் வரும் 30 பேருக்கு சிறப்பு இருக்கைகளையும் கோரியுள்ளார் ராஜபக்சே.

அதே போல வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனாவையும் போட்டியைக் காண வருமாறு இந்தியா அழைத்துள்ளது.
Read: In English
இவர்களது வருகையையொட்டி மும்பையில் கூடுதல் பாதுகாப்பு போடப்படவுள்ளது.

இந் நிலையில் இறுதிப் போட்டியைக் காண ஏராளமான இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மும்பைக்கு படை எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அந் நாட்டு விமானத்துறை மும்பைக்கு கூடுதல் விமானங்களை இயக்கவுள்ளது.

வாஷிங்டன்: "ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் மும்மர் கடாபியைகொல்லும் திட்டம் இல்லை. அவருக்கு எதிரான போரில், நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பார்லிமென்டில், லிபியா மீதான தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள்சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு அதிபர் ஒபாமா பதில் அளித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், "லிபியாவின் வான் பகுதி, நேட்டோ நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. 1973ம் ஆண்டின் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, லிபிய மக்களின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் நேட்டோ அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் கடாபியை கொல்லும் திட்டம் எதுவும் இல்லை; ஆட்சியை மாற்றும் திட்டம் தான் உள்ளது' என, ஒபாமா தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், லிபியா நிலைமை குறித்து, வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலைக் கழகத்தில், நாளை (திங்கள் கிழமை) அதிபர் ஒபாமா உரையாற்றுவார்' என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நேற்று ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு அளித்த பேட்டியில் அதிபர் ஒபாமா, "லிபியா ஆட்சியாளருக்கு எதிரான எங்களது போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். பெங்காசியில் கடாபியின் படை பின்வாங்கி யுள்ளது. லிபியாவுக்குள் ராணுவப் படையை நாங்கள் பயன்படுத்தவில்லை. எங்களுடன் இணைந்து விமான தாக்குதலில், அரபு நாடுகளான கத்தார் மற்றும் யு.ஏ.ஈ., ஈடுபட்டுள்ளன. லிபியா மீதான தாக்குதல் பொறுப்பு, இந்த வார ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவிடம் இருந்து நேட்டோ அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. கடாபியின் கோடிக்கணக்கான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. லிபியா மக்களின் பயன்பாட்டிற்கு இது உதவும். கடாபியின் படைகள் பின் வாங்கி, மனிதாபிமான உதவிகளுக்கு வழி விட வேண்டும். வன்முறையில் ஈடுபடு பவர்கள், அதற்கான பலனை அனுபவிப்பர். கடாபி ரத்தத்தில் குளிக்கப் போவதாக மிரட்டுகிறார். இது, அந்த மண்டலம் முழுவதையும் பாதிக்கும். இதை தடுக்க, சர்வதேச சமுதாயம் முன் வரும் போது நாங்களும் பங்கேற்க வேண்டும். அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எங்களுடைய கடமை' என்றார்.


இதுகுறித்து பென்டகன் அதிகாரி பில் கோர்ட்னி கூறுகையில், "லிபியாவில் தொடர்ந்து கடாபியின் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது விமானப் படை விமானங்கள் வானில் பறக்க முடியாது. போர் கப்பல்கள் துறைமுகத்தில் நிற்கின்றன. ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன. தகவல்தொடர்பு சாதனங்கள் செயலிழக்கப்பட்டன. ஆனாலும், நிலத்தில் இருந்து இயக்கப்படும் பீரங்கிகள் மூலம் விமானத்தை நோக்கி தாக்குதல் நடத்திவருகின்றனர். இது இன்னும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. டிரிபோலி, செபாவில் நேட்டோ படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தின. பெங்காசி நகரம் கிளர்ச்சியாளர்களின் கையில் உள்ளது. அஜ்தாபையாவில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதேபோல், மிசுரட்டா, ஜிந்தன் ஆகிய இடங்களில் அப்பாவி மக்கள்மீது, கடாபி யின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்' என்றார்.

கடாபியை கொல்லும் திட்டம் இல்லை: அமெரிக்க அதிபர் ஒபாமா விளக்கம்

வாஷிங்டன்: "ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் மும்மர் கடாபியைகொல்லும் திட்டம் இல்லை. அவருக்கு எதிரான போரில், நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பார்லிமென்டில், லிபியா மீதான தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள்சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு அதிபர் ஒபாமா பதில் அளித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், "லிபியாவின் வான் பகுதி, நேட்டோ நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. 1973ம் ஆண்டின் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, லிபிய மக்களின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் நேட்டோ அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் கடாபியை கொல்லும் திட்டம் எதுவும் இல்லை; ஆட்சியை மாற்றும் திட்டம் தான் உள்ளது' என, ஒபாமா தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், லிபியா நிலைமை குறித்து, வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலைக் கழகத்தில், நாளை (திங்கள் கிழமை) அதிபர் ஒபாமா உரையாற்றுவார்' என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நேற்று ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு அளித்த பேட்டியில் அதிபர் ஒபாமா, "லிபியா ஆட்சியாளருக்கு எதிரான எங்களது போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். பெங்காசியில் கடாபியின் படை பின்வாங்கி யுள்ளது. லிபியாவுக்குள் ராணுவப் படையை நாங்கள் பயன்படுத்தவில்லை. எங்களுடன் இணைந்து விமான தாக்குதலில், அரபு நாடுகளான கத்தார் மற்றும் யு.ஏ.ஈ., ஈடுபட்டுள்ளன. லிபியா மீதான தாக்குதல் பொறுப்பு, இந்த வார ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவிடம் இருந்து நேட்டோ அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. கடாபியின் கோடிக்கணக்கான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. லிபியா மக்களின் பயன்பாட்டிற்கு இது உதவும். கடாபியின் படைகள் பின் வாங்கி, மனிதாபிமான உதவிகளுக்கு வழி விட வேண்டும். வன்முறையில் ஈடுபடு பவர்கள், அதற்கான பலனை அனுபவிப்பர். கடாபி ரத்தத்தில் குளிக்கப் போவதாக மிரட்டுகிறார். இது, அந்த மண்டலம் முழுவதையும் பாதிக்கும். இதை தடுக்க, சர்வதேச சமுதாயம் முன் வரும் போது நாங்களும் பங்கேற்க வேண்டும். அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எங்களுடைய கடமை' என்றார்.


இதுகுறித்து பென்டகன் அதிகாரி பில் கோர்ட்னி கூறுகையில், "லிபியாவில் தொடர்ந்து கடாபியின் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது விமானப் படை விமானங்கள் வானில் பறக்க முடியாது. போர் கப்பல்கள் துறைமுகத்தில் நிற்கின்றன. ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன. தகவல்தொடர்பு சாதனங்கள் செயலிழக்கப்பட்டன. ஆனாலும், நிலத்தில் இருந்து இயக்கப்படும் பீரங்கிகள் மூலம் விமானத்தை நோக்கி தாக்குதல் நடத்திவருகின்றனர். இது இன்னும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. டிரிபோலி, செபாவில் நேட்டோ படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தின. பெங்காசி நகரம் கிளர்ச்சியாளர்களின் கையில் உள்ளது. அஜ்தாபையாவில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதேபோல், மிசுரட்டா, ஜிந்தன் ஆகிய இடங்களில் அப்பாவி மக்கள்மீது, கடாபி யின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்' என்றார்.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் தலிபான் தீவிரவாதிகளை குண்டு வீசி தாக்கி அழித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று கந்தகாரின் தென் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே, அமெரிக்க ராணுவத்தினர் அப்பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். அப்போது, அக்குண்டு தவறுதலாக அதிபர் கர்சாயின் உறவினர் மொகமது கர்சாய் (65) என்பவரது வீட்டின் மீது விழுந்தது.

இதனால் அவர் பரிதாபமாக இறந்தார். குண்டுவீச்சில் அவரதுவீடு இடிந்து தரைமட்டமானது. மேலும், தீவிரவாதி என நினைத்து அவரது மகனும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த தகவலை அதிபர் கர்சாயின் சகோதரர்கள் அக்மத் வாலி கர்சாய் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தலிபான்களின் செய்தி தொடர்பாளர் குவாரி யூசுப் அக்மதி கருத்து தெரிவித்துள்ளார். “அமெரிக்கர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்ல. அவர்கள் தலிபான்களை கொன்று வருகின்றனர். அவர்களுக்கு உதவி புரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் கொலை செய்வோம்“ என தெரிவித்துள்ளார்.

தவறாக நடந்த தாக்குதல்: ஆப்கன். அதிபரின் உறவினர் பலி

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் தலிபான் தீவிரவாதிகளை குண்டு வீசி தாக்கி அழித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று கந்தகாரின் தென் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே, அமெரிக்க ராணுவத்தினர் அப்பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். அப்போது, அக்குண்டு தவறுதலாக அதிபர் கர்சாயின் உறவினர் மொகமது கர்சாய் (65) என்பவரது வீட்டின் மீது விழுந்தது.

இதனால் அவர் பரிதாபமாக இறந்தார். குண்டுவீச்சில் அவரதுவீடு இடிந்து தரைமட்டமானது. மேலும், தீவிரவாதி என நினைத்து அவரது மகனும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த தகவலை அதிபர் கர்சாயின் சகோதரர்கள் அக்மத் வாலி கர்சாய் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தலிபான்களின் செய்தி தொடர்பாளர் குவாரி யூசுப் அக்மதி கருத்து தெரிவித்துள்ளார். “அமெரிக்கர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்ல. அவர்கள் தலிபான்களை கொன்று வருகின்றனர். அவர்களுக்கு உதவி புரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் கொலை செய்வோம்“ என தெரிவித்துள்ளார்.


விக்கிலீக் அதிபர் அசாங்கேவுக்கு
 
காதலிகள் மூலம் 4 குழந்தைகள்விக்கிலீக் இணையதள நிறுவனத்தின் அதிபர் ஜுலியன் அசாங்கே(39). இவரது இணையதளத்தில் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களும், தூதரகங்களின் ரகசிய ஆவணங்களும் வெளியிடப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


இந்த நிலையில் சூடானில் 2 பெண்களை இவர் கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் மீது கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜுலியன் அசாங்கே குறித்து அவரது இணைய தளத்தில் பணிபுரிந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் டேனியல் டொம்ஸ்சிட்-பெர்க் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் அசாங்கேவுக்கு உலகம் முழுவதும் காதலிகள் உள்ளனர். அவர்கள் மூலம் அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ள அசாங்கேவை தங்கள் நாட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த சுவீடன் விரும்புகிறது. அதற்கான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை லண்டனில் உள்ள பெல் மார்ஷ் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 3 நாட்களாக நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 24-ந் தேதி அறிவிப்பதாக மாஜிஸ்திரேட்டு தெரிவித்துள்ளார்.

விக்கிலீக் அதிபர் அசாங்கேவுக்கு காதலிகள் மூலம் 4 குழந்தைகள்


விக்கிலீக் அதிபர் அசாங்கேவுக்கு
 
காதலிகள் மூலம் 4 குழந்தைகள்விக்கிலீக் இணையதள நிறுவனத்தின் அதிபர் ஜுலியன் அசாங்கே(39). இவரது இணையதளத்தில் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களும், தூதரகங்களின் ரகசிய ஆவணங்களும் வெளியிடப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


இந்த நிலையில் சூடானில் 2 பெண்களை இவர் கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் மீது கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜுலியன் அசாங்கே குறித்து அவரது இணைய தளத்தில் பணிபுரிந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் டேனியல் டொம்ஸ்சிட்-பெர்க் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் அசாங்கேவுக்கு உலகம் முழுவதும் காதலிகள் உள்ளனர். அவர்கள் மூலம் அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ள அசாங்கேவை தங்கள் நாட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த சுவீடன் விரும்புகிறது. அதற்கான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை லண்டனில் உள்ள பெல் மார்ஷ் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 3 நாட்களாக நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 24-ந் தேதி அறிவிப்பதாக மாஜிஸ்திரேட்டு தெரிவித்துள்ளார்.

முக நூல்

Popular Posts