background img

புதிய வரவு

Showing posts with label Bavani. Show all posts
Showing posts with label Bavani. Show all posts
பவானி படம் தொடர்பான பிரஸ்மீட்டுக்கு வந்த நடிகை சினேகாவை ஜப்பான் சுனாமி உலுக்கியது. இதனால் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் பேட்டியை தொடங்கினார். பிரஸ்மீட் ஆரம்பிப்பதற்கு முன், நிகழ்ச்சி ஏற்பாட்டளரை அழைத்த சினேகா, ஜப்பான் மக்களின் துயரத்திற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன்படியே செய்யப்பட்டது. பின்னர் பேசிய சினேகா, பாவானி பட சூட்டிங்கின்போது எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை விலாவரியாக விளக்கினார்.

க்ளைமாக்ஸ் பேட்டியில், இந்த படம் சொல்ல முடியாத சில காரணங்களால் ஒரு வாரம் தள்ளிப் போனது. ஆனால் தியேட்டர்காரர்கள் அந்த ஒரு வாரம் பவானிக்காக காத்திருந்து ரிலீஸ் செய்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் வேறு புதிய படத்தை தியேட்டரில் திரையிட்டிருக்க முடியும். பவானிக்காக காத்திருந்த அவர்களுக்கு நன்றி, என்று கூறி நன்றிகடன் செலுத்தினார் சினேகா.

இதற்கிடையில் பாவானி படத்தால 8 கோடி நஷ்டம் ஆயிடுச்சின்னு டைரக்டர் கிச்சா ஒரு கணக்கு சொல்லி கோடம்பாக்கத்தையே உலுக்கியெடுத்து வருகிறார். படத்தோட பட்ஜெட்டே 2.5 கோடிதானே... அப்புறம் எப்படி 8 கோடி நஷ்டம்? என்று கேள்வி கேட்பவர்களிடம் வினோத விளக்கமொன்றையும் கொடுக்கிறார் கிச்சா. பவானி படத்தை எடுக்கும் முன் கிச்சா எடுத்த தீ உள்ளிட்ட இரு படங்களால் ஏகத்துக்கு நஷ்டம். இந்த நஷ்ட கணக்கோடுதான் பவானி படத்தை எடுத்தார். இப்படி எல்லா கணக்கையும் சேர்த்துத்தான் ரூ.8 கோடி கணக்கு காட்டி கோடம்பாக்கத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் டைரக்டர் கிச்சா.

இந்த கணக்கு யாரை கோபமடைய வைக்குதோ இல்லீயோ... புன்னகை அரசியை நிச்சயமா கோபப்பட வைக்குதாம். இந்தப் படம் ஓரளவுக்கு ஓடினாலே போட்ட காசு வந்திடும். இவரோ அநியாயத்துக்கு 8 கோடி பத்து கோடி என ஏற்றிச் சொல்லி, நம்ம பேரை டேமேஜ் ஆக்கப் பார்க்கிறாரே என்று ‌வருத்தத்துடன் கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார் சினேகா.

பவானி பிரஸ்மீட்டில் சினேகாவை உலுக்கிய சுனாமி!

பவானி படம் தொடர்பான பிரஸ்மீட்டுக்கு வந்த நடிகை சினேகாவை ஜப்பான் சுனாமி உலுக்கியது. இதனால் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் பேட்டியை தொடங்கினார். பிரஸ்மீட் ஆரம்பிப்பதற்கு முன், நிகழ்ச்சி ஏற்பாட்டளரை அழைத்த சினேகா, ஜப்பான் மக்களின் துயரத்திற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன்படியே செய்யப்பட்டது. பின்னர் பேசிய சினேகா, பாவானி பட சூட்டிங்கின்போது எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை விலாவரியாக விளக்கினார்.

க்ளைமாக்ஸ் பேட்டியில், இந்த படம் சொல்ல முடியாத சில காரணங்களால் ஒரு வாரம் தள்ளிப் போனது. ஆனால் தியேட்டர்காரர்கள் அந்த ஒரு வாரம் பவானிக்காக காத்திருந்து ரிலீஸ் செய்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் வேறு புதிய படத்தை தியேட்டரில் திரையிட்டிருக்க முடியும். பவானிக்காக காத்திருந்த அவர்களுக்கு நன்றி, என்று கூறி நன்றிகடன் செலுத்தினார் சினேகா.

இதற்கிடையில் பாவானி படத்தால 8 கோடி நஷ்டம் ஆயிடுச்சின்னு டைரக்டர் கிச்சா ஒரு கணக்கு சொல்லி கோடம்பாக்கத்தையே உலுக்கியெடுத்து வருகிறார். படத்தோட பட்ஜெட்டே 2.5 கோடிதானே... அப்புறம் எப்படி 8 கோடி நஷ்டம்? என்று கேள்வி கேட்பவர்களிடம் வினோத விளக்கமொன்றையும் கொடுக்கிறார் கிச்சா. பவானி படத்தை எடுக்கும் முன் கிச்சா எடுத்த தீ உள்ளிட்ட இரு படங்களால் ஏகத்துக்கு நஷ்டம். இந்த நஷ்ட கணக்கோடுதான் பவானி படத்தை எடுத்தார். இப்படி எல்லா கணக்கையும் சேர்த்துத்தான் ரூ.8 கோடி கணக்கு காட்டி கோடம்பாக்கத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் டைரக்டர் கிச்சா.

இந்த கணக்கு யாரை கோபமடைய வைக்குதோ இல்லீயோ... புன்னகை அரசியை நிச்சயமா கோபப்பட வைக்குதாம். இந்தப் படம் ஓரளவுக்கு ஓடினாலே போட்ட காசு வந்திடும். இவரோ அநியாயத்துக்கு 8 கோடி பத்து கோடி என ஏற்றிச் சொல்லி, நம்ம பேரை டேமேஜ் ஆக்கப் பார்க்கிறாரே என்று ‌வருத்தத்துடன் கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார் சினேகா.

முக நூல்

Popular Posts