background img

புதிய வரவு

Showing posts with label ECONOMY. Show all posts
Showing posts with label ECONOMY. Show all posts
 Microsoft Buy Yammer 1 2 Billion
சமூக வலைத்தளமான யாமர் (Yammer) நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 6,000 கோடிக்கு (1.2 பில்லியன் டாலர்) வாங்கவுள்ளது. இதன்மூலம் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள சேவையை மைக்ரோசாப்ட் வழங்க முடியும்.
வெளியுலகில் மட்டுமின்றி நிறுவனங்களுக்குள்ளான சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமானது யாமர். ஒரு நிறுவனம் தனது பணியாளர்களை மட்டும் கொண்ட சமூக வலைத்தளத்தை உருவாக்கிக் கொள்ள யாமர் உதவுகிறது.
4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட யாமர் வலைத்தளத்தை 50 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையகமாகக் கொண்ட யாமர் நிறுவனத்தில் 400 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கினாலும் அதன் தலைமை செயல் அதிகாரியாக கர்ட் டெல்பென் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்பு பேபால் நிறுவன அதிகாரியாக இருந்தவர் ஆவார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்போது ஷேர் பாயிண்ட் என்ற அப்ளிகேஷனை வழங்கி வருகிறது. இது நிறுவனங்களுக்குள் சமூக வலைத்தளத்தை உருவாக்க உதவும் அப்ளிகேஷனாகும். ஆனால், இதில் யாமர் அளவுக்கு வசதிகள் இல்லை.
இப்போது யாமரை வாங்கியுள்ளதன் மூலம் சமூக வலைத்தள உலகில் மைக்ரோசாப்ட் வலுவாக காலூன்ற முயல்கிறது.
மேலும் பேஸ்புக் போல யாமர் விளம்பரங்களை நம்பியில்லை. கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் இணையத்தளமாகும் (மிக அடிப்படையான சேவைகள் இலவசமாக தரப்பட்டாலும்).
ஒவ்வொரு யாமர் பயனீட்டாளருக்கும் 240 டாலர் என்று கணக்கிட்டு 50 லட்சம் பேருக்கு ரூ. 6,000 கோடியைத் தந்து இதை வாங்கவுள்ளது மைக்ரோசாப்ட்.
கடந்த ஆண்டு ஆன்லைன் சேட் நிறுவனமான ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் ரூ. 42,000 கோடிக்கு மைக்ரோசாப்ட் வாங்கியது. தனது அடுத்த ஆபிஸ் வெர்சனில் ஸ்கைப்பை சேர்க்கவுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் இமெயில், எக்ஸெல் ஸ்பிரட் ஷீட்கள், பவர் பாயிண்ட் உள்ளிட்ட எம்எஸ் ஆபிஸ் சேவைகள் மூலம் அந்த நிறுவனத்துக்கு 60 சதவீத லாபம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதன் முக்கியமான விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் 40 சதவீதமே.

யாமர் சமூக வலைத்தளத்தை ரூ. 6,000 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாப்ட்!

 Microsoft Buy Yammer 1 2 Billion
சமூக வலைத்தளமான யாமர் (Yammer) நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 6,000 கோடிக்கு (1.2 பில்லியன் டாலர்) வாங்கவுள்ளது. இதன்மூலம் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள சேவையை மைக்ரோசாப்ட் வழங்க முடியும்.
வெளியுலகில் மட்டுமின்றி நிறுவனங்களுக்குள்ளான சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமானது யாமர். ஒரு நிறுவனம் தனது பணியாளர்களை மட்டும் கொண்ட சமூக வலைத்தளத்தை உருவாக்கிக் கொள்ள யாமர் உதவுகிறது.
4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட யாமர் வலைத்தளத்தை 50 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையகமாகக் கொண்ட யாமர் நிறுவனத்தில் 400 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கினாலும் அதன் தலைமை செயல் அதிகாரியாக கர்ட் டெல்பென் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்பு பேபால் நிறுவன அதிகாரியாக இருந்தவர் ஆவார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்போது ஷேர் பாயிண்ட் என்ற அப்ளிகேஷனை வழங்கி வருகிறது. இது நிறுவனங்களுக்குள் சமூக வலைத்தளத்தை உருவாக்க உதவும் அப்ளிகேஷனாகும். ஆனால், இதில் யாமர் அளவுக்கு வசதிகள் இல்லை.
இப்போது யாமரை வாங்கியுள்ளதன் மூலம் சமூக வலைத்தள உலகில் மைக்ரோசாப்ட் வலுவாக காலூன்ற முயல்கிறது.
மேலும் பேஸ்புக் போல யாமர் விளம்பரங்களை நம்பியில்லை. கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் இணையத்தளமாகும் (மிக அடிப்படையான சேவைகள் இலவசமாக தரப்பட்டாலும்).
ஒவ்வொரு யாமர் பயனீட்டாளருக்கும் 240 டாலர் என்று கணக்கிட்டு 50 லட்சம் பேருக்கு ரூ. 6,000 கோடியைத் தந்து இதை வாங்கவுள்ளது மைக்ரோசாப்ட்.
கடந்த ஆண்டு ஆன்லைன் சேட் நிறுவனமான ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் ரூ. 42,000 கோடிக்கு மைக்ரோசாப்ட் வாங்கியது. தனது அடுத்த ஆபிஸ் வெர்சனில் ஸ்கைப்பை சேர்க்கவுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் இமெயில், எக்ஸெல் ஸ்பிரட் ஷீட்கள், பவர் பாயிண்ட் உள்ளிட்ட எம்எஸ் ஆபிஸ் சேவைகள் மூலம் அந்த நிறுவனத்துக்கு 60 சதவீத லாபம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதன் முக்கியமான விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் 40 சதவீதமே.

தமிழகத்தில் புதிய வாகன தயாரிப்பு ஆலை கட்டுவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, மஹிந்திரா குழுமத் துணைத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தலைமையிலான குழு முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா தனது வர்த்தக விரிவாக்கப் பணிகளை முடுக்கி வி்ட்டுள்ளது. இதற்காக, தமிழகத்தில் புதிய வாகன தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

ரூ.4,000 கோடியில் கட்டப்பட உள்ள இந்த புதிய ஆலைக்கான நிலம் மற்றும் சலுகைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் மஹிந்திரா தலைமையில் மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சு நடத்தினர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் மஹிந்திரா கூறுகையில்,"வர்த்தக விரிவாக்கத்தின் ஒருபகுதியாக புதிய வாகன தயாரிப்பு ஆலை கட்ட திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் புதிய ஆலை கட்டுவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினோம். பிற மாநிலங்களிலும் ," என்றார்.

இதற்கு முன்னதாக மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் வர்த்தக பிரிவு தலைவர் பவன் கோயங்கோ முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளார். இடம் ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து அவர் ஏற்கனவே பேச்சு நடத்திவிட்டார்.

எனவே, இரண்டாம் கட்டமாக தற்போது முதல்வர் ஜெயலலிதாவை மஹிந்திரா அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளதால் தமிழகத்தில் மஹிந்திராவின் புதிய ஆலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. புதிய ஆலைக்காக ரூ.4,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4,000 கோடியில் புதிய ஆலை: மஹிந்திரா

தமிழகத்தில் புதிய வாகன தயாரிப்பு ஆலை கட்டுவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, மஹிந்திரா குழுமத் துணைத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தலைமையிலான குழு முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா தனது வர்த்தக விரிவாக்கப் பணிகளை முடுக்கி வி்ட்டுள்ளது. இதற்காக, தமிழகத்தில் புதிய வாகன தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

ரூ.4,000 கோடியில் கட்டப்பட உள்ள இந்த புதிய ஆலைக்கான நிலம் மற்றும் சலுகைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் மஹிந்திரா தலைமையில் மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சு நடத்தினர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் மஹிந்திரா கூறுகையில்,"வர்த்தக விரிவாக்கத்தின் ஒருபகுதியாக புதிய வாகன தயாரிப்பு ஆலை கட்ட திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் புதிய ஆலை கட்டுவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினோம். பிற மாநிலங்களிலும் ," என்றார்.

இதற்கு முன்னதாக மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் வர்த்தக பிரிவு தலைவர் பவன் கோயங்கோ முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளார். இடம் ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து அவர் ஏற்கனவே பேச்சு நடத்திவிட்டார்.

எனவே, இரண்டாம் கட்டமாக தற்போது முதல்வர் ஜெயலலிதாவை மஹிந்திரா அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளதால் தமிழகத்தில் மஹிந்திராவின் புதிய ஆலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. புதிய ஆலைக்காக ரூ.4,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

கூகுளுக்கு அடுத்து டிரைவர் இல்லாமல் இயங்கும் புதிய தானியங்கி கார் தொழில்நுட்பத்தை வால்வோ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஆனால், இது கூகுள் கார் போன்று இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.

டிரைவர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார்களை தயாரிப்பில் ஏராளமான நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இணைய தள உலக ஜாம்பவானான கூகுள் உருவாக்கிய தானியங்கி காருக்கான தொழில்நுட்பம் சோதனைகளில் வெற்றியடைந்துள்ளது.

டொயோட்டோ பிரையஸ் காரில் இந்த புதிய தொழில்நுட்பத்தை வைத்து கூகுள் சோதனை நடத்தி வருகிறது. மேலும், சாலையில் நேரடியாக தனது தானியங்கி காரை இயக்கி சோதனைகள் நடத்த அமெரிக்காவிலுள்ள நெவடா மாகாண போக்குவரத்து துறையிடம் கூகுள் சமீபத்தில் அனுமதியும் பெற்றுவிட்டது.

இந்த நிலையில், வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற சுவீடனை சேர்ந்த வால்வோ நிறுவனம் தானியங்கி கார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கூகுள் தானியங்கி கார் தொழில்நுட்பமும், வால்வோ தொழில்நுட்பமும் முற்றிலும் வெவ்வேறானது.

சாட்ரி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் ஒரே நேரத்தில் பல கார்களை ரயில் போல இணைத்து சாலையில் செல்ல முடியும். முன்னாள் செல்லும் காரை மட்டும் டிரைவர் ஓட்டினால் போதுமானது.

பின்னால் வரும் கார்களுக்கு டிரைவர் தேவையில்லை. வயர்லெஸ் கட்டுப்பாடு மூலம் வேகம் மற்றும் 16 முதல் 50 மீட்டர் இடைவெளியில் பின்னால் வரும் கார்கள் டிரைவர் இல்லாமல் அழகாக ரயில் பெட்டிகள் போன்று பின்தொடரும்.

பின்னால் வரும் கார்களின் பிரேக், ஆக்சிலேட்டர் என அனைத்தையும் முன்னால் டிரைவர் ஓட்டி செல்லும் காரை அடிப்படையாக வைத்து இந்த புதிய தொழில்நுட்பம் அழகாக கட்டுப்படுத்தும்.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் 3 கார்களை இணைத்து சமீபத்தில் ஸ்பெயின் நெடுஞ்சாலையில் 200 கிமீ வரை சோதனை நடத்தியுள்ளது வால்வோ. இந்த சோதனை பெரும் வெற்றி பெற்றதாக வால்வோ தெரிவித்துள்ளது.

அருகில் செல்லும் வாகனங்கள் மற்றும் எதிரில் வரும் வாகனங்கள் குறித்து முன்னால் செல்லும் கார் மூலம் குறியீட்டு தகவல்களை பெற்று பின்னால் வரும் கார்களும் லாவகமாக கடந்து சென்றதாக வால்வோ தெரிவித்துள்ளது. இதனால், இந்த சோதனை பெரும் வெற்றியடைந்துள்ளதாக வால்வோ தெரிவித்துள்ளது.

டிரைவர் இல்லாமல் இயங்கும் 'ரயில்'கார்கள்: வால்வோ சோதனை வெற்றி

கூகுளுக்கு அடுத்து டிரைவர் இல்லாமல் இயங்கும் புதிய தானியங்கி கார் தொழில்நுட்பத்தை வால்வோ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஆனால், இது கூகுள் கார் போன்று இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.

டிரைவர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார்களை தயாரிப்பில் ஏராளமான நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இணைய தள உலக ஜாம்பவானான கூகுள் உருவாக்கிய தானியங்கி காருக்கான தொழில்நுட்பம் சோதனைகளில் வெற்றியடைந்துள்ளது.

டொயோட்டோ பிரையஸ் காரில் இந்த புதிய தொழில்நுட்பத்தை வைத்து கூகுள் சோதனை நடத்தி வருகிறது. மேலும், சாலையில் நேரடியாக தனது தானியங்கி காரை இயக்கி சோதனைகள் நடத்த அமெரிக்காவிலுள்ள நெவடா மாகாண போக்குவரத்து துறையிடம் கூகுள் சமீபத்தில் அனுமதியும் பெற்றுவிட்டது.

இந்த நிலையில், வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற சுவீடனை சேர்ந்த வால்வோ நிறுவனம் தானியங்கி கார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கூகுள் தானியங்கி கார் தொழில்நுட்பமும், வால்வோ தொழில்நுட்பமும் முற்றிலும் வெவ்வேறானது.

சாட்ரி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் ஒரே நேரத்தில் பல கார்களை ரயில் போல இணைத்து சாலையில் செல்ல முடியும். முன்னாள் செல்லும் காரை மட்டும் டிரைவர் ஓட்டினால் போதுமானது.

பின்னால் வரும் கார்களுக்கு டிரைவர் தேவையில்லை. வயர்லெஸ் கட்டுப்பாடு மூலம் வேகம் மற்றும் 16 முதல் 50 மீட்டர் இடைவெளியில் பின்னால் வரும் கார்கள் டிரைவர் இல்லாமல் அழகாக ரயில் பெட்டிகள் போன்று பின்தொடரும்.

பின்னால் வரும் கார்களின் பிரேக், ஆக்சிலேட்டர் என அனைத்தையும் முன்னால் டிரைவர் ஓட்டி செல்லும் காரை அடிப்படையாக வைத்து இந்த புதிய தொழில்நுட்பம் அழகாக கட்டுப்படுத்தும்.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் 3 கார்களை இணைத்து சமீபத்தில் ஸ்பெயின் நெடுஞ்சாலையில் 200 கிமீ வரை சோதனை நடத்தியுள்ளது வால்வோ. இந்த சோதனை பெரும் வெற்றி பெற்றதாக வால்வோ தெரிவித்துள்ளது.

அருகில் செல்லும் வாகனங்கள் மற்றும் எதிரில் வரும் வாகனங்கள் குறித்து முன்னால் செல்லும் கார் மூலம் குறியீட்டு தகவல்களை பெற்று பின்னால் வரும் கார்களும் லாவகமாக கடந்து சென்றதாக வால்வோ தெரிவித்துள்ளது. இதனால், இந்த சோதனை பெரும் வெற்றியடைந்துள்ளதாக வால்வோ தெரிவித்துள்ளது.


நாட்டின் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ2 குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெட்ரோல் விலை சில நாட்களுக்கு முன்பு 1 லிட்டருக்கு ரூ7.50 வரை அதிரடியாக ஒரே நாளில் உயர்த்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து இன்று உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைக்கப்படுவதாக எணெய் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இப்புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது


நாட்டின் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ2 குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெட்ரோல் விலை சில நாட்களுக்கு முன்பு 1 லிட்டருக்கு ரூ7.50 வரை அதிரடியாக ஒரே நாளில் உயர்த்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து இன்று உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைக்கப்படுவதாக எணெய் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இப்புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மைசூர் இடையே பெங்களூர் வழியாக புல்லட் ரயில் விடுவதற்கான திட்டம் சூடுபிடித்துள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருவதால் விரைவில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்க அதிவேக ரயில்களை இயக்குவதற்கான திட்டங்களை மத்திய ரயில்வே அமைச்சகம் முடுக்கி விட்டுள்ளது. புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஜப்பானுடன் இணைந்து இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினருடன், மத்திய ரயில்வே அமைச்சகம் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.

முதற்கட்டமாக, சென்னை-மைசூரு இடையே பெங்களூர் வழியாக முதல் புல்லட் ரயில் விடுவதற்கான திட்டப் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இத்திட்டத்திற்கான ஆய்வுகளை தற்போது சென்னை-மைசூர் ரயில் வழித்தடத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த ஆய்வுப் பணிகளை முடித்து ஜப்பான் நிபுணர்கள் தொழில்நுட்ப அறிக்கையை மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கிய பின் புல்லட் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு மத்திய அரசு தவிர்த்து தமிழக, கர்நாடக அரசுகள் மற்றும் ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டதிற்கு முதற்கட்டமாக ரூ.1 லட்சம் கோடியை முதலீடு செய்யப்பட உள்ளது. ஒரு கிலோமீட்டருக்கு புல்லட் ரயில் பாதை அமைக்க ரூ.200 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக, கர்நாடக மக்களின் கனவு திட்டமாக இது கருதப்படுகிறது. இத்திட்டம் நிறைவடைந்தால் மணிக்கு 320 கிமீ வேகம் வரை புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்பதால், சென்னையிலிருந்து பெங்களூருக்கு 2 மணிநேரத்தில் சென்றுவிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை-மைசூர் இடையே பெங்களூர் வழியாக புல்லட் ரயில்


மைசூர் இடையே பெங்களூர் வழியாக புல்லட் ரயில் விடுவதற்கான திட்டம் சூடுபிடித்துள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருவதால் விரைவில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்க அதிவேக ரயில்களை இயக்குவதற்கான திட்டங்களை மத்திய ரயில்வே அமைச்சகம் முடுக்கி விட்டுள்ளது. புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஜப்பானுடன் இணைந்து இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினருடன், மத்திய ரயில்வே அமைச்சகம் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.

முதற்கட்டமாக, சென்னை-மைசூரு இடையே பெங்களூர் வழியாக முதல் புல்லட் ரயில் விடுவதற்கான திட்டப் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இத்திட்டத்திற்கான ஆய்வுகளை தற்போது சென்னை-மைசூர் ரயில் வழித்தடத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த ஆய்வுப் பணிகளை முடித்து ஜப்பான் நிபுணர்கள் தொழில்நுட்ப அறிக்கையை மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கிய பின் புல்லட் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு மத்திய அரசு தவிர்த்து தமிழக, கர்நாடக அரசுகள் மற்றும் ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டதிற்கு முதற்கட்டமாக ரூ.1 லட்சம் கோடியை முதலீடு செய்யப்பட உள்ளது. ஒரு கிலோமீட்டருக்கு புல்லட் ரயில் பாதை அமைக்க ரூ.200 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக, கர்நாடக மக்களின் கனவு திட்டமாக இது கருதப்படுகிறது. இத்திட்டம் நிறைவடைந்தால் மணிக்கு 320 கிமீ வேகம் வரை புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்பதால், சென்னையிலிருந்து பெங்களூருக்கு 2 மணிநேரத்தில் சென்றுவிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக நூல்

Popular Posts