background img

புதிய வரவு

Showing posts with label Petrole price. Show all posts
Showing posts with label Petrole price. Show all posts
பெட்ரோல் விலையை 2 ரூபாய் மட்டுமே குறைத்துள்ளது மத்திய அரசின் கண்துடைப்பு நாடகம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நடுத்தர மற்றும் ஏழை மக்களை பாதிக்கும் பெட்ரோல் விலை உயர்வை முற்றிலுமாக திரும்ப பெறவேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை கடந்த வாரம் லிட்டருக்கு 7ரூபாய் 50 பைசா அளவிற்கு உயர்த்தின. இந்தியா முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி கடந்த 30ம் தேதி எதிர்கட்சிகள் நாடு தழுவிய பந்த் நடத்தின. இதனை அடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 23-ந் தேதி நள்ளிரவு முதல் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்று உயர்த்தி மக்கள் மீது தாங்கொணா சுமையை ஏற்றியது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக விலைவாசி ஏறிவரும் நிலையில் மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும் வகையில் இந்த பெட்ரோல் விலை உயர்வு உள்ளது என்பதை அன்றே நான் சுட்டிக்காட்டி, எனது கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தேன்.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோத செயல் காரணமாக ஏழை எளிய, நடுத்தர மக்களின் மாதவருமானத்தில் பெருமளவு பற்றாக்குறை ஏற்படும் என்பதையும், மக்களின் வாங்கும் சக்தி மற்றும் பொருளாதார நிலை மேலும் வீழ்ச்சி அடையும் என்பதையும் சுட்டிக்காட்டி, பெட்ரோலுக்கான இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தேன்.

அ.தி.மு.க சார்பில் இந்தப் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, மாவட்டந்தோறும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பல்வேறு அமைப்புகளும், பலதரப்பட்ட மக்களும் இந்த விலை உயர்வுக்கு நாள்தோறும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் 2 ரூபாயை இன்று நள்ளிரவு முதல் குறைத்துள்ளது.

இந்த விலைக் குறைப்பு ``யானைப் பசிக்கு சோளப்பொறி'' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

உயர்த்தப்பட்ட 7 ரூபாய் 50 பைசாவில் 2 ரூபாய் குறைப்பு என்பது ஏழை எளிய மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன்தராது. இந்த சிறிய அளவிலான விலை குறைப்பு மக்களின் கோபத்தை எந்தவிதத்திலும் தணித்துவிடாது. இதற்குப் பின்னும், பெட்ரோல் விலை ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு சுமையானதாகவே இருக்கும். எனவே, இத்தகைய விலை குறைப்பு என்ற கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றாமல், ஏற்றப்பட்ட பெட்ரோல் விலையை முழுவதும் திரும்பப் பெறவேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதாவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வு கண்துடைப்பு நாடகம் : ஜெயலலிதா

பெட்ரோல் விலையை 2 ரூபாய் மட்டுமே குறைத்துள்ளது மத்திய அரசின் கண்துடைப்பு நாடகம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நடுத்தர மற்றும் ஏழை மக்களை பாதிக்கும் பெட்ரோல் விலை உயர்வை முற்றிலுமாக திரும்ப பெறவேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை கடந்த வாரம் லிட்டருக்கு 7ரூபாய் 50 பைசா அளவிற்கு உயர்த்தின. இந்தியா முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி கடந்த 30ம் தேதி எதிர்கட்சிகள் நாடு தழுவிய பந்த் நடத்தின. இதனை அடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 23-ந் தேதி நள்ளிரவு முதல் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்று உயர்த்தி மக்கள் மீது தாங்கொணா சுமையை ஏற்றியது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக விலைவாசி ஏறிவரும் நிலையில் மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும் வகையில் இந்த பெட்ரோல் விலை உயர்வு உள்ளது என்பதை அன்றே நான் சுட்டிக்காட்டி, எனது கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தேன்.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோத செயல் காரணமாக ஏழை எளிய, நடுத்தர மக்களின் மாதவருமானத்தில் பெருமளவு பற்றாக்குறை ஏற்படும் என்பதையும், மக்களின் வாங்கும் சக்தி மற்றும் பொருளாதார நிலை மேலும் வீழ்ச்சி அடையும் என்பதையும் சுட்டிக்காட்டி, பெட்ரோலுக்கான இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தேன்.

அ.தி.மு.க சார்பில் இந்தப் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, மாவட்டந்தோறும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பல்வேறு அமைப்புகளும், பலதரப்பட்ட மக்களும் இந்த விலை உயர்வுக்கு நாள்தோறும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் 2 ரூபாயை இன்று நள்ளிரவு முதல் குறைத்துள்ளது.

இந்த விலைக் குறைப்பு ``யானைப் பசிக்கு சோளப்பொறி'' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

உயர்த்தப்பட்ட 7 ரூபாய் 50 பைசாவில் 2 ரூபாய் குறைப்பு என்பது ஏழை எளிய மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன்தராது. இந்த சிறிய அளவிலான விலை குறைப்பு மக்களின் கோபத்தை எந்தவிதத்திலும் தணித்துவிடாது. இதற்குப் பின்னும், பெட்ரோல் விலை ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு சுமையானதாகவே இருக்கும். எனவே, இத்தகைய விலை குறைப்பு என்ற கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றாமல், ஏற்றப்பட்ட பெட்ரோல் விலையை முழுவதும் திரும்பப் பெறவேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதாவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.


நாட்டின் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ2 குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெட்ரோல் விலை சில நாட்களுக்கு முன்பு 1 லிட்டருக்கு ரூ7.50 வரை அதிரடியாக ஒரே நாளில் உயர்த்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து இன்று உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைக்கப்படுவதாக எணெய் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இப்புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது


நாட்டின் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ2 குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெட்ரோல் விலை சில நாட்களுக்கு முன்பு 1 லிட்டருக்கு ரூ7.50 வரை அதிரடியாக ஒரே நாளில் உயர்த்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து இன்று உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைக்கப்படுவதாக எணெய் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இப்புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 Karunanidhi Rolls Back Pull Out Threat பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டாலும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக் கூட்டணியில் கசப்புடன் நீடிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அண்ணா அறிவாலயத்தில் நிருபகளுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: மத்திய அரசை விட்டு வெளியேற தயங்க மாட்டோம் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே..

பதில்: நான் எங்கே அப்படிச் சொன்னேன். மத்திய அரசை விட்டு வெளியேறுவோம் என்று என்னுடைய பேச்சில் எங்கேயாவது இருக்கிறதா? என்னிடம் பேச்சு `ஆடியோ' செய்யப்பட்டதே இருக்கிறது. 

கடந்த காலத்தில் பாஜகவோடு கூட்டணியிலே இருந்து கொண்டு, வி.பி. சிங் பிரதமராக இருந்த போதும் அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டு, எந்த இடத்தில் இருந்தாலும் என்று சொல்லி எங்களுடைய கொள்கைகளில் ஒத்துவராத சூழ்நிலையில் நாங்கள் வெளியேற நேர்ந்தது என்று கடந்த காலத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். இப்போது வெளியேறுவோம் என்று சொல்லவில்லை. நீங்கள் நல்ல எதிர் காலத்தை உருவாக்க வேண்டிய பத்திரிகையாளர்கள். நீங்களாவது இவ்வாறு யூகம் செய்து கொண்டு கேட்பது விஷமத்தனமான காரியமாகும்.

கேள்வி: பெட்ரோல் விலை உயர்வைக் குறைக்காவிட்டால் நீங்கள் கூட்டணியிலிருந்து வெளியே வந்து விடுவீர்களா?

பதில்: நீங்கள் எல்லாம் விரும்புவதைப் போல அப்படி ஒரு நிபந்தனையை நாங்கள் வைக்க முடியாது. குறைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறி விடுவோம் என்று கூற முடியாது.

ஏனென்றால், திடீரென்று கூட்டணியை விட்டு வெளியே வந்தால், மத்தியில் வரவிருக்கின்ற ஆட்சி பிற்போக்கான ஆட்சியாக மாறி விடலாம். மதவாத சார்புடைய ஆட்சியாக வரலாம். அதையும் நாங்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதை மாத்திரம் காட்டி மக்களுக்குத் தேவையான காரியங்களில் மத்திய அரசும் இடையூறு செய்யக் கூடாது.

எனக்கு இப்போது வந்துள்ள தகவல்களின்படி, பிரதமர் இதைப் பற்றி யோசிப்பதாக நான் கேள்விப்படுகிறேன். மக்களுடைய கிளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று பிரதமர் யோசிப்பதாக தகவல் வந்துள்ளது. அந்த யோசனை நல்ல முறையிலே விளைவுகளைத் தருமேயானால் மகிழ்ச்சி அடைவேன்.

கேள்வி: பெட்ரோல் விலையைக் குறைக்கப் போவதாக மத்திய அரசிடமிருந்து உங்களுக்கு கூட்டணி என்ற முறையில் தகவல் வந்திருக்கிறதா?

பதில்: யூகமான தகவல் தான். வரும் என்று எதிர்பார்க்கிறேன். பெட்ரோலைப் பொறுத்தவரையில் மத்திய அரசிடமிருந்து நல்ல செய்தி வரக் கூடும் என்று நினைக்கிறேன்.

கேள்வி: பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் மத்திய அரசை விட்டு வெளியேறிவிடுவோம் என்று நீங்கள் பேசியதைப் பற்றி?

பதில்: மறுபடியும் அதையே கேட்கிறீர்கள். இப்போது இருக்கிற மத்திய அரசு இதற்கு முன்பு நான் சொன்ன அரசுகளைப் போல அல்ல. நாங்கள் இப்போது சொல்வதையெல்லாம் எண்ணிப் பார்க்கும். இந்தக் கிளர்ச்சிகளையெல்லாம் மதிக்கக் கூடிய அரசு தான் இப்போதுள்ள மத்திய அரசு. மாநில அரசு தான் மதிக்காத அரசு. அது மாத்திரமல்ல. விரைவிலே குடியரசு தலைவர் தேர்தல் வரவுள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நெருக்கடியை மத்திய அரசுக்குக் கொடுக்கக்கூடிய காரியங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம். தி.மு.கழகம் கசப்போடு, இந்தக் கூட்டணியிலே நீடிக்கும். அவ்வளவு தான்.

கேள்வி:
 இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தானே?

பதில்: மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்றார் கருணாநிதி.

மனக் கசப்புடன் காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்போம்: கருணாநிதி

 Karunanidhi Rolls Back Pull Out Threat பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டாலும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக் கூட்டணியில் கசப்புடன் நீடிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அண்ணா அறிவாலயத்தில் நிருபகளுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: மத்திய அரசை விட்டு வெளியேற தயங்க மாட்டோம் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே..

பதில்: நான் எங்கே அப்படிச் சொன்னேன். மத்திய அரசை விட்டு வெளியேறுவோம் என்று என்னுடைய பேச்சில் எங்கேயாவது இருக்கிறதா? என்னிடம் பேச்சு `ஆடியோ' செய்யப்பட்டதே இருக்கிறது. 

கடந்த காலத்தில் பாஜகவோடு கூட்டணியிலே இருந்து கொண்டு, வி.பி. சிங் பிரதமராக இருந்த போதும் அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டு, எந்த இடத்தில் இருந்தாலும் என்று சொல்லி எங்களுடைய கொள்கைகளில் ஒத்துவராத சூழ்நிலையில் நாங்கள் வெளியேற நேர்ந்தது என்று கடந்த காலத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். இப்போது வெளியேறுவோம் என்று சொல்லவில்லை. நீங்கள் நல்ல எதிர் காலத்தை உருவாக்க வேண்டிய பத்திரிகையாளர்கள். நீங்களாவது இவ்வாறு யூகம் செய்து கொண்டு கேட்பது விஷமத்தனமான காரியமாகும்.

கேள்வி: பெட்ரோல் விலை உயர்வைக் குறைக்காவிட்டால் நீங்கள் கூட்டணியிலிருந்து வெளியே வந்து விடுவீர்களா?

பதில்: நீங்கள் எல்லாம் விரும்புவதைப் போல அப்படி ஒரு நிபந்தனையை நாங்கள் வைக்க முடியாது. குறைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறி விடுவோம் என்று கூற முடியாது.

ஏனென்றால், திடீரென்று கூட்டணியை விட்டு வெளியே வந்தால், மத்தியில் வரவிருக்கின்ற ஆட்சி பிற்போக்கான ஆட்சியாக மாறி விடலாம். மதவாத சார்புடைய ஆட்சியாக வரலாம். அதையும் நாங்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதை மாத்திரம் காட்டி மக்களுக்குத் தேவையான காரியங்களில் மத்திய அரசும் இடையூறு செய்யக் கூடாது.

எனக்கு இப்போது வந்துள்ள தகவல்களின்படி, பிரதமர் இதைப் பற்றி யோசிப்பதாக நான் கேள்விப்படுகிறேன். மக்களுடைய கிளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று பிரதமர் யோசிப்பதாக தகவல் வந்துள்ளது. அந்த யோசனை நல்ல முறையிலே விளைவுகளைத் தருமேயானால் மகிழ்ச்சி அடைவேன்.

கேள்வி: பெட்ரோல் விலையைக் குறைக்கப் போவதாக மத்திய அரசிடமிருந்து உங்களுக்கு கூட்டணி என்ற முறையில் தகவல் வந்திருக்கிறதா?

பதில்: யூகமான தகவல் தான். வரும் என்று எதிர்பார்க்கிறேன். பெட்ரோலைப் பொறுத்தவரையில் மத்திய அரசிடமிருந்து நல்ல செய்தி வரக் கூடும் என்று நினைக்கிறேன்.

கேள்வி: பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் மத்திய அரசை விட்டு வெளியேறிவிடுவோம் என்று நீங்கள் பேசியதைப் பற்றி?

பதில்: மறுபடியும் அதையே கேட்கிறீர்கள். இப்போது இருக்கிற மத்திய அரசு இதற்கு முன்பு நான் சொன்ன அரசுகளைப் போல அல்ல. நாங்கள் இப்போது சொல்வதையெல்லாம் எண்ணிப் பார்க்கும். இந்தக் கிளர்ச்சிகளையெல்லாம் மதிக்கக் கூடிய அரசு தான் இப்போதுள்ள மத்திய அரசு. மாநில அரசு தான் மதிக்காத அரசு. அது மாத்திரமல்ல. விரைவிலே குடியரசு தலைவர் தேர்தல் வரவுள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நெருக்கடியை மத்திய அரசுக்குக் கொடுக்கக்கூடிய காரியங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம். தி.மு.கழகம் கசப்போடு, இந்தக் கூட்டணியிலே நீடிக்கும். அவ்வளவு தான்.

கேள்வி:
 இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தானே?

பதில்: மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்றார் கருணாநிதி.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால், வேறு வழியின்றி பெட்ரோல் விலையில் ரூ 2 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும், 1-ந்தேதி மற்றும் 16-ந்தேதி பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன.

பொதுவாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1 டாலர் உயர்ந்தாலும், உடனே விலையை ஏற்றிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.

ஆனால் இந்த முறை கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்தும்கூட, நஷ்டம் என்று கூறி லிட்டருக்கு ரூ 7.50 உயர்த்தி பொதுமக்களை அலற வைத்தன.

இதற்கு எதிர்ப்பும் நாடெங்கும் கண்டனப் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணை நேற்று 111 டாலரில் இருந்து 106 டாலராக குறைந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் கூட குறைய வாய்ப்புள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ரூபாய் மதிப்பில் எந்த வீழ்ச்சியும் ஏற்படவில்லை. இதன் காரணமாக கடந்த வாரம் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை சற்று குறைக்க இந்திய எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50 முதல் ரூ.2 வரை குறைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எண்ணை நிறுவன அதிகாரிகள் இன்று அல்லது நாளை இதுபற்றி ஆலோசித்து விலை குறைப்பு முடிவை அறிவிப்பார்கள்.

எண்ணை நிறுவனங்களின் அறிவிப்பு இன்றிரவு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் பெட்ரோல் விலை குறைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) அமலுக்கு வரலாம்.

இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவன தலைவர் ஆர்கே சிங் கூறுகையில், 'பெட்ரோல் விலை ரூ 1.50 வரை குறைக்கப்படலாம். அதற்கான சாத்தியம் உள்ளது,' என்றார்.

இதற்கான நடவடிக்கைகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வேகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களை சற்று தணிக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது!

கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி - பெட்ரோல் விலை ரூ 2 குறைய வாய்ப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால், வேறு வழியின்றி பெட்ரோல் விலையில் ரூ 2 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும், 1-ந்தேதி மற்றும் 16-ந்தேதி பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன.

பொதுவாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1 டாலர் உயர்ந்தாலும், உடனே விலையை ஏற்றிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.

ஆனால் இந்த முறை கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்தும்கூட, நஷ்டம் என்று கூறி லிட்டருக்கு ரூ 7.50 உயர்த்தி பொதுமக்களை அலற வைத்தன.

இதற்கு எதிர்ப்பும் நாடெங்கும் கண்டனப் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணை நேற்று 111 டாலரில் இருந்து 106 டாலராக குறைந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் கூட குறைய வாய்ப்புள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ரூபாய் மதிப்பில் எந்த வீழ்ச்சியும் ஏற்படவில்லை. இதன் காரணமாக கடந்த வாரம் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை சற்று குறைக்க இந்திய எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50 முதல் ரூ.2 வரை குறைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எண்ணை நிறுவன அதிகாரிகள் இன்று அல்லது நாளை இதுபற்றி ஆலோசித்து விலை குறைப்பு முடிவை அறிவிப்பார்கள்.

எண்ணை நிறுவனங்களின் அறிவிப்பு இன்றிரவு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் பெட்ரோல் விலை குறைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) அமலுக்கு வரலாம்.

இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவன தலைவர் ஆர்கே சிங் கூறுகையில், 'பெட்ரோல் விலை ரூ 1.50 வரை குறைக்கப்படலாம். அதற்கான சாத்தியம் உள்ளது,' என்றார்.

இதற்கான நடவடிக்கைகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வேகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களை சற்று தணிக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது!

முக நூல்

Popular Posts