background img

புதிய வரவு

Showing posts with label Government. Show all posts
Showing posts with label Government. Show all posts

அணுகுண்டுகளை விட பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்தும் விளைவுகள் மோசமானவை' என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், தடை விதிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

இந்தியா முழுவதிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி விலங்குகள் நலனுக்காக செயல்பட்டு வரும் கருணா சொசைட்டி என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், `சுற்றுச்சூழலுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக் பைகளை முறையாக அப்புறப்படுத்துவதில் அரசு மெத்தனத்துடன் செயல்பட்டு வருகிறது.

குப்பைக் கூளங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளை, ஆடு, மாடுகள் உண்பதால், அதனுடைய வயிற்றில் சிக்கி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சமீபத்திய கால்நடை ஆராய்ச்சி ஒன்றில், ஆடு, மாடுகள் வயிற்றில் இருந்து 30 முதல் 50 கிலோ வரை பிளாஸ்டிக் பைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

எனவே, பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு நாடு முழுவதும் தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

நேற்று இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு, மத்திய, மாநில அரசுகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், ``அணுகுண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட, எதிர்காலத்தில் பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்தும் விளைவுகள் மோசமானதாக இருக்கும். பிளாஸ்டிக் உபயோகத்தால், நகர் மற்றும் கிராம பகுதிகள் நாசமடைகின்றன. நிலம், ஆறு மற்றும் நிலத்தடி நீர் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

இதனை தற்போது ஒழிக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இது எதிர்கால சந்ததியினரையும் கடுமையாக பாதிக்கும்'' என்று தெரிவித்தனர்.

அணுகுண்டுகளை விட பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்தும் விளைவுகள் மோசமானவை: உச்சநீதிமன்றம்


அணுகுண்டுகளை விட பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்தும் விளைவுகள் மோசமானவை' என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், தடை விதிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

இந்தியா முழுவதிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி விலங்குகள் நலனுக்காக செயல்பட்டு வரும் கருணா சொசைட்டி என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், `சுற்றுச்சூழலுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக் பைகளை முறையாக அப்புறப்படுத்துவதில் அரசு மெத்தனத்துடன் செயல்பட்டு வருகிறது.

குப்பைக் கூளங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளை, ஆடு, மாடுகள் உண்பதால், அதனுடைய வயிற்றில் சிக்கி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சமீபத்திய கால்நடை ஆராய்ச்சி ஒன்றில், ஆடு, மாடுகள் வயிற்றில் இருந்து 30 முதல் 50 கிலோ வரை பிளாஸ்டிக் பைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

எனவே, பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு நாடு முழுவதும் தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

நேற்று இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு, மத்திய, மாநில அரசுகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், ``அணுகுண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட, எதிர்காலத்தில் பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்தும் விளைவுகள் மோசமானதாக இருக்கும். பிளாஸ்டிக் உபயோகத்தால், நகர் மற்றும் கிராம பகுதிகள் நாசமடைகின்றன. நிலம், ஆறு மற்றும் நிலத்தடி நீர் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

இதனை தற்போது ஒழிக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இது எதிர்கால சந்ததியினரையும் கடுமையாக பாதிக்கும்'' என்று தெரிவித்தனர்.


அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 1-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மாசிலாமணி. என்ஜினீயரான இவர் அரசு குடிசை மாற்று வாரியத்தில் செயற் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது கட்டுமான தொழில் செய்து வந்தார். இவருக்கு லலிதா என்ற மனைவியும், தினேஷ், கார்த்திக் ஆகிய மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்கள்.

மாசிலாமணி சென்னையில் பல இடங்களில் கட்டிட பணிகளை செய்து வருகிறார். அடிக்கடி காரில் சென்று கட்டுமான பணிகளை பார்வையிடுவார். இதற்காக சுரேஷ் (25) என்ற கார் டிரைவரையும் பணிக்கு வைத்திருந்தார். மூலக்கடை அருகேயுள்ள எருக்கஞ்சேரியில் மாசிலா மணி ஒருவருக்கு வீடு கட்டி கொடுத்து வந்தார். இந்த கட்டிட பணியை பார்வையிட நேற்று முன்தினம் அவர் காரில் எடுக்கஞ்சேரிக்கு சென்றார். அங்கு வேலை பார்த்த தொழிலாளிகளுக்கு கூலியும் கொடுத்தார்.

பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் வீடு வந்து சேர வில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல இடங்களில் சென்று தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி அவரது சகோதரர் அனந்தநாராயணன் கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு கிண்டி தொழிற்பேட்டை அருகில் ஒரு கார் எரிந்த நிலையில் காணப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது காருக்குள் ஒருவர் கரிக்கட்டையாக எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரில் பிணமாக கிடந்தது மாசிலாமணியாக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மாசிலாமணி காணாமல் போன அன்று காரில் ரூ. 4 1/2 லட்சம் பணம் இருந்தது. பணத்துக்காக மாசிலா மணியை டிரைவர் சுரேஷ் காருடன் எரித்து கொன்று விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் தொழில் போட்டி காரணமாக மாசிலாமணி கொல்லப்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. புளியந்தோப்பு துணை கமிஷனர் (பொறுப்பு) அபிஷேக் மாசிலாமணியின் மனைவி லலிதாவிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். டிரைவர் சுரேஷ் பற்றி அவரிடம் கேட்டபோது, கடந்த 1 1/2 மாதத்துக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்ததாகவும், அவர் யார் என்று தெரியாது. வேறு ஒருவர் அவரை பணிக்கு சேர்த்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து டிரைவர் சுரேசை வேலைக்கு சேர்த்து விட்டது யார்? என்று விசாரித்து அவரைப் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். மேலும் மாசிலாமணி சென்னையில் பல கட்டிடங்களை கட்டி வருவதால் 100-க்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் வேலை பார்த்தனர். அவர்களில் யாராவது பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாமா என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதுபற்றி மாசிலாமணியின் சகோதரர் அனந்தநாராயணன் கூறுகையில், எனது அண்ணன் மனைவி கர்நாடகாவில் உள்ள பங்காரு பேட்டைக்கு சென்றிருந்தார். அவரை அழைத்து வர அண்ணன் திட்டமிட்டிருந்தார். அதற்குள் அவர் காருக்குள் பிணமாக கிடந்ததாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அண்ணியை அங்கிருந்து வரவழைத்தோம். புதிதாக வேலைக்கு சேர்ந்த டிரைவர் சுரேஷ் மீதுதான் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது என்றார். இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறும்போது, தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறோம். கொலை நடந்த இடத்தில் 4 தடயங்கள் சிக்கியுள்ளன. கொலையாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

சென்னையில் காரில் பிணம்: அரசு அதிகாரி எரித்து கொலை

அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 1-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மாசிலாமணி. என்ஜினீயரான இவர் அரசு குடிசை மாற்று வாரியத்தில் செயற் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது கட்டுமான தொழில் செய்து வந்தார். இவருக்கு லலிதா என்ற மனைவியும், தினேஷ், கார்த்திக் ஆகிய மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்கள்.

மாசிலாமணி சென்னையில் பல இடங்களில் கட்டிட பணிகளை செய்து வருகிறார். அடிக்கடி காரில் சென்று கட்டுமான பணிகளை பார்வையிடுவார். இதற்காக சுரேஷ் (25) என்ற கார் டிரைவரையும் பணிக்கு வைத்திருந்தார். மூலக்கடை அருகேயுள்ள எருக்கஞ்சேரியில் மாசிலா மணி ஒருவருக்கு வீடு கட்டி கொடுத்து வந்தார். இந்த கட்டிட பணியை பார்வையிட நேற்று முன்தினம் அவர் காரில் எடுக்கஞ்சேரிக்கு சென்றார். அங்கு வேலை பார்த்த தொழிலாளிகளுக்கு கூலியும் கொடுத்தார்.

பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் வீடு வந்து சேர வில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல இடங்களில் சென்று தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி அவரது சகோதரர் அனந்தநாராயணன் கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு கிண்டி தொழிற்பேட்டை அருகில் ஒரு கார் எரிந்த நிலையில் காணப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது காருக்குள் ஒருவர் கரிக்கட்டையாக எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரில் பிணமாக கிடந்தது மாசிலாமணியாக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மாசிலாமணி காணாமல் போன அன்று காரில் ரூ. 4 1/2 லட்சம் பணம் இருந்தது. பணத்துக்காக மாசிலா மணியை டிரைவர் சுரேஷ் காருடன் எரித்து கொன்று விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் தொழில் போட்டி காரணமாக மாசிலாமணி கொல்லப்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. புளியந்தோப்பு துணை கமிஷனர் (பொறுப்பு) அபிஷேக் மாசிலாமணியின் மனைவி லலிதாவிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். டிரைவர் சுரேஷ் பற்றி அவரிடம் கேட்டபோது, கடந்த 1 1/2 மாதத்துக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்ததாகவும், அவர் யார் என்று தெரியாது. வேறு ஒருவர் அவரை பணிக்கு சேர்த்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து டிரைவர் சுரேசை வேலைக்கு சேர்த்து விட்டது யார்? என்று விசாரித்து அவரைப் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். மேலும் மாசிலாமணி சென்னையில் பல கட்டிடங்களை கட்டி வருவதால் 100-க்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் வேலை பார்த்தனர். அவர்களில் யாராவது பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாமா என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதுபற்றி மாசிலாமணியின் சகோதரர் அனந்தநாராயணன் கூறுகையில், எனது அண்ணன் மனைவி கர்நாடகாவில் உள்ள பங்காரு பேட்டைக்கு சென்றிருந்தார். அவரை அழைத்து வர அண்ணன் திட்டமிட்டிருந்தார். அதற்குள் அவர் காருக்குள் பிணமாக கிடந்ததாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அண்ணியை அங்கிருந்து வரவழைத்தோம். புதிதாக வேலைக்கு சேர்ந்த டிரைவர் சுரேஷ் மீதுதான் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது என்றார். இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறும்போது, தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறோம். கொலை நடந்த இடத்தில் 4 தடயங்கள் சிக்கியுள்ளன. கொலையாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 146 இடங்களை பெற்று தனித்து ஆட்சி அமைக்கிறது. இது தொடர்பாக மாலை மலர் இணைய தளத்தில் வாசகர்கள் கருத்து:-

வெளிநாட்டு தமிழர்களும் ஜெயலலிதா வெற்றியை கொண்டாடுகிறார்கள்.
-சுதன்

மக்கள் இப்போது ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள். இந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
-மைதீன்

இனி அனைத்து அரசு அலுவலகத்திலும் ஊழியர்கள் ஒழுக்கமாக வேலை பார்ப்பார்கள்.
-பிரபாகரன்

ரேஷன் கார்டில் இருப்பிடத்தை மாற்ற 1 வாரத்துக்கும் மேல் அலைந்தேன். இனியாரும் அப்படி அலைய வேண்டியது இருக்காது.
-ராஜா

முந்தைய ஆட்சி கால தவறுகளை களைந்து மீண்டும் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜெயலலிதாவிடம் மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஈழ பிரச்சினையில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு உள்ளார்ந்த கொள்கையாக இருக்க வேண்டும்.
-ஆதி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: அரசு ஊழியர்கள் இனி ஒழுங்காக வேலை பார்ப்பார்கள்

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 146 இடங்களை பெற்று தனித்து ஆட்சி அமைக்கிறது. இது தொடர்பாக மாலை மலர் இணைய தளத்தில் வாசகர்கள் கருத்து:-

வெளிநாட்டு தமிழர்களும் ஜெயலலிதா வெற்றியை கொண்டாடுகிறார்கள்.
-சுதன்

மக்கள் இப்போது ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள். இந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
-மைதீன்

இனி அனைத்து அரசு அலுவலகத்திலும் ஊழியர்கள் ஒழுக்கமாக வேலை பார்ப்பார்கள்.
-பிரபாகரன்

ரேஷன் கார்டில் இருப்பிடத்தை மாற்ற 1 வாரத்துக்கும் மேல் அலைந்தேன். இனியாரும் அப்படி அலைய வேண்டியது இருக்காது.
-ராஜா

முந்தைய ஆட்சி கால தவறுகளை களைந்து மீண்டும் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜெயலலிதாவிடம் மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஈழ பிரச்சினையில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு உள்ளார்ந்த கொள்கையாக இருக்க வேண்டும்.
-ஆதி

சென்னை: தமிழக அரசு, மக்கள் நலப் பணிகளையும், திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கு பிரதமர், மத்திய நிதி அமைச்சர், உலக வங்கி, வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்து வருவதாக, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும், சிறப்பான செயல்பாட்டிற்காக பல்வேறு விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மக்கள் நலப் பணிகள் மற்றும் திட்டங்களை புள்ளி விவரங்களோடு குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் கோவையில் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையை குறிப்பிட்டுள்ள அவர், "முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நீண்ட கால கண்ணோட்டத்துடன் செயல்படுத்தி வரும் பல்வேறு வகையான திட்டங்கள், தமிழகத்தை பல வழிகளிலும் குறிப்பாக, ஊரக வளர்ச்சி, வேளாண்மை சீரமைப்பு ஆகியற்றில் மாதிரி மாநிலமாக மாற்றியிருக்கிறது' என, பிரதமர் பாராட்டியுள்ளதை குறிப்பிட்டு உள்ளார். மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "இந்தியாவில் நிதி ஒழுங்கும், நிலைத் தன்மையும் திருப்திகரமாக கடைபிடித்து வரும் மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகும்' என சுட்டிக் காட்டியிருப்பதைக் கூறியுள்ளார். வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக செய்ததற்காக 2010ம் ஆண்டின், "இந்தியா டுடே' விருதும், வளர்ச்சிப் பணிகள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக, "வைர மாநிலம்' விருதும் தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது.

வறுமை ஒழிப்பு மற்றும் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களைய செயல்படுத்தி வரும், "வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை' உலக வங்கியின் முன்னாள் செயலாக்கத் தலைவர் மீனா முன்ஷி பாராட்டி உள்ளார் என்றும், அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டு உள்ளார். மேலும், வாகன உற்பத்தி தொழிலுக்கு உதவும் வகையில் தமிழக அரசு செய்துள்ள பல்வேறு வசதிகள் குறித்து, "வால் ஸ்டீரிட் ஜர்னல்' என்ற வெளிநாட்டு பத்திரிகை பாராட்டியுள்ளதாகவும், அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.

தமிழக அரசுக்கு வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு: கருணாநிதி

சென்னை: தமிழக அரசு, மக்கள் நலப் பணிகளையும், திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கு பிரதமர், மத்திய நிதி அமைச்சர், உலக வங்கி, வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்து வருவதாக, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும், சிறப்பான செயல்பாட்டிற்காக பல்வேறு விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மக்கள் நலப் பணிகள் மற்றும் திட்டங்களை புள்ளி விவரங்களோடு குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் கோவையில் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையை குறிப்பிட்டுள்ள அவர், "முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நீண்ட கால கண்ணோட்டத்துடன் செயல்படுத்தி வரும் பல்வேறு வகையான திட்டங்கள், தமிழகத்தை பல வழிகளிலும் குறிப்பாக, ஊரக வளர்ச்சி, வேளாண்மை சீரமைப்பு ஆகியற்றில் மாதிரி மாநிலமாக மாற்றியிருக்கிறது' என, பிரதமர் பாராட்டியுள்ளதை குறிப்பிட்டு உள்ளார். மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "இந்தியாவில் நிதி ஒழுங்கும், நிலைத் தன்மையும் திருப்திகரமாக கடைபிடித்து வரும் மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகும்' என சுட்டிக் காட்டியிருப்பதைக் கூறியுள்ளார். வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக செய்ததற்காக 2010ம் ஆண்டின், "இந்தியா டுடே' விருதும், வளர்ச்சிப் பணிகள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக, "வைர மாநிலம்' விருதும் தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது.

வறுமை ஒழிப்பு மற்றும் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களைய செயல்படுத்தி வரும், "வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை' உலக வங்கியின் முன்னாள் செயலாக்கத் தலைவர் மீனா முன்ஷி பாராட்டி உள்ளார் என்றும், அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டு உள்ளார். மேலும், வாகன உற்பத்தி தொழிலுக்கு உதவும் வகையில் தமிழக அரசு செய்துள்ள பல்வேறு வசதிகள் குறித்து, "வால் ஸ்டீரிட் ஜர்னல்' என்ற வெளிநாட்டு பத்திரிகை பாராட்டியுள்ளதாகவும், அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.

பனாஜி : "அரசு வேலை தேடும் இளைஞர்கள், மாநிலத்தில் இளைஞர் காங்கிரசில் சேர வேண்டும்' என்று கோவா முதல்வர் திகம்பர் காமத் அழைப்பு விடுத்துள்ளார். கோவாவில், இம்மாதத்துடன், இளைஞர் காங்கிரசில் தொண்டர்கள் சேர்ப்பு பணி முடிவடைகிறது. இதன் பின்னர் தேர்தல் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மாநில முதல்வர் திகம்பர் காமத் பனாஜியில் கூறுகையில், "மாநிலத்தின் முதல்வராக, இதுவரை, நான், குறைந்தது 1,000 அரசு வேலை வழங்கி உள்ளேன், என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் 35 வயதுக்கு குறைந்தவர்கள் யார் வேண்டுமானாலும், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகலாம். வேலை தேடுபவர்கள், வேலை கிடைத்தவர்கள் என யார் வேண்டுமானாலும் உறுப்பினர்கள் ஆகலாம். நீங்கள் உறுப்பினரானால், வேலை வழங்குவது பற்றி பரிசீலிக்கலாம். இது ஒன்றும் அரசியல் அமைப்பு அல்ல' என்று தெரிவித்தார்.
ஆனால், இளைஞர் காங்கிரஸ் இணையதளத்தில், "நாட்டிலேயே உள்கட்சி தேர்தல் நடத்தும் ஒரே அரசியல் அமைப்பு இளைஞர் காங்கிரஸ்' என்று தெரிவித்துள்ளது. மாநிலத்தில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும், குறைந்தது 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் காமத் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இளைஞர் காங்கிரசில் சேர்ந்தால் கோவா மாநிலத்தில் அரசு வேலை

பனாஜி : "அரசு வேலை தேடும் இளைஞர்கள், மாநிலத்தில் இளைஞர் காங்கிரசில் சேர வேண்டும்' என்று கோவா முதல்வர் திகம்பர் காமத் அழைப்பு விடுத்துள்ளார். கோவாவில், இம்மாதத்துடன், இளைஞர் காங்கிரசில் தொண்டர்கள் சேர்ப்பு பணி முடிவடைகிறது. இதன் பின்னர் தேர்தல் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மாநில முதல்வர் திகம்பர் காமத் பனாஜியில் கூறுகையில், "மாநிலத்தின் முதல்வராக, இதுவரை, நான், குறைந்தது 1,000 அரசு வேலை வழங்கி உள்ளேன், என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் 35 வயதுக்கு குறைந்தவர்கள் யார் வேண்டுமானாலும், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகலாம். வேலை தேடுபவர்கள், வேலை கிடைத்தவர்கள் என யார் வேண்டுமானாலும் உறுப்பினர்கள் ஆகலாம். நீங்கள் உறுப்பினரானால், வேலை வழங்குவது பற்றி பரிசீலிக்கலாம். இது ஒன்றும் அரசியல் அமைப்பு அல்ல' என்று தெரிவித்தார்.
ஆனால், இளைஞர் காங்கிரஸ் இணையதளத்தில், "நாட்டிலேயே உள்கட்சி தேர்தல் நடத்தும் ஒரே அரசியல் அமைப்பு இளைஞர் காங்கிரஸ்' என்று தெரிவித்துள்ளது. மாநிலத்தில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும், குறைந்தது 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் காமத் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் அரசுக்கு சொந்தமான மார்க்கெட்டிங் பெடரேசன் உணவு குடோன் உள்ளது. இங்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான கோதுமைகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 30 லட்சம் கோதுமைகள் மூட்டை இருந்தன.

இந்த குடோனை தனியார் நிறுவனம் ஒன்று பராமரித்து வந்தது. அரசு அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் அங்கு இருக்கும் கோதுமை மூட்டைகள் சரியான அளவில் இருக்கிறதா என்று அதிகாரிகள் கண்கெடுப்பு நடத்தினார்கள்.

அப்போது 30 லட்சம் மூட்டைகளுக்கு பதில் 29 லட்சம் மூட்டைகளே இருந்தன. 1 லட்சம் மூட்டைகளை காணவில்லை. இவை எப்படி மாயமானது என்று தெரியவில்லை. இது பற்றி குடோனை பராமரித்து வந்த நிறுவனம் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு உணவு குடோனில் இருந்து 1 லட்சம் கோதுமை மூட்டை மாயம்

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் அரசுக்கு சொந்தமான மார்க்கெட்டிங் பெடரேசன் உணவு குடோன் உள்ளது. இங்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான கோதுமைகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 30 லட்சம் கோதுமைகள் மூட்டை இருந்தன.

இந்த குடோனை தனியார் நிறுவனம் ஒன்று பராமரித்து வந்தது. அரசு அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் அங்கு இருக்கும் கோதுமை மூட்டைகள் சரியான அளவில் இருக்கிறதா என்று அதிகாரிகள் கண்கெடுப்பு நடத்தினார்கள்.

அப்போது 30 லட்சம் மூட்டைகளுக்கு பதில் 29 லட்சம் மூட்டைகளே இருந்தன. 1 லட்சம் மூட்டைகளை காணவில்லை. இவை எப்படி மாயமானது என்று தெரியவில்லை. இது பற்றி குடோனை பராமரித்து வந்த நிறுவனம் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடில்லி : "அபரிமிதமான உற்பத்தி, போதுமான அளவில் கையிருப்பு இருப்பதால், கோதுமை, அரிசி மற்றும் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது பற்றி, அரசு தீவிரமாக யோசித்து கொண்டுள்ளது' என, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறினார்.
டில்லியில், நிருபர்களிடம் நேற்று பேசிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறியதாவது: கோதுமை உற்பத்தி, இந்தாண்டு, எதிர்பார்த்ததை விட, அமோகமாக உள்ளது. சிறந்த சீதோஷ்ண நிலை காரணமாக, இதுவரை, 8 கோடியே 40 லட்சம் டன் கோதுமை உற்பத்தியாகி உள்ளது. இது, இந்தாண்டு மதிப்பிடப்பட்டதை விட, 25 லட்சம் டன் அதிகம். இது போன்று, அரிசி மற்றும் சர்க்கரை உற்பத்தியும் அதிகமாக உள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில், சில உணவு தானியப் பொருட்கள் ஏற்றுமதி பற்றி, அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.
இந்திய உணவுக் கழக குடோன்களில், 4 கோடியே 70 லட்சம் டன் கோதுமை மற்றும் அரிசி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, 2 கோடியே 50 லட்சம் டன் அதிகமாக உள்ளது. உலக சந்தைகளில், கோதுமைக்கு தேவை அதிகம் உள்ளது. குறிப்பாக, சீனாவில் வறட்சி காரணமாக, கோதுமை உற்பத்தி குறைந்துள்ளது. எனவே, இந்த சமயத்தில் ஏற்றுமதிக்கு அனுமதித்தால், நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இது குறித்து விவாதிப்பதற்காக, அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுவின் கூட்டம், இந்த வாரம் கூட இருக்கிறது. இதில், அபரிமிதமாக உள்ள கோதுமை, அரிசியை ஏற்றுமதிக்கு அனுமதிப்பது பற்றி முடிவு செய்யப்படும். அரிசி உற்பத்தியை பொறுத்தமட்டில், இந்தாண்டு, 9 கோடியே 40 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன், 8 கோடியே 90 லட்சம் டன்னாக இருந்தது. இந்தாண்டு நல்ல சீதோஷண நிலை இருந்ததால், கோதுமை உற்பத்தி, கடந்தாண்டைவிட, 30 லட்சம் டன் அதிகரித்துள்ளது.
சர்க்கரை ஏற்றுமதியை பொறுத்தமட்டில், கோட்டா ஒதுக்கீடுகள் எல்லாம் போக, 5 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதிக்கு அனுமதிப்பது பற்றி தீவிரமாக யோசிக்கப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு சரத்பவார் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "வெங்காய ஏற்றுமதிக்கு சர்வதேச அளவில் விலை டன் ஒன்றுக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. நமது நாட்டை பொறுத்தமட்டில், டன் ஒன்றுக்கு, குறைந்த பட்ச ஏற்றுமதி விலை, 30 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இது, இந்திய வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு தடையாக உள்ளது. எனவே, இந்த விலை குறைந்தால், சர்வதேச அளவில் இந்திய வெங்காயத்திற்கு போட்டியிருக்கும்' என்றார்.

கோதுமை, அரிசி, சர்க்கரை ஏற்றுமதி: அரசு தீவிர பரிசீலனை

புதுடில்லி : "அபரிமிதமான உற்பத்தி, போதுமான அளவில் கையிருப்பு இருப்பதால், கோதுமை, அரிசி மற்றும் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது பற்றி, அரசு தீவிரமாக யோசித்து கொண்டுள்ளது' என, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறினார்.
டில்லியில், நிருபர்களிடம் நேற்று பேசிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறியதாவது: கோதுமை உற்பத்தி, இந்தாண்டு, எதிர்பார்த்ததை விட, அமோகமாக உள்ளது. சிறந்த சீதோஷ்ண நிலை காரணமாக, இதுவரை, 8 கோடியே 40 லட்சம் டன் கோதுமை உற்பத்தியாகி உள்ளது. இது, இந்தாண்டு மதிப்பிடப்பட்டதை விட, 25 லட்சம் டன் அதிகம். இது போன்று, அரிசி மற்றும் சர்க்கரை உற்பத்தியும் அதிகமாக உள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில், சில உணவு தானியப் பொருட்கள் ஏற்றுமதி பற்றி, அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.
இந்திய உணவுக் கழக குடோன்களில், 4 கோடியே 70 லட்சம் டன் கோதுமை மற்றும் அரிசி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, 2 கோடியே 50 லட்சம் டன் அதிகமாக உள்ளது. உலக சந்தைகளில், கோதுமைக்கு தேவை அதிகம் உள்ளது. குறிப்பாக, சீனாவில் வறட்சி காரணமாக, கோதுமை உற்பத்தி குறைந்துள்ளது. எனவே, இந்த சமயத்தில் ஏற்றுமதிக்கு அனுமதித்தால், நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இது குறித்து விவாதிப்பதற்காக, அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுவின் கூட்டம், இந்த வாரம் கூட இருக்கிறது. இதில், அபரிமிதமாக உள்ள கோதுமை, அரிசியை ஏற்றுமதிக்கு அனுமதிப்பது பற்றி முடிவு செய்யப்படும். அரிசி உற்பத்தியை பொறுத்தமட்டில், இந்தாண்டு, 9 கோடியே 40 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன், 8 கோடியே 90 லட்சம் டன்னாக இருந்தது. இந்தாண்டு நல்ல சீதோஷண நிலை இருந்ததால், கோதுமை உற்பத்தி, கடந்தாண்டைவிட, 30 லட்சம் டன் அதிகரித்துள்ளது.
சர்க்கரை ஏற்றுமதியை பொறுத்தமட்டில், கோட்டா ஒதுக்கீடுகள் எல்லாம் போக, 5 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதிக்கு அனுமதிப்பது பற்றி தீவிரமாக யோசிக்கப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு சரத்பவார் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "வெங்காய ஏற்றுமதிக்கு சர்வதேச அளவில் விலை டன் ஒன்றுக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. நமது நாட்டை பொறுத்தமட்டில், டன் ஒன்றுக்கு, குறைந்த பட்ச ஏற்றுமதி விலை, 30 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இது, இந்திய வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு தடையாக உள்ளது. எனவே, இந்த விலை குறைந்தால், சர்வதேச அளவில் இந்திய வெங்காயத்திற்கு போட்டியிருக்கும்' என்றார்.

சென்னை:""அரசு கேபிள் "டிவி' கழகத்தின் நிலை என்ன, அதன் ஊழியர்களின் நிலை என்ன, அரசு கேபிள் கிடைக்குமா, கிடைக்காதா?'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி எழுப்பியது. பட்ஜெட் மீது சட்டசபையில் நடந்த விவாதம்:
|ராமசாமி - காங்கிரஸ்: மீனவர்களிடம் எல்லைப் பிரச்னை உள்ளது. இதற்காக கடல் எல்லையில் ஒளிரும் மிதவைகளை பொருத்த வேண்டுமென 20 ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். இன்றுவரை நடக்கவில்லை. ஜல்லிக்கட்டு, கோர்ட் உத்தரவுப்படி சில இடங்களில் நடக்கிறது. பல இடங்களில் நடத்த மறுக்கப்படுகிறது. பல நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதை எந்தளவு தளர்த்தலாம் என்பதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
சிவகங்கையில் 3,000 பேருக்கு பட்டா வழங்கி அரசு அங்கீகரித்து, அனைத்து வசதிகளையும் அங்கு செய்து கொடுத்திருந்தது. தற்போது, அந்த 300 ஏக்கர் நிலத்திலும் பத்திரப்பதிவு கூடாது என்று கூறுவது சரியாக இருக்குமா?
|அமைச்சர் சுரேஷ் ராஜன்: அந்த இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்பதால், பட்டா பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமசாமி: யாரோ தவறு செய்திருக்கலாம். அந்த நிலம் அவர்களிடம் இல்லை. இரண்டு, மூன்று கைகள் மாறி தற்போது அதை வைத்துள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் பொதுப்பணித் துறை மூலம் கட்டடம் கட்டுவதற்கு டெண்டர் விடப்படுகிறது. ஆனால், டெண்டர் எடுக்க ஆளில்லை. காரணம், கட்டட மதிப்பீடுகள் மிக குறைவாக இருப்பது தான்.
வேல்முருகன் - பா.ம.க: இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்களுக்கு பயிற்சி அளித்து, பரீட்சார்த்த முறையில் ஆயுதங்களை வழங்க வேண்டும்.
நெய்வேலியில் ஒப்பந்த தொழிலாளர்கள், தோட்ட தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் போன்றவர்களது குடியிருப்புகளுக்கு மின்சாரம் மறுக்கப்படுகிறது. முன்னறிவிப்பின்றி அவர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். தொழிற்சங்கங்களுடன் பேசி நிர்வாகம் முடிவெடுப்பதில்லை.சேலம், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களை பிரிக்க வேண்டும். "டாஸ்மாக்' ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தித் தர வேண்டும். மெரீனா கடலில் கடந்த ஆண்டு 44 பேரும், இந்த ஆண்டு இதுவரை 25 பேரும் பலியாகி உள்ளனர். இதை தடுக்க, கடலில் 10 முதல் 15 அடி வரை வலை அல்லது சுவர் ஏற்படுத்த வேண்டும்.தொலைக்காட்சிகளில் வக்கிரமான பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைக்கின்றனர். ஆபாச உடலசைவுகளை செய்கின்றனர். சமூக கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கிறது. இதை தடுக்க வேண்டும். பெரிய நட்சத்திர ஓட்டல்களில், "டிஸ்கோதே, பப்' போன்ற நிகழ்ச்சிகள் நடப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.
பாலபாரதி: தற்போது மக்கள் ஏழ்மையுடனும், வறுமையுடனும் தான் கூட்டணி வைத்துள்ளனர். 20 ரூபாய்க்கு சாப்பாடு விற்கப்படுமென அரசு உத்தரவிட்டது. ஆனால், இலையில் உப்பு, ஊறுகாய் மட்டும் தான் 20 ரூபாய்க்கு வைக்கப்படுகிறது.தனியார் நிறுவனங்கள் சரியாக சம்பளம் வழங்குவதில்லை. தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5,000 ரூபாய் தான் சம்பளம் பெறுகின்றனர். கால்நடை துப்புரவு பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. பி.இ., படித்தவர்களுக்கு 7,000 ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுத்து, 12 மணி நேரம் வேலை வாங்குகின்றனர்.இங்கு எம்.எல்.ஏ.,க்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், சட்டசபையில் உள்ள சிப்பந்திகளுக்கு என்ன சம்பளம் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். 80 சதவீத மக்கள் இந்த நிலையில் தான் உள்ளனர். தொழிலாளர்களின் உழைப்பு, மதிப்பு, கூலி உயரவில்லை. எனவே, இந்த ஆட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
பீட்டர் அல்போன்ஸ்: மேற்குவங்கத்தில் எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தையும், கடைநிலை ஊழியர்களின் சம்பளத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சம்பள வித்தியாசத்துக்கு அனைத்து கட்சிகளுமே விடை தேடிக் கொண்டுள்ளன. சம்பள இடைவெளியை குறைக்க வழி தேட வேண்டும். கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் மேற்குவங்கத்திலும், கேரளாவிலும் தனி நபர் வருமானத்தை கணக்கில் கொள்ள வேண்டும். இன்னும் அங்கு கைவண்டி இழுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1972லேயே கைவண்டி நிறுத்தப்பட்டுள்ளது. சமூக நீதிக்கு மத்திய அரசே பொறுப்பு என்பது தவறு.
பாலபாரதி: எப்போது கேட்டாலும் திசை திருப்பப் பார்க்கிறார். நாட்டில் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ராகுல் அவர்களது வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறுகிறார். இரண்டு ஏக்கர் நில திட்டத்தில், ராமநாதபுரத்தில் பட்டா பெற்றவர்கள், தற்போது நிலத்தை காணவில்லை என்று கூறுகின்றனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி: ராமநாதபுரத்தில் 200 பேருக்கு 200 ஏக்கர் நிலம் அளந்து பிரித்து கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் இதுவரை அந்த இடத்தில் விவசாயம் செய்யவில்லை. தற்போது அந்த நிலத்தை விற்பதற்காக கேட்கின்றனர்.
பாலபாரதி: கலர் "டிவி' வழங்குகிறீர்கள். தமிழக அரசின் கேபிள் "டிவி' கார்ப்பரேஷனின் நிலை என்ன, அதன் ஊழியர்கள் நிலை என்ன, அரசு கேபிள் கிடைக்குமா, கிடைக்காதா? மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தியிருந்தாலே லட்சம் கோடி கடன் பெற்றிருக்கத் தேவையில்லை.

அரசு கேபிள் "டிவி' என்ன கதி ஆச்சு?

சென்னை:""அரசு கேபிள் "டிவி' கழகத்தின் நிலை என்ன, அதன் ஊழியர்களின் நிலை என்ன, அரசு கேபிள் கிடைக்குமா, கிடைக்காதா?'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி எழுப்பியது. பட்ஜெட் மீது சட்டசபையில் நடந்த விவாதம்:
|ராமசாமி - காங்கிரஸ்: மீனவர்களிடம் எல்லைப் பிரச்னை உள்ளது. இதற்காக கடல் எல்லையில் ஒளிரும் மிதவைகளை பொருத்த வேண்டுமென 20 ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். இன்றுவரை நடக்கவில்லை. ஜல்லிக்கட்டு, கோர்ட் உத்தரவுப்படி சில இடங்களில் நடக்கிறது. பல இடங்களில் நடத்த மறுக்கப்படுகிறது. பல நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதை எந்தளவு தளர்த்தலாம் என்பதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
சிவகங்கையில் 3,000 பேருக்கு பட்டா வழங்கி அரசு அங்கீகரித்து, அனைத்து வசதிகளையும் அங்கு செய்து கொடுத்திருந்தது. தற்போது, அந்த 300 ஏக்கர் நிலத்திலும் பத்திரப்பதிவு கூடாது என்று கூறுவது சரியாக இருக்குமா?
|அமைச்சர் சுரேஷ் ராஜன்: அந்த இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்பதால், பட்டா பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமசாமி: யாரோ தவறு செய்திருக்கலாம். அந்த நிலம் அவர்களிடம் இல்லை. இரண்டு, மூன்று கைகள் மாறி தற்போது அதை வைத்துள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் பொதுப்பணித் துறை மூலம் கட்டடம் கட்டுவதற்கு டெண்டர் விடப்படுகிறது. ஆனால், டெண்டர் எடுக்க ஆளில்லை. காரணம், கட்டட மதிப்பீடுகள் மிக குறைவாக இருப்பது தான்.
வேல்முருகன் - பா.ம.க: இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்களுக்கு பயிற்சி அளித்து, பரீட்சார்த்த முறையில் ஆயுதங்களை வழங்க வேண்டும்.
நெய்வேலியில் ஒப்பந்த தொழிலாளர்கள், தோட்ட தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் போன்றவர்களது குடியிருப்புகளுக்கு மின்சாரம் மறுக்கப்படுகிறது. முன்னறிவிப்பின்றி அவர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். தொழிற்சங்கங்களுடன் பேசி நிர்வாகம் முடிவெடுப்பதில்லை.சேலம், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களை பிரிக்க வேண்டும். "டாஸ்மாக்' ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தித் தர வேண்டும். மெரீனா கடலில் கடந்த ஆண்டு 44 பேரும், இந்த ஆண்டு இதுவரை 25 பேரும் பலியாகி உள்ளனர். இதை தடுக்க, கடலில் 10 முதல் 15 அடி வரை வலை அல்லது சுவர் ஏற்படுத்த வேண்டும்.தொலைக்காட்சிகளில் வக்கிரமான பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைக்கின்றனர். ஆபாச உடலசைவுகளை செய்கின்றனர். சமூக கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கிறது. இதை தடுக்க வேண்டும். பெரிய நட்சத்திர ஓட்டல்களில், "டிஸ்கோதே, பப்' போன்ற நிகழ்ச்சிகள் நடப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.
பாலபாரதி: தற்போது மக்கள் ஏழ்மையுடனும், வறுமையுடனும் தான் கூட்டணி வைத்துள்ளனர். 20 ரூபாய்க்கு சாப்பாடு விற்கப்படுமென அரசு உத்தரவிட்டது. ஆனால், இலையில் உப்பு, ஊறுகாய் மட்டும் தான் 20 ரூபாய்க்கு வைக்கப்படுகிறது.தனியார் நிறுவனங்கள் சரியாக சம்பளம் வழங்குவதில்லை. தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5,000 ரூபாய் தான் சம்பளம் பெறுகின்றனர். கால்நடை துப்புரவு பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. பி.இ., படித்தவர்களுக்கு 7,000 ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுத்து, 12 மணி நேரம் வேலை வாங்குகின்றனர்.இங்கு எம்.எல்.ஏ.,க்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், சட்டசபையில் உள்ள சிப்பந்திகளுக்கு என்ன சம்பளம் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். 80 சதவீத மக்கள் இந்த நிலையில் தான் உள்ளனர். தொழிலாளர்களின் உழைப்பு, மதிப்பு, கூலி உயரவில்லை. எனவே, இந்த ஆட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
பீட்டர் அல்போன்ஸ்: மேற்குவங்கத்தில் எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தையும், கடைநிலை ஊழியர்களின் சம்பளத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சம்பள வித்தியாசத்துக்கு அனைத்து கட்சிகளுமே விடை தேடிக் கொண்டுள்ளன. சம்பள இடைவெளியை குறைக்க வழி தேட வேண்டும். கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் மேற்குவங்கத்திலும், கேரளாவிலும் தனி நபர் வருமானத்தை கணக்கில் கொள்ள வேண்டும். இன்னும் அங்கு கைவண்டி இழுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1972லேயே கைவண்டி நிறுத்தப்பட்டுள்ளது. சமூக நீதிக்கு மத்திய அரசே பொறுப்பு என்பது தவறு.
பாலபாரதி: எப்போது கேட்டாலும் திசை திருப்பப் பார்க்கிறார். நாட்டில் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ராகுல் அவர்களது வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறுகிறார். இரண்டு ஏக்கர் நில திட்டத்தில், ராமநாதபுரத்தில் பட்டா பெற்றவர்கள், தற்போது நிலத்தை காணவில்லை என்று கூறுகின்றனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி: ராமநாதபுரத்தில் 200 பேருக்கு 200 ஏக்கர் நிலம் அளந்து பிரித்து கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் இதுவரை அந்த இடத்தில் விவசாயம் செய்யவில்லை. தற்போது அந்த நிலத்தை விற்பதற்காக கேட்கின்றனர்.
பாலபாரதி: கலர் "டிவி' வழங்குகிறீர்கள். தமிழக அரசின் கேபிள் "டிவி' கார்ப்பரேஷனின் நிலை என்ன, அதன் ஊழியர்கள் நிலை என்ன, அரசு கேபிள் கிடைக்குமா, கிடைக்காதா? மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தியிருந்தாலே லட்சம் கோடி கடன் பெற்றிருக்கத் தேவையில்லை.


முக நூல்

Popular Posts