background img

புதிய வரவு

Showing posts with label Jeyalalitha. Show all posts
Showing posts with label Jeyalalitha. Show all posts
பெட்ரோல் விலையை 2 ரூபாய் மட்டுமே குறைத்துள்ளது மத்திய அரசின் கண்துடைப்பு நாடகம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நடுத்தர மற்றும் ஏழை மக்களை பாதிக்கும் பெட்ரோல் விலை உயர்வை முற்றிலுமாக திரும்ப பெறவேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை கடந்த வாரம் லிட்டருக்கு 7ரூபாய் 50 பைசா அளவிற்கு உயர்த்தின. இந்தியா முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி கடந்த 30ம் தேதி எதிர்கட்சிகள் நாடு தழுவிய பந்த் நடத்தின. இதனை அடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 23-ந் தேதி நள்ளிரவு முதல் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்று உயர்த்தி மக்கள் மீது தாங்கொணா சுமையை ஏற்றியது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக விலைவாசி ஏறிவரும் நிலையில் மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும் வகையில் இந்த பெட்ரோல் விலை உயர்வு உள்ளது என்பதை அன்றே நான் சுட்டிக்காட்டி, எனது கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தேன்.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோத செயல் காரணமாக ஏழை எளிய, நடுத்தர மக்களின் மாதவருமானத்தில் பெருமளவு பற்றாக்குறை ஏற்படும் என்பதையும், மக்களின் வாங்கும் சக்தி மற்றும் பொருளாதார நிலை மேலும் வீழ்ச்சி அடையும் என்பதையும் சுட்டிக்காட்டி, பெட்ரோலுக்கான இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தேன்.

அ.தி.மு.க சார்பில் இந்தப் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, மாவட்டந்தோறும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பல்வேறு அமைப்புகளும், பலதரப்பட்ட மக்களும் இந்த விலை உயர்வுக்கு நாள்தோறும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் 2 ரூபாயை இன்று நள்ளிரவு முதல் குறைத்துள்ளது.

இந்த விலைக் குறைப்பு ``யானைப் பசிக்கு சோளப்பொறி'' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

உயர்த்தப்பட்ட 7 ரூபாய் 50 பைசாவில் 2 ரூபாய் குறைப்பு என்பது ஏழை எளிய மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன்தராது. இந்த சிறிய அளவிலான விலை குறைப்பு மக்களின் கோபத்தை எந்தவிதத்திலும் தணித்துவிடாது. இதற்குப் பின்னும், பெட்ரோல் விலை ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு சுமையானதாகவே இருக்கும். எனவே, இத்தகைய விலை குறைப்பு என்ற கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றாமல், ஏற்றப்பட்ட பெட்ரோல் விலையை முழுவதும் திரும்பப் பெறவேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதாவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வு கண்துடைப்பு நாடகம் : ஜெயலலிதா

பெட்ரோல் விலையை 2 ரூபாய் மட்டுமே குறைத்துள்ளது மத்திய அரசின் கண்துடைப்பு நாடகம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நடுத்தர மற்றும் ஏழை மக்களை பாதிக்கும் பெட்ரோல் விலை உயர்வை முற்றிலுமாக திரும்ப பெறவேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை கடந்த வாரம் லிட்டருக்கு 7ரூபாய் 50 பைசா அளவிற்கு உயர்த்தின. இந்தியா முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி கடந்த 30ம் தேதி எதிர்கட்சிகள் நாடு தழுவிய பந்த் நடத்தின. இதனை அடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 23-ந் தேதி நள்ளிரவு முதல் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்று உயர்த்தி மக்கள் மீது தாங்கொணா சுமையை ஏற்றியது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக விலைவாசி ஏறிவரும் நிலையில் மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும் வகையில் இந்த பெட்ரோல் விலை உயர்வு உள்ளது என்பதை அன்றே நான் சுட்டிக்காட்டி, எனது கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தேன்.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோத செயல் காரணமாக ஏழை எளிய, நடுத்தர மக்களின் மாதவருமானத்தில் பெருமளவு பற்றாக்குறை ஏற்படும் என்பதையும், மக்களின் வாங்கும் சக்தி மற்றும் பொருளாதார நிலை மேலும் வீழ்ச்சி அடையும் என்பதையும் சுட்டிக்காட்டி, பெட்ரோலுக்கான இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தேன்.

அ.தி.மு.க சார்பில் இந்தப் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, மாவட்டந்தோறும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பல்வேறு அமைப்புகளும், பலதரப்பட்ட மக்களும் இந்த விலை உயர்வுக்கு நாள்தோறும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் 2 ரூபாயை இன்று நள்ளிரவு முதல் குறைத்துள்ளது.

இந்த விலைக் குறைப்பு ``யானைப் பசிக்கு சோளப்பொறி'' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

உயர்த்தப்பட்ட 7 ரூபாய் 50 பைசாவில் 2 ரூபாய் குறைப்பு என்பது ஏழை எளிய மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன்தராது. இந்த சிறிய அளவிலான விலை குறைப்பு மக்களின் கோபத்தை எந்தவிதத்திலும் தணித்துவிடாது. இதற்குப் பின்னும், பெட்ரோல் விலை ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு சுமையானதாகவே இருக்கும். எனவே, இத்தகைய விலை குறைப்பு என்ற கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றாமல், ஏற்றப்பட்ட பெட்ரோல் விலையை முழுவதும் திரும்பப் பெறவேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதாவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வுக்காக தோண்டப்பட்ட துளைகளை அடைக்க அண்மையில் தமிழக அதிகாரிகள் சென்றிருந்தனர். ஆனால் அவர்களை கேரள அதிகாரிகள் தடுத்து தாக்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரம் குறித்து இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கேரளத்தின் அடாவடியை சுட்டிக்காட்டியுள்ளதுடன் அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகள் நிறுத்தப்படவில்லை எனில், தமிழக போலீசாரையே அங்கு நிறுத்த நேரிடும் என்றும் பிரதமருக்கு ஜெயலலிதா தமது கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு படையை அனுப்புங்கள்: மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வுக்காக தோண்டப்பட்ட துளைகளை அடைக்க அண்மையில் தமிழக அதிகாரிகள் சென்றிருந்தனர். ஆனால் அவர்களை கேரள அதிகாரிகள் தடுத்து தாக்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரம் குறித்து இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கேரளத்தின் அடாவடியை சுட்டிக்காட்டியுள்ளதுடன் அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகள் நிறுத்தப்படவில்லை எனில், தமிழக போலீசாரையே அங்கு நிறுத்த நேரிடும் என்றும் பிரதமருக்கு ஜெயலலிதா தமது கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவிடம் எப்படியெல்லாம் காக்கா பிடிக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர்கள் ரூம் போட்டுத்தான் யோசிப்பார்கள் என்பதை அமைச்சர் செந்தில்பாலாஜி நிரூபித்திருக்கிறார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அதிமுகவினர் அம்மா, தாயே ஆதிபராசக்தி என போஸ்டர் அடித்தும், நாளிதழ்களில் விளம்பரம் செய்வதும் தமிழக மக்கள் அறிந்ததே.

தற்போது அதையெல்லாம் தாண்டி ஆர்வக்கோளாறு காரணமாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 12 பக்க வண்ண புத்தகம் ஒன்றை தமது சொந்த செலவில் பல லட்சம் பிரதிகள் அச்சிட்டு அதில் தொலைநோக்கு திட்டம் 2023 குறித்த தகவல்கள், போக்குவரத்து துறையின் சாதனைகளை விளக்கும் வண்ணமும், தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் பங்கு, வளர்ச்சி உளளிட்டவைகள் அடங்கிய விரிவான தகவல்கள் இடம்பெறச் செய்துள்ளார்.

அதில், "வாட்டம் கொண்டிருந்த போக்குவரத்து துறைக்கு ஏற்றம் தரும் மாபெரும் சாதனை திட்டங்கள் தந்து ஒரே ஆண்டில் நூற்றாண்டு சாதனைகளை வழங்கி போக்குவரத்து துறையை தலைநிமிர செய்திட்ட சரித்திரம் போற்றும் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மலர் பாதங்களில் கோடான கோடி நன்றி மலர்களை சமர்பித்து பணிந்து வணங்குகிறேன்" என்று குறிப்பிட்டுள்ள செந்தில்பாலாஜி அதிரடியாக "மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் விசுவாசமிக்க மாணவன்" வி செந்தில்பாலாஜி, போக்குவரத்துறை அமைச்சர் என அச்சடித்துள்ளார்.

ஆக ஜெயலலிதாவுக்கு இப்பொழுது டீச்சர் போஸ்டையும் கொடுத்துவிட்டார் செந்தில்பாலாஜி..

முதல்வர் ஜெயலலிதாவை 'டீச்சராக்கிய' அமைச்சர் செந்தில்பாலாஜி!

முதல்வர் ஜெயலலிதாவிடம் எப்படியெல்லாம் காக்கா பிடிக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர்கள் ரூம் போட்டுத்தான் யோசிப்பார்கள் என்பதை அமைச்சர் செந்தில்பாலாஜி நிரூபித்திருக்கிறார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அதிமுகவினர் அம்மா, தாயே ஆதிபராசக்தி என போஸ்டர் அடித்தும், நாளிதழ்களில் விளம்பரம் செய்வதும் தமிழக மக்கள் அறிந்ததே.

தற்போது அதையெல்லாம் தாண்டி ஆர்வக்கோளாறு காரணமாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 12 பக்க வண்ண புத்தகம் ஒன்றை தமது சொந்த செலவில் பல லட்சம் பிரதிகள் அச்சிட்டு அதில் தொலைநோக்கு திட்டம் 2023 குறித்த தகவல்கள், போக்குவரத்து துறையின் சாதனைகளை விளக்கும் வண்ணமும், தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் பங்கு, வளர்ச்சி உளளிட்டவைகள் அடங்கிய விரிவான தகவல்கள் இடம்பெறச் செய்துள்ளார்.

அதில், "வாட்டம் கொண்டிருந்த போக்குவரத்து துறைக்கு ஏற்றம் தரும் மாபெரும் சாதனை திட்டங்கள் தந்து ஒரே ஆண்டில் நூற்றாண்டு சாதனைகளை வழங்கி போக்குவரத்து துறையை தலைநிமிர செய்திட்ட சரித்திரம் போற்றும் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மலர் பாதங்களில் கோடான கோடி நன்றி மலர்களை சமர்பித்து பணிந்து வணங்குகிறேன்" என்று குறிப்பிட்டுள்ள செந்தில்பாலாஜி அதிரடியாக "மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் விசுவாசமிக்க மாணவன்" வி செந்தில்பாலாஜி, போக்குவரத்துறை அமைச்சர் என அச்சடித்துள்ளார்.

ஆக ஜெயலலிதாவுக்கு இப்பொழுது டீச்சர் போஸ்டையும் கொடுத்துவிட்டார் செந்தில்பாலாஜி..

முக நூல்

Popular Posts