background img

புதிய வரவு

Showing posts with label kerala. Show all posts
Showing posts with label kerala. Show all posts
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வுக்காக தோண்டப்பட்ட துளைகளை அடைக்க அண்மையில் தமிழக அதிகாரிகள் சென்றிருந்தனர். ஆனால் அவர்களை கேரள அதிகாரிகள் தடுத்து தாக்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரம் குறித்து இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கேரளத்தின் அடாவடியை சுட்டிக்காட்டியுள்ளதுடன் அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகள் நிறுத்தப்படவில்லை எனில், தமிழக போலீசாரையே அங்கு நிறுத்த நேரிடும் என்றும் பிரதமருக்கு ஜெயலலிதா தமது கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு படையை அனுப்புங்கள்: மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வுக்காக தோண்டப்பட்ட துளைகளை அடைக்க அண்மையில் தமிழக அதிகாரிகள் சென்றிருந்தனர். ஆனால் அவர்களை கேரள அதிகாரிகள் தடுத்து தாக்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரம் குறித்து இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கேரளத்தின் அடாவடியை சுட்டிக்காட்டியுள்ளதுடன் அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகள் நிறுத்தப்படவில்லை எனில், தமிழக போலீசாரையே அங்கு நிறுத்த நேரிடும் என்றும் பிரதமருக்கு ஜெயலலிதா தமது கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி இன்று உம்மன்சாண்டி தலைமையில் ஆட்சி அமைக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று மதியம் 2 மணிக்கு நடக்கும் பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரி உம்மன் சாண்டிக்கு கவர்னர் கவாய் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

முதல் கட்டமாக உம்மன் சாண்டியுடன் கூட்டணி கட்சியான கேரள காங்கிரசைச் சேர்ந்த மானி நிதிதுறை மந்திரியாகவும், ஜோசப் நீர் வளத்துறை மந்திரியாகவும் பதவி ஏற்கிறார்கள். முஸ்லிம் லீக் கட்சி குஞ்சாலிகுட்டிக்கு விவசாய துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சோசலிஸ்டு ஜனதா கட்சியைச் சேர்ந்த மோகனன் தொழில் வள மந்திரியாகிறார். கேரள காங்கிரஸ்(ஜே) கட்சியைச் சேர்ந்த ஜேக்கப்புக்கு உணவு துறையும், சிபுபேபிஜானுக்கு தொழிலாளர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நடிகர் கணேஷ்குமார் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை இலாகாவுக்கு மந்திரியாக பொறுப்பேற்கிறார். உம்மன்சாண்டியுடன் இவர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள். இதையடுத்து காங்கிரசைச் சேர்ந்த திருவாஞ்சூர் ராதா கிருஷ்ணன் ஆரியாடம் பீர்முகமது, ஜோசப், சிவக் குமார், அடூர் சுரேஷ், பாலகிருஷ்ணன், கெங்காதரன், தீரன்பிரதா பன் ஆகியோருக்கு மந்திரி பதவி வழங்கப்பட உள்ளது.

முதல்-மந்திரி பதவி ஏற்ற பின்பு உம்மன்சாண்டியும், மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் அமைச்சர்கள் பட்டியலுடன் நாளை டெல்லி செல்கிறார்கள். அங்கு சோனியாகாந்தி மற்றும் காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி மந்திரிகள் பட்டியலை இறுதி செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து வருகிற 23-ந்தேதி நடைபெறும் விழாவில் காங்கிரசைச் சேர்ந்த 9 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள்.

கவர்னர் மாளிகையில் விழா: கேரள முதல்-மந்திரியாக உம்மன்சாண்டி இன்று பதவி ஏற்பு; மந்திரி சபையில் கூட்டணி கட்சிகளுக்கு 6 இடம்

கேரளா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி இன்று உம்மன்சாண்டி தலைமையில் ஆட்சி அமைக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று மதியம் 2 மணிக்கு நடக்கும் பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரி உம்மன் சாண்டிக்கு கவர்னர் கவாய் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

முதல் கட்டமாக உம்மன் சாண்டியுடன் கூட்டணி கட்சியான கேரள காங்கிரசைச் சேர்ந்த மானி நிதிதுறை மந்திரியாகவும், ஜோசப் நீர் வளத்துறை மந்திரியாகவும் பதவி ஏற்கிறார்கள். முஸ்லிம் லீக் கட்சி குஞ்சாலிகுட்டிக்கு விவசாய துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சோசலிஸ்டு ஜனதா கட்சியைச் சேர்ந்த மோகனன் தொழில் வள மந்திரியாகிறார். கேரள காங்கிரஸ்(ஜே) கட்சியைச் சேர்ந்த ஜேக்கப்புக்கு உணவு துறையும், சிபுபேபிஜானுக்கு தொழிலாளர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நடிகர் கணேஷ்குமார் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை இலாகாவுக்கு மந்திரியாக பொறுப்பேற்கிறார். உம்மன்சாண்டியுடன் இவர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள். இதையடுத்து காங்கிரசைச் சேர்ந்த திருவாஞ்சூர் ராதா கிருஷ்ணன் ஆரியாடம் பீர்முகமது, ஜோசப், சிவக் குமார், அடூர் சுரேஷ், பாலகிருஷ்ணன், கெங்காதரன், தீரன்பிரதா பன் ஆகியோருக்கு மந்திரி பதவி வழங்கப்பட உள்ளது.

முதல்-மந்திரி பதவி ஏற்ற பின்பு உம்மன்சாண்டியும், மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் அமைச்சர்கள் பட்டியலுடன் நாளை டெல்லி செல்கிறார்கள். அங்கு சோனியாகாந்தி மற்றும் காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி மந்திரிகள் பட்டியலை இறுதி செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து வருகிற 23-ந்தேதி நடைபெறும் விழாவில் காங்கிரசைச் சேர்ந்த 9 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள்.

கிணத்துக்கடவு போலீஸ் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நீதிபதி மற்றும் போலீசார் சிக்கலாம்பாளையம் வழியாக கேரளா செல்லும் சாலையில் வடபுதூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மினி லாரி வேகமாக வந்தது.

அதனை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால் மினி வேன் நிற்காமல் சென்றது. உடனடியாக இன்ஸ்பெக்டர் தனது மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று மினி லாரியை மடக்கினார்.

அப்போது அதில் இருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். டிரைவர் அப்துல் ஜப்பார் போலீசில் பிடிபட்டார். அவர் கோவை போத்தனூரை சேர்ந்தவர். மினி வேனை போலீசார் சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. அதனை கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து டிரைவர் அப்துல்ஜப்பார் கைது செய்யப்பட்டார். மினி லாரியும், கடத்தப்பட்ட ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவர் கோவை கரும்புக்கடையை சேர்ந்த தாவுத் என்பதும், அவர் தான் ரேஷன் அரிசியை கடத்தியதும் தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

கிணத்துக்கடவு போலீஸ் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நீதிபதி மற்றும் போலீசார் சிக்கலாம்பாளையம் வழியாக கேரளா செல்லும் சாலையில் வடபுதூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மினி லாரி வேகமாக வந்தது.

அதனை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால் மினி வேன் நிற்காமல் சென்றது. உடனடியாக இன்ஸ்பெக்டர் தனது மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று மினி லாரியை மடக்கினார்.

அப்போது அதில் இருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். டிரைவர் அப்துல் ஜப்பார் போலீசில் பிடிபட்டார். அவர் கோவை போத்தனூரை சேர்ந்தவர். மினி வேனை போலீசார் சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. அதனை கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து டிரைவர் அப்துல்ஜப்பார் கைது செய்யப்பட்டார். மினி லாரியும், கடத்தப்பட்ட ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவர் கோவை கரும்புக்கடையை சேர்ந்த தாவுத் என்பதும், அவர் தான் ரேஷன் அரிசியை கடத்தியதும் தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவனந்தபுரம்:கேரளாவின் கோட்டயம் மாவட்டம் புதுபள்ளி தொகுதியில், 10வது முறையாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் உம்மன்சாண்டி அடுத்த முதல்வராவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.கேரளாவில் மூத்த காங்கிரஸ் தலைவர்களான அந்தோணி, வயலார் ரவியை தொடர்ந்து மக்களிடம் அதிகம் செல்வாக்கு பெற்றவர் உம்மன்சாண்டி. தேசிய அரசியலில் அவ்வளவாக நாட்டம் இல்லாத உம்மன்சாண்டி, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதில்லை.
கோட்டயம் மாவட்டத்தின் புதுபள்ளி தொகுதியில், கடந்த 1970ம் ஆண்டு முதல், தொடர்ந்து ஒன்பது முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளார். ஏற்கனவே, இவர் கேரள முதல்வராகவும் இருந்துள்ளார். அந்தோணியும், வயலார் ரவியும் மத்திய அமைச்சர்களாக உள்ளதால், இந்த முறை உம்மன்சாண்டி வெற்றி பெற்றால் முதல்வராவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.புதுபள்ளி தொகுதியில் இவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுஜாசூசன் போட்டியிடுகிறார். "புதுபள்ளி தொகுதியில் உம்மன்சாண்டி தோற்றால் அது அதிசயமாக தான் கருதப்படும்' என, காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.ஆனால், கல்லூரி விரிவுரையாளரான சூசன் குறிப்பிடுகையில், "அதிசயம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஒரே நபரை தொடர்ந்து சட்டசபைக்கு அனுப்புவது பண்ணையாளர் நடைமுறைக்கு சமமானதாகும். ஜனநாயக நடைமுறைப்படி இது தவறு.
இத்தொகுதி மக்கள் புதிய வேட்பாளரை விரும்பு கின்றனர். எனக்கு பெண்களிடம் நிறைய செல்வாக்கு உள்ளது' என தெரிவித்துள்ளார்.கடந்த தேர்தலில் உம்மன்சாண்டியை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சிந்து ஜாய், தற்போது அந்த கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். கடந்த முறை சாண்டியை எதிர்த்து பிரசாரம் செய்த சிந்து ஜாய், தற்போது, சாண்டியை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

10வது முறையாக போட்டி:உம்மன்சாண்டி வெல்வாரா?

திருவனந்தபுரம்:கேரளாவின் கோட்டயம் மாவட்டம் புதுபள்ளி தொகுதியில், 10வது முறையாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் உம்மன்சாண்டி அடுத்த முதல்வராவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.கேரளாவில் மூத்த காங்கிரஸ் தலைவர்களான அந்தோணி, வயலார் ரவியை தொடர்ந்து மக்களிடம் அதிகம் செல்வாக்கு பெற்றவர் உம்மன்சாண்டி. தேசிய அரசியலில் அவ்வளவாக நாட்டம் இல்லாத உம்மன்சாண்டி, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதில்லை.
கோட்டயம் மாவட்டத்தின் புதுபள்ளி தொகுதியில், கடந்த 1970ம் ஆண்டு முதல், தொடர்ந்து ஒன்பது முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளார். ஏற்கனவே, இவர் கேரள முதல்வராகவும் இருந்துள்ளார். அந்தோணியும், வயலார் ரவியும் மத்திய அமைச்சர்களாக உள்ளதால், இந்த முறை உம்மன்சாண்டி வெற்றி பெற்றால் முதல்வராவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.புதுபள்ளி தொகுதியில் இவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுஜாசூசன் போட்டியிடுகிறார். "புதுபள்ளி தொகுதியில் உம்மன்சாண்டி தோற்றால் அது அதிசயமாக தான் கருதப்படும்' என, காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.ஆனால், கல்லூரி விரிவுரையாளரான சூசன் குறிப்பிடுகையில், "அதிசயம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஒரே நபரை தொடர்ந்து சட்டசபைக்கு அனுப்புவது பண்ணையாளர் நடைமுறைக்கு சமமானதாகும். ஜனநாயக நடைமுறைப்படி இது தவறு.
இத்தொகுதி மக்கள் புதிய வேட்பாளரை விரும்பு கின்றனர். எனக்கு பெண்களிடம் நிறைய செல்வாக்கு உள்ளது' என தெரிவித்துள்ளார்.கடந்த தேர்தலில் உம்மன்சாண்டியை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சிந்து ஜாய், தற்போது அந்த கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். கடந்த முறை சாண்டியை எதிர்த்து பிரசாரம் செய்த சிந்து ஜாய், தற்போது, சாண்டியை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

திருவனந்தபுரம் : கேரள மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 81 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 59 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. இதன் மூலம், பல நாட்களாக நடந்து வந்த சிக்கல்களில் இருந்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விடுபட்டு நிம்மதியடைந்துள்ளன.
கேரள மாநிலத்தில் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இக்கூட்டணியில் கேரள காங்கிரஸ் (மானி), ஜனாதிபத்திய சம்ரக்ஷன் சமிதி (ஜெ.எஸ்.எஸ்.), முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (பாலகிருஷ்ண பிள்ளை), ராஷ்டிரிய சோஷலிஸ்ட் கட்சி, சி.எம்.பி., மற்றும் கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில், கேரள காங்கிரஸ் (மானி) கட்சி, ஜெ.எஸ்.எஸ்., முஸ்லிம் லீக், ஆர்.எஸ்.பி., ஆகியவை தங்களுக்கு கடந்த தேர்தலைவிட அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கோரின. இதனால் ஏற்பட்ட சிக்கல்களால் காங்கிரஸ் கட்சி பெரிதும் திணறி வந்தது. இதில் குறிப்பாக, இடமலையார் பிரச்னையில் பாலகிருஷ்ண பிள்ளைக்கு சுப்ரீம் கோர்ட் சிறை தண்டனை விதித்தது; பாமாயில் வழக்கு மீண்டும் தூசி தட்டப்படுவது; கூட்டணியை விட்டு ஜெ.எஸ்.எஸ்., கட்சி விலகிவிடுமோ என்ற அச்சம் போன்ற காரணங்கள் முக்கியமானவை.
கேரள காங்கிரஸ் (மானி) கட்சி தங்களுக்கு 22 தொகுதிகள் தேவை என வற்புறுத்தி வந்தாலும், அக்கட்சியுடன் இரு தினங்களாக, முஸ்லிம் லீக் கட்சி பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதை தொடர்ந்து இதன் பலனாக, அக்கட்சி 15 தொகுதிகளில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளது.
கூட்டணி கட்சிகளுடன் சுமுகமாக பேச்சுவார்த்தைகளை முடித்து கொண்ட காங்கிரஸ் தற்போது சற்று நிம்மதி அடைந்துள்ளது.
இக்கூட்டணியில் காங்கிரஸ் 81 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 24, கேரள காங்கிரஸ் (மானி) 15, சோஷலிஸ்ட் ஜனதா 7, ஜெ.எஸ்.எஸ்., 4, சி.எம்.பி., கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) ஆகிய கட்சிகளுக்கு தலா 3, கேரள காங்கிரஸ் (பி) 2 மற்றும் ஆர் எஸ் பி 1 என மொத்தம் 140 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கன்வீனர் பி.வி.தங்கச்சன் தெரிவித்தார்.

கேரள காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல் தீர்ந்தது : காங்., 81 - கூட்டணி கட்சிகள் 59ல் போட்டி

திருவனந்தபுரம் : கேரள மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 81 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 59 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. இதன் மூலம், பல நாட்களாக நடந்து வந்த சிக்கல்களில் இருந்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விடுபட்டு நிம்மதியடைந்துள்ளன.
கேரள மாநிலத்தில் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இக்கூட்டணியில் கேரள காங்கிரஸ் (மானி), ஜனாதிபத்திய சம்ரக்ஷன் சமிதி (ஜெ.எஸ்.எஸ்.), முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (பாலகிருஷ்ண பிள்ளை), ராஷ்டிரிய சோஷலிஸ்ட் கட்சி, சி.எம்.பி., மற்றும் கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில், கேரள காங்கிரஸ் (மானி) கட்சி, ஜெ.எஸ்.எஸ்., முஸ்லிம் லீக், ஆர்.எஸ்.பி., ஆகியவை தங்களுக்கு கடந்த தேர்தலைவிட அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கோரின. இதனால் ஏற்பட்ட சிக்கல்களால் காங்கிரஸ் கட்சி பெரிதும் திணறி வந்தது. இதில் குறிப்பாக, இடமலையார் பிரச்னையில் பாலகிருஷ்ண பிள்ளைக்கு சுப்ரீம் கோர்ட் சிறை தண்டனை விதித்தது; பாமாயில் வழக்கு மீண்டும் தூசி தட்டப்படுவது; கூட்டணியை விட்டு ஜெ.எஸ்.எஸ்., கட்சி விலகிவிடுமோ என்ற அச்சம் போன்ற காரணங்கள் முக்கியமானவை.
கேரள காங்கிரஸ் (மானி) கட்சி தங்களுக்கு 22 தொகுதிகள் தேவை என வற்புறுத்தி வந்தாலும், அக்கட்சியுடன் இரு தினங்களாக, முஸ்லிம் லீக் கட்சி பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதை தொடர்ந்து இதன் பலனாக, அக்கட்சி 15 தொகுதிகளில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளது.
கூட்டணி கட்சிகளுடன் சுமுகமாக பேச்சுவார்த்தைகளை முடித்து கொண்ட காங்கிரஸ் தற்போது சற்று நிம்மதி அடைந்துள்ளது.
இக்கூட்டணியில் காங்கிரஸ் 81 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 24, கேரள காங்கிரஸ் (மானி) 15, சோஷலிஸ்ட் ஜனதா 7, ஜெ.எஸ்.எஸ்., 4, சி.எம்.பி., கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) ஆகிய கட்சிகளுக்கு தலா 3, கேரள காங்கிரஸ் (பி) 2 மற்றும் ஆர் எஸ் பி 1 என மொத்தம் 140 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கன்வீனர் பி.வி.தங்கச்சன் தெரிவித்தார்.

திருவனந்தபுரம் : "சட்டசபை தேர்தலில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பினராயி விஜயனும் போட்டியிடக் கூடாது' என, கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, களத்தில் குதித்துள்ளது.
தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் இக்கட்சிக்கு ஆதரவு தரும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 93 தொகுதிகளில், மா.கம்யூ., கட்சி போட்டியிட உள்ளது. இத்தேர்தலில், தற்போது மாநில முதல்வராக உள்ள வி.எஸ். அச்சுதானந்தன் போட்டியிடுவாரா என்ற கேள்வி, பல நாட்களாக கட்சித் தொண்டர்கள் உட்பட மாநில வாக்காளர்களிடம் இருந்து வந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போதெல்லாம், "நான் தேர்தலில் போட்டியிடவேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து கட்சி தான் முடிவு செய்யும்' என, கூறி வந்தார். இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொகுதிகளில் யார் யாரை நிறுத்துவது என்ற பட்டியலை மாவட்ட கட்சி நிர்வாகிகள் தயாரித்து அனுப்ப, கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டது.
திருவனந்தபுரத்தில் நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் கராத் தலைமையில், மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. நான்கு மணி நேரம் நீடித்த இக்கூட்டத்தில் வி.எஸ். அச்சுதானந்தன், பினராயி விஜயன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவர்கள் போட்டியிடாததால், தற்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், இடது ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கி தேர்தலை வழி நடத்துவார் என்றும், அவர், தலசேரி தொகுதியில் நிறுத்தப்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கேரளாவில் முதல்வர் போட்டியிட தடை : சட்டசபை தேர்தலில் திடீர் திருப்பம்

திருவனந்தபுரம் : "சட்டசபை தேர்தலில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பினராயி விஜயனும் போட்டியிடக் கூடாது' என, கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, களத்தில் குதித்துள்ளது.
தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் இக்கட்சிக்கு ஆதரவு தரும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 93 தொகுதிகளில், மா.கம்யூ., கட்சி போட்டியிட உள்ளது. இத்தேர்தலில், தற்போது மாநில முதல்வராக உள்ள வி.எஸ். அச்சுதானந்தன் போட்டியிடுவாரா என்ற கேள்வி, பல நாட்களாக கட்சித் தொண்டர்கள் உட்பட மாநில வாக்காளர்களிடம் இருந்து வந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போதெல்லாம், "நான் தேர்தலில் போட்டியிடவேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து கட்சி தான் முடிவு செய்யும்' என, கூறி வந்தார். இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொகுதிகளில் யார் யாரை நிறுத்துவது என்ற பட்டியலை மாவட்ட கட்சி நிர்வாகிகள் தயாரித்து அனுப்ப, கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டது.
திருவனந்தபுரத்தில் நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் கராத் தலைமையில், மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. நான்கு மணி நேரம் நீடித்த இக்கூட்டத்தில் வி.எஸ். அச்சுதானந்தன், பினராயி விஜயன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவர்கள் போட்டியிடாததால், தற்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், இடது ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கி தேர்தலை வழி நடத்துவார் என்றும், அவர், தலசேரி தொகுதியில் நிறுத்தப்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

திருவனந்தபுரம்: சர்ச்சைக்குரிய மகர ஜோதி விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில், கடந்த ஜனவரி 14-ந்தேதி மகர ஜோதி தரிசனம் முடிந்ததும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பலியானார்கள். அதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய மகர ஜோதி விவகாரம் குறித்து, கேரள உயர்நீதிமன்றத்தில் 3 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கேரள யுக்திவாடி சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த விவகாரம் குறித்து நீதிபதி சந்திரசேகர மேனன் கமிஷன் சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையை இந்த நீதிமன்றம் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

அகில பாரதீய யுக்திவாடி சங்கம் தனது மனுவில், மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும், அதற்காக அரசு நிதியைப் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தது.

சபரிமலையின் முன்னாள் மேல்சாந்தி தாக்கல் செய்திருந்த மனுவில், மகரஜோதி மக்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம் என்பதால் இந்த பிரச்சினையில் யாரும் தலையிடக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

4 வாரங்களுக்குள் பதில்..

நீதிபதிகள் தோத்தாத்தில் பி.ராதாகிருஷ்ணன், எஸ்.சதீஷ் சந்திரன் ஆகியோரைக் கொண்ட கேரள ஐகோர்ட்டு பெஞ்ச் முன்பு இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.

விசாரணைக்குப்பின், இந்த மனுக்கள் தொடர்பாக தங்கள் கருத்துக்களை 4 வாரங்களுக்குள் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்று, மாநில அரசு, தேவசம் போர்டு மற்றும் வனத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மனிதர்களால் ஏற்றப்படுகிறதா?:


இந்த பிரச்சினையில் சபரிமலை தந்திரியின் கருத்தை பெறும்படியும் தேவசம் போர்டுக்கு உத்தரவிடப்பட்டது. மகரஜோதி, மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? என்பது குறித்தும், மகர ஜோதிக்கும் மகரவிளக்குக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று அறிந்து கொள்ள விரும்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மகரஜோதி விவகாரம்... 4 வாரங்களுக்குள் பதில் தர கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருவனந்தபுரம்: சர்ச்சைக்குரிய மகர ஜோதி விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில், கடந்த ஜனவரி 14-ந்தேதி மகர ஜோதி தரிசனம் முடிந்ததும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பலியானார்கள். அதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய மகர ஜோதி விவகாரம் குறித்து, கேரள உயர்நீதிமன்றத்தில் 3 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கேரள யுக்திவாடி சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த விவகாரம் குறித்து நீதிபதி சந்திரசேகர மேனன் கமிஷன் சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையை இந்த நீதிமன்றம் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

அகில பாரதீய யுக்திவாடி சங்கம் தனது மனுவில், மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும், அதற்காக அரசு நிதியைப் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தது.

சபரிமலையின் முன்னாள் மேல்சாந்தி தாக்கல் செய்திருந்த மனுவில், மகரஜோதி மக்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம் என்பதால் இந்த பிரச்சினையில் யாரும் தலையிடக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

4 வாரங்களுக்குள் பதில்..

நீதிபதிகள் தோத்தாத்தில் பி.ராதாகிருஷ்ணன், எஸ்.சதீஷ் சந்திரன் ஆகியோரைக் கொண்ட கேரள ஐகோர்ட்டு பெஞ்ச் முன்பு இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.

விசாரணைக்குப்பின், இந்த மனுக்கள் தொடர்பாக தங்கள் கருத்துக்களை 4 வாரங்களுக்குள் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்று, மாநில அரசு, தேவசம் போர்டு மற்றும் வனத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மனிதர்களால் ஏற்றப்படுகிறதா?:


இந்த பிரச்சினையில் சபரிமலை தந்திரியின் கருத்தை பெறும்படியும் தேவசம் போர்டுக்கு உத்தரவிடப்பட்டது. மகரஜோதி, மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? என்பது குறித்தும், மகர ஜோதிக்கும் மகரவிளக்குக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று அறிந்து கொள்ள விரும்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

FILE
''கேரளத்திலஅமைக்கப்பட்டிருக்குமசர்வதேபெட்டமாற்றமுனையத்தாலதமிழகத்தினவளர்ச்சி பாதிக்கும்'' எ‌ன்று அ.இ.அ.ி.ு.பொதுசசெயலரஜெயலலிதகூறியுள்ளார்.

இததொடர்பாஅவரஇன்றவெளியிட்டு‌ள்ள அ‌றி‌‌க்கை‌யி‌ல், கேரமாநிலமவல்லார்படத்திலசர்வதேபெட்டமாற்றமுனையத்தை (International Container Transhipment Terminal) அமைக்அனுமதி கொடுத்ததனமூலமதெனதமிழ்நாட்டினவளர்ச்சிக்கமுட்டுக்கட்டபோடப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி துறைமுகமவளர்ந்தவருமதுறைமுகமாகும். திருப்பூர், அவினாசி, ஈரோடு, கரூர், சிவகாசி, கோவபகுதிகளிலிருந்து அய‌ல்நாடுகளுக்கசெல்லுமசரக்குகளதூத்துக்குடியிலஇருக்குமசிறிகப்பலமூலமகொழும்பிலஉள்சர்வதேபெட்டமாற்றமுனையத்திற்கஎடுத்துசசெல்லப்பட்டஅங்குள்தாயகப்பலிலஅனைத்துசசரக்குகளுமஏற்றப்படும்.

கேரள பெட்டக மாற்று முனையத்தால் தமிழக வளர்ச்சி பாதிக்கும்: ஜெயலலிதா

FILE
''கேரளத்திலஅமைக்கப்பட்டிருக்குமசர்வதேபெட்டமாற்றமுனையத்தாலதமிழகத்தினவளர்ச்சி பாதிக்கும்'' எ‌ன்று அ.இ.அ.ி.ு.பொதுசசெயலரஜெயலலிதகூறியுள்ளார்.

இததொடர்பாஅவரஇன்றவெளியிட்டு‌ள்ள அ‌றி‌‌க்கை‌யி‌ல், கேரமாநிலமவல்லார்படத்திலசர்வதேபெட்டமாற்றமுனையத்தை (International Container Transhipment Terminal) அமைக்அனுமதி கொடுத்ததனமூலமதெனதமிழ்நாட்டினவளர்ச்சிக்கமுட்டுக்கட்டபோடப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி துறைமுகமவளர்ந்தவருமதுறைமுகமாகும். திருப்பூர், அவினாசி, ஈரோடு, கரூர், சிவகாசி, கோவபகுதிகளிலிருந்து அய‌ல்நாடுகளுக்கசெல்லுமசரக்குகளதூத்துக்குடியிலஇருக்குமசிறிகப்பலமூலமகொழும்பிலஉள்சர்வதேபெட்டமாற்றமுனையத்திற்கஎடுத்துசசெல்லப்பட்டஅங்குள்தாயகப்பலிலஅனைத்துசசரக்குகளுமஏற்றப்படும்.

கூடலூர் : சபரிமலை அருகே பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த ஜீப் 60 அடி பள்ளத்தில் விழுந்தது.இந்த விபத்தில் 75 பேர் பலியாகியிருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. சபரிமலையில் 14ம் தேதி மகரஜோதி பெருவிழா நடந்தது. ஜோதியை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். புல்மேடு, உப்புப்பாறை பகுதியில் இருந்தும் மகர ஜோதியை பக்தர்கள் பார்த்தனர். நேற்று இரவு ஜோதியை பார்த்துவிட்டு பக்தர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.

புல்மேடு உப்புப்பாறை பகுதியில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பிய ஜீப் ஒன்றில், பக்தர்கள் அதிக அளவு ஏறினர். ஜீப் "செல்ப்' எடுக்காததால், பலர் இறங்கி ஜீப்பை தள்ளினர். திடீரென ஜீப் கிளம்பியது, கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்தது. பின் 60 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 75 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 42 பேரது உடல் அடையாளம் தெரிந்தது. 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தைத் தொடர்ந்து அங்கு திடீர் நெரிசல் ஏற்பட்டதால், நெரிசலில் சிக்கி மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பலியானவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மகரவிளக்கு பூஜை முடிந்து பொங்கல் பண்டிக்கைக்காக புல்மேடு வழியாக பக்தர்கள் தமிழகம் நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயமடைந்தோர் வண்டிப்பெரியார், கோட்டயம் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் மீட்புப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

சம்பவம் குறித்த தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி உதவி எண்: 04869- 222049 (குமுளி போலீஸ் ஸ்டேஷன்)

சபரி மலை அருகே கூட்டத்தில் ஜீப் புகுந்து 75 பேர் பலி

கூடலூர் : சபரிமலை அருகே பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த ஜீப் 60 அடி பள்ளத்தில் விழுந்தது.இந்த விபத்தில் 75 பேர் பலியாகியிருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. சபரிமலையில் 14ம் தேதி மகரஜோதி பெருவிழா நடந்தது. ஜோதியை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். புல்மேடு, உப்புப்பாறை பகுதியில் இருந்தும் மகர ஜோதியை பக்தர்கள் பார்த்தனர். நேற்று இரவு ஜோதியை பார்த்துவிட்டு பக்தர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.

புல்மேடு உப்புப்பாறை பகுதியில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பிய ஜீப் ஒன்றில், பக்தர்கள் அதிக அளவு ஏறினர். ஜீப் "செல்ப்' எடுக்காததால், பலர் இறங்கி ஜீப்பை தள்ளினர். திடீரென ஜீப் கிளம்பியது, கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்தது. பின் 60 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 75 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 42 பேரது உடல் அடையாளம் தெரிந்தது. 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தைத் தொடர்ந்து அங்கு திடீர் நெரிசல் ஏற்பட்டதால், நெரிசலில் சிக்கி மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பலியானவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மகரவிளக்கு பூஜை முடிந்து பொங்கல் பண்டிக்கைக்காக புல்மேடு வழியாக பக்தர்கள் தமிழகம் நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயமடைந்தோர் வண்டிப்பெரியார், கோட்டயம் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் மீட்புப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

சம்பவம் குறித்த தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி உதவி எண்: 04869- 222049 (குமுளி போலீஸ் ஸ்டேஷன்)

திருவனந்தபுரம் : கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரன்(92) நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நேரு குடும்பத்திற்கு நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்த கே.கருணாகரன்(92) நேற்று மாலை 5.30 மணிக்கு காலமானார். கடந்த 10ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஐந்து தினங்களுக்கு முன், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் அளிப்பது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் அவரது உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று பக்கவாதம் ஏற்பட்டு மூளை பாதிக்கப்பட்டது. அவருக்கு நேற்று காலை டாக்டர்கள் ஸ்கேனிங் எடுத்து பார்த்தனர். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்து வந்த அவர், நேற்று மாலை 5.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார். அவருக்கு முரளிதரன் என்ற மகனும், பத்மஜா என்ற மகளும் உள்ளனர். கேரளாவில் 1918ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி பிறந்த அவர், 1945ம் ஆண்டு திருச்சூர் நகராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்று அரசியல் பயணத்தை துவங்கினார். அவர் நான்கு முறை மாநில முதல்வராகவும், ஒரு முறை மத்திய அமைச்சராகவும், எம்.பி.,யாகவும், 28 ஆண்டுகள் திருச்சூர் மாவட்டம் மாளா தொகுதி எம்.எல்.ஏ.,வுமாகவும் பதவி வகித்துள்ளார். அவரது உடலுக்கு, கேரள கவர்னர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

கேரள அரசியலின் சாணக்கியர் கருணாகரன் : கேரளாவின் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கருணாகரன் (93) காலமானார். கேரள அரசியலில் "கிங் மேக்கர் என்று புகழப்பட்டவர். இளம் வயதில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்றவர். நேரு, இந்திரா மற்றும் ராஜிவ் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர். கண்ணனூரில், 1918 ஜூலை 5ல், ரேமுண்ணி - கல்யாணிக்கு மகனாக கருணாகரன் பிறந்தார். கேரள ஐ.என்.டி.யூ.சி.,யின் தலைவராக பணியாற்றினார். பல முறை கேரள சட்டசபைக்கு தேர்வானார். 1971 முதல் 1977 வரை கேரள உள்துறை அமைச்சராக இருந்தார். கம்யூனிஸ்ட்களுக்கு சவால் விடுக்கும் வகையில், 1970களில் கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணியை துவக்கியவர். எமர்ஜென்சிக்குப் பின் 1977 மார்ச் 25ல் முதல்வர் ஆன கருணாகரனுக்கு, நக்சலைட் அனுதாபியான கோழிக்கோடு மண்டல பொறியியல் கல்லூரி மாணவர் ராஜன், போலீஸ் காவலில் காணாமல் போய், மரணமடைந்த வழக்கில், கேரள ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, பதவியேற்ற மறுமாதமே ராஜினாமா செய்தார். அதன்பின், 1981ல் பதவியேற்ற போது, கேரள காங்கிரஸ் (மாணி) இவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டதால், 1982ல் பதவி விலகினார். அடுத்து நடந்த தேர்தலில் வென்ற அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இம்முறை 1987 வரை பதவியில் நீடித்தார். 1991ல் ராஜிவ் படுகொலைக்குப் பின், தேர்தலில் நாடு முழுவதும் அதிக இடங்களில் காங்., வெற்றி பெற்றது. கருணாகரன் மீண்டும் முதல்வரானார். தேசிய அளவில், கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு அப்போது கடும் போட்டி எழுந்தது. சரத்பவார், நரசிம்மராவ், கருணாகரன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் முன் வைக்கப்பட்ட போது, சரத்பவாருக்காக முக்கிய தொழில் அமைப்புகள் ஆதரவளித்தன. எனினும் கருணாகரன் நரசிம்மராவை ஆதரித்ததால் நரசிம்மராவ் பிரதமராக முடிந்தது. இதற்காக ராவ், தன்னிடம் நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தார் கருணாகரன். கருணாகரன் முதல்வராக இருந்த போது, 1993 முதல் 1995 வரையான காலத்தில், அந்தோணி தலைமையிலான அதிருப்தி கோஷ்டியினர், கருணாகரனுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அப்போது நரசிம்மராவ் அந்தோணி பிரிவை ஆதரித்ததால், கருணாகரன் 1995 மார்ச் 19ல் பதவி விலக நேரிட்டது. இந்த சம்பவத்தை கருணாகரனால் கடைசி வரை மறக்கவே முடியவில்லை. தன் பதவி இழப்பை தாங்கிக் கொள்ளாத கருணாகரன், நரசிம்மராவ் மீதான, ஹவாலா வழக்கை மத்திய காங். கமிட்டி விவாதிக்க வேண்டும் என்று கோரினார். காங். கட்சியின் சார்பில் தலைவராகவும் பிரதமராகவும் இரு பதவிகளில் ராவ் இருக்கக் கூடாது என, சூரஜ்கந்த் மாநாட்டு தீர்மானத்தை மேற்கோள்காட்டி வலியுறுத்தினார். எனினும் எந்த பதவியிலும் இல்லாத, கருணாகரனால், கடைசிவரை பிரகாசமான அரசியல் வாழ்வுக்கு திரும்ப முடியவில்லை. மூன்று முறை (1995, 1997 மற்றும் 2004) ராஜ்யசபாவுக்கும், இரு முறை (1998, 1999) லோக்சாபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995ல் மத்திய தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

தனக்குப் பின், கேரள காங்கிரஸ் தனது மகன் முரளிதரன் வசம் இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அது இன்று வரை நடக்கவே இல்லை. 1996 லோக்சபா தேர்தலிலும் முரளிதரனுக்கு சீட் வாங்கிக் கொடுத்தார். என்றாலும், முரளிதரன் தேர்தலில் தோற்றதன் மூலம் கருணாகரனின் ஆசையில் பின்னடைவு ஏற்பட்டது. மகனின் அடுத்தடுத்த தோல்விகளுக்கு உட்கட்சி துரோகங்களே காரணம் என கடும் குற்றம் சாட்டினார். நீண்ட காலமாக கட்சி அவரை கண்டு கொள்ளவில்லை. கட்சி விரோத நடவடிக்கைக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 2005ல் தேசிய இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியை அவர் துவக்கினார். எனினும், முதுமை காரணத்தினாலும், மக்களிடம் செல்வாக்கு இல்லாத அவரது மகன் மற்றும் மகளால் அக்கட்சியை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால், காங்கிரசிலேயே தொடர்வது என்று முடிவு செய்தார். இவரது மகள் பத்மஜாவும் காங்கிரசில் இணைந்தார். மகன் முரளிதரன் தேசியவாத காங்., கட்சியில் தொடர்கிறார். நீண்ட காலம் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த கருணாகரனின் பலமாக அவரது சாதுர்ய அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தலின் சாணக்கியத்திலேயே அமைந்திருந்தது. எனினும் கட்சிக்குள் பிரிவுகள் ஏற்படுத்தி அதன் மூலம் தன் அரசியல் விருப்பங்களை பூர்த்தி செய்து கொண்டவர் என்றும் பலரால் விமர்சிக்கப்பட்டார் கருணாகரன். எனினும் தேசிய காங்கிரஸ் ஒரு சாணக்கிய அரசியல்வாதியை இழந்துவிட்டது.


கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் காலமானார்

திருவனந்தபுரம் : கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரன்(92) நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நேரு குடும்பத்திற்கு நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்த கே.கருணாகரன்(92) நேற்று மாலை 5.30 மணிக்கு காலமானார். கடந்த 10ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஐந்து தினங்களுக்கு முன், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் அளிப்பது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் அவரது உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று பக்கவாதம் ஏற்பட்டு மூளை பாதிக்கப்பட்டது. அவருக்கு நேற்று காலை டாக்டர்கள் ஸ்கேனிங் எடுத்து பார்த்தனர். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்து வந்த அவர், நேற்று மாலை 5.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார். அவருக்கு முரளிதரன் என்ற மகனும், பத்மஜா என்ற மகளும் உள்ளனர். கேரளாவில் 1918ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி பிறந்த அவர், 1945ம் ஆண்டு திருச்சூர் நகராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்று அரசியல் பயணத்தை துவங்கினார். அவர் நான்கு முறை மாநில முதல்வராகவும், ஒரு முறை மத்திய அமைச்சராகவும், எம்.பி.,யாகவும், 28 ஆண்டுகள் திருச்சூர் மாவட்டம் மாளா தொகுதி எம்.எல்.ஏ.,வுமாகவும் பதவி வகித்துள்ளார். அவரது உடலுக்கு, கேரள கவர்னர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

கேரள அரசியலின் சாணக்கியர் கருணாகரன் : கேரளாவின் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கருணாகரன் (93) காலமானார். கேரள அரசியலில் "கிங் மேக்கர் என்று புகழப்பட்டவர். இளம் வயதில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்றவர். நேரு, இந்திரா மற்றும் ராஜிவ் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர். கண்ணனூரில், 1918 ஜூலை 5ல், ரேமுண்ணி - கல்யாணிக்கு மகனாக கருணாகரன் பிறந்தார். கேரள ஐ.என்.டி.யூ.சி.,யின் தலைவராக பணியாற்றினார். பல முறை கேரள சட்டசபைக்கு தேர்வானார். 1971 முதல் 1977 வரை கேரள உள்துறை அமைச்சராக இருந்தார். கம்யூனிஸ்ட்களுக்கு சவால் விடுக்கும் வகையில், 1970களில் கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணியை துவக்கியவர். எமர்ஜென்சிக்குப் பின் 1977 மார்ச் 25ல் முதல்வர் ஆன கருணாகரனுக்கு, நக்சலைட் அனுதாபியான கோழிக்கோடு மண்டல பொறியியல் கல்லூரி மாணவர் ராஜன், போலீஸ் காவலில் காணாமல் போய், மரணமடைந்த வழக்கில், கேரள ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, பதவியேற்ற மறுமாதமே ராஜினாமா செய்தார். அதன்பின், 1981ல் பதவியேற்ற போது, கேரள காங்கிரஸ் (மாணி) இவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டதால், 1982ல் பதவி விலகினார். அடுத்து நடந்த தேர்தலில் வென்ற அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இம்முறை 1987 வரை பதவியில் நீடித்தார். 1991ல் ராஜிவ் படுகொலைக்குப் பின், தேர்தலில் நாடு முழுவதும் அதிக இடங்களில் காங்., வெற்றி பெற்றது. கருணாகரன் மீண்டும் முதல்வரானார். தேசிய அளவில், கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு அப்போது கடும் போட்டி எழுந்தது. சரத்பவார், நரசிம்மராவ், கருணாகரன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் முன் வைக்கப்பட்ட போது, சரத்பவாருக்காக முக்கிய தொழில் அமைப்புகள் ஆதரவளித்தன. எனினும் கருணாகரன் நரசிம்மராவை ஆதரித்ததால் நரசிம்மராவ் பிரதமராக முடிந்தது. இதற்காக ராவ், தன்னிடம் நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தார் கருணாகரன். கருணாகரன் முதல்வராக இருந்த போது, 1993 முதல் 1995 வரையான காலத்தில், அந்தோணி தலைமையிலான அதிருப்தி கோஷ்டியினர், கருணாகரனுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அப்போது நரசிம்மராவ் அந்தோணி பிரிவை ஆதரித்ததால், கருணாகரன் 1995 மார்ச் 19ல் பதவி விலக நேரிட்டது. இந்த சம்பவத்தை கருணாகரனால் கடைசி வரை மறக்கவே முடியவில்லை. தன் பதவி இழப்பை தாங்கிக் கொள்ளாத கருணாகரன், நரசிம்மராவ் மீதான, ஹவாலா வழக்கை மத்திய காங். கமிட்டி விவாதிக்க வேண்டும் என்று கோரினார். காங். கட்சியின் சார்பில் தலைவராகவும் பிரதமராகவும் இரு பதவிகளில் ராவ் இருக்கக் கூடாது என, சூரஜ்கந்த் மாநாட்டு தீர்மானத்தை மேற்கோள்காட்டி வலியுறுத்தினார். எனினும் எந்த பதவியிலும் இல்லாத, கருணாகரனால், கடைசிவரை பிரகாசமான அரசியல் வாழ்வுக்கு திரும்ப முடியவில்லை. மூன்று முறை (1995, 1997 மற்றும் 2004) ராஜ்யசபாவுக்கும், இரு முறை (1998, 1999) லோக்சாபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995ல் மத்திய தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

தனக்குப் பின், கேரள காங்கிரஸ் தனது மகன் முரளிதரன் வசம் இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அது இன்று வரை நடக்கவே இல்லை. 1996 லோக்சபா தேர்தலிலும் முரளிதரனுக்கு சீட் வாங்கிக் கொடுத்தார். என்றாலும், முரளிதரன் தேர்தலில் தோற்றதன் மூலம் கருணாகரனின் ஆசையில் பின்னடைவு ஏற்பட்டது. மகனின் அடுத்தடுத்த தோல்விகளுக்கு உட்கட்சி துரோகங்களே காரணம் என கடும் குற்றம் சாட்டினார். நீண்ட காலமாக கட்சி அவரை கண்டு கொள்ளவில்லை. கட்சி விரோத நடவடிக்கைக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 2005ல் தேசிய இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியை அவர் துவக்கினார். எனினும், முதுமை காரணத்தினாலும், மக்களிடம் செல்வாக்கு இல்லாத அவரது மகன் மற்றும் மகளால் அக்கட்சியை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால், காங்கிரசிலேயே தொடர்வது என்று முடிவு செய்தார். இவரது மகள் பத்மஜாவும் காங்கிரசில் இணைந்தார். மகன் முரளிதரன் தேசியவாத காங்., கட்சியில் தொடர்கிறார். நீண்ட காலம் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த கருணாகரனின் பலமாக அவரது சாதுர்ய அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தலின் சாணக்கியத்திலேயே அமைந்திருந்தது. எனினும் கட்சிக்குள் பிரிவுகள் ஏற்படுத்தி அதன் மூலம் தன் அரசியல் விருப்பங்களை பூர்த்தி செய்து கொண்டவர் என்றும் பலரால் விமர்சிக்கப்பட்டார் கருணாகரன். எனினும் தேசிய காங்கிரஸ் ஒரு சாணக்கிய அரசியல்வாதியை இழந்துவிட்டது.



கூடலூர் : தென்மாவட்ட விவசாயிகளின் ஜீவ நாடி பிரச்னையான முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் பின்னரும் நீர்மட்டத்தை உயர்த்தாமல் தடுக்க பல்வேறு முட்டுக்கட்டைகளை கேரள அரசு செய்து வருகிறது.இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஐவர் குழு, பெரியாறு அணையில் தொழில்நுட்ப ஆய்வை இன்று மேற்கொள்கிறது. கேரள அரசின் நாடகம் குறித்த உண்மை நிலை இன்றைய ஆய்வில் தெரியவரும்.


கேரள அரசின் பிடிவாதம்: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தமிழகம், கேரளாவுக்கு இடையே, 1979ல் துவங்கியது. அணை பலமிழந்து விட்டதாக கேரள அரசு கூறிய புகாரைத் தொடர்ந்து, தமிழக அரசு, பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணையைப் பலப்படுத்தியது.பணி முடிந்த பின்பும் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்காமல் கேரள அரசு பிடிவாதம் செய்ததால் விவசாயிகளும், தமிழக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அனைத்து விவாதங்கள் மற்றும் நிபுணர் குழு அறிக்கையை தீர ஆய்ந்து அணையின் நீர்மட்டத்தை, 136ல் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என, சுப்ரீம் கோர்ட், 2006 பிப்., 27ல் தீர்ப்பு வழங்கியது.ஆனால், சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பையும் அமல்படுத்த விடாமல் கேரள அரசு பல்வேறு பொய்யான தகவல்களை வெளியிட்டும், கேரள மக்களை பயமுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.


தீர்ப்புக்கு பின் கேரள அரசின் செயல்பாடு: பெரியாறு அணையின் கட்டுப்பாட்டை தம்வசம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் விதிமுறை மீறி 2006 மார்ச் 15ல், கேரள சட்டசபையில் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது.
* அணையில் இருந்து 17 கி.மீ., தொலைவில், 2.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதனால் அணையில் நீர்க்கசிவு அதிகரித்துள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்தது. ஆனால், அந்த நேரங்களில் அணை அருகே நிலநடுக்கமே ஏற்படவில்லை என, ஆய்வு மைய இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இதையும் பொருட்படுத்தாத கேரள அரசு, அதே ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் கேரள பொதுப்பணித்துறை அமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு, மனுக்கள் குழு, வனத்துறை அமைச்சர்கள் என நீர்க்கசிவு குறித்து அணையை ஆய்வு செய்து பிரச்னையை பெரிதுபடுத்தினர்.
* 2006 நவம்பரில் கொச்சியில் இருந்து 17 கடற்படை வீரர்களை அழைத்து வந்து அணையில் அடித்தளத்தை ஆய்வு செய்ய கேரள அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். எவ்வித அனுமதியுமின்றி கேரள மக்களை பயமுறுத்தும் விதத்தில் நடக்க இருந்த இந்த நடவடிக்கைகள், தமிழக அரசால் அப்போது தடுத்து நிறுத்தப்பட்டது.
* அதன்பின் பெரியாறு அணை அருகே புதிய அணையை கட்டியே தீர வேண்டும் எனக்கூறிய கேரள அரசு, 2007 நவம்பரில் குமுளியில் அதற்கான கட்டுப்பாடு அலுவலகத்தையும் திறந்து அதிகாரிகளையும் நியமித்தது.
* மத்திய வன அமைச்சகத்தின் எவ்வித அனுமதியுமின்றி அணையில் இருந்து, 300 மீட்டர் தூரத்தில் புதிய அணை கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு சர்வே பணிகளையும் கேரள அரசு மேற்கொண்டது.
* வன அமைச்சகத்தின் தடையில்லா சான்று பெறாமல் ஒரு சிறு செடியைக்கூடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து அகற்ற முடியாது. ஆனால், கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கையால் அப்பகுதியில் சர்வே பணிகளை செய்தது. மேலும், 15 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து மண் மற்றும் பாறையின் மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்களிடம் பீதியை ஏற்படுத்த "சிடி' : * அணை உடைவது போன்றும், அதனால் வெளியேறும் வெள்ளத்தால் கேரள மக்கள் பலர் பலியாவது போன்றும் சித்தரிக்கப்பட்ட காட்சிகளை உருவாக்கி, அதை, இடுக்கி மாவட்டத்தில் கேபிள் "டிவி' களில் ஒளிபரப்பினர்.
* கேரள மக்களை பயமுறுத்தும் விதத்தில் கேரள அரசின் இந்த செயல்பாடு இருந்தது. இது மட்டுமின்றி பெரியாறு அணை மழை நேரங்களில் 130 அடியைக் கடக்கும் போது, அணைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களை உயரமான இடங்களில் வசிக்க அறிவுறுத்தி பொதுமக்களிடம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.
* இத்தனையையும் செய்து வரும் கேரள அரசு, படகு சவாரியை மட்டும் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரியாறு அணைப் பிரச்னை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருந்த போதிலும், கேரள அரசு தங்களது பாணியில் கேரள மக்களை பயமுறுத்தி வந்தது.


ஐவர் குழு இன்று ஆய்வு : சுப்ரீம் கோர்ட், ஐவர் குழுவை நியமித்து, அக்குழு இன்று அணையை ஆய்வு செய்ய உள்ளது. இக்குழு வர உள்ள நிலையில், அணை உடைவது போன்று தனியார் ஒருவர் தயாரித்த "சிடி'யை திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் வெளியிட்டு, அணைப் பிரச்னை முடிவுக்கு வராமல் தடுக்கும் நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார்.ஐவர் குழு அணையை ஆய்வு செய்து, அதற்கான முழு விவரங்களையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு முன், கேரள அரசின் செயல்பாடுகள், தமிழக விவசாயிகளை கலக்கமடையச் செய்துள்ளது.


விவசாயிகளின் கருத்து : கே.எம்.அப்பாஸ் (ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க செயலர்): சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த ஐவர் குழு முடிவை ஏற்றுக் கொள்ளாவிட்டால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துவிடும். இதனால், இரு மாநிலங்களுக்கும் நல்ல உறவு பாதிக்கப்படும்.


ஏ.ஆர்.சுகுமாறன் (கம்பம் விவசாயிகள் சங்க செயலர்): பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுகிறது. கேரளா போல் சுறுசுறுப்புடன் செயல்படவில்லை. கேரளாவில் பொதுமக்களின் கருத்தை அறிந்து முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகின்றனர். தமிழகத்தில் அப்படியில்லை. தற்போது வந்துள்ள ஐவர் குழு இதன் முழு உண்மைகளை அறிந்து செயல்பட வேண்டும்.


ஓ.ஆர்.நாராயணன் (உத்தமபுரம் விவசாயிகள் சங்க செயலர்): தற்போது வந்துள்ள ஐவர் குழுவில் இரு மாநிலம் சார்பிலும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளனர். எனவே, இதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் இனிமேல் கொடுக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கே.சி.ஆறுமுகம் (லோயர்கேம்ப் பசுமை இயக்க தலைவர்): பெரியாறு அணை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய கேரள அரசு வலியுறுத்தினால், தமிழகம் மீண்டும் பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும். இந்த இரு தாலுகாக்களும் முன்பு இருந்தது போல் தமிழகத்துடன் சேர்க்கப்பட்டால் பிரச்னை எளிதில் முடிவுக்கு வந்து விடும்.பெரியாறு அணை பிரச்னையை இரு மாநில எல்லை பிரச்னையாக பார்க்காமல், விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு குழு ஆய்வு செய்ய வேண்டும் என்பதே, 1.45 லட்சம் ஏக்கர் பாசன விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.


பெரியாறு அணையை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் குழு வருகை: தேனியில் ஆய்வு கூட்டம் ரத்து : முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து, அணைகள் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு சட்டத்தில் கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, கோர்ட் உத்தரவை வலுவிழக்க செய்தனர்.இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, சுப்ரீம் கோர்ட், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழு அமைத்தது.இக்குழுவினர் அணையை ஆய்வு செய்ய செல்லும் வழியில் நேற்று தேனி வந்தனர். நீதிபதி ஆனந்த் மற்றும் குழு உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.ஆர்.லட்சுமணன், டி.கே.மேக்தா, முன்னாள் மத்திய நீர்வள ஆணைய செயலர் சி.டி.தத்தே ஆகியோரை தேனி கலெக்டர் முத்துவீரன், மதுரை கலெக்டர் காமராஜ் வரவேற்றனர்.


மதிய உணவுக்கு பின் நீதிபதிகள் குழு தேக்கடி புறப்பட்டு சென்றது. தேக்கடியில் இரவு ஓய்வுக்கு பின் இன்று காலை அணையின் பாதுகாப்பு குறித்து நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் அணையில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.இதற்காக இருமாநில அரசு தொழில்நுட்ப வல்லுனர்கள், வக்கீல்கள், உயர் அதிகாரிகள் உடன் வந்துள்ளனர்.


தேனியில் ஐவர் குழு கூட்டம் ரத்து :கேரள அதிகாரிகளுக்கு "டோஸ்' : ஐவர் குழுவினர், தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்துவதாக இருந்தது.குழு உறுப்பினர்களின் ஒருவரான கேரளாவைச் சேர்ந்த கே.டி.தாமஸ் வரவில்லை. இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.குழு தலைவர் ஆனந்திடம், கேரள அரசின் சார்பு செயலர் ஜெயக்குமார், ""குழு உறுப்பினர் கே.டி.தாமஸ் பெரியாறு பவர்ஹவுசில் காத்திருக்கிறார். அங்கு சென்று பார்வையிட்டு செல்லலாம்,'' என்றார்.இதில் கோபமடைந்த நீதிபதி ஆனந்த், ""நீங்கள் எனக்கு ஆலோசனை கூற வேண்டாம். நான்தான் கமிட்டி தலைவர், எனக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. அணை பலமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்வது மட்டுமே குழுவின் பணி. திட்டமிட்டபடி ஷெட்யூல் என்னிடம் உள்ளது. என்னை யாரும் திசை திருப்ப வேண்டாம்,'' என கூறினார். குழுவுடன் தாமஸ் வராதது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

முல்லை பெரியாறு பிரச்னையில் கேரள அரசின் நாடகம் : ஐவர் குழு ஆய்வில் உண்மை நிலை இன்று தெரியும்

கூடலூர் : தென்மாவட்ட விவசாயிகளின் ஜீவ நாடி பிரச்னையான முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் பின்னரும் நீர்மட்டத்தை உயர்த்தாமல் தடுக்க பல்வேறு முட்டுக்கட்டைகளை கேரள அரசு செய்து வருகிறது.இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஐவர் குழு, பெரியாறு அணையில் தொழில்நுட்ப ஆய்வை இன்று மேற்கொள்கிறது. கேரள அரசின் நாடகம் குறித்த உண்மை நிலை இன்றைய ஆய்வில் தெரியவரும்.


கேரள அரசின் பிடிவாதம்: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தமிழகம், கேரளாவுக்கு இடையே, 1979ல் துவங்கியது. அணை பலமிழந்து விட்டதாக கேரள அரசு கூறிய புகாரைத் தொடர்ந்து, தமிழக அரசு, பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணையைப் பலப்படுத்தியது.பணி முடிந்த பின்பும் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்காமல் கேரள அரசு பிடிவாதம் செய்ததால் விவசாயிகளும், தமிழக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அனைத்து விவாதங்கள் மற்றும் நிபுணர் குழு அறிக்கையை தீர ஆய்ந்து அணையின் நீர்மட்டத்தை, 136ல் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என, சுப்ரீம் கோர்ட், 2006 பிப்., 27ல் தீர்ப்பு வழங்கியது.ஆனால், சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பையும் அமல்படுத்த விடாமல் கேரள அரசு பல்வேறு பொய்யான தகவல்களை வெளியிட்டும், கேரள மக்களை பயமுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.


தீர்ப்புக்கு பின் கேரள அரசின் செயல்பாடு: பெரியாறு அணையின் கட்டுப்பாட்டை தம்வசம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் விதிமுறை மீறி 2006 மார்ச் 15ல், கேரள சட்டசபையில் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது.
* அணையில் இருந்து 17 கி.மீ., தொலைவில், 2.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதனால் அணையில் நீர்க்கசிவு அதிகரித்துள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்தது. ஆனால், அந்த நேரங்களில் அணை அருகே நிலநடுக்கமே ஏற்படவில்லை என, ஆய்வு மைய இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இதையும் பொருட்படுத்தாத கேரள அரசு, அதே ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் கேரள பொதுப்பணித்துறை அமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு, மனுக்கள் குழு, வனத்துறை அமைச்சர்கள் என நீர்க்கசிவு குறித்து அணையை ஆய்வு செய்து பிரச்னையை பெரிதுபடுத்தினர்.
* 2006 நவம்பரில் கொச்சியில் இருந்து 17 கடற்படை வீரர்களை அழைத்து வந்து அணையில் அடித்தளத்தை ஆய்வு செய்ய கேரள அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். எவ்வித அனுமதியுமின்றி கேரள மக்களை பயமுறுத்தும் விதத்தில் நடக்க இருந்த இந்த நடவடிக்கைகள், தமிழக அரசால் அப்போது தடுத்து நிறுத்தப்பட்டது.
* அதன்பின் பெரியாறு அணை அருகே புதிய அணையை கட்டியே தீர வேண்டும் எனக்கூறிய கேரள அரசு, 2007 நவம்பரில் குமுளியில் அதற்கான கட்டுப்பாடு அலுவலகத்தையும் திறந்து அதிகாரிகளையும் நியமித்தது.
* மத்திய வன அமைச்சகத்தின் எவ்வித அனுமதியுமின்றி அணையில் இருந்து, 300 மீட்டர் தூரத்தில் புதிய அணை கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு சர்வே பணிகளையும் கேரள அரசு மேற்கொண்டது.
* வன அமைச்சகத்தின் தடையில்லா சான்று பெறாமல் ஒரு சிறு செடியைக்கூடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து அகற்ற முடியாது. ஆனால், கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கையால் அப்பகுதியில் சர்வே பணிகளை செய்தது. மேலும், 15 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து மண் மற்றும் பாறையின் மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்களிடம் பீதியை ஏற்படுத்த "சிடி' : * அணை உடைவது போன்றும், அதனால் வெளியேறும் வெள்ளத்தால் கேரள மக்கள் பலர் பலியாவது போன்றும் சித்தரிக்கப்பட்ட காட்சிகளை உருவாக்கி, அதை, இடுக்கி மாவட்டத்தில் கேபிள் "டிவி' களில் ஒளிபரப்பினர்.
* கேரள மக்களை பயமுறுத்தும் விதத்தில் கேரள அரசின் இந்த செயல்பாடு இருந்தது. இது மட்டுமின்றி பெரியாறு அணை மழை நேரங்களில் 130 அடியைக் கடக்கும் போது, அணைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களை உயரமான இடங்களில் வசிக்க அறிவுறுத்தி பொதுமக்களிடம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.
* இத்தனையையும் செய்து வரும் கேரள அரசு, படகு சவாரியை மட்டும் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரியாறு அணைப் பிரச்னை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருந்த போதிலும், கேரள அரசு தங்களது பாணியில் கேரள மக்களை பயமுறுத்தி வந்தது.


ஐவர் குழு இன்று ஆய்வு : சுப்ரீம் கோர்ட், ஐவர் குழுவை நியமித்து, அக்குழு இன்று அணையை ஆய்வு செய்ய உள்ளது. இக்குழு வர உள்ள நிலையில், அணை உடைவது போன்று தனியார் ஒருவர் தயாரித்த "சிடி'யை திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் வெளியிட்டு, அணைப் பிரச்னை முடிவுக்கு வராமல் தடுக்கும் நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார்.ஐவர் குழு அணையை ஆய்வு செய்து, அதற்கான முழு விவரங்களையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு முன், கேரள அரசின் செயல்பாடுகள், தமிழக விவசாயிகளை கலக்கமடையச் செய்துள்ளது.


விவசாயிகளின் கருத்து : கே.எம்.அப்பாஸ் (ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க செயலர்): சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த ஐவர் குழு முடிவை ஏற்றுக் கொள்ளாவிட்டால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துவிடும். இதனால், இரு மாநிலங்களுக்கும் நல்ல உறவு பாதிக்கப்படும்.


ஏ.ஆர்.சுகுமாறன் (கம்பம் விவசாயிகள் சங்க செயலர்): பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுகிறது. கேரளா போல் சுறுசுறுப்புடன் செயல்படவில்லை. கேரளாவில் பொதுமக்களின் கருத்தை அறிந்து முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகின்றனர். தமிழகத்தில் அப்படியில்லை. தற்போது வந்துள்ள ஐவர் குழு இதன் முழு உண்மைகளை அறிந்து செயல்பட வேண்டும்.


ஓ.ஆர்.நாராயணன் (உத்தமபுரம் விவசாயிகள் சங்க செயலர்): தற்போது வந்துள்ள ஐவர் குழுவில் இரு மாநிலம் சார்பிலும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளனர். எனவே, இதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் இனிமேல் கொடுக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கே.சி.ஆறுமுகம் (லோயர்கேம்ப் பசுமை இயக்க தலைவர்): பெரியாறு அணை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய கேரள அரசு வலியுறுத்தினால், தமிழகம் மீண்டும் பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும். இந்த இரு தாலுகாக்களும் முன்பு இருந்தது போல் தமிழகத்துடன் சேர்க்கப்பட்டால் பிரச்னை எளிதில் முடிவுக்கு வந்து விடும்.பெரியாறு அணை பிரச்னையை இரு மாநில எல்லை பிரச்னையாக பார்க்காமல், விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு குழு ஆய்வு செய்ய வேண்டும் என்பதே, 1.45 லட்சம் ஏக்கர் பாசன விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.


பெரியாறு அணையை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் குழு வருகை: தேனியில் ஆய்வு கூட்டம் ரத்து : முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து, அணைகள் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு சட்டத்தில் கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, கோர்ட் உத்தரவை வலுவிழக்க செய்தனர்.இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, சுப்ரீம் கோர்ட், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழு அமைத்தது.இக்குழுவினர் அணையை ஆய்வு செய்ய செல்லும் வழியில் நேற்று தேனி வந்தனர். நீதிபதி ஆனந்த் மற்றும் குழு உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.ஆர்.லட்சுமணன், டி.கே.மேக்தா, முன்னாள் மத்திய நீர்வள ஆணைய செயலர் சி.டி.தத்தே ஆகியோரை தேனி கலெக்டர் முத்துவீரன், மதுரை கலெக்டர் காமராஜ் வரவேற்றனர்.


மதிய உணவுக்கு பின் நீதிபதிகள் குழு தேக்கடி புறப்பட்டு சென்றது. தேக்கடியில் இரவு ஓய்வுக்கு பின் இன்று காலை அணையின் பாதுகாப்பு குறித்து நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் அணையில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.இதற்காக இருமாநில அரசு தொழில்நுட்ப வல்லுனர்கள், வக்கீல்கள், உயர் அதிகாரிகள் உடன் வந்துள்ளனர்.


தேனியில் ஐவர் குழு கூட்டம் ரத்து :கேரள அதிகாரிகளுக்கு "டோஸ்' : ஐவர் குழுவினர், தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்துவதாக இருந்தது.குழு உறுப்பினர்களின் ஒருவரான கேரளாவைச் சேர்ந்த கே.டி.தாமஸ் வரவில்லை. இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.குழு தலைவர் ஆனந்திடம், கேரள அரசின் சார்பு செயலர் ஜெயக்குமார், ""குழு உறுப்பினர் கே.டி.தாமஸ் பெரியாறு பவர்ஹவுசில் காத்திருக்கிறார். அங்கு சென்று பார்வையிட்டு செல்லலாம்,'' என்றார்.இதில் கோபமடைந்த நீதிபதி ஆனந்த், ""நீங்கள் எனக்கு ஆலோசனை கூற வேண்டாம். நான்தான் கமிட்டி தலைவர், எனக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. அணை பலமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்வது மட்டுமே குழுவின் பணி. திட்டமிட்டபடி ஷெட்யூல் என்னிடம் உள்ளது. என்னை யாரும் திசை திருப்ப வேண்டாம்,'' என கூறினார். குழுவுடன் தாமஸ் வராதது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

முக நூல்

Popular Posts