background img

புதிய வரவு

Showing posts with label LTTE. Show all posts
Showing posts with label LTTE. Show all posts
நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படங்களை இங்கே அதன் சம்பவங்களோடு காண்போம்...!


உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் !

சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே..  அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின்  தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர்  உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.


போரை நிறுத்திய சிறுமியின் கதறல் !



  

ஜூன் 8,1972. வியட்நாம் போரில் கடுமையான தாக்குதல் நடந்த கொண்டிருந்த போது 'ட்ராங் பாங்என்ற பகுதியில் குண்டு வெடிக்கையில்அதிலிருந்து தப்பி வந்தவளாய் கிம் புக் என்ற சிறுமி நிர்வாண கோலத்தில் கதறிக்கொண்டே ஓடி வரஅப்படமே அப்போரை உலக நாடுகள் தடுத்து நிறுத்த காரணமாயிற்று.

வறுமை உடலை கொத்த நின்ற கழுகு


1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 'சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகைஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னும் புகைப்படக்காரர். இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமேஎன்ற சர்ச்சை எழபின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கற்பிழந்த இந்திய ஆர்மி !



மணிப்பூர் பெண்களை இந்திய ராணுவப் படை கற்பழித்தது என்று மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம் நடத்தினர். இது போல் எந்தவொரு தேசத்திலும் நடந்தது இல்லை. இந்த போராட்டம் இந்திய ராணுவத்தை உலக அரங்கில் கற்பிழக்க செய்தது.
 

பிரபாகரன் இல்லை !



 "பிரபாகரன் இல்லை..  இல்லை.. ஆனால் பிரபாகரன் தான்" என்று இலங்கை அரசு  காட்டிய பிரபாகரனின் மரணப் புகைப்படம்  வெளிவந்த நிமிடம் பல கேள்விகளையும்சர்ச்சைகளையும் எழுப்பியது. சர்வதேச ஊடகங்கள் அப்புகைப்படத்தின் மீதான ஆய்வை நடத்தின. இதுவரை அதை பற்றிய தெளிவான தகவல் இல்லை.

 

ஆப்கானை தகர்க்கும் அமெரிக்க உடைப்பு !



செப்டம்பர் 11,2001 சர்வதேச தீவிரவாதத்தின் மீதான பார்வை உக்கிரமான நாள். அன்று தான் உலக வர்த்தக மையமாக கருதப்படும் 'ட்வின் டவர்ஸ்மீது அல்கொய்தா இயக்கம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அது அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த சில நாட்களுக்கு அந்த புகைப்படமே உலக ஏடுகளின் பக்கங்களை ஆக்கிரமித்தன.  அன்று ஆடிப்போன அமெரிக்காபின்லேடனை கொன்றதோடுஇன்று வரை ஆப்கானையும் அம்மக்களையும் மெல்ல மெல்ல தகர்த்து கொண்டிருக்கிறது.

 
நெஞ்சில் புதைந்த அணுக்குண்டு





இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டே உலகில் அணுக்குண்டால் ஏற்பட்ட முதல் தாக்கம். அந்த அணுவின் விஷம் அம்மக்களை பலவாறு பாதித்தது. கருவை அழித்ததுஊனமாக பிறக்க வைத்ததுதோலை கருக்கியதுகதிர்வீச்சு நோய்களை உண்டாக்கியது. இந்த அணுக்குண்டு வீசப்பட்ட காட்சி ஒவ்வொரு ஜப்பானியன் நெஞ்சிலும் இடம் பெற்றிருக்கும். அணுக்குண்டு என்றுமே ஆபத்தானது என்பதை இப்புகைப்படம் தன்னுள் எப்போதும் புதைத்திருக்கும்.





 நன்றி:விகடன்.காம்


உலகைக் குலுக்கிய புகைப்படங்கள் !!

நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படங்களை இங்கே அதன் சம்பவங்களோடு காண்போம்...!


உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் !

சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே..  அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின்  தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர்  உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.


போரை நிறுத்திய சிறுமியின் கதறல் !



  

ஜூன் 8,1972. வியட்நாம் போரில் கடுமையான தாக்குதல் நடந்த கொண்டிருந்த போது 'ட்ராங் பாங்என்ற பகுதியில் குண்டு வெடிக்கையில்அதிலிருந்து தப்பி வந்தவளாய் கிம் புக் என்ற சிறுமி நிர்வாண கோலத்தில் கதறிக்கொண்டே ஓடி வரஅப்படமே அப்போரை உலக நாடுகள் தடுத்து நிறுத்த காரணமாயிற்று.

வறுமை உடலை கொத்த நின்ற கழுகு


1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 'சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகைஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னும் புகைப்படக்காரர். இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமேஎன்ற சர்ச்சை எழபின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கற்பிழந்த இந்திய ஆர்மி !



மணிப்பூர் பெண்களை இந்திய ராணுவப் படை கற்பழித்தது என்று மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம் நடத்தினர். இது போல் எந்தவொரு தேசத்திலும் நடந்தது இல்லை. இந்த போராட்டம் இந்திய ராணுவத்தை உலக அரங்கில் கற்பிழக்க செய்தது.
 

பிரபாகரன் இல்லை !



 "பிரபாகரன் இல்லை..  இல்லை.. ஆனால் பிரபாகரன் தான்" என்று இலங்கை அரசு  காட்டிய பிரபாகரனின் மரணப் புகைப்படம்  வெளிவந்த நிமிடம் பல கேள்விகளையும்சர்ச்சைகளையும் எழுப்பியது. சர்வதேச ஊடகங்கள் அப்புகைப்படத்தின் மீதான ஆய்வை நடத்தின. இதுவரை அதை பற்றிய தெளிவான தகவல் இல்லை.

 

ஆப்கானை தகர்க்கும் அமெரிக்க உடைப்பு !



செப்டம்பர் 11,2001 சர்வதேச தீவிரவாதத்தின் மீதான பார்வை உக்கிரமான நாள். அன்று தான் உலக வர்த்தக மையமாக கருதப்படும் 'ட்வின் டவர்ஸ்மீது அல்கொய்தா இயக்கம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அது அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த சில நாட்களுக்கு அந்த புகைப்படமே உலக ஏடுகளின் பக்கங்களை ஆக்கிரமித்தன.  அன்று ஆடிப்போன அமெரிக்காபின்லேடனை கொன்றதோடுஇன்று வரை ஆப்கானையும் அம்மக்களையும் மெல்ல மெல்ல தகர்த்து கொண்டிருக்கிறது.

 
நெஞ்சில் புதைந்த அணுக்குண்டு





இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டே உலகில் அணுக்குண்டால் ஏற்பட்ட முதல் தாக்கம். அந்த அணுவின் விஷம் அம்மக்களை பலவாறு பாதித்தது. கருவை அழித்ததுஊனமாக பிறக்க வைத்ததுதோலை கருக்கியதுகதிர்வீச்சு நோய்களை உண்டாக்கியது. இந்த அணுக்குண்டு வீசப்பட்ட காட்சி ஒவ்வொரு ஜப்பானியன் நெஞ்சிலும் இடம் பெற்றிருக்கும். அணுக்குண்டு என்றுமே ஆபத்தானது என்பதை இப்புகைப்படம் தன்னுள் எப்போதும் புதைத்திருக்கும்.





 நன்றி:விகடன்.காம்



திசாநாயக்க முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 78 பேர் சனிக்கிழமையன்று வவுனியாவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூன்று பேர் பெண்கள்.

நான்கு வருடங்களின் பின்னர் தற்போதுதான் வெளியுலகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் தனக்குக் கிடைத்தது என விடுதலையான ஓர் இளைஞன் குறிப்பிட்டார்.

தங்களைப் போன்று தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் விசாரணைகளின்றியும், விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என விடுதலையான மற்றுமோர் இளைஞன் கேட்டுக்கொண்டார்.
இறுதிச் சண்டைகளின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த 12 ஆயிரம் பேரில் 11 ஆயிரம் பேர் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கபட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்னும் 1200 பேரளவில் தமது காவலில் இருப்பதாகவும், இவர்களில் புனர்வாழ்வுப் பயிற்சி பெறுபவர்கள் அல்லது சுமார் 700 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாகவும் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள புனர்வாழ்வு பெறொவோர் அனைவரையும் இந்த வருட இறுதிக்குள் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் விடுதலைப் புலிகள் ஒரு தொகுதியினர் விடுதலை

திசாநாயக்க முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 78 பேர் சனிக்கிழமையன்று வவுனியாவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூன்று பேர் பெண்கள்.

நான்கு வருடங்களின் பின்னர் தற்போதுதான் வெளியுலகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் தனக்குக் கிடைத்தது என விடுதலையான ஓர் இளைஞன் குறிப்பிட்டார்.

தங்களைப் போன்று தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் விசாரணைகளின்றியும், விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என விடுதலையான மற்றுமோர் இளைஞன் கேட்டுக்கொண்டார்.
இறுதிச் சண்டைகளின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த 12 ஆயிரம் பேரில் 11 ஆயிரம் பேர் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கபட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்னும் 1200 பேரளவில் தமது காவலில் இருப்பதாகவும், இவர்களில் புனர்வாழ்வுப் பயிற்சி பெறுபவர்கள் அல்லது சுமார் 700 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாகவும் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள புனர்வாழ்வு பெறொவோர் அனைவரையும் இந்த வருட இறுதிக்குள் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஒருவர் இலங்கையில் சித்ரவதைக்கு உள்ளான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகக் கூறும் ''சித்ரவதைகளில் இருந்து விடுதலை'' (Freedom from Torture) என்னும் அமைப்பு, ஆகவே பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது என்று கேட்டுள்ளது.
பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட மற்றுமொரு தொகுதியினர் வியாழனன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையிலேயே இந்த அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட இந்த அமைப்பின் தலைமை நிர்வாக இயக்குனர் கீத் பெஸ்ட் அவர்கள் இது குறித்து பிபிசியிடம் பேசும் போது, பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு, இலங்கையில் சித்ரவதைக்கு உள்ளாகி, மீண்டும் பிரிட்டனில் தஞ்சம் கோரியுள்ள ஒருவர் பற்றிய ஆதாரம் தம்மிடம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இது குறித்த தகவல்களை தாம் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ள போதிலும், பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கைக்கு தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவது துரதிர்ஸ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது மாத்திரமன்றி பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களை ஒரு வகையில் ரகசியமான முறையில் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் தொடர்பில் இவ்வாறான பல சம்பவங்கள் குறித்த தகவல்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறும் கீத் பெஸ்ட் அவர்கள், இப்படியான சம்பவங்கள் குறித்து இலங்கையில் ஒரு முழுமையான பொறுப்புக் கூறல் நடக்கும் வரை தஞ்சம் கோரியவர்களை அங்கு பிரிட்டிஷ் அரசாங்கம் திரும்ப அனுப்பக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு முழுமையான தெளிவு பெறும் வரை தமது நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது

பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஒருவர் இலங்கையில் சித்ரவதைக்கு உள்ளான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகக் கூறும் ''சித்ரவதைகளில் இருந்து விடுதலை'' (Freedom from Torture) என்னும் அமைப்பு, ஆகவே பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது என்று கேட்டுள்ளது.
பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட மற்றுமொரு தொகுதியினர் வியாழனன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையிலேயே இந்த அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட இந்த அமைப்பின் தலைமை நிர்வாக இயக்குனர் கீத் பெஸ்ட் அவர்கள் இது குறித்து பிபிசியிடம் பேசும் போது, பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு, இலங்கையில் சித்ரவதைக்கு உள்ளாகி, மீண்டும் பிரிட்டனில் தஞ்சம் கோரியுள்ள ஒருவர் பற்றிய ஆதாரம் தம்மிடம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இது குறித்த தகவல்களை தாம் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ள போதிலும், பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கைக்கு தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவது துரதிர்ஸ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது மாத்திரமன்றி பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களை ஒரு வகையில் ரகசியமான முறையில் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் தொடர்பில் இவ்வாறான பல சம்பவங்கள் குறித்த தகவல்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறும் கீத் பெஸ்ட் அவர்கள், இப்படியான சம்பவங்கள் குறித்து இலங்கையில் ஒரு முழுமையான பொறுப்புக் கூறல் நடக்கும் வரை தஞ்சம் கோரியவர்களை அங்கு பிரிட்டிஷ் அரசாங்கம் திரும்ப அனுப்பக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு முழுமையான தெளிவு பெறும் வரை தமது நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முக நூல்

Popular Posts