background img

புதிய வரவு

Showing posts with label Japan. Show all posts
Showing posts with label Japan. Show all posts
நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படங்களை இங்கே அதன் சம்பவங்களோடு காண்போம்...!


உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் !

சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே..  அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின்  தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர்  உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.


போரை நிறுத்திய சிறுமியின் கதறல் !



  

ஜூன் 8,1972. வியட்நாம் போரில் கடுமையான தாக்குதல் நடந்த கொண்டிருந்த போது 'ட்ராங் பாங்என்ற பகுதியில் குண்டு வெடிக்கையில்அதிலிருந்து தப்பி வந்தவளாய் கிம் புக் என்ற சிறுமி நிர்வாண கோலத்தில் கதறிக்கொண்டே ஓடி வரஅப்படமே அப்போரை உலக நாடுகள் தடுத்து நிறுத்த காரணமாயிற்று.

வறுமை உடலை கொத்த நின்ற கழுகு


1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 'சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகைஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னும் புகைப்படக்காரர். இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமேஎன்ற சர்ச்சை எழபின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கற்பிழந்த இந்திய ஆர்மி !



மணிப்பூர் பெண்களை இந்திய ராணுவப் படை கற்பழித்தது என்று மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம் நடத்தினர். இது போல் எந்தவொரு தேசத்திலும் நடந்தது இல்லை. இந்த போராட்டம் இந்திய ராணுவத்தை உலக அரங்கில் கற்பிழக்க செய்தது.
 

பிரபாகரன் இல்லை !



 "பிரபாகரன் இல்லை..  இல்லை.. ஆனால் பிரபாகரன் தான்" என்று இலங்கை அரசு  காட்டிய பிரபாகரனின் மரணப் புகைப்படம்  வெளிவந்த நிமிடம் பல கேள்விகளையும்சர்ச்சைகளையும் எழுப்பியது. சர்வதேச ஊடகங்கள் அப்புகைப்படத்தின் மீதான ஆய்வை நடத்தின. இதுவரை அதை பற்றிய தெளிவான தகவல் இல்லை.

 

ஆப்கானை தகர்க்கும் அமெரிக்க உடைப்பு !



செப்டம்பர் 11,2001 சர்வதேச தீவிரவாதத்தின் மீதான பார்வை உக்கிரமான நாள். அன்று தான் உலக வர்த்தக மையமாக கருதப்படும் 'ட்வின் டவர்ஸ்மீது அல்கொய்தா இயக்கம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அது அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த சில நாட்களுக்கு அந்த புகைப்படமே உலக ஏடுகளின் பக்கங்களை ஆக்கிரமித்தன.  அன்று ஆடிப்போன அமெரிக்காபின்லேடனை கொன்றதோடுஇன்று வரை ஆப்கானையும் அம்மக்களையும் மெல்ல மெல்ல தகர்த்து கொண்டிருக்கிறது.

 
நெஞ்சில் புதைந்த அணுக்குண்டு





இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டே உலகில் அணுக்குண்டால் ஏற்பட்ட முதல் தாக்கம். அந்த அணுவின் விஷம் அம்மக்களை பலவாறு பாதித்தது. கருவை அழித்ததுஊனமாக பிறக்க வைத்ததுதோலை கருக்கியதுகதிர்வீச்சு நோய்களை உண்டாக்கியது. இந்த அணுக்குண்டு வீசப்பட்ட காட்சி ஒவ்வொரு ஜப்பானியன் நெஞ்சிலும் இடம் பெற்றிருக்கும். அணுக்குண்டு என்றுமே ஆபத்தானது என்பதை இப்புகைப்படம் தன்னுள் எப்போதும் புதைத்திருக்கும்.





 நன்றி:விகடன்.காம்


உலகைக் குலுக்கிய புகைப்படங்கள் !!

நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படங்களை இங்கே அதன் சம்பவங்களோடு காண்போம்...!


உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் !

சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே..  அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின்  தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர்  உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.


போரை நிறுத்திய சிறுமியின் கதறல் !



  

ஜூன் 8,1972. வியட்நாம் போரில் கடுமையான தாக்குதல் நடந்த கொண்டிருந்த போது 'ட்ராங் பாங்என்ற பகுதியில் குண்டு வெடிக்கையில்அதிலிருந்து தப்பி வந்தவளாய் கிம் புக் என்ற சிறுமி நிர்வாண கோலத்தில் கதறிக்கொண்டே ஓடி வரஅப்படமே அப்போரை உலக நாடுகள் தடுத்து நிறுத்த காரணமாயிற்று.

வறுமை உடலை கொத்த நின்ற கழுகு


1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 'சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகைஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னும் புகைப்படக்காரர். இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமேஎன்ற சர்ச்சை எழபின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கற்பிழந்த இந்திய ஆர்மி !



மணிப்பூர் பெண்களை இந்திய ராணுவப் படை கற்பழித்தது என்று மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம் நடத்தினர். இது போல் எந்தவொரு தேசத்திலும் நடந்தது இல்லை. இந்த போராட்டம் இந்திய ராணுவத்தை உலக அரங்கில் கற்பிழக்க செய்தது.
 

பிரபாகரன் இல்லை !



 "பிரபாகரன் இல்லை..  இல்லை.. ஆனால் பிரபாகரன் தான்" என்று இலங்கை அரசு  காட்டிய பிரபாகரனின் மரணப் புகைப்படம்  வெளிவந்த நிமிடம் பல கேள்விகளையும்சர்ச்சைகளையும் எழுப்பியது. சர்வதேச ஊடகங்கள் அப்புகைப்படத்தின் மீதான ஆய்வை நடத்தின. இதுவரை அதை பற்றிய தெளிவான தகவல் இல்லை.

 

ஆப்கானை தகர்க்கும் அமெரிக்க உடைப்பு !



செப்டம்பர் 11,2001 சர்வதேச தீவிரவாதத்தின் மீதான பார்வை உக்கிரமான நாள். அன்று தான் உலக வர்த்தக மையமாக கருதப்படும் 'ட்வின் டவர்ஸ்மீது அல்கொய்தா இயக்கம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அது அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த சில நாட்களுக்கு அந்த புகைப்படமே உலக ஏடுகளின் பக்கங்களை ஆக்கிரமித்தன.  அன்று ஆடிப்போன அமெரிக்காபின்லேடனை கொன்றதோடுஇன்று வரை ஆப்கானையும் அம்மக்களையும் மெல்ல மெல்ல தகர்த்து கொண்டிருக்கிறது.

 
நெஞ்சில் புதைந்த அணுக்குண்டு





இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டே உலகில் அணுக்குண்டால் ஏற்பட்ட முதல் தாக்கம். அந்த அணுவின் விஷம் அம்மக்களை பலவாறு பாதித்தது. கருவை அழித்ததுஊனமாக பிறக்க வைத்ததுதோலை கருக்கியதுகதிர்வீச்சு நோய்களை உண்டாக்கியது. இந்த அணுக்குண்டு வீசப்பட்ட காட்சி ஒவ்வொரு ஜப்பானியன் நெஞ்சிலும் இடம் பெற்றிருக்கும். அணுக்குண்டு என்றுமே ஆபத்தானது என்பதை இப்புகைப்படம் தன்னுள் எப்போதும் புதைத்திருக்கும்.





 நன்றி:விகடன்.காம்



டோக்கியோ: ஜப்பானில் மீண்டும் சுனாமி தாக்குதலால் அணு உலைகள் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கடலில் தடுப்புச்சுவர் கட்டுவதற்காக மூன்று அணு உலைகளில் மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி நிகழ்ந்த சுனாமி தாக்குதலில் புகூஷிமா, டெய்ச்சி அணு உலைகள் வெடித்து சிதறி கதிர்வீச்சை ஏற்படுத்தின. 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாயினர். ஜப்பானில் மொத்தம் 54 அணுஉலைகள் உள்ளன.

இந்நிலையில் சுனாமி போன்று மீண்டும் நிகழாமல் தடுக்கு அந்நாட்டில் மேலும் கடல்கரையை ஒட்டியுள்ள அணு உலைகளில்பாதுகாப்பு குறித்த கூட்டம் நடந்தது. இதில் ஹ‌ேமோகா எனும் மிகப்பெரிய அணு உலை பசிபிக் கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.. இதனை சுனாமி தாக்காதவாறு கடல் மேல் தடுப்புச்சுவர் எழுப்ப முடிவு செய்து அதற்கான கட்டுமானப்பணிகளை துவக்கியுள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள மேலும் இரண்டு அணு உலைகளில் மின் உற்பத்தியை ஜப்பான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த தடுப்புச்சுவர்கள் இரண்டு வருடங்களில் கட்டிமுடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜப்பான் பிரதமர் நெளட்டோ கான் கூறுகையில், இத்தகைய தடுப்புச்சுவர்கள் எப்படிப்பட்ட சுனாமி தாக்குதல்களையும் தாங்கும் அளவுக்கு 90 சதவீதம் உறுதியாக இருக்கும் என்றார்.

ஜப்பானில் 3 அணுஉலைகள் நிறுத்தி வைப்பு

டோக்கியோ: ஜப்பானில் மீண்டும் சுனாமி தாக்குதலால் அணு உலைகள் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கடலில் தடுப்புச்சுவர் கட்டுவதற்காக மூன்று அணு உலைகளில் மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி நிகழ்ந்த சுனாமி தாக்குதலில் புகூஷிமா, டெய்ச்சி அணு உலைகள் வெடித்து சிதறி கதிர்வீச்சை ஏற்படுத்தின. 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாயினர். ஜப்பானில் மொத்தம் 54 அணுஉலைகள் உள்ளன.

இந்நிலையில் சுனாமி போன்று மீண்டும் நிகழாமல் தடுக்கு அந்நாட்டில் மேலும் கடல்கரையை ஒட்டியுள்ள அணு உலைகளில்பாதுகாப்பு குறித்த கூட்டம் நடந்தது. இதில் ஹ‌ேமோகா எனும் மிகப்பெரிய அணு உலை பசிபிக் கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.. இதனை சுனாமி தாக்காதவாறு கடல் மேல் தடுப்புச்சுவர் எழுப்ப முடிவு செய்து அதற்கான கட்டுமானப்பணிகளை துவக்கியுள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள மேலும் இரண்டு அணு உலைகளில் மின் உற்பத்தியை ஜப்பான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த தடுப்புச்சுவர்கள் இரண்டு வருடங்களில் கட்டிமுடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜப்பான் பிரதமர் நெளட்டோ கான் கூறுகையில், இத்தகைய தடுப்புச்சுவர்கள் எப்படிப்பட்ட சுனாமி தாக்குதல்களையும் தாங்கும் அளவுக்கு 90 சதவீதம் உறுதியாக இருக்கும் என்றார்.

டோக்கியோ: ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கதிர்வீச்சு பரவுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் 9 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டது.

அதில் 4 பேரின் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு கொண்ட அயோடின் அதிக அளவில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கதிர்வீச்சின் தாக்கம் கடலிலுள்ள மீன்களுக்கும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்கள் பருவ நிலைக்கு ஏற்றவாறு இடம் பெயரும். அவ்வாறு ஜப்பானில் கதிர்வீச்சுள்ள மீன்கள் வேறு இடத்திற்கு வருகையில் பிடிக்கப்பட்டால் அதன் மூலம் மனிதனுக்கு பரவும். இதனால் கடல் உணவு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு: மக்கள் அதி்ர்ச்சி

டோக்கியோ: ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கதிர்வீச்சு பரவுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் 9 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டது.

அதில் 4 பேரின் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு கொண்ட அயோடின் அதிக அளவில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கதிர்வீச்சின் தாக்கம் கடலிலுள்ள மீன்களுக்கும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்கள் பருவ நிலைக்கு ஏற்றவாறு இடம் பெயரும். அவ்வாறு ஜப்பானில் கதிர்வீச்சுள்ள மீன்கள் வேறு இடத்திற்கு வருகையில் பிடிக்கப்பட்டால் அதன் மூலம் மனிதனுக்கு பரவும். இதனால் கடல் உணவு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் கடந்த மாதம் 11-ந்தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. அதில் 28 ஆயிரம் பேர் பலியானார்கள். மேலும் புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள 4 அணு உலைகள் வெடித்து சிதறின. இதனால் அதில் இருந்து கதிர்வீச்சு வெளியேறியது.

எனவே, அவற்றை குளிர்விக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெடித்து சிதறிய 4 அணு உலைகளில் 2 மற்றும் 4-வது உலைகளில் குறைந்த அளவே சேதம் ஏற்பட்டது. எனவே, பாதுகாப்பு கவச உடை அணிந்து கதிர்வீச்சை தடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில் 1 மற்றும் 3-வது அணுஉலைகளில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. அந்த அணுஉலைகளின் கட்டிட மேற்கூரை முழுவதும் தகர்ந்தது. எனவே, அதில் இருந்து தான் அதிக அளவில் கதிர்வீச்சு வெளியேறி வருகிறது.

எனவே, கதிர்வீச்சு வெளியேறுவதை தடுக்கும் பணியில் ஊழியர்கள் பயன் படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அணுஉலை வெடித்த ஒரு மாதத்துக்கு பிறகு அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அளவை கண்டறிய அமெரிக்கா அதி நவீன “ரோபோ”வை அனுப்பியது.

அது 1 மற்றும் 4-வது அணு உலைக்குள் சென்று அங்குள்ளதட்பவெட்பநிலை, அழுத்தம் மற்றும் கதிர்வீச்சு அளவை கணக்கிட்டு ஆய்வு செய்தது. அதன்படி இந்த அணுஉலைகளில் கதிர் வீச்சு அளவு மிகவும் அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, அங்கு அதிநவீன முறையில் கதிர்வீச்சு பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கதிர்வீச்சு பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமர் நேட்டோகான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

எதிர்க்கட்சியான லிபரல் ஜனநாயக கட்சியின் எம்.பி. மசாஷிவாகி பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பினார். அப்போது இந்த விவகாரத்தில் பிரதமர் நேட் டோகான் மற்றும் டோக்கியோ மின்வாரியம் (டெப்கோ) நடவடிக்கை திருப்தி இல்லை என்று தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் நேட்டோகான், நடந்த தவறுக்கு நாட்டு மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். மேலும் அரசு தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

வெடித்து சிதறிய ஜப்பான் அணு உலையில் கதிர்வீச்சு வீரியம் அதிகரிப்பு; “ரோபோ” கண்டுபிடித்தது

ஜப்பானில் கடந்த மாதம் 11-ந்தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. அதில் 28 ஆயிரம் பேர் பலியானார்கள். மேலும் புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள 4 அணு உலைகள் வெடித்து சிதறின. இதனால் அதில் இருந்து கதிர்வீச்சு வெளியேறியது.

எனவே, அவற்றை குளிர்விக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெடித்து சிதறிய 4 அணு உலைகளில் 2 மற்றும் 4-வது உலைகளில் குறைந்த அளவே சேதம் ஏற்பட்டது. எனவே, பாதுகாப்பு கவச உடை அணிந்து கதிர்வீச்சை தடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில் 1 மற்றும் 3-வது அணுஉலைகளில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. அந்த அணுஉலைகளின் கட்டிட மேற்கூரை முழுவதும் தகர்ந்தது. எனவே, அதில் இருந்து தான் அதிக அளவில் கதிர்வீச்சு வெளியேறி வருகிறது.

எனவே, கதிர்வீச்சு வெளியேறுவதை தடுக்கும் பணியில் ஊழியர்கள் பயன் படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அணுஉலை வெடித்த ஒரு மாதத்துக்கு பிறகு அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அளவை கண்டறிய அமெரிக்கா அதி நவீன “ரோபோ”வை அனுப்பியது.

அது 1 மற்றும் 4-வது அணு உலைக்குள் சென்று அங்குள்ளதட்பவெட்பநிலை, அழுத்தம் மற்றும் கதிர்வீச்சு அளவை கணக்கிட்டு ஆய்வு செய்தது. அதன்படி இந்த அணுஉலைகளில் கதிர் வீச்சு அளவு மிகவும் அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, அங்கு அதிநவீன முறையில் கதிர்வீச்சு பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கதிர்வீச்சு பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமர் நேட்டோகான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

எதிர்க்கட்சியான லிபரல் ஜனநாயக கட்சியின் எம்.பி. மசாஷிவாகி பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பினார். அப்போது இந்த விவகாரத்தில் பிரதமர் நேட் டோகான் மற்றும் டோக்கியோ மின்வாரியம் (டெப்கோ) நடவடிக்கை திருப்தி இல்லை என்று தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் நேட்டோகான், நடந்த தவறுக்கு நாட்டு மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். மேலும் அரசு தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

டோக்கியோ: ஜப்பானில் நேற்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், புக்குஷிமா அணு மின் நிலையத்தைச் சுற்றி, மக்கள் வசிக்கத் தடை விதிக்கும் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமி நிகழ்ந்து ஒரு மாதம் கடந்த நிலையில், நேற்று அதை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி கூட்டங்கள் முடிந்த ஒரு மணி நேரத்தில், புக்குஷிமாவுக்குத் தெற்கில் 81 கி.மீ., தொலைவில் மையம் கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவான இந்நிலநடுக்கத்தால், தலைநகர் டோக்கியோவில் கட்டடங்கள் குலுங்கின. இதனால், இபாராக்கி மாகாணத்தில் மூன்றடி உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், 50 நிமிடங்களுக்குப் பின் அது திரும்பப் பெறப்பட்டது. நிலநடுக்கத்தால் புக்குஷிமா அணு மின் நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர்கள், பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் வானிலை மையம், இன்னும் பல பயங்கர நிலநடுக்கங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது. இந்நிலையில், புக்குஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பதால், மக்கள் அப்பகுதியில் வசிக்கக் கூடாது என்று அதன் பரப்பளவை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அணு மின் நிலையத்தில் இருந்து 20 முதல் 30 கி.மீ., சுற்றளவிற்குள் உள்ள நகராட்சிப் பகுதிகள் இதில் அடங்கும். இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், வேறு இடங்களுக்குச் சென்று விட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜப்பான் துயரம் அதிகரிப்பு: அஞ்சலி நேரத்தில் நிலநடுக்கம்

டோக்கியோ: ஜப்பானில் நேற்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், புக்குஷிமா அணு மின் நிலையத்தைச் சுற்றி, மக்கள் வசிக்கத் தடை விதிக்கும் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமி நிகழ்ந்து ஒரு மாதம் கடந்த நிலையில், நேற்று அதை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி கூட்டங்கள் முடிந்த ஒரு மணி நேரத்தில், புக்குஷிமாவுக்குத் தெற்கில் 81 கி.மீ., தொலைவில் மையம் கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவான இந்நிலநடுக்கத்தால், தலைநகர் டோக்கியோவில் கட்டடங்கள் குலுங்கின. இதனால், இபாராக்கி மாகாணத்தில் மூன்றடி உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், 50 நிமிடங்களுக்குப் பின் அது திரும்பப் பெறப்பட்டது. நிலநடுக்கத்தால் புக்குஷிமா அணு மின் நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர்கள், பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் வானிலை மையம், இன்னும் பல பயங்கர நிலநடுக்கங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது. இந்நிலையில், புக்குஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பதால், மக்கள் அப்பகுதியில் வசிக்கக் கூடாது என்று அதன் பரப்பளவை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அணு மின் நிலையத்தில் இருந்து 20 முதல் 30 கி.மீ., சுற்றளவிற்குள் உள்ள நகராட்சிப் பகுதிகள் இதில் அடங்கும். இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், வேறு இடங்களுக்குச் சென்று விட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

டோக்கியோ: ஜப்பானை பயங்கர பூகம்பமும் சுனாமியும் தாக்கி பேரழிவை ஏற்படுத்தி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், இன்று காலையும் அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜப்பானின் வட கிழக்குப் பகுதியில் கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.1 புள்ளிகளாகப் பதிவானது. இதையடுத்து 1 மீட்டர் உயர சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சுனாமி ஏதும் ஏற்படவில்லை.

இந் நிலையில் சரியாக ஒரு மாதத்துக்கு முன் சுனாமி தாக்கியதன் நினைவாக ஜப்பான் முழுவதும் இன்று அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

ஜப்பானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ: ஜப்பானை பயங்கர பூகம்பமும் சுனாமியும் தாக்கி பேரழிவை ஏற்படுத்தி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், இன்று காலையும் அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜப்பானின் வட கிழக்குப் பகுதியில் கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.1 புள்ளிகளாகப் பதிவானது. இதையடுத்து 1 மீட்டர் உயர சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சுனாமி ஏதும் ஏற்படவில்லை.

இந் நிலையில் சரியாக ஒரு மாதத்துக்கு முன் சுனாமி தாக்கியதன் நினைவாக ஜப்பான் முழுவதும் இன்று அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

டெல்லி: கதிர்வீச்சு அச்சம் காரணமாக, ஜப்பானின் ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா 3 மாத கால தடை விதித்துள்ளது.

நில நடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மத்திய ஜப்பானில் ஃபுகுஷிமா அணு மின்நிலையத்தைப் பாதுகாக்க 4 வாரமாக நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்தியா இந்தத் தடையை விதித்துள்ளது.

ஜப்பானிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. 3 மாத காலம் இந்தத் தடை அமலில் இருக்கும். உடனடியாக இது அமலுக்கு வருகிறது என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்வீச்சு ஜப்பானின் இதர பகுதிகளிலும் பரவலாக பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களிலும் அது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் விரிவான விவாதங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிலிருந்து பழங்கள், காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை சிறிய அளவில் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

அணு மின்நிலையத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து பால் பொருட்கள், மீன், இறைச்சிப் பொருட்களை இறக்குமதி செய்ய பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. நிறைய நாடுகள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கதிர்வீச்சின் அளவைக் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிலிருந்து உணவுப் பொருள் இறக்குமதிக்கு தடை! - மத்திய அரசு

டெல்லி: கதிர்வீச்சு அச்சம் காரணமாக, ஜப்பானின் ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா 3 மாத கால தடை விதித்துள்ளது.

நில நடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மத்திய ஜப்பானில் ஃபுகுஷிமா அணு மின்நிலையத்தைப் பாதுகாக்க 4 வாரமாக நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்தியா இந்தத் தடையை விதித்துள்ளது.

ஜப்பானிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. 3 மாத காலம் இந்தத் தடை அமலில் இருக்கும். உடனடியாக இது அமலுக்கு வருகிறது என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்வீச்சு ஜப்பானின் இதர பகுதிகளிலும் பரவலாக பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களிலும் அது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் விரிவான விவாதங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிலிருந்து பழங்கள், காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை சிறிய அளவில் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

அணு மின்நிலையத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து பால் பொருட்கள், மீன், இறைச்சிப் பொருட்களை இறக்குமதி செய்ய பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. நிறைய நாடுகள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கதிர்வீச்சின் அளவைக் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

டோக்யோ: சமீபத்திய பூகம்பம், அதனைத் தொடர்ந்த பயங்கர சுனாமி காரணமாக ஜப்பானுக்கு 309 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டமாகியுள்ளது.

உலகில் மிகக் காஸ்ட்லியான இயற்கைப் பேரழிவு இதுதான் என்கிறார்கள்.

பூகம்பம் மற்றும் சுனாமியால் உருக்குலைந்துபோன ஜப்பானின் சாலைகள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை சரிசெய்ய மட்டுமே இந்த மொத்தப் பணமும் தேவைப்படுகிறது என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த இயற்கைப் பேரிடர் காரணமாக ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 0.5 சதவீதம் பின்னோக்கிப் போய்விட்டதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அரசின் இந்த நஷ்டக் கணக்கில், மின்சார இழப்பு, அணுக்கதிர்வீச்சு காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகள் எல்லாம் சேர்க்கப்படவில்லை. ஃபுகுஷிமா அணுசக்தி நிலையமே மூடப்படும் சூழல் உள்ளதால், நஷ்டத்தின் அளவு இன்னும் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

தனியார் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு இன்னும் அதிகம். டொயோட்டா நிறுவனம் முழுமையாக கார் உற்பத்தியையே நிறுத்தியுள்ளது. இதுவரை 140000 கார்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சுனாமியால் ஜப்பானுக்கு நஷ்டம் 309 பில்லியன் டாலர்!

டோக்யோ: சமீபத்திய பூகம்பம், அதனைத் தொடர்ந்த பயங்கர சுனாமி காரணமாக ஜப்பானுக்கு 309 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டமாகியுள்ளது.

உலகில் மிகக் காஸ்ட்லியான இயற்கைப் பேரழிவு இதுதான் என்கிறார்கள்.

பூகம்பம் மற்றும் சுனாமியால் உருக்குலைந்துபோன ஜப்பானின் சாலைகள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை சரிசெய்ய மட்டுமே இந்த மொத்தப் பணமும் தேவைப்படுகிறது என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த இயற்கைப் பேரிடர் காரணமாக ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 0.5 சதவீதம் பின்னோக்கிப் போய்விட்டதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அரசின் இந்த நஷ்டக் கணக்கில், மின்சார இழப்பு, அணுக்கதிர்வீச்சு காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகள் எல்லாம் சேர்க்கப்படவில்லை. ஃபுகுஷிமா அணுசக்தி நிலையமே மூடப்படும் சூழல் உள்ளதால், நஷ்டத்தின் அளவு இன்னும் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

தனியார் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு இன்னும் அதிகம். டொயோட்டா நிறுவனம் முழுமையாக கார் உற்பத்தியையே நிறுத்தியுள்ளது. இதுவரை 140000 கார்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் புகுஷிமா அணு உலைக்கூடத்தில் உள்ள தண்ணீரில் அணுகதிர் வீச்சு ஒருகோடி மடங்கு அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் அங்கு இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஜப்பானில் கடந்த 11ந் தேதி பூகம்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இதன் காரணமாக 27 ஆயிரம் பேர் பலியானார்கள்.


பூகம்பம் சுனாமி காரணமாக புகுஷிமாவில் உள்ள 6 அணு உலைகளில் உள்ள குளிரூட்டும் இயந்திரங்களில் பாதிப்பு ஏற்பட்டு, அணு உலைகள் வெடித்தன. இதனால் அணுகதிரியக்கம் கசிய தொடங்கியது.


2வது அணு உலைகூடத்தில் ஜப்பானிய அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் அங்கு உள்ள தண்ணீரில் இயல்பு நிலையை விட கதிரியக்கத்தின் அளவு ஒரு கோடி மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது.


அணு உலைக்கூடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் ஒரு கிழூபிக் செ.மீ. தண்ணீரில் 209 கோடி பெக்குயெரல் (கதிர் வீச்சின் அளவு) கதிரியக்கம் இருப்பது தெரிய வந்ததாக அணு உலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் அனைவரையும் உலைக்கூடத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றினார்கள்.


புகுஷிமா நகரில் இருந்து 30 கி.மீ.தொலைவில் உள்ள பகுதியில் கூட கதிரியக்கத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புகுஷிமா அணு உலைக்கு அருகில் உள்ள கடலில் கதிரியக்கத்தின் அளவு இயல்பு நிலையை விட 1850 மடங்கு அதிகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடல் வாழ் உயிரினங்களை உணவாக உட்கொள்ளக்கூடாது என்று அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.


இதற்கிடையில் ஜப்பானின் அணுசக்தி பிரச்சினை பல மாதங்களுக்கு நீடிக்கும் என்று வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி கமிஷன் எச்சரித்து உள்ளது.


பூகம்பம் மற்றும், சுனாமி, ஆகியவற்றுடன் அணுகதிர் வீச்சு பாதிப்பு காரணமாக ஜப்பானில் இருந்து உலக னநாடுகளுக்கு மீன் மற்றும் கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது.

ஜப்பானில் அணுகதிர் வீச்சு அதிகரிப்பு

ஜப்பானில் புகுஷிமா அணு உலைக்கூடத்தில் உள்ள தண்ணீரில் அணுகதிர் வீச்சு ஒருகோடி மடங்கு அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் அங்கு இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஜப்பானில் கடந்த 11ந் தேதி பூகம்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இதன் காரணமாக 27 ஆயிரம் பேர் பலியானார்கள்.


பூகம்பம் சுனாமி காரணமாக புகுஷிமாவில் உள்ள 6 அணு உலைகளில் உள்ள குளிரூட்டும் இயந்திரங்களில் பாதிப்பு ஏற்பட்டு, அணு உலைகள் வெடித்தன. இதனால் அணுகதிரியக்கம் கசிய தொடங்கியது.


2வது அணு உலைகூடத்தில் ஜப்பானிய அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் அங்கு உள்ள தண்ணீரில் இயல்பு நிலையை விட கதிரியக்கத்தின் அளவு ஒரு கோடி மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது.


அணு உலைக்கூடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் ஒரு கிழூபிக் செ.மீ. தண்ணீரில் 209 கோடி பெக்குயெரல் (கதிர் வீச்சின் அளவு) கதிரியக்கம் இருப்பது தெரிய வந்ததாக அணு உலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் அனைவரையும் உலைக்கூடத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றினார்கள்.


புகுஷிமா நகரில் இருந்து 30 கி.மீ.தொலைவில் உள்ள பகுதியில் கூட கதிரியக்கத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புகுஷிமா அணு உலைக்கு அருகில் உள்ள கடலில் கதிரியக்கத்தின் அளவு இயல்பு நிலையை விட 1850 மடங்கு அதிகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடல் வாழ் உயிரினங்களை உணவாக உட்கொள்ளக்கூடாது என்று அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.


இதற்கிடையில் ஜப்பானின் அணுசக்தி பிரச்சினை பல மாதங்களுக்கு நீடிக்கும் என்று வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி கமிஷன் எச்சரித்து உள்ளது.


பூகம்பம் மற்றும், சுனாமி, ஆகியவற்றுடன் அணுகதிர் வீச்சு பாதிப்பு காரணமாக ஜப்பானில் இருந்து உலக னநாடுகளுக்கு மீன் மற்றும் கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது.

டோக்கியோ:ஜப்பானின் புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில், 3ம் உலையில் மிகவும் மோசமாக சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில், அங்கு நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.புக்குஷிமா டாய் இச்சியின் 3ம் உலையில் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று ஊழியர்களின் காலில், கதிர்வீச்சு கலந்த நீர் பட்டதால், கதிர்வீச்சு தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்களில் இருவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த 3ம் உலையில்தான், யுரேனியத்தோடு புளுட்டோனியமும் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியத்தை விட புளுட்டோனியம் மிகுந்த நச்சுப் பொருள் என்பது குறிப்பிடத் தக்கது. 3ம் உலையில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சு கலந்த நீரைப் பரிசோதித்ததில், அதில் இயல்பை விட 10 ஆயிரம் மடங்கு அதிகமாக, கதிர்வீச்சு கலந்திருப்பது தெரியவந்தது. நான்கு உலைகளிலும், இதுவரை செலுத்தப்பட்டு வந்த கடல்நீர் நிறுத்தப்பட்டு, புதிய நீரை உட்செலுத்தும் பணி நேற்று முதல் நடந்து வருகிறது. நான்கு உலைகளிலும், 700 பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் 24 மணிநேரமும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது புக்குஷிமாவைச் சுற்றி மிக அருகில் வசிப்பவர்கள் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 30 கி.மீ., சுற்றளவை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்தார்.ஏற்கனவே பாதிக்கப்பட்ட மூன்று பணியாளர்களைத் தவிர, வேறு எவரும் ஜப்பானில் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதேநேரம், ஜப்பானில் இருந்து சீனாவுக்குச் சென்ற இருவர், மிக மோசமாக கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இருவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10 ஆயிரம் பேர் பலி:நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்து விட்டது. 17 ஆயிரத்து 440 பேர் காணாமல் போயுள்ளனர். இரண்டாயிரத்து 775 பேர் காயம் அடைந்துள்ளனர்.சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஹாங்காங், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள், ஐப்பான் உணவுப் பொருட்கள் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளன. இவ்வரிசையில் தற்போது சீனாவும் சேர்ந்துள்ளது.

அணுமின்நிலைய சேதம்ஒப்புக் கொண்டது ஜப்பான்

டோக்கியோ:ஜப்பானின் புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில், 3ம் உலையில் மிகவும் மோசமாக சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில், அங்கு நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.புக்குஷிமா டாய் இச்சியின் 3ம் உலையில் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று ஊழியர்களின் காலில், கதிர்வீச்சு கலந்த நீர் பட்டதால், கதிர்வீச்சு தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்களில் இருவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த 3ம் உலையில்தான், யுரேனியத்தோடு புளுட்டோனியமும் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியத்தை விட புளுட்டோனியம் மிகுந்த நச்சுப் பொருள் என்பது குறிப்பிடத் தக்கது. 3ம் உலையில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சு கலந்த நீரைப் பரிசோதித்ததில், அதில் இயல்பை விட 10 ஆயிரம் மடங்கு அதிகமாக, கதிர்வீச்சு கலந்திருப்பது தெரியவந்தது. நான்கு உலைகளிலும், இதுவரை செலுத்தப்பட்டு வந்த கடல்நீர் நிறுத்தப்பட்டு, புதிய நீரை உட்செலுத்தும் பணி நேற்று முதல் நடந்து வருகிறது. நான்கு உலைகளிலும், 700 பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் 24 மணிநேரமும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது புக்குஷிமாவைச் சுற்றி மிக அருகில் வசிப்பவர்கள் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 30 கி.மீ., சுற்றளவை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்தார்.ஏற்கனவே பாதிக்கப்பட்ட மூன்று பணியாளர்களைத் தவிர, வேறு எவரும் ஜப்பானில் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதேநேரம், ஜப்பானில் இருந்து சீனாவுக்குச் சென்ற இருவர், மிக மோசமாக கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இருவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10 ஆயிரம் பேர் பலி:நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்து விட்டது. 17 ஆயிரத்து 440 பேர் காணாமல் போயுள்ளனர். இரண்டாயிரத்து 775 பேர் காயம் அடைந்துள்ளனர்.சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஹாங்காங், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள், ஐப்பான் உணவுப் பொருட்கள் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளன. இவ்வரிசையில் தற்போது சீனாவும் சேர்ந்துள்ளது.

புதுடெல்லி: ஜப்பானில் பூகம்பம், சுனாமி ஆகிய இயற்கை சீற்றங்களாலும் அணுக்கதிர் வீச்சாலும் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் சென்றார். அவருடன் வெளியுறவுத் துறை இணை செயலாளர் கவுதம் உள்ளிட்ட வெளியுறவு துறை அதிகாரிகளும் சென்றனர். அவர்களை இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் அகிதகா சைகி வரவேற்றார். அவரிடம் ஜப்பான் மக்களுக்கு ஆழ்ந்த கவலையை பிரதமர் தெரிவித்தார்.

ஜப்பான் தூதரகத்துக்கு சென்ற பிரதமர்!

புதுடெல்லி: ஜப்பானில் பூகம்பம், சுனாமி ஆகிய இயற்கை சீற்றங்களாலும் அணுக்கதிர் வீச்சாலும் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் சென்றார். அவருடன் வெளியுறவுத் துறை இணை செயலாளர் கவுதம் உள்ளிட்ட வெளியுறவு துறை அதிகாரிகளும் சென்றனர். அவர்களை இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் அகிதகா சைகி வரவேற்றார். அவரிடம் ஜப்பான் மக்களுக்கு ஆழ்ந்த கவலையை பிரதமர் தெரிவித்தார்.

புகுஷிமா,டோக்கியோ, மார்ச் 17: ஜப்பானின் புகுஷிமா நகர அணு உலைகளைக் குளிர்விக்க தீவிர நடவடிக்கைகளை ஜப்பானிய அரசு மேற்கொண்டுள்ளது.
சி.எச்.47 ரக ராட்சத ராணுவ ஹெலிகாப்டர்கள் டன் கணக்கில் கடல் தண்ணீரை மொண்டு மொண்டு அணு உலைகள் மீது மழை போல கொட்டி குளிர்விக்கப் பார்க்கின்றன. இந்த வேலையை புதன்கிழமை மேற்கொள்ள முடியாதபடிக்கு அந்தப் பகுதி முழுக்க கதிர்வீச்சு அளவு அதிகமாக இருந்தது. இப்போது சற்று தணிந்திருப்பதால் ராணுவ ஹெலிகாப்டர் பைலட்டுகள் உயிரைத் துச்சமாக மதித்து இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
அதே சமயம், அணு உலையிலிருந்து கதிர் வீச்சு இருக்கிறதா, அந்த அளவு எவ்வளவு என்று இன்னொரு ஹெலிகாப்டரிலிருந்து ஒரு பைலட் அளந்து பார்த்தார்.
இதற்கிடையே தரையிலிருந்தபடியே அணு உலைகள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க டோக்கியோ போலீஸ் படையினர் அந்தப் பகுதியிலிருந்த இடிபாடுகளையும் சேறுகளையும் அகற்றி பாதை ஏற்படுத்தித் தந்துள்ளனர். எனவே தண்ணீர் லாரிகள் மூலம் அதிக நீரை நேரடியாகவே வாரி இறைத்து குளிர்விக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
புகுஷிமா அணு மின்சார நிலையத்தின் எண் 3, எண் 4 அணு உலைகளில் உள்ள குளிர்விப்பான்கள் செயல்படவில்லை. எனவே பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் தண்டுகள் வெப்பமடைந்து உருகியிருக்கும் கட்டடத்திலிருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
அணு மின் நிலையத்தின் 6 அணு உலைகளையும் சேர்த்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தண்டுகள் போடப்பட்டிருக்கும் தண்ணீர் தடாகத்திலிருந்து கதிர்வீச்சு இருக்கக்கூடும் என்பதால் அவற்றையும் ஆய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
40 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் ஏற்பட்டாலே அந்தத் தடாகத்தில் உள்ள தண்ணீர் வற்றி தண்டுகள் வெளியே தெரிய ஆரம்பித்துவிடும், அவ பிறகு சூடேறி காய்ந்து உருகிவிடும். அதன் பிறகு கதிர் வீச்சு பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
எண் 4 அணு உலையின் நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்க்க அமெரிக்க விமானப்படை ஆளற்ற ஹாக் ரக விமானத்தைப் பணியில் ஈடுபடுத்தவிருக்கிறது என்று ஜப்பானிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நில நடுக்கம் ஏற்பட்டவுடனேயே எண் 1, எண் 2, எண் 3 ஆகிய அணு உலைகள் வேலை செய்வதை நிறுத்திவிட்டன. ஆனால் சுனாமி காரணமாக அவற்றைக் குளிர்விக்கும் சாதனம் செயல்படாமல் நின்றுவிட்டது. பயன்படுத்தப்பட்ட அணு உலை எரிபொருள் தண்டுகளில் 70% எண் 1 அணு உûலையிலும், 33% எண் 2 அணு உலையிலும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
எண் 5 அணு உலையின் அணு எரிபொருள் தடாகத்தில் தண்ணீர் மட்டம் வற்றிவிட்டது. எனவே தண்டுகள் சூடேறி கதிர் வீச்சு பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
எண் 4 எண் 5 எண் 6 ஆகிய அணு உலைகளில் எரிபொருள் தண்டுகள் வழக்கமான சோதனைகளுக்காக அப்போது வெளியே எடுக்கப்பட்டிருந்தன.
இறந்தவர்கள்: கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சுனாமியில் இறந்தவர் அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 14,650 என்று போலீஸôர் தெரிவிக்கின்றனர். இதில் இறந்தவர்கள் 5,321, காணாமல் போனவர்கள் 9,329. காயம் அடைந்தவர்கள் 2,383.
முழு வீச்சில் சீரமைப்பு: சுனாமி காரணமாக ஐவாதே மாகாணத்தின் ரிகுசென்டாகடா நகரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. அங்கு வீதியில் விழுந்துகிடந்த கட்டட இடிபாடுகளும் குப்பைகளும் சேறும், கடல் கழிவுகளும் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டுவிட்டது. மீட்பு, நிவாரண வாகனங்கள் நகரின் எந்தப் பகுதிக்கும் இப்போது எளிதாகப் போய்வர முடியும்.
இப்போதைய உடனடி தேவை எரிபொருள்தான். தொழில் நிறுவனங்களுக்கு மின்சார சப்ளையை மீண்டும் அளித்து உற்பத்தியைத் தொடங்க தொழில் அதிபர்கள் கவனம் செலுத்துகின்றனர். ஜப்பானிய மக்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் தங்களை முழு மனதுடன் ஈடுபடுத்தி வருகின்றனர்.
கடல் நீர் உள்ளே புகுந்ததால் மோசமாக பாதிக்கப்பட்ட செண்டாய் நகர விமான நிலையத்தில் அவசரத்துக்கு விமானங்கள் வந்து இறங்கும் அளவுக்கு ஓடுபாதையைச் சீரமைத்துவிட்டார்கள். விமானப் போக்குவரத்துக்கான கருவிகளைப் பழுது நீக்கி சீர்படுத்திவிட்டார்கள். போலீஸ், ராணுவ விமானங்கள் வரத் தொடங்கிவிட்டன. வெகு விரைவிலேயே பயணிகள் போக்குவரத்து தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செண்டாய் - மோரிஓகா, மோரிஓகா - ஆமோரி இடையில் எக்ஸ்பிரஸ் பஸ் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டது.
தோஹோகு பிராந்தியத்தில் சுனாமி, நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் அனைத்துத் தலைநகரங்களுக்கு இடையேயும் இப்போது போக்குவரத்து இணைப்பு மீண்டும் தொடங்கிவிட்டது. தரை வழியே கார்கள், லாரிகள்,பஸ்கள் செல்ல முடியும்.
பள்ளிகள் திறப்பு: ஐவாதே மாநிலத்தின் ஒபுனாடோ நகரில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன. உயர் நிலை பள்ளிக்கூடத்துக்கு சுமார் 250 மாணவர்கள் நடந்தோ, சைக்கிள்களிலோ வந்து சேர்ந்தனர்.
நண்பனைக் கண்டேன்: ஆயுமி உராஷிமா (16) என்ற மாணவன் கியாடோ செய்தி நிலையத்துக்கு பேட்டி தந்தார். ""பள்ளிக்கூடத்துக்கு வரும் வழியில் என்னுடைய நண்பர்களில் ஒருவனைப் பார்த்தேன். கடந்த 5 நாள்களாக அவர்களில் ஒருவரைக்கூட
பார்க்க முடியாமல் இருந்த நான், அவனைப் பார்த்ததும் ஓடிச் சென்று கட்டி அணைத்துக் கொண்டேன்'' என்று கூறியிருக்கிறார்.
சக்ரவர்த்தி உரை: தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே ஜப்பானிய சக்ரவர்த்தி அகிஹிடோ (புதன்கிழமை) இரவு உரையாற்றினார். "நிலநடுக்கம், சுனாமியால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டிருப்பது தாங்க முடியாத வேதனையை அளித்திருக்கிறது. துக்ககரமான இந்த வேளையில் நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்து இந்தத் துயரத்திலிருந்து மீளவேண்டும்' என்று பேசியிருக்கிறார்.
அமெரிக்கா எச்சரிக்கை: ஜப்பானில் அணு உலைகள் இருக்கும் பகுதியிலிருந்து 50 மைல் தொலைவுக்கு அப்பால் போய்விடும்படி தன் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
வடகிழக்கு ஜப்பானில் நிலநடுக்கத்துக்குப் பின் ஏற்பட்ட சுனாமியால் பாதிப்புக்கு உள்ளான சென்டாய்
நகர விமான தளத்தில் மீட்பு பணிகளுக்குத் தேவைப்படும் பொருள்களைக் கொண்டு வர உதவும்படியாக சீரமைக்கப்பட்டுள்ள ஒரு ஓடுதளம்.

அணு உலைகளைக் குளிர்விக்க ஜப்பான் தீவிரம்

புகுஷிமா,டோக்கியோ, மார்ச் 17: ஜப்பானின் புகுஷிமா நகர அணு உலைகளைக் குளிர்விக்க தீவிர நடவடிக்கைகளை ஜப்பானிய அரசு மேற்கொண்டுள்ளது.
சி.எச்.47 ரக ராட்சத ராணுவ ஹெலிகாப்டர்கள் டன் கணக்கில் கடல் தண்ணீரை மொண்டு மொண்டு அணு உலைகள் மீது மழை போல கொட்டி குளிர்விக்கப் பார்க்கின்றன. இந்த வேலையை புதன்கிழமை மேற்கொள்ள முடியாதபடிக்கு அந்தப் பகுதி முழுக்க கதிர்வீச்சு அளவு அதிகமாக இருந்தது. இப்போது சற்று தணிந்திருப்பதால் ராணுவ ஹெலிகாப்டர் பைலட்டுகள் உயிரைத் துச்சமாக மதித்து இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
அதே சமயம், அணு உலையிலிருந்து கதிர் வீச்சு இருக்கிறதா, அந்த அளவு எவ்வளவு என்று இன்னொரு ஹெலிகாப்டரிலிருந்து ஒரு பைலட் அளந்து பார்த்தார்.
இதற்கிடையே தரையிலிருந்தபடியே அணு உலைகள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க டோக்கியோ போலீஸ் படையினர் அந்தப் பகுதியிலிருந்த இடிபாடுகளையும் சேறுகளையும் அகற்றி பாதை ஏற்படுத்தித் தந்துள்ளனர். எனவே தண்ணீர் லாரிகள் மூலம் அதிக நீரை நேரடியாகவே வாரி இறைத்து குளிர்விக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
புகுஷிமா அணு மின்சார நிலையத்தின் எண் 3, எண் 4 அணு உலைகளில் உள்ள குளிர்விப்பான்கள் செயல்படவில்லை. எனவே பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் தண்டுகள் வெப்பமடைந்து உருகியிருக்கும் கட்டடத்திலிருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
அணு மின் நிலையத்தின் 6 அணு உலைகளையும் சேர்த்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தண்டுகள் போடப்பட்டிருக்கும் தண்ணீர் தடாகத்திலிருந்து கதிர்வீச்சு இருக்கக்கூடும் என்பதால் அவற்றையும் ஆய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
40 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் ஏற்பட்டாலே அந்தத் தடாகத்தில் உள்ள தண்ணீர் வற்றி தண்டுகள் வெளியே தெரிய ஆரம்பித்துவிடும், அவ பிறகு சூடேறி காய்ந்து உருகிவிடும். அதன் பிறகு கதிர் வீச்சு பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
எண் 4 அணு உலையின் நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்க்க அமெரிக்க விமானப்படை ஆளற்ற ஹாக் ரக விமானத்தைப் பணியில் ஈடுபடுத்தவிருக்கிறது என்று ஜப்பானிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நில நடுக்கம் ஏற்பட்டவுடனேயே எண் 1, எண் 2, எண் 3 ஆகிய அணு உலைகள் வேலை செய்வதை நிறுத்திவிட்டன. ஆனால் சுனாமி காரணமாக அவற்றைக் குளிர்விக்கும் சாதனம் செயல்படாமல் நின்றுவிட்டது. பயன்படுத்தப்பட்ட அணு உலை எரிபொருள் தண்டுகளில் 70% எண் 1 அணு உûலையிலும், 33% எண் 2 அணு உலையிலும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
எண் 5 அணு உலையின் அணு எரிபொருள் தடாகத்தில் தண்ணீர் மட்டம் வற்றிவிட்டது. எனவே தண்டுகள் சூடேறி கதிர் வீச்சு பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
எண் 4 எண் 5 எண் 6 ஆகிய அணு உலைகளில் எரிபொருள் தண்டுகள் வழக்கமான சோதனைகளுக்காக அப்போது வெளியே எடுக்கப்பட்டிருந்தன.
இறந்தவர்கள்: கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சுனாமியில் இறந்தவர் அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 14,650 என்று போலீஸôர் தெரிவிக்கின்றனர். இதில் இறந்தவர்கள் 5,321, காணாமல் போனவர்கள் 9,329. காயம் அடைந்தவர்கள் 2,383.
முழு வீச்சில் சீரமைப்பு: சுனாமி காரணமாக ஐவாதே மாகாணத்தின் ரிகுசென்டாகடா நகரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. அங்கு வீதியில் விழுந்துகிடந்த கட்டட இடிபாடுகளும் குப்பைகளும் சேறும், கடல் கழிவுகளும் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டுவிட்டது. மீட்பு, நிவாரண வாகனங்கள் நகரின் எந்தப் பகுதிக்கும் இப்போது எளிதாகப் போய்வர முடியும்.
இப்போதைய உடனடி தேவை எரிபொருள்தான். தொழில் நிறுவனங்களுக்கு மின்சார சப்ளையை மீண்டும் அளித்து உற்பத்தியைத் தொடங்க தொழில் அதிபர்கள் கவனம் செலுத்துகின்றனர். ஜப்பானிய மக்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் தங்களை முழு மனதுடன் ஈடுபடுத்தி வருகின்றனர்.
கடல் நீர் உள்ளே புகுந்ததால் மோசமாக பாதிக்கப்பட்ட செண்டாய் நகர விமான நிலையத்தில் அவசரத்துக்கு விமானங்கள் வந்து இறங்கும் அளவுக்கு ஓடுபாதையைச் சீரமைத்துவிட்டார்கள். விமானப் போக்குவரத்துக்கான கருவிகளைப் பழுது நீக்கி சீர்படுத்திவிட்டார்கள். போலீஸ், ராணுவ விமானங்கள் வரத் தொடங்கிவிட்டன. வெகு விரைவிலேயே பயணிகள் போக்குவரத்து தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செண்டாய் - மோரிஓகா, மோரிஓகா - ஆமோரி இடையில் எக்ஸ்பிரஸ் பஸ் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டது.
தோஹோகு பிராந்தியத்தில் சுனாமி, நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் அனைத்துத் தலைநகரங்களுக்கு இடையேயும் இப்போது போக்குவரத்து இணைப்பு மீண்டும் தொடங்கிவிட்டது. தரை வழியே கார்கள், லாரிகள்,பஸ்கள் செல்ல முடியும்.
பள்ளிகள் திறப்பு: ஐவாதே மாநிலத்தின் ஒபுனாடோ நகரில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன. உயர் நிலை பள்ளிக்கூடத்துக்கு சுமார் 250 மாணவர்கள் நடந்தோ, சைக்கிள்களிலோ வந்து சேர்ந்தனர்.
நண்பனைக் கண்டேன்: ஆயுமி உராஷிமா (16) என்ற மாணவன் கியாடோ செய்தி நிலையத்துக்கு பேட்டி தந்தார். ""பள்ளிக்கூடத்துக்கு வரும் வழியில் என்னுடைய நண்பர்களில் ஒருவனைப் பார்த்தேன். கடந்த 5 நாள்களாக அவர்களில் ஒருவரைக்கூட
பார்க்க முடியாமல் இருந்த நான், அவனைப் பார்த்ததும் ஓடிச் சென்று கட்டி அணைத்துக் கொண்டேன்'' என்று கூறியிருக்கிறார்.
சக்ரவர்த்தி உரை: தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே ஜப்பானிய சக்ரவர்த்தி அகிஹிடோ (புதன்கிழமை) இரவு உரையாற்றினார். "நிலநடுக்கம், சுனாமியால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டிருப்பது தாங்க முடியாத வேதனையை அளித்திருக்கிறது. துக்ககரமான இந்த வேளையில் நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்து இந்தத் துயரத்திலிருந்து மீளவேண்டும்' என்று பேசியிருக்கிறார்.
அமெரிக்கா எச்சரிக்கை: ஜப்பானில் அணு உலைகள் இருக்கும் பகுதியிலிருந்து 50 மைல் தொலைவுக்கு அப்பால் போய்விடும்படி தன் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
வடகிழக்கு ஜப்பானில் நிலநடுக்கத்துக்குப் பின் ஏற்பட்ட சுனாமியால் பாதிப்புக்கு உள்ளான சென்டாய்
நகர விமான தளத்தில் மீட்பு பணிகளுக்குத் தேவைப்படும் பொருள்களைக் கொண்டு வர உதவும்படியாக சீரமைக்கப்பட்டுள்ள ஒரு ஓடுதளம்.

ஜப்பானில் சமீபத்தில் நடந்த சுனாமி தாக்குதல் காரணமாக அணு உலைகள் பாதிப்படைந்து கதிர்வீச்சு ஏற்பட்டது.இதனால் உணவு பொருட்களிலும் கதிர்வீச்சு பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களை கதிர்வீச்சு சோதனைக்கு உட்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக இந்திய அரசு நம் நாட்டுத் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இயங்கி வரும் உணவுப் பொருட்கள் மற்றும் தரக்கட்டுப்பாடு அமைப்புகளுக்கு ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து உணவு பொருட்களிலும் கதிர்வீச்சு அபாயத்தால் பாதிப்படைந்துள்ளதா? என்று கட்டாயமாக பரிசோதனை செய்யும்படி ஆணையிட்டுள்ளது.

இதே போன்ற உத்தரவினை இந்திய அரசு வருவாய்த்துறை அனைத்து சுங்க இலாகாக்களுக்கும் பிறப்பித்து உணவுப் பொருள் மாதிரிகளை எடுத்து சோதனை செய்து பார்க்கும் படி உத்தரவிட்டுள்ளது.

ஜப்பானில் இருந்து வரும் உணவு பொருட்களில் கதிர்வீச்சு சோதனை; மத்திய அரசு உத்தரவு

ஜப்பானில் சமீபத்தில் நடந்த சுனாமி தாக்குதல் காரணமாக அணு உலைகள் பாதிப்படைந்து கதிர்வீச்சு ஏற்பட்டது.இதனால் உணவு பொருட்களிலும் கதிர்வீச்சு பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களை கதிர்வீச்சு சோதனைக்கு உட்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக இந்திய அரசு நம் நாட்டுத் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இயங்கி வரும் உணவுப் பொருட்கள் மற்றும் தரக்கட்டுப்பாடு அமைப்புகளுக்கு ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து உணவு பொருட்களிலும் கதிர்வீச்சு அபாயத்தால் பாதிப்படைந்துள்ளதா? என்று கட்டாயமாக பரிசோதனை செய்யும்படி ஆணையிட்டுள்ளது.

இதே போன்ற உத்தரவினை இந்திய அரசு வருவாய்த்துறை அனைத்து சுங்க இலாகாக்களுக்கும் பிறப்பித்து உணவுப் பொருள் மாதிரிகளை எடுத்து சோதனை செய்து பார்க்கும் படி உத்தரவிட்டுள்ளது.

டோக்கியோ : ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஜப்பான் 8 அடி தூரத்துக்கு நகர்ந்து விட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஒரு மாகாணத்தில் ஒரே இடத்தில் 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ள சோக சம்பவம் தெரியவந்துள்ளது. மிகவும் வசதியான அந்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம், சுகாதாரப் பாதுகாப்பு இவை எதுவுமின்றி தவித்து வருகின்றனர்.
ஜப்பானில் கடந்த 11ம் தேதி 8.9 புள்ளிகள் அளவில் பயங்கர நிலநடுக்கம், அதன் விளைவாக பயங்கர சுனாமி ஏற்பட்டது. இதில், புக்குஷிமா, மியாகி மற்றும் ஐவேட் ஆகிய மாகாணங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. யூரேஷியன், பசிபிக், வட அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் கண்டத் திட்டுகள் ஒன்றிணையும் இடத்தின் மேற்பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளது.
இதனால், இந்த கண்டத் திட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசும் போது அல்லது இடிக்கும் போது அங்கு நிலநடுக்கம் ஏற்படும். இது ஜப்பானில் வழக்கம் தான். ஆனால், சமீபத்திய பயங்கர நிலநடுக்கம், ஜப்பானை 8 அடி நகர்த்திவிட்டதாக, அமெரிக்க புகம்பவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதை செயற்கைக்கோள் வரைபட உதவி கொண்டு நிரூபித்தனர்.
8 அடி நகர்ந்த ஜப்பான்: அமெரிக்க நிலவியல் மற்றும் நிலநடுக்க ஆய்வாளர் பால் எர்ல் இதுகுறித்து கூறியதாவது: சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஒட்டு மொத்த ஜப்பான் தீவே 8 அடிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இந்த 8 அடி என்பது மிகவும் கவலைக்குரியது. இந்த நகர்வு, பசிபிக் மற்றும் வட அமெரிக்க கண்டத் திட்டுகளின் மோதலால் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் திட்டு, வட அமெரிக்க கண்டத் திட்டின் மேற்குப் பகுதியின் மீது மிக வேகமாக மோதியதால், இந்த நகர்வு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற மோதல்களால் தான் நிலநடுக்கம் உருவாகிறது. மேலும் இந்த இரு கண்டத் திட்டுகள் இடையிலான மோதலால், ஆண்டுக்கு 3.3 அங்குல நகர்வு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நகர்வை, கணினி அடிப்படையிலான புவியியல் தகவல் முறைமை (ஜி.எஸ்.ஐ.,) மூலமான வரைபடத்திலும் நாம் தெளிவாக பார்க்க முடியும். இவ்வாறு பால் எர்ல் தெரிவித்துள்ளார்.
10 ஆயிரம் பேர் பலி: மியாகி மாகாணத்தில் உள்ள மினாமிசன்ரிக்கு என்ற நகரைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை புக்குஷிமா மற்றும் மியாகி மாகாணங்களில், இறந்தவர்களின் 600 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஐவேட் மாகாணத்தில், ரிக்குஜென்டாகடா நகரில் 5,000 வீடுகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்போது 3,80,000 ஆயிரம் மக்கள் ஐந்து மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,300 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரண்டரை லட்சம்பேர் மின்சாரம் இன்றியும், 14 லட்சம் பேர் குடிநீர் மற்றும் உணவு இன்றியும் அவதிப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
மின்பாதிப்பு : மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இம்முறை ஜப்பானை புரட்டிய பூகம்பத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையங்களினால் ஏற்பட்டிருக்கும் கதிர்வீச்சு அபாயம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் துவங்கியிருக்கிறது. ஜப்பானில் மொத்தம் 55 அணுமின் நிலையங்கள் உள்ளன.
அவற்றில் 11 பூகம்ப பாதிப்பு பகுதியில் இருந்ததால், மொத்த மின் உற்பத்தியில் 30 சதவீதம் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். கிழக்கு ஜப்பான் பகுதிகளில் முன்பைப் போல மின்சாரம் தருவதற்கு இன்னும் பலநாட்கள் ஆகும். தொடர்ந்து 25 சதவீத மின் வெட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளிலும் மற்ற பொது இடங்களிலும் தற்போது தங்கியுள்ளனர். போதாக்குறைக்கு, இரவுநேரத்தில் அதிக குளிரும் வாட்டி வருகிறது. பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் முழு அளவில் சேதத்தைக் கண்டறிய முடியவில்லை. செண்டாய் நகரின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தில் பிடித்துள்ள தீயை அணைக்கும் முயற்சி, கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், இன்னும் தீ அணைந்தபாடில்லை. அந்நகர் முழுவதும், சுனாமி கொண்டு வந்த சகதி மற்றும் குப்பைகளால் நிறைந்துள்ளது. இங்கு குப்பைகளை அகற்றுவதை விட தற்போது பிணங்களை அகற்றும் பணி மட்டுமே முழுவீச்சில் நடந்து வருகிறது. எனினும், மூன்று மாகாணங்களிலும் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை.
பிரதமர் நவோட்டோ கான் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "இந்த பேரழிவைக் கடந்து விரைவில் மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். கடந்த 65 ஆண்டுகளில் ஜப்பான் கண்டிராத மிக மோசமான சீரழிவு இது' என்று தெரிவித்துள்ளார். மிகவும் வளர்ந்த நாடான ஜப்பான் இயற்கைப் பேரழிவில் சிக்கித் தவிக்கிறது. உலக நாடுகள் ஜப்பானுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து மீட்புப் பணிக் குழுக்கள் ஜப்பானுக்குச் சென்றுள்ளன. போர்க்கால அடிப்படையில் அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

10 ஆயிரம் பேர் பலி : குடிநீர், மின் வசதியின்றி மக்கள் தவிப்பு : வளர்ந்த ஜப்பானை அழித்தது பூகம்பம்

டோக்கியோ : ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஜப்பான் 8 அடி தூரத்துக்கு நகர்ந்து விட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஒரு மாகாணத்தில் ஒரே இடத்தில் 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ள சோக சம்பவம் தெரியவந்துள்ளது. மிகவும் வசதியான அந்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம், சுகாதாரப் பாதுகாப்பு இவை எதுவுமின்றி தவித்து வருகின்றனர்.
ஜப்பானில் கடந்த 11ம் தேதி 8.9 புள்ளிகள் அளவில் பயங்கர நிலநடுக்கம், அதன் விளைவாக பயங்கர சுனாமி ஏற்பட்டது. இதில், புக்குஷிமா, மியாகி மற்றும் ஐவேட் ஆகிய மாகாணங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. யூரேஷியன், பசிபிக், வட அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் கண்டத் திட்டுகள் ஒன்றிணையும் இடத்தின் மேற்பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளது.
இதனால், இந்த கண்டத் திட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசும் போது அல்லது இடிக்கும் போது அங்கு நிலநடுக்கம் ஏற்படும். இது ஜப்பானில் வழக்கம் தான். ஆனால், சமீபத்திய பயங்கர நிலநடுக்கம், ஜப்பானை 8 அடி நகர்த்திவிட்டதாக, அமெரிக்க புகம்பவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதை செயற்கைக்கோள் வரைபட உதவி கொண்டு நிரூபித்தனர்.
8 அடி நகர்ந்த ஜப்பான்: அமெரிக்க நிலவியல் மற்றும் நிலநடுக்க ஆய்வாளர் பால் எர்ல் இதுகுறித்து கூறியதாவது: சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஒட்டு மொத்த ஜப்பான் தீவே 8 அடிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இந்த 8 அடி என்பது மிகவும் கவலைக்குரியது. இந்த நகர்வு, பசிபிக் மற்றும் வட அமெரிக்க கண்டத் திட்டுகளின் மோதலால் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் திட்டு, வட அமெரிக்க கண்டத் திட்டின் மேற்குப் பகுதியின் மீது மிக வேகமாக மோதியதால், இந்த நகர்வு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற மோதல்களால் தான் நிலநடுக்கம் உருவாகிறது. மேலும் இந்த இரு கண்டத் திட்டுகள் இடையிலான மோதலால், ஆண்டுக்கு 3.3 அங்குல நகர்வு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நகர்வை, கணினி அடிப்படையிலான புவியியல் தகவல் முறைமை (ஜி.எஸ்.ஐ.,) மூலமான வரைபடத்திலும் நாம் தெளிவாக பார்க்க முடியும். இவ்வாறு பால் எர்ல் தெரிவித்துள்ளார்.
10 ஆயிரம் பேர் பலி: மியாகி மாகாணத்தில் உள்ள மினாமிசன்ரிக்கு என்ற நகரைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை புக்குஷிமா மற்றும் மியாகி மாகாணங்களில், இறந்தவர்களின் 600 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஐவேட் மாகாணத்தில், ரிக்குஜென்டாகடா நகரில் 5,000 வீடுகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்போது 3,80,000 ஆயிரம் மக்கள் ஐந்து மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,300 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரண்டரை லட்சம்பேர் மின்சாரம் இன்றியும், 14 லட்சம் பேர் குடிநீர் மற்றும் உணவு இன்றியும் அவதிப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
மின்பாதிப்பு : மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இம்முறை ஜப்பானை புரட்டிய பூகம்பத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையங்களினால் ஏற்பட்டிருக்கும் கதிர்வீச்சு அபாயம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் துவங்கியிருக்கிறது. ஜப்பானில் மொத்தம் 55 அணுமின் நிலையங்கள் உள்ளன.
அவற்றில் 11 பூகம்ப பாதிப்பு பகுதியில் இருந்ததால், மொத்த மின் உற்பத்தியில் 30 சதவீதம் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். கிழக்கு ஜப்பான் பகுதிகளில் முன்பைப் போல மின்சாரம் தருவதற்கு இன்னும் பலநாட்கள் ஆகும். தொடர்ந்து 25 சதவீத மின் வெட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளிலும் மற்ற பொது இடங்களிலும் தற்போது தங்கியுள்ளனர். போதாக்குறைக்கு, இரவுநேரத்தில் அதிக குளிரும் வாட்டி வருகிறது. பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் முழு அளவில் சேதத்தைக் கண்டறிய முடியவில்லை. செண்டாய் நகரின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தில் பிடித்துள்ள தீயை அணைக்கும் முயற்சி, கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், இன்னும் தீ அணைந்தபாடில்லை. அந்நகர் முழுவதும், சுனாமி கொண்டு வந்த சகதி மற்றும் குப்பைகளால் நிறைந்துள்ளது. இங்கு குப்பைகளை அகற்றுவதை விட தற்போது பிணங்களை அகற்றும் பணி மட்டுமே முழுவீச்சில் நடந்து வருகிறது. எனினும், மூன்று மாகாணங்களிலும் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை.
பிரதமர் நவோட்டோ கான் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "இந்த பேரழிவைக் கடந்து விரைவில் மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். கடந்த 65 ஆண்டுகளில் ஜப்பான் கண்டிராத மிக மோசமான சீரழிவு இது' என்று தெரிவித்துள்ளார். மிகவும் வளர்ந்த நாடான ஜப்பான் இயற்கைப் பேரழிவில் சிக்கித் தவிக்கிறது. உலக நாடுகள் ஜப்பானுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து மீட்புப் பணிக் குழுக்கள் ஜப்பானுக்குச் சென்றுள்ளன. போர்க்கால அடிப்படையில் அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

டோக்கியோ : ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட பின் நிலநடுக்கம் பல முறை நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.. சுனாமி மற்றும் நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக துவங்கிய நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இனிமேல் தெரியவரும்.

ஜப்பான் பேரழிவு : 1000 பேர் பலி

டோக்கியோ : ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட பின் நிலநடுக்கம் பல முறை நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.. சுனாமி மற்றும் நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக துவங்கிய நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இனிமேல் தெரியவரும்.

சென்னை: ஜப்பானில் பயங்கர சுனாமி ஏற்பட்ட நிலையில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி பகுதியில் கடல் உள்வாங்கியதால் பெரும் பீதி ஏற்பட்டது.

இந்தோனேஷியாவில் 2004ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு தமிழகத்தை சுனாமி தாக்கியதையடுத்து தமிழகத்தில் பல பகுதிகளி்ல் கடல் உள்வாங்குவதும் கடல் நீர்மட்டம் தாழ்வதும் அடிக்கடி நடந்தது. பின்னர் இந்த நிகழ்வுகள் நின்று போயின.

இந் நிலையில் நேற்று ஜப்பானில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டு அந் நாட்டை சுனாமி புரட்டிப் போட்ட நிலையில், தமிழகத்தில் வங்கக் கடல் ஆங்காங்கே உள்வாங்கியுள்ளது.

நேற்றறு பகல் 2 மணியளவில் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது. நீர்மட்டம் மிகவும் தாழ்ந்ததால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

அதேபோல ராமேஸ்வரத்தில் பாம்பன் வடக்கு கடல் பகுதியிலும் கடல் உள்வாங்கியது. சிறிது தூரத்துக்கு மணல் மற்றும் பாறைகள் வெளியே தெரிந்தது.

இதனால் கன்னியாகுமரி, ராமேஸ்வரத்தில் பீதி ஏற்பட்டது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மிரண்டு கடற்கரையில் இருந்து வெளியேறினர்.

இன்று காலையில் ராமேஸ்வரம் கடல் பகுதி வழக்கத்துக்கு மாறாக அலைகள் இந் நிலையில் இன்று வழக்கத்துக்கு மாறாக ராமேஸ்வரம் கடல் மிக மிக அமைதியாக காட்சி அளித்தது. இதுவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் அரபிக்கடல் பகுதியும், இந்திய பெருங்கடல் பகுதியும் சீற்றத்துடன் காணப்பட வங்காள விரிகுடா கடல் பகுதி மிக மிக அமைதியாக அலைகளே எழும்பாமல் காணப்பட்டது.

ஜப்பான் சுனாமியை தொடர்ந்து ராமேஸ்வரம்-கன்னியாகுமரியில் உள்வாங்கிய கடல்

சென்னை: ஜப்பானில் பயங்கர சுனாமி ஏற்பட்ட நிலையில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி பகுதியில் கடல் உள்வாங்கியதால் பெரும் பீதி ஏற்பட்டது.

இந்தோனேஷியாவில் 2004ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு தமிழகத்தை சுனாமி தாக்கியதையடுத்து தமிழகத்தில் பல பகுதிகளி்ல் கடல் உள்வாங்குவதும் கடல் நீர்மட்டம் தாழ்வதும் அடிக்கடி நடந்தது. பின்னர் இந்த நிகழ்வுகள் நின்று போயின.

இந் நிலையில் நேற்று ஜப்பானில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டு அந் நாட்டை சுனாமி புரட்டிப் போட்ட நிலையில், தமிழகத்தில் வங்கக் கடல் ஆங்காங்கே உள்வாங்கியுள்ளது.

நேற்றறு பகல் 2 மணியளவில் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது. நீர்மட்டம் மிகவும் தாழ்ந்ததால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

அதேபோல ராமேஸ்வரத்தில் பாம்பன் வடக்கு கடல் பகுதியிலும் கடல் உள்வாங்கியது. சிறிது தூரத்துக்கு மணல் மற்றும் பாறைகள் வெளியே தெரிந்தது.

இதனால் கன்னியாகுமரி, ராமேஸ்வரத்தில் பீதி ஏற்பட்டது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மிரண்டு கடற்கரையில் இருந்து வெளியேறினர்.

இன்று காலையில் ராமேஸ்வரம் கடல் பகுதி வழக்கத்துக்கு மாறாக அலைகள் இந் நிலையில் இன்று வழக்கத்துக்கு மாறாக ராமேஸ்வரம் கடல் மிக மிக அமைதியாக காட்சி அளித்தது. இதுவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் அரபிக்கடல் பகுதியும், இந்திய பெருங்கடல் பகுதியும் சீற்றத்துடன் காணப்பட வங்காள விரிகுடா கடல் பகுதி மிக மிக அமைதியாக அலைகளே எழும்பாமல் காணப்பட்டது.

முக நூல்

Popular Posts