background img

புதிய வரவு

Showing posts with label Madurai. Show all posts
Showing posts with label Madurai. Show all posts



முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மதுரை ஆதீனம் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விளக்கம் அளிக்கப் போகிறோம் என்று மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் மதுரை ஆதீனம் பேசுகையில், 

மதுரை ஆதீனம் மீட்புக் குழு என்ற ஓர் அமைப்பு, ஆதீனத்துக்குள் நுழைந்து வழிபாடு நடத்தப் போவதாகக் கூறியுள்ளது. ஆதீனத்தின் அனுமதியில்லாமல் யாரும் உள்ளே நுழைய முடியாது. சட்டம், ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கில் அத்தகைய முயற்சியை எடுக்கின்றனர். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தருமபுரம் ஆதீனமும், திருப்பனந்தாள் மடமும்தான் பொறுப்பு.

ஆதீனம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்னைகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க அனுமதி கோரியுள்ளோம். 1980 முதல் எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டில் நடந்த பேரவைத் தேர்தலின்போது பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தமிழகத்தில் உள்ள ஆதீனங்களில் பழமையானது மதுரை ஆதீனம். ஆனால், பிற ஆதீனங்கள் மனரீதியாக அளித்துவரும் இடையூறுகளால் எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்டது என்றார்.

அடுத்து நித்தியானந்தா பேசுகையில்,

மதுரை ஆதீனத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், வழிபாடு நடத்தப் போவதாக ஒரு குழு அறிவித்திருக்கிறது. அவர்களை அனுமதிக்கக் கூடாது என காவல் துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதையும் மீறி மதுரை ஆதீனத்துக்குள் நுழைந்து பிரச்னை ஏற்படுத்த நினைத்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.

எனது தியான பீட பக்தர்கள், மீட்புக் குழுவின் போராட்டத்தை அறிவித்த நெல்லை கண்ணனின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். பிற ஆதீன மடங்களின் தலைவர்கள், ஆன்மிக ரீதியாகவும், இறைசக்தி ரீதியாகவும் என்னோடு போட்டியிட வேண்டும். அதைத் தவிர்த்து எனது குணநலன்களைப் பற்றி தவறாக அவதூறு பரப்பக் கூடாது என்றார்.

பேட்டியின்போது மதுரை உதவி போலீஸ் கமிஷனர் துரைசாமி மீதும் இருவரும் குற்றம் சாட்டினர். அவர், குண்டர்களை வைத்து மிரட்டுவதாக இருவரும் கூறினர்.

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விளக்கம் அளிக்கப் போகிறோம்-- மதுரை ஆதீனம், நித்தியானந்தா




முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மதுரை ஆதீனம் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விளக்கம் அளிக்கப் போகிறோம் என்று மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் மதுரை ஆதீனம் பேசுகையில், 

மதுரை ஆதீனம் மீட்புக் குழு என்ற ஓர் அமைப்பு, ஆதீனத்துக்குள் நுழைந்து வழிபாடு நடத்தப் போவதாகக் கூறியுள்ளது. ஆதீனத்தின் அனுமதியில்லாமல் யாரும் உள்ளே நுழைய முடியாது. சட்டம், ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கில் அத்தகைய முயற்சியை எடுக்கின்றனர். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தருமபுரம் ஆதீனமும், திருப்பனந்தாள் மடமும்தான் பொறுப்பு.

ஆதீனம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்னைகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க அனுமதி கோரியுள்ளோம். 1980 முதல் எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டில் நடந்த பேரவைத் தேர்தலின்போது பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தமிழகத்தில் உள்ள ஆதீனங்களில் பழமையானது மதுரை ஆதீனம். ஆனால், பிற ஆதீனங்கள் மனரீதியாக அளித்துவரும் இடையூறுகளால் எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்டது என்றார்.

அடுத்து நித்தியானந்தா பேசுகையில்,

மதுரை ஆதீனத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், வழிபாடு நடத்தப் போவதாக ஒரு குழு அறிவித்திருக்கிறது. அவர்களை அனுமதிக்கக் கூடாது என காவல் துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதையும் மீறி மதுரை ஆதீனத்துக்குள் நுழைந்து பிரச்னை ஏற்படுத்த நினைத்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.

எனது தியான பீட பக்தர்கள், மீட்புக் குழுவின் போராட்டத்தை அறிவித்த நெல்லை கண்ணனின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். பிற ஆதீன மடங்களின் தலைவர்கள், ஆன்மிக ரீதியாகவும், இறைசக்தி ரீதியாகவும் என்னோடு போட்டியிட வேண்டும். அதைத் தவிர்த்து எனது குணநலன்களைப் பற்றி தவறாக அவதூறு பரப்பக் கூடாது என்றார்.

பேட்டியின்போது மதுரை உதவி போலீஸ் கமிஷனர் துரைசாமி மீதும் இருவரும் குற்றம் சாட்டினர். அவர், குண்டர்களை வைத்து மிரட்டுவதாக இருவரும் கூறினர்.



Arjun Sampathநித்தியானந்தாவை, 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்தியாவின் மூத்த ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானமாக தற்போதைய ஆதீனம் நியமித்துள்ளது குறித்து பல்வேறு இந்துக் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் குறித்துப் பேச அவசரக் கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மத்தியிலும் மதுரை ஆதீனத்தின் இந்த திடீர் முடிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை ஆதீனத்தை மக்கள் தற்போது கேலிப் பொருளாக பார்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், இன்னும் ஓரிரு நாளில் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவுள்ளோம். தற்போது நடந்து வருவது மிகவும் அபாயகரமான சூழல் ஏற்பட்டிருப்பதையே உணர்த்துகிறது. மதுரை ஆதீனம் மிகவும் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார். இந்துக்கள் அனைவரையும் அவர் அவமானப்படுத்தியுள்ளார், களங்கப்படுத்தியுள்ளார்.

மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டவருக்கு பெங்களூரில் வைத்து முடி சூட்டியுள்ளார். அங்கு போய் மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசு யார் என்பதை அவர் கூறியுள்ளார். இது தவறான செயல் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மதுரை ஆதீனத்தின் அடுத்த தலைவர் யார் என்பதை அவசரப்பட்டு முடிவு செய்ய முடியாது. திருப்பனந்தாள், தருமபுரம் ஆதீனங்களை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.
நித்தியானந்தா போன்றவர்களுக்கான பதவி அல்ல இது. அவர் இந்தப் பதவிக்கு வர அருகதை இல்லை. தனது பெயரை முதலில் சரி செய்து விட்டுத்தான் அவர் இந்தப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.
மதுரை ஆதீனம் தற்போது பெங்களூரில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். தனது பாதுகாவலர்களைக் கூட அவர் பெங்களூருக்குக் கூட்டிச் செல்லவில்லை. இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

எந்தவிதமான முறையான அம்சங்களும் இந்த விவகாரத்தில் கையாளப்படவில்லை. இது பெரும் நகைச்சுவையான ஒரு சம்பவமாக மாறியுள்ளது. அதேசமயம், இந்து மக்கள் மனதளவில் புண்பட்டுப் போயுள்ளனர் என்றார் சம்பத்.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் எஸ்.பரமசிவம் கூறுகையில் தனது வாரிசாக மதுரை ஆதீனம் தேர்ந்தெடுக்கும் நபரை ஏற்கவே முடியாது. இதுகுறித்து நாங்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதேபோல விஸ்வ இந்து பரிஷத்தும் மதுரை ஆதீனத்தின் முடிவை விமர்சித்துள்ளது.

மதுரை ஆதீனத்தின் அதிரடி முடிவு… இந்து அமைப்புகள் அவசரமாக கூடுகின்றன!


Arjun Sampathநித்தியானந்தாவை, 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்தியாவின் மூத்த ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானமாக தற்போதைய ஆதீனம் நியமித்துள்ளது குறித்து பல்வேறு இந்துக் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் குறித்துப் பேச அவசரக் கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மத்தியிலும் மதுரை ஆதீனத்தின் இந்த திடீர் முடிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை ஆதீனத்தை மக்கள் தற்போது கேலிப் பொருளாக பார்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், இன்னும் ஓரிரு நாளில் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவுள்ளோம். தற்போது நடந்து வருவது மிகவும் அபாயகரமான சூழல் ஏற்பட்டிருப்பதையே உணர்த்துகிறது. மதுரை ஆதீனம் மிகவும் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார். இந்துக்கள் அனைவரையும் அவர் அவமானப்படுத்தியுள்ளார், களங்கப்படுத்தியுள்ளார்.

மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டவருக்கு பெங்களூரில் வைத்து முடி சூட்டியுள்ளார். அங்கு போய் மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசு யார் என்பதை அவர் கூறியுள்ளார். இது தவறான செயல் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மதுரை ஆதீனத்தின் அடுத்த தலைவர் யார் என்பதை அவசரப்பட்டு முடிவு செய்ய முடியாது. திருப்பனந்தாள், தருமபுரம் ஆதீனங்களை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.
நித்தியானந்தா போன்றவர்களுக்கான பதவி அல்ல இது. அவர் இந்தப் பதவிக்கு வர அருகதை இல்லை. தனது பெயரை முதலில் சரி செய்து விட்டுத்தான் அவர் இந்தப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.
மதுரை ஆதீனம் தற்போது பெங்களூரில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். தனது பாதுகாவலர்களைக் கூட அவர் பெங்களூருக்குக் கூட்டிச் செல்லவில்லை. இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

எந்தவிதமான முறையான அம்சங்களும் இந்த விவகாரத்தில் கையாளப்படவில்லை. இது பெரும் நகைச்சுவையான ஒரு சம்பவமாக மாறியுள்ளது. அதேசமயம், இந்து மக்கள் மனதளவில் புண்பட்டுப் போயுள்ளனர் என்றார் சம்பத்.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் எஸ்.பரமசிவம் கூறுகையில் தனது வாரிசாக மதுரை ஆதீனம் தேர்ந்தெடுக்கும் நபரை ஏற்கவே முடியாது. இதுகுறித்து நாங்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதேபோல விஸ்வ இந்து பரிஷத்தும் மதுரை ஆதீனத்தின் முடிவை விமர்சித்துள்ளது.


பெங்களூர் முடி சூட்டலுக்குப் பின்னர் மதுரை திரும்பிய நித்தியானந்தாவை மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கூட்டிச் சென்று கோவிலை சுட்டிக் காட்டினார் மதுரை ஆதீனம். இதனால் கோவிலுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் நேற்று இரவு பெங்களூரிலிருந்து மதுரைக்கு வந்தனர். மதுரை ஆதீன மடத்திற்குள் உள்ள விடுதியில் தங்கினர். நடிகை ரஞ்சிதாவும் இவர்களுடன் பெங்களூரிலிருந்து வந்தார்.
இதையடுத்து இன்று காலை செய்தியாளர்களை ஆதீனமும் நித்தியானந்தாவும் சந்தித்தனர். அப்போது மதுரை ஆதீனம் பேசுகையில், மதுரை ஆதீன மடத்தின் அடுத்த ஆதீனமாக 2 நாட்களுக்கு முன்பு நித்தியானந்தா நியமிக்கப்பட்டார். முறைப்படியான இளைய ஆதீனமாக பட்டம் சூட்டும் விழா ஜூன் 5ம் தேதி நடைபெறும். மதுரை ஆதீன மடத்திற்கு நித்தியானந்தா ரூ. 1 கோடி நிதியுதவி செய்கிறார் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு இருவரும் அருகில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றனர். தற்போது மதுரையில் சித்திரைத் திருவி்ழா நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது. இந்த நிலையில் மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் கோவிலுக்குள் சேர்ந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நித்தியானந்தாவுக்கு கோவிலைச் சுற்றிக் காட்டினார் மதுரை ஆதீனம். பின்னர் இருவர் பெயரிலும் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நித்தியானந்தாவை கூட்டிப் போனார் மதுரை ஆதீனம்!


பெங்களூர் முடி சூட்டலுக்குப் பின்னர் மதுரை திரும்பிய நித்தியானந்தாவை மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கூட்டிச் சென்று கோவிலை சுட்டிக் காட்டினார் மதுரை ஆதீனம். இதனால் கோவிலுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் நேற்று இரவு பெங்களூரிலிருந்து மதுரைக்கு வந்தனர். மதுரை ஆதீன மடத்திற்குள் உள்ள விடுதியில் தங்கினர். நடிகை ரஞ்சிதாவும் இவர்களுடன் பெங்களூரிலிருந்து வந்தார்.
இதையடுத்து இன்று காலை செய்தியாளர்களை ஆதீனமும் நித்தியானந்தாவும் சந்தித்தனர். அப்போது மதுரை ஆதீனம் பேசுகையில், மதுரை ஆதீன மடத்தின் அடுத்த ஆதீனமாக 2 நாட்களுக்கு முன்பு நித்தியானந்தா நியமிக்கப்பட்டார். முறைப்படியான இளைய ஆதீனமாக பட்டம் சூட்டும் விழா ஜூன் 5ம் தேதி நடைபெறும். மதுரை ஆதீன மடத்திற்கு நித்தியானந்தா ரூ. 1 கோடி நிதியுதவி செய்கிறார் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு இருவரும் அருகில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றனர். தற்போது மதுரையில் சித்திரைத் திருவி்ழா நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது. இந்த நிலையில் மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் கோவிலுக்குள் சேர்ந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நித்தியானந்தாவுக்கு கோவிலைச் சுற்றிக் காட்டினார் மதுரை ஆதீனம். பின்னர் இருவர் பெயரிலும் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.

சென்னை, மே 9: உயர் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வை திருச்சி, மதுரை, கோவையிலும் நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று நிறைந்த நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு மதிமுக சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டும். தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டுகளாக்கி வாழ்வில் முன்னேற உறுதியேற்க வேண்டும். அதன் மூலம் பெற்றோருக்கும், பிறந்த பொன்னாட்டுக்கும் பெருமை தேடித் தர வேண்டும்.
தமிழக அரசின் உயர் கல்வித் துறை நடத்தும் உயர் கல்விக்கான கலந்தாய்வு இப்போது சென்னையில் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வீண் அலைச்சலும், பொருள் செலவும் ஏற்படுகிறது. வசதி இல்லாதவர்கள் காலையில் சென்னைக்கு வந்து அங்கும் இங்கும் அலைந்து மாலையிலேயே ஊர் திரும்புகின்றனர்.
தகவல் தொழில் நுட்பம் வெகுவாக வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் சென்னையில் மட்டுமல்லாது திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் கலந்தாய்வை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சி, மதுரை, கோவையில் கவுன்சலிங் நடத்த வேண்டும்: வைகோ

சென்னை, மே 9: உயர் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வை திருச்சி, மதுரை, கோவையிலும் நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று நிறைந்த நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு மதிமுக சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டும். தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டுகளாக்கி வாழ்வில் முன்னேற உறுதியேற்க வேண்டும். அதன் மூலம் பெற்றோருக்கும், பிறந்த பொன்னாட்டுக்கும் பெருமை தேடித் தர வேண்டும்.
தமிழக அரசின் உயர் கல்வித் துறை நடத்தும் உயர் கல்விக்கான கலந்தாய்வு இப்போது சென்னையில் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வீண் அலைச்சலும், பொருள் செலவும் ஏற்படுகிறது. வசதி இல்லாதவர்கள் காலையில் சென்னைக்கு வந்து அங்கும் இங்கும் அலைந்து மாலையிலேயே ஊர் திரும்புகின்றனர்.
தகவல் தொழில் நுட்பம் வெகுவாக வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் சென்னையில் மட்டுமல்லாது திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் கலந்தாய்வை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரை:""அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும்,'' என, மதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.

மதுரை காளவாசல் சந்திப்பில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:சாதாரண மனிதர் உயிருக்கு பாதுகாப்பு கேட்டால், பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. மு.க.அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு? மக்களால் அவருக்கு அச்சுறுத்தல் இல்லை. எதற்காகவும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என, கருணாநிதி கூறுகிறார். அவருக்கு என்ன கொள்கை, லட்சியம் உள்ளது? அவருடைய கொள்கையை பரப்பியவர் டில்லி திகார் சிறையில் உள்ளார்.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும். போலீசாருக்கு முழு சுதந்திரம் தரப்படும். மதுரையில் ரவுடிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவர். ரவுடிகளின் புகலிடமாகத் திகழும் மதுரை, ஆன்மிக சுற்றுலா தலமாக்கப்படும்.

போலி ஆவணங்கள் மூலம் ரவுடிகளால் பறிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, "பறக்கும் பாலம்' அமைக்கப்படும். மதுரையைச் சுற்றி தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும்; குடிநீர் வசதி செய்யப்படும்.தி.மு.க., ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அரசு ஊழியர்களுக்கு சம்பள முரண்பாடு களையப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

மதுரையில் இன்றும் ஜெ., பிரசாரம் : மதுரை ஆறாவது சிறப்பு காவல்படையில் இருந்து ஜெ., இன்று காலை 11.45 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு தேனி செல்கிறார்.தேனி, திண்டுக்கல், நத்தத்தில் பிரசாரம் செய்து விட்டு, திண்டுக்கலில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை வருகிறார். மாலை 4 மணிக்கு அய்யர் பங்களாவில், புறநகர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அழுக்கான "ஷாமியானா' ஜெ., கண்ணில் படவில்லை

* ஜெ., வரும் பாதையில் வரவேற்பு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இவற்றை தேர்தல்பார்வையாளர்கள் அகற்ற உத்தரவிட்டதால் உடனே அகற்றினர்.
* அம்பாசமுத்திரத்தில் இருந்து, மதுரை சிறப்புபட்டாலியன் படை மைதானத்திற்கு மாலை 4.15 மணிக்கு ஹெலிகாப்டரில் வந்தார்.
* ஜெ., வருகையை முன்னிட்டு பாத்திமா கல்லூரி சந்திப்பு, அரசரடி சந்திப்பு, காளவாசல் சந்திப்புபகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
* காளவாசல் சந்திப்பிற்கு மாலை 4.47 மணிக்கு ஜெ.,வந்தார். மாலை 4.50 மணிக்கு பேச துவங்கி 5.10க்கு முடித்தார்.
* பிரசார வேன் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில், "இப்ப விழுமோ... எப்ப விழுமோ...' என்றநிலையில் அழுக்கு படிந்த "ஷாமியானா' அமைக்கப்பட்டிருந்தது. இதை, "ஜெ., பார்த்திருந்தால், பார்வையாலே சுட்டு எரித்திருப்பார்,' என, தொண்டர்கள் குமுறினர்.
* வலதுபக்க மேடையில் வேட்பாளர்கள் செல்லூர் ராஜூ(அ.தி.மு.க.,), சுந்தர்ராஜன் (தே.மு.தி.க.,) , அண்ணாதுரை (மார்க்சிஸ்ட்), கதிரவன்(பா.பி.,) நின்றிருந்தனர். கூட்ட நெரிசலால் வேட்பாளர்களின் மேடையை தொண்டர்கள் ஆக்கிரமித்தனர். இதனால், வேட்பாளர்களை ஜெ., அறிமுகம் செய்துவைத்தாலும், வேட்பாளர்களின் தலைகள் தென்படவில்லை.
* "குடி'மகன்கள் கும்மாளம் அடித்து விடக்கூடாது என்பதற்காக பிரசாரம் செய்த இடத்திற்கு எதிரே இருந்த 2 டாஸ்மாக் ஒயின்ஷாப்புகள் அடைக்கப்பட்டன.

அ.தி.மு.க., ஜெயித்தால் சட்டத்தின் ஆட்சி: மதுரையில் ஜெயலலிதா உறுதி

மதுரை:""அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும்,'' என, மதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.

மதுரை காளவாசல் சந்திப்பில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:சாதாரண மனிதர் உயிருக்கு பாதுகாப்பு கேட்டால், பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. மு.க.அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு? மக்களால் அவருக்கு அச்சுறுத்தல் இல்லை. எதற்காகவும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என, கருணாநிதி கூறுகிறார். அவருக்கு என்ன கொள்கை, லட்சியம் உள்ளது? அவருடைய கொள்கையை பரப்பியவர் டில்லி திகார் சிறையில் உள்ளார்.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும். போலீசாருக்கு முழு சுதந்திரம் தரப்படும். மதுரையில் ரவுடிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவர். ரவுடிகளின் புகலிடமாகத் திகழும் மதுரை, ஆன்மிக சுற்றுலா தலமாக்கப்படும்.

போலி ஆவணங்கள் மூலம் ரவுடிகளால் பறிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, "பறக்கும் பாலம்' அமைக்கப்படும். மதுரையைச் சுற்றி தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும்; குடிநீர் வசதி செய்யப்படும்.தி.மு.க., ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அரசு ஊழியர்களுக்கு சம்பள முரண்பாடு களையப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

மதுரையில் இன்றும் ஜெ., பிரசாரம் : மதுரை ஆறாவது சிறப்பு காவல்படையில் இருந்து ஜெ., இன்று காலை 11.45 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு தேனி செல்கிறார்.தேனி, திண்டுக்கல், நத்தத்தில் பிரசாரம் செய்து விட்டு, திண்டுக்கலில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை வருகிறார். மாலை 4 மணிக்கு அய்யர் பங்களாவில், புறநகர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அழுக்கான "ஷாமியானா' ஜெ., கண்ணில் படவில்லை

* ஜெ., வரும் பாதையில் வரவேற்பு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இவற்றை தேர்தல்பார்வையாளர்கள் அகற்ற உத்தரவிட்டதால் உடனே அகற்றினர்.
* அம்பாசமுத்திரத்தில் இருந்து, மதுரை சிறப்புபட்டாலியன் படை மைதானத்திற்கு மாலை 4.15 மணிக்கு ஹெலிகாப்டரில் வந்தார்.
* ஜெ., வருகையை முன்னிட்டு பாத்திமா கல்லூரி சந்திப்பு, அரசரடி சந்திப்பு, காளவாசல் சந்திப்புபகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
* காளவாசல் சந்திப்பிற்கு மாலை 4.47 மணிக்கு ஜெ.,வந்தார். மாலை 4.50 மணிக்கு பேச துவங்கி 5.10க்கு முடித்தார்.
* பிரசார வேன் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில், "இப்ப விழுமோ... எப்ப விழுமோ...' என்றநிலையில் அழுக்கு படிந்த "ஷாமியானா' அமைக்கப்பட்டிருந்தது. இதை, "ஜெ., பார்த்திருந்தால், பார்வையாலே சுட்டு எரித்திருப்பார்,' என, தொண்டர்கள் குமுறினர்.
* வலதுபக்க மேடையில் வேட்பாளர்கள் செல்லூர் ராஜூ(அ.தி.மு.க.,), சுந்தர்ராஜன் (தே.மு.தி.க.,) , அண்ணாதுரை (மார்க்சிஸ்ட்), கதிரவன்(பா.பி.,) நின்றிருந்தனர். கூட்ட நெரிசலால் வேட்பாளர்களின் மேடையை தொண்டர்கள் ஆக்கிரமித்தனர். இதனால், வேட்பாளர்களை ஜெ., அறிமுகம் செய்துவைத்தாலும், வேட்பாளர்களின் தலைகள் தென்படவில்லை.
* "குடி'மகன்கள் கும்மாளம் அடித்து விடக்கூடாது என்பதற்காக பிரசாரம் செய்த இடத்திற்கு எதிரே இருந்த 2 டாஸ்மாக் ஒயின்ஷாப்புகள் அடைக்கப்பட்டன.

டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் - த்ரிஷா நடிக்கும் மங்காத்தா படம் இறுதிகட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மதுரையில் படமாக்கப்பட உள்ளன. இதற்காக மங்காத்தா டீம் விரைவில் மதுரை செல்கிறது. அஜித்தின் 50வது படமான மங்காத்தா, கிரிக்கெட் போட்டிகளின்போது நடக்கும் பெட்டிங் விவகாரங்களை மையப்படுத்தி உருவாகி வரும் படம். வெளிநாடுகளில் மற்றும் சென்னையில் சூட்டிங்கை முடித்து தற்போது மும்பையில் முகாமிட்டிருக்கும் அஜித், த்ரிஷா, சினேகா, லட்சுமிராய் உள்ளிட்ட மங்காத்தா குழுவினர், விரைவில் மதுரை செல்கிறார்கள். படத்தின் கதைக்களம் வெளிநாடுகள், சென்னை, மும்பை என நகர்ந்து கொண்டிருந்தாலும் க்ளைமாக்ஸை மதுரையில் படமாக்க அப்படத்தின் தயாரிப்பாளர் க்ளவுட்நைன் தயாநிதி அழகிரி நினைத்தாராம். இதனால் க்ளைமாக்ஸ் மதுரையில் படமாக்கப்படுகிறது. அஜித் பிறந்த தினமான மே 1ம்‌தேதி மங்காத்தாவை திரையிடும் திட்டத்துடன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மங்காத்தாவையும் விடவில்லை மதுரை சென்டிமெண்ட்!

டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் - த்ரிஷா நடிக்கும் மங்காத்தா படம் இறுதிகட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மதுரையில் படமாக்கப்பட உள்ளன. இதற்காக மங்காத்தா டீம் விரைவில் மதுரை செல்கிறது. அஜித்தின் 50வது படமான மங்காத்தா, கிரிக்கெட் போட்டிகளின்போது நடக்கும் பெட்டிங் விவகாரங்களை மையப்படுத்தி உருவாகி வரும் படம். வெளிநாடுகளில் மற்றும் சென்னையில் சூட்டிங்கை முடித்து தற்போது மும்பையில் முகாமிட்டிருக்கும் அஜித், த்ரிஷா, சினேகா, லட்சுமிராய் உள்ளிட்ட மங்காத்தா குழுவினர், விரைவில் மதுரை செல்கிறார்கள். படத்தின் கதைக்களம் வெளிநாடுகள், சென்னை, மும்பை என நகர்ந்து கொண்டிருந்தாலும் க்ளைமாக்ஸை மதுரையில் படமாக்க அப்படத்தின் தயாரிப்பாளர் க்ளவுட்நைன் தயாநிதி அழகிரி நினைத்தாராம். இதனால் க்ளைமாக்ஸ் மதுரையில் படமாக்கப்படுகிறது. அஜித் பிறந்த தினமான மே 1ம்‌தேதி மங்காத்தாவை திரையிடும் திட்டத்துடன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மதுரை மாநகருக்கு சிறப்பு சேர்க்கும் திருக்கோவில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். 65 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் இக்கோவில் அமைந்து உள்ளது. 2000 ஆயிரம் வருடத்திற்கு முன் நாயக்கமன்னர்களால் கட்டப்பட்டது. இந்த கோவில் பல அற்புதமான கலை நுணுக்கங்களுடன் கட்டப்பட்டு உள்ளது.

இக்கோவிலில் உள்ள அதிசய விவரங்களை அறிந்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்களும், வெளிநாட்டவரும் தினம் தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வருகின்றனர். இவர்களோடு தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்ட மக்களும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெய்வங்களை வழிபட வந்த வண்ணம் உள்ளனர்.

நாளுக்கு நாள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சாமியை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் வெளிமாநிலத்தவர்கள்தான் அதிகமாக வர தொடங்கி உள்ளனர். வெளிநாட்டவர்களும் கோவிலின் சிறப்புகளையும், வழிபாட்டு முறைகளையும் பார்க்க வருகின்றனர்.

இதனால் மீனாட்சி அம்மனின் மூலஸ்தானத்திற்குள் சிறியவர் முதல் பெரியவர்கள் அனைவரும் மீனாட்சி அம்மனை தரிசிக்கும் வகையில் மரப்பலகையிலான மேடையை அமைத்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனால் தற்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்றாலும் மீனாட்சி அம்மனை கண்குளிர தரிசனம் செய்ய முடிகிறது.

சிவன் பூஜித்த கோவில் ஆதியிலேயே இறைவன் இறைவி பராசக்தியானவளை மதுரையிலே மலையத்வஜ பாண்டியன் மகளாக அக்கினி குண்டத்திலே அவதரிக்கச் செய்தார். `தேவி மும்முலை தடா தகை' என்கிற பெயருடன் ஆய கலைகள் 64 நான்கினையும் தேர்ச்சியுடன் கற்று திக்விஜயம் செய்து இறுதியாக கைலாய மலையில் நந்தி மற்றும் பூத கணங்களை வென்று இறைவனை பாத்திரமாத்திரத்திலேயே அகந்தை அழிந்து தன் கணவர் இவரே என்று உணர்ந்து மதுரையிலே திருமணக்கோலம் பூண்டு வர வேண்டுகிறாள்.

இறைவன் சோமசுந்தர பாண்டியர் என்கிற பெயருடன் மதுரையிலே மாப்பிள்ளை கோலம்பூண்டு எல்லாம் வல்ல சக்தி அம்பிகை மீனாட்சியை திருமணம் செய்து கொள்கிறார். திருமண கோலத்திலேயே தன் ஆன்மாவினை நடுவூர் என்கிற மதுரையம்பதிலேயே ஆலயம் அமைத்து சிவபூஜை செய்கிறார்.

அவர் ஆத்மார்த்த பூஜை செய்த சிவ ஆலயமே மதுரை `இம்மையிலும் நன்மை தருவார்' ஆலயம் ஆகும். மேலும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ கால பைரவர் எழுந்தருளி உள்ளார். சிவனின் அம்சமாகிய பைரவரின் வடுகர் என்றும் சட்டநாதர் என்றும் ஆபதூதாரணர் என்றும் அழைக்கின்றார்கள்.

ஸ்ரீ கால பைரவர்;

சகல பிணிகளுக்கும் மனபயம், புத்தி தடுமாற்றம், ஊழ்வினை துன்பம், கடன் தொல்லைகள், தாமதமான செயல்பாடுகளுக்கும் விமோசனம் அளிக்கும் கண்கண்ட தெய்வம். இவரே கதி என சரணடையும் எல்லா பக்தர்களையும் இவர் நீடுழி வாழ வைத்துள்ளார்.

காலபைரவருக்கு இந்த கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும் மற்றும் தேய்பிறை அஷ்டமி அன்றும் விசேஷ பூஜை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்சிணாமூர்த்தி :

இந்த கோவிலில் சிவனின் அம்சமாகிய தட்சிணாமூர்த்திக்கு வியாழன்தோறும் விசேஷ வழிபாடுகள், கூட்டு பிரார்த்தனைகள் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த கோவிலில் செய்ய கூடிய சிவ வழிபாட்டில் அனைவரும் குருவினுடைய மந்திரங்களை சிவாச்சாரியார் சொல்ல, அதை அவ்வாறே பக்தர்களும் திருப்பி சொல்லி வழிபாடு செய்வது விசேஷ அம்சமாகும்.

சகல பிணிகளையும் நீக்க வல்ல ஜ்வரஹர மகாலிங்கம் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அபிஷேகம் :

இவருக்கு பிரதி வாரம் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் பால், இளநீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்யும் போது மிளகு கொண்டு சென்று அர்ச்சனை செய்தால் தேகஆரோக்கியம் பெற்றிடலாம். சகல பிணிகளுக்கும் இங்கு பூஜை செய்து தரக்கூடிய மிளகு மிக விசேஷமான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து வசதி:

சென்னையில் இருந்து மதுரைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்லவும் ரெயில் வசதி உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மாநகருக்கு சிறப்பு சேர்க்கும் திருக்கோவில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். 65 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் இக்கோவில் அமைந்து உள்ளது. 2000 ஆயிரம் வருடத்திற்கு முன் நாயக்கமன்னர்களால் கட்டப்பட்டது. இந்த கோவில் பல அற்புதமான கலை நுணுக்கங்களுடன் கட்டப்பட்டு உள்ளது.

இக்கோவிலில் உள்ள அதிசய விவரங்களை அறிந்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்களும், வெளிநாட்டவரும் தினம் தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வருகின்றனர். இவர்களோடு தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்ட மக்களும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெய்வங்களை வழிபட வந்த வண்ணம் உள்ளனர்.

நாளுக்கு நாள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சாமியை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் வெளிமாநிலத்தவர்கள்தான் அதிகமாக வர தொடங்கி உள்ளனர். வெளிநாட்டவர்களும் கோவிலின் சிறப்புகளையும், வழிபாட்டு முறைகளையும் பார்க்க வருகின்றனர்.

இதனால் மீனாட்சி அம்மனின் மூலஸ்தானத்திற்குள் சிறியவர் முதல் பெரியவர்கள் அனைவரும் மீனாட்சி அம்மனை தரிசிக்கும் வகையில் மரப்பலகையிலான மேடையை அமைத்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனால் தற்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்றாலும் மீனாட்சி அம்மனை கண்குளிர தரிசனம் செய்ய முடிகிறது.

சிவன் பூஜித்த கோவில் ஆதியிலேயே இறைவன் இறைவி பராசக்தியானவளை மதுரையிலே மலையத்வஜ பாண்டியன் மகளாக அக்கினி குண்டத்திலே அவதரிக்கச் செய்தார். `தேவி மும்முலை தடா தகை' என்கிற பெயருடன் ஆய கலைகள் 64 நான்கினையும் தேர்ச்சியுடன் கற்று திக்விஜயம் செய்து இறுதியாக கைலாய மலையில் நந்தி மற்றும் பூத கணங்களை வென்று இறைவனை பாத்திரமாத்திரத்திலேயே அகந்தை அழிந்து தன் கணவர் இவரே என்று உணர்ந்து மதுரையிலே திருமணக்கோலம் பூண்டு வர வேண்டுகிறாள்.

இறைவன் சோமசுந்தர பாண்டியர் என்கிற பெயருடன் மதுரையிலே மாப்பிள்ளை கோலம்பூண்டு எல்லாம் வல்ல சக்தி அம்பிகை மீனாட்சியை திருமணம் செய்து கொள்கிறார். திருமண கோலத்திலேயே தன் ஆன்மாவினை நடுவூர் என்கிற மதுரையம்பதிலேயே ஆலயம் அமைத்து சிவபூஜை செய்கிறார்.

அவர் ஆத்மார்த்த பூஜை செய்த சிவ ஆலயமே மதுரை `இம்மையிலும் நன்மை தருவார்' ஆலயம் ஆகும். மேலும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ கால பைரவர் எழுந்தருளி உள்ளார். சிவனின் அம்சமாகிய பைரவரின் வடுகர் என்றும் சட்டநாதர் என்றும் ஆபதூதாரணர் என்றும் அழைக்கின்றார்கள்.

ஸ்ரீ கால பைரவர்;

சகல பிணிகளுக்கும் மனபயம், புத்தி தடுமாற்றம், ஊழ்வினை துன்பம், கடன் தொல்லைகள், தாமதமான செயல்பாடுகளுக்கும் விமோசனம் அளிக்கும் கண்கண்ட தெய்வம். இவரே கதி என சரணடையும் எல்லா பக்தர்களையும் இவர் நீடுழி வாழ வைத்துள்ளார்.

காலபைரவருக்கு இந்த கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும் மற்றும் தேய்பிறை அஷ்டமி அன்றும் விசேஷ பூஜை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்சிணாமூர்த்தி :

இந்த கோவிலில் சிவனின் அம்சமாகிய தட்சிணாமூர்த்திக்கு வியாழன்தோறும் விசேஷ வழிபாடுகள், கூட்டு பிரார்த்தனைகள் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த கோவிலில் செய்ய கூடிய சிவ வழிபாட்டில் அனைவரும் குருவினுடைய மந்திரங்களை சிவாச்சாரியார் சொல்ல, அதை அவ்வாறே பக்தர்களும் திருப்பி சொல்லி வழிபாடு செய்வது விசேஷ அம்சமாகும்.

சகல பிணிகளையும் நீக்க வல்ல ஜ்வரஹர மகாலிங்கம் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அபிஷேகம் :

இவருக்கு பிரதி வாரம் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் பால், இளநீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்யும் போது மிளகு கொண்டு சென்று அர்ச்சனை செய்தால் தேகஆரோக்கியம் பெற்றிடலாம். சகல பிணிகளுக்கும் இங்கு பூஜை செய்து தரக்கூடிய மிளகு மிக விசேஷமான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து வசதி:

சென்னையில் இருந்து மதுரைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்லவும் ரெயில் வசதி உள்ளது.

முக நூல்

Popular Posts