background img

புதிய வரவு

Showing posts with label New. Show all posts
Showing posts with label New. Show all posts
இடாநகர், மே 5: ஹெலிகாப்டர் விபத்தில் டோர்ஜி காண்டு இறந்ததையடுத்து அருணாசலப் பிரதேச புதிய முதல்வராக ஜர்போம் கேம்லின்(50) வியாழக்கிழமை பதவியேற்றார். காண்டுவின் அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக கேம்லின் பதவி வகித்தார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஜெ.ஜெ.சிங் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காக இடாநகரில் வியாழக்கிழமை நடந்த பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதையடுத்து, முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கு காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அருணாசல் முதல்வராக கேம்லின் பதவியேற்பு

இடாநகர், மே 5: ஹெலிகாப்டர் விபத்தில் டோர்ஜி காண்டு இறந்ததையடுத்து அருணாசலப் பிரதேச புதிய முதல்வராக ஜர்போம் கேம்லின்(50) வியாழக்கிழமை பதவியேற்றார். காண்டுவின் அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக கேம்லின் பதவி வகித்தார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஜெ.ஜெ.சிங் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காக இடாநகரில் வியாழக்கிழமை நடந்த பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதையடுத்து, முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கு காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்து ஒரு மதுரைப் பக்கத்துக்கு காதல் வருகிறது... ரசிகர்களே தயாராகுங்கள். படத்துக்குப் பெயர் கமுதியில் ஒரு காதல்.

மாணிக்கம், மாயி, திவான் போன்ற படங்களைத் தந்தவர் சூரியபிரகாஷ். இவர்தான் இந்த கமுதி காதலுக்கு கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

இதுகுறித்து சூர்ய பிரகாஷ் கூறுகையில், "திண்டுக்கல் மாவட்டம் நாட்டார்பட்டியில் வாழ்ந்த காதலர்களின் கதை இது. நெஞ்சை நெகிழ வைக்கும் இரு காதல் ஜோடிகளின் வாழ்க்கையை அப்படியே திரைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறேன். இதற்காக அவர்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். நடிகர்கள் தேர்வு நடக்கிறது.

படத்தில் முக்கியத்துவம் கொண்ட அம்மா வேடத்தில் ராதிகா நடிக்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் இந்த அம்மா கேரக்டர் புதுமையானதாக இருக்கும்.

ஏற்கெனவே சரத்குமாரை வைத்து இரண்டு படங்கள் இயக்கியுள்ளேன். சரத்குமாரின் மாயி பாத்திரம் போல் இந்தப் படத்தில் வரும் ராதிகாவின் பாத்திரமும் பேசப்படும்.

விக்ரம் என்பவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்கிறேன். கோவை, புதுக்கோட்டை, கமுதி, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது'' என்றார் சூரியபிரகாஷ்.

கமுதியில் ஒரு காதல்... முக்கிய வேடத்தில் ராதிகா!!

அடுத்து ஒரு மதுரைப் பக்கத்துக்கு காதல் வருகிறது... ரசிகர்களே தயாராகுங்கள். படத்துக்குப் பெயர் கமுதியில் ஒரு காதல்.

மாணிக்கம், மாயி, திவான் போன்ற படங்களைத் தந்தவர் சூரியபிரகாஷ். இவர்தான் இந்த கமுதி காதலுக்கு கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

இதுகுறித்து சூர்ய பிரகாஷ் கூறுகையில், "திண்டுக்கல் மாவட்டம் நாட்டார்பட்டியில் வாழ்ந்த காதலர்களின் கதை இது. நெஞ்சை நெகிழ வைக்கும் இரு காதல் ஜோடிகளின் வாழ்க்கையை அப்படியே திரைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறேன். இதற்காக அவர்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். நடிகர்கள் தேர்வு நடக்கிறது.

படத்தில் முக்கியத்துவம் கொண்ட அம்மா வேடத்தில் ராதிகா நடிக்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் இந்த அம்மா கேரக்டர் புதுமையானதாக இருக்கும்.

ஏற்கெனவே சரத்குமாரை வைத்து இரண்டு படங்கள் இயக்கியுள்ளேன். சரத்குமாரின் மாயி பாத்திரம் போல் இந்தப் படத்தில் வரும் ராதிகாவின் பாத்திரமும் பேசப்படும்.

விக்ரம் என்பவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்கிறேன். கோவை, புதுக்கோட்டை, கமுதி, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது'' என்றார் சூரியபிரகாஷ்.


நேபாள பிரதமராக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜலநாத் கணல் இன்று பதவியேற்றார்.

அதிபர் ராம் பரண் யாதவ் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
61 வயதான ஜலநாத் கணல் இதற்கு முன்னதாக நேபாளத்தின் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக பணியாற்றியவர்.
நேபாள பிரதமரை தேர்ந்தெடுக்க அந்நாட்டு அரசியல் கட்சிகளிடையே கடந்த 7 மாதங்களாக சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், ஜலநாத்துக்கு மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாள பிரதமர் பதவியேற்பு


நேபாள பிரதமராக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜலநாத் கணல் இன்று பதவியேற்றார்.

அதிபர் ராம் பரண் யாதவ் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
61 வயதான ஜலநாத் கணல் இதற்கு முன்னதாக நேபாளத்தின் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக பணியாற்றியவர்.
நேபாள பிரதமரை தேர்ந்தெடுக்க அந்நாட்டு அரசியல் கட்சிகளிடையே கடந்த 7 மாதங்களாக சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், ஜலநாத்துக்கு மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக நூல்

Popular Posts