background img

புதிய வரவு

Showing posts with label Pratibha patil. Show all posts
Showing posts with label Pratibha patil. Show all posts
நெல்லை: ஹிட்லரின் நடவடிக்கைகளை விட புதிய தலைமை தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகள் மோசமாக இருக்கின்றன என்று குடியரசுத் தலைவருக்கு பாளை மண்டல தலைவர் திமுகவை சேர்ந்த சுபா சீதாராமன் புகார் அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

இந்திய குடியரசுத் தலைவராகிய உங்களுக்கு குடிமக்களின் உரிமையை பாதுகாக்கும் பொறுப்பு அரசியல் சட்டம் மற்றும் பாராளுமன்றம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை தேர்தல் மூலம் உறுதி செய்ய தேர்தல் ஆணையம் வழிவகை செய்கிறது. ஆனால் தமிழகத்தில் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் நடைமுறைக்கு ஒவ்வாத நிபந்தனைகளை விதிக்கிறது. போக்குவரத்து சாலைகளில் போலீஸ் அடிக்கடி சோதனைச் சாவடிகளை அமைத்து பயணிகளை கடுமையாக சோதிக்கின்றனர்.

கோயில், குடும்ப விழாக்களுக்கு சென்று வருவோரும் சோதனை என்ற பெயரில் தொல்லைக்கு ஆளாகின்றனர். அன்றாடம் பயன்படும் பால், உணவு பொருட்கள் மற்றும் ஜவுளிகளும், வணிகத்துக்கு கொண்டு செல்லும் பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது. கோழி, ஆடு மாடுகளையும் கூட விட்டு வைக்கவில்லை. அவற்றையும் தேர்தல் அதிகாரிகள் அடை காக்கின்றனர்.

தனியார் வீடுகள், கட்டிடங்களில் போலீஸ் உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் இரவு நேரங்களில் சோதனை என்ற பெயரில் அத்துமீறி செயல்படுகின்றனர். சாலையோர நினைவிடங்கள், கொடி கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. திருமண மண்டங்களில் பொதுமக்களின் மங்கல நிகழ்ச்சிக்கு கூட மறுக்கப்படுகின்றன.

புதிய தலைமை தேர்தல் ஆணையரின் செயல்பாடு ஹி்ட்லரின் செயல்பாடை விட மோசமாக உள்ளது. எனவே குடியரசுத் தலைவராகிய நீங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஜனநாயக விரோதமாக செயல்படும் மத்திய தேர்தல் ஆணையத்தை நேரில் ஆஜராக சொல்லி மனித உரிமை மீறல்களை கைவிட்டு அரசியல் சாசனம் வழங்கிய வரம்பிற்கு உட்பட்டு தேர்தலை நடத்த அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஹிட்லரை விட குரேஷி மோசம்: பிரதீபா பாட்டீலிடம் திமுக நிர்வாகி புகார்

நெல்லை: ஹிட்லரின் நடவடிக்கைகளை விட புதிய தலைமை தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகள் மோசமாக இருக்கின்றன என்று குடியரசுத் தலைவருக்கு பாளை மண்டல தலைவர் திமுகவை சேர்ந்த சுபா சீதாராமன் புகார் அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

இந்திய குடியரசுத் தலைவராகிய உங்களுக்கு குடிமக்களின் உரிமையை பாதுகாக்கும் பொறுப்பு அரசியல் சட்டம் மற்றும் பாராளுமன்றம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை தேர்தல் மூலம் உறுதி செய்ய தேர்தல் ஆணையம் வழிவகை செய்கிறது. ஆனால் தமிழகத்தில் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் நடைமுறைக்கு ஒவ்வாத நிபந்தனைகளை விதிக்கிறது. போக்குவரத்து சாலைகளில் போலீஸ் அடிக்கடி சோதனைச் சாவடிகளை அமைத்து பயணிகளை கடுமையாக சோதிக்கின்றனர்.

கோயில், குடும்ப விழாக்களுக்கு சென்று வருவோரும் சோதனை என்ற பெயரில் தொல்லைக்கு ஆளாகின்றனர். அன்றாடம் பயன்படும் பால், உணவு பொருட்கள் மற்றும் ஜவுளிகளும், வணிகத்துக்கு கொண்டு செல்லும் பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது. கோழி, ஆடு மாடுகளையும் கூட விட்டு வைக்கவில்லை. அவற்றையும் தேர்தல் அதிகாரிகள் அடை காக்கின்றனர்.

தனியார் வீடுகள், கட்டிடங்களில் போலீஸ் உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் இரவு நேரங்களில் சோதனை என்ற பெயரில் அத்துமீறி செயல்படுகின்றனர். சாலையோர நினைவிடங்கள், கொடி கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. திருமண மண்டங்களில் பொதுமக்களின் மங்கல நிகழ்ச்சிக்கு கூட மறுக்கப்படுகின்றன.

புதிய தலைமை தேர்தல் ஆணையரின் செயல்பாடு ஹி்ட்லரின் செயல்பாடை விட மோசமாக உள்ளது. எனவே குடியரசுத் தலைவராகிய நீங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஜனநாயக விரோதமாக செயல்படும் மத்திய தேர்தல் ஆணையத்தை நேரில் ஆஜராக சொல்லி மனித உரிமை மீறல்களை கைவிட்டு அரசியல் சாசனம் வழங்கிய வரம்பிற்கு உட்பட்டு தேர்தலை நடத்த அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மணிப்பூரில் ஜனாதிபதி பிரதீபாபட்டீல் தங்கி யிருந்த இடம் அருகே குண்டு வெடித்தது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மணிப்பூர் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக நேற்று டெல்லியில் இருந்து மணிப்பூர் மாநிலம் இம்பால் சென்றார். அங்கு அவர் கவர்னர் மாளிகையில் தங்கி இருந்தார். நேற்று இரவு 11 மணிக்கு கவர்னர் மாளிகை அருகே 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆனந்தசிங் அகாடமி என்ற இடத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதனால் அதிகாரிகள் பதட்டம் அடைந்தனர். உடனே சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த நாசவேலையில் தீவிரவாதிகள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. குண்டு வெடிப்பில் நல்ல வேளையாக யாருக்கும் காயம் இல்லை. ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் மாநிலத்தில் 40 மணி நேர முழு அடைப்புக்கு மணிப்பூர் மக்கள் விடுதலை முன்னணி அழைப்பு விடுத்து இருந்தது.

இதற்கு மக்களிடம் ஓரளவே ஆதரவு இருந்தது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. ஜனாதிபதி பிரதீபாபட்டீல் இன்று மந்திரிபுரி என்ற இடத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த சமூக சேவை அமைப்பு நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு டெல்லி திரும்புகிறார். குண்டு வெடிப்பை தொடர்ந்து ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மணிப்பூரில் பிரதீபாபட்டீல் தங்கியிருந்த இடம் அருகே குண்டு வெடிப்பு

மணிப்பூரில் ஜனாதிபதி பிரதீபாபட்டீல் தங்கி யிருந்த இடம் அருகே குண்டு வெடித்தது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மணிப்பூர் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக நேற்று டெல்லியில் இருந்து மணிப்பூர் மாநிலம் இம்பால் சென்றார். அங்கு அவர் கவர்னர் மாளிகையில் தங்கி இருந்தார். நேற்று இரவு 11 மணிக்கு கவர்னர் மாளிகை அருகே 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆனந்தசிங் அகாடமி என்ற இடத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதனால் அதிகாரிகள் பதட்டம் அடைந்தனர். உடனே சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த நாசவேலையில் தீவிரவாதிகள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. குண்டு வெடிப்பில் நல்ல வேளையாக யாருக்கும் காயம் இல்லை. ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் மாநிலத்தில் 40 மணி நேர முழு அடைப்புக்கு மணிப்பூர் மக்கள் விடுதலை முன்னணி அழைப்பு விடுத்து இருந்தது.

இதற்கு மக்களிடம் ஓரளவே ஆதரவு இருந்தது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. ஜனாதிபதி பிரதீபாபட்டீல் இன்று மந்திரிபுரி என்ற இடத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த சமூக சேவை அமைப்பு நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு டெல்லி திரும்புகிறார். குண்டு வெடிப்பை தொடர்ந்து ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை நேற்று சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்து, பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்தும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைப்பது குறித்தும், அரபு நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்தும், விலைவாசி உயர்வு குறித்தும் விவாதித்தார். இவர்களது உரையாடல் 40 நிமிடங்கள் நீடித்ததாக, ஜனாதிபதி மாளிகை தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பிரதமர் சந்திப்பு

புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை நேற்று சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்து, பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்தும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைப்பது குறித்தும், அரபு நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்தும், விலைவாசி உயர்வு குறித்தும் விவாதித்தார். இவர்களது உரையாடல் 40 நிமிடங்கள் நீடித்ததாக, ஜனாதிபதி மாளிகை தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முக நூல்

Popular Posts