background img

புதிய வரவு

Showing posts with label Rain Flood. Show all posts
Showing posts with label Rain Flood. Show all posts
இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய பகுதிகளான வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 10 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரழிவு ஆளுமை மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளத்தால் 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய 37 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு 430 தற்காலிக முகாம்களில் தங்கள வைக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிந்துள்ளதாகவும், 2 பேர் காணவில்லை என்றும் பேரழிவு ஆளுமை மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளத்தால் பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், வெள்ளத்தின் பாதிப்பு முழுமையாக மதிப்பிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

யாழ் மாணவர்கள் உதவி

சமீபத்தில் பெய்த பெரும் மழையால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள திருகோணமலை மாவட்ட மக்களுக்கு, யாழ்ப்பாணத்தில் சேர்த்த அத்யாவசியப் பொருட்களை யாழ் பல்கலை மாணவர்கள் கொண்டு சென்று வழங்கியுள்ளனர்.

வெருகல் என்ற கிராம்ப் பகுதியில்தான் பாதிப்பு கடுமையாக இருந்துள்ளது. அந்தப் பகுதியில் ஏற்கனவே மழை பெய்தபோதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதும் யாழ் மாணவர்கள் அவர்களுக்கு உதவியுள்ளனர். இப்போது மாணவர்கள் அளித்துள்ள உணவுப்பொருட்கள் அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்றும், அதன் பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் அம்மக்கள் கூறியுள்ளனர்.

இப்பகுதி மக்களின் தேவைகளை அரசும், தொண்டு நிறுவனங்களும் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று யாழ் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் மீண்டும் வெள்ளம்: 10 இலட்சம் பேர் பாதிப்பு

இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய பகுதிகளான வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 10 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரழிவு ஆளுமை மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளத்தால் 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய 37 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு 430 தற்காலிக முகாம்களில் தங்கள வைக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிந்துள்ளதாகவும், 2 பேர் காணவில்லை என்றும் பேரழிவு ஆளுமை மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளத்தால் பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், வெள்ளத்தின் பாதிப்பு முழுமையாக மதிப்பிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

யாழ் மாணவர்கள் உதவி

சமீபத்தில் பெய்த பெரும் மழையால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள திருகோணமலை மாவட்ட மக்களுக்கு, யாழ்ப்பாணத்தில் சேர்த்த அத்யாவசியப் பொருட்களை யாழ் பல்கலை மாணவர்கள் கொண்டு சென்று வழங்கியுள்ளனர்.

வெருகல் என்ற கிராம்ப் பகுதியில்தான் பாதிப்பு கடுமையாக இருந்துள்ளது. அந்தப் பகுதியில் ஏற்கனவே மழை பெய்தபோதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதும் யாழ் மாணவர்கள் அவர்களுக்கு உதவியுள்ளனர். இப்போது மாணவர்கள் அளித்துள்ள உணவுப்பொருட்கள் அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்றும், அதன் பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் அம்மக்கள் கூறியுள்ளனர்.

இப்பகுதி மக்களின் தேவைகளை அரசும், தொண்டு நிறுவனங்களும் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று யாழ் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவலூர்பேட்டை : மேல்லையனூரில் குளத்து தெருவில் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேல்மலையனூரில் சமீபத்தில் பெய்த தொடர்மழையால் அக்னி குளத்தில் நீர் நிரம்பி உள்ளது. பச்சையம்மாள் மலைக்கு செல்லும் வழியில் தனியார் நபரின் நிலத்தில் குளத்து தண்ணீர் தேங்குகிறது. இதனால் அருகில் நெல் பயிரிட்ட விவசாயி நேற்று முன்தினம் குளத்தெருவழியாக பொக்லைன் மூலம் தண்ணீர் வெளியேறுவதற்கு திடீரென பள்ளம் எடுத்தார். பாதி தூரம் வரை பள்ளம் எடுத்துள்ளதால், இதிலிருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள கூரை வீடுகளில் புகுந்தது. மேலும் சிறுதலைப்பூண்டி ரோட்டின் குறுக்காக சென்ற தண்ணீர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குட்டையாக தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் ஒன்று கூடி மண்ணை கொட்டி தண்ணீர் வருவதை தடுத்து நிறுத்தினர். இந்த தெருவில் முழுமையாக கால்வாய் அமைக்கவும், சித்தேரிக்கு செல்லும் கால்வாயை தூர் வாரவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குடிசைகளை வெள்ள நீர் சூழ்ந்தது: மேல்மலையனூரில் பரபரப்பு

அவலூர்பேட்டை : மேல்லையனூரில் குளத்து தெருவில் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேல்மலையனூரில் சமீபத்தில் பெய்த தொடர்மழையால் அக்னி குளத்தில் நீர் நிரம்பி உள்ளது. பச்சையம்மாள் மலைக்கு செல்லும் வழியில் தனியார் நபரின் நிலத்தில் குளத்து தண்ணீர் தேங்குகிறது. இதனால் அருகில் நெல் பயிரிட்ட விவசாயி நேற்று முன்தினம் குளத்தெருவழியாக பொக்லைன் மூலம் தண்ணீர் வெளியேறுவதற்கு திடீரென பள்ளம் எடுத்தார். பாதி தூரம் வரை பள்ளம் எடுத்துள்ளதால், இதிலிருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள கூரை வீடுகளில் புகுந்தது. மேலும் சிறுதலைப்பூண்டி ரோட்டின் குறுக்காக சென்ற தண்ணீர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குட்டையாக தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் ஒன்று கூடி மண்ணை கொட்டி தண்ணீர் வருவதை தடுத்து நிறுத்தினர். இந்த தெருவில் முழுமையாக கால்வாய் அமைக்கவும், சித்தேரிக்கு செல்லும் கால்வாயை தூர் வாரவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

முக நூல்

Popular Posts