background img

புதிய வரவு

Showing posts with label Ready. Show all posts
Showing posts with label Ready. Show all posts
டெல்லி: இந்தியாவில் உள்ள இளைஞர்களில் 53 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதில் தப்பில்லை என்று தெரிவித்துள்ளதாக எம்டிவி நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஊழல் புகார்களில் சிக்கித் தவிக்கிறது. ஊழலை எதிர்த்து அமைக்கப்பட்டுள்ள லோக்பால் குழு இரண்டு முறை கூடிவிட்டது. இந்நிலையில் எம் டிவி இளைஞர்களிடம் ஊழல் பற்றிய கருத்துகளைக் கேட்டறிந்தது.

அன்மையில் ஊழலை எதிர்த்து ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் அதில் பலர் சொல்வது வேறு செய்வது வேறாக உள்ளது. எம்டிவி 13 நகரங்களில் உள்ள 18 வயது முதல் 25 வயதுடைய 2 ஆயிரத்து 400 இளைஞர்களிடம் கணக்கெடுத்தது. இதில் 53 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்கலாம் என்றும், 39 சதவீதத்தினர் லஞ்சம் வாங்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் முன்னேற செக்ஸ் தேவைகளை நிறைவேற்றலாம் என்று 47 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.

எம்டிவி சேனல் தலைவர் ஆதித்யா சாமி கூறுகையில்,இன்று அனைவரும் ஜெயிக்க விரும்புகிறார்கள். அவர்கள் வெற்றி பெறாவிட்டால் பலனில்லை. 90 சதவீதம் பேர் தங்கள் பெற்றோரை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனால் அவர்கள் புது வழிகளைத் தேடுகின்றனர்.

பணம் ஏன் அவ்வளவு முக்கியம் என்பது தான் கேள்வி. 85 சதவீதம் பேர் பணம் அதிகாரத்தை தருவதாக நினைக்கின்றனர். 64 சதவீதத்தினர் கவர்ச்சியளிப்பதாகவும், 90 சதவீத இளைஞர்கள் பணம் தான் மகிழ்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் கருதுகின்றனர்.

அப்படி என்ன லஞ்சம் கொடுத்து பணம் சம்பாதிப்பது என்று கேட்டதற்கு வெற்றிக்கு குறுக்கு வழியைத் தேடுவதாக 60 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் கொடுக்க 53% இளைஞர்கள் தயார்: எம்டிவி கணக்கெடுப்பு

டெல்லி: இந்தியாவில் உள்ள இளைஞர்களில் 53 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதில் தப்பில்லை என்று தெரிவித்துள்ளதாக எம்டிவி நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஊழல் புகார்களில் சிக்கித் தவிக்கிறது. ஊழலை எதிர்த்து அமைக்கப்பட்டுள்ள லோக்பால் குழு இரண்டு முறை கூடிவிட்டது. இந்நிலையில் எம் டிவி இளைஞர்களிடம் ஊழல் பற்றிய கருத்துகளைக் கேட்டறிந்தது.

அன்மையில் ஊழலை எதிர்த்து ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் அதில் பலர் சொல்வது வேறு செய்வது வேறாக உள்ளது. எம்டிவி 13 நகரங்களில் உள்ள 18 வயது முதல் 25 வயதுடைய 2 ஆயிரத்து 400 இளைஞர்களிடம் கணக்கெடுத்தது. இதில் 53 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்கலாம் என்றும், 39 சதவீதத்தினர் லஞ்சம் வாங்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் முன்னேற செக்ஸ் தேவைகளை நிறைவேற்றலாம் என்று 47 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.

எம்டிவி சேனல் தலைவர் ஆதித்யா சாமி கூறுகையில்,இன்று அனைவரும் ஜெயிக்க விரும்புகிறார்கள். அவர்கள் வெற்றி பெறாவிட்டால் பலனில்லை. 90 சதவீதம் பேர் தங்கள் பெற்றோரை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனால் அவர்கள் புது வழிகளைத் தேடுகின்றனர்.

பணம் ஏன் அவ்வளவு முக்கியம் என்பது தான் கேள்வி. 85 சதவீதம் பேர் பணம் அதிகாரத்தை தருவதாக நினைக்கின்றனர். 64 சதவீதத்தினர் கவர்ச்சியளிப்பதாகவும், 90 சதவீத இளைஞர்கள் பணம் தான் மகிழ்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் கருதுகின்றனர்.

அப்படி என்ன லஞ்சம் கொடுத்து பணம் சம்பாதிப்பது என்று கேட்டதற்கு வெற்றிக்கு குறுக்கு வழியைத் தேடுவதாக 60 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

அதென்னமோ தெரியவில்லை... முன்னணி நடிகைகள் எல்லாம் சமீப காலமாக காடு, புலிகள் என எக்கச்சக்க அட்வென்ச்சர் தேடித் திரிகிறார்கள்.

போனவாரம் த்ரிஷா நடுக்காட்டில் புலியுடன் தங்கியிருக்க ஆசைப்பட்டு ராஜஸ்தான் போயிருந்தார்.

இந்த வாரம் அசின் வாரம்... இவரும் புலியை விட்டுவைக்கவில்லை. ஒரு மிருகக்காட்சி சாலைக்குப் போய் புலி வாய்க்குள் கைவிட்டு இறைச்சியை ஊட்டி அசரடித்தாராம்.

இந்தியில் தயாராகும் ரெடி படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்கும் அசின், இதன் படப்பிடிப்புக்காக சமீபத்தில் தாய்லாந்து போயிருந்தார். அப்போது அங்குள்ள டைகர் டெம்பிள் பகுதியை சுற்றி பார்க்க சென்றுள்ளார் படப்பிடிப்புக் குழுவுடன். அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள புலிகளைப் பார்த்ததும் ஆர்வத்துடன் அருகில் சென்றாராம் அசின்.

தைரியமாக அருகில் போய் ஒரு புலிக் குட்டிக்கு உணவு ஊட்டினாராம். இதை பார்த்த படப்பிடிப்பு குழுவினர் பதறினார்கள். புலி வாய்க்குள் கை வைத்து உணவு ஊட்டியது பயமில்லையா? என்று அவரிடம் கேட்டபோது, "மனதில் தைரியம் இருந்தால் எந்த பயமும் நம்மை பயமுறுத்தாது. தைரியம் இல்லாவிட்டால் எதையும் செய்ய முடியாதுட என்றார்.

இதையடுத்து அவருக்கு ஜங்கிள் கி ராணி (காட்டு ராணி) என்று செல்லமாக பட்டம் சூட்டினார்களாம் படக்குழுவினர்!

புலிக்கு இறைச்சி ஊட்டிய 'ஜங்கிள் குயின்' அசின்!

அதென்னமோ தெரியவில்லை... முன்னணி நடிகைகள் எல்லாம் சமீப காலமாக காடு, புலிகள் என எக்கச்சக்க அட்வென்ச்சர் தேடித் திரிகிறார்கள்.

போனவாரம் த்ரிஷா நடுக்காட்டில் புலியுடன் தங்கியிருக்க ஆசைப்பட்டு ராஜஸ்தான் போயிருந்தார்.

இந்த வாரம் அசின் வாரம்... இவரும் புலியை விட்டுவைக்கவில்லை. ஒரு மிருகக்காட்சி சாலைக்குப் போய் புலி வாய்க்குள் கைவிட்டு இறைச்சியை ஊட்டி அசரடித்தாராம்.

இந்தியில் தயாராகும் ரெடி படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்கும் அசின், இதன் படப்பிடிப்புக்காக சமீபத்தில் தாய்லாந்து போயிருந்தார். அப்போது அங்குள்ள டைகர் டெம்பிள் பகுதியை சுற்றி பார்க்க சென்றுள்ளார் படப்பிடிப்புக் குழுவுடன். அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள புலிகளைப் பார்த்ததும் ஆர்வத்துடன் அருகில் சென்றாராம் அசின்.

தைரியமாக அருகில் போய் ஒரு புலிக் குட்டிக்கு உணவு ஊட்டினாராம். இதை பார்த்த படப்பிடிப்பு குழுவினர் பதறினார்கள். புலி வாய்க்குள் கை வைத்து உணவு ஊட்டியது பயமில்லையா? என்று அவரிடம் கேட்டபோது, "மனதில் தைரியம் இருந்தால் எந்த பயமும் நம்மை பயமுறுத்தாது. தைரியம் இல்லாவிட்டால் எதையும் செய்ய முடியாதுட என்றார்.

இதையடுத்து அவருக்கு ஜங்கிள் கி ராணி (காட்டு ராணி) என்று செல்லமாக பட்டம் சூட்டினார்களாம் படக்குழுவினர்!

முக நூல்

Popular Posts