background img

புதிய வரவு

Showing posts with label Saman. Show all posts
Showing posts with label Saman. Show all posts
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, நடிகை அனுஷ்கா வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அனுஷ்கா சிங்கம், வேட்டைக்காரன் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிவபிர சாத்ரெட்டி, வெங்கட் ஆகியோர் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.

விசாகப்பட்டினத்தில் இவர்கள் சொந்தமாக வீடுகள் வாங்கி இருப்பதாகவும் அதற்கு வருமான கணக்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை ஏற்பட்டது. இதில் ஏராளமான சொத்து பத்திரங்கள், தஸ்தா வேஜூக்கள், ரொக்கப் பணம் போன்றவை கைப்பற்றப்பட்டன. அவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.

அப்போது சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டது பற்றி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ரூ.40 கோடிக்கு புதிதாக சொத்துக்கள் வாங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்கும் படி அனுஷ்காவுக்கும் நாகார்ஜுனாவுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும் இது போல் அனுப்பப்பட்டு உள்ளது.

தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார் அனுஷ்கா. ஒரு படத்துக்கு கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

சோதனையில் ரூ.40 கோடி சொத்து கண்டுபிடிப்பு; அனுஷ்கா, நாகார்ஜுனாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, நடிகை அனுஷ்கா வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அனுஷ்கா சிங்கம், வேட்டைக்காரன் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிவபிர சாத்ரெட்டி, வெங்கட் ஆகியோர் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.

விசாகப்பட்டினத்தில் இவர்கள் சொந்தமாக வீடுகள் வாங்கி இருப்பதாகவும் அதற்கு வருமான கணக்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை ஏற்பட்டது. இதில் ஏராளமான சொத்து பத்திரங்கள், தஸ்தா வேஜூக்கள், ரொக்கப் பணம் போன்றவை கைப்பற்றப்பட்டன. அவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.

அப்போது சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டது பற்றி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ரூ.40 கோடிக்கு புதிதாக சொத்துக்கள் வாங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்கும் படி அனுஷ்காவுக்கும் நாகார்ஜுனாவுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும் இது போல் அனுப்பப்பட்டு உள்ளது.

தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார் அனுஷ்கா. ஒரு படத்துக்கு கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

ஐதராபாத்: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூ.122 கோடி வரி செலுத்த கோரியும், கணக்கில் காட்டப்படாத முதலீடுகளுக்கு விளக்கம் கேட்டும், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திராவில் கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி வெளியேறினார். கடந்த வாரம் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் என்ற பெயரில் தனி கட்சி துவக்கினார். இக்கட்சி துவங்கி ஆர்ப்பாட்டங்கள் ஓய்வதற்கு முன்பு ரூ.122 கோடி வரி செலுத்தும்படியும், கணக்கில் காட்டப்படாத முதலீடுகளுக்கு விளக்கம் அளிக்கும்படியும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆந்திராவில் "ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஜகதி பப்ளிகேஷன்' சாக்ஷி என்ற பெயரில் தெலுங்கு பத்திரிகையும், இதே பெயரில் தெலுங்கு "டிவி' சேனலும் நடத்தி வருகிறது. 2008 - 2009ம் ஆண்டில் வருமான வரித்துறைக்கு சமர்ப்பித்த கணக்கில் ரூ.19 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக, இந்த பப்ளிகேஷன் அறிவித்திருந்தது. 2010, மார்ச் 9ல் இந்த தகவல்களின் அடிப்படையில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது வருமான வரித்துறையிடம் இந்த பப்ளிகேஷன் முறையான கணக்குகளை ஒப்படைக்காதது தெரிய வந்தது. இதன் அடிப்டையில் ரூ.122 கோடி வரி செலுத்தும்படி கடந்த 2010, டிசம்பர் 31ம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், மீண்டும் வரி செலுத்தும்படியும், கணக்கில் வராத முதலீடுகளுக்கு விளக்கம் கேட்டும் ஜெகன்மோகனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை கூறுகையில், "இது தொடர்பாக பதில் அளிக்க சம்பந்தப்பட்டவர்கள் அவகாசம் கேட்டுள்ளனர்' என்று தெரிவித்தது. ஜெகன்மோகன் தரப்பில், "வருமானம் ரூ.500 கோடியாக இருக்கும் என எதிர்பார்த்து கடந்தாண்டு செப்டம்பர் மாதமே வருமான வரித்துறைக்கு அட்வான்சாக ரூ.80 கோடி வரி செலுத்தப்பட்டு விட்டது' என்று கூறப்பட்டுள்ளது.

ரூ.122 கோடி வரிபாக்கி: ஜெகன்மோகனுக்கு நோட்டீஸ்

ஐதராபாத்: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூ.122 கோடி வரி செலுத்த கோரியும், கணக்கில் காட்டப்படாத முதலீடுகளுக்கு விளக்கம் கேட்டும், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திராவில் கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி வெளியேறினார். கடந்த வாரம் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் என்ற பெயரில் தனி கட்சி துவக்கினார். இக்கட்சி துவங்கி ஆர்ப்பாட்டங்கள் ஓய்வதற்கு முன்பு ரூ.122 கோடி வரி செலுத்தும்படியும், கணக்கில் காட்டப்படாத முதலீடுகளுக்கு விளக்கம் அளிக்கும்படியும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆந்திராவில் "ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஜகதி பப்ளிகேஷன்' சாக்ஷி என்ற பெயரில் தெலுங்கு பத்திரிகையும், இதே பெயரில் தெலுங்கு "டிவி' சேனலும் நடத்தி வருகிறது. 2008 - 2009ம் ஆண்டில் வருமான வரித்துறைக்கு சமர்ப்பித்த கணக்கில் ரூ.19 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக, இந்த பப்ளிகேஷன் அறிவித்திருந்தது. 2010, மார்ச் 9ல் இந்த தகவல்களின் அடிப்படையில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது வருமான வரித்துறையிடம் இந்த பப்ளிகேஷன் முறையான கணக்குகளை ஒப்படைக்காதது தெரிய வந்தது. இதன் அடிப்டையில் ரூ.122 கோடி வரி செலுத்தும்படி கடந்த 2010, டிசம்பர் 31ம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், மீண்டும் வரி செலுத்தும்படியும், கணக்கில் வராத முதலீடுகளுக்கு விளக்கம் கேட்டும் ஜெகன்மோகனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை கூறுகையில், "இது தொடர்பாக பதில் அளிக்க சம்பந்தப்பட்டவர்கள் அவகாசம் கேட்டுள்ளனர்' என்று தெரிவித்தது. ஜெகன்மோகன் தரப்பில், "வருமானம் ரூ.500 கோடியாக இருக்கும் என எதிர்பார்த்து கடந்தாண்டு செப்டம்பர் மாதமே வருமான வரித்துறைக்கு அட்வான்சாக ரூ.80 கோடி வரி செலுத்தப்பட்டு விட்டது' என்று கூறப்பட்டுள்ளது.