background img

புதிய வரவு

Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

இந்தியப் பசுமைத்தீர்ப்பாயம் தனது அனுமதியின்றி, தமிழக அரசு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடத்தை சிறப்பு மருத்துவமனையாக மாற்ற எடுத்துவரும் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
புதிய தலைமைச் செயலக வளாகம்
ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகத்தினை முறையான சுற்றுச்சூழல் அனுமதியின்றி மருத்துவமனையாக மாற்ற அஇஅதிமுக அரசு முடிவெடுத்துவிட்டதாகக் கூறி வீரமணி என்பவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுச்செய்திருக்கிறார்.
அம்மனு தீர்ப்பாயத்தின் சென்னைப் பிரிவின் முன் நிலுவையில் இருக்கிறது.
ஆனால் ஓமந்தூரார் தோட்டத்திலிருந்து மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே சட்டமன்றத்தினையும் தலைமைச் செயலகத்தையும் மாற்றுவதென்ற அஇஅதிமுக அரசின் முடிவில் தலையிடமுடியாதென வேறொரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, கடந்த வாரம்தான் ஓமந்தூரார் வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவினை அரசு தொடங்கியது.
இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை சென்னைப் பிரிவு பசுமைத் தீர்ப்பாயத்தின் முன் வீரமணியின் மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சொக்கலிங்கம் மருத்துவமனையாக மாற்ற வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதிக்கெதிரான மனு இன்னமும் நிலுவையில் இருக்கும்போது மருத்துவமனை தொடங்க அவ்வளவு அவசரம் காட்டவேண்டிய அவசியமென்ன என்ன என்று அரசைக் கடிந்துகொண்டார்.
மேலும் இது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டினை நாளைக்குள் தீர்ப்பாயத்தின் முன் தெரியப்படுத்தவேண்டுமெனவும் நீதிபதி சொக்கலிங்கம் உத்திரவிட்டார்.

தலைமைச் செயலக மாற்றம்:பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்


இந்தியப் பசுமைத்தீர்ப்பாயம் தனது அனுமதியின்றி, தமிழக அரசு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடத்தை சிறப்பு மருத்துவமனையாக மாற்ற எடுத்துவரும் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
புதிய தலைமைச் செயலக வளாகம்
ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகத்தினை முறையான சுற்றுச்சூழல் அனுமதியின்றி மருத்துவமனையாக மாற்ற அஇஅதிமுக அரசு முடிவெடுத்துவிட்டதாகக் கூறி வீரமணி என்பவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுச்செய்திருக்கிறார்.
அம்மனு தீர்ப்பாயத்தின் சென்னைப் பிரிவின் முன் நிலுவையில் இருக்கிறது.
ஆனால் ஓமந்தூரார் தோட்டத்திலிருந்து மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே சட்டமன்றத்தினையும் தலைமைச் செயலகத்தையும் மாற்றுவதென்ற அஇஅதிமுக அரசின் முடிவில் தலையிடமுடியாதென வேறொரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, கடந்த வாரம்தான் ஓமந்தூரார் வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவினை அரசு தொடங்கியது.
இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை சென்னைப் பிரிவு பசுமைத் தீர்ப்பாயத்தின் முன் வீரமணியின் மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சொக்கலிங்கம் மருத்துவமனையாக மாற்ற வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதிக்கெதிரான மனு இன்னமும் நிலுவையில் இருக்கும்போது மருத்துவமனை தொடங்க அவ்வளவு அவசரம் காட்டவேண்டிய அவசியமென்ன என்ன என்று அரசைக் கடிந்துகொண்டார்.
மேலும் இது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டினை நாளைக்குள் தீர்ப்பாயத்தின் முன் தெரியப்படுத்தவேண்டுமெனவும் நீதிபதி சொக்கலிங்கம் உத்திரவிட்டார்.


நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடை உத்தரவு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 25 அன்று விஸ்வரூபம் வெளியாகவிருந்தது, ஆனால் பல்வேறு முஸ்லீம் அமைப்புக்களின் எதிர்ப்பின் பின்னணியில், தமிழக அரசு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144வது பிரிவின் கீழ் இருவாரத் தடை விதித்தது.
கமல்ஹாசன் தரப்பினர் சென்னை நீதிமன்றத்தினை அணுகியபோது, ஒரு நீதிபதி அரசின் தடையினை நிறுத்திவைத்து உத்திரவிட்டாலும் இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அரசின் மேல் முறையீட்டினை ஏற்று தடை தொடரும் எனக் கூறிவிட்டது.

பின்னர் நேற்று தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது சில ஆட்சேபிக்கப்பட்ட காட்சிகளை நீக்குவதாக கமல்ஹாசன் ஒத்துக்கொண்ட நிலையில் முஸ்லீம் அமைப்பினர் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து சென்னை உட்பட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது.

விஸ்வரூபம் தடை நீங்கியது


நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடை உத்தரவு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 25 அன்று விஸ்வரூபம் வெளியாகவிருந்தது, ஆனால் பல்வேறு முஸ்லீம் அமைப்புக்களின் எதிர்ப்பின் பின்னணியில், தமிழக அரசு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144வது பிரிவின் கீழ் இருவாரத் தடை விதித்தது.
கமல்ஹாசன் தரப்பினர் சென்னை நீதிமன்றத்தினை அணுகியபோது, ஒரு நீதிபதி அரசின் தடையினை நிறுத்திவைத்து உத்திரவிட்டாலும் இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அரசின் மேல் முறையீட்டினை ஏற்று தடை தொடரும் எனக் கூறிவிட்டது.

பின்னர் நேற்று தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது சில ஆட்சேபிக்கப்பட்ட காட்சிகளை நீக்குவதாக கமல்ஹாசன் ஒத்துக்கொண்ட நிலையில் முஸ்லீம் அமைப்பினர் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து சென்னை உட்பட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது.


மனிதனின் அறிவியல் பிரிவின் ஒரு கூறே வானியல். இன்றைக்கு வானியலின் வளர்ச்சி மனிதனை வேற்று கிரகவாசிகளாக மாற்றும் அளவுக்கு உயர்த்தியுள்ளது. ஸ்பிரிட், ஆப்பர்சினிட்டி ஆகிய விண்கலங்கள் செவ்வாய்க் கோளை ஆராய மனிதனால் ஏவப்பட்டவை. மேலும், இன்றைய அறிவியலாளர்கள் ஞாயிறை விட 320 மடங்கு பெரிய, 1 கோடி மடங்கு ஒளி வீசக்கூடிய, இதுவரை வானியல் அறிஞர்களே கண்டிராத மிகப்பெரிய விண்மீனை லண்டனில் உள்ள "ஷெபீல்ட்' வானியல் துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவ்விண்மீனுக்கு மான்ஸ்டர் ஸ்டார் (ராட்சத நட்சத்திரம்) என்று பெயரிட்டுள்ளனர். இக்கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாக தொல் மனிதர்களின் வானியல் கண்டுபிடிப்பே அடிப்படை ஆகும். உலகில் உள்ள தொன்மையான மனித இனங்களில் ஒன்றான தமிழினம் தமக்கென வானியல் கொள்கையை சங்க இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.



பழந்தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாகக் கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு எடுத்தியம்பியவர்கள். தமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார், கனிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் முதலிய பெயர்கள் சான்று பகர்கின்றன. சிலேட்டர் என்னும் வானியல் அறிஞர் தமிழருடைய வானநூற்கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்னும் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.

சங்கத் தமிழர் ஐம்பெரும் பூதங்களின் தோற்றங்களை வெளிப்படுத்தும்போது பரந்து விரிந்த வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றியுள்ள அறிவியல் உண்மையை இவ்வுலகுக்குப் பதிவு செய்துள்ளனர்.

விசும்பில் ஊழூழ் செல்லக்
கருவளர் வானத்திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு
(
பரிபாடல்:2)


இப்பாடலடிகள் முறையாகத் தோன்றும் ஊழிக் காலங்களை வெளிப்படுத்துகிறது. முறையே வானம் முதல் ஊழிக் காலத்திலும், காற்று இரண்டாம் ஊழியிலும், தீ மூன்றாம் ஊழியிலும், நீர் நான்காம் ஊழியிலும், நிலம் ஐந்தாம் ஊழியிலும் தோன்றிய நிகழ்வு இன்றைய அறிவியலாரும் உடன்படு கருத்தாகும்.

தமிழர் இவ்வுலகிலுள்ள உயிர்கள் நிலைத்து வாழ ஞாயிறே முதன்மைக் காரணம் என்பதை உணர்ந்திருந்தனர். தமிழரின் பொங்கல் திருநாள் ஞாயிறை முதன்மைப்படுத்துவது ஈண்டு நோக்கத்தக்கது. திருமுருகாற்றுப்படையின் தொடக்க வரிகள், உயிர்கள் மகிழ ஞாயிறு எழுவதாக நக்கீரர் பதிவு செய்கிறார்.

உலக முவப்பு வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
(
திருமுருகு:1-3)


இங்கு, உலக உயிர்கள் ஞாயிறின் கதிர்களால் உயிர் வாழ்கின்றன. இல்லையேல் இவ்வுலகம் பனிமண்டி உலக அழிவு ஏற்படும் என்ற உண்மை புலப்பட்டு நிற்கிறது. மேலும், நற்றிணை பாடலொன்று, ஞாயிறு இருளைப்போக்க அதன் உட்பகுதி நெருப்பினால் எரிந்து கொண்டிருக்கிறது என்றும் அதைச் சுற்றிலும் ஒளிப்படலம் உள்ளது என்றும் கூறுகிறது. அப்பாடலடிகள் வருமாறு.

வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
கதிர்காய்ந்து எழுந்தகங் கனலி ஞாயிறு
(
நற்:163)


இதன் மூலம், பழந்தமிழர்கள் ஞாயிறை நெருப்புக் கோளம் என்கின்றனர். இன்றைய அறிவியல் அறிஞர்களும் ஞாயிறு வடிவமற்று எரிந்து கொண்டிருக்கின்ற நெருப்புக் கோளம் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். இன்றைய வானியலறிஞர்கள் ஞாயிறை ஒன்பது கோள்கள் சுற்றுவதாகக் கண்டறிந்துள்ளனர். இந்நிகழ்வின் எச்சத்தை சிறுபாணாற்றுப்படையில் காணமுடிகிறது.

வாணிற விசும்பின் கோண்மீன் சூழ்ந்த
விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து
(
சிறுபாண்: 242-43)


என்னும் வரிகள், ஞாயிறைச் சுற்றிலும் கோள்கள் சூழ்ந்துள்ள உண்மைப் பதிவைப் புலப்படுத்துகின்றன. இதன் மூலம் பல கோள்கள் ஞாயிறைச் சுற்றிவந்தன என்று தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பூமியை ஞாயிறின் கோளாக இவர்கள் கண்டறியவில்லை. மாறாக காட்சிப் பார்வையின் அடிப்படையில் பூமியை ஞாயிறும் சந்திரனும் சுற்றுவதாக நம்பினர். இதை,

குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றிப்
பாயிருள் அகற்றும் பயங்கெழு பண்பின்
(
பதிற்று: 22:33-34)


இங்கு, ஞாயிறு கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைவதையும், பூமி நிலையாக ஓரிடத்திலேயே இருப்பதாகவும் காட்சிப் பார்வையின் அடிப்படையில் அறிவியல் உண்மையை அறியாது இருந்த செய்தியும் வெளிப்பட்டு நிற்கிறது.

மேலும், திருப்பாவை 13, புறம்:26:1-2; புறம் 117:1-2; பதிற்றுப்பத்து 13:25-26; ஆகிய பாடல்கள் மூலமும் அறியமுடிகிறது.

தமிழரின் வானியல் அறிவு இன்றைய அறிவுசார் உலகுக்கு ஒரு முன்னோடி என்பதில் ஐயமில்லை.

சங்க இலக்கியத்தில் வானியல்

மனிதனின் அறிவியல் பிரிவின் ஒரு கூறே வானியல். இன்றைக்கு வானியலின் வளர்ச்சி மனிதனை வேற்று கிரகவாசிகளாக மாற்றும் அளவுக்கு உயர்த்தியுள்ளது. ஸ்பிரிட், ஆப்பர்சினிட்டி ஆகிய விண்கலங்கள் செவ்வாய்க் கோளை ஆராய மனிதனால் ஏவப்பட்டவை. மேலும், இன்றைய அறிவியலாளர்கள் ஞாயிறை விட 320 மடங்கு பெரிய, 1 கோடி மடங்கு ஒளி வீசக்கூடிய, இதுவரை வானியல் அறிஞர்களே கண்டிராத மிகப்பெரிய விண்மீனை லண்டனில் உள்ள "ஷெபீல்ட்' வானியல் துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவ்விண்மீனுக்கு மான்ஸ்டர் ஸ்டார் (ராட்சத நட்சத்திரம்) என்று பெயரிட்டுள்ளனர். இக்கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாக தொல் மனிதர்களின் வானியல் கண்டுபிடிப்பே அடிப்படை ஆகும். உலகில் உள்ள தொன்மையான மனித இனங்களில் ஒன்றான தமிழினம் தமக்கென வானியல் கொள்கையை சங்க இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.



பழந்தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாகக் கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு எடுத்தியம்பியவர்கள். தமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார், கனிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் முதலிய பெயர்கள் சான்று பகர்கின்றன. சிலேட்டர் என்னும் வானியல் அறிஞர் தமிழருடைய வானநூற்கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்னும் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.

சங்கத் தமிழர் ஐம்பெரும் பூதங்களின் தோற்றங்களை வெளிப்படுத்தும்போது பரந்து விரிந்த வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றியுள்ள அறிவியல் உண்மையை இவ்வுலகுக்குப் பதிவு செய்துள்ளனர்.

விசும்பில் ஊழூழ் செல்லக்
கருவளர் வானத்திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு
(
பரிபாடல்:2)


இப்பாடலடிகள் முறையாகத் தோன்றும் ஊழிக் காலங்களை வெளிப்படுத்துகிறது. முறையே வானம் முதல் ஊழிக் காலத்திலும், காற்று இரண்டாம் ஊழியிலும், தீ மூன்றாம் ஊழியிலும், நீர் நான்காம் ஊழியிலும், நிலம் ஐந்தாம் ஊழியிலும் தோன்றிய நிகழ்வு இன்றைய அறிவியலாரும் உடன்படு கருத்தாகும்.

தமிழர் இவ்வுலகிலுள்ள உயிர்கள் நிலைத்து வாழ ஞாயிறே முதன்மைக் காரணம் என்பதை உணர்ந்திருந்தனர். தமிழரின் பொங்கல் திருநாள் ஞாயிறை முதன்மைப்படுத்துவது ஈண்டு நோக்கத்தக்கது. திருமுருகாற்றுப்படையின் தொடக்க வரிகள், உயிர்கள் மகிழ ஞாயிறு எழுவதாக நக்கீரர் பதிவு செய்கிறார்.

உலக முவப்பு வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
(
திருமுருகு:1-3)


இங்கு, உலக உயிர்கள் ஞாயிறின் கதிர்களால் உயிர் வாழ்கின்றன. இல்லையேல் இவ்வுலகம் பனிமண்டி உலக அழிவு ஏற்படும் என்ற உண்மை புலப்பட்டு நிற்கிறது. மேலும், நற்றிணை பாடலொன்று, ஞாயிறு இருளைப்போக்க அதன் உட்பகுதி நெருப்பினால் எரிந்து கொண்டிருக்கிறது என்றும் அதைச் சுற்றிலும் ஒளிப்படலம் உள்ளது என்றும் கூறுகிறது. அப்பாடலடிகள் வருமாறு.

வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
கதிர்காய்ந்து எழுந்தகங் கனலி ஞாயிறு
(
நற்:163)


இதன் மூலம், பழந்தமிழர்கள் ஞாயிறை நெருப்புக் கோளம் என்கின்றனர். இன்றைய அறிவியல் அறிஞர்களும் ஞாயிறு வடிவமற்று எரிந்து கொண்டிருக்கின்ற நெருப்புக் கோளம் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். இன்றைய வானியலறிஞர்கள் ஞாயிறை ஒன்பது கோள்கள் சுற்றுவதாகக் கண்டறிந்துள்ளனர். இந்நிகழ்வின் எச்சத்தை சிறுபாணாற்றுப்படையில் காணமுடிகிறது.

வாணிற விசும்பின் கோண்மீன் சூழ்ந்த
விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து
(
சிறுபாண்: 242-43)


என்னும் வரிகள், ஞாயிறைச் சுற்றிலும் கோள்கள் சூழ்ந்துள்ள உண்மைப் பதிவைப் புலப்படுத்துகின்றன. இதன் மூலம் பல கோள்கள் ஞாயிறைச் சுற்றிவந்தன என்று தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பூமியை ஞாயிறின் கோளாக இவர்கள் கண்டறியவில்லை. மாறாக காட்சிப் பார்வையின் அடிப்படையில் பூமியை ஞாயிறும் சந்திரனும் சுற்றுவதாக நம்பினர். இதை,

குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றிப்
பாயிருள் அகற்றும் பயங்கெழு பண்பின்
(
பதிற்று: 22:33-34)


இங்கு, ஞாயிறு கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைவதையும், பூமி நிலையாக ஓரிடத்திலேயே இருப்பதாகவும் காட்சிப் பார்வையின் அடிப்படையில் அறிவியல் உண்மையை அறியாது இருந்த செய்தியும் வெளிப்பட்டு நிற்கிறது.

மேலும், திருப்பாவை 13, புறம்:26:1-2; புறம் 117:1-2; பதிற்றுப்பத்து 13:25-26; ஆகிய பாடல்கள் மூலமும் அறியமுடிகிறது.

தமிழரின் வானியல் அறிவு இன்றைய அறிவுசார் உலகுக்கு ஒரு முன்னோடி என்பதில் ஐயமில்லை.


இது கிரிக்கெட் சீஸன்... மக்களும் தியேட்டருக்குப் போய் படம் பார்க்க தயாராக இல்லை. எனவே சினிமாக்காரர்கள் கிரிக்கெட் வீரர்களாக மாறியுள்ளனர்.

முதல் கட்டமாக தமிழ், இந்தி நடிகர்கள் மோதும் கிரிக்கெட் போட்டி விசாகபட்டினத்தில் நாளை (மார்ச் 5) தொடங்குகிறது.

இதில் மொத்தம் ஆறு போட்டிகள் நடக்கின்றன. ஐ.பி.எல். ஸ்டைலில் 20 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ் நடிகர்களின் அணிக்கு 'சௌத் சூப்பர் ஸ்டார்ஸ்' என பெயரிட்டுள்ளனர்.

இந்த அணியில் சரத்குமார், ஆர்யா, அப்பாஸ், ஷ்யாம், விக்ராந்த், சாந்தனு, விஷ்ணு, தருண், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், சித்தார்த், தாரக்ரத்னா போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தி நடிகர்கள் அணியில் சல்மான்கான், சுனில்ஷெட்டி, ரித்தேஷ் தேஷ்முக், சோஹைல்கான் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தமிழ் நடிகர்கள் அணியை விளம்பரப்படுத்தும் தூதுவர்களாக பிரியாமணி, ஸ்ரேயா, டாப்சி, சமந்தா, சார்மி, ராகிணி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தி நடிகர்கள் அணியை விளம்பரப்படுத்தும் தூதுவராக ஜெனிலியா நியமிக்கப்பட்டுள்ளார்.

ராதிகாவின் ராடான் டிவி இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

தமிழ் - இந்தி நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட்! - நாளை நடக்கிறது

இது கிரிக்கெட் சீஸன்... மக்களும் தியேட்டருக்குப் போய் படம் பார்க்க தயாராக இல்லை. எனவே சினிமாக்காரர்கள் கிரிக்கெட் வீரர்களாக மாறியுள்ளனர்.

முதல் கட்டமாக தமிழ், இந்தி நடிகர்கள் மோதும் கிரிக்கெட் போட்டி விசாகபட்டினத்தில் நாளை (மார்ச் 5) தொடங்குகிறது.

இதில் மொத்தம் ஆறு போட்டிகள் நடக்கின்றன. ஐ.பி.எல். ஸ்டைலில் 20 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ் நடிகர்களின் அணிக்கு 'சௌத் சூப்பர் ஸ்டார்ஸ்' என பெயரிட்டுள்ளனர்.

இந்த அணியில் சரத்குமார், ஆர்யா, அப்பாஸ், ஷ்யாம், விக்ராந்த், சாந்தனு, விஷ்ணு, தருண், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், சித்தார்த், தாரக்ரத்னா போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தி நடிகர்கள் அணியில் சல்மான்கான், சுனில்ஷெட்டி, ரித்தேஷ் தேஷ்முக், சோஹைல்கான் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தமிழ் நடிகர்கள் அணியை விளம்பரப்படுத்தும் தூதுவர்களாக பிரியாமணி, ஸ்ரேயா, டாப்சி, சமந்தா, சார்மி, ராகிணி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தி நடிகர்கள் அணியை விளம்பரப்படுத்தும் தூதுவராக ஜெனிலியா நியமிக்கப்பட்டுள்ளார்.

ராதிகாவின் ராடான் டிவி இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

கோவை: மாணவர்கள் ஆங்கிலம் கலக்காத சுத்தத் தமிழில் பேச முயற்சிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார் நடிகர் சிவகுமார்.

கோவை சரவணம் பட்டியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றின் தமிழ் மன்றம் தொடக்க விழாவில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், உலகத்தில் 3 ஆயிரம் மொழிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 6 மொழிகள்தான் செம்மொழிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தமிழ் மொழி.

ஆனால் பாருங்கள், தமிழ்நாட்டில் பிறந்து தமிழராக வாழ்கிறோம். தமிழ் பேசுகிறோம் என்பதை தவிர 100க்கு 90 பேருக்கு தமிழ் மொழி அதிகமாக தெரியாது. இதைவிட அவமானம் இருக்க முடியுமா...

எனவே மாணவர்கள் தமிழில் உரையாடும் பொழுது ஆங்கில கலப்பில்லாமல் தூய தமிழிலேயே பேச வேண்டும். ஆங்கில கலப்பினால் தமிழ் தனது தனித்தன்மையை இழந்து விடுகிறது.

கல்லூரி பருவத்தில் மாணவர்கள் ஒழுக்கத்தையும் கல்வியையும் இரு கண்களாக கொள்ளவேண்டும். இந்த வயதில் எதையும் சுலபத்தில் கற்றுக் கொள்ளலாம். நீங்கள் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்...,", என்றார்.

'சுத்த தமிழ்ல பேசுங்கப்பா...!' - சிவகுமார்

கோவை: மாணவர்கள் ஆங்கிலம் கலக்காத சுத்தத் தமிழில் பேச முயற்சிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார் நடிகர் சிவகுமார்.

கோவை சரவணம் பட்டியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றின் தமிழ் மன்றம் தொடக்க விழாவில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், உலகத்தில் 3 ஆயிரம் மொழிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 6 மொழிகள்தான் செம்மொழிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தமிழ் மொழி.

ஆனால் பாருங்கள், தமிழ்நாட்டில் பிறந்து தமிழராக வாழ்கிறோம். தமிழ் பேசுகிறோம் என்பதை தவிர 100க்கு 90 பேருக்கு தமிழ் மொழி அதிகமாக தெரியாது. இதைவிட அவமானம் இருக்க முடியுமா...

எனவே மாணவர்கள் தமிழில் உரையாடும் பொழுது ஆங்கில கலப்பில்லாமல் தூய தமிழிலேயே பேச வேண்டும். ஆங்கில கலப்பினால் தமிழ் தனது தனித்தன்மையை இழந்து விடுகிறது.

கல்லூரி பருவத்தில் மாணவர்கள் ஒழுக்கத்தையும் கல்வியையும் இரு கண்களாக கொள்ளவேண்டும். இந்த வயதில் எதையும் சுலபத்தில் கற்றுக் கொள்ளலாம். நீங்கள் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்...,", என்றார்.

முக நூல்

Popular Posts