background img

புதிய வரவு

Showing posts with label Tomorrow. Show all posts
Showing posts with label Tomorrow. Show all posts
புது தில்லி, மே 4: 2 ஜி அலைகற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, வெள்ளிக்கிழமை (மே 6) கைது செய்யப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான கனிமொழி, சரத் குமார் ரெட்டி, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானி ஆகியோர் தவிர மற்றவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மே 6 ஆம் தேதி ஆஜராவதற்காக கனிமொழி, சென்னையிலிருந்து புதன்கிழமை காலையில் தில்லி வந்தார். அவருடன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரும் தில்லி வந்தனர்.
ஆலோசனை: தில்லி சாணக்கியபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு கனிமொழி சென்றார். அங்கு சட்ட நிபுணர்களுடனும், தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய வண்ணம் இருந்தார்.
பிரபல சட்ட நிபுணர்களான ராம் ஜேட்மலானி, முகுல் ரோத்தகி ஆகியோருடனும் தொலைபேசி மூலம் கனிமொழி ஆலோசனை நடத்தியதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் சார்பாக பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வரும் பிரபல சட்ட நிபுணர் பராசரனின் ஆலோசனையையும் பெற்றதாகத் தெரியவந்துள்ளது.
ஜாமீன் மனு: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிறையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஐவரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். இவர்களது ஜாமீன் மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது. இந்த மனுமீது கடந்த இரு தினங்களாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை புதன்கிழமையும் நடைபெற்றது. மேலும் இரண்டு நாள்களுக்கு ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 6 ஆம் தேதிக்குள் 5 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை முடிந்து, தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் கனிமொழியும் அதே நடவடிக்கையைப் பின்பற்றலாம் என்ற நிலை மாறிவிட்டது. இந்த நிலை கனிமொழி தரப்புக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தெரிகிறது.
செம்மொழி விருது: குடியரசுத் தலைவர் மாளிகையில் செம்மொழிக்கான விருது வழங்கும் விழாவுக்கு மே 6 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செம்மொழி மாநாட்டை மிக சிறப்பாக நடத்திய தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விழாவில் கலந்து கொள்வார் என தமிழ் ஆர்வலர்கள் மிக ஆவலுடன் உள்ளனர்.
ஆனால் அதே நாளில் முதல்வரின் மகள் கனிமொழி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தில்லி வரும் முதல்வரின் கவனம் முழுவதும் அரசியல் ரீதியாக கனிமொழிக்கு ஆதரவாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தே இருக்கும் என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.
இந்த முறைகேடு விவகாரத்தில், குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளவர்களின் தனிப்பட்ட வருமான வரி, அவர்கள் சார்ந்த நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வருமான வரி தொடர்பான விவரங்களை சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்ய இருக்கிறது.
இதன் அடிப்படையில் 5-ஆம் தேதிக்குப் பதில் மே 12 ஆம் தேதி கனிமொழி உள்ளிட்ட நான்கு பேரும் அமலாக்கப் பிரிவு முன் ஆஜர் ஆகவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படலாம் எனவும் தெரிகிறது.

கனிமொழி நாளை கைது?

புது தில்லி, மே 4: 2 ஜி அலைகற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, வெள்ளிக்கிழமை (மே 6) கைது செய்யப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான கனிமொழி, சரத் குமார் ரெட்டி, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானி ஆகியோர் தவிர மற்றவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மே 6 ஆம் தேதி ஆஜராவதற்காக கனிமொழி, சென்னையிலிருந்து புதன்கிழமை காலையில் தில்லி வந்தார். அவருடன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரும் தில்லி வந்தனர்.
ஆலோசனை: தில்லி சாணக்கியபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு கனிமொழி சென்றார். அங்கு சட்ட நிபுணர்களுடனும், தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய வண்ணம் இருந்தார்.
பிரபல சட்ட நிபுணர்களான ராம் ஜேட்மலானி, முகுல் ரோத்தகி ஆகியோருடனும் தொலைபேசி மூலம் கனிமொழி ஆலோசனை நடத்தியதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் சார்பாக பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வரும் பிரபல சட்ட நிபுணர் பராசரனின் ஆலோசனையையும் பெற்றதாகத் தெரியவந்துள்ளது.
ஜாமீன் மனு: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிறையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஐவரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். இவர்களது ஜாமீன் மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது. இந்த மனுமீது கடந்த இரு தினங்களாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை புதன்கிழமையும் நடைபெற்றது. மேலும் இரண்டு நாள்களுக்கு ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 6 ஆம் தேதிக்குள் 5 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை முடிந்து, தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் கனிமொழியும் அதே நடவடிக்கையைப் பின்பற்றலாம் என்ற நிலை மாறிவிட்டது. இந்த நிலை கனிமொழி தரப்புக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தெரிகிறது.
செம்மொழி விருது: குடியரசுத் தலைவர் மாளிகையில் செம்மொழிக்கான விருது வழங்கும் விழாவுக்கு மே 6 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செம்மொழி மாநாட்டை மிக சிறப்பாக நடத்திய தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விழாவில் கலந்து கொள்வார் என தமிழ் ஆர்வலர்கள் மிக ஆவலுடன் உள்ளனர்.
ஆனால் அதே நாளில் முதல்வரின் மகள் கனிமொழி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தில்லி வரும் முதல்வரின் கவனம் முழுவதும் அரசியல் ரீதியாக கனிமொழிக்கு ஆதரவாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தே இருக்கும் என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.
இந்த முறைகேடு விவகாரத்தில், குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளவர்களின் தனிப்பட்ட வருமான வரி, அவர்கள் சார்ந்த நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வருமான வரி தொடர்பான விவரங்களை சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்ய இருக்கிறது.
இதன் அடிப்படையில் 5-ஆம் தேதிக்குப் பதில் மே 12 ஆம் தேதி கனிமொழி உள்ளிட்ட நான்கு பேரும் அமலாக்கப் பிரிவு முன் ஆஜர் ஆகவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படலாம் எனவும் தெரிகிறது.

சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக கணவர், மகன் சகிதமாக, டில்லிக்கு, கனிமொழி நேற்று வந்திறங்கினார். அவருடன், தி.மு.க., எம்.பி.,க்களும் வந்தனர். நாளைய வழக்கு விசாரணையை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து, மத்திய அமைச்சர் அழகிரி வீட்டில், தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், கனிமொழி கைதாவாரா அல்லது ஜாமீன் வழங்கப்படுமா என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரங்களை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளதால், தி.மு.க., பதட்டம் அடைந்துள்ளது.

"ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்திருந்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில், "டி.பி., ரியாலிட்டி' குழுமத்தில் இருந்து, "கலைஞர் டிவி'க்கு பணம் கைமாறிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில், கூட்டு சதியாளர் என, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால், வரும் 6ம் தேதி, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், கனிமொழியின் கைதை எப்பாடுபட்டாவது தவிர்க்க வேண்டும் என, தி.மு.க., தலைமை போராடி வருகிறது. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் உயர் அதிகாரிகள் பலரும் ஜாமீன் கேட்டனர்; ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவருமே சிறையில் உள்ளனர். இந்த வரிசையில், கனிமொழியும் அடுத்ததாக வருவதால், என்ன நடக்கும் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா அல்லது சிறைக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்யப்போவது ஒரே நபர் தான். அவர், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி மட்டுமே. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் யாருக்குமே இதுவரை சைனி தரப்பில் இருந்து கருணை கிடைக்கவில்லை. ஆனால், அரசியல் சம்பந்தப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், கனிமொழி விஷயத்தில் சைனி என்ன செய்வார் என்பதில் பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.

இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், கனிமொழி நேற்று டில்லி வந்து சேர்ந்தார். அவருடன் அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவும் வந்தனர். ராஜ்யசபா எம்.பி., சிவா மற்றும் நாகை லோக்சபா எம்.பி., விஜயனும் கனிமொழியுடன் வந்தனர். அவர்களை, விமான நிலையத்தில், தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர், டி.ஆர்.பாலு வரவேற்றார். கனிமொழி, தன் குடும்பத்தினருடன் டில்லியில் உள்ள அவர் இல்லத்திற்கு சென்றார். அதன் பிறகு, மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி இல்லத்தில், தி.மு.க., முக்கிய எம்.பி.,க்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், பல மணி நேரம் நடைபெற்றது. வழக்கு குறித்தும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்றும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. "கலைஞர் "டிவி'க்கு விளம்பர வருவாயைத் தவிர வேறு வருமானங்கள் இல்லை. பெரிய அளவில் சொத்துக்களும் இருப்பதாக தெரியவில்லை. அதன் வருவாய் லாபம் என பார்த்தால், 10 முதல், 15 கோடி ரூபாய் வரை மட்டுமே இருக்க வேண்டும். இவ்வளவு சிறிய வருமானத்தை வைத்துள்ள ஒரு நிறுவனத்திற்கு, எந்த உத்தரவாதமும் இல்லாமல், 214 கோடி ரூபாய் வழங்க, "டி.பி., ரியாலிட்டி' குழுமம் ஏன் முன் வர வேண்டும்?' என்பதே, சி.பி.ஐ., யின் கேள்வி. அதுமட்டுமல்லாது, வாங்கிய கடனை திரும்ப செலுத்திவிட்டதாக, கலைஞர் "டிவி' கூறிவருகிறது. இவ்வாறு கடனை திரும்ப செலுத்தியது, 2010, டிசம்பரில் தான். அந்த சமயத்தில் அமைச்சர் பதவியில் இருந்த ராஜா விலகி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணைக்கு உள் ளாகிக் கொண்டிருந்தார். எனவே, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் தான், "கலைஞர் "டிவி'க்கு அளிக்கப் பட்டிருப்பதாக, சி.பி.ஐ., சந்தேகம் கிளப்புகிறது. இந்த சந்தேகங்களை போக்க வேண்டுமென்பதற்காகவே சம்மன் செய்யப்பட்டது; விசாரணையும் நடத்தப்பட்டது. முடிவில், கூட்டுச்சதி செய்தவர் என்ற குற்றச்சாட்டையும், சி.பி.ஐ., வைத்துள்ளது.

கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா, வேண்டாமா என்பதை, நீதிபதி சைனி முடிவு செய்வார் என கூறப்பட்டாலும், சி.பி.ஐ., என்ன செய்யப் போகிறது என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது. கார்ப்பரேட் அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்குவதற்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்தே, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். கனிமொழிக்கும் அதேபோல எதிர்ப்பை தெரிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசிடம் இவ்விஷயத்தில் உதவும்படி பலமுறை, தி.மு.க., தரப்பு கேட்டுக் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் தரப்பில், "ராஜா கைது இருக்காது' என்று அளித்த உறுதியும், "குடும்ப உறுப்பினர்களிடம், சி.பி.ஐ., விசாரணை இருக்காது' என்று அளித்த வாக்குறுதியும் கடைசியில் என்னவாயிற்று என்பது அனைவருக்கும் தெரியும். இதனால், கனிமொழியை காப்பாற்றும் விஷயத்தில் காங்கிரஸ் தரும் அனைத்து உறுதிமொழிகளையும் நம்புவது வீணானது என்ற கருத்தும், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

வக்கீல் யார்? கனிமொழிக்காக வாதாடுவதற்கு, பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, ராஜாவுக்காக ஆஜராகும்படி அணுகியபோது, அவர் மறுத்துவிட்டார். கனிமொழிக்கு ஆஜராக சம்மதம் தெரிவித்திருந்தாலும், நாளை, சி.பி.ஐ., கோர்ட்டில் கனிமொழி ஆஜராகும் சூழ்நிலையில், இவருக்கு ஜாமீன் கேட்டு சைனி முன், ராம்ஜெத்மலானி ஆஜராவது சந்தேகமே என, தகவல்கள் கூறுகின்றன.

கனிமொழிக்கு சம்மனா? இதுவரை வரவில்லை: மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பிலிருந்து கனிமொழிக்கு எந்த சம்மனும் இதுவரை வந்து சேரவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் பணம், "கலைஞர் டிவிக்கு அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஹவாலா பணமோசடியும் இதில் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, மத்திய அமலாக்கப்பிரிவும், "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஹவாலா முறையில் முறைகேடாக வெளிநாட்டிலிருந்து பணம் பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், கனிமொழியை விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி நேற்றைய நாளிதழ் ஒன்றில் (தினமலர் அல்ல) வெளியான செய்தியின்படி வரும் 5ம் தேதி அன்று (இன்று) ஆஜராகும்படி அழைத்துள்ளதாக தகவல் வெளியானது. மற்றொரு ஆங்கில நாளிதழ் செய்தியில் வரும் 12ம் தேதி அன்று ஆஜராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்த வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, "விசாரணைக்கு வரும்படி கனிமொழிக்கு சம்மன் அனுப்பியிருக்கலாம். ஆனால், அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பது போல 5ம் தேதி வரச் சொல்லி கூறப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இருப்பினும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து கனிமொழிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்த சம்மன் இந்த நிமிடம் வரை வந்து சேரவில்லை. நாளையோ அல்லது 12ம் தேதியோ என்பதெல்லாம் சம்மன் கிடைத்த பிறகுதான் உறுதியாக தெரியும்,' என்று தெரிவித்தன.

டில்லியில் குவிந்தனர் தி.மு.க., எம்.பி.,க்கள்: கோர்ட்டில் நாளை ஆஜராகிறார் கனிமொழி

சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக கணவர், மகன் சகிதமாக, டில்லிக்கு, கனிமொழி நேற்று வந்திறங்கினார். அவருடன், தி.மு.க., எம்.பி.,க்களும் வந்தனர். நாளைய வழக்கு விசாரணையை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து, மத்திய அமைச்சர் அழகிரி வீட்டில், தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், கனிமொழி கைதாவாரா அல்லது ஜாமீன் வழங்கப்படுமா என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரங்களை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளதால், தி.மு.க., பதட்டம் அடைந்துள்ளது.

"ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்திருந்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில், "டி.பி., ரியாலிட்டி' குழுமத்தில் இருந்து, "கலைஞர் டிவி'க்கு பணம் கைமாறிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில், கூட்டு சதியாளர் என, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால், வரும் 6ம் தேதி, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், கனிமொழியின் கைதை எப்பாடுபட்டாவது தவிர்க்க வேண்டும் என, தி.மு.க., தலைமை போராடி வருகிறது. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் உயர் அதிகாரிகள் பலரும் ஜாமீன் கேட்டனர்; ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவருமே சிறையில் உள்ளனர். இந்த வரிசையில், கனிமொழியும் அடுத்ததாக வருவதால், என்ன நடக்கும் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா அல்லது சிறைக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்யப்போவது ஒரே நபர் தான். அவர், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி மட்டுமே. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் யாருக்குமே இதுவரை சைனி தரப்பில் இருந்து கருணை கிடைக்கவில்லை. ஆனால், அரசியல் சம்பந்தப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், கனிமொழி விஷயத்தில் சைனி என்ன செய்வார் என்பதில் பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.

இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், கனிமொழி நேற்று டில்லி வந்து சேர்ந்தார். அவருடன் அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவும் வந்தனர். ராஜ்யசபா எம்.பி., சிவா மற்றும் நாகை லோக்சபா எம்.பி., விஜயனும் கனிமொழியுடன் வந்தனர். அவர்களை, விமான நிலையத்தில், தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர், டி.ஆர்.பாலு வரவேற்றார். கனிமொழி, தன் குடும்பத்தினருடன் டில்லியில் உள்ள அவர் இல்லத்திற்கு சென்றார். அதன் பிறகு, மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி இல்லத்தில், தி.மு.க., முக்கிய எம்.பி.,க்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், பல மணி நேரம் நடைபெற்றது. வழக்கு குறித்தும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்றும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. "கலைஞர் "டிவி'க்கு விளம்பர வருவாயைத் தவிர வேறு வருமானங்கள் இல்லை. பெரிய அளவில் சொத்துக்களும் இருப்பதாக தெரியவில்லை. அதன் வருவாய் லாபம் என பார்த்தால், 10 முதல், 15 கோடி ரூபாய் வரை மட்டுமே இருக்க வேண்டும். இவ்வளவு சிறிய வருமானத்தை வைத்துள்ள ஒரு நிறுவனத்திற்கு, எந்த உத்தரவாதமும் இல்லாமல், 214 கோடி ரூபாய் வழங்க, "டி.பி., ரியாலிட்டி' குழுமம் ஏன் முன் வர வேண்டும்?' என்பதே, சி.பி.ஐ., யின் கேள்வி. அதுமட்டுமல்லாது, வாங்கிய கடனை திரும்ப செலுத்திவிட்டதாக, கலைஞர் "டிவி' கூறிவருகிறது. இவ்வாறு கடனை திரும்ப செலுத்தியது, 2010, டிசம்பரில் தான். அந்த சமயத்தில் அமைச்சர் பதவியில் இருந்த ராஜா விலகி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணைக்கு உள் ளாகிக் கொண்டிருந்தார். எனவே, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் தான், "கலைஞர் "டிவி'க்கு அளிக்கப் பட்டிருப்பதாக, சி.பி.ஐ., சந்தேகம் கிளப்புகிறது. இந்த சந்தேகங்களை போக்க வேண்டுமென்பதற்காகவே சம்மன் செய்யப்பட்டது; விசாரணையும் நடத்தப்பட்டது. முடிவில், கூட்டுச்சதி செய்தவர் என்ற குற்றச்சாட்டையும், சி.பி.ஐ., வைத்துள்ளது.

கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா, வேண்டாமா என்பதை, நீதிபதி சைனி முடிவு செய்வார் என கூறப்பட்டாலும், சி.பி.ஐ., என்ன செய்யப் போகிறது என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது. கார்ப்பரேட் அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்குவதற்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்தே, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். கனிமொழிக்கும் அதேபோல எதிர்ப்பை தெரிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசிடம் இவ்விஷயத்தில் உதவும்படி பலமுறை, தி.மு.க., தரப்பு கேட்டுக் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் தரப்பில், "ராஜா கைது இருக்காது' என்று அளித்த உறுதியும், "குடும்ப உறுப்பினர்களிடம், சி.பி.ஐ., விசாரணை இருக்காது' என்று அளித்த வாக்குறுதியும் கடைசியில் என்னவாயிற்று என்பது அனைவருக்கும் தெரியும். இதனால், கனிமொழியை காப்பாற்றும் விஷயத்தில் காங்கிரஸ் தரும் அனைத்து உறுதிமொழிகளையும் நம்புவது வீணானது என்ற கருத்தும், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

வக்கீல் யார்? கனிமொழிக்காக வாதாடுவதற்கு, பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, ராஜாவுக்காக ஆஜராகும்படி அணுகியபோது, அவர் மறுத்துவிட்டார். கனிமொழிக்கு ஆஜராக சம்மதம் தெரிவித்திருந்தாலும், நாளை, சி.பி.ஐ., கோர்ட்டில் கனிமொழி ஆஜராகும் சூழ்நிலையில், இவருக்கு ஜாமீன் கேட்டு சைனி முன், ராம்ஜெத்மலானி ஆஜராவது சந்தேகமே என, தகவல்கள் கூறுகின்றன.

கனிமொழிக்கு சம்மனா? இதுவரை வரவில்லை: மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பிலிருந்து கனிமொழிக்கு எந்த சம்மனும் இதுவரை வந்து சேரவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் பணம், "கலைஞர் டிவிக்கு அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஹவாலா பணமோசடியும் இதில் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, மத்திய அமலாக்கப்பிரிவும், "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஹவாலா முறையில் முறைகேடாக வெளிநாட்டிலிருந்து பணம் பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், கனிமொழியை விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி நேற்றைய நாளிதழ் ஒன்றில் (தினமலர் அல்ல) வெளியான செய்தியின்படி வரும் 5ம் தேதி அன்று (இன்று) ஆஜராகும்படி அழைத்துள்ளதாக தகவல் வெளியானது. மற்றொரு ஆங்கில நாளிதழ் செய்தியில் வரும் 12ம் தேதி அன்று ஆஜராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்த வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, "விசாரணைக்கு வரும்படி கனிமொழிக்கு சம்மன் அனுப்பியிருக்கலாம். ஆனால், அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பது போல 5ம் தேதி வரச் சொல்லி கூறப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இருப்பினும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து கனிமொழிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்த சம்மன் இந்த நிமிடம் வரை வந்து சேரவில்லை. நாளையோ அல்லது 12ம் தேதியோ என்பதெல்லாம் சம்மன் கிடைத்த பிறகுதான் உறுதியாக தெரியும்,' என்று தெரிவித்தன.

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் வன்முறை காரணமாக, தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அப்போது சில வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

இதையடுத்து 7 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி இங்கு நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கிள்ளியூர் தொகுதி அனந்தமங்கலம், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி தொகுதியில், ஆரணி நகர செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டத்தில், போடிநாயக்கனூர் தொகுதி சங்கராபுரம் ஆகிய வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மறு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கடலூர் மாவட்டத்தில், நெய்வேலி தொகுதியில் சம்மட்டிக்குப்பம் வாக்குச்சாவடி மற்றும் சம்மட்டிக்குப்பத்தில் மற்றொரு வாக்குச்சாவடியில் வன்முறை காரணமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் சேதமடைந்ததால் மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடை மருதூர் தொகுதியில் வளியவட்டம் வாக்குச்சாவடி மற்றும் அதே தொகுதியில் பருத்திக்குடி வாக்குச்சாவடி ஆகியவற்றில் ஆயிரக்கணக்கானோர் தேர்தலைப் புறக்கணித்ததால் அங்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் வன்முறை காரணமாக, தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அப்போது சில வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

இதையடுத்து 7 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி இங்கு நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கிள்ளியூர் தொகுதி அனந்தமங்கலம், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி தொகுதியில், ஆரணி நகர செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டத்தில், போடிநாயக்கனூர் தொகுதி சங்கராபுரம் ஆகிய வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மறு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கடலூர் மாவட்டத்தில், நெய்வேலி தொகுதியில் சம்மட்டிக்குப்பம் வாக்குச்சாவடி மற்றும் சம்மட்டிக்குப்பத்தில் மற்றொரு வாக்குச்சாவடியில் வன்முறை காரணமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் சேதமடைந்ததால் மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடை மருதூர் தொகுதியில் வளியவட்டம் வாக்குச்சாவடி மற்றும் அதே தொகுதியில் பருத்திக்குடி வாக்குச்சாவடி ஆகியவற்றில் ஆயிரக்கணக்கானோர் தேர்தலைப் புறக்கணித்ததால் அங்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. நடிகர், நடிகைகள் பலர் வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற உள்ளனர். இதற்காக சிலர் வெளியூர் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பியுள்ளனர்.

ரஜினிகாந்த் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் ஓட்டு போட்டு வருகிறார். இம்முறையும் “ராணா” படப் பிடிப்புக்கு இடையில் நாளை ஓட்டுப் போடுகிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் ஆயிரம் விளக்கு தொகுதிக்கான வாக்கைப் பதிவு செய்கிறார்.

நடிகர் கமல் ஆழ்வார் பேட்டையில் உள்ள சென்னை பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போடுகிறார்.தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சாலி கிராமத்தில் வசிக்கிறார். இது விருகம்பாக்கம் தொகுதியில் வருகிறது. அவர் சாலி கிராமம் ஆவிச்சி பள்ளியில் ஓட்டு போடுகிறார்.

சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் தியாகராயநகர் இந்தி பிரச்சார சபா வாக்குச் சாவடியில் ஓட்டு போடுகின்றனர். இதே வாக்குச்சாவடியில் சிவக்குமார், கார்த்தி ஆகியோரும் ஓட்டு போடுகிறார்கள்.

நடிகர் அஜீத்தும் அவரது மனைவி ஷாலினியும் திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ள சென்னை பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போடுகின்றனர். அடையார் பாரத் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் ஓட்டு போடுகிறார்.

படப்பிடிப்புகள் ரத்து: ரஜினி,கமல்,விஜய்,அஜீத், சூர்யா ஓட்டு போடுகின்றனர்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. நடிகர், நடிகைகள் பலர் வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற உள்ளனர். இதற்காக சிலர் வெளியூர் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பியுள்ளனர்.

ரஜினிகாந்த் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் ஓட்டு போட்டு வருகிறார். இம்முறையும் “ராணா” படப் பிடிப்புக்கு இடையில் நாளை ஓட்டுப் போடுகிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் ஆயிரம் விளக்கு தொகுதிக்கான வாக்கைப் பதிவு செய்கிறார்.

நடிகர் கமல் ஆழ்வார் பேட்டையில் உள்ள சென்னை பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போடுகிறார்.தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சாலி கிராமத்தில் வசிக்கிறார். இது விருகம்பாக்கம் தொகுதியில் வருகிறது. அவர் சாலி கிராமம் ஆவிச்சி பள்ளியில் ஓட்டு போடுகிறார்.

சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் தியாகராயநகர் இந்தி பிரச்சார சபா வாக்குச் சாவடியில் ஓட்டு போடுகின்றனர். இதே வாக்குச்சாவடியில் சிவக்குமார், கார்த்தி ஆகியோரும் ஓட்டு போடுகிறார்கள்.

நடிகர் அஜீத்தும் அவரது மனைவி ஷாலினியும் திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ள சென்னை பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போடுகின்றனர். அடையார் பாரத் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் ஓட்டு போடுகிறார்.

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. தேர்தல் பாதுகாப்பு மற்றும் பணிகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநில சட்டசபைகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

8 மணி முதல் மாலை 5 மணி வரை:

தமிழகத்தைப் பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 2773 பேர் போட்டியிடுகின்றனர்.

இங்கு நாளை காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும்.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. வாக்குப் பதிவுக்கு அத்தனை வாக்குச் சாவடிகளும் தயாராக உள்ளன. மின்னணு இயந்திரங்களை அனுப்பி பொருத்துவது, அழியாத மை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வாக்குச் சாவடிகளுக்கு வந்து விட்டன.

இன்று வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள ஊழியர்கள் மின்னணு இயந்திரங்களை பொருத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

54,314 வாக்குச் சாவடிகள்-10,000 வெப் கேமராக்கள் :

வாக்குப்பதிவுக்காக மொத்தம் 54,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் அத்தனை வாக்குச் சாவடிகளும் பதட்டமானவை என்று போலீஸ் டிஜிபி போலாநாத் கூறியிருந்தார். இருப்பினும் தற்போது அத்தனை சாவடிகளுக்கும் ஒரே மாதிரியான பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் குறிப்பிட்ட 10,000 சாவடிகளில் வெப் கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படவுள்ளது.

4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள்:

சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் ஆண்கள் 2,30,86,295 பேராவர். பெண்களின் எண்ணிக்கை 2,28,63,481 பேர். திருநங்கையர் எண்ணிக்கை 844.

வாக்காளர்களுக்கு முதல் முறையாக தேர்தல் ஆணையமே பூத் ஸ்லிப் கொடுத்துள்ளது. அது கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது இல்லாமலும் கூட வாக்களிக்கலாம். புகைப்பட அடையாள அட்டை கட்டாயம்.

13,000 தேர்தல் பார்வையாளர்கள்:

வாக்குப்பதிவைக் கண்காணிக்க 13,000 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் மட்டும் ஒன்றே கால் லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு லட்சம் பேர் மாநிலப் போலீஸார். மற்றவர்கள் துணை ராணுவப்படையினர். வாக்குச் சாவடிகளில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பண விநியோகத்தைத் தடுக்க தீவிரக் கண்காணிப்பு:

வாக்காளர்களுக்கு கடைசி நேரத்தில் பணம் தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வீடு வீடாக சென்று கேன்வாஸ் செய்ய அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதைப் பயன்படுத்தி வீடு வீடாகப் போய் பணம் கொடுக்கப்படலாம் என்ற சந்தேகம் உள்ளதால் அதைத் தீவிரக் கண்காணித்து வருகின்றனர் தேர்தல் பார்வையாளர்கள்.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் குறிப்பிட்ட 26 தொகுதிகளில்தான் பெருமளவில் பணம், இலவசப் பொருட்கள் விநியோகம் தடையில்லாமல் நடந்து வருவதாக தேர்தல் ஆணையத்திற்கு பெருமளவில் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து இங்கு தீவிர கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது.

பணம் கொடுக்கப்படுவது உறுதியானால் அத்தொகுதிகளில் தேர்தலை நிறுத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிரது.

தேர்தல் ஆணையத்தின் இந்தக் கண்காணிப்புப் பட்டியலில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியும் இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தலை பதட்டமில்லாமலும், நியாயமான முறையிலும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

புதுவை, கேரளாவிலும் நாளை தேர்தல்:

தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் நாளை சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.

நாளை சட்டமன்ற தேர்தல்: 54,314 வாக்குச் சாவடிகள்- கண்காணிக்க 10,000 வெப் கேமராக்கள்!

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. தேர்தல் பாதுகாப்பு மற்றும் பணிகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநில சட்டசபைகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

8 மணி முதல் மாலை 5 மணி வரை:

தமிழகத்தைப் பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 2773 பேர் போட்டியிடுகின்றனர்.

இங்கு நாளை காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும்.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. வாக்குப் பதிவுக்கு அத்தனை வாக்குச் சாவடிகளும் தயாராக உள்ளன. மின்னணு இயந்திரங்களை அனுப்பி பொருத்துவது, அழியாத மை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வாக்குச் சாவடிகளுக்கு வந்து விட்டன.

இன்று வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள ஊழியர்கள் மின்னணு இயந்திரங்களை பொருத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

54,314 வாக்குச் சாவடிகள்-10,000 வெப் கேமராக்கள் :

வாக்குப்பதிவுக்காக மொத்தம் 54,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் அத்தனை வாக்குச் சாவடிகளும் பதட்டமானவை என்று போலீஸ் டிஜிபி போலாநாத் கூறியிருந்தார். இருப்பினும் தற்போது அத்தனை சாவடிகளுக்கும் ஒரே மாதிரியான பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் குறிப்பிட்ட 10,000 சாவடிகளில் வெப் கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படவுள்ளது.

4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள்:

சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் ஆண்கள் 2,30,86,295 பேராவர். பெண்களின் எண்ணிக்கை 2,28,63,481 பேர். திருநங்கையர் எண்ணிக்கை 844.

வாக்காளர்களுக்கு முதல் முறையாக தேர்தல் ஆணையமே பூத் ஸ்லிப் கொடுத்துள்ளது. அது கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது இல்லாமலும் கூட வாக்களிக்கலாம். புகைப்பட அடையாள அட்டை கட்டாயம்.

13,000 தேர்தல் பார்வையாளர்கள்:

வாக்குப்பதிவைக் கண்காணிக்க 13,000 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் மட்டும் ஒன்றே கால் லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு லட்சம் பேர் மாநிலப் போலீஸார். மற்றவர்கள் துணை ராணுவப்படையினர். வாக்குச் சாவடிகளில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பண விநியோகத்தைத் தடுக்க தீவிரக் கண்காணிப்பு:

வாக்காளர்களுக்கு கடைசி நேரத்தில் பணம் தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வீடு வீடாக சென்று கேன்வாஸ் செய்ய அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதைப் பயன்படுத்தி வீடு வீடாகப் போய் பணம் கொடுக்கப்படலாம் என்ற சந்தேகம் உள்ளதால் அதைத் தீவிரக் கண்காணித்து வருகின்றனர் தேர்தல் பார்வையாளர்கள்.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் குறிப்பிட்ட 26 தொகுதிகளில்தான் பெருமளவில் பணம், இலவசப் பொருட்கள் விநியோகம் தடையில்லாமல் நடந்து வருவதாக தேர்தல் ஆணையத்திற்கு பெருமளவில் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து இங்கு தீவிர கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது.

பணம் கொடுக்கப்படுவது உறுதியானால் அத்தொகுதிகளில் தேர்தலை நிறுத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிரது.

தேர்தல் ஆணையத்தின் இந்தக் கண்காணிப்புப் பட்டியலில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியும் இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தலை பதட்டமில்லாமலும், நியாயமான முறையிலும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

புதுவை, கேரளாவிலும் நாளை தேர்தல்:

தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் நாளை சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.

சென்னை:""அ.தி.மு.க., கூட்டணியில் நான் சேரவில்லை. எங்கள் கட்சி 41 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்,'' என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருகமான கார்த்திக் தெரிவித்தார்.சென்னையில் நேற்று மாலை அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் பேசும் போது,""அ.தி.மு.க., கூட்டணியில் நான் சேர்வதில்லை என்று நான் எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. அவர்கள் 55 தொகுதி கொடுத்தால் கூட நான் அவர்கள் கூட்டணியில் சேரமாட்டேன். எனது கட்சி சென்னையில், மயிலாப்பூர், அண்ணாநகர், தி.நகர் உட்பட தமிழகத்தில் 41 தொகுதிகளில் போட்டியிட வியூகம் அமைத்து வருகிறேன்.
இதில், 30 தொகுதிகளிலாவது வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.கட்சியின் மூலம் நேற்றும், இன்றும் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை நேர்காணல் முடிந்ததும், நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடுவேன். நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். எந்தத் தொகுதி என்று நாளை அறிவிப்பேன். எனது வேட்பாளர்கள் நாளை மறுநாளிலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். வரும் 22ம்தேதியிலிருந்து நான் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன். அம்பாசமுத்திரத்தில் பிரசாரத்தை துவங்குகி‌‌றேன்,'' என்றார்.
முடிவு செய்துள்ள41 தொகுதிகள்:மயிலாப்பூர், அண்ணாநகர், தி.நகர், சங்கரன்கோவில், வாசுதேவ நல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், திருவாடானை, ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிபட்டி, பல்லடம், திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், மதுரை நகர், மதுரை (கிழக்கு), மதுரை (தெற்கு) ஆகிய 41 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்திக் கட்சி தனித்து போட்டி:நாளை வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை:""அ.தி.மு.க., கூட்டணியில் நான் சேரவில்லை. எங்கள் கட்சி 41 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்,'' என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருகமான கார்த்திக் தெரிவித்தார்.சென்னையில் நேற்று மாலை அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் பேசும் போது,""அ.தி.மு.க., கூட்டணியில் நான் சேர்வதில்லை என்று நான் எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. அவர்கள் 55 தொகுதி கொடுத்தால் கூட நான் அவர்கள் கூட்டணியில் சேரமாட்டேன். எனது கட்சி சென்னையில், மயிலாப்பூர், அண்ணாநகர், தி.நகர் உட்பட தமிழகத்தில் 41 தொகுதிகளில் போட்டியிட வியூகம் அமைத்து வருகிறேன்.
இதில், 30 தொகுதிகளிலாவது வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.கட்சியின் மூலம் நேற்றும், இன்றும் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை நேர்காணல் முடிந்ததும், நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடுவேன். நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். எந்தத் தொகுதி என்று நாளை அறிவிப்பேன். எனது வேட்பாளர்கள் நாளை மறுநாளிலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். வரும் 22ம்தேதியிலிருந்து நான் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன். அம்பாசமுத்திரத்தில் பிரசாரத்தை துவங்குகி‌‌றேன்,'' என்றார்.
முடிவு செய்துள்ள41 தொகுதிகள்:மயிலாப்பூர், அண்ணாநகர், தி.நகர், சங்கரன்கோவில், வாசுதேவ நல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், திருவாடானை, ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிபட்டி, பல்லடம், திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், மதுரை நகர், மதுரை (கிழக்கு), மதுரை (தெற்கு) ஆகிய 41 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது கிரிக்கெட் சீஸன்... மக்களும் தியேட்டருக்குப் போய் படம் பார்க்க தயாராக இல்லை. எனவே சினிமாக்காரர்கள் கிரிக்கெட் வீரர்களாக மாறியுள்ளனர்.

முதல் கட்டமாக தமிழ், இந்தி நடிகர்கள் மோதும் கிரிக்கெட் போட்டி விசாகபட்டினத்தில் நாளை (மார்ச் 5) தொடங்குகிறது.

இதில் மொத்தம் ஆறு போட்டிகள் நடக்கின்றன. ஐ.பி.எல். ஸ்டைலில் 20 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ் நடிகர்களின் அணிக்கு 'சௌத் சூப்பர் ஸ்டார்ஸ்' என பெயரிட்டுள்ளனர்.

இந்த அணியில் சரத்குமார், ஆர்யா, அப்பாஸ், ஷ்யாம், விக்ராந்த், சாந்தனு, விஷ்ணு, தருண், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், சித்தார்த், தாரக்ரத்னா போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தி நடிகர்கள் அணியில் சல்மான்கான், சுனில்ஷெட்டி, ரித்தேஷ் தேஷ்முக், சோஹைல்கான் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தமிழ் நடிகர்கள் அணியை விளம்பரப்படுத்தும் தூதுவர்களாக பிரியாமணி, ஸ்ரேயா, டாப்சி, சமந்தா, சார்மி, ராகிணி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தி நடிகர்கள் அணியை விளம்பரப்படுத்தும் தூதுவராக ஜெனிலியா நியமிக்கப்பட்டுள்ளார்.

ராதிகாவின் ராடான் டிவி இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

தமிழ் - இந்தி நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட்! - நாளை நடக்கிறது

இது கிரிக்கெட் சீஸன்... மக்களும் தியேட்டருக்குப் போய் படம் பார்க்க தயாராக இல்லை. எனவே சினிமாக்காரர்கள் கிரிக்கெட் வீரர்களாக மாறியுள்ளனர்.

முதல் கட்டமாக தமிழ், இந்தி நடிகர்கள் மோதும் கிரிக்கெட் போட்டி விசாகபட்டினத்தில் நாளை (மார்ச் 5) தொடங்குகிறது.

இதில் மொத்தம் ஆறு போட்டிகள் நடக்கின்றன. ஐ.பி.எல். ஸ்டைலில் 20 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ் நடிகர்களின் அணிக்கு 'சௌத் சூப்பர் ஸ்டார்ஸ்' என பெயரிட்டுள்ளனர்.

இந்த அணியில் சரத்குமார், ஆர்யா, அப்பாஸ், ஷ்யாம், விக்ராந்த், சாந்தனு, விஷ்ணு, தருண், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், சித்தார்த், தாரக்ரத்னா போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தி நடிகர்கள் அணியில் சல்மான்கான், சுனில்ஷெட்டி, ரித்தேஷ் தேஷ்முக், சோஹைல்கான் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தமிழ் நடிகர்கள் அணியை விளம்பரப்படுத்தும் தூதுவர்களாக பிரியாமணி, ஸ்ரேயா, டாப்சி, சமந்தா, சார்மி, ராகிணி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தி நடிகர்கள் அணியை விளம்பரப்படுத்தும் தூதுவராக ஜெனிலியா நியமிக்கப்பட்டுள்ளார்.

ராதிகாவின் ராடான் டிவி இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

சென்னை : தமிழகத்திலும், புதுச்சேரியிலும், பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. மார்ச் 28ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இன்று சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கின.

இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வை 7,80,631 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் மாணவிகளின் எண்ணிக்கை 3,87,102 பேர் ஆகும். மாணவர்களை விட 50 ஆயிரத்து 659 மாணவிகள் அதிகம் ஆவர்.

பிளஸ்டூ தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுவையில், 1890 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுவையில் மொத்தம் 11,517 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.

இவர்கள் போக தனித் தேர்வர்களின் எண்ணிக்கை 57,086 பேர் ஆவர்.

தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கும், பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும். தேர்வு தொடங்கியதும் முதல் கால் மணி நேரம் வினாத்தாளைப் படித்துப் பார்க்க அவகாசம் தரப்படும்.

உடல் ஊனமுற்றோர், பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.

அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோரைப் பிடிக்க பறக்கும் படையினரும் தயாராக உள்ளனர். தேர்வுகளில் பிட் அடித்தல், காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவோர் பிடிபட்டால் கடும் தண்டனை தரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கால அட்டவணை:

மார்ச் 2 - தமிழ் முதல் நாள்
மார்ச் 3 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 7 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 8 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 11 - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்
மார்ச் 14 - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து
மார்ச் 17 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷியன் அன்ட் டயட்டிக்ஸ்
மார்ச் 18 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
மார்ச் 21 - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்
மார்ச் 23 - தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி பாடம்
மார்ச் 25 - அனைத்து தொழில்பாட தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

28ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள்

பிளஸ்டூ தேர்வு முடிவடைந்ததும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் 28ம் தேதி தொடங்குகின்றன. இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 11ம்தேதி முடிவடையும். பத்தாம் வகுப்புத் தேர்வை 7 லட்சத்து 54 ஆயிரத்து 679 பேர் எழுதுகின்றனர்.

அதேபோல மெட்ரிகுலேசன் தேர்வு, ஆங்கிலோ இந்தியன் தேர்வு, ஓ.எஸ்.எல்.சி. ஆகிய தேர்வுகள் மார்ச் 22-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 11-ந் தேதி முடிகிறது.

சிபிஎஸ்இ தேர்வுகள் தொடங்கின

இதற்கிடையே, சிபிஎஸ்இ எனப்படும் மத்திய கல்வி வாரியத்தின் பத்து மற்றும் பிளஸ்டூவுக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின.

10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 25ம் தேதியும், பிளஸ்டூவுக்கான தேர்வுகள் ஏப்ரல் 13ம் தேதியும் முடிவடையும்

நாளை பிளஸ்டூ தேர்வு தொடக்கம்-28ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்

சென்னை : தமிழகத்திலும், புதுச்சேரியிலும், பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. மார்ச் 28ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இன்று சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கின.

இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வை 7,80,631 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் மாணவிகளின் எண்ணிக்கை 3,87,102 பேர் ஆகும். மாணவர்களை விட 50 ஆயிரத்து 659 மாணவிகள் அதிகம் ஆவர்.

பிளஸ்டூ தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுவையில், 1890 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுவையில் மொத்தம் 11,517 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.

இவர்கள் போக தனித் தேர்வர்களின் எண்ணிக்கை 57,086 பேர் ஆவர்.

தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கும், பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும். தேர்வு தொடங்கியதும் முதல் கால் மணி நேரம் வினாத்தாளைப் படித்துப் பார்க்க அவகாசம் தரப்படும்.

உடல் ஊனமுற்றோர், பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.

அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோரைப் பிடிக்க பறக்கும் படையினரும் தயாராக உள்ளனர். தேர்வுகளில் பிட் அடித்தல், காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவோர் பிடிபட்டால் கடும் தண்டனை தரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கால அட்டவணை:

மார்ச் 2 - தமிழ் முதல் நாள்
மார்ச் 3 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 7 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 8 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 11 - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்
மார்ச் 14 - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து
மார்ச் 17 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷியன் அன்ட் டயட்டிக்ஸ்
மார்ச் 18 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
மார்ச் 21 - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்
மார்ச் 23 - தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி பாடம்
மார்ச் 25 - அனைத்து தொழில்பாட தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

28ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள்

பிளஸ்டூ தேர்வு முடிவடைந்ததும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் 28ம் தேதி தொடங்குகின்றன. இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 11ம்தேதி முடிவடையும். பத்தாம் வகுப்புத் தேர்வை 7 லட்சத்து 54 ஆயிரத்து 679 பேர் எழுதுகின்றனர்.

அதேபோல மெட்ரிகுலேசன் தேர்வு, ஆங்கிலோ இந்தியன் தேர்வு, ஓ.எஸ்.எல்.சி. ஆகிய தேர்வுகள் மார்ச் 22-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 11-ந் தேதி முடிகிறது.

சிபிஎஸ்இ தேர்வுகள் தொடங்கின

இதற்கிடையே, சிபிஎஸ்இ எனப்படும் மத்திய கல்வி வாரியத்தின் பத்து மற்றும் பிளஸ்டூவுக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின.

10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 25ம் தேதியும், பிளஸ்டூவுக்கான தேர்வுகள் ஏப்ரல் 13ம் தேதியும் முடிவடையும்

முக நூல்

Popular Posts