background img

புதிய வரவு

Showing posts with label katchathivu. Show all posts
Showing posts with label katchathivu. Show all posts
 Attacks On Tamil Nadu Fishermen Sri Lanka தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
கச்சத்தீவு கடற்பரப்பில் நேற்று முன் தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளது என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கச்சத்தீவில் ஆண்டாண்டுகாலமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் நிலையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவதை தடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் அச்சமடைந்திருப்பதாகவும் ஜெயலலிதா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கும் நிலையில்தான் நள்ளிரவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் இலங்கை கடற்படை தாக்குதல்- பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

 Attacks On Tamil Nadu Fishermen Sri Lanka தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
கச்சத்தீவு கடற்பரப்பில் நேற்று முன் தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளது என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கச்சத்தீவில் ஆண்டாண்டுகாலமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் நிலையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவதை தடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் அச்சமடைந்திருப்பதாகவும் ஜெயலலிதா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கும் நிலையில்தான் நள்ளிரவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கச்சத்தீவில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவதற்கு ஏற்ற வகையில் புதிய ஒப்பந்தம் போடவேண்டும் என்பதை வலியுறுத்தி, திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதே நிரந்தர சக வாழ்வுக்கு வழிவகுத்திடும் என்பதால், அரசியல் தீர்வுகாண அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சித்ரவதை செய்யப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும், மீன்பிடி வலைகள் சிதைக்கப்பட்டும், தமிழக மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீன்கள் கொள்ளையடிக்கப்படுவதுமான நடவடிக்கைகளின் உச்சக்கட்டமாக சில நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் பகுதி புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் இலங்கை கடற்படையினரால் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடுஞ்செயலுக்கு இலங்கை கடற்படையினர் காரணம் அல்ல என்று வாதிடும் இலங்கை அரசுக்கு திமுக பொதுக்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

கச்சத்தீவில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவதற்கு ஏற்ற வகையில் புதிய ஒப்பந்தம் போடவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதே நிரந்தர சக வாழ்வுக்கு வழிவகுத்திடும் என்பதால், அரசியல் தீர்வுகாண அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புதிய ஒப்பந்தம்- தி.மு.க. வலியுறுத்தல்

கச்சத்தீவில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவதற்கு ஏற்ற வகையில் புதிய ஒப்பந்தம் போடவேண்டும் என்பதை வலியுறுத்தி, திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதே நிரந்தர சக வாழ்வுக்கு வழிவகுத்திடும் என்பதால், அரசியல் தீர்வுகாண அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சித்ரவதை செய்யப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும், மீன்பிடி வலைகள் சிதைக்கப்பட்டும், தமிழக மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீன்கள் கொள்ளையடிக்கப்படுவதுமான நடவடிக்கைகளின் உச்சக்கட்டமாக சில நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் பகுதி புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் இலங்கை கடற்படையினரால் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடுஞ்செயலுக்கு இலங்கை கடற்படையினர் காரணம் அல்ல என்று வாதிடும் இலங்கை அரசுக்கு திமுக பொதுக்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

கச்சத்தீவில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவதற்கு ஏற்ற வகையில் புதிய ஒப்பந்தம் போடவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதே நிரந்தர சக வாழ்வுக்கு வழிவகுத்திடும் என்பதால், அரசியல் தீர்வுகாண அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முக நூல்

Popular Posts