எகிப்து துணை அதிபர் உமர் சுலைமானை கொல்ல முயற்சி நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
எகிப்து அதிபர் முபாரக்குக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் 12 வது நாளை எட்டியுள்ளது. அதிபர் பதவியில் இருந்து விலகக் கோரி போராட்டக்காரர்கள் விடுத்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் போராட்டக்காரர்களின் வன்முறை அதிகரித்துள்ளது. துணை அதிபர் உமர் சுலைமானை கொல்ல முயற்சி நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
துணை அதிபரின் 2 மெய் காவலர்கள் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் துணை அதிபர் மீதான தாக்குதல் குறித்து செய்தி வெளியிட எகிப்து அரசு மறுத்துவிட்டது.
எகிப்து அதிபர் முபாரக்குக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் 12 வது நாளை எட்டியுள்ளது. அதிபர் பதவியில் இருந்து விலகக் கோரி போராட்டக்காரர்கள் விடுத்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் போராட்டக்காரர்களின் வன்முறை அதிகரித்துள்ளது. துணை அதிபர் உமர் சுலைமானை கொல்ல முயற்சி நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
துணை அதிபரின் 2 மெய் காவலர்கள் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் துணை அதிபர் மீதான தாக்குதல் குறித்து செய்தி வெளியிட எகிப்து அரசு மறுத்துவிட்டது.

0 comments :
Post a Comment