background img

புதிய வரவு

ஆ.ராசாவை காப்பாற்ற முயற்சி: பா.ஜனதா குற்றச்சாற்று

2ஜி ஒதுக்கீடு குறித்து விசாரித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை, முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவை காப்பற்றும் ஒரு முயற்சியே என்று பா.ஜனதா குற்றம் சாற்றியுள்ளது.

2ஜி ஒதுக்கீடு குறித்து விசாரிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீலைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம்,தனது அறிக்கையை அண்மையில் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில்சிபலிடம் அளித்தது.

இந்நிலையில் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் வெளியிட்ட கபில் சிபல், 2003 முதல் 08 ஆம் ஆண்டு வரையில் எடுக்கப்பட்ட அனைத்து ஸ்பெக்ட்ரம் முடிவுகளுமே தவறானவை என்று அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைக் குறிப்பிட்டே,ராசா செய்த சட்டவிரோத காரியங்களிலிருந்து அவரை காப்பாற்றும் நோக்கத்தில் சிவராஜ் பாட்டீல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது பா.ஜனதா பேச்சாளர் ரவி சங்கர் பிரசாத், குற்றம்சாற்றினார்.

எனவே நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும் என்பதால்தான்,அதனை தமது கட்சி வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

தே.ஜ. கூட்டணியிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. 1998 லிருந்தே ஒவ்வொரு ஒதுக்கீடு குறித்தும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம் என்று ரவி சங்கர் மேலும் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts